2023 ல் சனி பெயர்ச்சி (Saturn displacement) எப்படி இருக்கும்?
கோள்களில் மெதுவாக நகரும் கிரகம் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் வாசம் செய்கிறார். எனவே சனி பகவான் ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு நகர்ந்து செல்வதைதான் நாம்
"சனி பெயர்ச்சி"(Saturn displacement) என்கிறோம்.
ஏனைய பெயர்ச்சிகளை விட சனி பெயர்ச்சி மிக முக்கியமாக அனைத்து மக்களாலும் கவனிக்கப்படுவதற்கு காரணம் இது மிக நீண்ட காலமாக இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கியிருப்பதே காரணமாகும்..
இந்தச் சனிப்பெயர்ச்சி ஆனது வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இரண்டு விதமான காலகட்டங்களில் நடக்கிறது.இரண்டு முறைப்படியான சனி பெயர்ச்சிக்கான இடைப்பட்ட கால அளவு வித்தியாசம் ஒரு ஆண்டு உள்ளது என்பதால் இந்த சனி பெயர்ச்சியில் எந்த சனி பெயர்ச்சி தேதியினை எடுத்துக் கொள்வது என்பதில் மிகுந்த குழப்பம் மக்களிடையே நிலவி வருகிறது.
திருநள்ளாறு போன்ற முக்கியமான சனி பகவானுக்கு உரிய ஸ்தலங்களில் வாக்கிய முறைப்படி வரும் சனி பெயர்ச்சியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு கொண்டாடப்படுகிறது.
வாக்கிய முறைப்படி கடந்த சனி பெயர்ச்சியானது அதாவது சனி பகவான் தனுசு வீட்டில் இருந்து மகர வீட்டிற்கு 27.12.2020 ல் நடை பெற்றது.தற்போது மகர வீட்டில் இருந்து கும்பம் வீட்டிற்கு மார்ச் -2023 ல் பெயர்ச்சி அடைகிறார்.
ஆனால் திருக்கணித முறையில் கடந்த சனி பெயர்ச்சியானது அல்லது தனுசு வீட்டில் இருந்து மகர வீட்டிற்கு 24.01.2020 அன்று நடைபெற்றது.தற்போது மகர வீட்டில் இருந்து கும்பம் வீட்டிற்கு 17.01.2023 ல் நடைபெறுகிறது.கும்ப வீட்டில் சனி பகவான் ஏப்ரல் 2025 வரை வாசம் செய்கிறார்.
தனுசு ராசி -விட்டு விலகும் ஏழரைச்சனி
கடந்த ஏழரை ஆண்டுகளாக விரய சனி, ஜென்ம சனி மற்றும் பாதச்சனி என்ற வகையில் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான தனுசு ராசி அன்பர்களே இந்த சனி பெயர்ச்சி ஆனது உங்களுக்கு நல்ல விடி மோட்சம் தரும் சனி பெயர்ச்சியாக அமைய போகிறது.இந்த சனி பெயர்ச்சி மூலம் உங்களுக்கு முற்றிலுமாக ஏழரை சனி தாக்கத்திலிருந்து விடுபட போகிறீர்கள்.
இதுவரை குடும்ப வாழ்வில் கணவன் மனைவி உறவில் சிக்கல், குழந்தை பிறப்பதில் தாமதம் , திருமணத்துக்கு காத்துக் கொண்டிருக்கக் கூடிய இளைஞர்களுக்கு
திருமணத்தடை ,படிக்கக் கூடிய இளைஞர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இல்லாத தன்மை , வியாபாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் இல்லாத தன்மை போன்ற வகையிலான இன்னல்களை அனுபவித்து கொண்டு இருந்திருப்பீர்கள்.
சனி பெயர்ச்சி மூலமாக இனிமேல் தனுசு ராசிக்காரர்கள் மேற்கண்ட வகையில் அனுபவித்த அனைத்து துன்பங்களும் விலகி மகிழ்ச்சிகரமான வாழ்வை அவர்களது தசா புத்திகளுக்கு ஏற்ப அமையும்.
