Thursday 28 September 2017

சோதிட விதிகளை மறுபரிசீலனை செய்வோம்.

சோதிட விதிகளை மறு பரிசீலனை செய்வோம்

*****************************************
        கிரகங்கள்படுத்தும்பாடு


                        

                          
                                                    "இனி ஒரு விதி செய்வோம்-அதை
  எந்த நாளும் காப்போம்"
தம்பதிகள் இருவருக்கும் பொருத்தம் பார்ப்பது தொடர்பான பதிவு
நான் முதன் முதலில் சோதிட சம்பந்தமான அடிப்படை விதிகளை மதிப்புமிக்க ஆத்தூர் மாருதி மு.மாதேஸ்வரன் அய்யா எழுதிய "ஜோதிட ஆராய்சி திரட்டு" மூன்று பாகம் மற்றும் ஜோதிட ரகசியம் போன்ற நூல்களை படித்ததன் மூலம் அவரை நேரடியாக பார்க்காவிட்டாலும் அவரை மானசீக குருவாக அவரது நூல் வாயிலாக ஏற்றுக்கொண்டேன்.

                                           அவர் எழுதிய ஜோதிட ஆராய்சி திரட்டு இரண்டாம் பாகம் 159 பக்கத்தில் திருமணப்பொருத்தம் பார்க்கும் சரியான முறை என்ற தலைப்பின் கீழ் அவர் இட்ட கருத்தை ஆதாரமாக கொண்டு இப்பதிவில் என் எண்ணக்கருத்தை வெளியிடுகிறேன்.

                                     "திருமணம் செய்து கொள்ளப்போகும் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் ஜாதக ரீதியாக பொருத்தம் பார்க்க வேண்டும் என்று நமது முன்னோர்கள்
தெளிவாக கூறியுள்ளார்கள்.ஆனால் சிலர் அதெல்லாம் தேவையற்றது என வாதம்செய்கிறார்கள்" என எழுதியுள்ளார்.

                                       எனவே பத்து பொருத்தத்திற்கு பத்தும் இருந்தாலும் மேற்படி பாவக பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யக்கூடாது.நட்சத்திர பொருத்தங்கள் வலுவில்லாமல் இருந்தாலும் கிரக அமைப்புகள் நன்றாக இருந்தால் விவாகம் செய்யலாம் என்பது நான் கற்றதன் வாயிலாக அறிந்து கொண்ட கருத்து.இக்கருத்தை பின்வருமாறு விளக்குகிறேன்.

                                   முதலில்  கட்ட அடிப்படையிலான பொருத்தங்களையும்,அதற்கான விளக்கங்களையும் பார்ப்போம்.

                        

லக்கினப்பொருத்தம்:-
------------------
                                                          ஆண்,பெண் இருவருக்கும் லக்கின பொருத்தத்தைக்கொண்டு அவர்களது குணாதிசியங்களை கணக்கிடலாம்.
உதாரணமாக மீன மற்றும் மேஷம்,
சிம்மம் மற்றும் கும்பம் இவர்களுக்குள் ஒத்து வராது.என்னதான் வசியப்பொருத்தம் இருந்தாலும் இவர்கள் வேறு வேறு குணாதிசியம் உடையவர்களை இணைத்தால் சுகப்படாது.


லக்கன  அதிபதி பொருத்தம்
                                    என்னதான் வசிய பொருத்தம் இருந்தாலும் லக்கன அதிபதிகள் ஒன்றுக்கொன்று நட்பாக இல்லாமல் பகையாக இருப்பின் அவர்களிடம் அன்யோன்யம் ஏற்பட வாய்ப்பில்லை.


ராசி பொறுத்தம் மற்றும் நாடிப்பொருத்தம்

                                                                                                   இது மருத்துவ ரீதியான பொருத்தம்.ராசியைக்கொண்டு அவர்களது உடற்கூறு அமைப்பு வாதமா,பித்தமா மற்றும் சிலேத்துவமா என கண்டறியலாம்.
வாத,பித்த உடலும் இணையலாம்
வாத,சிலேத்தும உடலும் இணையலாம்
ஆனால்
பித்தமும்(உஷ்னம்),சிலேத்துவமும்(குளிர்சி) இணையக்கூடாது.
நீரும்,நெருப்பும் இணைய முடியுமா?
எனவே இப்பொருத்தம் இருப்பின் நாடி பொருத்தம் இல்லாவிடினும் செய்யலாம்.


                             


ராசி அதிபதி பொருத்தம்

மேஷம்,சிம்மம்,தனுசு-நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்-நில ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்-காற்று ராசிகள்
கடகம்,விருட்சகம்,மீனம்-நீர் ராசிகள்
மேற்கண்டவற்றுள் திரிகோண ராசிகளும்,அதன் அதிபதிகளும் ஒத்துபோக வாய்பிருக்கும்.இப்பொருத்தம் இருப்பின் வசிய பொருத்தம் தேவையில்லை.


யோனி பொருத்தம்

ஆண்,பெண் பிறப்புறுப்பு என்பதே யோனி பொருத்தம்.வாத்ஸ்யாயனர் எழுதிய "காம சூத்திரத்தில்" இதன் அடிப்படை உள்ளது.
உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் பிறப்பறுப்பு தோற்றம், உணர்ச்சி மற்றும் காம இச்சை இவற்றில் வேறுபாடு உண்டு ஒரே அளவாக இருப்பதில்லை.அவர்கள் தங்களுக்கிடையே சக்தியின் அளவிற்கேற்ப சமபோகம் செய்ய இயலும்.
காம இச்சை அதிகம் உள்ள பெண்ணிற்கு,காம இச்சை குறைவாக உள்ளவர்களை பொருத்தம் தடம் பிரள வாய்ப்பு உள்ளது.இதை குறிக்க நட்பு யோனிகளை இணைக்கலாம்,பகை யோனிகளை இணைக்க கூடாது என்பது கருத்து.

                               நான் இங்கு என்ன குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு ஆண்/பெண் சாதக கட்டத்தில்  உடல் உறவு ஆசைஎன்பதை ஏழாமிடம் கொண்டும்,கற்பு ஸ்தானம் என்பதை நான்காமிடம் கொண்டும்,படுக்கை சுகம் மற்றும் சயன சுகத்தை பணிரெண்டாமிடம் கொண்டும்,காதல் பிற பெண்களிடம் தொடர்பு என்பதை ஐந்தாமிடம் மேற்கண்ட நான்கு ஸ்தானங்களும்  கெடாமல் சுபதன்மை பெற்றும்
காம கிரகம் எனப்படும செவ்வாய் ஆணுக்கு,சுக்கிரன் பெண்ணுக்கு  மற்றும் காம எண்ணத்தை தூண்டும் கிரகம் சந்திரன்   போன்ற கிரகங்கள்  சனி,ராகு,கேதுவோடு சேர்ந்து குணத்தை கெடுக்காமாலும் மற்றும் லக்கனத்தை பொறுத்த நல்ல குணாதிசியம் உள்ள ஜாதக தம்பதிகளை இணைக்கும்போது
                         "யோனி பொறுத்தம் இல்லாவிட்டாலும் இணைக்கலாம்.இவர்கள் கிடைக்கும் தாம்பத்ய சுகத்தைக்கொண்டு திருப்தி அடைவார்கள்.

