Saturday 25 January 2020

திருக்கணித முறையில் சனி பெயர்ச்சி பலன்கள்-2020-2023

திருக்கணித முறையில் சனி பெயர்ச்சி பலன்கள்

                    2020-2023.


                     

     செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!

       திருக்கணித முறையில்
 24 -1 -2020-வெள்ளி கிழமை  சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்கிறார் . 

மகரராசி சனி பகவானுக்கு சொந்த வீடு ஆகும்.

  வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி ஆனது 2020- டிசம்பர்- 27 ஆகும்.

      ஒரு ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சனி பகவான் வரும் காலம் ஏழரை சனி ஆரம்பமாகிறது .

   ராசிக்கு 12ல் சனி வரும் காலம் " விரயச்சனி" ஆகும்.

     ராசியில் சனி பகவான் இடம்பெற்றால் "ஜென்ம சனி"ஆகும்.

 ராசிக்கு இரண்டாமிடத்தில் சனி பகவான் இடம்பெற்றால் "பாதச்சனி "ஆகும்.

  விரயசனி 21/2 வருடம்
ஜென்ம சனி 21/2
   பாத சனி 21/2
ஆக "ஏழரை சனி" ஏழரை ஆண்டுகள் ஆகும்.

     ராசிக்கு நான்காம் இடத்தில் சனி பகவான் இடம் பெற்றால் "அர்த்தாஷ்டமச் சனி" ஆகும்.

 ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் இடம் பெற்றால் "அஷ்டமச்சனி" ஆகும்.

    கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனுசு ராசிக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனியாக இருந்த சனி பகவான் மகர ராசிக்கு இடம் பெயருவதன் மூலம் தனுசு ராசிக்கு
பாதச் சனியாக மாறுகிறது.

 விருச்சகராசி ராசிக்கு ஏழரை சனியில் பாதச் சனியாக இருந்த சனி பகவான் மகர ராசிக்கு இடம் பெயர்வது மூலம் விருச்சக ராசிக்கு கடந்த ஏழரை ஆண்டுகளாக நடந்துவந்த ஏழரைச் சனி நிறைவு பெறுகிறது.

  
   ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கும் சனி பகவான் மகர ராசியில் 24 .01.2020 - லிருந்து- 24. 7 .2022  வரை சஞ்சாரம் செய்வார்.

  மகர ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் இது மகர ராசிக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி ஆரம்பம்  ஆகிறது. 

    கடந்த இரண்டரை ஆண்டுகளாக  மகரராசிக்கு ஏழரைச் சனியில் விரயச்சனி நடந்துவந்தது.தற்பொழுது மகர ராசிக்கு ஜென்மச் சனியாக மாறுகிறது.

 கும்ப ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சி லிருந்து ஏழரை சனி ஆரம்பமாகிறது.  குறிப்பாக கும்ப ராசிக்கு இந்த இரண்டரை ஆண்டு காலம் விரயச்சனி ஆகும்.

 தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பெயர்வதால் தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி விலகி பாதச் சனி ஆரம்பமாகிறது. இது ஓரளவு ஏழரைச்சனியில் பாதிப்பிலிருந்து தனுசு ராசி விலகல் அடைகிறது.

 இந்த சனிப்பெயர்ச்சி யானது கன்னி ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்து  அர்த்தாஷ்டம சனியாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்த சனிபகவான் மகர ராசிக்கு இடம் பெயர்வதன் மூலம் துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி ஆரம்பமாகிறது.

  கடந்த இரண்டரை ஆண்டுகளாக மிதுனராசிக்கு ஏழாமிடத்தில் சனி பகவான் நின்று கண்டச் சனியாக இருந்த சனி பகவான் மகர ராசிக்கு இடம்பெயர்வது மூலம் மிதுன ராசிக்கு கண்டச் சனி விலகி , எட்டாம் இடத்திற்கு வந்த சனி பகவான் அஷ்டமச் சனியாக மாறுகிறது.

 தற்பொழுது  கடக ராசிக்கு ஏழாமிடத்தில் மகர ராசிக்கு சனி வருவதால்  கடகம் ராசிக்கு கண்ட சனி ஆரம்பமாகிறது.

 ஏழரைச் சனியை பொருத்தவரை சனி பகவானுடைய பகை கிரகமான சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் பகவானின் சொந்த வீடுகளான மேஷம் ,கடகம், சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு ஏழரைச் சனியோ, அஷ்டமச்சனி, கண்டச்சனி மற்றும் அர்த்தாஷ்டமச் சனி அதிக இன்னல்களை தர வாய்ப்புண்டு.

 மகர ,கும்ப ராசிக்கு சனி பகவானின் சொந்த வீடு என்பதால் அதிக பாதிப்பு வர வாய்ப்பு குறைவு.

சனி பகவானே நட்பு கிரகங்களான  புதன் மற்றும் சுக்கிரன் வீடுகளான ரிஷபம் மிதுனம் கன்னி மற்றும் துலாம் ஆகிய ராசிகளுக்கு  சமமான அளவு பாதிப்பை தரும்.

 ஏழரைச் சனி என்றாலே ஆண்டுகளும் கஷ்டத்தைத் தரும் என்று எண்ணிவிடக் கூடாது.

    இள வயதில் அதாவது குழந்தை பருவத்தில் வரும் ஏழரைச் சனி ,அஷ்டம சனி அந்தக் குழந்தையை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை என்பதை அவர்களது பெற்றோர்களுக்கதான் பாதிப்பைத் தருகிறது.

 ஏழரைச்சனியின் ஒரு குழந்தை ஜெனிக்கும் போதோ அல்லது பிறக்கும் போது  பெற்றோர்களுக்கு பொருளாதார அளவில் கஷ்டங்களும், அவர்களுக்கிடையே புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு சில நேரங்களில் ஒரே வீட்டில் இருந்தாலும் சண்டை சச்சரவுகளுடனோ அல்லது பிரிவினையையோ தர வாய்ப்புள்ளது.

  அஷ்டம சனி காலங்களில் அவர்கள் பெற்றோர்களுக்கு வம்பு, சண்டை  மற்றும் வழக்குகளில் ஈடுபட்டு காவல்நிலையத்தின் வாசலை மிதித்தல், சிறை செல்லல் , வாகன விபத்து மற்றும் ஆயுள் பங்கம் போன்றவை தர வாய்ப்புள்ளது.

 பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் ஏழரை மற்றும் அஷ்டமத்து சனி வந்தால் அவரது கல்வி நிலை பாதிப்பு ஏற்படும்.

 திருமண காலத்தில் ஒரு இளைஞர் /இளைஞிக்கு ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச் சனி நடப்பில் இருப்பின் திருமண தடையை ஏற்பட வாய்ப்பு உண்டு.புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு பிரிவினை உண்டாக்கும்.

  அர்த்தாஷ்டமச்சனி என்பது சுகஸ்தானத்தில் சனி வருவதால் அவருடைய உடல் நலத்தில் பின்னடைவை உண்டாகும்.தன் சுகம், தாய் சுகம்,வாகன சுகம் மற்றும் கல்வியால் சுகம் போன்றவற்றில் பாதிப்பு உண்டாகிறது.

 ஏழாமிடத்திற்கு வந்த சனி பகவான் கண்ட சனியாகி தண்ட செலவினை சாதகருக்கு கொடுக்கும். இக்காலங்களில் விரயச் செலவுகள் சுப செலவுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

   ஏழரை சனி காலங்களில் நிறைய இன்னல்களை தந்து உறவு என்றால் என்ன? நட்பு என்றால் என்ன? போன்ற விஷயங்களை உணரவைத்து ஒரு மனிதனுக்கு வாழ்வின் உண்மை நிலைகளை உணர வைப்பது சனிபகவான் அதனால்தான் சனிபகவானை சனீஸ்வரர் என்றும் அழைக்கிறோம்.

  அஷ்டம சனி காலங்களில் வம்பு, சண்டை ,வழக்கு  மற்றும் வீண் விவாதம் போன்ற செயல்களில் ஈடுபடாமல் விலகி இருப்பது நல்லது.

 ஏழரை மற்றும் அஷ்டமத்து சனி காலங்களில்  திருநாள்ளாறு சென்று சனிபகவானை வழிபாடு செய்ய வேண்டும்.

 காகத்திற்கு சோறு வைத்தல்.

 பிராமணர்களுக்கு கருப்பு வஸ்திரம் தானம் செய்தல்.

விநாயக வழிபாடு செய்தல்.

 துர்க்கைக்கு எள் விளக்கு தீபம் ஏற்றுதல்.

(தங்களது பிறந்த சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
  9715189647
     செல்
 9715189647
7402570899
                              
                          

 அன்புடன் ஜோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்
     M.Sc,M.A,BEd
 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம். கறம்பக்குடி,. புதுக்கோட்டை மாவட்டம்.

சூரியன் பகவான்

சூரிய பகவான்

                 

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

சூரிய பகவான் ஜாதக கட்டத்தில் ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் 12 ராசியை சுற்றிவர ஒரு வருடம் ஆகிறது.

 கோள்களில் முதன்மையானதாக கருதப்படுவது சூரிய பகவான் ஆகும் . சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்களும் சுற்றி வரக்கூடிய அமைப்பையே சூரிய குடும்பம் (Solar system)
என அழைக்கிறோம்.

