Friday, 21 November 2025

திருமண பொருத்தம் என்பது....

 திருமண பொருத்தம் என்பது.....



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  இன்று காலை எங்கள் கோயிலுக்கு சென்றேன்.அங்கே எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர். " ஆண் -பெண் இருவருக்கும் பரணி நட்சத்திரம் திருமணம் செய்து கொள்ளலாமா ? "என்று கேட்டார்.


 நான் அவரிடம்"பெரும்பாலும் நட்சத்திரத்தை வைத்து கொண்டு பொருத்தம் பார்ப்பது தவறு ? " என்று கூறினேன்.


இருவருக்கும் ஒரே நட்சத்திரம் என்பதால் நட்சத்திரம் அடிப்படையில் பொருத்தம் இருக்கும்.ஆனால் இருவருக்கும் மேஷ ராசி வருவதால் கோச்சார அடிப்படையில் இருவருக்கும் ஏழரை சனி ஆரம்பமாகி இருக்கும்.மேலும் இருவருக்கும் ராசி நாதன் செவ்வாய் என்பதால் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து போகும் தன்மை இருக்காது.


 எனவே இது போன்ற நிலையில் இவர்களுக்கு இடையே திருமண பந்தத்தில் ஈடுபட வைக்கும் போது ஏழரை ஆண்டுகளில் மூன்றே முக்கால் ஆண்டு தம்பதிகளுக்கு இடையே போட்டியும், போராட்டமும் நிறைந்த வாழ்க்கையாக அமைந்து விடும்.மேலும் தசாபுத்தி ஆறு அல்லது எட்டுக்கு உடைய தசாபுத்தி அல்லது அவ யோக தசாபுத்தி நடப்பில் இருப்பின் இன்னும் கூடுதலான கஷ்டங்களை ஜாதகர் அனுபவிக்க நேரிடும்.


இது போன்ற நிலையில் எதோ ஒரு ஜோதிடர் நட்சத்திரம் பொருத்தம் உள்ளது என்றவுடன் மகிழ்ச்சியாக பெண் வீட்டில் உறவினர்கள் மற்றும் பங்காளிகள் உடன் சென்று நிச்சயித்து விட்டார்கள்.அதன் பிறகு சிறிய சந்தேகம் அடிப்படையில் பல ஜோதிடர்களிடம் சென்று பார்வை செய்த போது பெரும்பாலான ஜோதிடர்கள் இவர்கள்இருவருக்கு இடையே திருமணம் செய்து வைக்க கூடாது என்று கூறி உள்ளார்கள்.அதன் பிறகு திருமண பந்தத்தில் ஈடுபட விடாமல் திருமணத்தை நிறுத்தி விட்டார்கள்.


இந்த நிலையில் பெண்ணின் வீட்டிற்கு உறவினர்கள் சகிதமாக சென்று பொட்டு வைத்து விட்டு இதுதான் உனது கணவன் என்ற மனநிலையை உருவாக்கி பிறகு பொருத்தம் இல்லை என்பது இன்றைய சமூகத்தில் ஆண் வீட்டிற்கு பெரிய கஷ்டம் கிடையாது .


அதேநேரத்தில் பெண் வீட்டில் தான் மிகுந்த வேதனை நிறைந்த நிலையில் இருக்கும்.


எனவே வெறும் நட்சத்திரம் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்து வைக்க கூடாது.கட்ட அடிப்படையில் கிரக கலப்பினம் பார்க்க வேண்டும்.நடக்கும் தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்களை ஆய்வுகள் செய்து பார்க்க வேண்டும்..


அதன் பிறகு பெண் வீடு அல்லது மாப்பிள்ளை வீடுகள் சென்று பார்த்து எல்லாம் சரியாக இருந்த பிறகு திருமண நிச்சயதார்த்தம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.


சில நேரங்களில் திருமண பொருத்தம் பார்க்க செல்லும் பெற்றோர்கள் இருவருடைய ஜாதகத்தை தனி தனியாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


 இவ்வாறு ஆய்வு செய்து பார்க்கும் போது பெண் மற்றும் மாப்பிள்ளை உடன் பிறந்த பிறப்பு வளர்ப்பு எண்ணிக்கை தொடர்பான கேள்விகள், பெண் அல்லது மாப்பிள்ளை வீட்டு திசை போன்ற கேள்விகளை தவிர்த்து பிறகு பயனுள்ள கேள்விகளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள்.


கணவன் மனைவி உயிர் நிலை, குழந்தை பாக்கியம்,ஒற்றுமை உணர்வு , விட்டு கொடுத்து போகும் தன்மை மற்றும் யோக நிலை முதலியன.தொடர்பான கேள்விகளை கேட்டு சரி செய்து கொள்ளுங்கள்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & gpay no 

  097151 89647 


Another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

சனி பகவான் எப்படி இருந்தால் யோகத்தை அள்ளித் தருவார்?

 சனி பகவான் எப்படி இருந்தால் யோகத்தை அள்ளி தருவார்?




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ‌. சனிபகவான் இயற்கை பாவ கிரகம் என்பதோடு மட்டுமல்லாமல் அதிலும் 

முழு பாவ கிரகமாக கருதப்படுகிறது.


      சனி பகவான் ஜாதகருக்கு எவ்வாறு இருந்தால் யோகத்தை அள்ளித் தரும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


 சனி பகவான் நேரடியாக உச்சம், ஆட்சி போன்ற வகையில் நேர் வலு பெறக்கூடாது.


 சனி பகவான் உப ஜெய ஸ்தானமான மூன்று,ஆறு,பத்து மற்றும் பதினொன்றாம் இடத்தில் நட்பு நிலையில் நின்று இயற்கை சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு சனி தசையானது மிகுந்த யோகத்தை அள்ளித் தருகிறது.


சுக்கிரன் அணியை சேர்ந்த ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி மற்றும் மகரம் போன்ற லக்கனங்களுக்கு அதன் தசையில் அதிக யோகத்தை அள்ளித் தருகிறது.


ரிஷபம் மற்றும் துலாம் லக்கனங்களுக்கு சனி பகவான் தசையானது மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


 சனி பகவான் மறைவிட ஸ்தானங்களில் உச்சம் , ஆட்சி போன்ற ஸ்தான வலிமையை பெற்று இருந்தாலும் ஜாதகருக்கு அதன் தசையில் யோகத்தை அள்ளித் தருகிறது.


சனி பகவான் நீசம் பெற்று வக்கிரம் பெறாத நிலையில் ஜாதகருக்கு சனி பகவான் யோகத்தை அள்ளித் தருகிறது.


சனி பகவான் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ஜாதகருக்கு சனி பகவான் அதன் ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை சிறப்பாக ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


 சனி பகவான் பார்வை சர்வ நாசத்தை தரும் என்றாலும் அதன் மூன்று,ஏழு மற்றும் பத்தாம் பார்வை ஆனது கெடுதலை தராமல் அதே நேரத்தில் நல்லதை அள்ளிக் கொடுக்காமல் 

இருக்கிறது.


