Wednesday 26 December 2018

மனைவி அமைவதெல்லாம் ..... Astro Video

மனைவி அமைவதெல்லாம் .......

   ( Astro Video )


                          Part --( 1 )

                               

                  
                   Part --( 2 )


வாட்ஷ் அப்
 9715189647

செல்
9715189647
7402570899

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக தாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc.MA .BEd 
Teacher & Astro researcher )
Om sakthi Online astro prediction consulting centre
Karambakkudi.Pudukkottai District.
My astro blogspot 
AstroRavichandransevvai.blogspot .com
astrosmartnotes .blogspot .com
AstroRavichandran .blogspot .com

My email
masterastroravi@gmail .com



                         

Friday 21 December 2018

சாதகங்ளி்ல் யோக பலன் வீடியோ

சாதகங்ளி்ல் யோக பலன்  வீடியோ



                      Part  --(1)


Part --(2)




Part--(3)


(தங்களது சாதக பலன்,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

வாட்ஷ் அப்

9715189647

செல்
9715189647
7402570899

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA ,BEd .
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் 
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் .

                      

Wednesday 19 December 2018

குரு பகவானும் ,புதன் பகவானும் மனித வாழ்வி்ல் நிகழ்த்தும் பங்கு

குரு பகவானும்,புதன் பகவானும் மனித வாழ்வில் நிகழ்த்தும் பங்கு.

                              
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

கிரகங்கள் படுத்தும் பாடு!

     ஒருவரது சாதகத்தில் பணம் ,பதவி ,பட்டம்,புகழ் ,கல்வி ,ஞானம்,செல்வம்,
குழந்தை பாக்கியம் மற்றும் ஆன்மீக வாழ்வு   ஆகியவற்றினை தந்து லொளகீக வாழ்விற்கும்,ஆன்மீக வாழ்விற்கும் அடிப்படை காரணர்த்தாவாக திகழக்கூடிய கிரகம் குரு பகவான் ஆவார்.

     ஒருவருக்கு புத்தி சாதூர்யம்,விவேகம்,
நுண்ணறிவு,எண்ணியல்,கணித அறிவு,இசை ஆர்வம்,கதை,கவிதை,
கட்டுரை,பாடல் மற்றும் கணினி அறிவு போன்ற அனைத்திற்கும் காரணகர்த்தா புதன் பகவானே ஆவார்.

      புதன் பகவான் என்றும் மனதினை இளமையாக வைத்துகொள்ள பேரூதவி புரிபவர்.

      ஒரு மனினின் அறிவாற்றலை ஆட்சி செய்பவர் புதன் பகவான் ஆவார் .

  அரசாங்கம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற புதன் பகவானே காரணகர்த்தா ஆகும் .

         கணிதம்,பேச்சு, தொழி்ல்நுட்பம்,
ஆயக்கலைகள் போன்றவற்றுள் ஒருவர் புகழ் பெற்று திகழ புதன் பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார்.

                         

   ஒரு மனிதன் யாருடைய ஆதரவின்றி தனித்து தனது திறமை,அறிவு  மற்றும் முயற்சியால் வெற்றி பெற புதன் பகவானே குறிப்பிட தகுந்தவர் ஆவார் .

   புதன்  ஒருவரது சாதகத்தில் உச்சம் ,ஆட்சி போன்ற அமைப்பினில் பலமடைந்து நின்றால் '' பத்ர யோகம் '' ஆகும்.

 பத்ர யோகம் பெற்றவர் கொளரவ பதவி பெற்றவராக ,பல பட்டம் பெற்றவராக மற்றும் பல கலைளில் சிம்ம சொப்பணமாக திகழ்வார் .

   ஆத்மா காரகர் சூரியன் பகவான் புதன் பகவான் உடன் சேர்ந்து நிற்க அது ''புத - ஆதித்ய யோகம் எனப்படும்.இது பல பட்டம் பெற்று சாதகரை கல்விமானாக திகழ வைக்கும்.

  அவிழ்க்க முடியாத பல புதிர்களை போட்டு அந்த புதிர்களை அவிழ்த்து விடை காண வைப்பவரும் புதன் பகவானே காரணம் ஆகும் .

  புதன் பகவான் இரட்டை வேடதாரி பல கிரிமினல் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் துப்பறிவு நிபுணராக திகழ்பவரும் புதன் பகவானே ஆவார் .அதேநேரத்தில் பெரிய வங்கிகளில் இரகசியமாக CC TV camera வையும் தாண்டி bank logger உள்ள pass word யும் கண்டறிந்து bank logger உடைத்து யார் கண்ணில் படாமல் பணத்தினை கொள்ளையடிக்கும் corporate திருடனாக  திகழ செய்பவரும் புதன் பகவானே காரணம் ஆகும் .                           

   ஒரு சிலர் படிப்பறிவு பெற்றிருந்தாலும் முட்டாளாக திகழ செய்பவரும்,படிக்காத கிராமத்தானாக இருந்தாலும் அவரை படிக்காத மேதையாக திகழ  செய்பவரும் புதன் பகவானே ஆகும் .

 ஒரு சிலர் கபடதாரியாகவும்,வேறு சிலர் உடன் இருக்கும் போது அவர்ளிடம் காணப்படும் அலாதியான நகைச்சுவை உணர்வுகளுக்கும் நாயகனாக விளங்குவபர் புதன் பகவானே ஆகும்.

  நவகிரகங்களில் இளவரசராக திகழ்பவர் புதன் பகவானே ஆகும் .வாணிப வியாபரம் புரிபவர்களுக்கு புதன் பகவானின் ஆசியும்,அருளாட்சியும் அவசியம் ஆகும்.

  வாணிகம்,விவசாயம்,
பொருளாதரம்,கனிணி அறிவியல்,கணக்கு,
புள்ளியியல் மற்றும் பொருளாரம் போன்ற  துறைகளில் கொடிகட்டி விளங் புதன் பகவானே காரணம் ஆகும்.