 சூரியனை சுற்றி வரக்கூடிய எட்டுக் கோள்களும் மற்றும் ஐந்து குறுங்ககோள்களும் நீள்வட்டப்பாதையில் ஈர்ப்பு விசை அடிப்படையில் பிணைக்கப்பட்டு தத்தம் பாதையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 ராசிக்கட்டத்தில் சூரியனுடனோ  முன்பின் ஒரு ராசியில் புதனும் , இதேபோல சூரியனுடன்  அல்லது முன் பின் இரண்டு ராசிகள் தள்ளி சுக்கிரனும் சுற்றி வருகிறது. எனவே சுக்கிரனும் புதனும் உள்வட்ட கோள்கள் என அழைக்கப்படுகிறது. என்றழைக்கப்படுகிறது.

 சூரிய குடும்பத்தில் சூரியனை தொடர்ந்து புதன், வெள்ளி ,புவி, செவ்வாய், வியாழன், சனி யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்கள் சுற்றி வருகிறது.

 சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்கள் "புவியை ஒத்த கோள்கள் "என்று அழைக்கப்படுகிறது. கோள்களில்  மிகப்பெரிய கோள்களாக வியாழன் மற்றும் சனி பகவான் கருதப்படுகிறது.

 ஜாதகத்தில் ஆட்சி செய்யும் அதிகாரம், உயர்ந்த அந்தஸ்து ,அரச பதவி, அமைச்சர் ,உயர் அரசாங்க அதிகாரி மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் போன்ற உயரிய பொறுப்பினை தரும் பங்கு சூரிய பகவானுக்கு உண்டு.

 சூரிய பகவானை தந்தைக்குக் காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. எலும்புகளுக்கு வலிமையை தருவது சூரிய பகவானே ஆகும். கண் பார்வை முதலிய உடல்நலக் குறைபாடுகளுக்கு இரண்டாமிடத்தில் தொடர்புடைய சூரிய பகவானின் காரணமாகும்.

 ஜாதகத்தில் சிம்மம் லக்கனமும்,சூரிய பகவானும் வலுப்பெற்று பத்தாமிடத்தோடு அல்லது பத்தாம் அதிபதி வலுப்பெற்ற நிலையில் இயற்கை சுப கிரகமான குரு பகவானால் பார்க்கப்பட்டு சுப வலிமை பெரும் பொழுது அரசாங்க வேலை பார்ப்பவராக சாதகரை மாற்றி விடுகிறது.

 சூரிய பகவான் சித்திரை மாதத்தில் மேஷ ராசியிலும் ,வைகாசி மாதத்தில் ரிஷப ராசியிலும் ,ஆனி மாதத்தில் மிதுன ராசியிலும்... இவ்வாறாக ஒரு ஜாதகர் பிறந்த மாதத்தை கொண்டு அவரது ஜாதக கட்டத்தில் உள்ள சூரிய பகவான் எங்கு இடம் பெற்றுள்ளார் என்பதை எளிமையாக கண்டறியலாம்.

ஜாதக கட்டத்தில் உள்ள 12 ராசிகளில் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு ஆறு ராசி காலங்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நடை போடுவார். இவ்வாறு தெற்கு நோக்கி நடைபோடும் காலம் தட்சிணாயனம் என்று அழைக்கப்படுகிறது.

 தட்சிணாயன காலம் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரை ஆகும். ஆடி மாதத்தில் கடக ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்வார் .எனவே தட்சிணாயன காலத்தில் சூரிய பகவான் கடகம், சிம்மம் ,கன்னி, துலாம் விருச்சகம்  மற்றும் தனுசு ஆகிய, ஆறு ராசிகளில் சஞ்சாரம் செய்வார். தட்சிணாயன கால ஆரம்ப காலத்தில் தான் விவசாயிகள் நிலங்களில் விதைகளை விதைத்து அந்த ஆறு மாத காலங்கள் அதனை குப்பைகள் முதலிய இயற்கை உரங்கள் இட்டு , நீர் பாய்ச்சி விவசாயம் செய்து அறுடைக்காக  காத்திருந்தார்கள். இதனால்தான் "ஆடிப்பட்டம் தேடிவிதை" என்றார்கள்.

 ஆறு மாத காலம் எவ்வித செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து இட்டு வளர்க்கப்படாமல் இலை,தழை மற்றும் மாட்டுச்சாணம் இட்டு நாற்றங்காலில் இருந்து பயிர்களை அரித்து  மிகுந்த நீர்வழிகள் மிகுந்த வயல்களில் பயிரிட வீரியம் பெற்று நீண்ட நாள் உயிர் வாழக்கூடிய ஆரோக்கியமான நெற்மகசூலை தந்தது. இவ்வாறு விளைந்த நெல் மணிகளை உணவாக உண்டு மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தான்.

   உத்திராயண காலத்தில் சூரிய பகவான் தனது நடையை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வார் இக்காலத்தை உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை உள்ள காலகட்டமாகும்.

  தை மாதம் 1ஆம் தேதி சூரிய பகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நடைபோடும் காலத்தை பொங்கல் திருநாளாக  கொண்டாடப்படுகிறது.

   தை மாதம் மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் மகர சங்கராந்தி பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. 

     சூரிய பகவான் மகர ராசியில் இருந்து மிதுன ராசி வரை சஞ்சரிக்கும் காலத்தை உத்தராயண காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

  சூரிய பகவானை ஆத்மகாரகன்  என்று அழைக்கப்படுகிறது. சூரிய பகவான் இருக்கும் இடத்தை இலக்கணமாகக் கொண்டும் சாதக பலன் அறியப்படுகிறது. சூரிய பகவானை இலக்கணமாக வைத்து சாதகப்பலன் அறிவதை" கதி "என்று அழைக்கப்படுகிறது.

  சூரியபகவான் தந்தைக்கு காரகர் ஆவார் ஒரு ஜாதகத்தில் சூரிய பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நல்ல ஸ்தான நிலை பெற்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட அமைப்பு பெற்றவர்கள் புகழுடைய தந்தையை பெற்றவராவார்.

  சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் இருப்பின் ஆளுமைத் திறனும் மிக்கவராகவும் சூட்டு உடம்பைப் கொண்டவராகவும் இருப்பர்.

 வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சூரிய பகவான் அமர இவரது பேச்சில் அனல்  தெறிக்கும் கோபகாரராகவும், கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவராகவும் மற்றும் கண் நோய் உடையவராகவும் காணப்படுவார்.

 மூன்றாம் இடமான வீரிய ஸ்தானத்தில் சூரியபகவான் அமர ஒரு அசட்டு தைரியம் 
உடையவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் காணப்படுவார்.

 நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சூரியபகவான் அமர கல்வி -கேள்விகளில் வல்லவராகவும், கற்ற கல்விக்கு ஏற்ற வேலை பார்க்க கூடியவராகவும், தந்தை மீது பாசம் உடையவராகவும் காணப்படுவார்.

    ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரிய பகவான் இடம் பெற  தந்தை  பாட்டன் வழி சொத்துக்களை அனுபவிப்பவராகவும் இருப்பார்.  புத்தி கூர்மை உடையவராகவும், பூர்வீகச் சொத்தாதை  கூடியவராகவும் இருப்பார்.

  சத்ரு ஸ்தானமான ஆறாமிடத்தில் சூரியபகவான் அமர எதிரியை வெல்வார். தந்தை வழி ஆதரவு கிடைக்காமை, அரசு வேலை கிடைக்காத சூழலும் உருவாகும்.

 களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் சூரிய பகவான் அமர ஜாதகருக்கு கற்ற மனைவியும், சூரியன் உடன் புதன் பகவான் இணைந்து நிற்க அரசு வேலை பார்க்கக்கூடிய மனைவி அல்லது திருமணத்திற்குப் பின் அரசாங்க வேலை கிடைக்கக் கூடிய யோகமும் அமையும்.

 எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்தில் சூரியபகவான் அமர தந்தை வழி ஆதரவு கிடைக்காது.அரசாங்க வேலை தடைபடும் நிலை சூழல், வம்பு வழக்குகளில் இருந்து ராஜதந்திரமாக விடுபடும் நிலை முதலியவை உருவாகும்.

  பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சூரிய பகவான் அமர்வது நல்ல வருமானம் தந்தாலும் தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் தந்தைக்கு காரகர் சூரியன் பகவான் அமர்வது காரக பாவ நாஸ்தியை கொடுக்கும் நிலை உருவாகும்.

 பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியபகவான் அமர்ந்து பலம் பெற்று நிற்க அரசின் உயர் அதிகாரியாக வேலை பார்க்கக் கூடிய யோகம் கிட்டும்.

லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சூரியபகவான் நிற்பது தந்தை வழி ஆதரவு கிட்டும். தந்தையால் புகழ் பெறுதல், அரசு ஆதரவுடன் லாபம் அடையும் நிலை உருவாகும்.  

விரய ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தில் சூரிய பகவான் அமர்வது தந்தை வழி ஆதரவு கிட்டாத நிலை, அரசு வேலை கிடைக்காமல் தடைபடுதல் நிலை உருவாகும்.

 ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவான் புதன் பகவான் உடன் இணைந்து இருக்கும் சூழலில் சூரியனோ அல்லது புதனோ கெடாத சூழலில் அல்லது சூரிய பகவானுடன் புதன் அஸ்தமனம் அடையாத சூழலின்"புத -ஆதித்திய யோகத்தை "தருகிறது இது சாதகருக்கு பல பட்டங்களை பெறக்கூடிய யோகத்தை தருகிறது. 

 உதாரணமாக தனுசு லக்னத்திற்கு 9-க்குடைய சூரியனும் ,10-க்குடைய புதனும் ஒன்பதாமிடத்தில் இணைந்து சூரிய பகவான் ஆட்சி பெற்ற நிலையிலும் புத ஆதித்ய யோகமும், தர்மகர்மாதிபதி யோகமும் கொடுக்கிறது.

  இதேபோல தனுசு லக்கனத்திற்கு பத்தாம் இடமான கன்னி ராசியில் சூரியன் ,புதன் இணைவு புதன் உச்சம், ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் ஆகிய மூன்று வகையில் பலம் பெற்று சூரியனுடன் இணைந்து புத -ஆதித்திய யோகம் மற்றும் தர்ம-கர்மாதிபதி யோகத்தை தருகிறது.

 சூரிய பகவானுடன் குருவோ அல்லது கேது பகவானும் இணைந்த சூழலில் ஆன்மிகத்தின் உச்ச எல்லை தொடும் வாய்ப்புகள் இருக்கிறது.

 சூரியனுடன், சந்திர பகவான் சேர்ந்து நிற்கும் சூழலில் அமாவாசை யோகத்தினையும், சூரியனுக்கு சமசப்தம ஏழாமிடத்தில் சூரியனும் சந்திரனும் சந்தித்துக் கொள்ளும் நிலை பௌர்ணமி யோகம் ஆகும்.

"இடுசெவ்வாய் கதிர் கூடி எங்கு நின்றாலும் இவளும் வாலிபம் தன்னில் அமங்கலி ஆவாள்"

சூரிய பகவானுடன் செவ்வாய் கூடி நிற்கும் வேளையில் சுப கிரக பார்வைபடாத நிலையில் மேற்கண்ட பலாபலன் நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.

 ஒரு ஜாதகத்தில் சூரியன்,
 சுக்கிரன் சேர்க்கை சிற்றின்ப வாழ்வுக்கும் இல்லற வாழ்வுக்கும் சுகம் படாத சூழல் உருவாகும்.

 சூரிய பகவானுடன் நிழற்கிரகங்களான கரும்பாம்பு என்றழைக்கப்படும் ராகு பகவானும், செம்பாம்பு என்றழைக்கப்படும் கேதுபகவானும் இணையும்போது சூரிய பகவான் கிரகண தோஷத்தால் தமது பலனை இழக்கிறது.

  ஜாதக கட்டத்தில் சூரியபகவானுடன் ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் சனிபகவான் இணையும்போது தந்தை மகனுக்கு இடையே சற்று விரிசல் உருவாகும். தந்தை சொத்து சேர்த்து வைக்க தவறியவராகவோ அல்லது தந்தை மகனுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு இல்லாத தன்மை அல்லது தந்தை இல்லாத சூழல் உருவாகும்.

பொதுவாக சூரிய பகவானுடன் சனி ,ராகு கேது இணைவு உகந்ததல்ல.

 தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இணைவு ஒருவர் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவார்.

  சூரிய பகவானுடைய அருள் பெற சிவன் கோவில்களில் சென்று சிவபெருமானை தரிசிக்கலாம்.

 தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார் கோவில் சென்று சூரிய பகவானை வழிபடலாம்.

  வாழ்வில் பல முயற்சிகள் செய்தும் வெற்றி பெறாத நிலை, மனதில் ஒருவித பதட்டம், மனச்சோர்வும் மற்றும் பயமும் உடையவர்கள் சூரிய பகவானின் ஆதித்திய ஹிருதயம் "உச்சரிக்க மேற்கண்டவை விலகி நற்பலன்கள் கிட்டும்.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
   9715189647

     செல்
  9715189647
   7402570899
                    
  அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
    M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் .கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com.
...........................................

கிரக தத்துவங்கள்

கிரக தத்துவங்கள்


                           

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

   ஒரு குழந்தையானது தாயின் வயிற்றில் கருவாக உருத்தெரியாமல் ஜெனிக்கும போதே கிரகங்களது தாக்குதல் ஆரம்பமாகியது என்றாலும் இப்பிரபஞ்சத்தினை தாயின் வயிற்றில் இருந்து வெளியேறுகின்ற காலத்தில் வானவீதியில் வலம் வரும் கிரகங்கள் தான் அந்த ஜெனிக்கும் குழந்தையின் ஆளுமைத்தன்மையை நிர்ணயிக்கிறது.

  ஒரே வயிற்றில் ஒரே பெற்றேர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கரு இரட்டையராக(identical twins) இருந்தாலும் அவ்விருவருகளுக்கு இடையேயும் பிறந்த நேரம் ஒரு சில வினாடிகளே வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களுக்கு இடையேயும் ஒரே மாதிரியான குணநலன்கள் காணப்படுவதில்லை.

 எத்தனையோ கோடிக்கணக்கான 
மக்கள் பிறந்து மறைந்திருப்பார்கள் ,
எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் பிறக்க இருக்கிறார்கள் ஆனால்  ஒருவரது கைரேகையை போலவே மற்றொருவர் கைரேகை அமைவதில்லை.
அதேபோல எத்தனையே கோடிக்கணக்கான மக்கள் பிறந்து இருக்கிறார்கள் ,பிறக்க போகிறார்கள் ஆனால் ஒருவரது சாதகத்தினை போலவே வேறு ஒருவரது சாதகமானது அமைவதில்லை.

 ஒரு சில சாதகங்களை மேம்போக்காக பார்க்கும் பொழுது யோகமற்ற சாதகமாக காணப்பட்டாலும், சாதக கட்டத்தில் சில சூட்சுமமான முறையில் பலம் பெற்று அந்த ஜாதகத்தை யோக ஜாதகமாக மாற்றிவிடுகிறது.

  ஒரு சில ஜாதகங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் கிரகங்கள் அதிகமாக இருப்பினும் அவரது வாழ்வு சாதாரன சராசரி மனிதனின் வாழ்வாகவே பிறப்பிலிருந்து இறப்பு வரை அமைந்து விடுகிறது.

 ஜாதகத்தில் யோகமான அமைப்புகள் காணப்பட்டாலும் அக்கிர திசை நடப்பில் இல்லாது போகலாம் அல்லது அந்த யோகங்கள் ஏதோ ஒரு வகையில் பங்கபட்டிருக்கலாம்.

 ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசம் அடைந்து இருந்தால் வலிமையை இழக்கும் என்பது 
பொது விதியாக இருந்தாலும் அது திக்பலம் பெற்று இருக்கின்ற பட்சத்திலோ அல்லது வர்க்கோத்தமம் பெற்றிருக்கும் நிலையிலோ அல்லது நீசபங்கம் பெற்றிருக்கும் பட்சத்தில் அல்லது பரிவர்த்தனை பெறும் நிலையில் அது பலமடைந்து யோகம் உள்ள கிரகமாக மாறுகிறது.

  ஒரு கிரகம் நீசம் ..போன்ற வகையில் பலவீனமடைந்து இருந்தாலும் சாரநாதன் பாவகிரகமாகவே இருந்தாலும் உச்சம் பெற்று இருப்பின் அக்கிரகம்  பலமடைந்து யோக பலனை அதன் தசையில் தருகிறது.மேலும் சுப கிரக பார்வை பட மேலும் நற்பலனை கூடுதலாக தருகிறது.

  பொதுவாக பாவ கிரகங்கள் கேந்திரத்திலும் ,சுப கிரகங்கள் திரிகோணத்திலும் நிற்பது நல்லது.

   ஒரு ராசியில் இரண்டு பாவ கிரகங்கள் இணைந்து ஒரு ராசியில் காணப்பட்டாலும்
 13 பாகை வேறுபாடு இருப்பின் அவ்விரு கிரகங்கள் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலும் அவ்விணைவால் பாதிப்பு கிடையாது.

  சூரியன் உடன் இணைந்த கிரகங்கள் அஸ்தமனம் அடைந்து இருந்தாலும் சாரநாதன் உச்சம் போன்ற நிலைகளில் பலமடைந்து இருப்பின் கிரகம் அஸ்தமனம் அடைந்தே இருந்தாலும் யோக பலன்களை தருகிறது.

  உதாரணமாக கடக வீட்டில் செவ்வாய் நீசம் அடைந்து இருந்தாலும் சாரநாதன் குரு பகவான் உச்சம் அடைந்து இருந்தால் நீசம் பங்கம் அடைவதுடன் செவ்வாய்பகவானது சார நாதனும் உச்சம் அடைந்த நிலையில் யோக பலனை தருகிறது.

 லக்கனாதிபதியோ  அல்லது லக்கனத்திற்கு சுப கிரகங்களோ மறையத் கூடாது என்பது பொது விதியாக இருந்தாலும் சில விதிவிலக்காக ஒரு சில லக்கனத்தை பொறுத்தோ அல்லது கிரகத்தினை பொறுத்தோ இவ்விதி மாறுபடலாம்.