 சனி பகவான் அதிக சுபத்துவ நிலையில் ராசி மற்றும் லக்கினத்திற்கு தன ஸ்தானமான இரண்டு மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சுபத்துவ படிநிலை தொடர்பு கொள்ள வழக்கறிஞர் ஆட்டோமொபைல்,ஏரோநாடிகல் இன்ஜினியர்,மெக்கானிகல் இன்ஜினியர் போன்ற துறைகளில் ஈடுபாடு அதிகமாக ஜாதகர இருக்கிறது.


அரசு பணிகளில் அலுவலக உதவியாளர்,இரவு காவலர், மற்று இளநிலை உதவியாளர் போன்ற அடிப்படை அரசு பணிகளில் அமர கூடிய யோகம் உண்டாகிறது.


சனி பகவான் அதிக சுபத்துவ நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் போன்ற மக்கள் பிரதிநிதியாக செயல்படுவார்.


சனிபகவான் பாவத்துவ மற்றும் சுபத்துவ படிநிலையின் கடைசி படி நிலை சுபத்துவ படிநிலையில் சொல்லிக் கொள்ள வெட்கப்படக்கூடிய செப்டிக் டேங்க்கில் மனித கழிவுகளை அள்ளுதல்,பிண வண்டி ஓட்டுதல், சுடுகாட்டில் வேலை, உடம்பு முழுவதும் மசகு அப்பி கொண்டு வேலை பார்த்தல், மெக்கானிக் , சுரங்கங்களில் வேலை,தார் போடுதல் போன்ற வேலைகளில் அமர வைப்பார்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEf

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

என் மகனின் படிப்பு எப்படி இருக்கும்?

 என் மகனின் படிப்பு எப்படி இருக்கும்?





செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


" கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற எவை"_என்பது வான் புகழ் கொண்ட வள்ளுவரின் அருள் வாக்கு.இங்கு மாடு என்பது செல்வம் ஆக 

கருதப்படுகிறது..


   "கற்கை நன்றே கற்கை நன்றே 

பிச்சை புகினும் தற்கை நன்றே"- என்ற வீரசோழியம் மற்றும் வெற்றி வேட்கை போன்ற நூல்களில் வருகிறது.ஒரு மனிதன் பிச்சை எடுக்கும் நிலை காணப்பட்டாலும் கல்வியை மட்டும் விட்டு. விடக்கூடாது. பிச்சை எடுத்தாவது படிக்க வேண்டும் என்று நாம் தவறாக இதைக் புரிந்து கொள்கிறோம்.


 ஆத்திசூடி நூலில் பெண்பால் புலவர் ஔவையார் அவர்கள் ", நூல் பல கல்" என்ற ஒற்றை வரி மூலம் கற்றலின் இன்றியமையாததை குறிப்பிடுகிறார்.


   ஒருவர் நன்றாக படிப்பாரா? அல்லது மாட்டாரா ? போன்ற தகவல்களை ஜாதக கட்டத்தில் கல்விக்கு உரிய ஸ்தானமான இரண்டாம் இடம், நான்காம் இடம் மற்றும் ஒன்பதாம் இடம் போன்ற இடங்களையும் மற்றும் அதன் அதிபதிகளையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


இவை தவிர்த்து லக்கனாதிபதியின் வலிமை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.


நவ கிரகங்களில் கல்விக்கு வித்யா காரகன் புதன் மற்றும் அறிவு காரக கிரகம் குரு பகவான் ஆவார்.


   ஜாதகத்தில் குரு மற்றும் புதன் பகவான் ஆகிய இருவரும் சேர்ந்து நிலையில் அல்லது பார்வை பெற்ற நிலையில் இருந்தாலும் அல்லது வளர்பிறை சந்திரன் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்.


 குறிப்பாக குரு பகவான் உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் பார்வை கொள்ளும் பொழுது உங்களுக்கு பிறந்த குழந்தை நன்றாக படிக்கும் .


வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் குரு அல்லது புதன் பகவான் நின்ற நிலையில் சுப கிரக பார்வை பெற்ற நிலையில் அல்லது வளர்பிறை சந்திரன் அதி யோகத்தில் இருந்தாலும் அந்த பிள்ளை நன்றாக படிப்பார்.


 கல்வி ஸ்தானமான இரண்டாம் இடம் கல்வியறிவு பற்றி அறிய உதவும் முதன்மையான ஸ்தானம் ஆகும்.இந்த இடத்தில் இயற்கை சுப கிரகமான குரு பகவான், வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் நின்றாலும் அல்லது இயற்கை சுப கிரகங்களின் பார்வையை பெற்ற நிலையிலும் இருந்து நல்ல யோக தசைகள் நடப்பில் இருப்பின் ஜாதகர் கல்வி அறிவு உடையவராக திகழ்வார்.


 வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இயற்கை பாவ கிரகங்கள் ஆன தேய்பிறை சந்திரன்,சனி, செவ்வாய் ,ராகு மற்றும் கேது பகவான் நின்றாலும் அல்லது இயற்கை பாவ கிரக பார்வையை பெற்ற நிலையில் வாக்கு ஸ்தான அதிபதியும் பலவீனம் அல்லது பாவத்துவ நிலையில் இருக்கும் போது நிச்சயமாக உங்கள் குழந்தை படிப்பில் குறைபாடு இருக்கும்.கல்விக்கு உரிய காரக கிரகமான குரு மற்றும் புதன் பகவான் ஆகிய இருவரும் பலவீனம் அல்லது பாவ தன்மையை அடைந்து இருப்பார்.


 குரு பகவான் மற்றும் புதன் பகவான் நீசம் அடைந்து பாவ கிரகமான சனி, செவ்வாய், ராகு, கேது, மற்றும் தேய்பிறை சந்திரன் உடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் படிப்பில் பெரிய அளவில் நாட்டம் இருக்காது.


சில நேரங்களில் இரண்டாம் இடம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் லக்கனாதிபதி வலிமை பெற்று இருந்தாலும் ஒரளவு எதிர்நீச்சல் போட்டு கல்வி படிப்பை நடுத்தரமான நிலையில் படித்து முடிப்பார்.அதே நேரத்தில் லக்கனாதிபதியும் பலம் இழந்த நிலையில் மழைக்கு கூட பள்ளி கூடம் ஒதுங்க மாட்டார்.


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


 097151 89647 

Another cell no 7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

கேது பகவான் தரும் யோக பலன்கள்.

 கேது பகவான் தரும் யோக பலன்கள்.


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  நிழல் கிரகங்களில் கேது பகவான் பாவ கிரக வரிசையில் சேர்க்கப்பட்டு இருந்தாலும் அவை இயற்கை சுப கிரகம் போலவே செயல்படுகிறது.ராகு பகவான் ஆனவர் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை மட்டுப்படுத்துவது போல கேது பகவான் செய்ய மட்டார். கேது பகவான் ஆனவர் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை உயர்த்தி தருவார்.