                             

    ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவர் புகழ் பெற்று திகழ புதன் பகவானே காரணம் ஆகும் .புதன் பகவான் ஆனவர்  இணையக்கூடிய கிரகத்தின் தன்மையினை பொறுத்து புதன் பகவான் தனது இயல்புநிலை வெளிப்படும்.

  உதாரணமாக ராகு பகவான் உடன் புதன் பகவான் இணையும்போது சாதகர் பொய் பேசக்கூடியவராகவும்,
கேது பகவான் உடன் இணையும் புதன் உண்மை பேசக்கூடிய குணநலன் உடையவராகவும் விளங்குவார்.

                 

  நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக ராஜகிரக அந்தஸ்து குரு பகவானுக்கு வழங்ப்படுகிறது.

   குரு பகவான் ஒருவரது சாதகத்தில்  பலமடைந்த அமைப்பினை பெற்றவர்கள் மட்டுமே வருமான வரித்துறை,கல்வி துறை ,நிதி துறை,நீதி துறை  மற்றும் பொருளாதரம் போன்ற துறைகளில் கொடிகட்டி பறக்க முடியும்.

     அரசாங்க துறைகளில் ஆசிரியர் ,நீதிபதி அமைச்சர் போன்ற கொளரவ பதவிகளில் பணியாற்றுபவர்கள் குரு பகவானை பலமான அமைப்பினை பெற்றவர்கள் ஆவார் .

    கலைதுறைகளில் உயர்ந்த  அந்தஷ்து  பெறுவதற்கும்,
இளங்கலை,முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சிறந்து விளங்குவற்கும் குரு பகவானின் அருள் அவசியம் தேவைப்படுகிறது.

   சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பதற்கு குரு பகவானே முக்கியமானவர் ஆகும்.

     முற்பிறவியில் நாம் செய்கின்ற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப யோக பாக்கியங்களை தருவதால்  இவரை பாக்கிய காரகன் அல்லது புண்ணிய காரகன் என அழைககப்படுகறது.

  திருமண வயதினில் உள்ள ஆண்களும்,பெண்களும் குரு பெயர்ச்சி முக்கியம் தருவதன் காரணம் திருமணம் நிச்சயம் செய்ய குரு நோக்கம் அவசியம் ஆகும்.

                         
                         

    குரு பகவான் எக்கிரகத்துடன் இணைந்தாலும்,
பார்த்தாலும் அக்கிரகத்தின் தீய பலன்களை குறைத்துவிடும்.

      குரு பகவான் பிரச்சினைள்,சிக்கல்கள் மற்றும் ரகசியங்ளை காக்க தெரிந்தவர் ஆவார் .

    குரு பகவான் மதிப்பவர்களை மதிக்கவும்,
எதிர்ப்பவர்ளை மிதிக்கவும் தெரியும்.

    பிரபஞ்சத்தில் பிரம்மாவின் கட்டளைப்படி ஜீவராசிகளை உருவாக்கும் பொறுப்பினை குரு பகவான் பெற்றிருப்பதால் இவரை '' புத்திர காரகன்'' என அழைக்ப்படுகிறது.

    தன யோகத்தினை வழங்குபவர் என்பதால் ''தன காரகன் '' என அழைக்ப்படுகிறது.

    குரு பகவானுக்கு புதன் பகவான் பகை கிரகம் என்பதால் குரு பகவானும் ,புதன் பகவானும் சேர்ந்து நிற்பதை விட ,ஒன்றுக்கு ஒன்று பார்த்துக்கொள்வது நல்லது .

  குரு பகவான் இயற்கை சுபர் ஆவார் .குரு பகவான் உடன் ராகு அல்லது சனி சேரும் போதோ அல்லது குரு பகவான் ராகு ,சனி  சாரம் பெற்றோ இருப்பினும் மற்றும் குரு பகவான் மறைவிட அதிபதியாகவோ இருந்தால்  தனது இயல்பான குணத்திலிருந்து மாறுபடுகிறது.

 தனித்த புதன் பகவான்  இயற்கை சுபர் ஆவார் .பாவியோடு சேர்ந்த புதன்  பாவர் ஆகிறார்.

  ஒருவரது சாதகத்தில் குரு பகவானும் ,புதன் பகவானும் பலமடைந்து நின்று  அவ்விரு கிரகங்கள்  மறைவிட  அதிபதியாகவோ அல்லது  பாதகாதிபதியாகவோ இருந்தாலும் இந்த  கிரகங்கள் எவ்வித கெடுபலன்களையும் மிகுதியாக  சாதகருக்கு கொடுத்து விடுவதில்லை.

  குரு பகவானும் ,புதன் பகவானும் ஒருவரது சாதகத்தில் பலமடைந்து நின்றாலே சாதகர் கல்வியில் சிறந்து விளங்குவான்.

 ஒருவரது சாதகத்தில் இவ்விரு கிரகங்கள் பாவர் சாரம் மற்றும் சேர்க்கை அற்று பலமடைந்து நின்றாலே சாதகர் நல்ல மனநிலையினையும்,
உடல் நிலையினையும் பெற்று விளங்குவான்.சாதகரது பேச்சிலும்,நடத்தையிலும் ஒருவிதமான உண்மைத்தன்மையானது இருக்கும் .சாதகர் செய்யக்கூடிய வேலையிலும் நேர்த்தி இருக்கும் .இவர்கள் உடன் நம்பி பழகலாம்.

  குரு பகவானும் ,புதன் பகவானும் பலமடைந்த அமைப்பினை பெற்று லக்கன ,தொழி்ல் ஸ்தானத்திற்கு தொடர்பு இருந்தால் சாதகர் தமது வாழ்வி்ல் white colour shop என்று சொல்லக்கூடிய மேம்பட்ட அலுவல பணிகளையே மேற்கொள்வர்.

  labour work போன்ற  கீழ்மட்ட வேலைகள் செய்வதில்  அவர்கள் விருப்பம் செல்லாது.பிறரை வஞ்சித்தும், ஏமாற்றியும்  பணம் ஈட்டும் லொளகீக குணநிலையும் அவர்கள் மனதில் எழாது.