 உதாரணமாக உபய லக்னத்திற்கு குருவும், புதனும் சுப கிரகங்களாக இருந்தாலும் காரக பலன்களை சிறப்பாக தந்தாலும், அவை பாதக ஸ்தானமான ஏழாமிடத்தில் இருந்தால் பாதகத்தை தரும்.மேலும் கேந்திராதிபத்திய தோஷமும் பெறும் என்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்கிரகங்கள் இரண்டும் மறைவிடங்களில் இடம் பெறுதல் சிறப்பு பெறுகிறது.ஆனால் மறைவிடங்களுக்கு செல்லும் போது தீய பலன்களை தராது எனினும் அதற்குரிய காரக பலன்கள் மட்டுப்படுத்தப்படுகிறது.

  லக்கனாதிபதி பாவ கிரகமாக இருப்பின் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் நேரடி பலன் பெறாமல்  மறைவிடங்களுக்கு செல்லுதலே நலம் பயக்கும்.

 ஒரு கிரகம் நீச பங்கம் பெற்றால் நற்பலனை தரும் என்பது பொது விதியாக இருந்தாலும் துலா லக்னத்தில் நீசம் பெற்ற சூரியனுடன் பாவ கிரகமான சனி உச்சம் பெறும் பொழுது  நீசபங்கம்  பெறுகிறது என்றாலும் சூரியன்+சனி சேர்க்கை பாபத்துவ அமைப்பினை பெறும் என்ற வகையில் இந்த நீச பங்கம் நற்பலன்களை தராது.

  சாதக கட்டத்தில் ஒரு கிரகத்திற்கு வீடு தந்தவனோ அல்லது சார நாதனோ உச்சம் பெற்று சுப கிரக பார்வையை பெற அக்கிரக திசையானது யோக பலன்களை மிகுதியாக தருகிறது.

  ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம்  நீசம் பெற்று இருந்தாலும் அந்த நீசம் பெற்ற கிரகம் கேந்திர, கோண அதிபதிகளின் நட்சத்திர சாரம் பெற்று இருப்பின் அதன் திசை காலங்களில் அந்த வீட்டின் அதிபதி திசை காலத்தினை விட மிகுந்த யோக பலன்களை தரும்.

 உதாரணமாக விருச்சக லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் நீசம் பெற்ற கேதுபகவான் 9-க்குடைய சந்திர பகவான் நட்சத்திர சாரத்தில் இருக்கும்போது சுக்கிர தசையை விட அந்த இடத்தில் உள்ள கேது தசையில் மிகுந்த யோக பலனைக் கொடுக்கிறது.

 ஒரு சாதத்தில் நீசம் அடைந்து இருக்கும் கிரகத்திற்கு பார்வை பலம் கிடையாது.

 சில நேரங்களில் இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருந்தாலும் அது இணைந்து இருப்பதாக கருதி கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. .ஆனால் அதே நேரத்தில் இரண்டு கிரகங்கள் வேறுவேறு ராசியில் இருந்தாலும் ஒன்றாக இணைந்த கிரகமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இது எவ்வாறு என விளக்குவதற்கு கிரகங்கள் அமர்ந்து உள்ள பாகை நிலையினை கணக்கில் எடுத்துக்கொண்டு விளக்க முற்படலாம்.

   பாகை அடிப்படையில் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும்போது மேஷ ராசியில் உச்சம் பெற்ற சூரியன் 4 பாகை அளவில்  அமர்ந்து  உச்சம் பெற்று , இணையக் கூடிய செவ்வாய் பகவான் 28ஆவது பாகையில் நிற்க .24 பாகை வித்தியாசத்தில் ஒரே ராசியில் உள்ள கிரகங்களை   இணைந்ததாக கருதிக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.இங்கு சூரியன் மற்றும் செவ்வாய் இணைவு பெற்ற கிரகமாக கருதி அளிக்கப்படும் பலன்கள் தவறாக போய் முடியும்.

 அதே நேரத்தில் மேஷ ராசியில் 28  பாகையில் செவ்வாய் ,ரிஷப ராசியில் முதல் 2 பாகை அளவில் சுக்கிரன் இருந்தால் அவ்விரு கிரகங்கள் வேறுவேறு ராசியில் இருந்தாலும்  செவ்வாய்+சுக்கிரனை இணைந்து உள்ள கிரகமாக கணக்கில் எடுத்துக் கொண்டு பலன் அளிக்க முற்பட வேண்டும்.

  திருக் பலம் எனப்படும் பார்வை பலனை பொறுத்த வரை எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு என்ற வகையில் லக்கனத்தில் உள்ள சுப கிரகமானது தனது ஏழாவது பார்வையால் ஏழாம் இடத்தை மட்டும் பார்ப்பதாக உறுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. 
சில நேரங்களில் அக்கிரகம் இணைந்துள்ள பாகை அடிப்படையில் அந்த ஏழாம் இடத்திற்கு முதலாக உள்ள ஆறாம் இடத்தையும், ஏழாம் இடத்திற்கு அடுத்ததாக உள்ள எட்டாம் இடத்தையும் பார்வை  செய்யும் வாய்ப்பு உண்டு.

 இரண்டு லக்கனத்திற்கு பாகை அடிப்படையில் லக்கன சந்தியில் உள்ள ஒரு கிரகமானது தனது திசையில் இருக்கும் லக்கன அடிப்படையில் அதற்கு அடுத்துள்ள ஸ்தானம் வழியாக பலன்களை ஸ்தானத்திற்கு ஏற்ப கொடுக்கும்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
   9715189647

       செல்
  9715189647
    7402570899

                         
   அன்புடன்
 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.

My email
 masterastroravi@gmail.com

My bogspot,

www.AstroRavichandran.
blogspot.

WWW.AstroRavichandransevvai.blogspot.com

................................,..............

கோள்களின் கோலாட்டம்

கோள்களின் கோலாட்டம்

                 

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளிகோள்களின் கோலாட்டம்

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

      மனிதனாக பிறப்பெடுத்த அனைவரும் தனது வினைப்பயனை இப்பூவுலகில் அனுபவிக்கவே பிறப்பாக பிறப்பெடுக்கிறோம்.

      ஒருவர் யாராக  , எந்த நாட்டில், எந்த மதத்தில் , யாருக்கு பிள்ளையாக  எந்த காரணத்திற்காக மற்றும் எந்த நேரத்தில் பிறப்பு எடுக்கிறோம் இதுபோன்ற பல  விஷயங்களையும் ஊழ்வினைப்பயனே முடிவு செய்கிறது.

 ஒரு பிள்ளை பிறப்பது பெற்றோர்கள் மூலமாக இருந்தாலும் அந்த பிள்ளை பிறந்தது பெற்றோர்களுக்காக மட்டுமல்ல என்பதை பெற்றோர்களாகிய அனைவரும் புரிந்து கொள்ள பட வேண்டிய ஒன்றாகும்.

    ஸ்ரீராம அவதாரம் எடுத்தது இராவண வதம் நடத்தவே அன்றி தசரதனுக்கு  பிள்ளையாக பிறந்து  அயோத்தியை மட்டும்  அரசாட்சி புரிய அல்ல.

   இப்பூலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட  ஒரு சில காரண-காரியத்திற்காக சிருஷ்டிக்கப்படுகிறார்கள்.
  ஒவ்வொரு பிறப்பும் எக் காரணத்திற்காக பிறப்பு எடுக்கிறதோ  அதற்கு உரிய காலநேரம் மற்றும் கிரக அமைப்புகள் வானவீதியில் உலாவரும் காலகட்டத்திலேயே‌
ஒருவரது வயிற்றிலிருந்து பிறப்பாக இப்புவியில் கால் வைக்கிறது.

  ஜெனன நேரத்தில் வான வீதியில் உலா வரும் கிரகங்களே சாதகரின் வினைப்பயனை தீர்மானிக்கிறது.

  அவன் அரசனாக பிறப்பு எடுப்பதும், ஆண்டியாக பிறப்பு எடுப்பதும் அவர் வாங்கி வந்த ஊழ்வினைப்பயனின்  வினைப் பயனே காரணகர்த்தா ஆகும்.

  மனிதனாக பிறந்த ஒருவர் ‌ஏதோ ஒரு பாதை நோக்கி பயணித்தாலும் வாழ்க்கை காட்டாற்றில் நம்மை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வந்து நமக்கான பாதையை அமைத்து தருவதும் வினைப்பயனேயின்றி வேறு அல்ல.

 ஒரு சிலர் என்னவாக ஆக நினைக்கிறார்களோ அதுபோலவும்,ஒரு சிலர் என்னவாக ஆக நினைத்தாரோ அவற்றிற்கு முற்றிலும் மாறாகவும் வாழ்க்கை தடத்தை அமைத்து கோள்கள் கோளாட்டம் செய்கிறது.

  ஒருவரது பிறப்பின் இரகசியத்தை அதாவது வினைப்பயனை அறிய ஜோதிட அறிவு சாதாரண மனிதனுக்கு பேருதவி புரிகிறது.

  ஒருவரது முழு வாழ்வினையும்   நவகிரகங்கள் சாதக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் எந்த பாகையில்,எந்த நட்சத்திர சாரத்தில் மற்றும் எந்த கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கை அடைந்து உள்ளது என்பதைப் பொருத்தும், பலன் பார்க்கப்படும் நிலையில் வான வீதியில் உலாவரும் கிரக நிலைகளை பொருத்தும்( கோச்சார நிலை) மற்றும் நடைபெறும் தசை, புத்தி ஆகியவை சார்ந்தும் ஒருவரது வாழ்வில் நிலை தீர்மானம் செய்யப்படுகிறது.

