Monday 28 October 2019

செவ்வாய் பகவான் தரும் பலன்கள்


               செவ்வாய் பகவான் தரும் பலன்கள்


                 செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                          ஒருவர் வீரதீர பராக்கிரம சாலியாக திகழ  வேண்டுமாயின் அவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வலுப்பெற்று திகழ வேண்டும். இதனாலேயே செவ்வாய் பகவான் துணிச்சல் தரும் கிரகம் என அழைக்கப்படுகிறார்.

                       ஒருவர் தைரியசாலியாக, வீரம் பெற்றவனாக  திகழ்வதற்கும் , அரச சபையில் பேசும் ஆற்றல் மிக்கவராகவும் மற்றும் போரில் வெற்றி பெறும் நபராக திகழவும் அவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவானே உதவிபுரிகிறது.

                      நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான் படைகளை தாங்கிச் செல்லும் சேனாதிபதியாக அழைக்கப்படுகிறார்.  சரித்திரத்தில் அழியாப் புகழ்பெற்ற மன்னர்களாகவும் சர்வாதிகாரியாகவும் மாவீரர்களும் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.

                           செவ்வாய் பகவான் பரத்வாஜ முனிவரின் மகனாக பிறந்து பூமாதேவியால்  வளர்க்கப்பட்டவர் ஆவார்.
செவ்வாய் பகவானுக்கு மாலினி,சுசிலின் என்ற இரண்டு மனைவிகள் உண்டு.

                          செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் வீதம் 12 ராசிகளையும் 18 மாதங்கள் சுற்றி வருவார்.

                         செவ்வாய் மிகவும் வெப்பம் உடைய கிரகமாகும். இது சூரியனிலிருந்து 22,77,21,640 கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளது.

                      இதன் வேறு பெயர்கள் அங்காரகன், சேய், குஜன் கனல், பூமகன், வக்கிரன், துரிதி, அங்கி, ஆரல், நிலமகன், அழல் என்பனவாகும்.
      
                      இது ஒரு ஆண் கிரகமாகும். இது சிவந்த நிறம், சத்திரிய சாதி, தெலுங்கு மொழி, மேல் நோக்கு பார்வை, இராட்சத குணம், பித்த நாடி, சூடான உணவு தலை அங்கம், அன்னம் வாகனம், பவளம் ரத்தினம், செம்பு உலோகம், துவரை தானியம், தென்திசை திக்கு, உவர்ப்புச் சுவை, வாயு பூதம், வெண்காந்தள் மலர், கடவுள் விஷ்ணு ஆகும்.

                                           செவ்வாய் திசை 7 வருடங்கள் ஆகும். 
                                                                                         

          
                                      இதன் நட்பு கிரகங்க- சூரியன், சந்திரன், குரு
                                                                  பகை- புதன், ராகு, கேது
                                                                 சமம்- சுக்கிரன்,சனி ஆகும்.

                                              செவ்வாய் கிரகத்தை கிரகமாக பழங்காலத்தில் "யுத்த கிரகமாக " அழைக்கப்பட்டது. பலமான செவ்வாய்  பெற்றவர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள்ஆவார்.

                                            செவ்வாய் பகவான் காலபுருஷ தத்துவத்தின்படி முதல் வீடான மேசத்திற்கும், எட்டாமிடமான விருச்சிகத்திற்கும் அதிபதி ஆவார். மகர வீடு செவ்வாய் பகவான் உச்சம்வீடாகவும், உச்சம் பெற்ற வீட்டிற்க்கு ஏழாம் வீடான கடகத்தில் செவ்வாய் நீசம் பெறுகிறார்.

                                       மிருகசீரிடம் ,சித்திரை அவிட்டம் செவ்வாய் பகவான் நட்சத்திரமாகும்.

                                            செவ்வாய் பகவான் பலம் பெற்ற அமைப்பைப் பெற்றவர்களது சரீரம் திடமாக காணப்படும். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை பெற்றிருப்பார்கள்.

                                        இவர்கள் சிறு குழந்தையாக இருக்கும்போது மற்றவர்களை பிடித்து தள்ளுவது, அடிப்பது இதுபோன்ற ஒரு துர்செயலில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது சாதகத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்றிருப்பார் .

                                                                         


                                           எனவே இதுபோன்ற பிள்ளைகளை ஆசிரியர் கண்டறிந்து விளையாட்டு துறைகளில் ஈடுபட வைக்க  அவர்களது வீரத்திற்கு நல்ல வடிகாலாக அமைவதோடு அவர்கள் அது சார்ந்த துறையில் புகழ் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.

                                                 அதுமட்டுமல்லாமல் சாரணர் படை (Scout),NSS மற்றும் NCC போன்ற அமைப்புகளில் ஈடுபட செய்து சமூகத்தை காக்கும் செயல்களில் ஆர்வத்தை உண்டாக்கலாம்.

                                             செவ்வாய் பகவான் "இரத்த காரகன் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரது ரத்தம் முஷ்டிக்கு செவ்வாய் பகவானே காரகன் ஆவார்.

                                             ஒருவரது ரத்தத்திற்கும் அதிலுள்ள ரத்த வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்கள் போன்றவற்றிற்கும் மற்றும் எலும்பு மஞ்சைகளுக்கும் செவ்வாய் பகவானே காரகன் ஆவார்.

                                        ஒருவர் ஜாதகத்தில் குறிப்பிடப்படும் செவ்வாய் தோஷத்திற்கும், ரத்த வகைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

                                            மேலும் செவ்வாய் பகவான் காம காரகராகவும் செயல்படுகிறார். ஒருவரது உடலின் இரத்த வலிமைக்கும் அவரது மனதில் எழும் காம எண்ணம் மற்றும் செயல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

                                          செவ்வாய் பகவான் பலமான அமைப்பு பெற்றவர்கள் தாம்பத்திய வாழ்வில் தனது வாழ்க்கைத் துணையை திருப்தியடைய செய்வார்கள்.

                                             அதே நேரத்தில் செவ்வாய் பகவான் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படாமல்  இயற்கை பாவ கிரகமாகிய  சனி மற்றும் இராகு   நட்சத்திர சாரமோ  அல்லது சேர்க்கை மற்றும் பார்வை பெற்றிருந்தாலும், மேலும் செவ்வாய் பகவான் களத்திரகாரகன் சுக்கிரனுடன் சேர்ந்திருந்தாலும் மனதில் எழும் காம எண்ண மிகுதியால் தடம் மாறவும் வாய்ப்பு உண்டு.