நன்றி 

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

வாட்ஷ் அப்
   9715189647

        செல்
  9715189647
   7402570899

                        

 அன்புடன்
 சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc ,MA ,BEd 
 ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம் ,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம் .

My email
  masterastroravi@gmail.com

My blogspot 
 AstroRavichandran .
blogspot .com

AstroRavichandransevvai .
blogspot .com

astrosmartnotes .blogspot .com
..............................................

Friday 14 December 2018

மானிட வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடு-( 135 )

மானிட வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடு - ( 135 )


                       

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

      மனித வாழ்வில் கிரகங்கள் செய்யும் மாற்றங்களை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து  எனது முகநூலிலும் மற்றும் எனது வலைதளத்திலும் எழுதி வருகிறேன்.அனைவரும் படித்து பயன்பெறுங்கள்.

     ஒருவர் பெறக்கூடிய வெற்றிக்கும் ,தோல்விகளுக்கும் அவரது சாதக கட்டத்தில் உள்ள கிரகநிலைகளே முழு காரணங்கள்  ஆகும். நல்ல கிரகநிலைகள் இருந்தாலும் அந்த யோக திசைகள் உரிய காலத்தில் நடைபெற்றால்தான் அந்த யோகங்கள் செயல்பாட்டுக்கு வரும் நிலையை ஒருவர் பெற முடியும்.

       எனது அனுபவங்களில் பலரது சாதகத்தை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.சனி திசை வருவதற்கு முன்புவரை   உண்ண உணவுக்கு கூட கஷ்டப்பட்டவர் தனது சொத்து எல்லாம் இழந்து கடனால்  கஷ்டப்பட்டவர் , இப்பொழுது இழந்த சொத்து எல்லாம் வாங்கியது மட்டுமல்லாமல் அதற்கு மேலும் சொத்துக்களை வாங்கி ,லாரி,டிராக்டர் போன்ற வாகனங்களை பெற்று மதிக்க தக்கவராக மாறிவிட்டார் .இதற்கு காரணம் அவரது நடைபெற்ற யோக சனி திசையே காரணம் ஆகும்.

சாதகர் துலாம் ராசி என்பதால் அவருக்கு மூன்று மற்றும் ஆறுக்குடைய அதாவது ருண ,ரோக அதிபதி குரு திசையில் ஆட்டி பிடித்து எல்லாவற்றையும் இழக்க வைத்து பின்பு நடைபெற்ற சனி திசையில் யோகத்தை வாரி வழங்கியது.

எனவே இழப்புக்கும் மற்றும் ஏற்றத்திற்கும் அவரது கிரகங்கள் படுத்தும் பாடே ஆகும்.ஒருவர்.இழப்பதால் அவருடைய திறமையின்மையே காரணம் என்றோ ! அல்லது வெற்றி பெறுவதால் அவரது அறிவாளிதனம் என்றோ ! கூறிவிடமுடியாது.

                  

 ஒருவரது சாதகத்தில் லக்கனம்,தனஸ்தானம் ,
சுகஸ்தானம் ,புத்தி ஸ்தானம் மற்றும் தர்மஸ்தானங்களும்( 1,2,4,5,9 ) மற்றும் கல்விக்குகாரகரான குரு,புதன் ,சுக்கிரன் ,மனநிலைகாரகன் சந்திரன் ஆகிய கிரகங்களும் பலமடைந்து பிறந்த குழந்தை , குப்பத்தில் பிறந்தாலும் அவனுடைய கிரகநிலைகளும் மற்றும் உகந்த திசையும் அவனை கற்றவனாக்கி ஒரு முக்கிய அரசு பொறுப்புகளை வழிநடத்தும் அறிஞனாக மாற்றி அழகு பார்ககும்.

அதேநேரத்தில் கோடீஸ்வர வீட்டில் பிறந்தாலும் மேற்கண்ட கிரகநிலைகளும் ,நல்ல ஸ்தானநிலைகளும் பெறாமல் மற்றும் உகந்த திசைகளும் அவனது வாழ்வில் வராமல் எல்லா வசதியிருந்தும் வாய்ப்பை பயன்படுத்த தவறி வாழ்வில் கற்றறிந்தவர் சபையில் பேச தகுதியற்றவனாக மாற்றிவிடுகிறது.

  "
       திறமையுள்ள மனிதர் எல்லாம்  எல்லாம் வெற்றி பெறுவது இல்லையே !
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லையே !

       சில நேரங்களில் ஒரு தொழிலுக்கு தேவையான திறமை,அறிவு மற்றும் கெட்டிகாரத்தனம் இவற்றை பெற்றிருந்தும்  அத்தொழிலில் ஜொலிக்க முடியவில்லை ஆனால் அத்தொழிலுக்கு தேவையான தகுதிகள் இல்லாவிட்டாலும் அவரது கடையை நாடி மக்கள் செல்கிறது என வருத்தப்படுபவருண்டு.

            காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்து பார்த்தால் அவரது சாதகத்தில் தனஸ்தானம்,பாக்கியஸ்தானம்,ஜீவனஸ்தானம் மற்றும் லாபஸ்தானம் (2,9,10,11 ) ஆகியஸ்தானங்கள் பலமடைந்து ஒன்றுக்கொன்று சேர்க்கை,பார்வை மற்றும் பரிவர்தனை பெற்ற நபர் அத்தொழிலுக்குரிய நேர்த்தியும் மற்றும் ஞானமும் இல்லாத சூழலிலும் மேற்கூறிய ஏதாவது உகந்த திசையும் நடப்பில் இருக்கும்.எனவே ஒரு வீதியில் பல ஜவுளி கடைகள் இருந்தாலும் அந்த ஒரு கடையில் மட்டும் இவ்வளவு கூட்டம் நிரம்பி வழிவதற்கு காரணமும் மேற்கூறிய காரணங்களே ஆகும்..

