சோதிடம் ஒரு பிரபஞ்ச விஞ்ஞானம் .ஒரு நீண்ட தொடர்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"தன்னை அறிதல் மெய்ஞானம்" ஆகும். "பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அறிதல் விஞ்ஞானம்" ஆகும். பிரபஞ்ச ரகசியங்களை எல்லோராலும் கண்டறிய முடியாது .அந்த ரகசியங்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒரு குறிப்பிட்ட நபரைத் தேர்ந்தெடுத்து அவர் வாயிலாகவே அந்த சூட்சும உண்மைகள் மனித சமுதாயத்திற்கு வெளிப்படுகிறது.
பஞ்சபூதங்களில் கலப்பே பிரபஞ்சமாகும். மனித உடலும் பஞ்ச பூதங்களின் கலப்பால் உள்ளது இந்த பிரபஞ்சத்தில் தாக்குதல் மண்ணில் பிறந்த அனைவரையும் பாதிக்கிறது . எனவேதான் ஒரு ஆன்மீகப் பெரியோர்கள் "அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது" என்றார்கள்.
கல்வியின் போது வெளிப்படும் பல்லாயிரக்கணக்கான விந்து அணுக்களில் ஏதோ ஒன்று தான் அண்டத்தில் நுழைந்து முழுமையாக வளர்ச்சியடைந்த கருமுட்டை ஆகிறது. இதனை சைகோட் என்கிறோம். இந்த கருமுட்டையாக உருவான
காலத்திலிருந்து ஒரு குழந்தையின் மீது பிரபஞ்ச கதிர்களின் தாக்குதல் ஆரம்பமாகிறது. ஆனால் இந்த கரு உருவாகும் நிகழ்ச்சி ஒரு அக நிகழ்வாகும். இதனை சாதரன மனிதர்களால் கண்டறிய முடியாது என்பதால் குழந்தை தாயின் வயிற்றில் இருந்து பிரபஞ்சத்தை தொடும் நேரத்தையே பிறந்த நேரமாக கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது.
குழந்தையின் தலையானது பிரபஞ்சத்தை தொடும் காலத்தையே பிறந்த நேரமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் வானவீதியின் தொடுவானத்தில் புலப்படும் நட்சத்திரத்தினை "ஜென்ம நட்சத்திரமாக" கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது.
நட்சத்திரம் இடம்பெறும் ராசியை "ஜென்ம ராசியாகக்" கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
27 நட்சத்திரங்கள் 12 ராசிகளுக்கு சமமாக பிரித்து வழங்கப்படுகிறது.. ஒரு ராசிக்கு 21/4 நட்சத்திரம் வீதம் 12 ராசிகளுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.
ஒரு நட்சத்திரம் நான்கு பாதம் கொண்டது .ஆக இருபத்து ஏழு நட்சத்திரத்திற்கும்
27× 4= 108 பாதங்களை கொண்டது. ஒரு ராசிக்கு 9 பாதங்கள் வீதம் பன்னிரண்டு ராசிக்கும் 12×9= 108 பாதங்கள் வருகிறது.
ஒரு சில நட்சத்திரங்களுக்கு மட்டும் இரண்டு ராசிகளுக்கு பந்தம் உடையதாக ஆகிறது.
உதாரணமாக கார்த்திகை 1-ஆம் பாதம் மேஷ ராசிக்கும் , ஏனைய 2, 3, 4 ஆம் பாதங்கள் ரிஷப ராசிக்கு வருகிறது.
மேஷ ராசி
அசுபதி, பரணி கார்த்திகை முதல் பாதம் மட்டும்.
ரிஷப ராசி
கார்த்திகை 2 ,3 ,4 பாதம் ரோகிணி, மிருகசீரிடம்
1, 2ம் பாதம்.
மிதுன ராசி
மிருகசீரிடம் 3, 4 திருவாதிரை,
புனர்பூசம் 1 ,2 ,3 பாதம்
கடக ராசி
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம் ,ஆயில்யம் முழுவதும்.
சிம்ம ராசி
மகம், பூரம் ,உத்திரம் முதல் பாதம் மட்டும்.
கன்னி ராசி
உத்திரம் 2, 3, 4 ,
அஸ்தம்
சித்திரை 1 ,2 ம் பாதம்.
துலா ராசி
சித்திரை 3, 4
சுவாதி
விசாகம் 1, 2 ,3ஆம் பாதம்.
விருச்சக ராசி
விசாகம் 4ஆம் பாதம், அனுசம் ,கேட்டை முழுவதும் .
