#சுக்கிரபகவான் தரும் யோகபலன்கள் -(2)
#கிரகங்கள் படுத்தும் பாடு- ( 116 )
செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம் ஆசியோடு....
சுக்கிரபகவானால் தரப்படும் காரக பலன்களை சோதிடம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் சென்ற பதிவில் அழகாக விளக்கியிருந்தேன்.இப்பதிவிலும் பகவான் அருளோடு மேலும் பல தகவல்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.தொடர்ந்து நல் ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சுக்கிரபகவான் ஆனவர் #ரிஷபம் மற்றும் #துலாம் ஆகிய இரு வீடுகளை ஆட்சி வீடாக கொண்டவர்.எந்த ஒரு ராசியையும் லக்கனமாக கொண்டவர்களுக்கூட சுக்கிரபகவானின் ஒரு வீடு சர ராசியாகவும் மற்றொன்று ஸ்திர ராசியாகவும் வருமேயொழிய உபய ராசியாக வருவதற்கு வாய்ப்பில்லை.
.எனவே ஒரு ஸ்தானம் மட்டுமே கேந்திரமாக வரும் வாய்ப்பு உள்ளதால் சுக்கிரபகவானுக்கு #கேந்திராதிபத்திய தோஷம் வருவதற்குரிய சாத்தியகூறு இல்லை.
சுக்கிரபகவான் சுப பலனை தரவேண்டுமாயின் அக்கிரகமானது அரவுகள் மற்றும் அசயர்களான ஸ்ரீராகு மற்றும் ஸ்ரீகேது பகவான்களோடு தனது வலிமையிழக்க கூடாது.தனது எதிரியான ஸ்ரீசூரியபகவானோடு இணைந்து அஸ்தமனம் அடையக்கூடாது.
மேலும் தனது எதிர் அணியான ஸ்ரீகுருபகவான் அணியோடு இணைவதும் மற்றும் பார்வை பெறுவதும் கூடாது.(.குரு அணி என்பது குரு,சந்திரன்,செவ்வாய் மற்றும் கேது ).இவை மட்டுமன்றி லக்கன பாவிகளோடு இணையக்கூடாது.
சுக்கிரன் உடன் சாயகிரகங்களான ராகு,கேது , காமகாரகன் செவ்வாய் மற்றும் மனதுக்காரன் சந்திரன் இணைவு மற்றும் பார்வையானது உடலியல் கவர்ச்சியால் ஒருவரை தன்னைவிட தரம் தாழ்ந்த இடத்தில் காதல் திருமணம் நடைபெற செய்ய வைக்கும்.
அதுவும் இதுபோன்ற அமைப்பு ஆடவருக்கோ/பெண்டிருக்கோ இருந்து இளவயதில் அதாவது பள்ளிபருவத்தில் சுக்கிர திசை நடைபெற்றால் அவர்களது குணத்தை கெடுத்து வீட்டைவிட்டு,தன்னை கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோர்களையும் மறந்து தவறான முடிவு எடுக்க வைக்கிறது.எனவேதான் பள்ளிபருவத்தில் சுக்கிர திசை வரக்கூடாது என பொதுவாக சொல்லிவிடுவார்கள்.மேலும் "குட்டிசுக்கிரன் குடியைக்கெடுக்கும் "என ரிதமாக கூறுவதன் உள்ளர்த்தமும் இவைதான்.
அதனால் பெற்றோர்களாகிய அனைவரும் தமது பிள்ளைகளுக்கு சுக்கிரதிசை வந்தால் இதுபோல் நடந்துவிடுமோ! என பயப்பட தேவையில்லை.
ஒருவருக்கு சுக்கிர திசை நடைபெறும்போது நான் கூறிய மேற்கொண்ட அமைப்பில் பாவிகளோடும் மற்றும் எதிர்தன்மையுடைய கிரகங்களோடு சுக்கிரன் பலவீனப்பட்டு அதன் திசை நடந்தால் மட்டுமேதான் இதுபோன்று நடைபெறும் வாய்ப்புகள் உண்டு.
இல்லையெனில் ரிஷபம் மற்றும் துலாத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபத்துவம் பெறாமல் இருப்பின் அக்கிரகங்களது திசையிலும் இதுபோன்ற பலன்கள் நடைபெறலாம்.
சோதிடர்களாகிய நாங்கள் கூறும் பொதுப்பலனை அப்படியே எடுத்துக்கொள்ளாதீர்கள்.இதில் சில விதிவிலக்குகளும் உண்டு..நான் பதிவில் கூறக்கூடிய அமைப்புகள் தங்களது பிள்ளைகளுக்கு இருப்பின் சோதிடரின் ஆலோசனையோடுதான் முடிவு எடுக்கவேண்டும்.இவ்வாறு நடைபெறும் கிரக அமைப்புகள் இருக்கின்றது நடைபெறும் திசையும் உடன்பாடாக இருப்பின் சற்று முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ளலாம்.
மேலும் ஒருவரது சாதகத்தில் சுக்கிரபகவனோடு காமகிரகம் செவ்வாய் பகவான் சேரும்போது அவர்கள் காமவயப்பட வாய்ப்புகள் உண்டு.ஆனால் சுபர் பார்வை பெற்றாலோ அல்லது மனதுக்காரகன் சந்திரபகவான் பலப்பட்டிருந்தாலோ இதுபோன்ற எண்ணங்கள் தோன்றினாலும் தன்னை அடக்கி ஆளும் ஆளுமை தன்மையை ஒருவன் பெற்றுவிடுகிறான்.
ஆனால் அதேநேரத்தில் சுபர் பார்வையின்றி மனதுக்காரகன் சந்திரபகவானும் கெட்டுவிடும்போதுதான் ஒரு சிலர் காம எண்ண மிகுதியால் தனக்கு உடன்படாத கல்லூரி பெண்ணை கொலைசெய்யும அளவிற்கு சென்றுவிடுகிறான்.
இன்றைய காலகட்டத்தில் சுவாதி கொலை வழக்குகளிலிருந்து தொடர்ந்து இதுபோன்ற நிறைய கொலை வழக்குகளை செய்திதாள்களிலிருந்து பார்கின்றபோது ஒரு ஆடவரினை உண்மையான காதல் தனது காதலி தனது காதலை மறுத்தாலும் அவளை வாழவைத்துதான் பார்க்கும். அன்பு எப்பொழுதும் பிறர்மீது வன்முறை செய்யதூண்டாது.கொலை செய்யதூண்டாது.வலுக்கட்டாயமாக பறிக்க தூண்டது.உண்மையான அன்பு காலம் மற்றும் காதல் கனியும்வரை காத்திருக்கும்.உண்மையான அன்பு தனக்கு அவள் கிடைக்காவிட்டாலும் கூட தூரத்தில் அவள் மகிழ்வோடும்,நிறைவோடும் வாழ்வதை எண்ணி உளம்பூரிக்கும்.
காம மிகுதியான உடலியல் கவர்ச்சிகளால் வரும் காதல்தான் ஒருவனை கொலை செய்யும் அளவிற்கு வெறி கொள்ள செய்கிறது.
இதற்கு சமூக அமைப்புமுறை,ஊடகங்கள் மற்றும் கல்விமுறை போன்ற பல காரணங்கள் இருந்தாலும் அவனது ஜெனன சாதகத்தில் உள்ள கிரகநிலை அமைப்புகளும் ஒரு காரணமாக அமைகிறது.
இதுபோன்ற அமைப்புகள் தங்களது பிள்ளைகளுக்கு உண்டு என்பதை தக்க சோதிடரின் உதவியோடு முன்னரே தெரிந்துகொண்டால் பெற்றோர்கள் சில முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பிரச்சினையின் ஆழத்தை குறைத்து கொள்ளலாம்.
பதிவின் கருத்துக்கு வருகிறேன்.எனவே சுக்கிரன்+செவ்வாய் மற்றும் சுக்கிரன்+சந்திரன் சேர்க்கை நல்லதல்ல.
மேலும் சுக்கிரபகவான் திரிகோண ஸ்தானமான ஒன்று,ஐந்து மற்றும் ஒன்பது மற்றும் மூன்று ,ஏழு மற்றும் பதினொன்றாம் இடத்துடன் தொடர்பு பெறும்போது ஒருவர் தனது இயல்பைவிட அதிக காம உணர்வு கொண்டவராக இருப்பார்.
இதுபோன்ற அமைப்புகள் ஒருவருக்கு இருப்பின் தெய்வவழிபாடு,தியானம் மற்றும் யோக மூலமாக மனதை அலைபாய விடாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு சுக்கிரபகவான் ஐந்து மற்றும் எட்டாம் இட தொடர்பு கொண்டால் சாதகர் பெண்களால் அசிங்கம் மற்றும் அவமானங்களை சந்திக்க நேரிடும்.இதிலும் சுபர் பார்வை மற்றும் இணைவு இவற்றை பொறுத்து பலன் மாறுபடலாம்.இதுபோன்ற அமைப்பு தாங்களுக்கோ/பிள்ளைகளுக்கோ இருக்கிறதென்றால் அவை நடைபெறாமல் இருப்பதற்கான விதிவிலக்குகள் உண்டா ? என தக்க சோதிடரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யவேண்டும்.வாய்ப்பு உண்டு எனில் சில நேரங்களில் செய்யாத தவறுக்கு தண்டனை மற்றும் கெட்டபெயர் வரும்.முன்னரே தெரிந்துகொண்டு பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளலாம்.
இதேபோல் சுக்கிரபகவான் எட்டு மற்றும் பணிரெண்டாமிட தொடர்பானது பெண்களால் ஒருவர் வலி,வேதனை,பிரச்சினை மற்றும் டென்ஷனை அனுபவிக்க தோன்றும்.
இதுபோன்ற பாதிப்புகள் தமக்கு வரும் வாய்ப்புகள் என மதியால் அறிந்து கொண்டால் விதியை மதியால் பரம்பொருளின் அருள் கொண்டு வெல்லலாம்.
தொடர்ந்த அடுத்த பதிவில் மேலும் பல தகவல்களை வெளிப்படையாக எல்லோறும் புரிந்துகொள்ளும் வகையில் பார்ப்போம்.படித்து பயன்பெறுங்கள்.பகிர்ந்து மற்றவரும் பயன்பட உதவுங்கள்.நன்றி!.
(தங்களுக்குளுடைய குடும்ப அங்கத்தினரின் #சாதகத்தினை முழுமையாக ஆராய்ந்து அதன் நிறை மற்றும் குறைகளை கண்டறிந்து குறைபோக்கும் பரிகார வழிபாடுகளை தெரிந்துகொள்ளவும்,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்து சாதகம் எழுதுதல் போன்ற சேவைகளை #போன்வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.கட்டணம் உண்டு)
தொடர்புக்கு -
செல் ; 97 151 89 647
740 257 08 99
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது #வாட்ஸ்அப்எண் ; 97 151 89 647 க்கு மெஸ்ஸே செய்யவும்.
அன்புடன்
AstroRavichandran
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.
My web.click hear
WWW
AstroRavichandransevvai.blogspot.com