எனவே ஒரு மனிதன் ஆனவர் வான்புகழ் கொண்ட திருவள்ளுவர் கூறுவதுபோல "கொக்கக்க கூம்பும பருவத்து "" அதாவது கொக்கானது உரிய காலம் வரும் வரை காத்திருந்து பெரியமீனை கொத்தி செல்வதுபோல "ஒருவர் உகந்த காலம்வரை காத்திருந்து உரிய காலத்தில் தட்டி செல்லவேண்டும்.
 
கோவில்களுக்கு கூட ஒரு குறிப்பிட்ட காலம் உண்டு.ஒரு சில குறிப்பிட்ட காலங்கள் வரை கூட்டம் நிரம்பி வழிவதும் ,சில காலங்களில் கூட்டமே இல்லாமே இருப்பதையும் காணமுடிகிறது.

********
(தங்களது சாதகபலன்,திருமண
பொருத்தம்,மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெறலாம்.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போனாற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )

 தொடர்புக்கு

  செல்
97 151 89 647
   740 257 08 99

வாட்ஸ்அப்
97 151 89 647

                   

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
           M.SC,MA,BEd,
   சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்

My website.click hear

AstroRavichandransevvai.blogspot.com

astrosmartnotes .blogspot .com
..................
......
My email
masterastroravi@gmail .com

-------##-----#--------------------#

Sunday 9 December 2018

கிர பலன்களும்,பரிகார முறைகளும்

கிரக பலன்களும்,பரிகார முறைகளும்.

                         
   கிரகங்கள் படுத்தும் பாடு-

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!


   மனித வாழ்வில் ஏற்படும் உயர்விற்க்கும்,தாழ்விற்க்கும் கிரகபலன்களே காரணம் ஆகும். இந்த பலன்களை குறைக்கவோ அல்லது தாங்கிக்கொள்கின்ற மனப்பக்குவத்தையோ அல்லது பலனில் சிறு மாற்றத்தை உண்டாக்க கூடிய சக்தி மானிடர்களுக்கு உண்டு.

 அவரவர் செய்யக்கூடிய பரிகார பூஜை வழிபாடுகள்,
தான -தர்மங்கள்,நல்ல எண்ணம்,சொல்,செயல் இவைகளால் மாற்றி அமைக்ககூடிய வழிவகைகள் உண்டு.இதில் குறிப்பிடத்தக்கது "பரிகார பூஜைகள் ஆகும். அவற்றில் ஒரு சில பரிகார வழிபாட்டு முறைகளை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன்.

      ஒருவரது ஜாதகத்தில் கடுமையான துன்பத்தையோ,
விபத்தையோ  அல்லது பிணி மற்றும் பீடையையோ தருவதாக இருந்தாலும் ,மற்றும்
புத்திர பாக்கிய கால தாமதமாக தரக்கூடிய புத்திர தோஷமோ அல்லது திருமணத்தடை போன்றவை ஏற்பட்டாலும்,
சில திருமண பொருத்தங்களில் குறைபாடு இருப்பினும் ,கணவன் மனைவி ஒற்றுமை குறைபாடு இருப்பினும்
இவ்வித பிரச்சினைகளில் இருந்து வெளிவர சோதிடர்களால் கூறப்படும் தீர்வு முறைகள் பரிகாரங்களே ஆகும்.

        திருமணத்தடை ஏற்படின் மங்கல்ய தோஷம்,களஸ்திர தோஷம்  போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.

        லக்கனம் மற்றும் ராசிகளோடு ராகு,கேது சம்பந்தம், குடும்பாதிபதியுடன  ராகு இணைவு மற்றும்ஆறு , எட்டாமிட தொடர்பும்   திருமணத்தடையை ஏற்படுத்தும்

                     

பரிகாரங்கள்

      ராகு ஸ்தலங்கள் உள்ள திருநாகேஸ்வரம்,
,பேரையூர்,
திருப்பாள்புரம்  மற்றும் காளகஸ்தியையோ சென்று பாம்பில் வெள்ளி படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டாலே தோஷத்தின் வலிமையை  குறைக்கலாம்.

  துர்க்கை வழிபாடு,ஆஞ்சநேய வழிபாடு ராகு காலத்தில்  செய்வதன் மூலம் தோஷங்களை போக்கி கொள்ளலாம்.

            புத்திரதோஷம்

         புத்திரகாரகன் குரு நீசம் ,பகை மற்றும் மறைவு ஸ்தானங்களிலோ இருந்து
புத்திரஸ்தானத்தில் பாவி இருந்து அதன் அதிபதிகளுடன் ராகு,கேது தொடர்பு ஏற்படடிருந்தாலோ அல்லது புத்திர ஸ்தானாதிபதி மறைவிடங்களில் நின்றாலோ புத்திர தோஷம் உண்டாகிறது.

 பரிகாரங்கள்

                         இத்தோஷமுடையவர்கள் அரச மரம் சுற்றி வந்து , பூ,பொட்டு,மஞ்சள்,
வஸ்திரம்  மற்றும் குங்குமம் போன்றவை வைத்து சுமங்கலி பெண்களுக்கு  தானம் செய்து அவர்களது மனம் நிறைந்த ஆசிர்வாதம் பெற விதியுள்ள ஜென்மன் பிறப்பான்

     மேலும் ராகு கேது ஸ்தலங்களுக்கு சென்று ராகு காலங்களில் வெள்ளியில் பாம்பு படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்தல் உத்தமம் ஆகும்.