 கேது பகவான் ஆனவர் இயற்கை பாவ கிரகமான சனி பகவான் உடன் இணைந்தால் இருள் கிரகமான சனி பகவானை சூட்சும வலுப்படுத்தி நல்ல பலனை தர வைப்பார்.கேது பகவான் உடன் இணைந்த சனி பகவான் இயற்கை சுப கிரகம் போல செயல்பட வைத்து அதன் பார்வை பலனும் பெரிய அளவிற்கு சர்வ நாசத்தை உண்டு பண்ணுவதில்லை. 


 கேது பகவான் ஆனவர் சனி உடன் இணைந்து குரு பகவானின் தொடர்பை பெற்றவர் ஆன்மீக யோகத்தை பெற்றவராக திகழ்வார்.குறிப்பாக கேது பகவான் சனி உடன் இணைந்து இரண்டு, ஐந்து,ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் நின்றால் நல்ல ஆன்மீக தேடல் ஜாதகரிடம் காணப்படும்.


இதே போல மற்றொரு பாவ கிரகமான செவ்வாய் உடன் இணைந்த கேது பகவான் ஆனவர் ஜாதகருக்கு சனி பகவானை போல சூட்சும வலுவினை தர வைப்பார்.


 கேது பகவான் உடன் இணைந்த செவ்வாய் பகவான் தனது பார்வை செய்யும் இடங்களை பாவ தன்மையை அடைய செய்வதில்லை.


 கேது பகவான் ஆனவர் இருக்கும் இடங்களையும் மற்றும் சேர்க்கை பெற்ற கிரகத்தையும் ராகு பகவான் அளவிற்கு கெடுதலை செய்வதில்லை.


 கேது பகவான் ஆனவர் பன்னிரெண்டு வீடுகளில் எந்த வீட்டில் இருந்தாலும் ராகு பகவானை போல பெரிய அளவிற்கு கெட்ட பலனை கொடுப்பதில்லை.


கேது பகவான் ஐந்து மற்றும் ஒன்பதாம் இடங்களில் நின்று குரு பகவானின் பார்வையை பெற்றால் சிறந்த ஆன்மீகவாதியாக திகழ்வதுடன் பரந்த தாராள குணம் படைத்தவராகவும் விளங்குவார்.


கேது பகவான் பன்னிரெண்டாம் இடத்தில் நிற்கும் போது முக்தி அடையும் யோகம் படைத்தவராக விளங்குவார்.


கேது பகவான் ஆனவர் சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய மூன்று வீடுகளில் கேது பகவான் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


கேது பகவான் ஆனவர் சனி மற்றும் செவ்வாய் உடன் இணையும் போது அல்லது சனி அல்லது செவ்வாய் உடன் இணைந்த கேது பகவானை சனி அல்லது செவ்வாய் பார்வை செய்தாலும் கெட்ட பலனை ஜாதகருக்கு கேது பகவான் அள்ளிக் கொடுக்கிறது.இந்த மாதிரியான நிலைகளில் சூட்சும வலுவை கேது பகவான் தருவதில்லை.


இவ்வாறு கேது பகவான் பலவீனம் அல்லது பாவ தன்மையை அடையும் போது தமிழ்நாட்டில் கீழப்பெரும்பள்ளம் அல்லது ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி போன்ற ஸ்தலங்கள் சென்று எம் கண்ட நேரத்தில் வழிபட கேது பகவான் தரும் இன்னல்கள் களைந்து நல்ல பலனை தருகிறது.


 கேது பகவான் சுப தன்மையில் இரண்டு மற்றும் பத்தாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது ஆன்மீக வழியில் பொருள் தேட வைப்பார்.குறி சொல்லும் பூசாரி, கோவில் ஸ்தலங்களில் சாமி வழிபாடு பொருட்கள் விற்பனை செய்வது மற்றும் தீர்த்த யாத்திரை அழைத்து செல்வது மற்றும் ஆன்மீக சபை நடத்தி பொருள் கட்டுதல் போன்ற தொழில்களில் ஈடுபட வைத்து அருள்பாலிப்பார்.


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


  097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி , புதுக்கோட்டை மாவட்டம்.

மனித வாழ்வில் கிரகங்கள் தரும் மாற்றங்கள்.

 மனித வாழ்வில் கிரகங்கள் தரும் மாற்றங்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 வாழ்க்கை வித்தியாசமானது.ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. .பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது.

எல்லோரின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.எல்லோருடைய விடியலும் ஒரே மாதிரியாக அமைவதில்லை.


 சிலரின் விடியல் வாழ்வின் சாதனையின் உச்சத்தை தொட்டு பெயரும் புகழும் பெறத்தக்க நாளாக வாழ்வில் மறக்க முடியாத தினமாக அமைந்து விடுகிறது.


 சிலரின் விடியல் பேரிழப்பை தரக்கூடிய நாளாக, பெரும் விரய செலவை சந்திக்கும் நாளாக,உயிருக்கு உயிராக நேசித்த ஒருவர் நம்மை விட்டு பிரியும் நாளாக அதாவது வேதனை நிறைந்த நாளாக மாறி விடுகிறது.


 நேற்று போல் இன்று இல்லை!

இன்று போல் நாளை இல்லை!


  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆச்சர்ய படக்கூடிய விஷயங்களை,எதிர்பாராத வெற்றிகளை,வாழ்வில் வெளியில் சொல்ல முடியாத வேதனைகளை, தாங்கி கொள்ள முடியாத பேரிழப்புகளை,நம்ப முடியாத வாழ்க்கை துரோகங்களை,

நிமிர முடியாத அளவுக்கு பெரிய விபத்துக்களை,உடலியல் பலவீனங்களை மற்றும் பெரிய ஏமாற்றங்களையும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வெவ்வேரு நபருக்கு கொடுத்து விட்டு போகிறது.


 எந்த ஒன்றும் நம்மை பாதிக்காத வரை அது பெரிய செய்தியாக மன கலக்கம் இன்றி சிறிய பச்சாதாபத்துடன் மட்டுமே மனம் நகர்கிறது.அது தனக்கு என்று வரும் போது மட்டுமே பெரிய மன குழப்பத்தை மற்றும் பயத்தை ஜாதகருக்கு கொடுத்து விடுகிறது.


 இது போன்ற வெவ்வேறு விதமான மனநிலை கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி வலம் வருகிறார்கள்.


 இது போன்ற வெவ்வேறு விதமான மனநிலை தன்மை கொண்ட மனிதர்கள் பலரை சந்திப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நாமும் வாழ்க்கை பயணத்தை நகர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படுகிறது.


இந்த மாறுபட்ட வாழ்க்கை முறை மற்றும் மாறுபட்ட மனநிலை ஆகிய இவை அனைத்திற்கும் காரணம் கிரகங்கள் நடத்தும் கோளாட்டமே காரணமாக அமைகிறது.


ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா!

ஆசை என்னும் தொட்டினிலே ஆடாதாரோ கண்ணா!


 கிரகங்கள் தான் மனித வாழ்வை வழி நடத்தி செல்கிறது. சிலரை குப்பையில் இருந்தோரை கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது.கோபுரத்தின் உச்சியில் இருப்பவரை குப்பைக்கு கொண்டு வருகிறது.,


  இயற்கை சுப கிரகங்கள் ஆன 

குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெரும்பாலான கிரகங்கள் பெற்றுள்ள நிலையில் அந்த கிரக தசைகள் தொடர்ந்து வரும் நிலையில் ஒரு மனிதன் கீழ் மட்ட நிலையில் இருந்தாலும் தனது கடின முயற்சியால் உயரிய நிலையினை அடைந்து விட முடிகிறது.


அதே நேரத்தில் பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் பெரும்பாலான கிரகங்கள் உடன் தொடர்பு கொள்ளும் நிலையில் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும் அவனை மெல்ல மெல்ல குறைந்து குப்பைக்கு வர வைத்து விடுகிறது.


என்ன தான் யோகமான அமைப்புக்கள் இருந்தாலும் அதனை அனுபவிக்க லக்கனாதிபதியின் வலிமை அவசியமான ஒன்றாகும்.லக்கனாதிபதி வலிமையாக இருந்தால் யோகத்தை அனுபவிக்கவும் இயலும்.அதே நேரத்தில் கடுமையான கஷ்டங்கள் வந்தாலும் அதனை தாங்கி எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கையில் வெற்றி பெறவும் முடியும்.


     ஒரு ஜாதகத்தில் சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன் மற்றும் ராகு ஆகிய நான்கு கிரகங்கள் எந்த ஒரு ஸ்தானத்துடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டாலும் அந்த ஸ்தானம் அல்லது அந்த கிரகமானது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி விடுகிறது.


ஒரு ஜாதகத்தில் குரு பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் எந்த நிலையில் உள்ள கிரகங்கள் உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள அந்த கிரகம் ஆனது பாவருடன் சேர்ந்து இருந்தாலும் அல்லது மறைவிடங்களில் இருந்தாலும் அல்லது பாவ கிரகமாகவே இருந்தாலும் அல்லது லக்கன அவ யோகராக இருந்தாலும் அந்த கிரகம் ஆனது அதன் தசையில் யோக பலனை தரக்கூடிய நிலைக்கு மாறி விடுகிறது.


சில குறிப்பிட்ட முக்கிய ஸ்தானங்கள் மற்றும் காரக கிரகங்கள் சிலவற்றை பின்வருமாறு பார்ப்போம்.


ஜாதகத்தில் திருமணத்தை குறிக்கும் ஸ்தானங்கள் 1,2,7,8 மற்றும் திருமண காரக கிரகம் சுக்கிரன் 


புத்திர ஸ்தானம் 5 மற்றும் புத்திர காரகன் குரு பகவான் 


மகா தன் யோகம் 2,9,11 மற்றும் தன காரகன் குரு பகவான் 


உப ஜெய ஸ்தானம் 3,6,9,10,11


சகோதரனுக்கு மூன்றாம் இடம் மற்றும் காரக கிரகம் செவ்வாய் ஆகும்.

 தாய்க்கு நான்காம் இடம், காரக கிரகம் சந்திரன் ,

தந்தைக்கு 9 ஆம் இடம் , காரக சூரியன் ஆவார் ‌தொழிலுக்கு 10-ஆம் இடம் காராக் கிரகம் சூரியன் மற்றும் சனி ஆவார் கடன் ,பிணி மற்றும் எதிர்ப்புக்கு ஆறாம் இடம் காரக கிரகம் சனி ,செவ்வாய் ஆகும்.

மாமனுக்கு புதன் பகவான் மற்றும் ஐந்தாம் இடம் ஆகும்.


நன்றி.


For online appointment 

Cell & WhatsApp & Gpay 


097151 89647 


Add another no 7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

உங்கள் ஜாதகத்தில் எப்படி இருந்தால் நல்லது?

 உங்கள் ஜாதகம் எப்படி இருந்தால் நல்லது.





செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஜாதகம் பார்க்க வரும் ஜாதகரின் பிறப்பு விவரங்களை இட்டு ஜாதகம் திரையில் வந்தவுடன் இவர்கள் எந்த பிரச்சினைக்காக நம்மிடம் ஜாதகம் பார்க்க வந்து இருக்கிறார்கள் ? 

என்பதை எளிதாக என்னால் ஒரு சில நிமிடங்களில் கணித்து விட முடியும்.


 நீங்கள் இந்த பிரச்சினைக்காக என்னிடம் ஜாதகம் பார்க்க வந்து இருக்கிறீர்கள் என்று கூறியவுடன் அவர்களுக்கு அவரது ஜாதகத்தின் மீதும் மற்றும் ஜோதிடராகிய என் மீதும் ஒரு முழு நம்பிக்கை வந்து விடுகிறது.


  பிறகு லக்கனம் அதன் அதிபதி இவர்கள் ஜாதகத்தில் எப்படி உள்ளார்கள் என்பதை ஆய்வு செய்து ஜாதகர் எப்படிப்பட்டவர் மற்றும் ஜாதகரின் குணாதிசயங்களை எடுத்து சொல்லுவதன் மூலம் பலன் பார்க்க வருபவர்களுக்கு நம் மீது அசாத்திய நம்பிக்கை வந்து விடுகிறது.


   பிறகு தசா புக்திகளை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது மனித வாழ்வியல் சம்பவங்களை துல்லியமாக எடுத்துரைக்க முடியும்.தசா புக்திகளை கொண்டு ஒரு மனிதன் வாழ்வில் எந்த எந்த கால கட்டங்களில் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடைபெற்றது என்பதை துல்லியமாக கூறும் போது பலன் பார்க்க வரும் ஜாதகர் முழுமையாக ஆர்வமாகி விடுவார்கள்.


ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாகக் கொண்டு தசா புக்தி பலாபலன்கள் துல்லியமாக கூறப்படுகிறது.


ஒவ்வொரு தசா புக்தி பலன்கள் அவரவர் லக்கினத்திற்கு ஏற்ப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற கிரகங்களுக்கு ஏற்ற மாதிரியே தசாபுத்தி பலன்களும் அமைகிறது 


தசா புக்தி பலன்கள் கொண்டு ஒரு ஜாதகர் எந்த கால கட்டங்களில் கடுமையான கஷ்டங்களை சந்தித்து இருப்பீர்கள்.எந்த கால கட்டங்களில் யோகம் தரும் தசைகள் நடைபெற்று வாழ்வின் இன்ப சுகங்களை அனுபவித்து இருப்பீர்கள் போன்ற பலன்களை துல்லியமாக கூற‌முடியும்.


