Tuesday 8 November 2022

2023 ல் சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்?

 2023 ல் சனி பெயர்ச்சி (Saturn displacement) எப்படி இருக்கும்?

                    


  கோள்களில் மெதுவாக நகரும் கிரகம் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை  ஆண்டு காலம் வாசம் செய்கிறார். எனவே சனி பகவான் ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு நகர்ந்து செல்வதைதான் நாம்

 "சனி பெயர்ச்சி"(Saturn displacement)  என்கிறோம்.


    ஏனைய பெயர்ச்சிகளை விட சனி பெயர்ச்சி மிக முக்கியமாக அனைத்து மக்களாலும் கவனிக்கப்படுவதற்கு காரணம் இது மிக நீண்ட காலமாக இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கியிருப்பதே காரணமாகும்..


இந்தச் சனிப்பெயர்ச்சி ஆனது  வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இரண்டு விதமான காலகட்டங்களில் நடக்கிறது.இரண்டு முறைப்படியான சனி பெயர்ச்சிக்கான இடைப்பட்ட கால அளவு வித்தியாசம் ஒரு ஆண்டு உள்ளது என்பதால் இந்த சனி பெயர்ச்சியில் எந்த சனி பெயர்ச்சி தேதியினை எடுத்துக் கொள்வது என்பதில் மிகுந்த குழப்பம் மக்களிடையே நிலவி வருகிறது.


 திருநள்ளாறு போன்ற முக்கியமான சனி பகவானுக்கு உரிய ஸ்தலங்களில் வாக்கிய முறைப்படி வரும் சனி பெயர்ச்சியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு கொண்டாடப்படுகிறது.


 வாக்கிய முறைப்படி கடந்த சனி பெயர்ச்சியானது அதாவது சனி பகவான் தனுசு வீட்டில் இருந்து மகர வீட்டிற்கு 27.12.2020 ல் நடை பெற்றது.தற்போது மகர வீட்டில் இருந்து கும்பம் வீட்டிற்கு மார்ச் -2023 ல் பெயர்ச்சி அடைகிறார்.


ஆனால் திருக்கணித முறையில் கடந்த சனி பெயர்ச்சியானது அல்லது தனுசு வீட்டில் இருந்து மகர வீட்டிற்கு 24.01.2020 அன்று நடைபெற்றது.தற்போது மகர வீட்டில் இருந்து கும்பம் வீட்டிற்கு 17.01.2023 ல் நடைபெறுகிறது.கும்ப வீட்டில் சனி பகவான் ஏப்ரல் 2025 வரை வாசம் செய்கிறார்.


தனுசு ராசி -விட்டு விலகும் ஏழரைச்சனி


  கடந்த ஏழரை ஆண்டுகளாக விரய சனி, ஜென்ம சனி மற்றும் பாதச்சனி என்ற வகையில் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான தனுசு ராசி அன்பர்களே இந்த சனி பெயர்ச்சி ஆனது உங்களுக்கு நல்ல விடி மோட்சம் தரும் சனி பெயர்ச்சியாக அமைய போகிறது.இந்த சனி பெயர்ச்சி மூலம் உங்களுக்கு முற்றிலுமாக ஏழரை சனி தாக்கத்திலிருந்து விடுபட போகிறீர்கள்.


 இதுவரை குடும்ப வாழ்வில் கணவன் மனைவி உறவில் சிக்கல், குழந்தை பிறப்பதில் தாமதம் , திருமணத்துக்கு காத்துக் கொண்டிருக்கக் கூடிய இளைஞர்களுக்கு

 திருமணத்தடை  ,படிக்கக் கூடிய இளைஞர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இல்லாத தன்மை , வியாபாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் இல்லாத தன்மை போன்ற வகையிலான  இன்னல்களை அனுபவித்து கொண்டு இருந்திருப்பீர்கள்.


 சனி பெயர்ச்சி மூலமாக இனிமேல் தனுசு ராசிக்காரர்கள் மேற்கண்ட வகையில் அனுபவித்த அனைத்து துன்பங்களும் விலகி மகிழ்ச்சிகரமான வாழ்வை அவர்களது தசா புத்திகளுக்கு ஏற்ப அமையும்.


 ஆபத்தான கால கட்டத்தை தாண்டும் மகர ராசி காரர்களே!

   

இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக விரயம் மற்றும் ஜென்மச்சனி பாதிப்புகளுக்கு உள்ளாகி பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வந்த நீங்கள் இனி  கஷ்டமான காலகட்டங்களை தாண்டிவிட்டீர்கள் இனி வரும் பாத சனி உங்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் தில்லை.