  சாதக கட்டத்தில் ஒரு கிரகங்கள் வலுவு நிலையினை ஆராய ஸ்தான பலம்,திக் பலம் மற்றும் திருக் பலம் மிக அவசியமான ஒன்றாகும்.

  ஜாதகத்தில் ஸ்தான பலம் இழந்த கிரகங்கள் திக் பலம் பெற்றாலும் சாதகருக்கு யோகா பலனையே தருகிறது.

 பொதுவாக ஒரு ஜாதகம் யோக ஜாதகமா அல்லது அவயோக ஜாதகமாககவோ  அமைய பல்வேறு விதிகளை நமது முன்னோர்கள் சோதிட மூல நூல்களில் தனது ஞான திருஷ்டியால் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இந்திய வேத சோதிடம் நமது நாட்டின் பொக்கிஷம் ஆகும்.

 சாதக கட்டத்தில் பிறப்பு,கல்வி,பொருள் ஈட்டல், திருமணம்,பதவி மற்றும் புத்திரம் இது போன்ற பல அடிப்படை விசயங்களுக்கு விடை காண சாதக கட்டத்தில் உள்ள ஸ்தானங்களும்,நவ கிரகங்களும் காரண கர்த்தாவாகிறது.

 மேற்கண்ட லொளகீக வாழ்வுக்கு தேவையான விஷயங்களை மட்டுமன்றி அவனது பிறப்பின் ரகசிய சூட்சுமமான உண்மைகளை சோதிட ஞானத்தில் மேம்பட்டவர்களால் மட்டுமே அறியப்படுகிறது.

  ஒரு ஜாதகர் தனது வாழ்வில் உயர்வு நிலையை அடைய லக்கனமும் மற்றும் அதன் அதிபதியும் முக்கியம் ஆகும்.

 ஜாதகத்தில் எந்த கிரகங்கள் இருந்தாலும் லக்னாதிபதியான எவ்வகையிலும் பலமிழக்க கூடாது ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்து மறைவிடங்களில் நின்று பாவ கிரகங்களால் சூழப்பட்ட அமைப்பினை பெற்ற சாதகம் தரித்திர சாதகம் ஆகும்.

ஒருவர் தனம் படைத்தவராக வாழ்வில் விளங்க லக்கினம், தன,பாக்கிய மற்றும் லாப அதிபதிகள் பலமடைந்து தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு நின்று தனகாரகன் குருபகவானது பார்வையினை பெற்ற அமைப்பு உடையவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட கிரகங்களது திசை காலங்களில் அடுத்த வேளைக்கு கஷ்டப்படும் அன்றாடம் காய்ச்சி குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் பொருளாதார நிலையில் உச்சத்தை தொடுவார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் தனாதிபதியான இரண்டாம் அதிபதியும், தனகாரகன் குருவும் பலமிழந்து ஆறுக்குடைய கிரகம்  வலுப்பெற்றால் காலம் முழுவதும் தனது கடன் காரணாகவே வாழ்ந்து வாழ்வை முடிப்பார்.

 ஒருவரது ஜாதகத்தில் கேந்திர, கோண அதிபதிகள் மறைவிட ஸ்தான அதிபதிகள் தொடர்பின்றி தங்களுக்குள்  பரிமாறிக் கொண்டு பலம் பெற்று நிற்கும் பொழுது யோக பலன்களை சாதகருக்கு அதன் திசை புத்திகளில் தந்து சாதகரது அந்தஸ்தினை உயர்த்தி செல்கிறது.

  ஒரு சாதகத்தில் நீசம் பெற்ற கிரகங்கள் நீசபங்கம் பெற்று இருந்தாலும்,அஸ்தமனம் பெற்ற கிரகங்கள் வர்க்கோத்தமம் மற்றும் திக் பலம் பெற்று இருந்தாலும் யோக பலன்களை சாதகருக்கு தருகிறது.

  ஒருவர் சாதகத்தில் கல்வியறிவு பெற்றவராக திகழ லக்கனம்,வாக்கு ஸ்தானம்,சுக மற்றும் பாக்கிய ஸ்தானங்கள் பலமடைந்து இருக்க வேண்டும்.

 ஒருவரது மணவாழ்வு சிறக்க லக்கனம், இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம்,ஏழாமிடமான களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகிய மேற்குறிப்பிட்ட ஸ்தானங்கள் அன்றி களத்திரகாரகன் சுக்கிரன்,காமகாரகன் செவ்வாய் பாவ கிரக தொடர்பின்றி பலமடைந்து நிற்க வேண்டும்.

 ஒருவர் புத்திரர்களால் புகழ் அடைய புத்திர ஸ்தானமான  5-ஆம் இடமும் அதன் அதிபதியும் மற்றும் புத்திர காரகன் குருவும் பாவர் கலப்பு இன்றி பலமடைந்து இருக்கவேண்டும்.

 ஒருவர் அரசாங்க வேலையில் அமர மற்றும் ஆட்சி செய்யும் அதிகாரம் பெற அவரது ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகமும் மற்றும் அரசாங்க காரகன் சூரியனும், சிம்மமும் பலம் பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.

ஒருவரது ஜாதகத்தில் கேந்திர, கோண அதிபதிகள் மறைவிட ஸ்தான அதிபதிகளுடன் பரிமாறி நிற்கும்பொழுது அது ஒருவித தரித்திர யோக ஜாதகம் ஆகும்.

ஒருவர் ஜாதகத்தில் எவ்வளவுதான் யோகமான கிரக அமைப்புகள் இருந்தாலும் சுகாதிபதி பலமிழந்து நின்றால் அந்த யோக பலனை அனுபவிக்கும் யோகம் இராது.

 அதேநேரத்தில் ஏனைய கிரகங்கள் பலமிழந்து சுகாதிபதி பலம் பெற்றால் சுகாதிபதியுடன் தொடர்புடைய கிரக காரக  உதவியல் சுகமாக தன் வாழ்வை நடத்தி விடுவார்.

  தொடரும்..

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
  9715189647
    செல்
  9715189647
   7402570899

  அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
    M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

.......... அம்மன் துணை!

      மனிதனாக பிறப்பெடுத்த அனைவரும் தனது வினைப்பயனை இப்பூவுலகில் அனுபவிக்கவே பிறப்பாக பிறப்பெடுக்கிறோம்.

      ஒருவர் யாராக  , எந்த நாட்டில், எந்த மதத்தில் , யாருக்கு பிள்ளையாக  எந்த காரணத்திற்காக மற்றும் எந்த நேரத்தில் பிறப்பு எடுக்கிறோம் இதுபோன்ற பல  விஷயங்களையும் ஊழ்வினைப்பயனே முடிவு செய்கிறது.

 ஒரு பிள்ளை பிறப்பது பெற்றோர்கள் மூலமாக இருந்தாலும் அந்த பிள்ளை பிறந்தது பெற்றோர்களுக்காக மட்டுமல்ல என்பதை பெற்றோர்களாகிய அனைவரும் புரிந்து கொள்ள பட வேண்டிய ஒன்றாகும்.

    ஸ்ரீராம அவதாரம் எடுத்தது இராவண வதம் நடத்தவே அன்றி தசரதனுக்கு  பிள்ளையாக பிறந்து  அயோத்தியை மட்டும்  அரசாட்சி புரிய அல்ல.

   இப்பூலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட  ஒரு சில காரண-காரியத்திற்காக சிருஷ்டிக்கப்படுகிறார்கள்.
  ஒவ்வொரு பிறப்பும் எக் காரணத்திற்காக பிறப்பு எடுக்கிறதோ  அதற்கு உரிய காலநேரம் மற்றும் கிரக அமைப்புகள் வானவீதியில் உலாவரும் காலகட்டத்திலேயே‌
ஒருவரது வயிற்றிலிருந்து பிறப்பாக இப்புவியில் கால் வைக்கிறது.

  ஜெனன நேரத்தில் வான வீதியில் உலா வரும் கிரகங்களே சாதகரின் வினைப்பயனை தீர்மானிக்கிறது.

  அவன் அரசனாக பிறப்பு எடுப்பதும், ஆண்டியாக பிறப்பு எடுப்பதும் அவர் வாங்கி வந்த ஊழ்வினைப்பயனின்  வினைப் பயனே காரணகர்த்தா ஆகும்.

  மனிதனாக பிறந்த ஒருவர் ‌ஏதோ ஒரு பாதை நோக்கி பயணித்தாலும் வாழ்க்கை காட்டாற்றில் நம்மை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வந்து நமக்கான பாதையை அமைத்து தருவதும் வினைப்பயனேயின்றி வேறு அல்ல.

 ஒரு சிலர் என்னவாக ஆக நினைக்கிறார்களோ அதுபோலவும்,ஒரு சிலர் என்னவாக ஆக நினைத்தாரோ அவற்றிற்கு முற்றிலும் மாறாகவும் வாழ்க்கை தடத்தை அமைத்து கோள்கள் கோளாட்டம் செய்கிறது.