 சிலர் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டப்பட்டு உழைத்து கஷ்டபட்டே சாக கூடிய துர்பாக்கிய நிலைக்கு அவர்களுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை அவ யோக தசா புக்திகளே தொடர்ந்து நடைபெற்று இருக்கும்.


 சிலருக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை தொடர்ந்து யோக தசைகளே நடந்த நிலையில் born with silver spoon ஆக பிறப்பிலிருந்து இறப்பு வரை யோகத்தை அனுபவிக்க கூடிய யோகம் நிறைந்த ஜாதகராக திகழ்வார்கள்.


சிலருக்கு குறிப்பிட்ட கால கட்டம் வரை அவயோக தசைகள் நடந்து பிறகு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நல்ல யோக தசைகள் நடக்கும் நிலையில் பிறந்து நாற்பது வயது வரை கஷ்டப்பட்டு பிறகு நன்முறையில் உழைத்து முன்னேறி வாழ்வின் பிற்பகுதியில் பெரும் யோகத்தை அனுபவிக்க கூடிய தன்மையை தருகிறது.


ஒருவர் ஜாதகத்தில் 1,2,7,8 ஆம் இடங்களில் சனி, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூன்று பாவ கிரகங்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் சிலருக்கு 36 வயதுக்கு மேற்பட்டோர் ஆக இருந்தாலும் இதுவரை கட்டாயம் திருமணம் நடைபெற்று இருக்காது என உறுதியாக ஜாதக பலன் கூறலாம்.


 புத்திர ஸ்தானத்தில் சனி செவ்வாய், ராகு தொடர்பு ஏற்பட்டு புத்திர காரகன் குரு பகவான் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை என்பதை உறுதியாக பலன் அளித்து விட இயலும்.வேறு வகையில் சுப கிரக தொடர்பு ஏற்படாத வரை அல்லது யோகம் தரும் தசை நடப்பில் வராதவரை ஜாதக பலனில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை.


 இதேபோல் எந்த ஸ்தானத்தில் சனி செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள அந்த ஸ்தானம் தொடர்புடைய பலன் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படலாம் அல்லது பலன் கிடைக்காமல் கூட போய் விடலாம்.இவை அந்த ஸ்தான அதிபதி,காரக கிரகம் மற்றும் நடக்கும் தசாபுத்தி ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.


அதேநேரத்தில் இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள அந்த ஸ்தானம் தொடர்புடைய நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.அந்த ஸ்தான அதிபதி ,காரக கிரகம் மற்றும் நடக்கும் தசா புக்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பலனில் கூடுதல் அல்லது குறைவு ஏற்படும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


. 097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்),

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

குழந்தை பாக்கியம் கால தாமதமாகி கொண்டு செல்லும் ஜாதகம்

 குழந்தை பாக்கியம் கால தாமதமாகி கொண்டு செல்லும் ஜாதகம் .




(என்னிடம் ஜாதக பலன் பெற்ற உதாரண ஜாதகம். விளக்கம்.)


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் பற்றி தெரிந்து கொள்ள கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருடைய ஜாதகத்திலும் லக்னம் மற்றும் ராசி ஆகிய இரண்டிற்கும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம், புத்திர ஸ்தான அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகிய மூன்று வழிகளில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


 என்னிடம் ஜாதகம் பார்க்க ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் நின்று ஐந்தாம் இடத்தை சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவரும் வெவ்வேறு இடங்களில் நின்று பார்வை செய்யும் நிலையில் புத்திர பாக்கியம் கால தாமதமாக ஆகி கொண்டு செல்கிறது.ஆனால் இவரது ஜாதகத்தில் புத்திர காரகன் குரு பகவான் எவ்வித பங்கமும் அடையாத நிலையில் குழந்தை பாக்கியம் கட்டாயம் இருக்கும் என சொல்லி அனுப்பினேன்.


  என்னிடம் ஜாதகம் பலன் பெற வந்த மற்றொருவர் ஜாதகத்தில் மீனம் லக்கினம் மற்றும் ராசி ஆகிய நிலையில் ஐந்தாம் இட அதிபதி சந்திரன் பகவான் செவ்வாய் உடன் இணைந்து ஆறாம் இடமான சிம்மத்தில் இருக்க கும்பத்தில் உள்ள சனி பகவான் தனது சம சப்தம பார்வையில் புத்திர ஸ்தான அதிபதி சந்திரனை பார்வை செய்ய ,

செவ்வாய் பகவான் ஆனவர் சந்திரன் உடன் இணைந்து இருக்க அதாவது புத்திர ஸ்தான அதிபதியுடன் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு பாவ கிரகங்கள் தொடர்புடன் இருக்க சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் விருச்சிகம் வீட்டில் உள்ள குருபகவானை பார்வை செய்ய புத்திர பாக்கியம் கால தாமதம் ஆகி கொண்டே செல்கிறது.


என்னிடம் ஜாதக பலன் பெற வந்த மூன்றாம் நபரின் ஜாதகத்தை பார்போம்.ரிஷப லக்கனம் இரண்டாம் இடத்தில் செவ்வாய், ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் எட்டாம் இடத்தில் புதன் பகவான் மற்றும் பதினொன்றாம் இடத்தில் சனி,கேது மற்றும் சந்திரன்.


 மேற்கண்ட இந்த ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் நின்று மிதுனத்தில் உள்ள செவ்வாய் பகவான் தனது நான்காவது பார்வையால் புத்திர ஸ்தானத்தை பார்வை செய்ய ,மீன வீட்டில் உள்ள சனிபகவான் தனது சம சப்தம பார்வையால் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தையும் அதில் உள்ள ராகு பகவானை பார்வை செய்கிறது. ஆக ஐந்தாம் இடத்திற்கு சனி, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூவரின் தொடர்பு ஏற்பட்டு மிகுந்த பாவத்துவம் அடைகிறது.


 இவை மட்டுமல்லாமல் புத்திர ஸ்தான அதிபதி புதன் பகவான் செவ்வாய் பகவானுடைய ஏழாவது பார்வையும் மற்றும் சனி பகவானுடைய பத்தாம் பார்வையும் பெற்று புத்திர ஸ்தான அதிபதியும் பாவத்தன்மை அடைந்து பலவீனம் அடைந்து விட்டார்.


இந்த நிலையில் புத்திர காரகன் குரு பகவான் நீசம் அடைந்த நிலையில் ஸ்தானம் அதன் அதிபதி மற்றும் காரகன் ஆகிய மூன்றும் கெட்டு போன் நிலையில் புத்திர தோஷம் கடுமையான நிலையில் உள்ளது..


 லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரண்டிற்கும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் நிற்பதும் அந்த ஸ்தான அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகியவற்றுடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் மூன்று பாவ கிரகங்கள் தொடர்பு கொள்ள கொள்ளும் பொழுது கடுமையான புத்திர தோஷம் தருகிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay


097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் 'போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     MmSc,M.A, BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் , ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Thursday, 20 November 2025

உங்கள் ஜாதகத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

 உங்கள் ஜாதகத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? 