                                                                   


                                              செவ்வாய் பகவானை "மங்களகாரகன் "எனவும் அழைக்கப்படுகிறது. ஒருவரது இல்லத்தில் நிகழும் சுபமங்கள  விஷயங்களுக்கு செவ்வாய் பகவான் முக்கிய காரகன் ஆவார்.

                                                செவ்வாய் பகவான் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருக்கும்பொழுது அவர் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருப்பார்.

                                             ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று தொழில் ஸ்தானாதிபதியான பத்தாம் இட அதிபதியோடு அல்லது பத்தாம் இடத்துடன் தொடர்பு பெற அவர் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு மிக்க புகழுடைய சாதனை படைக்கும் மருத்துவராக திகழ்வார்.

                                 பொதுவாக செவ்வாய் பகவான் இரத்தத்திற்கும், வீரத்திற்கும் காரகர் என்பதால் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று சுபர் சாரம் பெற்று நிற்கும் பொழுது  ராணுவம், காவல் துறை போன்றவற்றில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு நாட்டைக் காக்கும் பொருட்டும் எதிரிகளிடமிருந்து இருந்து மக்களைக் காக்கும் நிர்பந்தத்தில் துப்பாக்கி ஏந்தி துஷ்டர்களை வதம் செய்பவராக இருப்பார்.

                                           அதே நேரத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று பவர் நட்சத்திர சாரமும் மற்றும் பாவர் சேர்க்கை மற்றும் பார்வை பெறும்பொழுது  துப்பாக்கி ஏந்தி பொதுமக்களை தொந்தரவு செய்யும் ரவுடிகளாக கெட்ட பெயர் எடுப்பார்கள்.

                                                                             


                                                           செவ்வாய் பகவான்
"பூமி காரகன்" எனவும் அழைக்கப்படுகிறது. அதனால் பலமான செவ்வாய்பகவானை பெற்றவர்கள் பூமி வாங்கி சேர்க்கும் யோகம் உடையவர்களாகவும், பூமியை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஆகவும் செயல்பட வைப்பார். இதற்கு நான்காமிடம் மற்றும் நான்காம் வீட்டு அதிபதியும் பலம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு பலம் பெற்ற நிலையில் பூமி யோகம் பெற்றார்களாக விளங்குவார்கள்.

                            இது மட்டுமல்லாமல் பலமான செவ்வாய் பகவானை பெற்றவர்கள் சிவில் இன்ஜினியர் ஆக பலருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் யோகம் உடையவராக திகழ்வார்கள்.

  செவ்வாய் பகவான் சகோதர காரகன் என்றும் அழைக்கப்படுகிறது எனவே ஒருவர் சகோதரர்களால் அன்பும் ஆதரவும் பெற செவ்வாய் பகவான் முக்கியமானவராவார்.

                                                   


                                 பலமிழந்து செவ்வாய் பகவானை பெற்றவர்கள் சகோதரர்களால் வெறுப்பும், அவர்கள் மூலம் பகையும்பெறுவார்கள். வேலைக்காரர்களால் அவமானப்படுத்துதல், தனது சொத்துக்களான பூமி முதலான சொத்துக்களை விற்றுவிட்டு
 மது ,சூது போன்ற கீழ்தரமான செயல்பாடுகளில்  ஈடுபட்டு கெட்ட பெயர் எடுத்தால் போன்றவை நிகழக் காரணமாக அமைகிறது.

                                 செவ்வாய் பகவான் பலமிழந்த அமையப் பெற்றவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபடலாம் இதேபோல செவ்வாய் பகவானை அதிதேவதையாக முருகப் பெருமானை வழிபடலாம் அதிலும் குறிப்பாக திருச்செந்தூர் சென்று அங்கு உள்ள முருகனை தரிசிக்க செவ்வாய் செவ்வாய் பகவான் அருள் ஆசி கிடைக்கும்.

                                செவ்வாயின் பலம் பெற வள்ளலார் அருளிய தெய்வமணிமாலை குமரகுருபரர் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் அதிலும் குறிப்பாக கந்தரலங்காரம் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் மற்றும் கவி தேவராயர் எழுதிய கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை படிக்க செவ்வாய்பகவானது அருள் ஆசி கிடைக்கும் பலமிழந்து செவ்வாய் பகவான் பெற்றவர்கள் இதனை நாள்தோறும் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.

                                 செவ்வாய் பகவானின் அருளைப்பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து துவரை சார்ந்த பலகாரம், பட்சணம், துவர்ப்பு பச்சடி துவையல் ஆகியவற்றுடன் வெண்ணை கலந்த சாதம் பழம், பாக்கு  மற்றும் வெற்றிலை முதலியவற்றை ஒரு தட்டில் வைத்து வானத்தை நோக்கி செவ்வாய் பகவானை மனதில் நினைத்து நைவேத்தியம், சூடன் சாம்பிராணி போன்றவற்றை ஏற்றி வழிபடலாம்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப்
    9715189647

     செல்
   9715189647
     7402570899



  அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர்& ஜோதிட ஆராய்சியாளர்),
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் , கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email ;  masterastroravi@gmail.com

My blog
www.AstroRavichandran.blogspot.com

WWW.AstroRavichandransevvai.blogspot.com

குரு பலம் யாருக்கு?

               

குரு பலம் யாருக்கு திருமணம் தரும் ?


செவ்வாய்ப்பட்டி
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

     குரு பகவான் ராசிக்கு 
2 ,5 ,7, 9 ,11-ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் குரு பலம் வந்து விட்டது என்பது பொருளாகும். இது பொது விதி என்பது அனைவரும் அறிந்ததே.

  பலருக்கு குருபலம் நடைமுறைக்கு வந்த பின்னரும் திருமணம் நடைபெறாமல் காத்திருப்பதும், சிலருக்கு குரு பலம் இல்லாமல் திருமணம் இனிதே நடந்து முடிவதும் நாம் நடைமுறையில் பார்க்கும் பொழுது முன்னுக்குப்பின் இது முரணாக அமைவதை சோதிடர்களாகிய நாம் அனைவரும் அறிந்த உண்மை ஆகும்.