விதிவிலக்கு ;
மேற்கண்ட அமைப்புடையவர்களுக்கு ஏனைய எல்லாவித கட்டபொருத்தமும்,நட்சத்திரபொருத்தமும்,தசா நிலைகளும் நன்றாக இருக்கும் பட்சத்தில் யோனி பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.அவர்களுக்கிடையே தாம்பத்ய திருப்தி இருக்கும்.இது ஆராய்சி ரீதியான உண்மை.
யோனி பொருத்தம் இருந்து கட்ட ரீதியாக ஏழில் சந்திரன்,சுக்கிரன் உள்ள சாதகரும்,அதேபோல் நான்கில் சனி,செவ்வாய் சேர்ந்துள்ள சாதகரும் ,4-ம் பாவத்தில் சந்திரன் ,சுக்கிரன் பத்து பாகைக்குள் இணைந்துள்ள அல்லது சநதிரன்,சுக்கிரன்  180 பாகைக்குள் இணைந்துள்ள சாதகரும்(ஆண்/பெண்) தடம் மாறி போய்விட்டார்கள்.இது அனுபவ உண்மை.

துலாம் லக்கினத்தில் சுக்கிரபகவான் ஆட்சியடைந்து சனிபகவானை உச்சமாக கொண்டு அவை வீர்யஸ்தானமான மூன்றாமிடமாகவோ,காம கற்பனையுணர்வு தரும் ஐந்தாமிடமாகவோ,காம ஆசையை தூண்டும் களஸ்திரஸ்தானமான ஏழாமிடமாகவோ அல்லது எண்ணங்களை ஈடேற்றும் பதினொறாமிடம் மற்றும் போக ,சயன மற்றும் படுக்கை ஸ்தானமாகவோ அந்த துலாம் வீடு இருந்தால் அதுபோன்ற அமைப்பை பெற்ற ஒருவர் எந்த பெண்ணிடம் பேசினாலும் அந்த பெண் இவரை படுக்கைசுகத்தில் பங்குபோட கட்டாயப்படுத்தும்.

எனவே இதுபோன்ற கட்ட அமைப்புடைய தம்பதிகளை இணைக்கும்போது யோனி பொருத்தம் அவசியம் பார்க்கவேண்டும்.அவ்வாறு யோனிபொருத்தம் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யும் போது மனைவியால் திருமணத்திற்கு பிறகு மாற்றிவிடும் அமைப்புண்டு.
மற்றபடி சுக்கிரபகவான் மற்றும் செவ்வாய்பகவான் பாபர் தொடர்பற்று இருந்து மேலும்  3,5,7,11 மற்றும் 12 ஆம் இடங்களில் சுக்+செவ்  ,சுக்+சனி  ,செவ்+ராகு  ,சந்+சுக்  ,சுக்+ராகு போன்ற சேர்க்கை இல்லாத தம்பதிகளுக்கு #யோனிபொருத்தம் இல்லாதபட்சத்திலும் இணைக்கலாம்.இவர்கள் மன அடக்கத்துடன் வாழ்வார்கள்.

                           

ரச்சு பொருத்தம்
++++++++++++++++++
ஆண்,பெண் இருபாலருக்கும் ஒரே ரஜ்ஜூ வந்தால் திருமணம் செய்யக்கூடாது என்பது பொது விதி.இதில் விதிவிலக்காக ஒரே ரஜ்ஜூவாக இருந்தாலும் ஆரோ கணம்,அவரோக கணமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.இதில் ஒரே கணமாக வந்தால் செய்யக்கூடாது.
ரஜ்ஜூ பொருத்தம் இல்லாவிட்டாலும் ஆண்,பெண் இருவருக்கும் 2,7,8 இடம்
சுத்தமாக இருந்தாலும் நல்வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டாமிடம் ஆண் ஜாதகமாக இருப்பின் பெண்ணிற்கு ஆயுள் ஸ்தானம்,இதேபோல் பெண் ஜாதகமாக இருப்பின் ஆணிற்கு ஆயுள் ஸ்தானம்.
இதேபால் 8-மிடம் மாங்கல்ய ஸ்தானம் என்பதால் இவை வலுவாக இருப்பின் ரஜ்ஜூ பொருத்தம் இல்லாவிடினும் திருமணம் செய்யலாம்.

தம்பதிகள் இருவருக்கும் ஆயுள்பலம் அதிகமாக இருக்கும்போது ஒரே ரஜ்ஜீவாக இருந்தாலும் ஆரோகணம் மற்றும் அவரோகணமாக மாறிவரும்போது ஏறுமுகம் மற்றும் இறங்குமுகம் என்பதால் தம்பதிகளை இணைக்கலாம்.

பால் பொருத்தம்
+++++++++
இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ பால் உள்ள மரம் வந்தால் பால் பொருத்தம்.இவை குழந்தை செல்வத்தை கொடுக்கும்.
விதி விலக்கு
ஆண்,பெண் ஜாதகத்தில் 5,9 ம் இடங்களில் பாவியற்று (ராகு,கேது..),ஐந்தாமிட அதிபதி மற்றும் குரு வலுப்பெற்று இருப்பின் பால் பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்,புத்திரபாக்கியம் இருக்கும்.

கணப்பொருத்தம்
----------------
லக்கன மற்றும் லக்கன அதிபதி பொருத்தம் இருந்தால் போதும்.பெண் ராட்சத கணம் எனினும் பொருத்தம் போடலாம்
இதுபோல பல விதிவிலக்குகள் உள்ளதை கவனித்து பொருத்தம் போட்டால் நல்ல தம்பதிகள் இணைய வாய்ப்பு ஏற்படும்.
ஜோதிடர்களாகிய  நாம் சாதக ரீதியான  பொருத்தங்களுக்கு  ,நட்சத்திர பொருத்தங்களை விட அதிக முக்கியத்துவம் கொடுப்போம் என கூறி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

                           

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
ஜோதிட ஆராய்சியாளர்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
செல் : 97 151 89 647
செல் ; 740 257 08 99
எனது வாட்ஸ்அப்
97 151 89 647
ஜாதகம் இருந்த இடத்திலிருந்துகொண்டு போனின் மூலம் பார்க்க விரும்புவோர் மேற்கண்ட செல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.தங்களது குழந்தைகளுக்கு தெளிவாக ஆராய்ந்து திருமண பொருத்தம் பார்த்து தரப்படும்.கட்டணம் உண்டு.எனது வாட்ஸ்அப்பில் பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை அனுப்பவும்.
வாழ்க மகிழ்வுடன்.........
எனது வெப் முகவரி.கிளிக் செய்யவும்
AstroRavichandransevvai.blogspot.com
...........
.

சுக்கிரன் பகவான் தரும் யோக பலன்கள்- ( 4 )

சுக்கிரன் பகவான் தரும் யோகபலன்கள்- (4)

                    

#கிரகங்கள் படுத்தும் பாடு -( 118 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

சுக்கிர பகவான் தரும் கலையுணர்வு;
  சுக்கிர பகவான் ஒருவரை கலை மற்றும் காவிய உணர்வுடையவனாக மாற்றி அழகுபார்க்கிறது.

சுக்கிரபகவான் புதன்பகவானோடு தொடர்பு கொள்ளும்போது ஒருவரை காதல் உணர்வு மிக்கவராக மாற்றி காதல் கவிதைகள் ,காதல் கதைகள் மற்றும் காதல்பாடல்கள் முதலியவை எழுதி புகழ்பெறவைக்கிறது.இவற்றுடன் சுப குரு தொடர்பு கொள்ளும்போது விரசமில்லாத பாடல்கள் எழுத வைக்கிறது.

.அதேநேரத்தில் இவற்றுடன் சனி,செவ்வாய் மற்றும் ராகு தொடர்பு பெற காம விரசம் நிரம்பிய பாடல்களை எழுதி புகழ்பெறுவார்.

ஞானகாரகன் கேதுபகவான்,அல்லது ஆன்மிக செம்மல் குருபகவான் கலைக்காரகன சுக்கிரன் + புதன் உடன் இணைய காவிய இரசனை உடையவனாகவும் ,தத்துவம் மற்றும் ஆன்மீக நாட்டம் உடையவனாக ஒருவரை மாற்றி அதுசார்ந்த கதைகள்,கவிகள் மற்றும் பாடல்கள் எழுதி புகழ்பெற வைக்கிறது.

                    

சுக்கிரபகவான் மூன்றாமிடத்து தொடர்பு பெறும்போது ஒருவரை #இசையில் ஆர்வமுடையவனாக மாற்றுகிறது.ஒரு சிலர் இசைகலைஞர்களாக புகழ்வடைவதற்கும்,இசைகருவிகள் இசைத்து வித்வானாக திகழ்வதற்கும் இவ்வித தொடர்பேயாகும்.

சுக்கிரபகவான் ஆனவர் லக்கனம் ,ஐந்தாமிடம் மற்றும் பத்தாமிடம் தொடர்பானது ஒருவரை நாடகம்,நடிப்பு மற்றும் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் ஈடுபட வைக்கிறது.இங்கு புதன்பகவானும் தொடர்பு பெறும்போது ஒருவரை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்,செய்தி வாசிப்பாளராகவும் மாற்றிவிடுகிறது.

சுக்கிரபகவானால் அருளப்படும் சுகபோகங்கள்;-

ஒருவரது சாதகத்தில் சுக்கிரபகவான் மறைவு ஸ்தானத்தை தவிர்த்து (3,6,8,12) பிற இடங்களில்( 1,2,4,5,7,9,10 மற்றும் 11 ) பலம் பெற்று அதன் திசை நடைபெறும் காலங்களில் சாதகரை கார் ,பங்களா,நிலம்,பூமி,தோட்டத்துடன் கூடிய வீடுகள்,ஆபரணங்கள்,அடுக்குமாடி,செகுசு ரக நவீனம் நிறைந்த மாடலான வீடுகள்,பங்களா,வீட்டினில் கலையம்சம் நிறைந்த பொருட்கள்,நல்ல  அழகான மனைவி,வாசனை திரவியங்கள் மற்றும் விதவிதமா கார்கள் போன்றவற்றை தந்து ஆடம்பர வாழ்வை அளிப்பதில் சுக்கிரபகவானின் பங்கு அலாதியானது.

மேலும் உயர்பதவி பெறுவதற்கும் ,பொன் மற்றும் பொருள் பெறுவதற்கும் ,தனம் நிறைந்து மகிழ்ச்சியுடன் சுகபோகங்களில் திளைக்கவும்,நல்ல மனைவியை தேர்ந்தெடுத்து அவளோடு மனம் நிறைவோடு காமரசம் பருகி மனம் சாந்தியடைவதற்கும்,ஆடை ,ஆரண்யம் ,வண்டி வாகனம் மற்றும் சொகுசுபங்களாவோடு சுகபோகங்களை நிறைந்த வாழ்வினை அளிப்பதில் நவகோள்களில் சுக்கிரனுக்கு நிகர் சுக்கிரபகவானே ஆகும்.

                   

நமக்கு பராசுர முனிவரால் அருளப்பட்ட மொத்த நூற்றிஇறுபது வருடங்களை சமம்ற்ற ஒன்பது பாகமாக பிரித்து அதில் சுக்கிர திசைக்கு மட்டும் இருபது வருடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.ஒருவரது சாதக கட்டத்தில் சுக்கிர பகவான பாவிகள் சேர்க்கையற்று மேற்கொண்ட சுபஸ்தானங்களோடு தொடர்பு கொண்டு இளவயதில் பள்ளிபருவத்தில் சுக்கிரதிசை வராமல் வாலிப வயதில் வரும்போது உதாரணமாக இருபது வயதில் வரும்போது நாற்பது வயதிற்குள் உலகின் அத்தனை ஐஸ்வரியங்களையும் மற்றும் சுகபோகங்களையும் அனுபவித்துவிடுவார்கள்.இவர்கள் பாக்கியவான்கள் ஆவார்.

சுக்கிரபகவானை பலமாக பெற்றவர்கள் எப்படியாவது வாழ்ந்து சுகபோகங்களை அனுபவித்துவிடவேண்டும் என எண்ணுவார்கள்..இவர்கள் பொருள் ஈட்டுவதில் உள்ள வழிமுறைகளை (அதாவது நேர்வழி மற்றும் எதிர்வழி ) பற்றி கவலைப்படாதவர்கள் .அவர்கள் சமூகத்தில் பொருள்படைத்ததன் மூலம் சமூக அந்தஸ்தை பெறமுயல்வார்கள்.அதற்காக எவ்வித கீழான முறைகளை பற்றியும் கவலை படாதவர்கள்.இவர்களே பணம் ஈட்டலே வேதமாகும்.ஆனால் எப்பொழுதும் சுகவிரும்பிகளாகவே இருப்பதால் மன அடிப்படையில் வெற்றிடம் ஏற்பட்டு அதன்பலனாக நிறைவின்மை ஏற்பட்டு மேலும் மேலும் சேர்க்கும் குணம் ஏற்பட்டு மன அமைதியற்றவர்களாக இருப்பார்கள்.

                    

சுக்கிரபகவானால் வழங்கப்படும் தவறான பழக்கவழக்கங்கள்;-

   சுக்கிரபகவான் ஒருவரது சாதகத்தில் மறைவிடங்களான ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாமிட தொடர்பு பெற்றவர்கள் எதிர்மறை பலன்களை தரும்.அதாவது பெண்களால் அவமானம்,திடீர் இழப்புகள் ,தனவிரயம்,கொளரவகுறைவு,அவமரியாதை மற்றும் மர்மஸ்தானங்களில் வியாதி போன்றவைகளை ஒருவனுக்கு அளிக்கும்.

சிலர்  விலையுர்ந்த மதுபானங்களை நவநாகரீக ஹோட்டல்களில் அருந்துபவர்களாகவும் மற்றும் தவறான பெண்கள் தொடர்பு உடையவர்களாகி அதனால் அவமானங்களையோ அல்லது வலி ,வேதனையை பெறுபவராகவும் மாறிவிடுவார்கள்.

சிலர் லாட்டரி ,ரேஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழப்பவர்களாகவும் அதனால் மன அமைதி இழப்பவர்களாகவும் இருப்பர்.
அதேநேரத்தில் குருபலம் மிக்கவர்கள் இப்படிதான் வாழவேண்டும் எனும் வரையரை உடையவர்களாக இருப்பார்கள்.மனநிறைவுபெற்றவர்களாக இருப்பார்கள்.

                   

சுக்கிரனால் வழங்கப்படும் மனநிலைகள்;-

  ஒருவருக்கு அன்பு,பாசம் ,காதல் ,இன்பம் மற்றும் என்றும் ஆனந்தம் மற்றும் அவற்றை அடையக்கூடித மனநிலைகள்,தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவர்,காசு,பணம் ,சொந்தவீடு மற்றும் பெண்களிடம் மோகமும் மற்றும் அதை அடையக்கூடிய மனநிலைகள்.

சுக்கிரனால் வழங்கப்படும் வியாதிகள்:-

   கட்டி,பிளவை.,கண் சம்பந்தபட்ட வியாதிகள் ,எய்ட்ஸ் எனும் பாலியியல் வியாதி,விந்து வீர்யம் குறைவு ,மர்மஸ்தான உறுப்புகளில் வியாதி,பெண்களின் சுழற்சி அடிப்படையிலான மாதவிடாய் சுழற்சி மாறுபடல் மற்றும பெண்கள் பருவமடைதல் காலதாமதம் போன்றவை.

  தொடரும்.......

(தங்களது குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் சாதகபலன்களை விரிவாக ஆராய்ச்சி செய்து #போன்வழியாகவே எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.மேலும் திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்து கொரியரில் அனுப்பிவைத்தல் போன்ற சேவைகளை பெறலாம்.கட்டணம் உண்டு)

தொடர்புக்கு

  செல்
97 151 89 647
740 257 08 99

வாட்ஸ் அப்
97 151 89 647

(பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் மாவட்டத்துடன் வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்யவும்)

                              
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலைவேதியியல ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ  ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.

எனது வெப்சைட் முகவரி
AstroRavichandransevvai.blogspot.com
.........................................

Saturday 23 September 2017

உங்களுடைய சாதகம் யோகமான ஜாதகமா ? என எப்படி தெரிந்து கொள்வது ?

உங்களுடைய சாதகம் யோகமான ஜாதகமா? என எப்படி தெரிந்து கொள்வது.

                   
#கிரகங்கள்படுத்தும்பாடு-( 173 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
*****************************

              எல்லோருக்கும் நம்முடைய ஜாதகம் யோகமுடையதா? என தெரிந்து கொள்வதில் அளவுக்கதிகமான ஆசை இருக்கும்.

                   ஏதாவது சிறு யோகம் இருந்தாலும் அதை வைத்தே நம்ம வாழ்க்கையை ஓட்டிடலாம என நினைப்பவர்கள் பலர் உண்டு. என்னிடம் சாதகம் பார்க்க வருபவரில் பலர் எப்படியாவது நான் முன்னேறிவிடும் அளவிற்கு யோகம் உண்டா சார்?என கேட்பவர்களே அதிகம் ஆகும். எனவே இவர்கள் பயன்படும் விதமாக  ஒரு பதிவு போடவேண்டும் என எனது நீண்ட நாள்  ஆர்வத்தால் எழுந்த  பதிவு.

                 1) ஒருவருடைய ஜாதகத்தில் கேந்திராதிபதிகள்  கோணம் அல்லது மறைவு ஸ்தானங்களில் இடம் பெற வேண்டும்.மேலும் அவர்களுடைய தசை நடக்கவேண்டும்.

                  2)    பாவிகள் கேந்திரத்தல் இடம்பெறல் நல்லது.மேலும் கேந்திர(1,4,7,10) கோணாதிபதிகளுடன் (1.5.9)பரிவர்தனை நல்லது.

                 3)   கோணதிபதிகள் தமக்குள் பரிவர்தனை பெறுதல் நலம்.

                  4)      5 மற்றும் 2- க்கு அதிபதியும் வலுவான 9-வது திரிகோணம் அல்லதுது  பத்தாவது கேந்திரம் பெற்று இவற்றுள் இடம்பெற்றும் கிரக தசைகளில் இராச யோகத்தை கொடுக்கும்.

                 5)   இராகு 4,5,10,11 வீடுகளில் இருந்தால் அதன் தசா புத்திகளில் யோகங்களை தரும்.

                                 

                   6) சந்திரனும் ,சுக்கிரனும் மூன்றாம் வீட்டில் இருப்பின் சுக்கிர.தசை யோகத்தை தரும்.

                  7 ) குரு 9 -க்கு உடைய கிரகமாகி 8- ம் வீட்டில் இருப்பின் பாக்கியவான்.

                     8)    2,5,11 இவற்களுடைய அதிபதிகள் பரிவர்தனை அல்லது பரஸ்பர பார்வை பெற்று இருப்பின்,

                         9)       10 மற்றும் 11 க்குடைய அதிபதி பரிவர்த்தனை,2,9 பரிவர்த்தனை மற்றும் பரஸ்பர பார்வை.

                          10)    தர்ம-கர்மாதிபதி யோகம் பெறல்( 9,10  க்கைடைய அதிபதிகள் பரிவர்தனை ,சம சப்தம பார்வை)

                                     

               11)          9,10 க்குடைய கோள்கள் தத்தம் வீட்டில் ஆட்சி பெறல்.அல்லது ஏழாம் வீட்டிலோ,லக்கனத்திலோ இடம் பெறல்.

                 12)        5,7,10 -ஆம் அதிபதிகள் கேந்திர கோணங்களில் இடம்பெறல் புகழ்,அதிகாரம்,செல்வம் கிடைக்கும்.

                 13)    9 மற்றும் 11 -ஆம் வீட்டின் அதிபதிகள் பரிவர்தனை மற்றும் பரஸ்பர பார்வை யோகத்தை தரும்.

                14)  பாவிகள் 3,6,11-ல் இருப்பின் யோகர்.

                15)  லக்கினாதிபதி 9,4 க்குடைய கோள்கள் 10-ம் வீட்டில் இருப்பின் அல்லது லக்கினாதிபதி 7,10 ம் வீட்டில் கோள் ஒன்று சேர்ந்து இருப்பின் தங்களது தசை காலங்களில் யோகங்களை கொடுக்கும்.

                             
              16)  மீன லக்கனம் லக்கனத்தில் சந்திரன்,சிம்மத்தில் சூரியன்,கும்பத்தில் சனி,மகரத்தில் செவ்வாய் அரசனுக்கு சமமான யோகம்.

                17)  மகர லக்கனம் லக்கனத்தில் செவ்வாயும்,கடத்தில் சந்திரனும் பெற்றவர்கள்.

                   18) லக்கனாதிபதி ஐந்திலும் 2-க்குடையவன் 11-ல் இருந்தால் சுய உழைப்பில் முன்னேறுவான்.

                  19)  பிறர் வழியாக சொத்து சேரல்,கீழ்கண்ட சேர்க்கையின் அடிப்படையாக கொண்டு முடிவு செய்யப்படுகிறது.

      2,4 சேர்க்கை தாய் மூலமும்,

      2,5 சேர்க்கை புத்திரர் மூலமும்,

        சுக்கிரன் 4 லும்,4- ம் அதிபதி 7- லும் இருந்தால் மனைவி மூலமும்,

           6-ம் அதிபதி மற்றும் 6-ம் ஸ்தானாதிபதி செவ்,சனி உடன் லக்க்னாதிபதி சேர்க்கை எதிரி மூலமும் சொத்து சேரும் யோகம்.

                20)   சுப கிரகங்கள் மற்றும் பஞ்ச மகாயோகம் பெறல்,

குரு ஆட்சி உச்சம்-ஹம்சக யோகம்,

புதன் ஆட்சி உச்சம்- பத்ர யோகம்,

செவ் ஆட்சி உச்சம்-ருசக யோகம்,

சுக்கிரன் ஆட்சி உச்சம்-மாளவீக யோகம்,

சனி ஆட்சி உச்சம் -சசக யோகம் ஆகும்.

                  21).  4,2 ஆம் அதிபதியுடன் கூடி 9-ம் இடத்தில் இருக்க 10- ம் அதிபதி பலவனாய் 2-ல் இருக்க லாபாதிபதி மற்றும் லக்கனாதிபதி உச்சம் பெற கோடீஸ்வர யோகம்.

தொடரும்.......


                         

அன்புடன்
ரவிச்சந்திரன்
சோதிடர் & ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் ;97 151 89 647
செல்; 740 257 08 99

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

(சாதகம் போனின் வழியாக இருந்த இடத்திலிருந்து பார்க்க மேற்கண்ட செல் எண்ணிற்கு தொடர்புக்கொள்க).
பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்யவும்..)

My email
 masterastroravi@gmail. com,
   astroravichandransevvai@gmail.com.

My website.click here

AstroRavichandransevvai.blogspot.com.

---------------

Friday 22 September 2017

சுக்கிரன் பகவான் தரும் யோக பலன்கள்- ( 3 )

    சுக்கிரபகவானால் தரும் யோக பலன்கள்-(3)

                             
                                   கிரகங்கள்படுத்தும்பாடு -( 117 )

செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியமம்மன் துணை!

               சுககிரன் பகவானோடு இணைந்த மற்றும் பார்க்கும் கிரகங்களின் தன்மையை பொறுத்தே ஒருவரது குணநலன்கள் அமைகிறது.ஒரு சிலர் சமூகத்திற்கு  தனது கீழான நிலையை தெரிந்தாலும் அதைபற்றி சிறிதுகூட வெட்கப்படாமல் பிறர் அறிய காமசுகம் பெறுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்து அதுபோன்ற பலரது சாதகங்களை உற்றுநோக்கியபோது அவர்களது சாதகத்தில் லக்கனாதிபதி கெட்டுவிடுவதோடு மனதுக்காரன் சந்திரனும் கெட்டு   கீழ்கண்ட அமைப்புகளும் அவரது சாதகங்களில் காணப்படலாம்.

                 சுக்கிரனுடன்,மனதுக்காரகன் சந்திரன் மற்றும் ராகு இணைவு காம உணர்வை ஒருவருக்கு தூண்டி தவறாக நடக்கதூண்டும்.

                  இதேபோல சுக்கிரனுடன் ,காம வீர்யத்தை உருவாக்கும் செவ்வாய் மற்றும் ராகு சேர்ந்துள்ள அமைப்பை பெற்றவர்கள் மானம் கெட்ட காம உணர்வை தரவல்லது.

              சுக்கிரனுடன் சனி சேர்ந்து லக்கனாதிபதியும் பலவீனப்பட காமலீலைகள் மேலோங்கி காணப்படுவர்.
                                
சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்து லக்கனாதிபதி பலவீனப்படல்.
ஒரு மனிதனுக்கு காமம் என்பது அடிப்படையான உணர்வு.உலக உயிர்களின் பிறப்பிடமே இந்த செக்ஸ் உணர்வு.பசி,தூக்கம் மற்றும் தண்ணீர்தாகம் போல காமமும் ஒரு உணர்வு.பசி வந்தால் சாப்பிடுவதுபோல ,தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பது போல காம உணர்வு வந்தால் வந்தவுடனே வெளிப்படுத்த முடியாது.ஏனெனில் இந்த தாகமானது இன்னொறு உயிரின் பிறப்பிடமாகும்.
இதற்கு சமூகத்தில் நெறிப்படுத்தப்பட்ட வழிமுறை உள்ளது அவைதான் திருமணம் எனும் பந்தமாகும்.

                             


                உனது காமத்தை முறையாக வெளிப்படுத்த,பிறக்கும் இன்னுமொரு உயிருக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள மற்றும் சமூகத்தால் அங்கீகரிக்கபபட்ட முறைதான் இந்த திருமணம் எனும் அமைப்புமுறை.உனது காமத்தை ஒழுங்காக வெளிப்படுத்த அதன் மூலம் உறவுகள் வளரத்தான் இந்த திருமணம் எனும் நிகழ்வுக்கு இவ்வளவு சடங்குகள் மற்றும் சம்பர்தாயங்கள் ஆகும்..

             நீ வெளிப்படுத்தும் காம உணர்வை தாங்கி கொள்பவளாக, உமது உடல்நலத்தின் மூலம் அக்கறை கொண்டவளாக ,உமது எதிர்காலம் கடைசிவரை கைகோர்த்து வரும் பந்தம் மனைவி ஒருவளேயாகும்..

'"ஒருவனுக்கு ஒருத்தி "எனும் உயரிய கொள்கைகளை நமது முன்னோர்கள் வரையறுத்ததும் இதனால்தான்.

                         


ஒருவன் மனைவியிடம் மட்டும் காமசுகம் பெற;-


                       அவனது சாதகத்தில் சுக்கிரபகவான் ஆனவர் மூன்றாமிடம்,ஐந்தாமிடம்,ஏழாமிடம் மற்றும் பணிரெண்டாமிடம் ஆகியஸ்தானங்களோடு பாபர் தொடர்பற்று சுப தொடர்பு கொள்ளும்போது மட்டுமே பெறமுடிகிறது.மாறாக பாபர் தொடர்பு உடன் இடம்பெறும்போது மனைவி அல்லாத பிற வழிகளிலும் 'பல மலரில் தேன் எடுக்கும் வண்டினைப்போலாவார்".

       ஏன் பணிரெண்டு ராசிக்கட்டங்களில் நான்கு ஸ்தானங்களோடு மட்டும் சுக்கிரன் தொடர்பை குறிப்பிட்டேன்.இதுபற்றி எனது முந்தைய பதிவான #செக்ஸ்வாழ்வும்திருமணமும் எனும் பதிவில் விரிவாக விளக்கியிருந்தாலும் மீண்டும் ஒருமுறை விளக்குகிறேன்.

                               




          மூன்றாமிடம்

                        இது செக்ஸ் வீர்யத்தை குறிக்குமிடம்.ஒருவரது விந்து வீர்யம் ,அவனது இயக்கவேகம் மற்றும் நீண்ட நேரம் களவியில் ஈடுபடல்.

           ஐந்தாமிடம்

                    காமம் பற்றிய விதவிதமான கற்பனை."கற்பனையில்லாமல் கட்டில்மேல் சேராதே"எனும் பாடல்வரிப்படி காமம் பற்றிய பலவித வழிமுறை உணர்வை தருமிடம்.

                ஏழாமிடம்


                      உடல் உறவில் உண்டாகும் நாட்டம் மற்றும் ஆசையுணர்வு
#பணிரெண்டாமிடம்
போகசுகம்,சயனசுகம் மற்றும் மெத்தைசுகம்.எந்த முறைமூலம் உடலியல் இன்பங்களை அடையலாம்.
"எந்த இடத்தில் சுகமிகு அதிகம் என கண்டுபிடிப்பேன் அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்"என்ற நிலை.

                       மேற்கண்ட இந்த நான்கு ஸ்தானங்களில் பாவகிரகங்களோடு சுக்கிரபகவான் தொடர்பு பெறும் ஒருவர்தான் சமூகம் வெறுக்கும் காம இன்பங்களை பெறுபவராக உள்ளார்.

                                  


                       இதுபோன்ற சாதக அமைப்புகள் திருமணபந்தத்தில் இணையும் தனது ஜோடிகளுடன் உள்ளது என்பதை தகுந்த சோதிடர்களின் உதவியை நாடி பொருத்தம் பார்த்து பெற்றோர்களாகிய நீங்கள் திருமணபந்தத்தில் இணைத்தால் உங்களது பிள்ளைகளுக்கு பேராபத்திலிருந்து காக்கலாம்.

                 சுக்கிரன் ஒருவரது சாதகத்தில் பலவீனப்பட்டு ராகுபகவானோடு சேரும்போது அவன் காம சுகம் தர மறுப்பவனாகவும் இருப்பான்.அதேநேரத்தில் அத்துடன் இணைந்த ராகுவின் திசைகாலத்தில் இதற்கு மாறாக செயல்படுவான்.

                    ஒருவன் காம உணர்வே அற்றவனாக இருந்தாலும் அவனோடு இணைசேரும் வாழ்க்கை துணைக்கு பிரச்சினையே தரும்.

                      இதுபோன்ற பல விவரங்களை பலரது சாதகங்களில் ஆராய்ச்சியுணர்வில் ஆராய்ந்து பார்த்தபோது அவை உண்மையாக இருக்கத்தான் அறிவியல் பயின்ற எனக்கு ஜோதிட துறைமீதே முழுநம்பிக்கை வந்தது.சோதிடம் என்பது உன்னனத தெய்வீக கலை என்றாலும் அதற்கு செலவிடும் நேரமும் அதிகம் என்பதால் அத்துறைகொண்டு பொருளீட்டலும் அவசியமாகிறது.

         வான்புகழ் கொண்ட வள்ளுவர்கூட
"பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை
அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை"என்றார்.

நன்றி!

(தங்களது சாதகங்களை இதுபோல பல வகையில் ஆராய்ந்து துல்லிய பலனை #போன்வழியாகவே பெற பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸா செய்து கட்டண விபரங்களை வாட்ஸ்அப்பில் பெறவும்)

1-சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்து எழுதுதல்.

தொடர்புக்கு

                          செல்
                 97 151 89 647
              740 257 08 99

                    வாட்ஸ்அப்:
                  97 151 89 647

                          
By
சோதிடர் ரவிச்சந்திரன்
        M.Sc ,MA ,BEd,
  சோதிட ஆராய்ச்சியாளர்,
Astro online  consulting centre,
Karambakkudi,pudukkottai District.

         My email
   masterastroravi@gmail. com
         astroravichandransevvai@gmail.com

My blog spot
  AstroRavichandransevvai.blogspot.com

....................................   ..................................

சாதக கட்டத்தில் எவை பலமான கிரகம் ? எவை பலவீனமான கிரகம் ? எப்படி செரிந்துகொள்வது ?

சாதக கட்டத்தில் எவை பலமான கிரகம்? எவை பலவீனமான கிரகம்? எப்படி தெரிந்து கொள்வது ?

**************** கிரகங்கள்படுத்தும்பாடு-(

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

           ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் பலம் பெற்றுள்ளது என எவ்வாறு தெரிந்து கொள்வது என்றால்
அக்கிரகம் சுபராக இருப்பின் (குரு,சுக்கிரன்,பாவியோடு சேராத புதன்,வளர்பிறைச்சந்திரன்) அவை ஆட்சி,உச்சம்,நட்பு பெற்று சுபர் நட்சத்திர சாரம் பெற்று கோணங்களிலோ அல்லது மறைவிடங்களிலோ (3,6,8,12)சூட்சும வலுப்பெற்று பாவியோடு (சனி,ராகு,கேது ,செவ்வாய்) சேராமல் சுபர் பார்வை பெற்று இருக்க வேண்டும்.மேலும் அவை லக்கனத்திற்கு பாவராகவோ, பாதகாதிபதியாகவோ,மாரகாதிபதியாகவோ இருக்க கூடாது.

              அதே நேரத்தில் அவை பாவியாக இருப்பினும்
அக்கிரகம் கேந்திரங்களில் இருந்து சுப சாரம் ,சுபர் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றிருந்து  அவை லக்கனத்திற்கு
பாவராகவோ,மாரகராகவோ,மற்றும் பாதகாதிபதியாக அல்லாமல் இருக்கவேண்டும்.

            மேற்கண்ட அமைப்பை பெற்ற கிரகம் பலம் பெற்ற கிரகங்கள் ஆகும். அதன் தசைகளில் பலவித நன்மைகளை அந்த
காரகத்திற்கு ஏற்றால் போல் கொடுக்கும்.

பலவீனமான கிரகம்

              ஒரு கிரகத்தின் வலுவற்ற தன்மை       கண்டறிய
அக்கிரகம் சுப கிரகமாக இருப்பினும்
அவை நீசம் பெற்று இருந்தாலோ(விதிவிலக்கு:நீசம் பெற்ற கிரக வீட்டின் அதிபதி ஆட்சி, உச்சம் மற்றும் சந்திர கேந்திரம் பெற்றால் நீசத்தன்மை பங்கப்பட்டு நீசபங்க ராஜயோகம் தரும்),
அக்கிரகம் உச்சம்பெற்று வக்கிரம் பெற்றிருந்தாலோ
(உச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற கூடாது அவ்வாறு இருப்பின் அக்கிரகம் நீச தன்மை பெறும்) ,
அஸ்தமனம்,பகை,வக்ரம் பெற்று இருந்தாலும்,மறைவிடங்களில் (6,8,12)இருந்தாலும் மற்றும் அவை பாவர் சாரம் ,சேர்க்கை மற்றும் பார்வை பெற்று இருந்தாலும் அவை பலகீனமான கிரகம் .மேலும் அவை லக்கனத்திற்கு பாதகாதிபதி,மாரகாதிபதியாக இருப்பின் அக்கிரகம் அதன் தசா புத்திகளில் பலவித இன்னல்களை தரும்.

            மேற்கண்ட அடிப்படையில் ஒரு கிரகம் பலமா,பலமற்றதா என தெரிந்து கொள்ள முடியும்.பலமான கிரகத்தின் தசை நல்ல பலன்களையும்,பலமற்ற கிரகத்தின் தசை தீய பலன்களையும் தருகிறது.

                எனவே ஒரு கிரகம் சுபராக இருந்தும் அவற்றின் தசை தீமை செய்வதற்கும்,
ஒரு கிரகம் பாவியாக இருப்பினும் அவர் தசைகளில் நல்லது நடப்பதற்கும் மேற்கண்ட விதி முறைகளே காரணம் ஆகும்.

               எனவே ராகு ,சனி ..போன்ற கிரகங்கள் பாவியாக இருந்தாலும் இவர்களது தசைகளில் அன்றாட சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டபட்டவர்கள் கூட கோடீஸ்வராகவோ,பெரிய அரசியல்வதியாகவோ,தொழில்நிபுணராகவோ மாறி இருப்பதை பார்த்திருக்கிறேன் மற்றும் படித்திருக்கிறேன்.

            இதேபோல் குரு,சுக்கிரன்...போன்ற கிரகங்கள் சுபராக இருந்தாலும் இவர்களது தசையில் எவ்வளவு வசதியுடையவராக இருந்தாலும் ,புகழுடையவராக இருந்தாலும் எல்லாவற்றையும் இழந்துவிட்டு அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் கடன்காரர்களாக மாறியிருக்கிறார்கள்.

எனவே ஒரு கிரகம் நல்லது செய்யுமா அல்லது கெடுதலை செய்யுமா என்பது அது அவர்களுடைய கட்ட ஸ்தானத்தை பொருத்து அவை பலமா/பலவீனமா என அறிந்துதான் கண்டறிய முடியும்.

எனவே நவகிரகங்களில்
"எல்லா கிரகங்களும் நல்ல கிரகங்களே
அவர் நல்லவர் ஆவதும்,தீயவர் ஆவதும் கட்ட இருப்பினிலே"
என கூறிக்கொண்டு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.


அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
முதுநிலை ஆசிரியர்
சோதிட ஆராய்சியாளர்
ஓம்சக்தி சோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
செல் : 97 151 89 647
Cell : 740 257 08 99
Whats up no; 97 151 89 647
(இருந்த இடத்திலிருந்து போன் வழியாக சாதகம் பார்க்க விரும்புவோர் மேற்கண்ட செல் எண்ணிற்கு தொடர்புகொள்க.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறவும்)

சுக்கிரன் பகவான் தரும் யோக பலன்கள் - ( 2 )

#சுக்கிரபகவான் தரும் யோகபலன்கள் -(2)
#கிரகங்கள் படுத்தும் பாடு- ( 116 )
செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம் ஆசியோடு....

சுக்கிரபகவானால் தரப்படும் காரக பலன்களை சோதிடம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் சென்ற பதிவில் அழகாக விளக்கியிருந்தேன்.இப்பதிவிலும்  பகவான் அருளோடு மேலும் பல தகவல்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.தொடர்ந்து நல் ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சுக்கிரபகவான் ஆனவர் #ரிஷபம் மற்றும் #துலாம் ஆகிய இரு வீடுகளை ஆட்சி வீடாக கொண்டவர்.எந்த ஒரு ராசியையும் லக்கனமாக  கொண்டவர்களுக்கூட சுக்கிரபகவானின் ஒரு வீடு சர ராசியாகவும் மற்றொன்று ஸ்திர ராசியாகவும் வருமேயொழிய உபய ராசியாக வருவதற்கு வாய்ப்பில்லை.

.எனவே ஒரு ஸ்தானம் மட்டுமே கேந்திரமாக வரும் வாய்ப்பு உள்ளதால் சுக்கிரபகவானுக்கு #கேந்திராதிபத்திய தோஷம் வருவதற்குரிய சாத்தியகூறு இல்லை.

சுக்கிரபகவான் சுப பலனை தரவேண்டுமாயின் அக்கிரகமானது அரவுகள் மற்றும் அசயர்களான ஸ்ரீராகு மற்றும் ஸ்ரீகேது பகவான்களோடு தனது வலிமையிழக்க கூடாது.தனது எதிரியான ஸ்ரீசூரியபகவானோடு இணைந்து அஸ்தமனம் அடையக்கூடாது.

மேலும் தனது எதிர் அணியான ஸ்ரீகுருபகவான் அணியோடு இணைவதும் மற்றும் பார்வை பெறுவதும் கூடாது.(.குரு அணி என்பது குரு,சந்திரன்,செவ்வாய் மற்றும் கேது ).இவை மட்டுமன்றி லக்கன பாவிகளோடு இணையக்கூடாது.

சுக்கிரன் உடன் சாயகிரகங்களான ராகு,கேது , காமகாரகன் செவ்வாய் மற்றும் மனதுக்காரன் சந்திரன் இணைவு மற்றும் பார்வையானது உடலியல் கவர்ச்சியால் ஒருவரை தன்னைவிட தரம் தாழ்ந்த இடத்தில் காதல் திருமணம் நடைபெற செய்ய வைக்கும்.

அதுவும் இதுபோன்ற அமைப்பு ஆடவருக்கோ/பெண்டிருக்கோ இருந்து இளவயதில் அதாவது பள்ளிபருவத்தில் சுக்கிர திசை நடைபெற்றால் அவர்களது குணத்தை கெடுத்து வீட்டைவிட்டு,தன்னை கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோர்களையும் மறந்து தவறான முடிவு எடுக்க வைக்கிறது.எனவேதான் பள்ளிபருவத்தில் சுக்கிர திசை வரக்கூடாது என பொதுவாக சொல்லிவிடுவார்கள்.மேலும் "குட்டிசுக்கிரன் குடியைக்கெடுக்கும் "என ரிதமாக கூறுவதன் உள்ளர்த்தமும் இவைதான்.

அதனால் பெற்றோர்களாகிய அனைவரும் தமது பிள்ளைகளுக்கு சுக்கிரதிசை வந்தால் இதுபோல் நடந்துவிடுமோ! என பயப்பட தேவையில்லை.

ஒருவருக்கு சுக்கிர திசை நடைபெறும்போது நான் கூறிய மேற்கொண்ட அமைப்பில் பாவிகளோடும் மற்றும் எதிர்தன்மையுடைய கிரகங்களோடு சுக்கிரன் பலவீனப்பட்டு அதன் திசை நடந்தால் மட்டுமேதான் இதுபோன்று நடைபெறும் வாய்ப்புகள் உண்டு.