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர்  எப்படிப்பட்ட வாழ்க்கை நிலை கொண்டவராக இருப்பார் என்பதை அவரது ஜாதகத்தில் உள்ள கிரக நிலை அமைப்புகளை ஆய்வு செய்து பார்த்து  கண்டறியலாம்.

  

 உங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்கள் முதலில் உங்கள் பிள்ளையின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் எப்படிப்பட்ட வரன் அமையும் என்பதை தெரிந்து கொண்டால் அதற்கு ஏற்றார் போல் தேர்வு செய்து கொள்ளலாம்.


பிறகு தங்களது மகனுக்கு / மகளுக்கு வரக்கூடிய ஆண்/ பெண்ணின் ஜாதகம் கிடைத்தால் அதனை நன்கு கணித்து பார்க்கும் ஜோதிடரிடம் கொண்டு போய்  அந்த ஆண / பெண் ஜாதகத்தினை ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள் அடிப்படையில் லக்கனம் அதன் அதிபதிகளை  துணையாக கொண்டு நடக்கும் தசா புக்திகள் உடன் ஒப்பிட்டு பார்த்தால் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற ஜோடியை நன்கு ஆராய்ந்து கண்டறியலாம்.


இவ்வாறு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து பார்க்காமல் வெறும் நட்சத்திரம் பொருத்தங்களை மட்டுமே வைத்து கொண்டு செய்யும் திருமணங்கள் தான் பெரும்பாலும் தோல்விகளிலும் மற்றும் பிரச்சினைகளிலும் சென்று முடிகிறது.


 இதே போல புதிதாக ஒரு தொழில் ஆரம்பிக்க நினைத்தால் உங்கள் ஜாதகப்படி எந்த தொழில் செய்தால் சால் சிறந்தது என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


    இதற்கு உங்கள் ஜாதகத்தில் நவ கிரகங்களில் எந்த கிரகம் அதிக சுபத்துவ படிநிலை கொண்டு உள்ளது என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.அதனை கண்டறிந்து அவை ராசி மற்றும் லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொண்டு உள்ளதா ? என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.மேலும் தொழில தொடங்க உகந்த காலம் எது என்பதை தசா புக்தி அடிப்படையில் லக்கனாதிபதி வலிமை போன்ற படி நிலைகளை கொண்டு ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

  

    இதே போல கல்வி கற்கும் உங்கள் பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் எந்த துறையினை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதை ஜாதகத்தில் உள்ள எந்த கிரகம் அதிக சுபத்துவ படிநிலை கொண்டு தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும் கிரகங்கள் சார்ந்த படிப்பை தேர்வு செய்து படித்தால் எதிர் காலத்தில் அந்த ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர் ஆக திகழலாம்.


 திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் தாமதம் ஆகி கொண்டு செல்கிறதா ? உங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை துணைவர் ஆகிய இருவரது ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கினத்திற்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானம் அதன் அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகிய மூன்று வகைகளில் நடக்கும் தசா புக்திகளுடன் ஒப்பிட்டு பார்த்து குழந்தை பிறப்பு பற்றிய கேள்விகளுக்கு விடை தரலாம்.


     நீங்கள் வீடு மற்றும் நான்கு சக்கர வாகனம் போன்றவை வாங்க வேண்டும் எனில் உங்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் அதன் அதிபதி மற்றும் கார்க் கிரகமான சுக்கிரன் ஆகிய மூன்றையும் நடக்கும் தசா புக்தி மற்றும் லக்கனாதிபதி வலிமை ஆகியவை பொறுத்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


   உங்கள் ஜாதகத்தில் தந்தை நிலையினை பற்றி அறிந்து கொள்ள ஒன்பதாம் இடம் அதன் அதிபதி மற்றும் காரக கிரகமான சூரியன்  ஆகிய மூன்றையும் நடக்கும் தசாபுத்தி மற்றும் லக்னாதிபதி வலிமையுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


 பெரும்பாலும் சூரியனுடன் சனி அல்லது ராகு இணைந்து இருப்பதால் அல்லது சனி பார்வை செய்வதோ ஒன்பதாம் இடத்தில் சனி அல்லது ராகு இருப்பது   தந்தை மகன் உறவு நிலையை பாதிக்கும்..


   உங்கள் ஜாதகத்தில் உங்களது  தாய் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள தாய் ஸ்தானமான நான்காம் இடம் அதன் அதிபதி மற்றும் காரக கிரகமான சந்திரன் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


 சந்திரன் உடன் ராகு அல்லது சனி இணைவு அல்லது பார்வை தாய் உறவு நிலை பாதிப்பு அடைய செய்கிறது.நான்காம் இடம் அதன் அதிபதி நிலையை பொறுத்து பாதிப்பு நிலை அமைகிறது 


ஒருவர் வெளி நாடு செல்வதற்கு பார்க்க வேண்டும் எனில் ராசி மற்றும் லக்கினத்திற்கு எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்கள் சுப தன்மை உடன் இருக்க கூடிய சூழ்நிலையில் நடக்கும் தசா புக்தி அடிப்படையில் வெளிநாடு செல்வதற்கான யோக அமைப்பு அமைகிறது..


அரசு வேலை கிடைக்குமா ? என்ற ஆராய்ச்சிக்கு உங்கள் ஜாதகத்தில் சிம்மமும் அதன் அதிபதி சூரியன் வலிமை அடைந்து இருக்க வேண்டும்.நட்க்கும் தசை புக்தி ஒத்துழைக்க வேண்டும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.உங்கள்

கிரகங்கள் எப்படி ஜோதிட பலனை தருகிறது.

 கிரகங்கள் எப்படி ஜோதிட பலனை தருகிறது .




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருந்து தரும் பலனை போன்று மற்றவர்கள் ஜாதகத்திலும் அதே மாதிரியான நிலையில் இருந்தாலும் ஒன்று போல் ஜாதக பலனை தந்து விடுவது கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


 இது போன்ற ஜோதிட பலன் ஜாதகரை பொறுத்து மாறுபட கூடிய பல்வேறு காரண காரியங்களை அலசி ஆராய்ந்து பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.அதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.


     1.  ஒரு கிரகம் ஒரு வீட்டில் எத்தனை டிகிரியில் உள்ளார் ,வீடு கொடுத்தவன் யார் ?  அவர் இயற்கை சுபரா? பாவரா?


       2.  எந்த கிரகம் பார்வை செய்கிறது ? அவர் எப்படி பட்டவர்? அவரும் இயற்கை சுபரா? அல்லது பாவரா? 


      3.எத்தனை  கிரகத்துடன் எத்தனை டிகிரி அளவில் இணைந்து உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்.இதில் எட்டு பாகைக்குள்ளாக இணைந்து இருப்பின் இணைந்து உள்ள கிரகத்தால் முழுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.  பதின்மூன்று பாகைக்கு உள்ளாக இணைந்த நிலையில் ஐம்பது சதவீதம் பாதிப்புக்கு உள்ளாகும். 