 ஜென்ம சனி பாதிப்புக்கு உள்ளாகும் கும்ப ராசி அன்பர்களே!


  கடந்த இரண்டரை ஆண்டுகளாக விரய சனி  பாதிப்பிலிருந்து பலவிதமான விரயங்களை அனுபவித்து வந்த நீங்கள் இந்த சனி பெயர்ச்சி மூலம் ஜென்ம சனி என்னும் ஏழரை சனி உங்களை முழுமையாக சரியாக எண்ண  விடாமல் செய்யும். குறிப்பாக ஜென்ம நட்சத்திரத்தில் சனி நகரக்கூடிய காலங்களில் தேவையில்லா மன அழுத்தத்தை தந்து மிகுந்த வேதனைக்கு உங்களை உண்டாக்கும்.


ஏழரைச் சனி பாதிப்புக்கு உள்ளாகும் மீன ராசி அன்பர்களே!


  இந்த சனி பெயர்ச்சி மூலம் உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. பெரும்பாலும் இயற்கை சுப கிரகமான குருவிற்கு சனி பகவான் சமம் தன்மை உடைய கிரகம் என்பதால் பெருமளவு ஏழரைச் சனி பாதிப்பிலிருந்து விலகுவீர்கள்.


   சிலருக்கு இரண்டாவது முறையாக வலம் வரும் ஏழரை சனியானது  பொங்கு சனியாக இருப்பதால் அந்த நேரங்களிலும் பெருமளவு பாதிப்பை ஜாதகருக்கு கொடுப்பதில்லை.


 அஷ்டம சனி பாதிப்பிலிருந்து விடுபடும் மிதுன ராசிக்காரர்கள்


     கடந்த இரண்டரை ஆண்டுகளாக 

 அஷ்டம சனி  தொல்லைகளை அனுபவித்து வந்த மிதுன ராசிக்காரர்கள் தற்போது அஷ்டம சனி  பாதிப்பிலிருந்து விலகுவார்கள்.


அஷ்டம சனி பிடிக்கும் கடக ராசி நண்பர்களே!


  கடந்த இரண்டரை ஆண்டுகளாக கண்ட சனி பாதிப்புக்கு உள்ளாகி தண்டச் செலவை அனுபவித்த நீங்கள் அடுத்த இரண்டரை  ஆண்டுகளும் வம்பு, சண்டை, வழக்கு ,வீண் வாதம் ,கொடுத்த பணம் கிடைக்காமல் அவமானம் சிறை செல்லல்,ஒற்றுமை குறைவு போன்ற வகையிலான ஏதாவது இன்னல்களுக்கு உள்ளாகும் துர் பாக்கிய நிலை உண்டாகும்.


அர்த்தாஷ்டம சனி விலகும் துலாம் ராசி


  கடந்த இரண்டரை ஆண்டுகளாக அர்த்தாஷ்டம சனி பாதிப்புக்கு உள்ளாகி இருந்த துலாம் ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி சிறப்பாக அமைய இருக்கிறது.


அர்த்தாஷ்டம சனியின் பாதிப்புக்கு உள்ளாகும் விருச்சிகம் ராசி அன்பர்களே.


  விருச்சக ராசி காரர்கள் இப்பொழுது அர்த்தாஷ்டமச்சனியின் பாதிப்புக்கு உள்ளாக இருக்கிறார்கள் . நாலாமிடத்திற்கு  சனி வருவதால்

 தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம் போன்றவை பாதிப்புக்கு உள்ளாகும்.


யோகத்தை அனுபவிக்க இருக்கும் மேஷ ராசி அன்பர்களே !


    உங்களது ராசிக்கு உபஜெய ஸ்தானமான 11ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எல்லா நலன்களையும் தரக்கூடிய பெயர்ச்சியாக அமைய கூடிய வாய்ப்புகள் அதிகம்.


தொழில் முன்னேற்றம் அடைய இருக்கும் ரிஷப ராசி அன்பர்களே!


  உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்கு சனி பகவான் வருவதால் எதிர்பாராத முன்னேற்றங்களை உங்களுக்கு நடைபெறும் தசா புக்திகளுக்கு ஏற்ப அடைய இருக்கிறீர்கள்.


கன்னி ராசிக்கு  உப ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்தில் சனி பகவான் வருவதால் உங்களுடைய லக்னாதிபதியின்  வலிமைக்கு  ஏற்ப நல்ல பலனைத்  இந்த சனி பெயர்ச்சி மூலமாக அடைய இருக்கிறீர்கள்.