  ஒருவரது பிறப்பின் இரகசியத்தை அதாவது வினைப்பயனை அறிய ஜோதிட அறிவு சாதாரண மனிதனுக்கு பேருதவி புரிகிறது.

  ஒருவரது முழு வாழ்வினையும்   நவகிரகங்கள் சாதக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் எந்த பாகையில்,எந்த நட்சத்திர சாரத்தில் மற்றும் எந்த கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கை அடைந்து உள்ளது என்பதைப் பொருத்தும், பலன் பார்க்கப்படும் நிலையில் வான வீதியில் உலாவரும் கிரக நிலைகளை பொருத்தும்( கோச்சார நிலை) மற்றும் நடைபெறும் தசை, புத்தி ஆகியவை சார்ந்தும் ஒருவரது வாழ்வில் நிலை தீர்மானம் செய்யப்படுகிறது.

  சாதக கட்டத்தில் ஒரு கிரகங்கள் வலுவு நிலையினை ஆராய ஸ்தான பலம்,திக் பலம் மற்றும் திருக் பலம் மிக அவசியமான ஒன்றாகும்.

  ஜாதகத்தில் ஸ்தான பலம் இழந்த கிரகங்கள் திக் பலம் பெற்றாலும் சாதகருக்கு யோகா பலனையே தருகிறது.

 பொதுவாக ஒரு ஜாதகம் யோக ஜாதகமா அல்லது அவயோக ஜாதகமாககவோ  அமைய பல்வேறு விதிகளை நமது முன்னோர்கள் சோதிட மூல நூல்களில் தனது ஞான திருஷ்டியால் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இந்திய வேத சோதிடம் நமது நாட்டின் பொக்கிஷம் ஆகும்.

 சாதக கட்டத்தில் பிறப்பு,கல்வி,பொருள் ஈட்டல், திருமணம்,பதவி மற்றும் புத்திரம் இது போன்ற பல அடிப்படை விசயங்களுக்கு விடை காண சாதக கட்டத்தில் உள்ள ஸ்தானங்களும்,நவ கிரகங்களும் காரண கர்த்தாவாகிறது.

 மேற்கண்ட லொளகீக வாழ்வுக்கு தேவையான விஷயங்களை மட்டுமன்றி அவனது பிறப்பின் ரகசிய சூட்சுமமான உண்மைகளை சோதிட ஞானத்தில் மேம்பட்டவர்களால் மட்டுமே அறியப்படுகிறது.

  ஒரு ஜாதகர் தனது வாழ்வில் உயர்வு நிலையை அடைய லக்கனமும் மற்றும் அதன் அதிபதியும் முக்கியம் ஆகும்.

 ஜாதகத்தில் எந்த கிரகங்கள் இருந்தாலும் லக்னாதிபதியான எவ்வகையிலும் பலமிழக்க கூடாது ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்து மறைவிடங்களில் நின்று பாவ கிரகங்களால் சூழப்பட்ட அமைப்பினை பெற்ற சாதகம் தரித்திர சாதகம் ஆகும்.

ஒருவர் தனம் படைத்தவராக வாழ்வில் விளங்க லக்கினம், தன,பாக்கிய மற்றும் லாப அதிபதிகள் பலமடைந்து தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு நின்று தனகாரகன் குருபகவானது பார்வையினை பெற்ற அமைப்பு உடையவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட கிரகங்களது திசை காலங்களில் அடுத்த வேளைக்கு கஷ்டப்படும் அன்றாடம் காய்ச்சி குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் பொருளாதார நிலையில் உச்சத்தை தொடுவார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் தனாதிபதியான இரண்டாம் அதிபதியும், தனகாரகன் குருவும் பலமிழந்து ஆறுக்குடைய கிரகம்  வலுப்பெற்றால் காலம் முழுவதும் தனது கடன் காரணாகவே வாழ்ந்து வாழ்வை முடிப்பார்.

 ஒருவரது ஜாதகத்தில் கேந்திர, கோண அதிபதிகள் மறைவிட ஸ்தான அதிபதிகள் தொடர்பின்றி தங்களுக்குள்  பரிமாறிக் கொண்டு பலம் பெற்று நிற்கும் பொழுது யோக பலன்களை சாதகருக்கு அதன் திசை புத்திகளில் தந்து சாதகரது அந்தஸ்தினை உயர்த்தி செல்கிறது.

  ஒரு சாதகத்தில் நீசம் பெற்ற கிரகங்கள் நீசபங்கம் பெற்று இருந்தாலும்,அஸ்தமனம் பெற்ற கிரகங்கள் வர்க்கோத்தமம் மற்றும் திக் பலம் பெற்று இருந்தாலும் யோக பலன்களை சாதகருக்கு தருகிறது.

  ஒருவர் சாதகத்தில் கல்வியறிவு பெற்றவராக திகழ லக்கனம்,வாக்கு ஸ்தானம்,சுக மற்றும் பாக்கிய ஸ்தானங்கள் பலமடைந்து இருக்க வேண்டும்.

 ஒருவரது மணவாழ்வு சிறக்க லக்கனம், இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம்,ஏழாமிடமான களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகிய மேற்குறிப்பிட்ட ஸ்தானங்கள் அன்றி களத்திரகாரகன் சுக்கிரன்,காமகாரகன் செவ்வாய் பாவ கிரக தொடர்பின்றி பலமடைந்து நிற்க வேண்டும்.

 ஒருவர் புத்திரர்களால் புகழ் அடைய புத்திர ஸ்தானமான  5-ஆம் இடமும் அதன் அதிபதியும் மற்றும் புத்திர காரகன் குருவும் பாவர் கலப்பு இன்றி பலமடைந்து இருக்கவேண்டும்.

 ஒருவர் அரசாங்க வேலையில் அமர மற்றும் ஆட்சி செய்யும் அதிகாரம் பெற அவரது ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகமும் மற்றும் அரசாங்க காரகன் சூரியனும், சிம்மமும் பலம் பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.

ஒருவரது ஜாதகத்தில் கேந்திர, கோண அதிபதிகள் மறைவிட ஸ்தான அதிபதிகளுடன் பரிமாறி நிற்கும்பொழுது அது ஒருவித தரித்திர யோக ஜாதகம் ஆகும்.

ஒருவர் ஜாதகத்தில் எவ்வளவுதான் யோகமான கிரக அமைப்புகள் இருந்தாலும் சுகாதிபதி பலமிழந்து நின்றால் அந்த யோக பலனை அனுபவிக்கும் யோகம் இராது.

 அதேநேரத்தில் ஏனைய கிரகங்கள் பலமிழந்து சுகாதிபதி பலம் பெற்றால் சுகாதிபதியுடன் தொடர்புடைய கிரக காரக  உதவியல் சுகமாக தன் வாழ்வை நடத்தி விடுவார்.

  தொடரும்..

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
  9715189647
    செல்
  9715189647
   7402570899

                   

  அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
    M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

..........

Friday 24 January 2020

கோடீஸ்வரர் ஆகும் யோகம்

"கோடீஸ்வரர் ஆகும் யோகம்"


                             

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

       ஒரு தனிமனித லொளகீக வாழ்வில் சிறப்பான அந்தஸ்தை பெற பொருளாதாரம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

         ஒருவரது ஜெனன ஜாதகத்தை வைத்து ஒரு மனிதனின் பொருளாதார உயர்வையும், தாழ்வையும் தெளிவாக தீர்மானித்து விட முடியும்.

   பொதுவாக ஒரு தனி மனிதனுடைய பொருளாதார நிலையை கீழ்காணும் மூன்று வகைகளில் பிரிக்கலாம்.

          1) ஏழையாகப் பிறந்து அந்திம காலம் வரை ஏழையாகவே வாழ்ந்து மறைவது.

          2) பிறக்கும்போது சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பாலும், சாதக யோகத்தாலும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நிலையில் வெற்றியடைந்து கோடீஸ்வரனாக வாழ்ந்து கொண்டிருப்பது.

      3) நிறைவாக கோடிஸ்வரன் வீட்டில் பிறந்து கோடீஸ்வரனாகவே காலம் முழுவதும் வாழ்ந்து மறைவது.

  மேலே குறிப்பிட்ட மூன்று வகைகளில் இரண்டாவதாக குறிப்பிட்ட வகையை சார்ந்த தனி மனித சாதகத்தினை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு "கோடீஸ்வரர் ஆகும் யோகத்தினை " விளங்கிக் கொள்ள முற்படுவோம்.

     ஒருவர்  செல்வந்தனாக வாழ்வதற்கு பலவிதமான யோக அமைப்புகள்  சாதகத்தில் இருந்தாலும் அந்த கிரகங்களின் திசைகள் இளமைக்காலத்தில் நடைமுறைக்கு வரவேண்டும் .

      அவ்வாறு வந்தால்தான் அந்த யோகம் ஜாதகருக்கு பயன் உள்ளதாக அமையும். அத்துடன் மட்டுமல்ல அந்த யோகத்திற்கும் மதிப்பு கிடைக்கும்.குழந்தை பருவத்தில் அல்லது முதுமைப் பருவத்தில் வந்தால் பயனில்லை.

  ஒருவருக்கு அவரது ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் அந்த யோகங்களை
 முழுமையாக அனுபவிக்க அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பலம்  பெறாத பட்சத்தில் ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் அமைந்தாலும் அதனால் ஜாதகருக்கு பயன் இல்லை.