 ஏன் இந்த முரண்பாடு திருமணத்திற்கு குரு பலம் மட்டும் போதுமா? திருமணத்திற்கு குரு பலம் எந்த வகையில் பயன்படுகிறது என்பதை பார்ப்போம்.

  மேலும் திருமணத்தை பற்றி அறிந்துகொள்ள எந்தெந்த பாவங்களை ஆராய வேண்டும்.
 எந்த திசை திருமணம் தரும் என்றும் ஆராய வேண்டும்.

  பொதுவாக திருமணத்தைப் பற்றி அறிந்துகொள்ள இலக்கனம் எனப்படும் சாதகர், இரண்டாம் இடமாகிய குடும்பஸ்தானம், ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என அழைக்கப்படும் எட்டாமிடம் இத்துடன் அதன் அதிபதிகளையும், களத்திரகாரகன் என்றழைக்கப்படும் சுக்கிர பகவானையும் ஆராய்ந்து அறியப்படப்படவேண்டும்.

  எனது அனுபவத்திற்கும், ஆய்வுக்கும் மிகச்சரியாக வருகின்ற திருமணத்தைப் பற்றிய பாடல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"ஏழினுக்குடையோன் தன்னோ டோகிய கிரகம் ஏழின் வாழ்வெனும் கிரகமின்னோர் வருதிசை அபகாரத்தில்ஊழ்வினையான பெண்டிர் உதவுமாம் இரண்டிற்கோளன்சூழ்திசை அபகாரத்தில் சுப கல்யாணம் சொல்லே"


     ----ஜாதக பாரிஜாதம்

 திருமண காலத்தை நிர்ணயம் செய்வதற்கு ஏழாம் இடத்து அதிபதி, ஏழில் உள்ள கிரகம் , ஏழாம் இடத்து அதிபதியோடு கூடியவர்கள், இரண்டாமிடம், இரண்டாமிடத்து அதிபதி இவர்களுடன் கூடியவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

  மேலும் ஒரு ஜாதகருக்கு சுப கல்யாணம் தருவதில் முக்கிய பங்கு வகிப்பவர்களை பார்ப்போம்.

   ஏழாம் அதிபதியுடன் தொடர்பு பெற்ற 2, 4, 5 ,9 மற்றும் 11-ஆம் அதிபதிகள்  ஆகிய இவர்கள் திசையில் சுப திருமணம் நடக்கும்.

    மேலும் சுப ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் ஏழில் நின்று திசை நடத்தினால் சுப கல்யாணம் தருவார்கள் என்பது திண்ணம்.

   மேலும் ஏழாம் அதிபதி உடன் சேர்ந்த மாறைவிட ஸ்தானாதிபதி (3, 6, 8 12)  திசை நடந்தால் திருமணத்தில் வில்லங்கம், விவகாரம், வழக்கு, வீண் விரயம் போன்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நேரிடும்.

  மேலும் ஜாதகருக்கு குரு பெயர்ச்சி பலன் முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் ஜெனன கால ஜாதகத்தில் குரு தசை ,குரு புத்தி அல்லது குருவின் சாரம் பெற்றவர்கள் திசையோ, புத்தியோ நடைபெற வேண்டும் என்பது நடைமுறையாகும்.

 குரு பகவான் என்ன ஆதிபத்தியம் பெற்று தசை நடத்துகிறாரோ அதற்கு ஏற்ற பலனை தருவார். சசுப ஆதிபத்தியம் பெற்றிருந்தால்  சுப பலனையும் , அசுப ஆதிபத்தியம் பெற்றால் அசுப பலனையும் தவறாமல் தருவார்.

  திருமணத்தை தீர்மானிக்க குருபகவான் லக்னம் அல்லது சந்திரனுக்கு இரண்டாம்இட அதிபதியாகவோ அல்லது ஏழாம் இட அதிபதியாக வரவேண்டும்.

   குரு பகவான் இரண்டாம் இட அதிபதியாகவோ அல்லது  ஏழாமிட அதிபதியாகவோ அமைந்து ,  லக்கனம் அல்லது ராசிக்கு கோட்சாரத்தில்  இரண்டாமிடத்தை அல்லது ஏழாம் இடத்தைப் குரு பகவான் பார்க்கும் போது குடும்ப உறவுகளையும் களத்திர சுகத்தையும் தவறாமல் தருவார்.

  குரு பகவான் ஐந்தாம் அதிபதியாகவோ அல்லது ஒன்பதாம் அதிபதியாகவோ அமைந்து லக்கனம் அல்லது ராசிக்கு கோட்சாரத்தில் ஐந்தாம் இடத்தையும் , ஐந்தாமிட அதிபதியையும் , ஒன்பதாம் இடத்தையும், ஒன்பதாம் இட அதிபதியும் பார்க்கும் போது குரு பகவான் புத்திர பாக்கியத்தை கொடுப்பார். புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவார்.

  குரு பகவான் பதினொன்றாம் அதிபதியாக அமைந்து இலக்கனம் அல்லது ராசிக்கு பதினொன்றாம் இடத்தையோ அல்லது பதினொன்றாம் இட அதிபதியையோ பார்க்கும்போது சாதகரின் அபிலாசைகள், நீண்டநாள் கனவுகளையும் புத்திர பாக்கியம் தருவார் .11-ஆம் இடம் என்பது வாழ்க்கை துணைக்கு ஐந்தாம் இடம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவார்.

   முக்கியமாக புத்திரகாரகன் என்று அழைக்கப்படும் குரு பகவான் தொடர்பு பெற்ற திசை மற்றும் புத்தி  காலங்களில் மட்டுமே குரு பலம்  திருமணத்தை சாதகருக்கு தரும்.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
   9715189647

  செல்
    9715189647
      7402570899



   அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
 (ஆசிரியர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்)
  ஓம் சக்திஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

பரிவர்த்தனை யோகம்

பரிவர்த்தனை யோகம்


                                       செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                                            கிரகங்கள் தங்களது வீடுகளுக்குள்  இடம் மாறி நிற்பது பரிவர்த்தனை யோகம் ஆகும்.இதனை கிரகம் மாறி யோகம் எனலாம்.