                     

        சகோதர தோஷம்

          ஓருவருக்கு பிறந்த குழந்தையின் குழந்தைக்கு( ஆணாக/பெண்ணாக இருப்பின் ) உடன் பிறந்த சகோதரருக்கு ஆகாது எனில் அது சகோதர தோஷம்.சில நேரங்களில் உடன் பிறந்த சகோதரர் இருக்ககூடாது எனறும் சாதகத்தில் இருப்பின்
 (சகோதரஸ்தானம் எனப்படும் மூன்றாம் வீட்டில் ராகு,கேது இருப்பது,சகோதரகாரகன் எனப்படும் செவ்வாயுடன் ராகு,கேது தொடர்பு பெறுவது மற்றும் மூன்றாம் அதிபதி நீசம்,பகை,மறைவுஸ்தானங்களில் இடம்பெறுவது இத்தகைய தோஷத்தை தரும்)

      பரிகாரம் வழிபாடு

              இது போன்ற குழந்தையை இறைவனுக்கு தத்து கொடுக்கும்போது அது சாமி பிள்ளையாகி விடுவதால் அக்குழந்தையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.ஆனால் அக்குழந்தைக்கு தத்து கொடுக்கும் சாமியின் பெயரினை சூட்டி அக்குழந்தைக்கு நடத்தக்கூடிய அனைத்து சுப காரியத்திற்கும் தத்து கொடுத்த கோவிலில் சாமி கும்பிட்டு வந்த பிறகே நடத்தவேண்டும்.

                     

          தார தோஷம்

   சிலரது ஜாதகங்களில் ஏழாம் அதிபதி பலம் இழந்து லக்கனாதிபதி மற்றும்  பதினொராம் அதிபதி வலுப்பெற்றிருந்தாலும்,

களஸ்திரகாரகன் சுக்கிரன் கேந்திரங்களிலே இருந்தாலும்,சனி ஏழாமிடத்தில் இருந்து  ஏழாம் அதிபதி வலுவிழந்த சாதகங்களிலும்,

    லக்கன ராசிகளுடன் ராகு கேது தொடர்புபெற்று ஏழாம் அதிபதி பலமிழந்து 11- ம் இட அதிபதி வலுப்பெற்ற சாதகங்களிலும் தார தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

   தார தோஷம் போக்கும்பரிகாரங்கள்

     இதுபோன்ற அமைப்புடையவர்கள் நமது கலாச்சாரப்படி   ஒருவனுககு ஒருத்தி என்ற உயர்கொள்கையை கொண்ட நாம் பரிகாரங்கள் மூலம் தார தோஷத்தை தவிர்த்துவிடலாம்

       திருமணத்தைப்
போன்றோ சுப விஷயங்கள் செய்து ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி வெட்டி விடுவதன் மூலம் தார தோஷத்தை தவிர்த்து பிறகு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டலாம்.

    வாழை மரம் வெட்டுவது ஒரு மரத்தை வெட்டுவதற்குரிய பாவம் என்பதால் ஒரு பெண் பதுமை செய்து அதற்கு முறைப்படி தாலி கட்டி பிறகு அதை நீரில் கரைத்துவிடலாம்

     இதேபோல் பெண்ணின் ஜாதகதத்தில் இருப்பின் ஒரு பெண்ணைக்கொண்டு தாலி கட்டி பிறகு அதை நீக்கிவிடல்.

   எல்லாவற்றிக்கு மேலாக கோவில்களில் திருமணம் நடத்தி அவ்வாறு திருமணத்தன்று கட்டப்படும் மாங்கல்யத்தை அம்பாளுக்கு சாத்தி பிறகு தாலி பெருக்கிபோடும்போது வேறு ஒரு மாங்கல்யம் போட்டுக்கொள்ளாலாம்.

                       

           தத்துக்கொடுத்தல்

    பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் தாய் ஸ்தானமாகிய 4-ம் இடமும்,சந்திரனும் பாதிக்கப்பட்டு இருந்தால் தாய்க்கு ஆகாது.

     இதேபோல் தந்தை ஸ்தானமாகிய 9-ம் இடமும் ,சூரியனும் பாதிக்கப்பட்டிருந்தால் தந்தைக்கு ஆகாது.மேலும் சூரியனும் அவரது மைந்தன் சனிபகவானும் சேர்ந்து இருந்தாலும் அல்லது சம சப்தமாக பார்த்துக்கொண்டாலும் தந்தை-மகன் உறவுநிலை சிறப்பாக அமையாது.

எனவே மேற்கண்ட  அமைப்பை பெற்றுள்ள குழந்தையை சாமிக்கு தத்து கொடுப்பதன் மூலம் அவை சாமி பிள்ளை ஆகிவிடுதல் அத்தோஷம் பெற்றோர்களை தாக்காது.

திருமண யோகம் அற்ற சாதகங்களாக இருப்பின்

      ஒரு சாதகருக்கு மண வாழ்வினை பற்றி அறிய உதவும் ஸ்தானங்கள் லக்கனம்,குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகும்.

  மேற்கண்ட ஸ்தானங்களில் பாவகிரகங்கள் அல்லது மறைவிட அதிபதிகளின் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும்,

  இவை மட்டுமல்லாமல் இந்த நான்கு ஸ்தான அதிபதிகள்  மேற்கண்ட வகையில் பாவிகள் தொடர்பு அல்லது பலம் இழந்து நிற்பது அல்லது மறைவிட ஸ்தானமான ஆறு,எட்டாம் இடங்களில் அமர்ந்தாலோ கால தாமத திருமணத்தினை தரும்.

        சிலரது சாதகங்களில் ஏழாமிடத்தில் சுக்கிரன் இருந்து காரகபாவ நாஸ்தி ஏற்படினும்

     லக்கன ராசியுடனும் மற்றும் களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் பாவிகளுக்கு இடையே அகப்பட்டு குடும்பாதியும் கெட்டு இருப்பின் சாதகருக்கு திருமணம் கால தாமதம் ஆகும்.இவர்கள் தஞ்சாவூர் அருகில் உள்ள கண்டியூரிலோ அல்லது பிரம்மா கோவிலுக்கு சென்று பிரம்ம தோஷம் தீர்த்துக்கொள்ளவும்.

கட்டாயம் தேவையானவை

       எந்த தோஷம் நீக்கும் போதும் முழுமனதோடு இறைவனை நினைத்து நம்பிக்கையுடன் செய்தால் நாம் அவற்றிலிருந்து விடுபடலாம்.

எந்த ஒரு செயலும் பூர்வ புண்ணிய விதிப்படிதான் நடக்கும் என்றாலும் பரிகாரங்களினால் அவற்றிலிருந்து ஒரளவு விடுபடலாம்.

இன்னும் பாதிக்கப்பட்ட கிரகங்களுக்கு மந்திர ஜெபங்கள் செய்வதன் மூலமும் விடுபடலாம்.

                      

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் ; 97 151 89 647
Cell; 740 257 08 99

Whatsup no
97 151 89 647

(Online Astro consult conduct my Cell and Whatsup.
தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

My blogspot

AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai.blogspot. com

My email
masterastroravi@gmail .com
.........

............

Wednesday 28 November 2018

கோள்களும் அவற்றின் தன்மைகளும்

"கோள்களும் அவற்றின் தன்மைகளும்"


                      

                         செவ்வாய்பட்டி ஶ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

                                       கிரகங்கள் படுத்தும் பாடு

          கோள் (planet ) என்ற சொல்லுக்கு வடமொழியில் க்ரஹம் என்று பெயர்.க்ரஹனம் என்றால் பிடித்தல் என்று பொருளாகும்.உதாரணமாக சூரிய க்ரஹனம் என்றால் சூரியன் பிடிபடுதல் என்று பொருள் படும்.இவ்வாறே பாணிக்ரஹனம் என்று திருமணத்திற்குப் பெயர்.பாணிக்ரஹனம் என்பதற்கு கையைப் பிடித்தல் என்று பெயர் ஆகும்.

  ஒவ்வொருவரின் முன்வினைக்கேற்ப நற்பலன்கள் அல்லது தீயபலன்கள் துய்க்க செய்வதற்காக இவைகள் அவர்களை பிடிக்கின்றன எனும் பொருள்படும்படி க்ரஹனம் என்று பெயரிட்டனர்.இதனைதான் சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை என்ற பதத்தினை இளங்கோவடிகள் பயன்படுத்தினார்.அதாவது

 "ஊழ்வினை வந்து உறுத்துவந்தூட்டும்" ".என்கிறார். அதாவது முற் பிறப்பில் செய்த  நன்மை,தீமைகளுக்கு ஏற்ப இப்பிறப்பிில் பிறப்பாக பிறப்பெடுக்கிறோம்.

  ஒரு சிலர் " எவ்வளவு அநியாயம் ,அக்கிரமம் செய்கிறான்  ஆனால் அவன் நல்லாதானே  இருக்கிறான் .இந்த லோகம் கெட்டு போய்டுச்சு ,கெட்டவர்களுக்குதான் காலமாய் போச்சு " என புலம்ப கூடும் இது அவனது ஒரு பகுதியை மட்டுமே பார்த்து முழு முடிவாக எடுக்க கூடாது.அவன் பல கெடுதல் விளைவித்தும் நன்றாக இருப்பதற்கு முற்பிறப்பில் செய்த நல்வினையின் தெடர்ச்சியே ஆகும்.இப்பிறப்பின் பாவ பலன் அவனை அடுத்த பிறவிக்கு இட்டு சென்று சமநிலை செய்துவிடும்.


இதுபோன்ற வாழ்வின் கிரக தத்துவங்களை அறியாமல் முடியாமல் முடிவு செய்வது "குருடன் தும்பிக்கையை மட்டும் பிடித்து பார்த்துவிட்டு யாணை உருண்டையான குச்சி போன்றது " என முடிவு செய்வது போல் ஆகும்.


 வாழ்க்கை சுழற்சியி்யில் வாழ்வின்  ஒரு பகுதியினை கொண்டு முழு வாழ்வினை தீர்மாணிக்க இயலாது.


                      


                              இந்திய சோதிடவியலில் முதலில் ஏழுகோள்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த ஏழு கோள்களுடன் பிற்காலத்தில் நிழற்கிரகங்களான ராகு,கேதுவினையும் சேர்த்து ஒன்பது கோள்களாக கொண்டு சோதிட பலன் கூறத் தலைப்பட்டனர்.இதனையே வடமொழியில் "நவகிரஹம்" என்று போற்றுகின்றனர்.

                             இராமாயணத்தில் இராமன் பிறந்ததை கூறுமிடத்தில் வால்மீகி முனிவர் இராமன் பிறந்த நேரத்தில் ஐந்து கோள்கள் உச்சமாகவும்,குருபகவான் சந்திரன் உடன் சேர்ந்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.அதனை கருத்திலர கொண்டு ,சைத்ர மாதம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில் பிறந்து உள்ளார் என்பதன் வாயிலாக பார்க்கும்போது சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் என முடிவில் எடுத்துக்கொண்டு ஒரு கிரகம் உச்சத்தினை எளிதாக கண்டறிய முடிந்தது.


                         சூரியன் உடனும் அல்லது முன்பின் ஒரு ராசிக்குள் புதன் பகவானும் ,சுக்கிரன் பகவான் ஆனவர் சூரியன் உடனும் அல்லது முன்,பின் இரண்டு ராசிகள் தள்ளி சஞ்சாரம் செய்வார் என்ற கிரக விதியின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும்பொழுது புதன் பகவான் கன்னியில்தான் உச்சம் என்ற வகையில் கிரக விதிப்படி புதன்பகவான் உச்சம் அடைந்திருக்க வாய்ப்பு இல்லை.ஆனால் சுக்கிரன் உச்சம் அடைந்திருக்க வாய்ப்பு உண்டு.


  இராமன் பிறந்தது புணர்பூசம் நட்சத்திரம் என்பதால் இராமன் உடைய ராசியானது மிதுனம் அல்லது கடகமாகத்தான் இருக்க வாய்ப்பு உண்டு.இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது சந்திரன் பகவான் ரிஷபத்தில்தான் உச்சம் அடைகிறது.ஆதலால் சந்திரன் பகவானும் உச்சமடைந்திருக்க வாய்ப்பு இல்லை.


  இராமாயண காலத்தில் நிழற்கிரகங்களை தவிர்த்து ஏனைய ஏழு கோள்கள் இருந்ததாக கணக்கில் எடுத்துக்கொள்ளன்படுகிறது.ஆதலால் புதன் மற்றும் சந்திரன் பகவானை தவிர்த்து ஏனைய ஐந்து கோள்களான சூரியன்,செவ்வாய்,குரு,சுக்கிரன் மற்றும் சனி பகவான் உச்சமடைந்து இருக்கமுடியும் என யூகிக்க இயல்கிறது.


                           

                இராமயண காலத்தில் மேற்கண்ட ஏழு கோள்கள் மட்டுமே வழக்கத்தில் இருந்ததாக கருதப்படுகிறது.ஆனால் அதேநேரத்தில் சுந்தர காண்டத்தில் பலவிடங்களில் " இராகுவின் வாயினின்று வெளிப்பட்ட சந்திரன்போல் " என்ற உவமை காணப்படுவதால் நிழல் கிரகங்களான ராகு,கேதுவும் இருந்திருக்க வேண்டும்.



                                 கோள்களின் அமைப்பு


                           வளிமண்டலத்தில் சூரியன் மையமாகவும்,சூரியனை சுற்றி பிற கோள்களும் சுழன்று வருகின்றன.புதன் பகவான் முதல் சுற்று வட்ட பாதையிலும்,சுக்கிரன் இரண்டாவது சுற்று பாதையிலும்,நாம் வசிக்கும் பூமியானது மூன்றாவது வட்ட பாதையிலும் சுழன்று வருகின்றன.சந்திரன் பகவான் பூமியினை சுற்றும் துணைக்கோள் ஆகும்.

                        செவ்வாய் நான்காவது சுற்று பாதையிலும், குரு ஐந்தாவது சுற்று வட்ட பாதையிலும், சனி ஆறாவது சுற்று வட்ட பாதையிலும் சூரியனை சுற்றி வருகின்றன.

                         சூரியனுக்கும்,பூமிக்கும் இடையில் புதன் மற்றும் சுக்கிரன் சுற்று வட்ட பாதை அமைந்துள்ளதால் இவற்றை உள்வட்ட கோள்கள் என்றும்,செவ்வாய,குரு, சனி ஆகியவை சூரியன் வட்ட பாதைக்கு பின் சுற்றி வருவதால்  இவற்றை "வெளிவட்ட கோள்கள் என்று கூறப்படுகிறது.

                    நிழற்கிரகங்களான இராகு,கேதுக்களுக்கு உருவம் கிடையாது.சோதிடவியலில் பூமியை மையமாக கொண்டு பூமியில் வசிக்கும் உயிரினங்களுக்கு ஏற்படும் சுப-அசுப பலன்களை ஆராய்து கூறுவதால் ஒன்பது கோள்களும் பணிரெண்டு இராசிகளில் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

                         


                             சூரியனின் தன்மைகள்;-


                          ஒன்பது கோள்களுள் முதன்மையானவர் சூரியன் ஆவார். அனைத்து கோள்களும் சூரியனிடமிருந்து ஒளியை பெற்று பிரதிபலிக்கின்றன.

                        சூரியன் ஆத்மாகாரகன்,ஆண்கிரகம்,நெருப்பு கோள்,அரசாங்க காரகர்,தந்தை ,தன்னம்பிக்கை,புகழ் மற்றும் கொளரவத்திற்கு காரகர் ஆவார்.


                       சூரியன் பூமியிலிருந்து சுமார் 9,30,00,000 மைல்கள் தூரத்தில் உள்ளது.இதன் குறுக்களவு சுமார் 8,70,000 மைல்கள் ஆகும். இதன் கன அளவு பூமியைப்போல 13,00,000 மடங்குகளாகும்.


                     சூரியன் ஒரு ராசியினை கடக்க ஒரு மாதம் கால அளவாகிறது.பன்னிரெண்டு ராசிகளையும் 365 நாள் ,15 நாழிகை,32 வினாடிகளில் சுற்றி வருகிறது.



1) காரகம் ; பிதா



2)ஷேத்திரம் ;-ஆடுதுறை



3) தேவதை; சிவன்



4)ஆட்சி: சிம்மம்



5)தசா ஆண்டுகள் ; ஆறு ஆண்டுகள்



6) பிஷ்பம் ;-செந்தாமரை



7)தானியம்;-கோதுமை



8)இரத்தினம்;-மாணிக்கம்



9) உலோகம்: தாமிரம்



10)நிறம் :-சிவப்பு



11)வஸ்திரம்; -சிவப்பு



12)குணம்:-தாமஸம்



13)சுபாவம்;-குரூரர்



14)சுவை:-காரம்



15சமித்து;-எருக்கு



16)வாகனம்;-தேர்,மயில்



17)வடிவம் ;-சமன்



18) திக்கு!-நடு



19)அங்கம்;- மார்பு



20)தாது;-எலும்பு



21)பிணி;-பித்தம்



22)பஞ்சபூதம்;-நெருப்பு



23)பாலினம்;- ஆண்



24)ஆசனம்;-வட்டம்



25)இராசியில் சஞ்சரிக்கும் 

காலம் ;- ஒரு மாதம்.


26)உபகிரகம் ;-காலன்



27)தேசம் ;-கலிங்கம்



28) பிற பெயர்கள்;-ரவி,ஆதித்தன்,பரிதி,பானு,தினகரன்,கதிரவன்,மார்த்தான்டன்.



29)பார்வை;-ஏழாம் பார்வை



30) நட்சத்திரங்கள் ; - கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்.



தொடரும்....



நன்றி



(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)


  வாட்ஷ்அப்     97 151 89 647

      செல்  740 257 08 99    97 151 89 647




                        



     அன்புடன்

 சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc, MA ,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனஐ மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

MY EMAIL
masterastroravi@gmail.com

MY BLOG.SEARCH IT
Astroravichanransevvai.blogspot.com
astrosmartnotes.blogspot.com
...........................................................................................................................................................

