Saturday, 19 September 2020

ஜோதிட நுணுக்கங்கள்

                             


     ஜோதிட நுணுக்கங்கள் 


     செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒரு ஜாதகத்தில் பாவ கிரகங்களாகவே இருந்தாலும் திரிகோணாதிபதிகளான ஒன்று , ஐந்து மற்றும் ஒன்பதுக்கு  உடைய நட்சத்திர சாரம் பெற்றிருக்கும்போது அதன் திசை காலங்களில் யோக பலனை சாதகருக்கு தந்து விடுகிறது.


  அந்த வகையில் தான் ஒரு கிரகம் பாபக் கிரகமாக இருந்தாலும் மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் நிற்கும்பொழுது அவை பெரும்பாலும் கோண அதிபதிகள் உடைய நட்சத்திர சாரத்தில் கட்டாயம்  நிற்க்கும் என்ற வகையில்  அந்த ஜாதகருக்கு அதன் தசை காலங்களில் யோக பலனை தரும் என்றார்கள்.


  உதாரணமாக மீன ராசியாக எடுத்துக்கொண்டால் மூன்றாம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் லக்னாதிபதி குருவுக்கு யோகத்தை தரக்கூடிய நட்பு கிரகங்களான சூரியன்,  ஐந்தாமிடம் அதிபதியான சந்திரன்  மற்றும் ஒன்பதாமிட அதிபதியான செவ்வாயின் நட்சத்திரக் காலில் நிற்கும் . (அதாவது கார்த்திகை ரோகினி மற்றும் மிருகசீரிடம்).


   இதேபோல பதினொன்றாம் இடத்தில் நிற்கும் கிரகங்கள் லக்னாதிபதி குருவுக்கு நட்பு கிரகங்களான சூரியன் 5-க்குடைய சந்திரன் மற்றும் 9-க்குடைய செவ்வாய் நட்சத்திர காலில் இருக்கும்.( அதாவது உத்திராடம் ,திருவோணம் அவிட்டம்).


   ஒரு ஜாதகருக்கு எந்த தசை மிகுந்த யோக பலனைத்தரும் என்ற பொதுவான வினாவை எழுப்பினால் ஜோதிடர்களாகிய நாம்  அனைவரும் தரக்கூடிய பதில் கோணாதிபதிகள் மற்றும் கேந்திர அதிபதிகள் என்பதே ஆகும்.


   இதில் கேந்திராதிபதி களைவிட கோண அதிபதிகள் மிகுந்த யோகத்தை தரும் என்பதன்  உள் அர்த்தத்தை கவனித்துப் பார்த்தால் கோணத்தில் நிற்கும் கிரகங்களின் நட்சத்திர சாரம் ஒரே நட்சத்திர சாரம் உடையதாக இருக்கும். 


   உதாரணமாக ஒருவர் மேஷ ராசியில் ஜெனித்து இருப்பாராயின் அதன் திரிகோண ஸ்தானங்களாவன மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ஆகும்.


  மேஷத்தின் நட்சத்திர பாதம்

 அசுபதி முழுவதும் (கேது பகவான்)

பரணி முழுவதும் (சுக்கிரன் பகவான்)

கார்த்திகை முதல் பாதம் (சூரியன் பகவான்)


சிம்மத்தில் நட்சத்திர பாதம்

 மகம் முழுவதும் (கேது பகவான்)

பூரம் முழுவதும் (சுக்கிரன் பகவான்)

உத்ராடம் முதல் பாதம் (சூரியன் பகவான்)


 தனுசு ராசி நட்சத்திர பாதம்.

  மூலம் முழுவதும் (கேது பகவான்)

பூராடம் முழுவதும் (சுக்கிரன் பகவான்)

உத்ராடம் முதல் பாதம் (சூரியன் பகவான்)


  ஆக மூன்று திரிகோணாதிபதி ஸ்தானங்களும் கேது, சுக்கிரன் மற்றும் சூரியனுடைய நட்சத்திர பாதங்களையே கொண்டுள்ளது.


 இதுவே கோண அதிபதிகள் யோகங்களை தரவல்லது என்பதன் சூட்சும உண்மைகள் ஆகும்.


  கேந்திராதிபதிகள் இயற்கை சுப கிரகங்களாக இருக்கும்பொழுது அது கேந்திர ஸ்தானமான 

1, 4, 7, 10 அமையாமல் மறைவிடங்களில் அல்லது கோணங்களில் அமரும் பொழுது மிகுந்த யோக பலனை சாதகனுக்கு தருகிறது.


   இயற்கை சுப கிரகங்களாக கேந்திராதிபதிகள் இருந்து அது கேந்திரங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பலம் பெற கேந்திராதிபத்திய தோஷத்தை  தந்து விடுகிறது. எனவே அவை தரும் பலன்கள் மட்டுப்படுத்தப்படுகிறது.


  பாவ கிரகங்கள் கேந்திரங்களில் அமரும்பொழுது மிகுந்த யோக பலனை தந்து விடுகிறது.


   மேலும் ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நிற்கும் பொழுது அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை தருகிறது.


  ஒரு கிரகம் எந்த நிலையில் பலவீனப்பட்டாலும் அதாவது அஸ்தமனம்,மறைவிடம் ,

பகை ,பாவ கிரக தொடர்பு போன்ற வகைகளில் பலவீனப்பட்டு நிற்கும் கிரகங்களை வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன் மற்றும் தனித்த புதன் பகவான் தொடர்பு கொள்ள அந்த கிரகங்களின் பாவத்துவ தன்மை மாறி சுபத்துவ தன்மையை அடைகிறது.