                        உதாரணமாக      மீனம் வீட்டின் அதிபதி குரு பகவான் கடகம் வீட்டிலும், கடகம் வீட்டின் அதிபதி சந்திரன் பகவான் மீனம் வீட்டிலும் இடம் மாறி நிற்பது ஆகும்.

                     இவ்வாறு பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தனது கிரக வலுவானது அதிகரிக்கிறது.இவை ஆட்சி பலத்திற்கு நிகரான பலத்தை அடைகிறது.

                        ஒருவரது சாதகத்தில் அதிகபட்சமாக மூன்று பரிவர்த்தனை அமைப்பு மட்டுமே இடம் பெறும் வாய்ப்பு உள்ளது.

  பரிவர்த்தனை யோகம் மூன்று வகையாக வகைப்படுத்தலாம்.

1) ராஜ யோக பரிவர்த்தனை

2)அவ யோக பரிவர்த்தனை

3) விபரீத யோக பரிவர்த்தனை

மேற்கண்ட மூன்று அமைப்புகளையும் விரிவாக பார்ப்போம்.

1) ராஜ யோக பரிவர்த்தனை

    கேந்திர அதிபதிகள் (1,4,7,10) தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு

     கோண அதிபதிகள் (1,5,9) தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு,

       கேந்திர,கோண அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு,

தன-லாப அதிபதிகள்(2,11) தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு.

      ராஜ யோக பரிவர்த்தனையில் கேந்திர மற்றும் கோண அதிபதிகள் பரிவர்த்தனை பெறுவது தேசம் ஆளும் யோகத்தை தரக்கூடியது.

 "கூசாது கோணாதி கேந்திராதி குறிப்பான பரிவர்த்தனையாய் இருக்க
தேசாதிபத்தியமும் வருவதோடு திரளான தானியங்கள் கூடும் பாரு"

2)அவ யோக பரிவர்த்தனை
        கேந்திர-கோணாதிபதிகள் ,மறைவிட ஸ்தான அதிபதிகள் ( 3,6,8,12) உடன் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு கிரக வலுவினை குறைத்து அவயோக பலன்களை தரும்.

 உதாரணமாக லக்கினாதிபதியும் ,
ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகன் நோயாளியாகவும், வழக்குகளை சந்திப்பவனாகவும், வறுமை உள்ளவராகவும் மற்றும் மன அமைதி கொண்டவராகவும் இருப்பார்.

 லக்கினாதிபதியும் எட்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகம் அங்கஹீனம் உள்ளவனாகவும், அவமானங்களை அடிக்கடி சந்திப்பவராகவும், முரண்பாடுகள் நிறைந்தவனாகவும் இருப்பான் .பிறரை இம்சை படுத்துவதில் ஆர்வம் உடையவனாக இருப்பான்.

    லக்கினாதிபதியும் பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தூக்கத்தில் விருப்பம் உள்ளவனாகவும், சஞ்சாரம் செய்வதில் ஆர்வம் உள்ளவனாகவும்,
விரயங்களைச் செய்வதில் வேகம் நிறைந்தவனாகவும் திடீர் முடிவு எடுத்து தோல்வி அடைபவன் ஆகவும் இருப்பான்.

  ஐந்தாம் அதிபதியும்,
ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகன் புத்திர தோஷம் உள்ளவனாகவும், பூர்வீகத்தில் வழக்கு உடையவனாகவும் வயிறு உபாதை உள்ளவனாகவும், பெரிய மனிதர்களின் பகையை பெற்றவனாகவும் இருப்பான்.



3) விபரீத யோக பரிவர்த்தனை.

 மறைவிட ஸ்தான அதிபதிகள் (3,6,8,12) தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பானது"கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்ற வகையில்"விபரீத ராஜயோகத்தினை சாதகருக்கு தருகிறது.

 பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தரும் பலனை போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பானி சோதிடம் -300" என்ற நூலில் 98 வந்து பாடலில் பரிவர்த்தனை யோகம் பற்றி விளக்குகிறார்.

"தானென்ற கோள்களது மாறி நிற்க
தரணிதனில் பேர் விளங்கும் தனமுள்ளோன்
ஊனேன்ற உடல் நாதன் பாம்பு கூடில் உத்தமனாம் யோக்கியனாம் புனிதன் சேயன்
கோனேன்ற குமரியுட பூசை செய்து கொற்றவனே குவலயத்தில் வாழ்ந்திருப்பான்
மானேன்ற மறலி பயம் இல்லையில்லை
மைந்தனே இடமறிந்து வலுத்துவாயே"

பாடல் விளக்கம்

  நல்ல பரிவர்த்தனை யோகம் பெற்ற ஜாதகன் நற்புகழுடனும் , செல்வத்துடனும் இருப்பான் .ஒழுக்க சீலனாகவும், பெண்தெய்வ வழிபாடு உடையவனாகவும் இருப்பான் .
எமனுக்கு பயப்படாத ஆத்ம ஞானம் பெற்றிருப்பான் .
இவைகள் யாவும் கிரகங்கள் அமரும் இடத்தை உணர்ந்து பலன் உரைப்பாய்.

 பரிவர்த்தனையில் சுபகிரக பரிவர்த்தனை, பாவ கிரக பரிவர்த்தனை, ஆண் கிரக பரிவர்த்தனை, பெண் கிரகம் பரிவர்த்தனை, அலி கிரகம் பரிவர்த்தனை மற்றும்
 நீச கிரக பரிவர்த்தனை என்று பார்க்காமல் "கிரகங்கள் பெறும் ஆதிபத்தியத்திற்க்கும், அவர்கள் அமரும் இடத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்" என்பது சோதிட ஞானிகளின் கருத்தாகும்.

பரிவர்த்தனை யோகம் பெற்ற உதாரண சாதகம்

               
                     
 முன்னாள் பாரத் பிரதமர் இந்திரா காந்தி சாதகம்.

பிறந்த தேதி : 19-11-1917
பிறந்த நேரம்: 11.00 pm
கடகம் லக்கனம்,
 மகரம் ராசி
உத்திராடம் நட்சத்திரம்.

(1 -ல் சனி,2-ல் செவ்வாய்,5-ல் சூரியன், புதன்,6-ல் சுக்கிரன் மற்றும் ராகு,
7-ல் சந்திரன்,11-ல் குரு ,12-ல் கேது)

 முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சாதகத்தில் 3 பரிவர்த்தனை அமைப்புக்கள் உள்ளன.

1) லக்கனாதிபதி சந்திரபகவான் ஏழாம் இடத்திலும் ,
ஏழு மற்றும் எட்டுக்குடைய சனி பகவான் இலக்கனத்திலும் அமர்ந்துள்ளது.

2) சுக மற்றும் லாபாதிபதியான (4,11) சுக்கிரன் பகவான் ,
ஆறு மற்றும் ஒன்பதுக்குடைய (6,9) குரு பகவன் பரிவர்த்தனை அடைந்துள்ளது. இது ஒரு வகையிலான
 கேந்திர- கோண பரிவர்த்தனைஆகும்.

3 ) இரண்டாம் இட அதிபதியான சூரியபகவான்,
 பூர்வ புண்ணிய மற்றும் ஜீவன(5,10) ஸ்தான அதிபதியான செவ்வாய் பகவான் உடன் பரிவர்த்தனை அடைந்துள்ளது.

மேற்கண்ட வகையிலான மூன்று பரிவர்த்தனை யோகங்கள் ஜாதகருக்கு அரசாளும் யோகத்தை தந்தது. இவரது பதவிக்காலத்தில் பங்களாதேஷ்க்கு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றுத்தர இயன்றது. அவசர நிலை பிரகடனம் கொண்டுவர இயன்றது.

நன்றி

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647

‌.   செல்
  9715189647
    7402570899

                   

அன்புடன்
 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்.
 கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
 masterastroravi@gmail.com

My blog

WWW.AstroRavivhandran.
blogspot.com

WWW.AstroRavichandransevvai.blogspot.com.

.................

யோகத்தினை அள்ளி தர

                                


செவ்வாய் பகவான் தரும் பலன்கள்



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் வீரதீர பராக்கிரம சாலியாக திகழ  வேண்டுமாயின் அவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வலுப்பெற்று திகழ வேண்டும். இதனாலேயே செவ்வாய் பகவான் துணிச்சல் தரும் கிரகம் என அழைக்கப்படுகிறார்.


 ஒருவர் தைரியசாலியாக, வீரம் பெற்றவனாக  திகழ்வதற்கும் , அரச சபையில் பேசும் ஆற்றல் மிக்கவராகவும் மற்றும் போரில் வெற்றி பெறும் நபராக திகழவும் அவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவானே உதவிபுரிகிறது.


  நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான் படைகளை தாங்கிச் செல்லும் சேனாதிபதியாக அழைக்கப்படுகிறார்.  சரித்திரத்தில் அழியாப் புகழ்பெற்ற மன்னர்களாகவும் சர்வாதிகாரியாகவும் மாவீரர்களும் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.


  செவ்வாய் பகவான் பரத்வாஜ முனிவரின் மகனாக பிறந்து பூமாதேவியால்  வளர்க்கப்பட்டவர் ஆவார்.

செவ்வாய் பகவானுக்கு மாலினி,சுசிலின் என்ற இரண்டு மனைவிகள் உண்டு.


  செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் வீதம் 12 ராசிகளையும் 18 மாதங்கள் சுற்றி வருவார்.


   செவ்வாய் மிகவும் வெப்பம் உடைய கிரகமாகும். இது சூரியனிலிருந்து 22,77,21,640 கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளது.


 இதன் வேறு பெயர்கள் அங்காரகன், சேய், குஜன் கனல், பூமகன், வக்கிரன், துரிதி, அங்கி, ஆரல், நிலமகன், அழல் என்பனவாகும்.


      இது ஒரு ஆண் கிரகமாகும். இது சிவந்த நிறம், சத்திரிய சாதி, தெலுங்கு மொழி, மேல் நோக்கு பார்வை, இராட்சத குணம், பித்த நாடி, சூடான உணவு தலை அங்கம், அன்னம் வாகனம், பவளம் ரத்தினம், செம்பு உலோகம், துவரை தானியம், தென்திசை திக்கு, உவர்ப்புச் சுவை, வாயு பூதம், வெண்காந்தள் மலர், கடவுள் விஷ்ணு ஆகும்.


  செவ்வாய் திசை 7 வருடங்கள் ஆகும். இதன் நட்பு கிரகங்கள் சூரியன், சந்திரன், குரு 

பகை- புதன், ராகு, கேது

சமம்- சுக்கிரன்,சனி ஆகும்.


  செவ்வாய் கிரகத்தை கிரகமாக பழங்காலத்தில் "யுத்த கிரகமாக " அழைக்கப்பட்டது. பலமான செவ்வாய்  பெற்றவர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள்ஆவார்.


  செவ்வாய் பகவான் காலபுருஷ தத்துவத்தின்படி முதல் வீடான மேசத்திற்கும், எட்டாமிடமான விருச்சிகத்திற்கும் அதிபதி ஆவார். மகர வீடு செவ்வாய் பகவான் உச்சம்வீடாகவும், உச்சம் பெற்ற வீட்டிற்க்கு ஏழாம் வீடான கடகத்தில் செவ்வாய் நீசம் பெறுகிறார்.


  மிருகசீரிடம் ,சித்திரை அவிட்டம் செவ்வாய் பகவான் நட்சத்திரமாகும்.


  செவ்வாய் பகவான் பலம் பெற்ற அமைப்பைப் பெற்றவர்களது சரீரம் திடமாக காணப்படும். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை பெற்றிருப்பார்கள்.


    இவர்கள் சிறு குழந்தையாக இருக்கும்போது மற்றவர்களை பிடித்து தள்ளுவது, அடிப்பது இதுபோன்ற ஒரு துர்செயலில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது சாதகத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்றிருப்பார் .


   எனவே இதுபோன்ற பிள்ளைகளை ஆசிரியர் கண்டறிந்து விளையாட்டு துறைகளில் ஈடுபட வைக்க  அவர்களது வீரத்திற்கு நல்ல வடிகாலாக அமைவதோடு அவர்கள் அது சார்ந்த துறையில் புகழ் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.


 அதுமட்டுமல்லாமல் சாரணர் படை (Scout),NSS மற்றும் NCC போன்ற அமைப்புகளில் ஈடுபட செய்து சமூகத்தை காக்கும் செயல்களில் ஆர்வத்தை உண்டாக்கலாம்.