     மக்கள் வாழ்விற்கு ஒரு நாட்டின்  முதலமைச்சர் என்னதான் திட்டமிட்டாலும் , அதனை நடைமுறைப்படுத்த நல்ல அமைச்சர்கள் இருந்தால்தான் அத்திட்டம் மக்களிடம் சென்றடையும்.அதேபோல  ஒருவர் ஜாதகத்தில் உள்ள யோகங்களை நடைமுறைக்குக் கொண்டுவர அவரது ஜாதகத்தில் "பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி" எனப்படும் ஐந்தாம் அதிபதியும் பலம் பெற்றிருக்க வேண்டும்.இவருடன் பாக்யாதிபதியான ஒன்பதாம் இட அதிபதி சம்பந்தப்பட்டால் யோகத்தை விருத்தி படுத்துவார்.

  ஒருவருடைய சாதகத்தில் பொருளாதாரத்திற்கு அடிப்படையான கிரகமான இரண்டாம் அதிபதியும், மிகுந்த லாபத்தை தரக்கூடிய பதினொன்றாம் அதிபதியும் இணைந்து இவர்களுடன் பலம்வாய்ந்த லக்னாதிபதியும் சேர்ந்து வலிமையான பஞ்சமாதிபதியோ    அல்லது      பாக்கியாதிபதியோ சம்பந்தப்பட்டு  இவர்களின் தசா புக்தி நடைமுறைக்கு வரும் காலங்களில் ஒருவர் கோடீஸ்வரர் ஆவது உறுதி ஆகும்.

  இந்த கருத்தினை வலியுறுத்தும் சோதிட பாடல் ஒன்று "கொளசிக சிந்தாமணி"-என்னும் சோதிட நூலில் உள்ளது.

"ஜென்மத்தோன் இரண்டோன் இன்னம் சேர் பதினொன்றோனும்
திண்ணிய மித்திரரோடு திரிகோண கேந்திரம் நின்று
மண்ணிற் பிறந்தோன் நல்ல மாசிலா சுகத்தோடு எண்ணி நாலாயிரம் பொன் இன்பமாய் சேர்ப்பான் கண்டாய்"

   --(பாடல் -74)

பாடல் விளக்கம்:

 ஒருவரது சாதகத்தில் லக்கனாதிபதி எனப்படும் ஜென்மத்தோன்,
தனாதிபதி எனப்படும் இரண்டாம் இட அதிபதி மற்றும் லாபத்தை தரக்கூடிய பதினொன்றாம் அதிபதியும் நட்பு கிரகங்களின் சேர்க்கையை பெற்று கேந்திர திரிகோணம் ஏற சாதகர் நல்ல எல்லா சுகங்களை அனுபவிக்க கூடியவராகவும் , நாலாயிரம் பொன் சேர்த்தும் வைத்திருப்பார்.

 இன்று மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் நாளுக்கு நாள் மதிப்பிடும் தரத்திலும் ,விலையிலும் உயர்ந்து கொண்டிருக்கும் தங்கம் அணிகலன்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

    அன்றைய காலகட்டத்தில் நான்காயிரம் பொன் இன்பமாய் சேர்ப்பான் என்று விஸ்வாமித்திரர் பாடியுள்ளார். இன்று ஒரு பொன்னின் (பவுன்) விலை கிட்டதட்ட ரூபாய் முப்பதாயிரம்  நெருங்குகிறது எனில் நாலாயிரம் பவுன் விலையினை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

பாடலின் விதிப்படி நடுத்தர வர்க்கத்தில் பிறந்து இன்று கோடீஸ்வரனாக உலாவரும் இரண்டு உதாரண சாதகங்களை எடுத்துக் கொண்டு விளங்கி கொள்ள முற்படுவோம்.

      முதல் சாதகம்

பிறந்த தேதி
14-11-1960
நேரம் : 2.15 PM

லக்கனம் ; மீனம்
ராசி : கன்னி
நட்சத்திரம்; உத்திரம்
சூரிய திசை; 4 வருடம் 5 மாதம் 15 நாள்

  இவருடைய சாதகத்தில் லக்கனம் , ஜீவன ஸ்தானாதிபதியும் மற்றும் தனகாரகனுமான குருபகவான் , லாபாதியுமான சனிபகவானுடன்  சேர்ந்து தனம் மற்றும் பாக்கியாதியான செவ்வாய் பகவானை பார்த்து மிகுந்த தனயோகம் பெற்றவராக திகழ்ந்தார்.தனகாரகர் குருபகவான் அம்ச பீடத்தில் உச்சமடைந்தும் பலமடைந்து உள்ளார்.

  இவரது சாதகத்தில் கொளசிக சிந்தாமணி பாடலில் குறிப்பிட்டுள்ளபடி லக்னாதிபதியான குரு பகவான், தன மற்றும் பாக்கிய அதிபதியான செவ்வாய் பகவான் மற்றும் லாபாதிபதியான சனிபகவான் ஆகிய மூவரும் ஒன்றுக்கொன்று  தொடர்பு பெற்று தொழில் ஸ்தான சம்பந்தம் பெற்று உள்ளது.

     மேலும் தர்மாதிபதியான செவ்வாய் பகவான்,கர்மாதிபதியான குரு பகவானும் சமசப்தமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது "தர்ம-கர்மாதிபதி " யோகம் ஆகும்.

இந்த தர்ம-கர்மாதிபதி யோகம் பெற்றவர்கள்

"சொல்லுமையா பாக்கியத்தோன் பத்தோன் கூடி 
சுகமாக வீற்றிருக்கும் பலனைக் கேளு!
எல்லையில்லா
தனம் படைத்து வாழ்வதோடு
எவர்களுமே 
பணிவார்கள் 
இறைவன் போல 
தொல்லையில்லான்
பல பேரை காக்க வல்லோன்
துணையாளர் பலபேரும் 
உண்டு பாரு ".

    இதன்படி தர்மகர்மாதிபதி யோகம் பெற்ற ஜாதகர் மக்கள் செல்வாக்கும், அந்தஸ்தும் பெற்று விளங்கும் கோடீஸ்வரராக திகழ்கிறார்.

மேலும் இவரது ஜாதகத்தில்
 "விளையும் புதனும் சூரியனும் விரும்பி 
எட்டுநான்கு கொன்றில்
வளையக்கூடின் மன்னவனாம்"

 இவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் லக்கனத்திற்கு எட்டாம் இடத்தில் அமர்ந்து மன்னனுக்கு நிகரான செல்வ வளம் பெற்ற கோடீஸ்வரர் ஆக திகழ்கிறார்.

   சாதகரது  ராசி கட்டத்தில் ஆட்சி பெற்று , அம்ச பீடத்தில் உச்சம் பெற்ற லக்கனாதிபதி மற்றும் தொழில் ஸ்தானதிபதியான  குருபகவான் அத்துடன் இணைந்துள்ள ஏனைய கிரகங்களான  சுக்கிரன், செவ்வாய் மற்றும் சனி பகவானை விட பலம் பொருந்திய நிலையிலும், உரிய பொருள் ஈட்டும் வயதிலும் வந்து தனது திசையில் நூல் துறையில் ஈடுபட்டு, வெளிநாட்டு தொடர்பும் பெற்று பல கோடிகளை சம்பாதித்து உள்ளார்.

 சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு ஆட்சி பெற்று "ஹம்ச யோகம்" அடைந்துள்ளது மிகவும் சிறப்பானது.

     சாதகம் -(2)

பிறந்த தேதி ; 19.05.1973
பிறந்த நேரம்; பகல் 1-15
பிறந்த நட்சத்திரம்: கேட்டை
புதன் திசை இருப்பு: 2 வருடம் 9 மாதம் 22 நாள்

லக்கனம்; சிம்மம்
ராசி: விருச்சிகம்

   இவரது ஜாதகத்தில் கொளசிக சிந்தாமணி சோதிட நூலில் குறிப்பிட்டுள்ள படி  சிம்ம லக்னாதிபதியான சூரியன் பத்தாமிடத்தில் திக் பலம் பெற்று ,தனம் மற்றும் லாபாதிபதியான புதன் பகவான் உடன் சேர்ந்து , பாக்கியாதிபதியான செவ்வாய் பகவான் நான்காம் பார்வையாக இவ்வீட்டினை  நோக்க ,
 வீடு கொடுத்த ஜீவன ஸ்தான அதிபதியான சுக்கிரன் பகவான் ராசியிலும் மற்றும் அம்சத்திலும்  ஆட்சி  ஸ்தான வலிமையுடன் வர்க்கோத்தமம் பலமும் பெற்று சந்திரனுக்கு கேந்திரத்திலும்  நின்று பஞ்ச மஹா யோகங்களில் ஒன்றான " மாளவிகா யோகம் " பெற்றுள்ளது.

 ஆறு மற்றும் ஏழாம் அதிபதியாக சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தில் இருப்பதால் கல்குவாரி  தொழிலிலும், வாகனங்களுக்கு கடன் வழங்கும் தொழிலிலும் ஈடுபட்டு சுக்கிரன் திசை பின்பகுதி முதல்  சூரியன் திசை முழுவதும் பெரும் வளர்ச்சி அடைந்து கோடீஸ்வரராக ஆனார்.