ஆபத்தான கால கட்டத்தை தாண்டும் மகர ராசி காரர்களே!
இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக விரயம் மற்றும் ஜென்மச்சனி பாதிப்புகளுக்கு உள்ளாகி பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வந்த நீங்கள் இனி கஷ்டமான காலகட்டங்களை தாண்டிவிட்டீர்கள் இனி வரும் பாத சனி உங்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் தில்லை.
ஜென்ம சனி பாதிப்புக்கு உள்ளாகும் கும்ப ராசி அன்பர்களே!
கடந்த இரண்டரை ஆண்டுகளாக விரய சனி பாதிப்பிலிருந்து பலவிதமான விரயங்களை அனுபவித்து வந்த நீங்கள் இந்த சனி பெயர்ச்சி மூலம் ஜென்ம சனி என்னும் ஏழரை சனி உங்களை முழுமையாக சரியாக எண்ண விடாமல் செய்யும். குறிப்பாக ஜென்ம நட்சத்திரத்தில் சனி நகரக்கூடிய காலங்களில் தேவையில்லா மன அழுத்தத்தை தந்து மிகுந்த வேதனைக்கு உங்களை உண்டாக்கும்.
ஏழரைச் சனி பாதிப்புக்கு உள்ளாகும் மீன ராசி அன்பர்களே!
இந்த சனி பெயர்ச்சி மூலம் உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. பெரும்பாலும் இயற்கை சுப கிரகமான குருவிற்கு சனி பகவான் சமம் தன்மை உடைய கிரகம் என்பதால் பெருமளவு ஏழரைச் சனி பாதிப்பிலிருந்து விலகுவீர்கள்.
சிலருக்கு இரண்டாவது முறையாக வலம் வரும் ஏழரை சனியானது பொங்கு சனியாக இருப்பதால் அந்த நேரங்களிலும் பெருமளவு பாதிப்பை ஜாதகருக்கு கொடுப்பதில்லை.
அஷ்டம சனி பாதிப்பிலிருந்து விடுபடும் மிதுன ராசிக்காரர்கள்
கடந்த இரண்டரை ஆண்டுகளாக
அஷ்டம சனி தொல்லைகளை அனுபவித்து வந்த மிதுன ராசிக்காரர்கள் தற்போது அஷ்டம சனி பாதிப்பிலிருந்து விலகுவார்கள்.
அஷ்டம சனி பிடிக்கும் கடக ராசி நண்பர்களே!
கடந்த இரண்டரை ஆண்டுகளாக கண்ட சனி பாதிப்புக்கு உள்ளாகி தண்டச் செலவை அனுபவித்த நீங்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளும் வம்பு, சண்டை, வழக்கு ,வீண் வாதம் ,கொடுத்த பணம் கிடைக்காமல் அவமானம் சிறை செல்லல்,ஒற்றுமை குறைவு போன்ற வகையிலான ஏதாவது இன்னல்களுக்கு உள்ளாகும் துர் பாக்கிய நிலை உண்டாகும்.
அர்த்தாஷ்டம சனி விலகும் துலாம் ராசி
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அர்த்தாஷ்டம சனி பாதிப்புக்கு உள்ளாகி இருந்த துலாம் ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி சிறப்பாக அமைய இருக்கிறது.
அர்த்தாஷ்டம சனியின் பாதிப்புக்கு உள்ளாகும் விருச்சிகம் ராசி அன்பர்களே.
விருச்சக ராசி காரர்கள் இப்பொழுது அர்த்தாஷ்டமச்சனியின் பாதிப்புக்கு உள்ளாக இருக்கிறார்கள் . நாலாமிடத்திற்கு சனி வருவதால்
தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம் போன்றவை பாதிப்புக்கு உள்ளாகும்.
யோகத்தை அனுபவிக்க இருக்கும் மேஷ ராசி அன்பர்களே !
உங்களது ராசிக்கு உபஜெய ஸ்தானமான 11ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எல்லா நலன்களையும் தரக்கூடிய பெயர்ச்சியாக அமைய கூடிய வாய்ப்புகள் அதிகம்.