  செவ்வாய் பகவான் "இரத்த காரகன் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரது ரத்தம் முஷ்டிக்கு செவ்வாய் பகவானே காரகன் ஆவார். 


   ஒருவரது ரத்தத்திற்கும் அதிலுள்ள ரத்த வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்கள் போன்றவற்றிற்கும் மற்றும் எலும்பு மஞ்சைகளுக்கும் செவ்வாய் பகவானே காரகன் ஆவார்.


  ஒருவர் ஜாதகத்தில் குறிப்பிடப்படும் செவ்வாய் தோஷத்திற்கும், ரத்த வகைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.


  மேலும் செவ்வாய் பகவான் காம காரகராகவும் செயல்படுகிறார். ஒருவரது உடலின் இரத்த வலிமைக்கும் அவரது மனதில் எழும் காம எண்ணம் மற்றும் செயல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 


   செவ்வாய் பகவான் பலமான அமைப்பு பெற்றவர்கள் தாம்பத்திய வாழ்வில் தனது வாழ்க்கைத் துணையை திருப்தியடைய செய்வார்கள்.


  அதே நேரத்தில் செவ்வாய் பகவான் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படாமல்  இயற்கை பாவ கிரகமாகிய  சனி மற்றும் இராகு   நட்சத்திர சாரமோ  அல்லது சேர்க்கை மற்றும் பார்வை பெற்றிருந்தாலும், மேலும் செவ்வாய் பகவான் களத்திரகாரகன் சுக்கிரனுடன் சேர்ந்திருந்தாலும் மனதில் எழும் காம எண்ண மிகுதியால் தடம் மாறவும் வாய்ப்பு உண்டு.


  செவ்வாய் பகவானை "மங்களகாரகன் "எனவும் அழைக்கப்படுகிறது. ஒருவரது இல்லத்தில் நிகழும் சுபமங்கள  விஷயங்களுக்கு செவ்வாய் பகவான் முக்கிய காரகன் ஆவார்.


  செவ்வாய் பகவான் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருக்கும்பொழுது அவர் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருப்பார்.


  ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று தொழில் ஸ்தானாதிபதியான பத்தாம் இட அதிபதியோடு அல்லது பத்தாம் இடத்துடன் தொடர்பு பெற அவர் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு மிக்க புகழுடைய சாதனை படைக்கும் மருத்துவராக திகழ்வார்.


  பொதுவாக செவ்வாய் பகவான் இரத்தத்திற்கும், வீரத்திற்கும் காரகர் என்பதால் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று சுபர் சாரம் பெற்று நிற்கும் பொழுது  ராணுவம், காவல் துறை போன்றவற்றில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு நாட்டைக் காக்கும் பொருட்டும் எதிரிகளிடமிருந்து இருந்து மக்களைக் காக்கும் நிர்பந்தத்தில் துப்பாக்கி ஏந்தி துஷ்டர்களை வதம் செய்பவராக இருப்பார்.


  அதே நேரத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று பவர் நட்சத்திர சாரமும் மற்றும் பாவர் சேர்க்கை மற்றும் பார்வை பெறும்பொழுது  துப்பாக்கி ஏந்தி பொதுமக்களை தொந்தரவு செய்யும் ரவுடிகளாக கெட்ட பெயர் எடுப்பார்கள்.


  செவ்வாய் பகவான் 

"பூமி காரகன்" எனவும் அழைக்கப்படுகிறது. அதனால் பலமான செவ்வாய்பகவானை பெற்றவர்கள் பூமி வாங்கி சேர்க்கும் யோகம் உடையவர்களாகவும், பூமியை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஆகவும் செயல்பட வைப்பார். இதற்கு நான்காமிடம் மற்றும் நான்காம் வீட்டு அதிபதியும் பலம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு பலம் பெற்ற நிலையில் பூமி யோகம் பெற்றார்களாக விளங்குவார்கள்.


  இது மட்டுமல்லாமல் பலமான செவ்வாய் பகவானை பெற்றவர்கள் சிவில் இன்ஜினியர் ஆக பலருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் யோகம் உடையவராக திகழ்வார்கள்.


  செவ்வாய் பகவான் சகோதர காரகன் என்றும் அழைக்கப்படுகிறது எனவே ஒருவர் சகோதரர்களால் அன்பும் ஆதரவும் பெற செவ்வாய் பகவான் முக்கியமானவராவார்.


 செவ்வாய் பகவான் தரக்கூடிய நோய்களாக உஷ்ண காய்ச்சல், ரத்தக்கொதிப்பு, ரத்தப்போக்கு, சொறிசிரங்கு ,குஷ்டம், அடிபடுதல், விரோதிகளால் தாக்கப்பட்டு காயம் உண்டாதல், அங்கஹீனம் விரை வீக்கம், மற்றும் வலி , பில்லிசூனியம் போன்றவற்றால் பாதிப்பு தீவிபத்து போன்றவைகள் ஆகும்.


  பலமிழந்து செவ்வாய் பகவானை பெற்றவர்கள் சகோதரர்களால் வெறுப்பும், அவர்கள் மூலம் பகையும்பெறுவார்கள். வேலைக்காரர்களால் அவமானப்படுத்துதல், தனது சொத்துக்களான பூமி முதலான சொத்துக்களை விற்றுவிட்டு 

 மது ,சூது போன்ற கீழ்தரமான செயல்பாடுகளில்  ஈடுபட்டு கெட்ட பெயர் எடுத்தால் போன்றவை நிகழக் காரணமாக அமைகிறது.


  செவ்வாய் பகவான் பலமிழந்த அமையப் பெற்றவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபடலாம் இதேபோல செவ்வாய் பகவானை அதிதேவதையாக முருகப் பெருமானை வழிபடலாம் அதிலும் குறிப்பாக திருச்செந்தூர் சென்று அங்கு உள்ள முருகனை தரிசிக்க செவ்வாய் செவ்வாய் பகவான் அருள் ஆசி கிடைக்கும்.


 செவ்வாயின் பலம் பெற வள்ளலார் அருளிய தெய்வமணிமாலை குமரகுருபரர் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் அதிலும் குறிப்பாக கந்தரலங்காரம் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் மற்றும் கவி தேவராயர் எழுதிய கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை படிக்க செவ்வாய்பகவானது அருள் ஆசி கிடைக்கும் பலமிழந்து செவ்வாய் பகவான் பெற்றவர்கள் இதனை நாள்தோறும் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.


  செவ்வாய் பகவானின் அருளைப்பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து துவரை சார்ந்த பலகாரம், பட்சணம், துவர்ப்பு பச்சடி துவையல் ஆகியவற்றுடன் வெண்ணை கலந்த சாதம் பழம், பாக்கு  மற்றும் வெற்றிலை முதலியவற்றை ஒரு தட்டில் வைத்து வானத்தை நோக்கி செவ்வாய் பகவானை மனதில் நினைத்து நைவேத்தியம், சூடன் சாம்பிராணி போன்றவற்றை ஏற்றி வழிபடலாம்.


நன்றி!


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப்

    9715189647


     செல்

   9715189647

     7402570899


  அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,M.A,BEd

(ஆசிரியர்& ஜோதிட ஆராய்சியாளர்),

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் , கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email ;  masterastroravi@gmail.com


My blog

www.AstroRavichandran.blogspot.com


WWW.AstroRavichandransevvai.blogspot.com

திருமணம் ஏன் காலதாமதம் ஆகி கொண்டே செல்கிறது?வணங்க வேண்டிய கோவில்களும் மற்றும் பரிகாரங்களும்

                                     

திருமணம் ஏன் காலதாமதம் ஆகி கொண்டே செல்கிறது? வணங்க வேண்டிய

கோவில்களும் மற்றும் பரிகாரங்களும்.

  செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                         


     திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் நிகழ்வு மட்டுமல்ல. இரண்டு உறவுகளை இணைக்கும் வைபோகம் ஆகும். எனவேதான் "திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்" என்கிறார்கள் நமது முன்னோர்கள்.

"வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தை பண்ணிப் பார்" என்பது ஒரு சொல்லோடை. அந்த அளவிற்கு கல்யாணம் என்னும்  நிகழ்வு மனித வாழ்வின் இன்றியமையாத உயிர் செயல் ஆகும்.

   மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாருக்கு இடையே எவ்வித மனம் நோகும்படியான செயல் நடைபெறாதவாறு ஒரு திருமணத்தை நடத்தி வைப்பது என்பது மிகவும் புனிதமான செயல் ஆகும். ஏனெனில் "முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்றாகும்.

    இதற்க்காகத்தான் இருமனம் இணையும் திருமணத்தை நடத்தி வைப்பவரது செயல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கு சமமாகும். திருமண பந்தத்தில் ஈடுபட வைப்பவர்கள் "ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு திருமணத்தை முடிக்க வேண்டும்" என்கிறார்கள்.

இந்த தமிழ் வழக்குச்சொல் மருவி "ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை முடிக்க வேண்டும்" என இன்றைய நடைமுறையில் உள்ளது.

                          


ஒருவரது ஜாதக கட்டத்தில் திருமணம் பற்றி அறிவதற்கு கட்டாயம் கீழ்க்கண்ட ஸ்தானங்களையும் மற்றும் கிரகங்களையும் ஆய்ந்து அறியப்பட வேண்டும்.

* லக்கனம் என்னும் ஒன்றாம் இடம்(1)
* குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாமிடம்(2)
* களத்திர ஸ்தானம் என்னும் ஏழாமிடம்(7)
* மாங்கல்ய ஸ்தானம் என்னும் எட்டாமிடம்(8)

இவை மட்டுமல்லாமல் ஒரு திருமணத்தின் வெற்றியே புத்திர பாக்கியத்தில்தான் அமைகின்றது என்பதால் புத்திர ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இவ்வித நவகோள்களில் ஆண்களுக்கு களத்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் பகவானையும் , பெண்களுக்கு மங்களகாரகன் எனப்படும் செவ்வாய் பகவானையும் மற்றும் புத்திரகாரகன் எனப்படும் குரு பகவானையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

                        


திருமணத் தடை மற்றும் தாம்பத்ய வாழ்வில் சிக்கல் உருவாக காரணங்கள்:

ஒரு சிலருக்கு திருமணம் காலதாமதம் ஆகிக்கொண்டே செல்வதற்கும் மற்றும் திருமணம் புரிந்தவர்களுக்கு இடையே அன்யோன்யமான நிலை உருவாகாததற்கும் கிரகங்கள் படுத்தும் பாடே காரணமாகும். இதற்கான காரணங்கள்: -

1. ஒருவரது ஜாதகத்தில் மேலே குறிப்பிட்ட திருமண ஸ்தானங்களான 1,2,7,8 ஆகிய இடங்களில் அரவுகளான ராகு, கேது மற்றும் பாவ கிரகங்களான செவ்வாய், சனி போன்ற கிரகங்கள் இடம்பெறுவதே முக்கிய காரணம் ஆகும்.

2. திருமண ஸ்தானமான 1,2,7,8-ன் அதிபதிகள் பகை, நீசம், அஸ்தமனம், பாவர்களின் நட்சத்திர சாரம் மற்றும் பார்வை, மறைவிட ஸ்தானங்களான 6,8,12-மிடம் சென்று சேருதல் முதலியவை ஆகும்.

3. திருமண ஸ்தானமான 1,2,7,8-ஆம் இடத்தினை பாவக்கிரகங்கள் பார்வையிடுதல் , மறைவிட ஸ்தான அதிபதிகள் மேற்கண்ட ஸ்தானங்களில் இடம்பெறுதல் முதலியவை ஆகும்.

4. களத்திரக்காரகன்  சுக்கிரன் உடன் சூரியன், சனி அல்லது ராகு, கேது கூடியிருந்தாலும்  அல்லது பாவர்களின் பார்வை மற்றும் பாவர்களின் நட்சத்திர சாரம் பெற்றிருந்தாலும்   திருமண தடை உருவாகிறது.

 5) களத்திர காரகன் சுக்கிரன் பகவான் பகை, நீசம், அஸ்தங்கம் , வக்கிரம் ,மறைவிட ஸ்தானங்களுக்கு செல்லுதல் மற்றும் மறைவிட ஸ்தான அதிபதிகள் சுக்கிரன் பகவானுடன் இணைதல் போன்ற காரணங்களாலும் திருமண தடை உண்டாகிறது.