  கிரகங்கள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நிற்பது  ஆட்சிக்கு நிகரான பலன்களை ஜாதகருக்கு  தாங்கள் சொந்தவீடு வழியாக அதன் பாபத்துவம் மற்றும் சுபத்துவ தன்மைக்கு ஏற்ப தனது தசை காலங்களில் செய்கிறது.


  சூரியனை குறிப்பிட்ட பாகைக்குள் நெருங்கி வரும் கிரகங்கள் அஸ்தமனம் அடைகிறது. அவ்வாறு அஸ்தமனம் செய்யும் கிரகத்தின் பலனை சூரியன் தனது தசை காலங்களில் செய்கிறது.


  முழுமதி சந்திரனின் பார்வை பலனானது சமசப்தமான ஏழாம் வீட்டில் விழும்போது அதன் ஒளி சிதறல் ஆறு மற்றும் எட்டாம் வீடுகளிலும் விழும் என்பதால் சந்திரனுக்கு 6,7,8 ல் அமரும் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், மற்றும் தனித்த புதன் மிகுந்த யோக பலனை தருகிறது.பாவ கிரகங்கள் அமர்ந்து இருப்பினும் அதன் பாவ தன்மை நீங்கி அதன் தசை காலங்களில் நல்ல பலனை தந்து விடுகிறது.


  பொதுவாக இயற்கை சுப கிரகமான குரு பகவானுக்கு 5,7,9 ஆம் இடங்களை பார்வை செய்கிறது.குரு பார்க்கும் ஸ்தானங்களும் மற்றும் அதில் அமர்ந்து இருக்கும் கிரகங்களும் சுமத்தும் அடைகிறது என்பது பொதுவான விதியாகும்.


  சில நேரங்களில் குரு பகவான் பார்வையானது மேற்குறிப்பிட்ட ஸ்தானங்களில் விழுந்து அந்த ஸ்தானத்தையும் மற்றும் கிரகங்களையும் சுபத்துவ படுத்தாமல் இருந்து விடுவது உண்டு.அதன் தசை காலங்களில் யோக பலனை தராமல் போய்விடுகிறது .


காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்க்கும்போது நாம் கிரகங்கள் பார்வையினை பாகை அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும் பொழுது தான் அதன் உண்மை புலப்படுகிறது.


   மீன வீட்டில் 28 டிகிரிக்கு பிறகு அமரும் குரு பகவான் கடக வீட்டில் முதல் மூன்று டிகிரிக்குள் அமரும் ராகு பகவானை பார்வை செய்வது இல்லை. இங்கு குரு பார்வை ஐந்தாம் வீட்டில் விழுவதைவிட மிகுதியாக ஆறாம் வீட்டினையே அதிக பார்வை செய்கிறது.


 இதனடிப்படையில் ஏனைய பார்வை ஸ்தானமான ஏழு மற்றும் ஒன்பதாம் இடங்களுக்குப் பதிலாக எட்டு மற்றும் பத்தாம் இடங்களுக்கு மிகுதியாக குருபகவான் பார்வை செய்கிறது.


    இயற்கை சுப கிரகங்கள் பாவ கிரகங்கள் உடன் இணையும் பொழுது சுபக்கிரகங்கள் தனது சுபத்தன்மை இழக்கிறது. பாவ கிரகங்கள் சுபத்தன்மை அடைகிறது.

இந்த வகையில் குரு சனி இணைவு குருவால் சனிபகவான் சுபத்துவம் அடைகிறது.


  உச்சம் பெற்ற கிரகங்கள் நீசம் பெற்ற கிரகங்கள் உடன் இணையும்போது உச்சம் பெற்ற கிரகங்கள் தனது உச்ச ஒளியை நீச்சம் பெற்ற கிரகங்களுக்கு தந்து அதன் ஒளி அளவை இழுக்கிறது.


  மீன வீட்டில் சுக்ரன், புதன் இணைவு நீசம் பெற்ற புதன் உச்ச சுக்கிரன் ஒளியைப் பெற்று அதை திசை காலங்களில் சுக்கிரனை விட மிகுந்த யோக பலனை தருகிறது.


   இயற்கை பாவ கிரகங்கள் அல்லது அவயோக கிரகங்கள் உபஜெய ஸ்தானமாகிய 3,6,10,11 ஆம் இடங்களில் நட்பு நிலையில் நிற்க அதன் தசை காலங்களில் நல்ல பலன்களை தருகிறது.


  ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்ற நிலையில் அதன் திசை காலங்களில் யோக பலனை தருகிறது.


   ஒரு வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் 22 பாகைக்குள் இருப்பினும் ஒரே வீட்டில் இருப்பதாக கருத முடியாது.வெவ்வேறு வீட்டில் இருப்பினும் 8 அல்லது 13 பாகைக்குள் இரு கிரகங்கள் இருப்பின்  ஒரே வீட்டில் இருப்பதாக கருதி பலன் எடுக்கப்பட வேண்டும்.


  நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப் & டெலிகிராம்

  9715189647


  செல்

     9715189647

      7402570899


                           



   அன்புடன் 

சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன் (ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.


My website

 www.astroravichandransevvai.in

No comments: