செவ்வாய் பகவான் தரும் பலன்கள்
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் வீரதீர பராக்கிரம சாலியாக திகழ வேண்டுமாயின் அவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வலுப்பெற்று திகழ வேண்டும். இதனாலேயே செவ்வாய் பகவான் துணிச்சல் தரும் கிரகம் என அழைக்கப்படுகிறார்.
ஒருவர் தைரியசாலியாக, வீரம் பெற்றவனாக திகழ்வதற்கும் , அரச சபையில் பேசும் ஆற்றல் மிக்கவராகவும் மற்றும் போரில் வெற்றி பெறும் நபராக திகழவும் அவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவானே உதவிபுரிகிறது.
நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான் படைகளை தாங்கிச் செல்லும் சேனாதிபதியாக அழைக்கப்படுகிறார். சரித்திரத்தில் அழியாப் புகழ்பெற்ற மன்னர்களாகவும் சர்வாதிகாரியாகவும் மாவீரர்களும் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.
செவ்வாய் பகவான் பரத்வாஜ முனிவரின் மகனாக பிறந்து பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் ஆவார்.
செவ்வாய் பகவானுக்கு மாலினி,சுசிலின் என்ற இரண்டு மனைவிகள் உண்டு.
செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் வீதம் 12 ராசிகளையும் 18 மாதங்கள் சுற்றி வருவார்.
செவ்வாய் மிகவும் வெப்பம் உடைய கிரகமாகும். இது சூரியனிலிருந்து 22,77,21,640 கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளது.
இதன் வேறு பெயர்கள் அங்காரகன், சேய், குஜன் கனல், பூமகன், வக்கிரன், துரிதி, அங்கி, ஆரல், நிலமகன், அழல் என்பனவாகும்.
இது ஒரு ஆண் கிரகமாகும். இது சிவந்த நிறம், சத்திரிய சாதி, தெலுங்கு மொழி, மேல் நோக்கு பார்வை, இராட்சத குணம், பித்த நாடி, சூடான உணவு தலை அங்கம், அன்னம் வாகனம், பவளம் ரத்தினம், செம்பு உலோகம், துவரை தானியம், தென்திசை திக்கு, உவர்ப்புச் சுவை, வாயு பூதம், வெண்காந்தள் மலர், கடவுள் விஷ்ணு ஆகும்.
செவ்வாய் திசை 7 வருடங்கள் ஆகும்.
இதன் நட்பு கிரகங்க- சூரியன், சந்திரன், குரு
பகை- புதன், ராகு, கேது
சமம்- சுக்கிரன்,சனி ஆகும்.
செவ்வாய் கிரகத்தை கிரகமாக பழங்காலத்தில் "யுத்த கிரகமாக " அழைக்கப்பட்டது. பலமான செவ்வாய் பெற்றவர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள்ஆவார்.
செவ்வாய் பகவான் காலபுருஷ தத்துவத்தின்படி முதல் வீடான மேசத்திற்கும், எட்டாமிடமான விருச்சிகத்திற்கும் அதிபதி ஆவார். மகர வீடு செவ்வாய் பகவான் உச்சம்வீடாகவும், உச்சம் பெற்ற வீட்டிற்க்கு ஏழாம் வீடான கடகத்தில் செவ்வாய் நீசம் பெறுகிறார்.
மிருகசீரிடம் ,சித்திரை அவிட்டம் செவ்வாய் பகவான் நட்சத்திரமாகும்.
செவ்வாய் பகவான் பலம் பெற்ற அமைப்பைப் பெற்றவர்களது சரீரம் திடமாக காணப்படும். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை பெற்றிருப்பார்கள்.
இவர்கள் சிறு குழந்தையாக இருக்கும்போது மற்றவர்களை பிடித்து தள்ளுவது, அடிப்பது இதுபோன்ற ஒரு துர்செயலில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது சாதகத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்றிருப்பார் .
எனவே இதுபோன்ற பிள்ளைகளை ஆசிரியர் கண்டறிந்து விளையாட்டு துறைகளில் ஈடுபட வைக்க அவர்களது வீரத்திற்கு நல்ல வடிகாலாக அமைவதோடு அவர்கள் அது சார்ந்த துறையில் புகழ் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
அதுமட்டுமல்லாமல் சாரணர் படை (Scout),NSS மற்றும் NCC போன்ற அமைப்புகளில் ஈடுபட செய்து சமூகத்தை காக்கும் செயல்களில் ஆர்வத்தை உண்டாக்கலாம்.
செவ்வாய் பகவான் "இரத்த காரகன் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரது ரத்தம் முஷ்டிக்கு செவ்வாய் பகவானே காரகன் ஆவார்.
ஒருவரது ரத்தத்திற்கும் அதிலுள்ள ரத்த வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்கள் போன்றவற்றிற்கும் மற்றும் எலும்பு மஞ்சைகளுக்கும் செவ்வாய் பகவானே காரகன் ஆவார்.
ஒருவர் ஜாதகத்தில் குறிப்பிடப்படும் செவ்வாய் தோஷத்திற்கும், ரத்த வகைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
மேலும் செவ்வாய் பகவான் காம காரகராகவும் செயல்படுகிறார். ஒருவரது உடலின் இரத்த வலிமைக்கும் அவரது மனதில் எழும் காம எண்ணம் மற்றும் செயல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
செவ்வாய் பகவான் பலமான அமைப்பு பெற்றவர்கள் தாம்பத்திய வாழ்வில் தனது வாழ்க்கைத் துணையை திருப்தியடைய செய்வார்கள்.