செவ்வாய் -சனி சேர்க்கை தரும் பலன்கள்,

செவ்வாய்-சனி  சேர்க்கை தரும் பலன்கள்,  


             

செவ்வாய்பட்டி பத்ராளியம்மன் துணை !


கிரகங்கள் படு்த்தும் பாடு


          ஒருவரது சாதகத்தில் செவ்வாய் -சனி இருவரும் சேர்ந்து இருந்தோ அல்லது வெவ்வேறு ஸ்தானங்களில் இருந்தோ இவர்களது பார்வை ஒரு குறிப்பிட்ட ஸ்தானங்ளி்ல் விழுந்தால் அந்த பாவத்தின் பலன்களை நாசமடைய செய்கின்றன.இது அனுபவ பூர்வமான உண்மையாகும்.


             ஆனால் சனி பத்திலும் ,செவ்வாய் இரண்டிலும் அமையும் போது இவர்கள் இருவரது பார்வை ஒரு குறிப்பிட்ட பாவத்தில் விழாது.எனவே மேற்கண்ட அமைப்பு மட்டும் கெடுபலனை தராது.


        அதேநேரத்தில் செவ்வாய் பத்திலும்,

சனி இரண்டிலும் அல்லது  செவ்வாய் -சனி இருவரும் பத்திலும்  அமையும்போது இவை நான்காம் இடத்தை பார்வை  செய்வதால் நான்காம் இடத்திற்கு உரிய ஸ்தான பலத்தினை பாதிக்கிறது.

      இதே போல இவ்விருவரும் இரண்டில் அமர்ந்திருந்தால் இவர்கள் இருவரது பார்வையும் எட்டாம் இடத்தினை பார்வை செய்வாதால் அந் சாதகர் திடீர் மரணம் ,விபத்து,

மனைவியின் பிரிவு போன்ற பலன்களை சந்திக்க நேரிடும்.

  மேலே குறிப்பிட்ட இக்கருத்தினை ஒரு சில உதாரண சாதகங்ளோடு விளக்குவோம்.

                   



  ஜாதகம் -1


                            சனி பத்திலும் ,செவ்வாய் இரண்டி்லும் அமர்ந்து ராஜயோகம் தந்த சாதகம் ஒன்றினை காண்போம்.

                               இந்த சாதகம் மாநில அரசாங்கத்தின் உயர்ந்த பதவியில் இருந்த அதிகாரி ஒருவரின் 

ஜாதகமாகும்.இதி்ல் யோகாரகனான சனி பத்தில் அமர்ந்து குருவின் பார்வையை பெற்றார்.ஒன்பது ,
பணிரெண்டுக்குரிய புதன் உச்சம் மற்றும் ஆட்சி .லபாதிபதி சூரியன் , இரண்டு,ஏழுக்குரிய செவ்வாய்  ஆகியோர் ஆட்சி  ,
ஒன்பது ,பத்திற்குரிய புதன்,சந்திரன் சேர்க்கை சனியின் பார்வையை பெற்று உள்ளனர்.இவ்வித அமைப்பே இவரை உயர்ந்த பதவியில் அமர்த்தியது.


                                  ஜாதகம்-2



                     


                            அடுத்து இரண்டில் சனியும்,பத்தாம் இடத்தில் செவ்வாயும் அமர்ந்து பாதகம் செய்த ஒரு சாதகத்தினை இங்கு காண்போம்.


                              இந்த ஜாதகத்தி்ல் ஐந்திற்கு உரிய செவ்வாய் தசம கேந்திரம் , லக்கனாதிபதி குரு  நான்காம் இடத்தில் ஆட்சி ,தன ஸ்தானத்திற்கு அதிபதி சனி  ஆட்சி ,பத்தாம் இடத்திற்கு அதிபதி  புதன் ஒன்பதாம் இடத்தில் இருகிறார்.


                               சுப கிரகங்களான புதன் ,குரு ,சந்திரன் ஆகியோர் நல்ல ஸ்தானங்ளி்ல் உள்ளார்.ஆயினும் இரண்டில் அமர்ந்த சனியும்,பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ள செவ்வாயும் நான்காம் இடத்தினை பார்வை நோக்குகிறார்கள்.


    நான்காம் இடம்  செல்வம்,வீடு,மனை,

தோட்டம்,துரவு,தயார்,
கல்வி,வாகனங்கள்,மாடு,கன்றுகள் ஆகியவற்றினை குறிக்கும் இடம் என்பதால் சாதகரது  சாதகத்தில் சனி ,செவ்வாய் ஆகிய இரண்டும் நான்காம் இடத்தினை பார்வை செய்வதால் இந்த ஜாதகர் தனது வீடு ,வாசல்,தோட்டம்,துரவு ஆகியவற்றினை இழந்து சுமாராக அரை கோடிக்கு மேல் நஷ்டப்பட நேர்ந்தது.

                                              ஜாதகம்-3



                      

                        அடுத்தபடியாக சனி ,செவ்வாய்  இரண்டில் அமர்ந்து கெடுபலன்களை தந்த ஒரு சாதகத்தினை காண்போம் .

                     இந்த ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் சனி ,செவ்வாய் அமர்ந்து எட்டாம் இடத்தினை பார்வை செய்வதால் ஜாதகருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின் இவரது மனைவி இவரை விட்டு வேறு ஒருவருடன் ஓடிப்போய்விட்டாள்.

இதற்கு காரணம் செவ்வாய் ,சனி ஆகியோரின் எட்டாம் இட பார்வையே ஆகும்.

 நன்றி !


(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)


  வாட்ஷ் அப் 



    97 151 89 647



  செல்



   740 257 08 99

    97 151 89 647


                  



அன்புடன் 



சோதிடர்ரவிச்சந்திரன்

    M.Sc.MA.BEd 
(சோதிட ஆராய்ச்சியாளர்& ஆசிரியர்)
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.


My email

  masterastroravi@gmail .com


My blogspot 

  AstroRavichandran .blogspot .com


  AstroRavichandransevvai .blogspot .com



 astrosmartnotes.blogspot .com



....................