Friday, 6 July 2018

மானிட வாழ்வில் கிரகங்களின் பங்கு ?

மானிட வாழ்வில் கிரகங்களின் பங்கு

                                           

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

        ஒரு மனிதனை வழிநடத்தி செல்வதிள் கிரகங்களின் பங்கு அலாதியானது.ஒரு குழந்தையானது தனது பெற்றோரை தேர்ந்தெடுத்து பிறப்பதில் அவரது ஊழ்வினைப்பயன்தான் முடிவு செய்கிறது.இதனை நாம் "கர்மா " என்கிறோம்.

         ஒருவரது கர்மாதான் இந்ந நேரத்தில் இன்னார் வயிற்றில் பிறப்பது என்பதையே முடிவு செய்கிறது.

      ஒரு தாயின் வயிற்றில் ஒரு கருவானது உருவாகும் கதையானது நாம் எண்ணி பார்த்தால் மிகவும் விந்தையானது.களவியின்போது ஒரு ஆடவரது விந்தனுவிலிருந்து வெளிப்படும் பல்லாயிரம் கணக்கான விந்தனுவில் எல்லா விந்தனுக்களும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பின் வழியாக நுழைந்து கருமுட்டையை உருவாக்கிவிடுவதில்லை என்கிறது விஞ்ஞானம்.

     பல்லாயிர கணக்கான விந்தனுக்கள் பாய்ந்தாலும் ஏதோ ஒரு வீரியமுள்ள விந்தனு மட்டும் நுழைந்து பெண்ணின் அண்ட அனுவுடன் இணைந்து ஒரு கருவுற்ற முட்டையை உருவாக்குகிறது.இந்த கருவுற்ற முட்டைக்கு "சைகோட் " என்று பெயர் ஆகும்.இவ்வாறு சைகோட் உருவாகும் நிலையினை "கருவுறுதல் " என்கிறோம்.

      இந்த கருவுற்ற முட்டை உருவான பிறகு களவியில் ஈடுபட்டால் எத்தனை விந்தனுக்கள் பாய்ந்தாலும் அதில் எந்த ஒரு விந்தனுவும் கருமுட்டைக்குள் நுழைந்துவிடுவதில்லை.

          ஒரு மனிதனுக்கு துல்லியமான பிறந்த நேரம் என்பது இந்த கரு உருவாகும் நேரமே ஆகும்.இந்த நேரத்தினை கணக்கில் எடுக்கும் வாய்ப்பு இல்லாததால்தான் ஒரு குழந்தையானது இந்த பிரபஞ்சத்தில் ஜெனிக்கின்ற நேரத்தினை பிறந்த நாள் மற்றும் பிறந்த நேரமாக எடுத்துக்கொண்டு சாதகம் கணிக்கப்படுகிறது.

         ஆனால் ஒருவரது கர்மாதான் ஒருவரது பிறப்பினையே முடிவு செய்கிறது. ஒருவர் இந்த நேரத்தில் எந்த தந்தையின் விந்தனுவில் வெளிப்பட்டு எந்த தாயின் கருவினில் நுழைந்து கருமுட்டை உருவாகவேண்டும் என முடிவு செய்கிறது.

          அக்குழந்தையானது அவரது ஊழ்வினை பயனிற்கு ஏற்பவே அக்குழந்தையின் வாழ்வும்,குணநலன்களும் தாயின் வயிற்றில் வடிவமைக்கப்படுகிறது.

           ஒரு குழந்தையானது பெண்ணா ? ஆணா ? என முடிவு செய்வதில் ஆணின் விந்தனுவின் உள்ள "குரோமோசோம்கள் " முடிவு செய்கிறது.ஒரு மனிதருக்கு இருபத்து மூன்று ஜோடி குரோமோசோம்கள் உள்ளது.அதாவது மொத்தம் 46 குரோமோசோம்கள் உள்ளது.

          இதில் பெண்ணிற்கு உள்ள இருபத்து மூன்று ஜோடி குரோமோசோம்களும் " X " குரோமோசோம்களாகவே உள்ளது. இதனை "ஆட்டோசோம்கள் " என்கிறது.
ஆனால் ஆடவருக்கு இருபத்துமூன்று ஜோடி குரோமோசோம்களில் இருபத்து இரண்டு ஜோடி குரோமோசோம்கள் பெண்ணினைப்போல ஒத்த X குரோமோசோம்களாக உள்ளது.இதில் ஆடவருக்கு இறைவனின் வித்தியாசமான படைப்பினால் இந்த இருபத்து மூன்றாவது ஜோடி குரோமோசோம்கள் ஆனது " X மற்றும் Y "குரோமோசோம்களாக உள்ளது.இந்த இருபத்து மூன்றாம் ஜோடி குரோமோசோம்களை " அல்லோசோம்கள்"என்கிறோம்.
(ஆட்டோ-ஒத்த,அல்லோ -மாறுபட்ட)

          களவியின் போது ஆணின் X குரோமோசோம் ஆனது வெளிப்பட்டு பெண்ணின் அண்ட அணுவினில் நுழைந்து கருமுட்டை உருவாக்கினால் பிறக்கின்ற குழந்தை ( X+ X குரோமோசோம்கள்) பெண் குழந்தையாக பிறக்கின்றது.

           அதேநேரத்தில் ஆணின்  Y குரோமோசோம் வெளிப்பட்டு பெண்ணின் அண்ட அணுவினில்(X) நுழைந்து கருமுட்டையை உருவாக்கினால் பிறக்கின்ற குழந்தையானது
(  Y+ X குரோமோசோம்கள்) ஆண் குழந்தையாக பிறக்கின்றது.

           எனவே பிறக்கின்ற குழந்தையானது ஆணா ? பெண்ணா ? எனும் பாலினை ஆணின் குரோமோசோம்கள்தான் முடிவு செய்கிறது என விஞ்ஞானம் கூறினாலும் ஒரு கருவானது தனது கர்ம வினைப்படியே தனது பால் தன்மையை முடிவு செய்கிறது.

  ஒரு கரு இரட்டையர்(identical twins)

       ஆணின் ஒரு விந்தனுவானது பெண்ணின் ஒரு அண்ட அனுவுடன் இணைந்து ஒரு கரு முட்டையை உருவாக்குகிறது.இவ்வாறு உருவான ஒரு கருமுட்டை இரண்டாக பிளந்து இரு குழந்தையாக பிறப்பெடுக்கிறது.இவ்வாறு பிறக்கும் குழந்தையானது பண்பினிலும்,பால் வேறுபாட்டிலும் ஒத்ததாகவே இருக்கிறது.பிறக்க கூடிய குழந்தையானது இரண்டும் ஆணாகவோ அல்லது இரண்டும் பெண்ணாகவோ உள்ளது.

இரு கரு இரட்டையர்

       இனப்பெருக்க காலத்தில் ஆணின் இரு விந்தனுவானது ஒரே நேரத்தில் பெண்ணின் ஒரு அண்ட அனுவுடன் இணைந்து இரு கருமுட்டையை உருவாக்கினால் அது "இரு கரு இரட்டையர் ஆவார்.இவ்வாறு பிறக்கும் குழந்தையானது பண்பினில் மாறுபட்டதாகவே உள்ளது. இவ்வாறு பிறக்கும் குழந்தையானது ஒன்று ஆண் , மற்றொன்று பெண் குழந்தையாகவோ
அல்லது இரண்டும் ஆண் அல்லது பெண்ணாக பிறக்க வாய்ப்பு உண்டு.


What's up
97 151 89 647

CELL
740 257 08 88
   97 151 89 647

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                         
அன்புடன்
  சோதிடர்ரவிச்சந்திரன்
      M.Sc,MA,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி.

My email
  masterastroravi@gmail.com

My blogspot. Google search
  AstroRavichandran. blogspot. com
   AstroRavichandransevvai. blogspot. com
...............................................................................

No comments: