Monday, 17 August 2026

கேது பகவான் என்ன தருவார் ?

 கேது பகவான் என்ன தருவார் ?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


  கேது பகவான் தன்னோடு இணைந்த கிரகத்தின் பலனை ராகு பகவான் அளவிற்கு கெடுக்க மாட்டார் 


கேது பகவான் ஞான காரகன் என்றும், செம் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.

கேது பகவான் விருச்சகம் ,சிம்மம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் நின்று அதன் தசை நடத்தும் பொழுது நல்ல பலனை  ஜாதகருக்கு அள்ளிக் கொடுப்பார்.


கேது பகவான் பாவ கிரகமான அதாவது முழு இருள்  கிரகமான சனி பகவானுடன் இணைந்த நிலையில் சூட்சும பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறார். கேது பகவானுடன்  இணைந்த சனி பகவான்  மிக அதிக அளவில்  கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுத்து விடுவது கிடையாது.


இதேபோல கேது பகவான் முக்கால் பாவ கிரகமான செவ்வாய் பகவானுடன் இணைந்த நிலையிலும் சூட்சும வலுவை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறார்.


அதே நேரத்தில் சனி, செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்கள் கேதுடன் இணைந்த நிலையில் அல்லது சனி மற்றும் கேது இணைந்து செவ்வாய் பகவான் பார்வை செய்த நிலையில் அல்லது செவ்வாய்க் கேது இணைந்து சனி பகவான் பார்வை செய்த நிலையிலும் கேது பகவான் ஜாதகருக்கு சூட்சும வலுவை தருவதில்லை.


சூரிய பகவான் உடன் கேது பகவான் இணைந்த நிலையில் ஆன்மிக நிலையில் உயரிய  நிலையினைஅடைய செய்கிறது.


குரு பகவானுடன் கேது பகவான் இணைந்த நிலையில் கேள யோகம் என்னும் கோடீஸ்வர யோகத்தை தருகிறது.


சந்திரன் உடன் கேது பகவான் இணைந்த நிலையில் ஜாதகருக்கு ஞான நிலையை அளிக்கப்படுகிறது.


புதன் பகவானுடன் கேது இணைந்த நிலையில் வித்தையில் சாதுர்யத்தை அள்ளிக் கொடுக்கிறது.


சந்திரன் உடன் கேது பகவான் இணைந்த நிலையில் சந்திரன் வளர்பிறை சந்திரன் உடனா அல்லது தேய்பிறை சந்திரன்  உடனா? என்பதை பொறுத்து சந்திரன் மற்றும் கேது பகவான் இணைவின் பலன் அமைகிறது.


வளர்பிறை சந்திரன் உடன் கேது பகவான் இணைந்த நிலையில் நல்ல பலனை ஜாதகருக்கு அளிக்கிறது

ஜாதகரை  ஆன்மீக எண்ணம் உடையவராக திகழ்வார். தேய்பிறை சந்திரன் உடன் கேது இணைவு அப்படி ஒன்றும் பெரிய நல்ல பலன்களை தந்து விடுவதில்லை.


கேது பகவான் லக்னத்தில் அமர்ந்து உள்ள நிலையில் ஜாதகரை தாழ்வு மனப்பான்மை உடையவராக மாற்றி விடுகிறது.திருமண தடையை உடையவராக ,கால தாமத திருமணம் செய்பவராக ஜாதகரை மாற்றிவிடுகிறது.


இரண்டாம் இடத்தில் கேது பகவான் அமரும் பொழுது கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவராக வாக்கு வன்மை உடையவராகவும் ஜாதகரை மாற்றி விடுகிறது.கால தாமத திருமணம் செய்பவராகவும் மாற்றி விடுகிறது.


மூன்றாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் சகோதர தோஷம் உடையவராக 

இருப்பார்.


நான்காம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் நான்காம் அதிபதி பலவீனம் அடைந்த நிலையில் சொந்த வீடு அமையாமல் வாடகை வீட்டில் கடைசி வரை வசிக்கும் நிலை உண்டாகும். தன் சுகம், தாய் சுகம்,  வாகன சுகம் போன்றவற்றில் பாதிப்பு உண்டாகும்.


ஐந்தாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் ஆன்மீகம் நாட்டம் உடையவராக கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணக்கூடிய யோகம்  உண்டாகும்.

ஐந்தாம் இடத்தில் உள்ள கேது பகவானை குரு பகவான் பார்வை செய்த நிலையில் ஆன்மீகத்தில் உயரிய எல்லையை அடையக்கூடிய யோகம் உண்டாகும்.


   ஆறாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் எதிரியை வெல்லக்கூடிய தன்மை உண்டாகும்.


ஏழாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் கால தாமத திருமணத்தை ஜாதகருக்கு தருகிறார்.இது ஒரு சர்ப்ப தோஷம் ஆகும்.


எட்டாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் களத்திர தோஷத்தை ஜாதகருக்கு தருகிறார்.இது கால தாமத திருமணத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது.


ஒன்பதாம் இடத்தில் கேது பகவான் தானம் தர்ம குணம் உடையவராக திகழ்வார்.தந்தை ஸ்தானம் மற்றும் அதன் அதிபதி மற்றும் காரக கிரகம் சூரியன் ஆகிய கிரகங்கள் உடைய நிலையை பொறுத்து தந்தையின் நிலையானது அமைகிறது .


பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்ற நிலையில் பத்தாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்தால் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேது பகவான் நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


12ஆம் இடத்தில் அமர்ந்துள்ள கேது பகவான் ஜாதகருக்கு முக்கிய நிலையை கொடுக்கிறது.


கேது பகவான் தரும் தடையில் இருந்து விடுபட ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளகஸ்தி சென்று வழிபாடு செய்ய வேண்டும்.கீழப்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்து வர வேண்டும்.


கேது பகவானும் ராகு பகவானுக்கு போல சொந்த வீடு கிடையாது இருக்கின்ற வீட்டை சொந்த வீடாக கருத வேண்டும் எல்லா கிரகங்களும் முன் நோக்கி நகர கேது பகவானும் பின்னோக்கி நகரக்கூடிய கிரகம் ஆகும்.எனவே இவற்றிற்கும் வக்ர கதி கிடையாது.


இவற்றிற்க்கும் ஸ்தான பலம் ,திருக் பலம்,திக் பலம் போன்ற எந்த ஷட் பலன்களையும் பெற்றிருப்பது கிடையாது.இவற்றிற்கு அஸ்தங்கம் தோஷம் கிடையாது.ஒரை கிடையாது.வாரத்தின் ஏழு நாட்களில் இடம் கிடையாது. ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் எமகண்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


அஸ்வினி ,மகம்  மற்றும் மூலம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக கேது பகவான் விளக்குகிறார் .அதன் தசைக்காலம் 7 ஆண்டுகள் ஆகும்.


நன்றி.


For online appointment 

Cell & WhatsApp & Gpay no 


 097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ராகு பகவான் ஜாதகத்தில் எப்படி பலன் தருகிறார்?

 ராகு பகவான் ஜாதகத்தில் எப்படி பலன் தருகிறார் ?




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு ஜாதகத்தில் ராகு பகவான் தரும் பலன்கள் பற்றி ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது தனித்த ராகு பகவான் ஒரு மாதிரியான பலனை தருகிறார்.அதே ராகு பகவான் மற்ற கிரகங்கள் உடன் சேரும் போது வேறு மாதிரியான பலன்களை தருகிறார்.


  ராகு பகவான் பருப்பொருள் அற்ற நிழல் கிரகம் ஆகும். ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எனவே இருக்கின்ற வீட்டையே சொந்த வீடாக கருத வேண்டும் பலன்  எடுக்கும் போது ராகு உடன் சேர்ந்த கிரகங்கள் மற்றும் ராகு பகவானை பார்வை செய்த கிரகங்கள் இதன் அடிப்படையில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


ராகு பகவான் தனித்த நிலையில் அதன் இயல்பான பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.ராகு பகவான் ஆனவர் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில்  கடுமையான கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


ராகு பகவான் இயற்கை சுப கிரகமான குரு பகவான் ,வளர்பிறை சந்திரன், தனித்த புதன்  மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுடைய பார்வையை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அதன் தசை ஜாதகருக்கு நல்ல பலனை அள்ளிக் கொடுக்கிறது.


