அதிக சுபத்துவம் ஆன கிரகத்தினை கண்டறிவது எப்படி?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
வேதியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று ஆசிரியப் பணியிலும், இலக்கியத்தையும் மற்றும் கதை புத்தகங்களையும் தேடி விரும்பிப் படிக்கும் ஆர்வம் உடைய எனக்கு எப்படி சோதிடத்தின் மீது ஆர்வம் வந்தது என்பதை ஆராய்வதன் வழியாகவே இந்த சுபத்துவமான தன்மை தரும் பலன்களை அறிந்து கொள்ள இயன்றது.
இரசாயன ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டிய என்னை அவ்வழி தவிர்த்து கிரக ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது எவ்வாறு என ஆய்வு செய்ய மேற்கண்ட சுபத்துவதன்மைதான் காரணம் என்பதை எண்ணும்போது கிரகங்கள் நடத்தும் கோளாட்டத்தை எண்ணி வியக்காமல் இருக்க இயலவில்லை.
மீன் லக்கனம் மற்றும் மீன் ராசியில் பிறந்த என்னை ஆசிரியராகவும் மற்றும் சோதிடராகவும் மாற்றியதில் வியப்புஏதும் இல்லை.
மீன லக்கனத்தில் வளர்பிறைக்கு அருகில் அமைந்த சந்திரன் ஏழாம் பார்வையாக கன்னியில் உச்சம் பெற்ற புதனை பார்வை செய்து அதிக சுபத்துவம் பெற்ற கிரகமாக புதன் பகவான் மாறியதன் விளைவாக இந்தத் துறையில் என்னை அறியாமல் எனக்கு மிகுந்த ஈடுபாடு வந்தது. தற்பொழுது சோதிடத்தை தவிர வேறு எந்த நூல்களையும் படிப்பதில்லை என்ற நிலையில் என்னை ஆழ்த்தியது. கூடுதலாக இலக்கனத்தில் ஆட்சி பெற்ற குரு பகவானும் அமைந்தது புதன் பகவானை அதிக சுபத்துவபடுத்தி நடப்பு சந்திர திசையில் சமூக ஊடகங்களின் மூலம் புகழ்பெற்று வலம் வரும் சிறந்த ஜோதிடராக என்னை ஆழ்த்தியதில் வியப்பு ஏதுமில்லை.
அதேநேரத்தில் ஏழாமிடத்தில் கேந்திர ஸ்தானத்தில் பாதக ஸ்தானத்தில் அமர்ந்த புதன் பகவானை பங்கப்படாத குருவின் பார்வை பெற்ற சனி பகவான் பார்ப்பதும், லக்கன யோகரான தன மற்றும் பாக்கியாதிபதியுமான செவ்வாய் பகவான் மிதுனத்தில் அமர்ந்து நான்காம் பார்வையாக பார்ப்பதாலும்
கேந்திராதிபத்திய தோஷத்தையும்,
பாதகத்தன்மையையும் மட்டுபடுத்தியது.
லக்கனாதிபதியும் மற்றும் தனகாரகனுமான குருபகவான் ஆட்சி நிலையில் அமர்ந்து லக்கனத்தில் திக் பலம் பெற்று தன் ,பாக்கிய மற்றும் லாபாதிபதிகள் தொடர்பு மஹாதனயோகத்தினை சந்திரன் மற்றும் செவ்வாய் தசையில் தரும்.
ஜாதகத்தில் குரு,சந்திரன் புதன் பகவான் வலுத்து இருப்பதால் கணிதம், கணிப்பொறி இயக்கும் ஆர்வம்,தமிழ் மீது ஆர்வம், ஆசிரியர் தொழில், பட்டிமன்றம் பேச்சாளர் போன்றவை சார்ந்த துறையில் ஈடுபாடு ஆகும்.
இதே வகையில் இதே வகையில் ஒரு ஜாதகத்தில் அதிகமான சுபத்துவம் பெற்ற கிரகத்தை கண்டறிய கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றபட வேண்டும்.
1) வளர்பிறை சந்திரனின் பார்வை பெற்ற கிரகம்,
2) பங்கப்படாத குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் மற்றும் தனித்த புதன் ஆகியவை தொடர்பு பெற்ற கிரகமானது அதிக சுபத்துவம் பெறும்.
சுபத்துவம் ஆன கிரகம் என்பது கேந்திர மற்றும் கோணத்தில் தான் கிரகங்கள் அமர்ந்து இருக்க வேண்டும் என்பதல்ல. மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் மேற்கண்ட குறிப்பிட்ட தொடர்பு அமையப் பெற்ற கிரகங்கள் சுபத்துவம் பெற்ற கிரகங்கள் ஆகும். இதன் தசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை சாதகருக்கு தருகிறது.
இயற்கை சுப கிரகங்களான வளர்பிறைச் சந்திரன், குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியவற்றுடன் பாவியான சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் ,அஸ்தமனம் ,வக்ரம் மற்றும் மறைவிடங்களில் ஏறி நின்றாலும் வளர்பிறைச் சந்திரன் குரு சுக்கிரன், தனித்த புதன் தொடர்பு பெற்ற கிரகங்கள் சுபத்துவ தன்மையினை அடையும்.
நன்றி!
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
. 7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(Teacher & Astro Researcher),
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My website
www.astroravichandransevvai.in
.......
No comments:
Post a Comment