இல்லையெனில் ரிஷபம் மற்றும் துலாத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபத்துவம் பெறாமல் இருப்பின் அக்கிரகங்களது திசையிலும் இதுபோன்ற பலன்கள் நடைபெறலாம்.

சோதிடர்களாகிய நாங்கள் கூறும் பொதுப்பலனை அப்படியே எடுத்துக்கொள்ளாதீர்கள்.இதில் சில விதிவிலக்குகளும் உண்டு..நான் பதிவில் கூறக்கூடிய அமைப்புகள் தங்களது பிள்ளைகளுக்கு இருப்பின் சோதிடரின் ஆலோசனையோடுதான் முடிவு எடுக்கவேண்டும்.இவ்வாறு நடைபெறும் கிரக அமைப்புகள் இருக்கின்றது நடைபெறும் திசையும் உடன்பாடாக இருப்பின் சற்று முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ளலாம்.

மேலும் ஒருவரது சாதகத்தில் சுக்கிரபகவனோடு காமகிரகம் செவ்வாய் பகவான் சேரும்போது அவர்கள் காமவயப்பட வாய்ப்புகள் உண்டு.ஆனால் சுபர் பார்வை பெற்றாலோ அல்லது மனதுக்காரகன் சந்திரபகவான் பலப்பட்டிருந்தாலோ இதுபோன்ற எண்ணங்கள் தோன்றினாலும் தன்னை அடக்கி ஆளும் ஆளுமை தன்மையை ஒருவன் பெற்றுவிடுகிறான்.

ஆனால் அதேநேரத்தில் சுபர் பார்வையின்றி மனதுக்காரகன் சந்திரபகவானும்  கெட்டுவிடும்போதுதான் ஒரு சிலர் காம எண்ண மிகுதியால் தனக்கு உடன்படாத கல்லூரி பெண்ணை கொலைசெய்யும அளவிற்கு சென்றுவிடுகிறான்.

இன்றைய காலகட்டத்தில் சுவாதி கொலை வழக்குகளிலிருந்து தொடர்ந்து இதுபோன்ற நிறைய கொலை வழக்குகளை செய்திதாள்களிலிருந்து பார்கின்றபோது ஒரு ஆடவரினை உண்மையான காதல் தனது காதலி தனது காதலை மறுத்தாலும் அவளை வாழவைத்துதான் பார்க்கும். அன்பு எப்பொழுதும் பிறர்மீது வன்முறை செய்யதூண்டாது.கொலை செய்யதூண்டாது.வலுக்கட்டாயமாக பறிக்க தூண்டது.உண்மையான அன்பு காலம் மற்றும் காதல் கனியும்வரை காத்திருக்கும்.உண்மையான அன்பு தனக்கு அவள் கிடைக்காவிட்டாலும் கூட தூரத்தில் அவள் மகிழ்வோடும்,நிறைவோடும் வாழ்வதை எண்ணி உளம்பூரிக்கும்.

காம மிகுதியான உடலியல் கவர்ச்சிகளால் வரும் காதல்தான் ஒருவனை கொலை செய்யும் அளவிற்கு வெறி கொள்ள செய்கிறது.

இதற்கு சமூக அமைப்புமுறை,ஊடகங்கள் மற்றும் கல்விமுறை போன்ற பல காரணங்கள் இருந்தாலும் அவனது ஜெனன சாதகத்தில் உள்ள கிரகநிலை அமைப்புகளும் ஒரு காரணமாக அமைகிறது.

இதுபோன்ற அமைப்புகள் தங்களது பிள்ளைகளுக்கு உண்டு என்பதை தக்க சோதிடரின் உதவியோடு முன்னரே தெரிந்துகொண்டால் பெற்றோர்கள் சில முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பிரச்சினையின் ஆழத்தை குறைத்து கொள்ளலாம்.

பதிவின் கருத்துக்கு வருகிறேன்.எனவே சுக்கிரன்+செவ்வாய் மற்றும் சுக்கிரன்+சந்திரன் சேர்க்கை நல்லதல்ல.
மேலும் சுக்கிரபகவான் திரிகோண ஸ்தானமான  ஒன்று,ஐந்து மற்றும் ஒன்பது மற்றும் மூன்று ,ஏழு மற்றும் பதினொன்றாம் இடத்துடன் தொடர்பு பெறும்போது ஒருவர் தனது இயல்பைவிட அதிக காம உணர்வு கொண்டவராக இருப்பார்.

இதுபோன்ற அமைப்புகள் ஒருவருக்கு இருப்பின் தெய்வவழிபாடு,தியானம் மற்றும் யோக மூலமாக மனதை அலைபாய விடாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு சுக்கிரபகவான் ஐந்து மற்றும் எட்டாம் இட தொடர்பு கொண்டால் சாதகர் பெண்களால் அசிங்கம் மற்றும் அவமானங்களை சந்திக்க நேரிடும்.இதிலும் சுபர் பார்வை மற்றும் இணைவு இவற்றை பொறுத்து பலன் மாறுபடலாம்.இதுபோன்ற அமைப்பு தாங்களுக்கோ/பிள்ளைகளுக்கோ இருக்கிறதென்றால் அவை நடைபெறாமல் இருப்பதற்கான விதிவிலக்குகள் உண்டா ? என தக்க சோதிடரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யவேண்டும்.வாய்ப்பு உண்டு எனில் சில நேரங்களில் செய்யாத தவறுக்கு தண்டனை மற்றும் கெட்டபெயர் வரும்.முன்னரே தெரிந்துகொண்டு பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளலாம்.

இதேபோல் சுக்கிரபகவான் எட்டு மற்றும் பணிரெண்டாமிட தொடர்பானது பெண்களால் ஒருவர் வலி,வேதனை,பிரச்சினை மற்றும் டென்ஷனை அனுபவிக்க தோன்றும்.

இதுபோன்ற பாதிப்புகள் தமக்கு வரும் வாய்ப்புகள் என மதியால் அறிந்து கொண்டால் விதியை மதியால் பரம்பொருளின் அருள் கொண்டு வெல்லலாம்.

தொடர்ந்த அடுத்த பதிவில் மேலும் பல தகவல்களை வெளிப்படையாக எல்லோறும் புரிந்துகொள்ளும் வகையில் பார்ப்போம்.படித்து பயன்பெறுங்கள்.பகிர்ந்து மற்றவரும் பயன்பட உதவுங்கள்.நன்றி!.

(தங்களுக்குளுடைய குடும்ப அங்கத்தினரின் #சாதகத்தினை முழுமையாக ஆராய்ந்து அதன் நிறை மற்றும் குறைகளை கண்டறிந்து குறைபோக்கும் பரிகார வழிபாடுகளை தெரிந்துகொள்ளவும்,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்து சாதகம் எழுதுதல் போன்ற சேவைகளை #போன்வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.கட்டணம் உண்டு)

தொடர்புக்கு -
செல் ; 97 151 89 647
             740 257 08 99
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது #வாட்ஸ்அப்எண் ; 97 151 89 647 க்கு மெஸ்ஸே செய்யவும்.

அன்புடன்
AstroRavichandran
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.

My web.click hear

WWW

AstroRavichandransevvai.blogspot.com