  குரு பகவான் உடன் ராகு பகவான் சேரும்   பொழுது ராகு பகவான் ஆனவர் குருவின் இணைவால்  சுப தன்மையை அடைவார்.ஆனால் அதே நேரத்தில் குரு பகவான் ஆனவர் கடுமையான பாவ தன்மையை அடைகிறார்.இங்கு குரு தசை ஆனது கடுமையான கஷ்டங்களை அதன் தசையில்  தருகிறது.அதே நேரத்தில்  ராகு பகவான் தசை நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


ராகு பகவான் ஆனவர் உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 ஆம் இடங்களில் நின்று இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்வையை பெற்ற நிலையில் கடுமையான யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.

 ராகு பகவான் மேசம் ,ரிஷபம் ,மகரம், கடகம் மற்றும் கன்னி  ஆகிய இடங்களில் நின்று திசை நடத்தினால் ஜாதகருக்கு நல்ல யோக பலனை தருகிறது.


ராகு பகவான் லக்னத்தில் அமர்ந்து சர்ப்ப தோஷம் என்ன நாகதோஷத்தை சாதகருக்கு கொடுத்து திருமண தடையை உண்டாக்குகிறார். அதே போல இரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமரும்பொழுது களத்திர தோஷத்தை ஜாதகருக்கு தருகிறார்.

மூன்றாம் இடத்தில் ராகு பகவான் அவரும் பொழுது சகோதர தோஷத்தை தருகிறார்.


      ஐந்தாம் இடத்தில் அமரும் பொழுது புத்திர தோஷத்தை தருகிறார் . ஆறாம் இடத்தில் ராகு பகவான் எதிரியை வெல்வார்..ஏழாம் இடத்தில் அமரும் பொழுது திருமணத் தடையினை தருகிறார். எட்டாம் இடத்தில் ராகு பகவான் களத்திர தடையை தருகிறார். ஒன்பதாம் இடத்தில் அமரும் பொழுது தந்தைக்கான தோஷத்தை தருகிறார்.


      பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது அமர வேண்டும் என்ற விதியில் பத்தாம் இடத்தில் ராகு பகவான் அமர்வது நல்லது. 11ஆம் இடங்களில் ராகு பகவான் அமர்ந்து சுப கிரக பாதையில் பெரும்பொழுது புகுந்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறார் இதே போல 12ஆம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து குருவின் பார்வையை பெற்ற நிலையில் ராகு தசை வரும்பொழுது  வெளிநாடு செல்லும் யோகம் உள்ள ஜாதகம் ஆகும்.


  ராகு பகவான் குரு அணியை சேர்ந்த மேஷம், விருச்சிகம் ,தனுசு ,மீனம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கனங்களுக்கு நல்ல பலனை தர அதே அணியில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல பலனை தருகிறது.இதேபோல சுக்கிரன் அணியை சேர்ந்த ரிஷபம், துலாம், மகரம் , கும்பம் மிதுனம் மற்றும் கன்னி ஆகிய ஆறு லக்கனங்களுக்கு நல்ல பலனை தர அதே அணியில் இடம் பெற வேண்டும்.


ராகு  பகவானுக்கு சொந்த வீடு கிடையாது என்பது மட்டுமல்லாமல் கீழே  குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒன்றையும் அவை பெற்றிருக்கவில்லை.

உச்சம் ,ஆட்சி, மூல திரிகோணம் 

போன்ற ஸ்தான வலிமை கிடையாது., பார்வை பலமும் கிடையாது.திக் பலம் கிடையாது.


   எல்லா கிரகங்களும் முன்னோக்கி நகரும் பொழுது ராகு பகவான் மட்டும் பின்னோக்கி நகரும் என்பதால் இவற்றிற்கு வக்ர கதி கிடையாது. ராகு பகவான் ஒளி மிகுந்த சூரியனை நெருங்கும் பொழுது இவை சூரியனால் அஸ்தங்கம் அடைவதில்லை. மாறாக சூரியனுடைய ஒளியை மறைத்து. கிரகண தோஷத்தை உண்டுபண்ணுகிறது.


  ராகு பகவான் வாரத்தின் ஏழு நாட்களில் ராகு பகவானுக்கு இடம் கிடையாது. ராகு பகவானுக்கு என்று தனி ஓரை கிடையாது.

ஒரு நாளைக்கு 1.30 மணி நேரம் அளவில் ராகு காலம் என்று மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.


ராகு பகவான் தரும் தோஷங்கள் போக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரையூர், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம், திருபாம்பூரம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று வழிபாடு செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட இடங்களில் ஏதாவது ஒரு ஸ்தலத்தில் வெள்ளியில் பாம்பு படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து பரிகாரம் செய்ய வேண்டும்.


நன்றி


For online appointment 

Cell & WhatsApp & Gpay 

  097151 89647 


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம் )




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Friday, 14 August 2026

குரு பகவான் தரும் திருமண யோகம்.

 குரு பகவான் தரும் திருமண யோகம்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


    "திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் ''என்பது ஆன்றோர் மொழி.


  திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதும் சான்றோருடைய வாக்கு.


 "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்".


வள்ளுவப் பெருந்தகை 

 "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்கிறார்.


 ஒரு காலகட்டத்தில் ஒரு ஆடவர்க்கு பெண் கொடுப்பதற்கு வயல், வைக்கப்போர் அளவு ,அச்சுகள் எண்ணிக்கை ( அதாவது எத்தனை ஆடு மற்றும் மாடுகள் கட்டி உள்ளது) இதுபோன்ற பல விவரங்களை பார்த்து ஒரு பெண்ணை அந்த வீட்டுக்கு கொடுப்பதற்கு முடிவு செய்தார்கள் ஆனால் இன்று அது போன்று இருந்தால் கட்டாயம் பெண்ணை அந்த வீட்டுக்கு கொடுக்க மாட்டார்கள். மாப்பிள்ளை உடன் பிறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கூட இந்த காலகட்டத்தில் பெண் கிடைப்பது பெரிய கஷ்டமாகிவிடும். 


இன்றைய காலகட்டத்தில் மாப்பிள்ளை நிறைய படித்து ஐடி கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் வீட்டை விட்டு நகர்புறத்தில் தன் மகளை அழைத்துக் கொண்டு தனி குடித்தனம் நடத்த வேண்டும் இதுபோன்ற எண்ணத்தோடு வரக்கூடிய பெற்றோர்களே இன்று அதிகம் ஆகிவிட்டது. 


இது போன்ற சூழலில் திருமணம் நடக்கும் பொழுது தான் அவர்களுக்கு இடையே ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை அல்லது புரிந்து கொள்வதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சொல்லி ஆறுதல் பெறுவதற்கும் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கும் அருகில் வயது முதிர்ந்த பாட்டிகள் ,பாட்டன்கள் , சித்தப்பா, பெரியப்பா மற்றும் அத்தை, மாமன் வகைகள் போன்ற உறவுகள் அருகில் இல்லாததால் சிறிய விஷயங்கள் கூட பெரிய பிரச்சினையாகி அவர்களுக்குள் ஒரு பெரிய பிளவை உண்டாக்கி விவாகரத்து வரை சென்று விடுகிறார்கள்.


 இது போன்ற காலகட்டத்திலும் ஒரு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டுமென்றால் உங்களுடைய ஜாதகத்தில் குரு பகவானுடைய பங்கு அதிகமாக தேவைப்படுகிறது.


 நல்ல மணவாழ்க்கை அமைவதற்கு குரு பகவானுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. குரு பகவான் எங்கு இருந்தாலும் அல்லது எந்த இடத்தை பார்த்தாலும் அந்த இடத்தையும் அவை சார்ந்த பலனையும் உயர்த்திக் கொடுப்பது குரு பகவானுடைய சாலச் சிறந்த படியாக பணி ஆகும்.


ஜாதகத்தில் திருமண ஸ்தானம் என்பது லக்னம் என்ற ஒன்றாம் இடம், குடும்பஸ்தான என்ற இரண்டாம் இடம், களத்திர ஸ்தானம் என்ற ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கப்படும் எட்டாமிடம் அதன் அதிபதிகள் ஆகியவற்றை பொறுத்து திருமண வாழ்க்கை அமைகிறது. ஏழாமிடத்திற்கு காரக கிரகமாக அதாவது தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் திகழ்கிறார்.


மேலே குறிப்பிட்ட இந்த இடங்களையும் அல்லது அதன் அதிபதிகளையும் குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது நிச்சயமாக அவருடைய மண வாழ்க்கை மிகச்சிறந்த மண வாழ்க்கையாக அமைகிறது. அவருடைய இல்லறத்துணை சிறப்பாக அமைகிறது.


அதிலும் குறிப்பாக களத்திர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஏழாம் இடத்தையும் அதன் அதிபதியையும் குரு பகவான் பார்வை செய்த நிலையில் அவருடைய இல்லற வாழ்க்கை நல்ல இல்லறமாக அமைகிறது. 


குரு பகவான் எவர் ஒருவர் ஜாதகத்தில் மேலே குறிப்பிட்ட திருமண ஸ்தானமான ஒன்று, இரண்டு, ஏழு மற்றும் எட்டு ஆகிய இட ங்களையும் அல்லது அதன் அதிபதிகளோடும் எந்த அளவுக்கு பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு உள்ளதோ அந்த அளவிற்கு அவருடைய வாழ்க்கை தரம் மிகவும் சிறப்பாக அமைகிறது.


குரு பகவான் எந்த விதத்திலும் பங்கம் அடையாமல் இருக்க வேண்டும் .அதாவது குரு பகவான் உடன் சனி அல்லது ராகு பகவான் இணைந்த நிலையில் அல்லது குரு பகவானை சனி பகவான் பார்வை செய்த நிலையில் அந்த குரு பகவான் பலவீனமான குருவாக கருதப்படுகிறது.இந்த நிலையில் குரு பகவானின் பார்வை முழுமையாக நல்ல பார்வையாக அமையாது.இவ்வித நிலையில் குரு பகவான் பார்வை கோடி நன்மையை தருவது கிடையாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


இது ஒன்று போன்று பங்கமடைந்த குரு பகவானை பெற்ற ஜாதகர்கள் குரு பகவானுக்கு சிறப்பு பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதாவது திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானை வழிபடுதல் மூலமும், திட்டை வசிஷ்டேஸ்வரர் வழிபடுவதன் மூலமாகவும், கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலம் சென்று வியாழக்கிழமை வழிபாடு செய்வது மூலமாகவும் பலமடைய செய்யலாம்.


   குருபகவானுக்கு வியாழன் தோறும் கொண்டைக்கடலை அவித்து வைத்து பொன்னிற வஸ்திரத்தை சாத்தி வழிபாடு செய்வது உகந்தது. இன்னும் குருவிணுடைய வாகனமான யானைக்கு ஏதாவது பழம் ,கரும்பு வாங்கிக் கொடுத்து உணண செய்யலாம்.குருவிற்கு உரிய காயத்ரி மந்திரம் தினந்தோறும் காலை உச்சரித்து வருவது நன்மை பயக்கும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 

 097151 89647


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

உங்களுக்கு எப்படிப்பட்ட கணவர் அல்லது மனைவி அமைவார்?

 உங்களுக்கு எப்படிப்பட்ட கணவர் அல்லது மனைவி அமைவார்? 




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


  கண்ணின் கடை பார்வை 

காதலியார் காட்டி விட்டால் 

 மண்ணில் குமரர்க்கு 

மாமலையும் ஓர் கடுகாம்.!


"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது"- குறள் 


      ஒருவருடைய ஜாதகத்தில் தனக்கு வரக்கூடிய கணவன் அல்லது மனைவி எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை  அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லா இளைஞர் /இளைஞிகளுக்கும் நிச்சயமாக உண்டு.


   இன்றைய இளைஞர்கள்  கூடி கசு குசு என்று பேசிய காலம் போய் இன்று எல்லோருக்கும் தெரியும் வகையிலும் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை பற்றிய கனவுகளோடு கற்பனை செய்து பார்ப்பது என்பது இன்று 

எல்லா இளைஞர்களிடமும் வெகுவாக  உண்டு.அதிலும் பெண்களிடம் சற்று கூடுதலாகவே உள்ளது.


 திருமண வரன் கேட்கக்கூடிய இன்றைய இளைஞர்கள்/இளைஞிகள் கட்டாயம் நட்சத்திர பொருத்தங்களை மட்டுமே நம்பி திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.


 முதலில் அவர் அவர் ஜாதகத்தில் உள்ள கிரக கட்டங்கள், லக்கனாதிபதி வலிமை மற்றும் நடக்கும் தசா புக்தி போன்றவற்றை ஆராய்ந்து பார்த்து வாழ்க்கை துணை பற்றிய ஆய்வை வெளிப்படுத்த வேண்டும். 


   தனது கணவர் அல்லது மனைவி எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஏழாம் இடத்தை கொண்டு முடிவு செய்யப்படுகிறது.


   ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடம் என்பது  தாம்பத்திய வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள உதவும் ஸ்தானமாகும்.ஏழாம் இடத்தின் அதிபதி  ஆனவர் களத்திர ஸ்தான அதிபதி ஆகும்.ஏழாம் இடத்திற்கு காரக கிரகமாக 

சுக்கிர பகவான் வருகிறார்.


    ஒருவர் ஜாதகத்தில் திருமணம் போன்ற உயிர் காரணிகளுக்கு இராசி மற்றும் லக்கனம் ஆகிய இரண்டிற்கும் பொதுவாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


   திருமண வாழ்வை பற்றி அலசி ஆராய்ந்து பார்ப்பதற்கு லக்கனம் என்ற ஒன்றாம் இடம், குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம் , களத்திர ஸ்தானம் என்ற ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்ற எட்டாம் இடம் ஆகிய ஸ்தானங்கள் அதன் அதிபதிகள் மற்றும் காரக கிரகமாக  திகழும் சுக்கிரன் பகவான் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


   தனக்கு வரக்கூடிய கணவன் அல்லது மனைவி எப்படிப்பட்டவள் என்பதை கீழ்க்கண்ட வகையில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


  1)  தனக்கு வரக்கூடிய மனைவி அழகான மனைவியா அல்லது கணவனா ?


 ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சந்திரன் நின்றாலும் அல்லது அந்த இடத்தை பார்வை செய்தாலும் ஒருவருக்கு வரக்கூடிய மனைவி அல்லது கணவன் அழகு வதனம் படைத்த மனைவியாக/கணவனாக அமைவார். மாறாக இயற்கை பாவ கிரகமான சனி பகவான்  இருந்தாலும் அல்லது பார்த்தாலும் கருத்த மனைவியாக அல்லது கணவனாக அமைவார்.


2) தனக்கு வரக்கூடிய மனைவி அல்லது கணவன் நல்ல குணம் படைத்தவனா ? 


 ஒருவர் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன் ,தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் நின்றாலும் அல்லது அந்த அதிபதிகளுடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில்  தொடர்பு கொண்டாலும் ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்வை செய்தாலும் தனக்கு வரக்கூடிய மனைவி குணவதியான அன்பான மனைவியாக ) கணவனாக அமைவாள்.


   மாறாக ஏழாம் இடத்தில் ராகு பகவான் இருந்து ஏழாம் இடத்தை சனி அல்லது செவ்வாய் பார்வை செய்தால் அல்லது இருவரும் பார்வை செய்தால் தனக்கு வரக்கூடிய மனைவி கடுமையான பஜாரியாக ரவுடி தன்மை கொண்டவளாக ஆணவம் பிடித்தவளாக இருப்பாள்.


3) திருமணம் கால தாமதமாகி கொண்டே செல்ல காரணம்.


    ஜாதகத்தில் திருமண ஸ்தானமாக ஒன்று, இரண்டு, ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற கிரகங்கள் நின்றாலும் அல்லது இந்த இடத்தை சனி , செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்த்தாலும் இந்த அதிபதியுடன் பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை  நிலையில் தொடர்பு கொண்டாலும் களத்திர காரகன் என அழைக்கக்கூடிய சுக்கிரனும் மற்றும் புத்திர காரகன் என்று சொல்லக்கூடிய குரு பகவானும் பலவீனமாகி அல்லது பாவத்துவமாக இருந்தாலும் அவர்களுக்கு திருமணம் காலதாமதம் ஆகி கொண்டே செல்லும்.


3) திருமணம் ஆகி மகிழ்ச்சியான மண வாழ்க்கை யாருக்கு?


   ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் எந்த கிரகங்களும் இல்லாமல் அல்லது ஏழாம் இடத்தை எந்த கிரகங்களும் பார்க்காமல் இருந்தாலும் அல்லது ஏழாம் இடத்து டன் பாவர் தொடர்பு இன்றி ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டாலும்,ஏழாம் அதிபதி கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகங்கள்  பார்க்கப்பட்டு தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரனும் வலுப்பெற்று இருந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமையும்.


4) நல்ல திருமண பொருத்தம் என்பது எப்படி தெரிந்து கொள்வது?


  திருமண பந்தத்தில் ஈடுபட இருக்கும் இருவருடைய ஜாதகத்தில் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடம் போன்றவற்றை வாங்கி நன்றாக கணித்து அவர்களுக்கு ஜாதக கட்டத்தில் கிரக அமைப்புகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை நன்றாக ஆராய்ந்து அவர்கள் இருவரின் ஜாதகங்களிலும் திருமண ஸ்தானங்களையும், புத்திர ஸ்தானங்களையும், அதன் அதிபதிகளையும் மற்றும் காரக கிரகங்களையும் ஆராய்ந்து பார்த்து லக்னாதிபதி வலிமை மற்றும் நடக்கக்கூடிய தசா புத்தி இவற்றுடன் ஒப்பிட்டு பார்த்து தோச பரிகாரங்களையும் கணக்கிட்டு திருமணம் செய்வதே சரியான பொருத்தமாகும். 


  மாறாக வெறும் நட்சத்திரப் பொருத்தங்களை மற்றும் வைத்துக் கொண்டு திருமணம் செய்யும்பொழுது தான் அவை கடைசியில் ஏதாவது ஒரு பிரச்சனையில் போய் முடிந்து விடுவது உண்டு எனவே ஜாதக பொருத்தம் பார்க்கும் பொழுது வெறும் நட்சத்திரப் பொருத்தங்களை மட்டும் பார்க்காமல் கட்ட அடிப்படையில் மற்றும் நடக்கும் தசா புத்தி அடிப்படையிலும் ஆராய்ந்து பார்த்து திருமண பொருத்தம் செய்ய வேண்டும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no 7402570899


(தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

விரய ஸ்தானம் தரும் பலன்கள்.

 விரய ஸ்தானம் தரும் பலன்கள்.




 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

         ஒருவர் ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடம் என்பது முடிவான அல்லது நிறைவான பாவகம் ஆகும்.இதன் மூலமாக ஒரு நாளின் நிறைவான இரவை குறிக்கும் ஸ்தானம் ஆகும்.

        இரவில் நடக்கும் காம சுகம் , படுக்கை சுகம் மற்றும் நித்திரை சுகம் ஆகியவற்றை அறிய உதவக்கூடிய ஸ்தானம் ஆகும்.

       ஒரு வாழ்வின் நிறைவான முக்தி நிலையினை அறிய உதவக்கூடிய ஸ்தானம் ஆகும்.

       ஒருவர் எப்படி செலவு செய்வார் என்பதையும் மற்றும் ஒருவருக்கு நடக்கும் விரயம் தரும் செலவுகளை அறிய உதவக்கூடிய ஸ்தானம் ஆகும்.

     ஒருவர் தனது  காம சுகத்தை எவ்வாறு பெறுகிறார் ? என்பதை அறிய உதவக்கூடிய ஸ்தானம் ஆகும்.தனது காம இன்பத்தை தனது வாழ்க்கை துணை உடனாகவா ?அல்லது வேறு ஒரு பெண் உடனாகவா ? என்பதை அறியவும் இந்த ஸ்தானம் பயன்படுகிறது.

    ஒருவர் ஜாதகத்தில் விரய ஸ்தானம் மூலமாக ஒருவரது நித்திரை சுகத்தை அறி உதவுகிறது.அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு வைத்து உள்ள ஒரு பாடல் இந்த இடத்தில் சரியாக வருவதை பார்க்கலாம்.

பாடல் இதோ

கட்டாந்தரையில்

ஒரு துண்டை விரித்தேன்

தூக்கம் கண்ணை சொக்குமே

அது அந்த காலமே!

மெத்தை விரித்தும்

சுத்த பன்னீர் தெளித்தும்

கண்ணில் தூக்கம் இல்லையே

அது இந்த காலமே!

         -----என்ற பாடலுக்கு ஏற்ப படுத்தவுடன் எவ்வித மன சிக்கல் இல்லாமல் உடனே தூக்கம் வருவதற்கு உடலில் எவ்வித மன சிக்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு ஜாதக கட்டத்தில் விய ஸ்தானம் என்று அழைக்கப்படும் பன்னிரெண்டாம் இடத்தில் சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன்,பாவி உடன் இணைந்த புதன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளாது இருக்க இயற்கை சுப கிரகங்கள் ஆன குருபகவான், தேய்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள சரியான நித்திரை சுகம் அதாவது படுக்கை சுகம் ஜாதகருக்கு கிடைக்கும்.அதேபோல அடுத்தவருக்கு தானம் செய்ய கூடிய மனம் படைத்தவராக இருப்பார்கள்.


இயற்கை பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் சனி, செவ்வாய், ராகு, கேது, தேய்பிறை சந்திரன் மற்றும் பாவி உடன் சேர்ந்த புதன் விய ஸ்தானம் எனப்படும் பன்னிரெண்டாம் இடத்தோடு தொடர்பு கொள்ளும் பொழுது நித்திரை சுகம் அற்றவராக அடுத்தவருக்கு உதவி செய்யக்கூடிய தாராள குணம் அற்றவராக காணப்படுவர் ."எச்சிக் கையால் கூட காக்காய் விரட்ட மாட்டார்" என்பது இவ்வகை சாரும்.


ஒரு ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடம் முக்தி ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது ஒருவர் வாழ்வின் இறுதி நிலையான ஆன்மீக ஞான நிலையை அடைய பன்னிரெண்டாம் பாவகம் உதவுகிறது அதாவது ஒருவர் ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் கேது பகவான் நின்று குரு பகவானின் பார்வையை பெற்ற நிலையில் அல்லது சனி ,கேது இணைந்து பன்னிரெண்டாம் இடத்தில்  சூட்சும வலு பெற்று, குரு பகவானுடைய பார்வையை பெற்ற நிலையில் ஒருவர் ஆன்மீக வாழ்வில் தன்னை  அர்ப்பணித்துக் கொள்வார்கள்.


 ஒரு ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடம் காம திரிகோணம் (3,7,12)  என்று அழைக்கப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடத்தில் சுக்கிரன், சனி செவ்வாய், ராகு  போன்றவை தொடர்பு ஏற்படும் பொழுது அதிக காம எண்ணம் உடையவராக பல மலரில் தேன் பருகும் வண்டு ஆக சாதகர் இருப்பார். இயற்கை சுப கிரகங்களுடைய  பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு ஏற்படும் போது பலனில் மாற்றம் ஏற்படுகிறது.


ஒருவர் செய்யக்கூடிய செலவு சுப விரய செலவா ?அல்லது கெட்ட விரய செலவா ? என்பதை  பன்னிரண்டாம் இடத்துடன் தொடர்பு கொண்ட கிரகங்களைப் பொறுத்து அமைகிறது. என்பதை பனிரெண்டாம் இடத்துடன்  தொடர்பு கொள்ளும் கிரகங்களை பொறுத்து அறியப்படுகிறது. பன்னிரண்டாம் இடத்தில் பாவ கிரக தொடர்பு‌ கெட்ட விரய செலவுகளையும் மற்றும் சுப கிரகம் தொடர்பு பெறும் பொழுது சுப விரயச் செலவுகளையும் ஜாதகருக்கு கொடுக்கிறது.


நன்றி 


ஜாதகம் பார்க்க....


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


097151 89647 


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Thursday, 13 August 2026

எதை நோக்கி உங்கள் வாழ்க்கை பயணம் செல்கிறது.

 எதை நோக்கி உங்கள் வாழ்க்கை பயணம் செல்கிறது.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   மண்ணில் பிறந்த எந்த நபரும் ஏதோ ஒரு காரண கர்த்தாவாக மண்ணில் பிறப்பு எடுக்கிறார்.ஆதலால் யாரும் தாழ்ந்தவர் இல்லை.ஒவ்வொறுவருக்கும் ஒரு கதாபாத்திரம் ,சிலருக்கு ராஜா வேடம் , சிலருக்கு எடு பிடி வேடம் . அவரவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்தால் தான் அந்த நாடகம் மிகவும் சிறப்பாக மக்களை சென்றடைந்து விடும்.


    சில நேரங்களில் ராஜா வேடத்தில் இருப்பவரை விட எடுபுடி நடிப்பில் இருப்பவர் சிறப்பாக தனது கதாபாத்திரத்திற்கு பாந்தமாக நடித்து இருப்பார்.


  எனவே மனித வாழ்க்கை என்ற நாடகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு நமக்கு அளிக்கப்பட்டு வந்து பிறந்து இருக்கிறோம்.


 இந்த கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் சரியாக நேர்மையான வழியில் உழைத்து வாழ முயற்சிகளை மேற்க்கொள்வோம்.


 எனவே எந்த ஒரு நபரின் ஜாதகத்தை பார்த்தும் நாம் பீடை ஜாதகம் என்று ஜாதகர் மனதை கஷ்டபடுத்த விடக் கூடாது.

ஒவ்வொறு ஜாதகமும் ஏதோ சிறப்பம்சங்களை உள்ளடங்கி இருக்கும்..ஏதோ ஒரு அவ யோக அமைப்புகளை கொண்டு இருக்கும்.


 எல்லா ஜாதங்களும் றூறு சதவீதம் சிறப்பான ஜாதகமாகவோ அல்லது நூறு சதவீதம் பீடை ஜாதகமாகவோ அமைந்து விடாது.


 இதில் லட்சத்தில் ஒருவர் ஜாதகம் யோகம் தரும் ஜாதகமாகவோ அல்லது லட்சத்தில் பலர் மிகவும் கஷ்டங்களை அனுபவிக்க கூடிய ஜாதகமாகவோ அமைகிறது.


சில ஜோதிடர்கள் ஜாதகத்தை வாங்கி பார்த்தவுடன் அவர்களுக்கு உரிய அரைகுறை ஞானத்துடன் ஜாதகத்தை தூக்கி வீசி இது கடுமையான பீடை ஜாதகம் என தூக்கி வீசுவதை பார்த்திருக்கிறோம்.யார் இவர்கள் ? என்ன இவர்கள் ரிஷிமார்களா ? இல்லையே பிறகு ஜாதகத்தை பார்த்தவுடனே "பீடை ஜாதகம் "என தூக்கி வீசி மனதை கஷ்டபடுத்தி விடுகிறார்களே ஏன் ? பல வினாக்கள் என்னுள் எழுந்தது உண்டு.


இளைஞர்களே உங்கள் ஜாதகத்தை பார்த்து விட்டு மோசமான ஜாதகம் என யார் கூறினாலும் நீங்கள் வெம்பி வதங்கி விடாதீர்கள்.


 உங்கள் ஜாதகத்தில் உள்ள நவ கிரகங்களை பன்னிரெண்டு ராசி வழியாக பார்வை , சேர்க்கை மற்றும் வீடு கொடுத்தவன் வலிமை ஆகியவற்றின் வழியாக ஆய்வு செய்து பார்க்க ஏதாவது ஒரு சிறப்பம்சம் உங்கள் ஜாதகத்தில் இருக்கும்.


  அந்த சிறப்பம்சம் நோக்கி வாழ்வை நகர்த்த வேண்டியது நமது கடமை ஆகும்.

அந்த சிறப்பம்சம் நமது வாழ்வில் எந்த கால கட்டத்தில் நடைபெறும் என்பதை தசாபுத்தி அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்து முடிவு செய்ய வேண்டும்.


உங்கள் ஜாதக கட்டத்தில் லக்கனம் மற்றும் அதன் அதிபதியின் வலிமை மிகவும் ஆவசியமான ஒன்றாகும்.இதுபோல் ராசி மற்றும் அதன் அதிபதி வலிமை மிக்கதாக இருக்க வேண்டும்.


லக்கனம் -ராசி மற்றும் அதன் அதிபதி ஆகிய மூன்றும் வலிமை அடைந்து இருந்தால் அந்த ஜாதகர் சிறப்பான ஒரு ஜாதகமாக கருதப்படுகிறது.லக்கனாதிபதி வலிமை அடைந்து இருந்தால் எல்லாமே வலிமை உடையதாக விளங்குகிறது.


ஒருவரது ஜாதகத்தில் திருமணம் கால தாமதம் ஆவதற்கான காரணம் உங்களுடைய ஜாதகத்தில் திருமண ஸ்தானமான 1,2,7,8 ஆகிய இடங்களில்,களத்திர காரகன் சுக்கிரன், புத்திர காரகன் குரு பகவான் மற்றும் 

1,2,7,8- ன் அதிபதிகள் உடன் பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன்,ராகு மற்றும் கேது சேர்க்கை அல்லது பார்வை மூலம் தொடர்பு கொள்ள நடக்க கூடிய தசா புத்திகளுக்கு ஏற்ப திருமணம் தடை பெறலாம் அல்லது கால தாமதம் ஆகலாமே ஒழிய முற்றிலும் திருமணமே நடக்காது என பயம் உண்டாக்க வேண்டாம்.


 இந்த திருமண தடை அல்லது கால தாமதம் ஆக என்ன காரணம் ? என ஆய்வு செய்து அதற்கு உரிய பரிகாரம் செய்தால் 

உகந்த தசா புக்தி வரும் காலங்களில் திருமணம் நடைபெற்று விடும்.இதற்காகவும் பெரிய அளவில் மன வருத்தம் கொள்ள தேவையில்லை. 


    ஜாதக அமைப்பின் படி சிலருக்கு இளமை திருமணம் நடைபெறும்.ஒரு சிலருக்கு சற்று கால தாமதம் ஆகுமே ஒழிய பெரிய அளவில் மாற்றம் இல்லை.


 ஒருவர் வெற்றி மேல் வெற்றி வரும் போதும் அந்த வெற்றியால் பணம் வந்த பிறகு மிகவும் நிதானமாக அடி எடுத்து வைக்க வேண்டும்.தொடர் வெற்றி வரும் போது அந்த வெற்றிகளுக்கு தான் மட்டுமே காரணம் என தலைக்கணம் கொள்ளும் மனிதன் தொடர் தோல்வி வரும் போது மட்டும் ஜாதகத்தை காரணம் காட்டி குறை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.


"பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்


 ஒருவரது உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரது செயலே உரைக்கல் ஆக அமைகிறது."


நாம் செய்யும் நல்வினை மற்றும் தீவினைக்கு ஏற்ப நாம் பிறப்பு எடுக்கிறோம்.


நல்லதே எண்ணி நல்லதே செய்தால் அதுவே தலை சிறந்த பரிகாரம் ஆகும்.


நன்றி.


ஜாதகம் பார்க்க...


 Cell & WhatsApp & Gpay no 

    097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

வாழ்வின் இன்ப துன்பங்களை முடிவு செய்யும் கிரக நிலைகள்.

 வாழ்வின் இன்ப துன்பங்களை முடிவு செய்யும் கிரக நிலைகள் .




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவருக்கு அறிவும் மற்றும் திறமையும் மட்டும் இருந்தால் போதாது.எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல யோக தசைகள் உரிய வயதில் வர வேண்டும்.லக்கனாதிபதி வலிமை அடைந்து இருக்க வேண்டும்.


 சில நேரங்களில் சரியான யோகம் தரும் தசைகள் உரிய வயதில் வர பெற்றவர்கள் பாக்கிய சாலிகள் ஆவார்.சரியான அறிவும், திறமையும் இல்லாமல் இருந்தாலும் விறுவிறு என்று வாழ்வின் உயரிய நிலையினை அடைந்து விடுவார்கள்.லக்கனாதிபதி வலிமை என்பது மிகவும் ஒத்துழைப்பு தரும் அமைப்பு ஆகும்.


 எல்லோருக்கும் வாழ்வின் உயரிய நிலையை நோக்கி நகர வேண்டும் என்பதே வாழ்வின் குறிக்கோள் ஆக இருக்கும்.ஆனால் சிலரை காட்டாற்று வெள்ளம் போல்  கெட்ட நேரம் வந்து வாழ்வில் பெருத்த கஷ்ட, நஷ்டங்களுக்கு உட்படுத்தி வாழ்வில் எதிர் பார்க்காத இடத்தில் நம்மை கீழ்  நோக்கி இறக்கி விடும்.இதிலிருந்து எழுவதற்குள் தொடர்ந்து வரும் தசா அமைப்புகளும் பலவீனமான நிலையில் பெருத்த கஷ்டங்களுக்கு உட்படுத்தி நசுக்கி எடுத்து விடுகிறது.இதில் லக்கனம் மற்றும் அதன் அதிபதி வலிமையாக இருந்தால் எதிர்நீச்சல் போட்டு வென்று விடலாம்.


 இதில் லக்கனம் மற்றும் அதன் அதிபதி மிகவும் பலவீனமான அல்லது பாவ தன்மையை அடைந்து இருக்கும் போது எதிர் நீச்சல் போடும் திராணியற்ற நிலையில் கடுமையான மன அழுத்தத்திற்கு உட்படும் நிலை உண்டாகும்.


சிலரது ஜாதகத்தில் வாழ்வின் முக்கியமான கால கட்டங்களில் ஆறு அல்லது எட்டுக்கு உரிய தசை  புக்தி வந்து வாழ்வில் சாதிக்க கூடிய கால கட்டத்தில் நடைபெற்று வாழ்வின் சாதனை கட்டத்தை தாண்டி செல்ல இயலாமல் செய்து விடுவது உண்டு.


மனநிலை காரகன் சந்திரன் பகவான் ராகு உடன் இணைந்த நிலையில் சனி பார்வை அந்த குறிப்பிட்ட ஸ்தானத்தில் விழும்போது, சந்திரன் பகவானே தேய்பிறை சந்திரன் ஆக இருக்கும் பட்சத்தில் கடுமையான மனநிலை பாதிப்புக்கு(autism ) உள்ளாக்குகிறது.


இந்த மன நிலை பாதிப்பு ஆனது சனி அல்லது செவ்வாய்  அல்லது ராகு அல்லது சந்திரன்  தசை வரும் போது இந்த மனநிலை பாதிப்பு ஆனது சற்று கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகிறது.


எவர் ஒருவர் ஜாதகத்திலும் லக்கனாதிபதி நீசம் அடைந்து சனி, செவ்வாய் அல்லது ராகு சேர்க்கை பெற்று நின்றாலும் அல்லது சனி அல்லது செவ்வாய் பார்வை பெற்ற நிலையில் இருந்தாலும் ஜாதகர் உடல் நிலையில் பாதிப்பு இருக்கும்.மனதளவில் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி விடுவார்கள்.இதில் ஆறாம் அதிபதி எட்டாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்தை ஆயுள் காரகன் சனி பகவான் பார்வை பெற்றால் ஜாதகரின் உயிர் பிரியும் நிலை உண்டாகும்.


இன்றைக்கு பெரும்பாலான ஜாதகங்களில் திருமண ஸ்தானமான 1,2,7,8 ஆம் இடங்கள் மற்றும் தாம்பத்ய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியம் தரும் குரு பகவான் ஆகியவை கடுமையான பாவத்துவ நிலைக்கு உள்ளாகி பலவீனம் அடையும் நிலையில் திருமண வாழ்க்கை கால தாமதம் ஆகி கொண்டே செல்கிறது.


குறிப்பாக ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் சனி , செவ்வாய் மற்றும் ராகு தொடர்பு கொள்ளும் நிலையில் திருமணம் கால தாமதமாகி கொண்டே செல்லுதல் மற்றும் விவகாரத்து வாங்குதல் அல்லது குழந்தை பாக்கியம் இல்லாத நிலை போன்ற விதமாக பாதிப்புகள் ஜாதகருக்கு உண்டாகும்.


   இது போன்ற அமைப்பில் தாம்பத்ய சுகத்தை தரும் சுக்கிரன் பகவான் ஆனவர் சனி, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூன்று கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை ஆகிய ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படும் பொழுது திருமணமே ஆனாலும் தாம்பத்ய சுகத்தை முழு திருப்தியாக அனுபவிக்க இயலாத நிலை உண்டாகிறது.


சிலரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன் மற்றும் சனி அல்லது ராகு சேர்க்கை பெற்ற நிலையில் இருக்கும்.அல்லது தாம்பத்ய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் குழந்தை பாக்கியம் தரும் குரு பகவான் ஆகிய இருவரும் ஒன்றையொன்று பார்வை செய்யும் நிலையில் திருமணமே ஆகி ஒரு வீட்டில் இருந்தாலும் தாம்பத்ய சுகத்தை பெற இயலாத நிலை அல்லது தாம்பத்ய சுகம் மறுக்கப்பட்ட நிலை உண்டாகும்.


 மேற்கண்ட இது போன்ற அமைப்பால் திருமண உறவில் பெரிய அளவில் திருப்தி அற்ற நிலையில் தாமரை இலையில் தண்ணீர் போல மண வாழ்வு அமைகிறது.


மேற்கண்ட அளவிலான பிரச்சினைகள் குடும்பத்தில் உருவாகும் பொழுது இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பரிகாரம் என்ற பெயரில் யாரிடம் சென்று ஏமாந்து விட வேண்டாம் பெரிய அளவில் பண செலவு செய்ய வேண்டாம்.பல ஆன்மீக வாதிகளின் பிழைப்பு ஆனது இது போன்ற பிரச்சினைக்கு உரியவர்களால் பிழைப்பு சிறப்பாக நடக்கிறது.


 சிலர் பிரச்சினைகளில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற பரிகார பூஜை செய்பவர்களிடம் சென்று தனது வாழ்வில் நடக்கும் பிரச்சினைகளை சொல்வதை ஜாதகமாக பயன்படுத்தி கொண்டு பெரிய அளவில் பணத்தை செலவு செய்து விடுகிறார்கள்.


கிரகங்கள் தரும் பிரச்சினைகளில் இருந்து விடுபட அந்த குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு சென்று மனமுருக வேண்டினாலே சகல பிரச்சினைகளில் இருந்து பெரிய அளவில் பாதிக்காமல் தலைக்கு வருவது தலைப்பாகை உடன் போய் விடும் அல்லது அந்த பிர்ச்சினைகளை தாங்கி கொள்ளும் மனநிலையை கொடுக்கும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 

  097151 89647


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 



சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்Pin 622302..

Wednesday, 25 February 2026

குரு பகவான் மற்றும் சனி பகவான் காட்டும் ஜோதிட பலன்கள்.

 குரு பகவான் மற்றும் சனி பகவான் காட்டும் ஜோதிட பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  நவ கிரகங்களில் குரு பகவான் மற்றும் சனி பகவான் ஆகிய இருவரும் எந்த இடத்தில் அமர்ந்து உள்ளார்கள் என்பதை கவனிக்காமல்  ஜோதிடர்களாகிய எவரும் பலன் அளித்து விட முடியாது.


 குரு பகவானின் பார்வை கோடி நன்மையை தரும்.சனி பகவானின் பார்வை சர்வ நாசத்தை தரும்.

குரு பகவானுக்கு ஏழாம் பார்வையை தவிர ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வை என்ற சிறப்புப் பார்வையை கொண்டு உள்ளது.இதே போல சனிக்கு ஏழாம் பார்வையை தவிர மூன்று மற்றும் பத்தாம பார்வையை கொண்டு உள்ளது.


 குரு பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்வை செய்யும் இடத்தையும் சுப தன்மையை அடைய வைத்து வாழ்வில் நல்ல பலன்களை  ஜாதகருக்கு தர செய்கிறார் . குரு பகவான் உடன் இணைந்த அல்லது குருவின் பார்வையை பெற்ற கிரகங்களும் சுப தன்மையை அடைந்து நல்ல பலன்களை ஜாதகருக்கு அள்ளித் தரும் அமைப்பை பெறுகிறார் .


குரு பகவான் பார்வையை பெற்ற பாவ அல்லது அவ யோக கிரகம் ஆக இருந்தாலும் அவற்றை சுப தன்மையை அடைய வைத்து அதன் தசையில் யோகத்தை அள்ளி தருகிறார்.குரு பகவான் தொடர்பை பெற்ற சுப கிரகங்கள் கூடுதலான சுப தன்மையை அடைந்து அதன் தசையில் யோகத்தை அள்ளித் தரும் அமைப்பை பெறுகிறது.


 குரு பகவான் சுப தன்மையை அடைந்து ராசி மற்றும் லக்கனத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது ஆசிரியர் அல்லது பேராசிரியர் ஆக திகழ்வார்கள்.அதிக சுப தன்மையை அடைந்த நிலையில் நீதிபதியாக திகழ்வார்கள்.மேடை பேச்சாளர்,வழக்காடு மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ஆக திகழ்வார்கள்.சுபத்துவ படிநிலை சற்று குறைய நகை கடை வைத்து நடத்துபவர் மற்றும் ஆலோசனை வழங்கும் மந்திரியாக திகழ்வார்கள்.


 சனி பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்வை செய்யும் இடத்தையும் பாவ தன்மையை அடைய வைத்து கடுமையான இன்னல்களை கொடுக்கக்கூடிய அமைப்பை பெறுகிறார்.சனியின் பார்வையை பெற்ற எந்த ஸ்தானமும் மற்றும் எந்த ஒரு கிரகமும் கடுமையான பாவ தன்மையை அடைந்து அதன் தசையில் கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு வழங்கக்கூடிய அமைப்பை பெறுகிறார்.


சனியின் பார்வையை பெற்ற யோக கிரகம் கூட சனியின் பார்வை பெற்றால் அவை பாவ தன்மையை அடைந்து அதன் தசையில் கடுமையான கஷ்டங்களை தரும் அமைப்பை பெறுகிறார்.


சனியின் பார்வையை பெற்ற லக்கன அவ‌ யோகர் அல்லது பாவ கிரகம் ஆனது  அதன் தசையில் கூடுதலாக பாவ தன்மையை அடைந்து அதன் தசையில் கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு வழங்கக்கூடிய அமைப்பை பெறுகிறார்.


இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிர் தன்மையை கொண்ட  குரு பகவான் மற்றும் சனி பகவான் ஆகிய இருவரும் இணைந்து உள்ள நிலையில் குரு பகவானால் சனி பகவான் சுப தன்மை அடைகிறது.சனி பகவானால் குரு பகவான் பாவ தன்மையை அடைகிறார்.


குரு மற்றும் சனி இணையானது ஜாதகன் ஆன்மீக வழியில் ஈடுபாடு கொண்டவராக செயல்படுவார்கள்.குரு மற்றும் சனி இணையானது ஜாதகரை பற்றற்ற வழியில் மிகுந்த ஆர்வம் உடையவராக ஜாதகரை மாற்றி அழகு பார்க்கும்.


குரு மற்றும் சனி பகவான் இணைவானது பற்றற்ற உண்மை சந்நியாசியாகும் அமைப்பை ஜாதகருக்கு கொடுக்கிறது.


குரு பகவான் எந்த இடத்தில் இருந்தாலும் அல்லது எந்த இடத்தை பார்த்தாலும் அந்த கிரகம் அல்லது ஸ்தானம் சுப தன்மையை அடைந்து வலிமை பெறுகிறது.குரு பகவானின் தொடர்பை பெற்ற எந்த ஸ்தானம் மற்றும் கிரகம் சுப தன்மையை அடைந்து அதற்கு உரிய நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


 குரு பகவான் ஜாதகருக்கு பணம் ,பதவி, பட்டம், புகழ், கல்வி ,ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் அனைத்தையும் தந்து வாழ்வில் உயரிய நிலை அடைய வைக்கக்கூடிய கிரகமாகும்.


குரு பகவான் நீதி , நியாயம், நேர்மைக்கு கட்டுபட்டவர் ஆவார்.அடுத்தவர் வளர்ச்சியை கண்டு எள்ளளவும் பொறாமை படாத தன்மை படைத்தவர்.அடுத்தவர் பணத்தை வஞ்சித்து சம்பாதிக்கும் கெட்ட குணம் இல்லாதவர்.ஏமாளி, பிழைக்க தெரியாதவர் . ஒயிட் கலர் ஷாப் புரிபவர்.நல்ல தேஜஸ் உடையவராக காணப்படுவார்.பாவ கிரக தொடர்பு ஏற்பட்டால் பலனில் மாற்றம் உண்டாகும்.


சனி பகவான் பாவத்துவமான நிலையில் அழுக்கான இடத்தில் வசிப்பவர்.கீழ் மட்ட தொழில் புரிபவர்,சொல்லி கொள்ள வெட்கப்பட்டுக் கூடிய தொழில் புரிபவர்.பொறாமை குணம் படைத்தவராக திகழ்வர் .குள்ளத்தன்மை கொண்டவராக இருப்பார்.சோம்பேறி ,மந்த தன்மை கொண்டவர்.இயற்கை சுப கிரக தொடர்பு ஏற்பட்டால் பலனில் மாற்றம் உண்டாகும்.


சனி பகவான் சுப தன்மை நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள்,மெஜினேரி வேலை,கனரக வாகனங்களை இயக்குபவர், வழக்கறிஞர்,பொது மக்கள் தொடர்பு கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்கள் போன்ற பணிகளில் அமரும் யோகம் உண்டாகும்.


சனி பகவான் நில ராசிகளான ரிஷபம், கன்னி, மகரம் போன்ற ராசிகளில் தொடர்பு மண்,கிரசர் போன்ற தொழிலில் ஈடுபடுவார்கள்.நீர் ராசிகளாக திகழும் கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் சுப தன்மை உடன் தொடர்பு கொள்ள குடிக்க இயலாத திரவமான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற தொழில் புரிபவராக இருப்பார்கள்.


நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு போன்ற ராசிகளில் சனி பகவான் தொடர்பு கொள்ள தார் ரோடு போடும் ஒப்பந்ததாரர்களாக திகழ்வார்கள்.


சனி பகவான் திருமண ஸ்தானமான 1,2,7,8 ஆம் இடத்தில் நிற்பது அல்லது பார்வை முறையில் மேற்கண்ட ஸ்தானம் அதன் அதிபதி மற்றும் காரக கிரகமாக விளங்கும் சுக்கிரன் உடன் தொடர்பு கொள்ள திருமண தடையை தருகிறார்.புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம் அல்லது காரக கிரகமாக விளங்கும் குரு பகவான் உடன் தொடர்பு புத்திர தடையை உருவாக்குகிறார்.


அதே நேரத்தில் குரு திருமண மற்றும் புத்திர ஸ்தானத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது எல்லாம் சுபமாக மாறி நல்ல தன்மையை அடைய வைத்து மேன்மையை அடைய செய்கிறார்.


நன்றி.

For online appointment 

Cell & WhatsApp & Gpay no 

         097151 89647 

Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


கிரகங்கள் மனித வாழ்வை எவ்வாறு ச்ச

 கிரகங்கள் மனித வாழ்வை எவ்வாறு வழி நடத்தி செல்கிறது.



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     மனித வாழ்வினை வழி நடத்தி செல்வதில் நவ கிரகங்களின் பங்கு அலாதியானது.


  கிரகங்கள் எந்த இடத்தில் யாருடன் சேர்ந்து எந்த கிரகத்தின் பார்வையை பெற்று நிற்கின்றது என்பதை லக்கினத்தை பொறுத்து நடக்கும் தசாபுத்திகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஒரு மனிதன் எப்படி வாழ்ந்து இருப்பான் அல்லது எப்படி வாழ போகிறான் ?! போன்ற விவரங்களை அலசி ஆராய்ந்து துல்லியமாக கண்டறிய இயலும்.


 ஒவ்வொரு கிரகங்களும் தனது ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவம் வழியாக அதன் தசாபுத்திகளில் மனித வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்கிறது.


 ஒவ்வொரு கிரகத்தின் ஆதிபத்தியம் பலன்கள் ஆனது அதன் லக்கினத்தை பொறுத்து மாறுபாடு அடைகிறது.ஆனால் காரகத்துவம் தரும் பலன்கள் ஆனது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான பலன்களையே தருகிறது.இவை லக்கினத்தை பொறுத்து மாறுபாடு அடைவதில்லை.


 ஒரு கரு இரட்டையர்கள் என்பது ஒரு விந்தணுவானது ஒரு பெண்ணின் கரு முட்டையில் நுழைந்து ஒரு சைகோட் உருவாகி அவை இரண்டாக பிளந்து இரண்டு குழந்தைகளை உருவாக்குகிறது.இவை பெரும்பாலும் இரண்டும் ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ தான் இருக்கும். 


 இவ்வாறு சில நிமிட வித்தியாசத்தில் பிறந்த ஒரு கரு இரட்டையர் சாதக பலன்களில் மாற்றங்கள் காணப்படும் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ராசி கட்டங்களில் கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலும் இருவருடைய பலன்கள் ஒரு மாதிரி இருப்பது கிடையாது.

இதே போல இருக்க இரு கரு இரட்டையர்களின் பலன் ஆனது முற்றிலும் மாறுபட்ட நிலைகளில் காணப்படுகிறது.


இரு கரு இரட்டையர் என்பது இரண்டு விந்து அணுக்கள் ஆனது இரண்டு அண்ட அணுவுடன் இணைந்து இரண்டு சைகோட் உருவாகி விடுகிறது.இதில் இரண்டும் ஆண் அல்லது பெண் ஆகவோ அல்லது ஒன்று ஆண் மற்றொன்று பெண் ஆக பிறக்கிறது.


    இரு கரு இரட்டையர்களுக்கு இடையேயான கிரகங்கள் தாக்குதல் பலன் ஆனது சற்று மாறுபட வாய்ப்பு உள்ளது..


 ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் ஒரே இடத்தில் பிறந்த இரண்டு குழந்தை தரும் ஜாதக பலன்கள் மாறுபாடாக இருப்பதற்கு என்னவாக இருக்கும் என ஆராய்ந்து பார்த்தால் ஒரு குழந்தை ஆனது தரைமட்ட நிலையில் பிறந்து இருக்கும்.மற்றொரு குழந்தை மாடியில் பிறந்து இருக்கும்.இதே போன்ற பிறக்கும் இடத்தின் உயர மாறுபாட்டால் கூட ஒரு குழந்தை ஜாதக பலனில் மாறுபாடு இருக்கிறது.


   ஜாதக பலனை துல்லியமாக ஜாதகருக்கு வழங்குவதற்கு ஜோதிட விதிகளை மட்டுமே நம்பி இருந்தால் போதாது. ஜோதிட விதிகளுக்கு அப்பால் ஜோதிட விதி விலக்கையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.


 ஜோதிட விதிகளை மட்டுமே நம்பி ஜாதக பலன் பார்க்கும் போது ஜாதக பலனில் துல்லிய தன்மை கெட்டு விடுகிறது.அவரவர் லக்கனம்,கிரக பார்வை அல்லது சேர்க்கை மற்றும் வீடு கொடுத்தவன் வலிமை போன்ற பல்வேறு கூறுகளை ஆய்வு செய்து கொடுக்க கூடிய பலன்கள் மட்டுமே துல்லியமான பலனாக இருக்க முடியும்.


ஒரு கிரகம் தரும் பலன் என்பது அந்த கிரகம் அடைந்து இருக்கும் சுப தன்மை மற்றும் பாவ தன்மை ஆகிய இரண்டையும் சார்ந்தே அமைகிறது.


 ஒரு கிரகம் எப்படி இருந்தாலும் அவை நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்க வேண்டும் ஆயின் அந்த கிரகம் சுப தன்மையை அடைந்து இருக்க வேண்டும்.சில நேரத்தில் இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் அல்லது லக்கன அவ யோகர் ஆக இருந்தாலும் அவை குருபகவான் ,வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அந்த கிரகம் உயரிய பலனை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்து விடுகிறது.


 ஒரு கிரகம் ஆனது லக்கன யோகராக இருந்தாலும் இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு, மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் உடன் சேர்க்கை அல்லது பார்வை போன்ற நிலையினை அடையும் போது அவை அதன் தசையில் கடுமையான பாதிப்பை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 

   097151 89647 

Another cell no 


7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்   

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

கெட்ட பலனை தராத கேது பகவான்

 கெட்ட பலனை தராத கேது பகவான்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  கேது பகவான் ஒரு  இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் ஒருவர் ஜாதகத்தில் எந்த சூழ்நிலையிலும் கெட்ட பலனை தராத கிரகமாகவே செயல்படுகிறது.


 கேது பகவான் ஆனவர் ராகு பகவான் அளவிற்கு தன்னோடு இணைந்த கிரகத்தின் பலனை  பாதிப்பது கிடையாது.


 கேது பகவான் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை அதிகரிக்க செய்வார்.கேது பகவான் குரு பகவான் உடன் இணையும் போது கேள யோகம் என்னும் கோடீஸ்வர யோகம் என்றாலும் எல்லோருக்கும் இந்த யோகமானது பலனை  தந்து விடுவது கிடையாது.


   கேது பகவான் ஆனவர் இயற்கை பாவ கிரகமான சனி பகவான் உடன் இணைந்த நிலையில் சூட்சும வலிமை என்னும் மறைமுக வலிமையை ஜாதகருக்கு தருகிறது.கேது பகவான் உடன் இணைந்த சனி பகவான் தனது இயல்பான கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுப்பது கிடையாது.


    கேது பகவான் ஆனவர் சனி பகவான் உடன் இணைந்து 2,5,9,12 ஆம் இடத்தில் நின்று குரு பகவானின் பார்வையினை பெற்ற நிலையில் ஜாதகரை ஆன்மீக வழியில் ஈடுபாடு உடையவராக மாற்றுகிறது.


   இதேபோல் கேது பகவான் மற்றொரு முக்கால் பாவ கிரகமான செவ்வாய் பகவான் உடன் இணைந்த நிலையில் சூட்சும வலிமை என்னும் மறைமுக வலிமையை ஜாதகருக்கு கொடுக்கிறது.

கேது பகவான் உடன் இணைந்த பாவ கிரகமான செவ்வாய் பகவான் ஜாதகருக்கு கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுப்பது கிடையாது.


    கேது பகவான் ஆனவர்  ஒளி கிரகங்களாக திகழும் 

சூரியன் மற்றும் சந்திரன் உடன் இணையும் பொழுது ராகு பகவான் அளவிற்கு கிரகண தோஷத்தை கொடுத்து பலவீனமான நிலையை அடைய செய்வதில்லை.


 சூரியன் உடன் கேது இணையும் போது சூரியன் பகவான் தரும் தலைமை பண்பை அதிகரிக்க செய்வார்.சிலரை ஆன்மீக குருவாக அல்லது அரசியல் குருவாக செயல்பட செய்வார்.சூரியன் மற்றும் கேது பகவான் இணைவானது தலைமை பண்பை ஜாதகருக்கு அதிகரிக்க செய்யும்.அப்பா வழி உறவுகளால் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை..அரசாங்க ஆதரவை தர செய்வார்.


    மன நிலை காரகன் சந்திரன் உடன் கேது இணையும் பொழுது மனநிலை பாதிப்பை தர வைப்பதில்லை.யூகித்து அறியும் சக்தியை ஜாதகருக்கு கொடுக்கிறது.தாய் வழி உறவுகளால் ஆதரவு கிடைக்கும்.ஆன்மீக ஈடுபாடு உண்டாகும்.சந்திரன் இணைந்த கேது பகவான் ஆனவர் ராகு பகவான் அளவிற்கு திருமண தடையை தந்து விடுவதில்ல


    வித்தை காரகன் புதன் பகவான் உடன்    கேது பகவான் இணையும் போது வித்தையில் சாதுர்யம், புத்திசாலித்தனம், ஜோதிட ஆர்வம், கணினி ஈடுபாடு போன்றவற்றில் முன்னேற்றம் உண்டாகும்.


    சுக்கிரன் பகவான் உடன் கேது பகவான் இணையும் போது ராகு பகவான் அளவிற்கு களத்திர தோஷத்தை தந்து விடுவது கிடையாது.தாம்பத்திய சுகத்தை ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக அங்கீகாரம் பெற்ற வாழ்க்கை துணை உடன் மட்டுமே அனுபவிக்கும் எண்ணத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது.


  ஒருவர் ஜாதகத்தில் கேது பகவான் அதிக சுப தன்மை பெற்ற நிலையில் ஆன்மீக வழியில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.. கோவில் அருகே சாமி வழிபாட்டு பொருட்களை வைத்து கடை நடத்துபவராக இருப்பார்.சாமி படங்கள் வைத்து விற்பனை செய்பவராக திகழ்வார்.


 கேது பகவான் தரும் தோஷங்களை போக்க கீழபெரும் பள்ளம்  மற்றும் ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள  காளஹஸ்தி போன்ற இடங்களில் எம கண்டத்தில் வழிபாடு செய்து கேது பகவான் தரக்கூடிய தோஷங்களை போக்கிக் கொள்ளலாம்.


கேது பகவான் சனியின் வீட்டில் இருந்து செவ்வாய் பகவான் பார்வையினை பெற்றிருந்தாலோ அல்லது செவ்வாய் பகவான் வீட்டில் இருந்து சனியின் பார்வையினை பெற்றிருந்தாலோ அல்லது கேது பகவான் உடன் தேய்பிறை சந்திரன் அல்லது சனி , செவ்வாய் இருவரும் சேர்க்கை பெற்றோ அல்லது தனி தனியாக பார்வை செய்தாலோ கடுமையான கஷ்டங்களை கொடுத்து வாழ்வின் மீது பற்று அற்று வாழும் சந்நியாச நிலைக்கே ஜாதகரை கொண்டு சென்று விடும் நிலைக்கு கேது பகவான் செயல்படுவார்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

    


அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.