சாதகப்படி என்ன தொழில் செய்யலாம் ?
கிரகங்கள் படுத்தும் பாடு ( 143 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை
"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு "
என்ற வாக்கிற்கு இணங்க ஒரு மனிதன் பல நாடுகள் கடந்து தொழில் செய்து பொருளீட்டல் என்பது அவசியமாகிறது.
ஒரு மனிதன் எந்த தொழிலை தேர்ந்து எடுத்து செய்தால் வெற்றி பெறலாம்.அதற்கு சாதக கட்டத்தில் எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து செய்தால் அத்தொழிலில் நிபுணத்துவம் பெற்று முன்னேறலாம்.இதுபோன்ற பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் நோக்கில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.தொடர்ந்து இப்பதிவினை படித்து பயன்பெறுங்கள்.
என்ற வாக்கிற்கு இணங்க ஒரு மனிதன் பல நாடுகள் கடந்து தொழில் செய்து பொருளீட்டல் என்பது அவசியமாகிறது.
ஒரு மனிதன் எந்த தொழிலை தேர்ந்து எடுத்து செய்தால் வெற்றி பெறலாம்.அதற்கு சாதக கட்டத்தில் எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து செய்தால் அத்தொழிலில் நிபுணத்துவம் பெற்று முன்னேறலாம்.இதுபோன்ற பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் நோக்கில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.தொடர்ந்து இப்பதிவினை படித்து பயன்பெறுங்கள்.
ஒருவரது தொழில்ஸ்தானத்தை பற்றி அறியவேண்டுமாயின் அவரது சாதககட்டத்தில் பத்தாம் இடத்தினை ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.இதனை எநாத வகைகளில் ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும் என்பதனை உங்களோடு வெளிப்படையாக சோதிடம் அறியாத நபர்கள் கூட புரிந்துகொள்ளும் வகையில் விளக்குகிறேன் நன்றாக கவனியுங்கள்.
பத்தாம் அதிபதியுடன் தொடர்பு கொள்ளும் லக்கனம் மற்றும் ராசி இரண்டிற்குமான பத்தாம் அதிபதி அம்சத்தில் எவ்விதம் அமர்ந்துள்ளார் என்பதையும் கவனித்து பலனளிக்கப்படவேண்டும்.
தற்கால திசைநாதனின் காரகதொழிலையும் மற்றும் அந்த ஆதிபத்திய காரக தொழிலையும் இணைத்து தொழிலைக்கூற வேண்டும்.
ஒருவரை குறிப்பிட்ட தொழிலை செய்ய சொல்லும் பொழுது அப்பொழுது நடை பெறும் திசையினையும் மற்றும் கோசாரபலனையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனளிக்கப்படவேண்டும்.
ஒருவர் தாம் செய்யக்கூடிய தொழிலில் சிறப்படைவாரா ? என்பது போன்ற விவரங்களினை பெற பத்தாம் அதிபதியின் வலிமையினை அறியவேண்டும்.அதாவது ராசி மற்றும் அம்சத்திலும் பத்தாம் அதிபதியின் வலிமையினை கொண்டே முடிவு செய்யப்பட முடியும்.
பத்தாம் அதிபதி ஒருவரது சாதகத்தில் பலமடைந்து ஏதாவது ஒரு யோக தொடர்பு பெற்றிருக்கவேண்டும் அல்லநு தற்சமயம் நடைபெறும் திசைநாதன் பலம்பெற்று சுபரின் பார்வையினை பெற்று ஏதாவது ஒரு யோகத்தினை பெற்று வலிமை பெற்று அவை பத்தாம் அதிபதியின் சம்பந்தப்பட்டாலும் சாதகன் தான் மேற்கொள்ளும் தொழிலில் மேன்மையடைந்து பிற்காலத்தில் பிரபலமும் பெரும் செல்வபலமும் பெற்று திகழ்வார்.
என்ன தொழில் செய்யலாம் ?
பத்தாம் அதிபதியோடு வாக்காதிபதி தொடர்பு கொள்ள போதகராக தனது தொழிலை மேற்கொள்வார்.இத்துடன் குரு கூடினால் ஆசிரியனாகவும் ,கேது தொடர்பு கொண்டால் ஆன்மீக பேச்சாளராகவும் ,இறை தொண்டாற்றுபவராகவும் ,புதன் கூடினால் நல்ல பேச்சாளர் ,எழுத்தாளர் ,இசைபுலமை மற்றும் சோதிடராகவும் ஆகும் வாய்ப்பு உண்டு.சுக்கிரன் தொடர்பு கொண்டால் நகைகடை ,ஹோட்டல் ,ஜவுளி ,வட்டிதொழில் புரிபவராகவும் இருப்பர்.செவ்வாய் தொடர்பு நிலபுரோக்கராகவும்,பத்திரபதிவு புரிபவராகவும் திகழ்வர்.
பத்தாம் அதிபதியுடன் மூன்றாம் அதிபதியானது தொடர்புகொண்டு இத்துடன் சனி,புதன் ,செவ்வாய் மற்றும் ராகுபகவான் தொடர்புகொள்ள சாதகர் அச்சகம்,விளையாட்டுதுறை,பத்திரிக்கை துறை,செய்திதுறை,தொலைக்காட்சி ,கேபிள் தொலைபேசி மற்றும் தூதரகம் போன்ற தொழிலில் நாட்டம் உருவாகலாம்.
தொடரும் ..
தொடர்புக்கு
செல்
97 151 89 647
740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
(தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து சாதகபலன் ,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை #போன்வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.கட்டணம் உண்டுஂ
கட்டணம் செலுத்தும் விவரங்களை பெற தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து பெற்றுக்கொள்ளவும்)
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC ,MA ,BEd.
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
MY EMAIL
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My website.Click hear
AstroRavichandransevvai.blogspot.com
No comments:
Post a Comment