                          


திருமணத்தடை போக்க வணங்க வேண்டிய தெய்வங்கள்:-

நாக தோஷம்:

ஒருவரது ஜாதகத்தில் 1,2,7,8 ஆம் இடத்துடன் ராகு,கேது தொடர்பு உடையவர்களுக்கு  சர்ப்ப சாந்தி செய்ய வேண்டும்.

ராகு பவான் திருக்கோவில்கள்:

1. நாகநாதசுவாமி திருக்கோவில், திருநாகேசுவரம், தஞ்சாவூர் மாவட்டம்

2. சேஷபுரீஸ்வரர் திருக்கோவில், திருபாம்புரம், திருவாரூர் மாவட்டம்

3. காளத்தியப்பர் திருக்கோவில், ஸ்ரீகாளகஸ்தி, சித்தூர் மாவட்டம், ஆந்திரா

4. அருள்மிகு நாகநாதர் திருக்கோவில், பேரையூர், புதுக்கோட்டை மாவட்டம்

கேது பகவான்:

1. நாகநாதர் திருக்கோவில், கீழப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவடடம்

2. காளத்தியப்பர் திருக்கோவில், ஸ்ரீகாளகஸ்தி, சித்தூர் மாவட்டம், ஆந்திரா

செவ்வாய் தோஷம்:

லக்கனம் (or) ராசி(or)சுக்கிரனுக்கு 2,4,7,8,12-ஆம் இடங்களில் செவ்வாய் இருப்பின் செவ்வாய் தோஷம் ஆகும். இதில் சில விதிவிலக்கு உண்டு.

செவ்வாய் தோஷம் தடை நீங்க வேண்டிய தெய்வங்கள்:

* வைத்தியஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமாரசுவாமி
* திருச்செந்தூர் முருகன் கோவில்
* ஆலங்குடி தெட்சிணாமூர்த்தி

                      


திருமண தடை விலக கீழ்குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று வழிபட திருமண  தடை அகலும்:

1. திருமணஞ்சேரி - உத்வாக நாதர் கோவில், நாகப்பட்டின மாவட்டம்(கும்பகோணம் to மயிலாடுதுறை வழியில்)

2.  திருக்கருகாவூர் - முல்லைவன நாதர் கோவில்(தஞ்சாவூர் மாவட்டம்)

3. திருமங்கலக்குடி - பிராண நாதேசுவர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம் (கும்பகோணம் to மயிலாடுதுறை நெடுஞ்சாலை)

4. திருவிடைக்கழி - சிவன் கோவில், நாகப்பட்டின மாவட்டம்

5. சென்னை - அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் (காஞ்சிபுரம் மாவட்டம்)

6. திருக்கழுங்குன்றம் - வேதகிரிஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம் மாவட்டம்)

7. திருச்சி - ஸ்ரீலிவனேஸ்வரர் கோவில், (மண்ணச்சநல்லூர் வட்டம்), திருச்சி மாவட்டம்

8. திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர் கோவில் . நாமக்கல் மாவட்டம்.

9. திருகோஷ்டியூர் - செளமிய நாராயணப் பெருமாள் கோவில் . சிவகங்கை மாவட்டம்.

10. காஞ்சிபுரம் - சித்ரகுப்தர் கோவில் . காஞ்சிபுரம் மாவட்டம்

11. ஸ்ரீவில்லிபுத்தூர் - ஆண்டாள் திருக்கோவில் விருதுநகர் மாவட்டம், (விஷ்ணு தலம் )

12. மதுரை - அழகர் கோவில் . மதுரை மாவட்டம்.

மேற்கண்ட கோவில்களில் எதாவது ஒரு சில கோவிலுக்கு சென்று வழிபடலம். இவை தவிர உங்களுக்கு என்ன திசை நடக்கிறதோ அந்த திசைக்கு உரிய நவக்கிரக கோவிலுக்கு சென்று வழிபட திருமண தடை அகலும்.

                        


1. சூரியனார் கோவில் - ஆடுதுறை (தஞ்சாவூர் மாவட்டம்)

2. சந்திரன் - திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்)

3. செவ்வாய் - வைத்தியஸ்வரன் கோவில் (நாகப்பட்டினம் மாவட்டம்)

4. புதன் - திருவெண்காடு (நாகப்பட்டினம் மாவட்டம்)

5. குரு - ஆலங்குடி குரு ஸ்தலம் (திருவாரூர் மாவட்டம்)

             - திட்டை வசிஸ்டேஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

             - திருச்செந்தூர் முருகன் கோயில் (தூத்துக்குடி மாவட்டம்)

6. சனி - திருநள்ளாறு
தர்ப்பாரண்யேசுவரர் கோவில் (காரைக்கால் மாவட்டம்)
     -திருக்கொள்ளிக்காடு-பொங்கு சனீஸ்வரர் ஸ்தலம்.(திருவாரூர் மாவட்டம்).

  திருமண தடை அகல எளிய பரிகாரம்

                         


   திருமணத் தடை அகல பரிகாரம், பிராயச்சித்தம் என அதிக செலவில்லாமலும் இதற்கான தீர்வை எளிதில் காணலாம்.

 வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம்.

  பூஜைக்கு முன்பு இடத்தை சுத்தமாக மஞ்சள் சந்தனம் இட்டு மொழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து ஊற்றி அதை ஏற்றலாம்.

 தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல் ஓர் ஊதுபத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.

 விளக்கின் முன்பு அருகம்புல், துளசி கலந்த தீர்த்தம் மற்றும் நல்ல பழுத்த எலுமிச்சம்பழம் வைக்க வேண்டும்.

 இரண்டு எலுமிச்சை பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அந்த சாற்றுடன் தேனும், சர்க்கரையும் கலந்து படைக்க வேண்டும்.

 அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி  மொத்தம் மூன்று அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் (குறிப்பாக சனிக்கிழமை எனில் காலை 9-10.30) கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபட திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமைந்து மங்களகரமாக திருமணம் நடைபெறும்.

மந்திரம்

"ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ!
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ!
ஓம் வல்லி தேவ சேனா சுப்ரமண்யாய நமஹ!
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி!
சித்தி சுந்தரி ,கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம முக ஹ்ருத! "

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
                            


அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc, M.A, BED
(ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் சோதிட நிலையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.