இருபத்தி ரெண்டு பாகை அளவில் இணைந்த நிலையில் இரண்டு கிரகங்களும் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை.ஒருவரை ஒருவர் எவ்வித பாதிப்பும் அடைவதில்லை.


  ஒரு குறிப்பிட்ட கிரகத்துடன் இயற்கை சுப கிரகம் இணைந்து இருப்பின் அந்த ஒரு குறிப்பிட்ட கிரகமானது சுப தன்மையை அடைந்து விடுகிறது.பாவருடன் இணைந்து இருப்பின்  பாவ தன்மையை அடைந்து விடுகிறது.


4)    இவை தவிர அந்த ஒரு குறிப்பிட்ட கிரகமானது அம்ச வீட்டில் சுப வர்க்கம் ஏறி இருக்கிறாரா ? அல்லது பாவ வர்க்கம் ஏறி உள்ளாரா ? என்பதை கவனிக்க பட வேண்டும்.ஒரு வேளை ராசியில் ஒரு குறிப்பிட்ட கிரகமானது பலவீனம் அடைந்து இருந்தாலும் அம்சத்தில் சுப வீடு. ஏறி இருந்தால் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


    4) நடக்கும் தசா புக்தி என்ன ? நடக்கும் தசா புக்திக்கும் அந்த ஒரு குறிப்பிட்ட கிரகத்துக்குமான தொடர்பு எப்படி இருக்கிறது.


 இது போன்ற பல்வேறு வினாவுக்கான விடை தேடும் போது தான் இந்த பலனில் மாற்றம் ஏற்படுவதற்கான காரணம் புரிகிறது


  5)      ஒப்பிடக்கூடிய இருவர் ஜாதகத்திலும் மீனம் வீட்டில் குரு பகவான் இருந்தாலும்  இருவருக்கும் குரு பகவான் ஒரே மாதிரியான ஜாதக பலன்களை தந்து விடுவது கிடையாது..


 ஒருவர் ஜாதகத்தில் மீனம் வீட்டில் உள்ள குரு பகவானை சனி பகவான் பார்வை செய்தால் பாவத்துவமான குரு பகவான் ஒரு மாதிரியான பாவத்துவமான பலன்களையும் மற்றும் அதே குரு பகவானை வளர்பிறை சந்திரன் கேந்திரத்திற்கு ஆறு,ஏழு மற்றும் எட்டாம் வீட்டில் குரு பகவான் இருந்தபோது சந்திரன் அதியோகத்தில் சுபத்துவ தன்மையை அடைந்து நல்ல பலனை தரக்கூடிய நிலைக்கு உட்படுகிறது.


6) ஒரு தசை அவ யோக தசையாக நடப்பில் இருந்து  கோச்சார அடிப்படையில் ஏழரை சனி அல்லது அஷ்டம சனி நடப்பில் இருக்கும் அந்த கிரகம் தரும் யோக பலனை குறைக்கிறது.


 கோச்சார அடிப்படையில் ஏழரை அல்லது அஷ்டம சனி நடைபெறும் காலத்தில் யோக தசை நடப்பில் இருந்தால் கோச்சார பலன்களிள் பாதிப்பு ஆனது பெரிய அளவிற்கு பாதிப்பை தருவதில்லை.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & gpay no 


 097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்),

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

 கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

Monday, 17 November 2025

மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய

 மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைய...




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


"அன்பான மனைவி 

அழகான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் 

நேசம் ஒரு கோடி

நெஞ்சமேனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே !"


 ஒரு மனிதன் வாழ்க்கையில் நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அவனது வாழ்க்கை சந்தோஷ சாம்ராஜ்யம் ஆகிவிடும்.


வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட 


"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது "என்கிறார்.


    அன்பான மனைவி அமைந்தால் எப்படி இல்வாழ்க்கை இருக்கும் என்பதை கூறிய அதே திருவள்ளுவர் அன்பு இல்லாத மனைவி அமைந்தால் எப்படி இருக்கும் என்பதை கீழ்கண்ட குறள் மூலம் அழகாக படம் பிடித்து காட்டுகிறார்.


"அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கன் வற்றல் மரம் தளிர்த்தற்று".


 அன்பு இல்லாத அல்லது மகிழ்ச்சி இல்லாத மண வாழ்க்கை ஆனது வறண்ட பாலை நிலத்தில் பட்ட மரம் தளிர்த்தால் பயனற்றதாகவும் நிலையற்றதாகவும் இருக்கும் அது போல அமைந்து விடும் 


 இவ்வாறு அன்பு அகத்தில் இல்லாத மனைவி அமைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ் மூதாட்டி பின்வருமாறு பாடலாக தெரிவிக்கிறார்.

 

தமிழ் மூதாட்டி ஒளவையார் 


"பத்தாவுக்கேற்ற

பதிவிரதை

உண்டானால்

எத்தாலுங் 

கூடி இருக்கலாம் 

சற்றேனும் 

ஏறுமாறாக

இருப்பாளே

யாமாகிற்

கூறாமல் 

சந்நியாசம் 

கொள்ள"


 கட்டிய மனைவி ஏறுக்கு மாறானால் சற்றேனும் வெட்கப்படாமல் சன்னியாசி ஆகி விடு என்கிறார்.


 நாம் இந்த பதிவில் மகிழ்ச்சியான

 மண வாழ்க்கை அமைய என்ற தலைப்பின் கீழ் விளக்கமாக மற்றும் விரிவாக பார்க்க இருக்கிறோம்.


 "குத்து விளக்காக குல மகளாக

 நீ வந்த நேரம் நான் பாடும் ராகம் 

நீ வந்த நேரம் நான் பாடும் ராகம் 

என் வானிலே நீ வெண்ணிலா!

நட்சத்திரம் உன் கண்ணிலா!"


   ஒருவர் ஜாதகத்தில் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைய வேண்டுமென்றால் அவர்கள் ஜாதகத்தில் திருமண ஸ்தானம் என்று அழைக்க கூடிய இலக்கணம் என்ற ஒன்றாம் இடம், குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம் களத்திர ஸ்தானம் என்ற ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு,கேது மற்றும் தேய்பிறை சந்திரன் ஆகிய பாவ கிரகங்கள் இடம் பெறாமல் 1,2,7,8 ஆம் இடங்களில் பாவ கிரகங்கள் பார்வை செய்யாமல் இயற்கை சுப கிரகமான குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு களத்திர காரகன் சுக்கிரன் பகவானும் நன் முறையில் சுப தன்மை உடன் அமைந்து இருக்க வேண்டும்.