இதுபோன்ற இன்னும் பல கோடீஸ்வரர் சாதகங்களை ஆய்வு செய்து பார்த்து எனது அனுபவத்தில் கண்ட உண்மை என்னவென்றால் "ஒருவரின் ஜாதகத்தில் தனாதிபதியும், லாபாதிபதியும் இவர்களுடன் லக்கினாதிபதியும் இணைந்து கேந்திர கோணங்களில் ஆட்சி, உச்சம் பெற்று பத்தோன் சம்பந்தமும் பெற்று இருந்து இவர்களின் திசை புத்தி நடைபெறும் காலங்களில் ஜாதகர் கோடீஸ்வரர் ஆக மாறுவது உறுதி ஆகும்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
  9715189647

   செல்
 9715189647
 7402570899

                             

 அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
   M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்),
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email id
masterastroravi@gmail.com.

........

சாதக கட்ட அமைப்புகள்

     சாதக கட்ட அமைப்புகள்


                            

   செவ்வாய்ப்பட்டி
 ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

    ஒரு வீட்டிற்கு எப்படி நான்கு தூண்கள் அவசியமோ , அதேபோல மனித வாழ்விற்கு சாதக கட்டத்தில் மனித வாழ்வினை சமூகத்தில் சீர் தூக்கி நிறுத்த "கேந்திரம் " எனப்படும் 1,4,7,10 ஆம் இடங்களும் அதன் அதிபதிகளும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

     அதேபோல் ஒரு  வீட்டினுள் நுழைய நுழைவாயில் எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு சாதக கட்டத்தில் சமூதாயத்தில் "பேரும் புகழும்" அடைய நுழைவாயிலாக  "திரிகோணம்" எனப்படும் 1,5,9 ஆம் இடங்களும் அதன் அதிபதிகளும் திகழ்கிறது.

  ஒரு மனிதன் தனிமனித வாழ்வில் சிறக்க கேந்திர ஸ்தானங்களும் அதன் அதிபதிகளும் உதவி புரிகின்றன. அது எவ்வாறு என ஆராய்ந்து உற்று நோக்கினால் தங்களுக்கு விடை கிடைக்கும்.

  ஆம். லக்கனம் எனப்படும் ஒன்றாம் இடம் தன்னையும் தான்சார்ந்த குணங்களையும் தெரிவிக்கிறது.

    இரண்டாவது கேந்திர ஸ்தானமான நான்காம் இடம் தாய் நிலை பற்றியும் மற்றும் தாய்வழி அம்மான் வர்க்ககங்களை பற்றி அறிய பயன்படுகிறது.

   மூன்றாவது கேந்திர ஸ்தானமான ஏழாம் இடம் தனக்கு வாழ்க்கை துணையாக வரக்கூடிய கணவனையோ அல்லது மனைவியையோ பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

    நான்காம் கேந்திரமான ஸ்தானமான பத்தாமிடம் இல்வாழ்வுக்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய  ஜீவன நிலையைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது.

 ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்கள் மற்றும் அதன் அதிபதிகளும் சமூக வாழ்விற்கு மற்றும் சமுதாய தொடர்பு பெரும்பங்காற்றுகிறது இதன் தசை காலங்கள் சாதகர்க்கு மிகுந்த யோக பலனை தருகிறது.இது எவ்வகையில் சால் பொருந்துகிறது என ஆராய்வோம்.

   ஒருவர் பொது வாழ்வில் சிறக்க ஜாதகரை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டன் எனப்படும் 
லக்கனம் மற்றும் அதிபதியை  பொருத்தே அமைகிறது. 

  சமூகத்திலுள்ள மனிதர்களை பற்றி கவலைப்படவும், சமூகப்பணி ஆற்றவும் வள்ளலார் வழிநின்று "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் "என்ற மனநிலையோடு பொதுஜன மக்களுடன் "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற வள்ளுவ பெருந்தகையின் கூற்றுப்படி வாழ்ந்து காட்ட  புத்தி ஸ்தானமான ஐந்தாம் இடம் பெரும்பங்காற்றுகிறது.

 "கொடைக்குணம் என்பது பிறப்பு நிலை ஆகும்.இல்லறம் என்பது இல்+அறம்‌ .இல்‌ என்பது இல்லம் ஆகும். முன்னோர்கள் கூறிச்சென்ற அறவழியில் நின்று குடும்ப வாழ்வை மேற்கொள்வதை இல்லறம் என்போம்.
அறம் என்பது "விதித்தன செய்தலும் ,விலகியன ஒழித்தலுமாகும்".

 முன்னோர்கள் விதித்து சென்றதை ஏற்று ஒழுக்க வழிநின்று வாழ்தலும், அவர்கள் வெறுத்து ஒதுக்கியதை விட்டு விலகி நிற்பதும் ஆகும்.

   சாதக கட்டத்தில் கட்டத்தில் மூன்றாவது பெரிய திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடத்தை தர்ம ஸ்தானம் என்று அழைப்பார்கள்.

 சமுதாய வாழ்வில் 
தான தர்ம குணங்களுடனும் ,
தாராள மனப்பான்மையுடனும் திகழ ஒன்பதாம் இடமும் அதன் அதிபதிகளும் உதவி புரிகின்றன. ஒரு பிள்ளை சமூக தொடர்பை வைத்துக்கொள்ள தந்தையே முன்னுதாரணமாகவும் இருப்பதால் ஒன்பதாம் இடத்தை தந்தை ஸ்தானமாகவும் கொள்ளப்படுகிறது.

    ஒரு மனிதன் தனிமனித வாழ்விலும் மற்றும் சமூக வாழ்விலும் சிறந்து விளங்க இந்த கேந்திர கோண அதிபதிகள் தங்களது ஜாதகத்தில் ஒன்றுக்குள் ஒன்று பரிவர்த்தனை பெற்று பலம் பெற்று நிற்கும் போது அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் உயரிய புகழை அடைகிறான்.

   இலக்கணம் மற்றும் அதன் அதிபதியும் கேந்திர மற்றும் கோணம் ஆகிய இரண்டிற்கும் பொதுவான அதிபதிகளாக வருவதால் ஒரு மனிதன் தனி மனித வாழ்விலும் மற்றும் பொது வாழ்விலும் உயர்ந்தோங்கி நிற்க அவனை வழிகாட்டி நடத்திச் செல்வது இலக்கணமாகும் அதனால்தான் ஜாதகரை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டனாக அது திகழ்கிறது.

 ஒரு ஜாதகத்தில் ஏனைய ஸ்தானங்கள்  வலுவிழந்தே நின்றாலும் உயிர் காரகராகிய இலக்கனமும் அதன் அதிபதியும் வலுப்பெற்று நின்றால் எதிர் நீச்சல் பேட்டு  இப்பிறப்பு எனும் மாயக்கடலை நீந்தி கரையேறி விடலாம்.

   ஒரு நாள் என்பது இரவும், பகலும் சேர்ந்தது போல மனித வாழ்விற்கு ஒளியாக இந்த கேந்திர கோணங்கள் திகழ்கிறது.இருளாக மறைவிட ஸ்தானங்கள் திகழ்கிறது.

 ஒளியாக நல்லறமும், இருளாக தீவினையும் கலந்தே சமூகத்தில் உள்ளது.

 ஒரு மனிதன் தனிமனித வாழ்விலும் மற்றும் சமூக வாழ்விலும் உயர்வு அடைய தடையாக இருக்கக்கூடிய ஸ்தானங்களாவன மறைவிட ஸ்தானங்களும் (3,6,8,12) அதன் அதிபதிகளும் ஆகும்.

அதனால் இந்த கேந்திர கோண ,ஸ்தான அதிபதிகள்  உடன் மறைவிட ஸ்தான அதிபதிகள் பரிமாறிக் கொண்டு நின்று அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் ஒரு மனிதன் தனது தனி மனித வாழ்விலும் மற்றும் சமூக வாழ்விலும் இடர் பட்டு கெட்ட பெயர் எடுக்க நேரிடும்.

     ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது .
இதனை ருண, ரோக மற்றும் கடன் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஸ்தானம் பலம் பெற்று நின்று கேந்திர கோணாதிபதிகள் பலமிழந்து இருக்கும்பொழுது‌ இதன் திசை காலங்களில்
சாதகர்  கடன் அல்லது எதிரி அல்லது பிணி போன்ற ஏதாவது ஒரு தொல்லைகளை பெற்று இருக்கும்பொழுது அவன் தனி மனித வாழ்விலும் சமூக வாழ்விலும் நேரிய வழியில் இயங்க முடியாமல் போய்விடுகிறது.

  இதேபோல ஒரு ஜாதகருக்கு எட்டாம் இடம் என்பது அஷ்டம ஸ்தானம் ஆகும்.  இந்த ஸ்தானம் வலுப்பெற்று ஏனைய கேந்திர, கோண அதிபதிகள் பலம் இழக்கும் பொழுது அதன் திசை காலங்களில் சமூகத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வம்பு ,வழக்கு மற்றும் பிரச்சினைகளை அகப்பட்டு சிறை செல்லும் சூழலும், விபத்து போன்ற சம்பவங்களும் ஏற்படலாம்.

நன்றி.(என் மனதில் எழுந்த ஒப்பீடுகள்)

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647

    செல்
  9715189647
‌. 7402570899

                                  

  அன்புடன் 
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் , கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com.

.....