ஜோதிட கேள்வி-பதில்கள்
( கேள்வியும் நானே பதிலும் நானே ) by Astro Ravichandran Sevvai
கேள்வி (1)
இரண்டு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் எந்த ஆதிபத்திய பலனை முதலில் தரும்?
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
சாதக கட்டத்தில் சூரியன்(சிம்மம்) மற்றும் சந்திரன் (கடகம்) பகவானைத் தவிர ஏனைய கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்தியங்கள் உண்டு.
குருபகவானுக்கு மீனம் மற்றும் தனுசு ஆகும்.
சனி பகவானுக்கு மகரம் மற்றும் கும்பம் ஆகும்.
செவ்வாய் பகவானுக்கு மேஷம் மற்றும் விருச்சகம் ஆகும்.
சுக்கிர பகவானுக்கு ரிஷபம் மற்றும் துலாம் ஆகும்.
புதன் பகவானுக்கு மிதுனம் மற்றும் கன்னி ஆகும்.
இவ்வாறு இரண்டு ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் அதன் திசை காலங்களில் எந்த ஆதிபத்திய பலனை முதலில் தரும்? என்பது எல்லோருக்கும் எழும் சந்தேகங்களில் ஒன்றாகும்.
உங்கள் சந்தேகங்களை போக்குவதற்கு நான் தரும் பதில் இரண்டு ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் எந்த ஆதிபத்தியதோடு அதிக தொடர்பு கொண்டுள்ளதோ அந்த ஆதிபத்திய பலனை முதலில் தரும்.
தசை காலங்களில் அதிகமாக தொடர்பு கொண்டுள்ள ஸ்தான ஆதிபத்திய பலனை 80% செய்யும். மீதம் 20 சதவீதம் மற்ற ஆதிபத்திய பலனை தருகிறது.
உதாரணமாக மிதுன லக்னத்திற்கு புதன் பகவான் மூன்று மற்றும் ஆறாம் இடத்திற்கு உரியவர் ஆவார். மூன்றாமிடம் கீர்த்தி, புகழ் அந்தஸ்து , வீரியம்,எழுத்து , கற்பனை சக்தி ,சகோதர ஸ்தானம் போன்றவற்றை குறிக்கும் இடமாகும்.ஆறாம் இடம் என்பது ருன, ரோகம்,ஆளடிமை, கடன் மற்றும் வெற்றியைத் தரக்கூடிய இடமாகும்.
மேஷ லக்னத்திற்கு புதன் பகவான் பன்னிரெண்டாம் இடத்தில் இருந்தால் எல்லா கிரகத்துக்கும் ஏழாம் இடத்திற்கு பார்வை உண்டு என்பதால் அது ஆறாம் இடத்தை பார்வை செய்வதால் மூன்றாம் இடத்தை விட ஆறாமிடத்தில் தொடர்பு கொண்டுள்ளது என்ற வகையில் ஆறாமிட பலன்களான கடன், பிணி மற்றும் எதிர்ப்பை அதன் தசை காலங்களில் அதிகமாகவும், முதலிலும் தரும்.
மாறாக லக்கினத்திற்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்தை பார்வை செய்யும் பொழுது 6-ஆம் இடத்தின் பலனை விட, மூன்றாம் இட பலன்களான கீர்த்தி, புகழ் அந்தஸ்து, சகோதர பலம் போன்றவற்றை அதிகமாகவும் முதலிலும் தரும்.
மேலும் மேஷ லக்கினத்திற்கு புதன் பகவான் லக்கன பாவி மற்றும் பகை கிரகம் என்ற வகையில் ஆறாமிடத்தில் நின்று உச்சம் ,ஆட்சி மற்றும் முலதிரிகோணம் என்ற வகையில் பலம் பெறுவதை விட மூன்றாம் இடத்திலிருந்து ஆட்சிபெற்று நிற்பதே நல்லது.
ஆறாமிடத்தில் புதன் மேற்கண்ட வகையில் பலம் பெற்று, லக்னாதிபதியான செவ்வாயும் பலமிழந்த சூழலில் அதன் தசை காலங்களில் அதிக இன்னல்களை சாதகர் அனுபவிக்க நேரிடும்.
எந்தவகையிலும் ஒரு கிரகம் அதன் இரண்டு ஆதிபத்தியத்துடன் தொடர்பு கொள்ளவில்லை எனில் இரண்டு ஆதிபத்திய பலன்களையும் சமமாக அதன் தசைகளில் தரும்.
இது ஒரு உதாரணம் மட்டுமே இதே வகையில் மற்ற கிரக ஆதிபத்திய பலன்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக இரண்டு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஒன்று மறைவிட ஸ்தானமாகவும்(3,6,8,12), மற்றொன்று கோணம் (1,5,9) அல்லது கேந்திர ஸ்தானமாக (1,4,7,10) வரும் போது அதில் மறைவு ஸ்தான அதிபதிகள் பலம் பெறாமல் ஏனைய கேந்திர மற்றும் கோணம் அதிபதி ஸ்தானம் பலம் பெறுவது நல்லது.அதன் தசை காலங்களில் நல்ல பலன்களை தரும்.
அவ்வாறு மீறி மறைவு ஸ்தான அதிபதி பலம் பெற்று நிற்கும் பொழுது அதாவது வளர்பிறைச் சந்திரன் ,குரு, சுக்கிரன் மற்றும் தனித்த புதன் ஆகியவை தொடர்பு பெரும்பொழுது அந்த கிரகம் சுபத்துவ தன்மையை அடைந்து ஸ்தான பலம் வலிமையடைந்து அதன் தசா காலங்களில் அந்த ஸ்தானத்திற்கு உரிய கெடுதலான பலன்களை அதிகமாக தருகிறது.மாறாக பாவ கிரக தொடர்பு அல்லது நீசம் , அஸ்தமனம் பெற்று அந்த கிரக வலிமை குறைவாக பெறும்போது அந்த மறைவிட ஸ்தானம் வலுவிழந்து கெடு பலன்களை குறைவாக தருகிறது.
மற்றொரு கேள்வி
ஒரு கிரகம் லக்கனத்திற்கு யோகராகவும், அதே நேரத்தில் பாதகாதிபதியாகவும் வரும்பொழுது அந்த கிரகமானது அதன் தசை காலங்களில் யோகத்தை தருமா? பாதகத்தை தருமா?
ஒரு கிரகம் பாதகாதிபதியாகவும் அதே நேரத்தில் லக்கன யோகராகவும் வரக்கூடிய அமைப்பு ஸ்திர ராசிகளுக்கு மட்டுமே ஆகும்.
ஸ்திர ராசிகள் எனப்படுவது ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகும். இந்த ராசிகளுக்கு ஒன்பதாம் அதிபதி பாதகாதிபதி ஆகும். அதே நேரத்தில் ஒன்பதாம் அதிபதி பெருங்கோணம் என்ற வகையில் இலக்கன யோகர் ஆவார்.
எனவே ஒன்பதாம் அதிபதி திசையில் பாதகத்தை தருமா? சாதகருக்கு யோகத்தை தருமா ? என்பது எல்லோருடைய மனங்களிலும் எழ வேண்டிய கேள்வியாகும்.
பொதுவாக பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இருக்கும்போது அதிக கெடுபலனைத் தரும்.இன்னும் சொல்லப்போனால் பாதகாதிபதிகளைவிட பாதக ஸ்தானத்தில் அமரும் கிரகங்கள் அதன் தசைகளில் அதிக கெடுபலனை தரும்.
பாதகாதிபதியினை பாவக்கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்றவை பார்க்கும்பொழுது அல்லது சேர்ந்து இருந்தாலும் அதனுடைய பாதகதன்மை மேலும் குறைவு அடைகிறது.
பாதகாதிபதி நீசம், அஸ்தமனம் போன்ற வகையில் பலம் இழந்தால் அதன் பாதக தன்மை குறைந்தாலும் ஸ்தான அடிப்படையிலான யோகபலம் குறைந்துவிடும்.