        ஜாதக கட்டத்தில்.1,2,7,8 ஆம் அதிபதிகளான லக்கனாதிபதி ,குடும்ப அதிபதி ,களத்திர ஸ்தான அதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தான அதிபதி ஆகிய நால்வரும் பாவ கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை தொடர்பை பெறாமல் சுப கிரக பார்வை மற்றும் சேர்க்கை தொடர்பு பெற்றிருக்க வேண்டும் இவ்வாறு பெற்றிருந்தால்

மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும்.


  தாம்பத்ய சுகத்தை தரும் சுக்கிரன் பகவான் கேந்திர, கோணங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலிமை பெற்று இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் நல்ல தாம்பத்ய சுகத்தை அனுபவிக்க கூடிய தன்மை உண்டாகும்.


 நிறைவான தாம்பத்ய சுகத்தை அனுபவித்த நிலையில் தம்பதிகளுக்கு இடையிலான நல்ல மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைந்து விடுகிறது.பல பிரச்சினைகளுக்கு மூல வேர் ஆக திகழ்வது இந்த தாம்பத்ய சுக திருப்தியின்மையே ஆகும்.


 இதன் பிறகு எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைவதற்கு லக்கனாதிபதியின் வலிமையும் மற்றும் நல்ல யோக தசா புத்திகளும் முழு முதல் காரணமாக விளங்குகிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


   097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

 ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

இரண்டாம் இடம் ஓர் ஆய்வு

 இரண்டாம் இடம் ஓர் ஆய்வு 



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதக கட்டத்தில் இரண்டாம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்பம் மற்றும் நேத்திரம் (பார்வை) ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ள உதவும் ஸ்தானம் ஆகும்.


 இரண்டாம் இடம் என்பது எந்த வித வரையறைக்குள் அடங்காத ஸ்தானம் ஆகும்.


 இவை கேந்திர,கோண ,மறைவிட மற்றும் உப ஜெய ஸ்தானம் ஆகிய எந்த கட்டுக்குள் அடங்காத ஸ்தானம் ஆகும்.


 இவை  ஒரு மாறுபட்ட ஸ்தானமாகும். இவை தன பாக்கிய மற்றும் லாபம் ஆகிய (2,9,11)  மூன்று திரிகோண ஸ்தானம் ஆகும்..இவை தன ஸ்தானத்திற்கு தொடர்பு  கொண்ட  ஏனைய பிற ஸ்தானங்கள் ஆகும்.


     தன ஸ்தானத்திற்கு காரக கிரகம் குரு பகவான் ஆவார் .குரு பகவான் ஆனவர் தன ஸ்தானத்தில் இருந்தாலும் தன ஸ்தானத்தை பார்த்தாலும் அல்லது தனாதிபதியோடு சேர்க்கை பெற்ற நிலையில் இருந்தாலும் ஜாதகருக்கு மிகுந்த தன யோகத்தை கொடுக்கிறது.


    தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன்,ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் இடம்பெறாமல் அல்லது சனி , செவ்வாய் ஆகிய இருவரும் தனித்து அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் பார்வை செய்யாமல் இயற்கை சுப கிரகமான குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற இயற்கை சுப கிரகங்கள் சேர்க்கை பெற்ற நிலையில் நின்றாலும் அல்லது பார்வை பெற்ற நிலையில் இருந்தாலும் தன ஸ்தானமானது சுப தன்மை அடைந்து நல்ல பலனை தரக்கூடிய நிலைக்கு உட்படுகிறது.


     இதேபோல் தன காரகன் குரு பகவான் எவ்வித பங்கம் அடையாமல் சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையிலோ அல்லது எவ்வித  கிரக தொடர்பு இன்றி தனித்த நிலையிலான குரு பகவான் இருந்தால் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.


 இரண்டாம் இடத்தை கொண்டு ஒருவரது குடும்ப வாழ்க்கை எப்படி அமையும் என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.இரண்டாம் இடத்தில் மேற்குறிப்பிட்ட பாவ கிரகங்கள் இடம் பெறாமல் சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் ஜாதகருக்கு நல்ல குடும்பம் வாழ்க்கை அமைகிறது.


   மாறாக பாவ கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை அமைவதில் கால தாமதம் ஏற்படுகிறது.அல்லது குடும்பத்தை விட்டு பிரிந்து தூரத்தில் வசிக்க கூடிய நிலையினை தருகிறது.


 இரண்டாம் இட அதிபதி பாவ கிரகங்கள் ஆக இருந்தால் தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இல்லாமல் இருப்பது நல்லது.


     இரண்டாம் இட  அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்தால் அவை  இரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பது சாதகருக்கு நல்ல பலனை தரும்.


 ஒருவர் கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடிய தன்மை படைத்தவரா ? என்பதை அவருடைய ஜாதகத்தில் இரண்டாம் இடத்தை ஆய்வு செய்து பார்த்தால் நிச்சயமாக புலப்படும்.


ஒருவருடைய கண் பார்வை அவருடைய ஜாதகத்தில் இரண்டாம் இடத்தை ஆய்வு செய்து பார்த்தால் புலப்படுகிறது. பொதுவாக இரண்டாம் இடத்தில் சூரிய பகவான் இடம் பெற்றிருந்தால் அவர்களுக்கு கண் பார்வை கோளாறு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டாகிறது.


  இரண்டாம் இடத்தில் வளர்பிறை சந்திரன் இருப்பின் அவர் குளிர்ந்த பேச்சுக்கு உரியவர் ஆவார்.


இரண்டாம் இடத்தில் செவ்வாய் பகவானை பெற்று இருந்தால் முரட்டுத்தனமாக பேச்சுக்கு உரியவர் ஆவார். 


இரண்டாம் இடத்தில் குரு பகவான்  இருந்தால் கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவராகவும் மற்றவர் மனது நோகாத வண்ணம் இனிமையாக பேசக் கூடியவராக திகழ்வார்.


இரண்டாம் இடத்தில் சனி பகவான் இருந்தால் உண்மைக்கு புறம்பான விஷயங்களை மற்றவர் நம்பும்படி பேசக் கூடியவராக இருப்பார். 


இரண்டாம் இடத்தில் ராகு பகவான் இருந்தால் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் கபடதாரியான பேச்சுக்கு உரியவர்.


இரண்டாம் இடத்தில் கேது பகவான் வாக்குப் பலிதம் உடையவர் ஆவார்.


இரண்டாம் இடத்தில் புதன் பகவான் இருந்தார் நல்ல பேச்சு வன்மை மிக்கவராக இருப்பார். 


இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் நன்றாக கலகலவென்று பேசக்கூடியவராக இருப்பார். 


மேற்குறிப்பிட்ட இந்த பலன்கள் அனைத்தும் பொது பலனே ஆகும். அந்த கிரகத்துக்கு வீடு கொடுத்தவன் மற்றும் பார்வை செய்யும் கிரகங்கள் ஆகியவற்றை பொறுத்து பலனில் மாற்றம் ஏற்படும்.


இரண்டாம் இடம் ஒரு பொது மாரக ஸ்தானமாக கருதப்படுகிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


My another cell no 

 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.