அதே நேரத்தில் செவ்வாய் பகவான் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படாமல் இயற்கை பாவ கிரகமாகிய சனி மற்றும் இராகு நட்சத்திர சாரமோ அல்லது சேர்க்கை மற்றும் பார்வை பெற்றிருந்தாலும், மேலும் செவ்வாய் பகவான் களத்திரகாரகன் சுக்கிரனுடன் சேர்ந்திருந்தாலும் மனதில் எழும் காம எண்ண மிகுதியால் தடம் மாறவும் வாய்ப்பு உண்டு.
செவ்வாய் பகவானை "மங்களகாரகன் "எனவும் அழைக்கப்படுகிறது. ஒருவரது இல்லத்தில் நிகழும் சுபமங்கள விஷயங்களுக்கு செவ்வாய் பகவான் முக்கிய காரகன் ஆவார்.
செவ்வாய் பகவான் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருக்கும்பொழுது அவர் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருப்பார்.
ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று தொழில் ஸ்தானாதிபதியான பத்தாம் இட அதிபதியோடு அல்லது பத்தாம் இடத்துடன் தொடர்பு பெற அவர் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு மிக்க புகழுடைய சாதனை படைக்கும் மருத்துவராக திகழ்வார்.
பொதுவாக செவ்வாய் பகவான் இரத்தத்திற்கும், வீரத்திற்கும் காரகர் என்பதால் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று சுபர் சாரம் பெற்று நிற்கும் பொழுது ராணுவம், காவல் துறை போன்றவற்றில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு நாட்டைக் காக்கும் பொருட்டும் எதிரிகளிடமிருந்து இருந்து மக்களைக் காக்கும் நிர்பந்தத்தில் துப்பாக்கி ஏந்தி துஷ்டர்களை வதம் செய்பவராக இருப்பார்.
அதே நேரத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று பவர் நட்சத்திர சாரமும் மற்றும் பாவர் சேர்க்கை மற்றும் பார்வை பெறும்பொழுது துப்பாக்கி ஏந்தி பொதுமக்களை தொந்தரவு செய்யும் ரவுடிகளாக கெட்ட பெயர் எடுப்பார்கள்.
செவ்வாய் பகவான்
"பூமி காரகன்" எனவும் அழைக்கப்படுகிறது. அதனால் பலமான செவ்வாய்பகவானை பெற்றவர்கள் பூமி வாங்கி சேர்க்கும் யோகம் உடையவர்களாகவும், பூமியை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஆகவும் செயல்பட வைப்பார். இதற்கு நான்காமிடம் மற்றும் நான்காம் வீட்டு அதிபதியும் பலம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு பலம் பெற்ற நிலையில் பூமி யோகம் பெற்றார்களாக விளங்குவார்கள்.
இது மட்டுமல்லாமல் பலமான செவ்வாய் பகவானை பெற்றவர்கள் சிவில் இன்ஜினியர் ஆக பலருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் யோகம் உடையவராக திகழ்வார்கள்.
செவ்வாய் பகவான் சகோதர காரகன் என்றும் அழைக்கப்படுகிறது எனவே ஒருவர் சகோதரர்களால் அன்பும் ஆதரவும் பெற செவ்வாய் பகவான் முக்கியமானவராவார்.
பலமிழந்து செவ்வாய் பகவானை பெற்றவர்கள் சகோதரர்களால் வெறுப்பும், அவர்கள் மூலம் பகையும்பெறுவார்கள். வேலைக்காரர்களால் அவமானப்படுத்துதல், தனது சொத்துக்களான பூமி முதலான சொத்துக்களை விற்றுவிட்டு
மது ,சூது போன்ற கீழ்தரமான செயல்பாடுகளில் ஈடுபட்டு கெட்ட பெயர் எடுத்தால் போன்றவை நிகழக் காரணமாக அமைகிறது.
செவ்வாய் பகவான் பலமிழந்த அமையப் பெற்றவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபடலாம் இதேபோல செவ்வாய் பகவானை அதிதேவதையாக முருகப் பெருமானை வழிபடலாம் அதிலும் குறிப்பாக திருச்செந்தூர் சென்று அங்கு உள்ள முருகனை தரிசிக்க செவ்வாய் செவ்வாய் பகவான் அருள் ஆசி கிடைக்கும்.
செவ்வாயின் பலம் பெற வள்ளலார் அருளிய தெய்வமணிமாலை குமரகுருபரர் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் அதிலும் குறிப்பாக கந்தரலங்காரம் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் மற்றும் கவி தேவராயர் எழுதிய கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை படிக்க செவ்வாய்பகவானது அருள் ஆசி கிடைக்கும் பலமிழந்து செவ்வாய் பகவான் பெற்றவர்கள் இதனை நாள்தோறும் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.
செவ்வாய் பகவானின் அருளைப்பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து துவரை சார்ந்த பலகாரம், பட்சணம், துவர்ப்பு பச்சடி துவையல் ஆகியவற்றுடன் வெண்ணை கலந்த சாதம் பழம், பாக்கு மற்றும் வெற்றிலை முதலியவற்றை ஒரு தட்டில் வைத்து வானத்தை நோக்கி செவ்வாய் பகவானை மனதில் நினைத்து நைவேத்தியம், சூடன் சாம்பிராணி போன்றவற்றை ஏற்றி வழிபடலாம்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர்& ஜோதிட ஆராய்சியாளர்),
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் , கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email ; masterastroravi@gmail.com
My blog
www.AstroRavichandran.blogspot.com
WWW.AstroRavichandransevvai.blogspot.com