பொதுவாக பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் இல்லாமல் மற்ற இடங்களில் பலம் பெற்று நின்று இயற்கை சுப கிரகங்கள் பார்க்கப்படும் அமைப்பை பெரும்பொழுது யோகப் பலனைத் தருகிறது.
ரிஷப லக்கினத்திற்கு பாதகாதிபதியான சனி பகவான் ஒன்பது மற்றும் பத்தாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெறாமல் பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்றிருப்பது யோக பலனை தருகிறது.இதில் ஒரு விதிவிலக்காக பாவகிரகங்கள் நேர்வலு பெறக்கூடாது என்ற வகையில் நேரடியாக உச்சம், ஆட்சி பெறுதல் நல்லதல்ல.
இதேபோல சிம்ம லக்னத்திற்கு பாதகாதிபதியான செவ்வாய் நான்கு மற்றும் ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால், ஒன்பதாம் இடத்தில் ஆட்சிபெற்று நிற்காமல், நான்காமிடத்தில் ஆட்சி பெற்று நிற்பது பாதக தன்மை குறையும். இதில் மறைந்திருக்கும் சூட்சும உண்மை என்னவென்றால் "பாதகாதிபதியான செவ்வாய் பாதக ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு எட்டாம் இடத்தில் மறைந்து ஆட்சி பெற்றிருப்பதால் அதன் தசை காலங்களில் பாதக தன்மை குறைந்து யோகராக செயல்படுகிறது" .மேலும் மற்றொரு ஜோதிட விதியான "பாபக்கிரகங்கள் கேந்திரத்தில் அமர்வது நல்லது தரும்" என்ற விதியும் பொருந்துகிறது
விருச்சக லக்கினத்திற்கு பாதகாதிபதியாக சந்திரன் வருவதால் அது ஒரே ஆதிபத்தியம் பெற்ற கிரகம் என்பதால் பாதக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இல்லாமல் இருத்தல் நல்லது. அதேநேரத்தில் அதனுடைய யோகம் அமைப்பும் பங்கப்படும்.
சந்திர பகவான் ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்று நின்றாலும் அல்லது ஏழாம் இடத்தில் உச்சம் பெற்று நின்றாலும் அல்லது லக்கனத்தில் நீசம் பெற்று பௌர்ணமி யோகத்தில் அமைந்திருந்தாலும் அதன் பாதக தன்மையையும் தந்து யோக பலன்களையும் தருகிறது. சந்திரன் மனோகாரகன் என்பதால் பலம் இழப்பதும் நல்லதல்ல.
கும்ப லக்கினத்திற்கு சுக்கிர பகவான் நான்கு மற்றும் ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியாக செயல்படுகிறது. அதே நேரத்தில் பாதகாதிபதியாக சுக்கிரன் வருவதால் அது ஒன்பதாம் இடமான துலாத்தில் ஆட்சி பெறுவதைவிட பாதக ஸ்தானத்திற்கு மறைவிட ஸ்தானமான எட்டாம் இடத்தில் அதாவது லக்கனத்திற்கு நான்காம் இடத்தில் ஆட்சி பெற்று நிற்கும் பொழுது பாதகதன்மை குறைந்து யோக பலனை தருகிறது.
ஸ்திர ராசிகளுக்கு ஒன்பதாம் இட அதிபதி பாதகாதிபதியாகவும் மற்றும் யோகராகவும் செயல்படுகிறது. எனவே ஒன்பதாம் இட அதிபதி பலம் இழந்தால் பாதக தன்மை குறைவதோடு யோக பலனும் குறைந்துவிடுகிறது.
பலம் பெற்றால் பாதக தன்மை அதிகரித்து அதேநேரத்தில் யோகபலமும் அதிகரிக்கிறது. பாதகாதிபதி அதன் தசை காலம் முழுவதும் பாதக தன்மையினை தந்து விடுவதில்லை.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & டெலிகிராம்
9715189647
செல்
7402570899
. 9715189647
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
My website.Click here
www.astroravichandransevvai.in