  சனிபகவானால் வரும் தொல்லையில் இருந்து விடுபட 


தினந்தோறும் சனியின் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.


காக்கைக்கு சோறு வைத்தல், 

ஐயருக்கு கருப்பு  வஷ்திரம் தானம்   செய்தல் , 

எள் விளக்கு போடுதல்  ,

தினம் தோறும் காலையில் விநாயகர் வழிபாடு செய்தல், 

திருநள்ளாறு சென்று சனி பகவான் வழிபாடு போன்ற பரிகாரங்களின் மூலம்  சனியின் பாதிப்புகளிலிருந்து இருந்து விலகலாம்.


ஒருவருக்கு என்னதான் யோக தசைகள் நடந்தாலும் ஏழரை சனி, அஷ்டமி சனி காலங்களில் அந்த யோக தசையும் சிறப்பாக செயல்படாது.


   ஒரு குடும்பத்தில் இரண்டு ,மூன்று நபர்களுக்கு  ஏழரை சனி மற்றும் அஷ்டமச்சனி நடப்பில் இருந்து அந்த  கால கட்டங்களில் ஆறு மற்றும் எட்டுக்குடைய தசைகளோ அல்லது சந்திரன் மற்றும் ராகு தசைகளோ நடப்பில் இருந்தால் மிகுந்த இன்னல்களை சாதகர் அனுபவிக்க நேரிடும்.


    சந்திரனுக்கு நான்காம் இடத்தில் சனி பகவான் வந்தால் அர்த்தாஷ்டம சனி, சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் வந்தால் கண்டகச் சனி, 

சந்திரனுக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் வந்தால் அஷ்டமச்சனி ஆகும்.


     சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12ஆம் இடத்திற்கு சனிபகவான் வரும்போது ஒருவருக்கு" ஏழரை சனி" ஆரம்பமாகிறது. 12ஆம் இடத்தில் சனி வந்தால்" விரயச் சனி" ,,  ராசிக்கு சனி இருந்தால் ஜென்ம சனி, ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு சனி வந்தால் "பாதச் சனி "ஆகும்.


 ஏழரை சனி மூன்று சுற்று வருகிறது. முதல் எழரை "மங்கு சனி", இரண்டாவது ஏழரை "பொங்கு சனி" , மூன்றாவது ஏழரை 

"மரண சனி" ஆகும்.


  ஏழரை சனி ஆனது அந்த ஏழரை ஆண்டும் இன்னல்களை தந்து விடுவதில்லை .ஏதாவது ஒரு காலகட்டத்தில் அதாவது ஏழரை மாதமோ, ஏழரை நாளோ  அல்லது ஏழரை நாழிக்குள்ளோ தரக்கூடிய துன்பம் பெரிய துன்பமாக மரணத்துக்கு நிகரான துன்பமாக அமைந்துவிடும்.


 சில நேரங்களில் சனி பகவான் அவரது ஜாதகத்தில் சுபத்துவமான முறையில் அமைந்துவிடக் கூடிய நிலையில் அந்த ஏழரை சனி காலங்களில் முக்கியமான பதவிகளுக்கு சாதகனை கொண்டு சென்று அதே நேரத்தில் அந்த காலகட்டம் வரை ஒரு மன அழுத்தத்தோடு அந்த பதவியில் நீடிக்க வைக்கும்.


நன்றி.


வாட்ஸ் அப் & கூகுள் பே & செல்

      ( All in one cell)

   9715189647

 மற்றொரு செல் : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


E-mail; masterastroravi@gmail.com

                        



அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஸ்ரீ ராகு பகவான் தரும் மாறுபட்ட பார்வை

 ஸ்ரீ ராகு பகவான் தரும் மாறுபட்ட பார்வை.    




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான  ராகு மற்றும் கேது  பகவான் மட்டுமே ஜாதக பலனில் நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு பெரிய அளவில் மாற்றங்களை தர வைப்பவர் ஆவார்.


 ஜாதகத்தில் ராகு பகவான் மட்டும் நல்ல முறையில் அமைந்து விட்டால் அதன் தசை காலங்களில் அவை தரும் ஆடம்பரமான, பிரம்மாண்டமான  ஐஸ்வர்யங்களை  வேறு எந்த கிரகமும் தர இயலாது.


  ராகு என்றாலே மாற்றங்களை தருபவர் ஆவார்.மேலும் எதிர்பாராத அளவு பெரிய பிரமாண்டமான மாற்றங்கள் அல்லது மிகவும் கீழினும் கீழான நிலையினை தருபவராக இருப்பார்.


ராகு பகவான் " கெடுத்து கொடுப்பார் என்றும் அல்லது கொடுத்து கெடுப்பார்" என்று அழைக்கப்படுகிறது.

*ராகுவை  போல கொடுப்பாரில்லை

 கேதுவைப் போல் கெடுப்பார் இல்லை என்றும் சொல்வது சொலவடை ஆகும்.


  ராகு பகவான் தன்னுடன் சேர்ந்த கிரகத்தின் பலனை மாற்றி தருவதில் வல்லவர் ஆவார்.


 இயற்கை சுப கிரகங்கள் மற்றும் லக்கன யோகியுடன் எட்டு பாகைக்குள் நெருக்கமாக  சேரும் ராகு பகவான் தன்னுடன் சேரும் கிரகத்தை பாவத்துவ படுத்தி தான் மட்டும் சுபராக மாறி அதன் தசையில் நல்ல பலன் தருவார்.


 ராகு பகவான் உடன் சனி , செவ்வாய் சேர்க்கை பெற்ற நிலையில் அல்லது ராகு பகவான் உடன் செவ்வாய் சேர்ந்து சனி பார்த்த அமைப்பு அல்லது ராகு பகவானுடன் செவ்வாய் சேர்ந்து சனி பார்த்து அமைப்பு அல்லது

ராகு பகவான் சனியின் வீடுகளான மகர கும்பத்தில் நின்று செவ்வாய் பகவானால் பார்க்கப்பட்ட அமைப்பு அல்லது ராகு பகவான் செவ்வாய் பகவான் வீடான மேஷ ,விருச்சகத்தில் நின்று சனி பகவானால் பார்க்கப்பட்ட தன்மை 

மேற்கண்ட இது போன்ற அமைப்புகள் உங்களது ஜாதகத்தில் இருந்தால் அவை எந்த ஸ்தானத்தில் உள்ளதோ அந்த ஸ்தானமானது வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்.இத்துடன் சந்திரன் 🌙 பகவான் சேர்ந்த நிலையில் சந்திரன் பகவான் மனநிலை காரகன் என்பதால் மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


இவை மட்டும் அல்லாமல் ராகு பகவான் தொடர்பு கொண்ட சனி செவ்வாய் பகவான் ஆதிபத்தியம் மற்றும் காரக பலன்களும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும்.


மேற்கண்ட வகையில் கூறப்பட்ட அமைப்புக்கள் எனது ஜாதகத்தில் உள்ளது ஆனால் தாங்கள் கூறியது போல பெரும் பாதிப்பை எனக்கு தரவில்லை என நீங்கள் கருதினால் அதற்கான விளக்கம் என்னவென்றால் அந்த ராகுவின் பாவத்துவமான அமைப்புடன்  பங்கப்படாத குரு , சுக்கிரன் அல்லது தனித்த புதன் ஆகியவற்றின் தொடர்பை பெற்றிருக்கும்.


    ராகு பகவான் ஒரு அந்நிய தேசத்தையும் மற்றும் அந்நிய மதத்தையும் குறிக்கும் கிரகம் ஆகும்.


 ராகு பகவான் மட்டும் ஒருவர் ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், மகரம், கடகம் மற்றும் கன்னி ஆகிய ஐந்து ராசிகளில் ஒன்றில் அமர்ந்து அவை ராசி அல்லது லக்கினத்திற்கு அயன ஸ்தானமான பன்னிரண்டாம் இடமாக அல்லது மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் இருந்து லக்கனத்திற்கு எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடம் சுபத்துவ நிலையில் இருந்து அதாவது உதாரணமாக குரு பகவான் எட்டில் அமர்ந்து பன்னிரெண்டாம் இடத்தை பார்வை செய்யும் நிலை.


மேற்கண்ட இது போன்ற அமைப்பில் இருந்து ராகு தசை நடப்பில் இருப்பின் ஜாதகர் நாடு கடந்து பல லட்சங்களை சம்பாதித்து புகழ் பெறுவார்.


ராகு பகவான் திருமண ஸ்தானங்களான 1,2,7 ,8 ஆம் இடத்தில் நின்று வேறு வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் திருமண தடையை உண்டாக்குவார்.


மூன்றாம் இடத்தில் சகோதர தோஷத்தையும், நான்காம் இடத்தில் மாதுர் தோஷத்தையும், ஐந்தாம் இடத்தில் புத்திர தோஷத்தையும்   மற்றும் ஒன்பதாம் இடத்தில் பிதுர்தோஷத்தையும் உண்டாக்குவார்.


 பௌர்ணமி அமைப்பில் சூரியன் அல்லது சந்திரனுடன் ராகு பகவான் 8 பாகைக்குள்ளாக நெருக்கமாக இணையும்போது கிரகண தோஷத்தை ஏற்படுத்துவார். இதனால் அந்த பௌர்ணமி யோகம் முழுமையாக சாதகருக்கு செயல்படாது.


ராகு பகவான் ஒளிக்கிரகமான சூரியனுடன் நெருக்கமாக இணையும்போது தந்தை உறவு நிலையையும், சந்திரனுடன் நெருக்கமாக இணையும்போது தாயின் உறவு நிலையும்  மற்றும் மனநிலை பாதிப்பை உண்டாக்குவார்.


செவ்வாய் பகலுடன் ராகு பகவான் நெருக்கமாக இணையும்போது சகோதர தோஷத்தையும் ,சுக்கிலுடன் நெருக்கமாக இணையும்போது தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய தன்மை மாறுபட்ட நிலையிலும், திருமண தடையையும் உண்டாக்குவார்.மேலும் மேலும் மாறுபட்ட காம எண்ணங்களையும் விதவையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையையும் சாதகர்கருக்கு கொடுப்பார்.


 ராகு பகவான் ஆனவர்  புதன் பகவான் உடன் இணைந்து பாவத்துவமாகி தனது மூளையை தவறான வழியில் பயன்படுத்தக் கூடியவராக இருப்பார். பொது இடங்களில் நாசம் விளைவிக்க கூடிய அளவிற்கு அல்லது பொது சொத்துக்களை திருடும் அளவிற்கு தனது மூளையை எதிர்மறையாக பயன்படுத்துவார்.அம்மான் வர்க்கத்திற்கு ஆகாத நிலையினை தருபவராக இருப்பார்.


  ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது .இருக்கும் வீட்டை சொந்த வீடாக கொண்டிருக்கும். 

    ராகு பகவான் தனது தசையில் இருக்கும் வீட்டின் பலனையும், தன்னுடன் சேர்ந்த மற்றும் பார்த்த கிரகத்தின் பலனையும் ராகுவுக்கு நான்கு கேந்திர ஸ்தானங்களில் உள்ள கிரக பலனையும் அவை பெற்ற நட்சத்திர சாரம் ஆகியவை பொறுத்து பலன் தரும் என்பதால் பலனை கணிப்பதில் சிக்கல்களை கொண்ட தசையாக ராகு தசை அமைகிறது.


  ராகு பகவான் நிற்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றால் அல்லது  ராகு நிற்கும் வீட்டின் அதிபதி ராகு இருந்த வீட்டில் ஆட்சி பெறாமல் மற்றொரு ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அதன் தசை காலங்களில் யோகத்தை தருகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   9715189647

மற்றொரு செல்

  7402570899


E-mail address

  masterastroravi@gmail.com

    


அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

  M.SC,M.A, BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்) கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

யோகங்கள் நிறைந்த ஜாதகம் எது?



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  ஒருவருக்கு நல்ல யோகங்களை அள்ளி தரக்கூடிய ஜாதகம்  எது என்று  நன்கு கணித்து ஆராய்ந்து  பார்த்தால் அதில் லக்கனம் , ராசி மற்றும் அதன் அதிபதிகள் எவ்விதத்திலும் பங்கம் அடையாமல் இருக்கும்.


   ஒளி கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கோள்களும் முழு ஒளியளவு கொண்டிருக்க வேண்டும்.அதாவது முழு பொளர்ணமி அல்லது வளர்பிறை அமைப்பில் இருக்கும்.


நிழல் கிரகமான ராகு மற்றும் கேது பகவான்  தனித்த நிலையில் ஆறு மற்றும் பண்ணிரெண்டாம் இடத்தில் நிற்கும்.


ஜாதகத்தில் தொடர்ந்து வரக்கூடிய தசைகள் நல்ல யோக தசைகளாக இருக்கும்.கோச்சார அடைப்படையில் கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்து இருக்கும்.


  லக்கன அவ யோக கிரகங்கள் மற்றும் பகைக்கிரகங்கள் பலமிழந்தும் லக்கன யோக கிரகங்கள் மற்றும் இயற்கை சுபகரங்கள் வலுவடைந்து ஜாதகத்தில் காணப்படும்


 சாதகத்தில் வீடு கொடுத்தவன் வலு மிகவும் முக்கியமானது. எந்த ஒரு கிரகத்திற்கும் அதாவது பாவ கிரகமாக இருந்தாலும் அந்த கிரகம் இருக்க கூடிய வீட்டோட அதிபதி உச்சம் பெற்றால் அது தசை காலங்களில் நல்ல பலனைத் தரும்.


இரண்டு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளது.பாவத் பாவ அமைப்பின்படி அந்த இடமானது லக்கனத்தில் இருந்து கேந்திர கோணமாக இருப்பின் அந்த தசை காலங்களில் சொல்லொண்ணாத மகிழ்ச்சிகளையும் மற்றும் சந்தோஷத்தையும் அள்ளி கொடுக்கும்.


சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் ஆறாம் இடத்தில் இருப்பது அல்லது ஆறாம் இடத்தில் பார்வை செய்து இருப்பது ஆறாம் இடத்தை வலு இழக்க செய்வது நல்ல யோக அமைப்பு ஆகும். ஏனெனில் ஆறாம் இடம் என்பது சத்ரு ஸ்தானமாகும் இங்கு கடன் பிணி எதிர்ப்பு வம்பு சண்டை வழக்கு மான அவமானம் போன்ற கெடுதல் தரும் விஷயங்களை தரக்கூடிய இடமாகும்.. எனவேதான் இந்த இடம் பலமிழந்து லக்கனாதிபதி வலுப்பெற்று இருப்பதும் யோக ஜாதகமாக கருதப்படுகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் யோகத்தை அள்ளி தரக்கூடிய கோண அதிபதிகள் வலுப்பெற்று இயற்கை சுப கிரகங்களின் தொடர்பினை பெற்று அதன் தசை தொடர்ந்து நடப்பில் இருப்பின் அது யோகம் நிறைந்த ஜாதகமாக கருதப்படுகிறது.


ஒருவர் ஜாதகத்தில் லக்கன அவ யோகி மற்றும் பாவ கிரகங்கள் பலமிழந்து நின்று லக்கன யோகர் மற்றும் சுப கிரகங்கள் வலுப்பெற்று சுப மனை ஏறி நிற்பதும் யோகம் நிறைந்த ஜாதகமாக கருதப்படுகிறது.


சில நேரங்களில் ராசியில் பலம் இழந்து நிற்கும் கிரகம் அம்சத்தில் சுப மனை ஏறி நிற்பதும் மற்றும் சுப கிரகங்கள் சேர்க்கை பெற்று நிற்பதும் யோகம் நிறைந்த ஜாதகமாக கருதப்படுகிறது.


ஒருவர் ஜாதகத்தில் யோகம் நிறைந்த ஜாதமாக திகழ பிறந்ததிலிருந்து யோகம் நிறைந்த தசை நடப்பில் இருக்க வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    9715189647


 மற்றொரு செல்

   7402570899


Email masterastroravi@gmail.com

   


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

கிரகங்கள் -மாறுபட்டட பார்வை

 கிரகங்கள் - புதிய பார்வை



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் தசா புக்தி பலன்களை லக்கனத்தை அடிப்படையாக கொண்டும் மற்றும் கோச்சார பலன்களை ராசியை அடிப்படையாக கொண்டும் கணக்கிடப்படுகிறது.


 கோச்சார பலன்களில் வருட கிரகம் எனப்படும் சனி(இரண்டரை ஆண்டுகள்) ,ராகு,கேது ஒன்றரை ஆண்டுகள்)மற்றும் குரு (1 ஆண்டு) ஆகிய கிரகங்களின் பெயர்ச்சியானது ஜாதகரை பெருமளவு பாதிக்கப்படுகிறது.ஏனைய பெயர்ச்சிகளான‌ சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரிங்களின் பெயர்ச்சி பெரிய அளவில் பேசப்படுவதில்லை.காரணம் சந்திரன் இரண்டேகால் மட்டுமே ஒரு ராசியில் வாசம் செய்வார்.எனவே இவை நாள் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.


 மாத கிரகங்களான சூரியன் மற்றும் சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாதம் வீதமும் மற்றும் செவ்வாய் ஒரு ராசியில் ஒன்றரை மாதம் வீதமும் வாசம் செய்கிறது.


 சந்திரன் பெயர்சியை கொண்டே வளர்பிறை மற்றும் தேய்பிறை கணக்கிடப்படுகிறது.


     பொதுவாக அமாவாசை காலத்தில் இருந்து பொளர்ணமி காலம் வரை நகரும் சந்திரனை வளர்பிறை சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறது.இக்கால கட்டத்தினை சுக்ல பட்சம் அல்லது பூர்வ பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த தருணங்களில் சந்திரன் 🌙 முழூ ஒளி அளவினை கொண்டு இருப்பதால் இயற்கை சுபராக கருதப்படுகிறது. இவை பெரும்பாலும் ஜாதக கட்டத்தில் இரண்டாம் வீடு முதல் ஏழாம் வீடு வரை ஆகும்.


  இதேபோல பொளர்ணமி காலத்தில் இருந்து அமாவாசை நோக்கி நகரும் சந்திரனை தேய்பிறை சந்திரனாக கருதப்படுகிறது.இக்கால கட்டத்தினை அமர பட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படுகிறது.இந்த கால கட்டங்களில் சந்திரன் ஒளி அளவு குறைந்து கொண்டே வருவதால் இயற்கை பாவ கிரகமாக கருதப்படுகிறது.

இவை பெரும்பாலும் ஜாதக கட்டத்தில் எட்டாம் வீடு முதல் பன்னிரண்டாம் வீடு வரை ஆகும்.


  ஒளி அளவினை கொண்டு துல்லியமாக ஆய்வு செய்து நோக்கினால் அமாவாசை விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரையிலும் அதாவது பிரதமை திதி முதல் பஞ்சமி திதி வரை நகரும் சந்திரன் பகவானை தேய்பிறை சந்திரனாகவே மட்டும் கருதப்பட வேண்டும்.எனவே அமாவாசை விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரை தேய்பிறையாக கணக்கில் எடுத்துக் கொண்டு சுப விஷயங்கள் செய்ய கூடாது.


 இதேபோல பொளர்ணமியை விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரையிலும் அதாவது பஞ்சமி திதி வரை சந்திரன் பகவானை வளர்பிறை சந்திரனாக மட்டுமே கருதப்பட வேண்டும்.பொளர்ணமி விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரை வளர்பிறையாக கணக்கில் எடுத்து கொண்டு சுப வைபோகங்கள் செய்யலாம்.


 எனவேதான் வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களில் இயற்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் மட்டுமே சந்திர அதியோகம் பெறுகிறது.பாவ கிரகங்களான சனி , செவ்வாய் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கு கிடையாது.


இதேபோல தேய்பிறை சந்திரனுக்கு ஆறு ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களில் இயற்கை சுப கிரகங்கள் இருந்தால் சந்திர அதியோகம் கிடையாது.மற்றொரு இருள் கிரகமான சனி பகவான் பார்த்ததற்கு சமம் ஆகும்.


எனவே ஒரு ராசியில் தேய்பிறை சந்திரன் இருந்து பார்ப்பதும் மற்றும் இயற்கை பாவ கிரகமான சனி பகவான் பார்வை செய்வதும் ஒரு ராசியினை இரண்டு சனி பகவான் பார்வை செய்வதற்கு சமமானது ஆகும்.வளர்பிறை சந்திரன் மற்றும் குரு பகவான் பார்ப்பது இரண்டு குரு பகவான் பார்ப்பதற்கு சமமானது ஆகும்.


 கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானை தவிர ஏனைய கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி நகர்கிறது.சில நேரங்களில் அதாவது சூரியன் பகவான் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு வரும்போது சனி ,குரு மற்றும் செவ்வாய் பகவான் ஆகிய மூன்று கிரகங்கள் மட்டும் பின்னோக்கி நகர்வது போல் தெரிகிறது.இதனையே" வக்ர கதி "என்று அழைக்கிறோம்.ஆனால் நிழல் கிரகமான ராகு, கேது மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களுக்கு வக்ர கதி கிடையாது.


 வக்ரம் பெறும் கிரகங்கள் அனைத்தும் இயல்புக்கு மாறான நிலையினை பெறுகிறது. இந்த வகையில் உச்சம் பெற்ற கிரகங்கள் இயல்புக்கு மாறான நீசத்திற்கு நிகரான பலன்களை தருகிறது இதே போல நீசம் பெற்ற கிரகங்கள் இயல்புக்கு மாறான உச்ச பலனை தருகிறது.


   சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் முக்கூட்டு கிரகங்கள் ஆகும்.சூரியனுக்கு அருகிலே சுக்கிரன் மற்றும் புதன் பகவானது இருப்பதால் இதனை உள் வட்ட கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.


 புதன் பகவான் சூரியன் உடன் அல்லது முன்பின் ஒரு ராசி தள்ளி காணப்படும்.சுக்கிரன் பகவான் சூரியன் உடன் அல்லது முன்பின் இரண்டு ராசிகள் தள்ளி காணப்படும்.ஆதலால் ஒரு குறிப்பிட்ட பாகைக்குள்ளாக சூரியனை நெருங்கும் போது வக்ரம் அடைகிறது.


 மாபெரும் சூரிய ஒளிக்கு முன்பாக செல்லும் கிரகங்கள் தனது சுய ஒளியை இழந்து அஸ்தமனம் அடைகிறது.நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது சூரியனை நெருங்கும் போது அஸ்தமனம் அடைவதற்கு பதிலாக கிரகண தோஷத்தை தருகிறது .அதாவது சூரிய மற்றும் சந்திர ஒளியினை பூமியில் விழ விடாமல் மறைக்கிறது.


 ராகுவால் உண்டாகும் கிரகணத்தை போல கேதுவால் உண்டாகும் கிரகணம் வெகுவாக ஒளியை மறைப்பது கிடையாது.


பொதுவாக நிழல் கிரகமான ராகு பகவான் இருக்கும் வீட்டிற்கு ஏழாவது வீட்டில் அதாவது 180 பாகை அளவில் கேது பகவான் வாசம் செய்கிறார்.

 இவற்றிற்கு சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டையே தனது சொந்த வீடாக கருதிக் கொள்ள வேண்டும்.


 பொதுவாக புதன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களுக்கும் வக்ரம் மற்றும் அஸ்தமனம் கிடையாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.


பொதுவாக உச்சம் பெற்ற கிரகங்கள் அந்த வீட்டிற்கு ஏழாம் வீட்டிற்கு வரும் பொழுது நீசம் அடைகிறது. நீசம் அடைதல் என்பது தனது ஸ்தான பலத்தை இழந்து நிற்கிறது என்று அர்த்தம்.


 இவ்வாறு ஸ்தான பலத்தை இழந்து நிற்கும் கிரகங்கள் நீசம் பங்கம் பெறும் போது அவை உச்சத்தை விட வலிமை பெற்ற கிரகமாக மாறுகிறது.


   1)நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் அடைந்தாலும் ,

    2)நீசம் பெற்ற கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்து நின்றாலும் ,


      3)நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்சம் பெற்ற கிரகம் நின்றாலும்


      4) நீசப் பெற்ற கிரகத்தின் சொந்த வீட்டில் ஒரு உச்சம் பெற்ற கிரகம் நின்றாலும் ராசியிலும் வம்சத்திலும் ஒரே ராசியில்,


      5) நீசம் பெற்ற கிரகங்கள் ராசி மற்றும் அம்சம் ஆகிய இரண்டிலும் ஒரே ராசியில் நின்று வர்கோத்தமம் என்ற அடிப்படையில் நீச பங்கம் பெறுகிறது.


    அதேபோல ஜாதகத்தில் திக்பலம் பெற்ற கிரகங்கள் வலிமை பெற்ற கிரகமாக கருதப்படுகிறது.அதே திக் பலம் பெற்ற‌ கிரகம் ஆனது திக் பலம் பெற்ற வீட்டிற்கு ஏழாம் வீட்டிற்கு வரும் பொழுது நிஷ் பலம் பெறுகிறது.நிஷ் பலம் என்பது தன் பலம் இழந்த நிலையை அடைகிறது.


 லக்னத்தில் குரு பகவானும் மற்றும் புதன் பகவானும் திக் பலம் பெறுகிறது. நான்காம் இடத்தில் சந்திரன் பகவானும் மற்றும் சுக்கிர பகவானும் திக்பலம் அடைகிறது. ஏழாம் இடத்தில் சனி பகவான் திக்பலம் அடைகிறார் .பத்தாம் இடத்தில் சூரியனும் மற்றும் செவ்வாயும் திக்பலம் பெறுகிறது.


  ஏழாம் இடத்தில் குரு பகவானும் மற்றும் புதன் பகவானும் நிஷ் பலம் பெறுகிறார்கள். நான்காம் இடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் நிஷ் பலமடைகிறார். நான்காம் இடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் திக் பலம் இழக்கிறார்.பத்தாம் இடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் திக் பலம் இழக்கிறார்.


      ஸ்தான பலத்தை இழந்த கிரகங்கள் திக்பலம் பெரும்பொழுது அவை இழந்த வழுவை மீண்டும் பெறுகிறது என்று அர்த்தமாகும். எல்லாம் வீட்டிற்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் நீசம் பெற்று இருந்தாலும் அதை திக்பலம் என்ற ராசியில் பலம் பெற்ற கிரகமாகவே கருதப்படுகிறது.

 சில நேரங்களில் ஒரே ராசியில் ஸ்தான பலத்தை இழந்து நின்றாலும் இழந்த வலுவை மீண்டும் பெறுகிறது என்று அர்த்தம்.


நன்றி.


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  (All in one cell)

 97151 89 647

Cell

9715189647

   7402570899..


Email masterastroravi@gmail.com



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்