தொழில் முன்னேற்றம் அடைய இருக்கும் ரிஷப ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்கு சனி பகவான் வருவதால் எதிர்பாராத முன்னேற்றங்களை உங்களுக்கு நடைபெறும் தசா புக்திகளுக்கு ஏற்ப அடைய இருக்கிறீர்கள்.
கன்னி ராசிக்கு உப ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்தில் சனி பகவான் வருவதால் உங்களுடைய லக்னாதிபதியின் வலிமைக்கு ஏற்ப நல்ல பலனைத் இந்த சனி பெயர்ச்சி மூலமாக அடைய இருக்கிறீர்கள்.
சனிபகவானால் வரும் தொல்லையில் இருந்து விடுபட
தினந்தோறும் சனியின் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.
காக்கைக்கு சோறு வைத்தல்,
ஐயருக்கு கருப்பு வஷ்திரம் தானம் செய்தல் ,
எள் விளக்கு போடுதல் ,
தினம் தோறும் காலையில் விநாயகர் வழிபாடு செய்தல்,
திருநள்ளாறு சென்று சனி பகவான் வழிபாடு போன்ற பரிகாரங்களின் மூலம் சனியின் பாதிப்புகளிலிருந்து இருந்து விலகலாம்.
ஒருவருக்கு என்னதான் யோக தசைகள் நடந்தாலும் ஏழரை சனி, அஷ்டமி சனி காலங்களில் அந்த யோக தசையும் சிறப்பாக செயல்படாது.
ஒரு குடும்பத்தில் இரண்டு ,மூன்று நபர்களுக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டமச்சனி நடப்பில் இருந்து அந்த கால கட்டங்களில் ஆறு மற்றும் எட்டுக்குடைய தசைகளோ அல்லது சந்திரன் மற்றும் ராகு தசைகளோ நடப்பில் இருந்தால் மிகுந்த இன்னல்களை சாதகர் அனுபவிக்க நேரிடும்.
சந்திரனுக்கு நான்காம் இடத்தில் சனி பகவான் வந்தால் அர்த்தாஷ்டம சனி, சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் வந்தால் கண்டகச் சனி,
சந்திரனுக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் வந்தால் அஷ்டமச்சனி ஆகும்.
சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12ஆம் இடத்திற்கு சனிபகவான் வரும்போது ஒருவருக்கு" ஏழரை சனி" ஆரம்பமாகிறது. 12ஆம் இடத்தில் சனி வந்தால்" விரயச் சனி" ,, ராசிக்கு சனி இருந்தால் ஜென்ம சனி, ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு சனி வந்தால் "பாதச் சனி "ஆகும்.
ஏழரை சனி மூன்று சுற்று வருகிறது. முதல் எழரை "மங்கு சனி", இரண்டாவது ஏழரை "பொங்கு சனி" , மூன்றாவது ஏழரை
"மரண சனி" ஆகும்.
ஏழரை சனி ஆனது அந்த ஏழரை ஆண்டும் இன்னல்களை தந்து விடுவதில்லை .ஏதாவது ஒரு காலகட்டத்தில் அதாவது ஏழரை மாதமோ, ஏழரை நாளோ அல்லது ஏழரை நாழிக்குள்ளோ தரக்கூடிய துன்பம் பெரிய துன்பமாக மரணத்துக்கு நிகரான துன்பமாக அமைந்துவிடும்.
சில நேரங்களில் சனி பகவான் அவரது ஜாதகத்தில் சுபத்துவமான முறையில் அமைந்துவிடக் கூடிய நிலையில் அந்த ஏழரை சனி காலங்களில் முக்கியமான பதவிகளுக்கு சாதகனை கொண்டு சென்று அதே நேரத்தில் அந்த காலகட்டம் வரை ஒரு மன அழுத்தத்தோடு அந்த பதவியில் நீடிக்க வைக்கும்.
நன்றி.
வாட்ஸ் அப் & கூகுள் பே & செல்
( All in one cell)
9715189647
மற்றொரு செல் : 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
E-mail; masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.