தனுசு ராசி
மூலம், பூராடம் உத்திராடம் முதல் பாதம் மட்டும் .
மகர ராசி
உத்திராடம் 2, 3 ,4 திருவோணம்
அவிட்டம் 1 ,2 ம் பாதம்.
கும்ப ராசி
அவிட்டம் 3, 4 ம் பாதம், சதயம் ,பூரட்டாதி 1 ,2 ,3 ஆம் பாதம்.
மீன ராசி
பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி ,ரேவதி முழுவதும் ஆகும்.
ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு அதன் ஜெனன கால திசை இருப்பு கண்டறியப்படுகிறது. ஜாதகர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ அந்த நட்சத்திர சார நாதன் அதன் தொடக்க தசையாக கருதுதப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ள படுகிறது.
ஜாதக கட்டத்தில் ஒன்பது கோள்களும் எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளதோ அதன் அடிப்படையில் ஜாதக கட்டத்தில் இடம்பெறுகிறது.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய நட்சத்திர சார நாதன் என்னவென்று கீழ்க்கண்டவாறு தெரிந்து கொள்வோம் .
சூரியன்
கார்த்திகை, உத்திரம் உத்திராடம்.
சந்திரன்
ரோகிணி, ஹஸ்தம் திருவோணம்
செவ்வாய்
மிருகசீரிடம், சித்திரை அவிட்டம்.
ராகு
திருவாதிரை, சுவாதி சதயம்
குரு
புனர்பூசம், விசாகம் பூரட்டாதி
சனி
பூசம் அனுஷம் உத்திரட்டாதி
புதன்
ஆயில்யம், கேட்டை ரேவதி
கேது
அசுபதி மகம் மூலம்
சுக்கிரன்
பரணி ,பூரம் ,பூராடம் முதலியன ஆகும்.
உதாரணமாக ஒரு ஜாதகர் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருடைய ஜென்ம ராசி மீனம் ஆகும் .
அவரது ஜெனன கால திசை ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் ஆவார் .எனவே புதன் திசையினை ஜெனன கால திசையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
திசை அளவானது கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு கோளுக்கும் அமைகிறது. திசையானது கீழ்க்கண்ட வரிசையில் அமைந்துள்ளது.
சூரியன் -6 வருஷம்
சந்திரன் -10 வருடம்
செவ்வாய்- 7-ம் வருடம்
ராகு- 18 வருடம்
குரு- 16 வருடம்
சனி -19 வருடம்
புதன்- 17 வருடம்
கேது -7 வருடம்
சுக்கிரன் -20 வருடம்
மொத்தம் 120 வருடம் ஆகும்.
மேற்கண்ட உதாரண படி புதன் தசை ஜெனன கால திசை இருப்பு எனில் அதன் இருப்பிலிருந்து அடுத்து கேது திசை, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு குரு, சனி என திசைகள் அடுத்தடுத்து வரும்.
சூரியன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் தங்கும் சித்திரை மாதம் மேஷ ராசியில் தொடங்கி பங்குனி மாதம் மீன ராசி வரை சூரியன் நடந்து செல்லும்.
எனவே ஜாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் ராசியை வைத்து அவர் என்ன மாதத்தில் பிறந்துள்ளார் என்பதை எளிமையாக கண்டடைய கண்டறியலாம்.
அடுத்தபடியாக புதனும், சுக்கிரனும் சூரியனுக்கு அருகில் உள்ள உள்வட்ட கிரகங்கள் ஆகும். புதன் பகவான் சூரியனுடன் அல்லது சூரியனுக்கு முன்பின் ஒரு ராசிகளில் தங்கும். சுக்கிரன் பகவான் சூரியனுடன் அல்லது சூரியன் இருக்கும் ராசிக்கு முன் பின் இரண்டு ராசிகள் தள்ளி தங்க கூடியது.
சந்திர பகவான் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் வீதம் 12 ராசியையும் சுற்றி வருகிறது.
சூரியன் இருக்கும் ராசியில் சந்திரன் அடையும் பொழுது அது அமாவாசை காலமாக கருதப்படுகிறது. சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு சந்திரன் வரும் காலம் பொளர்ணமி காலமாகக் கொள்ளப்படுகிறது. சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து இரண்டு முதல் ஆறாம் ராசி வரை ஜெனிக்கும் குழந்தை வளர்பிறை சந்திரனில் பிறந்து உள்ளதாக கருதப்படுகிறது. இக்காலத்தினை
சுக்ல பட்சம் அல்லது பூர்வபட்சம் என்று கருதப்படுகிறது. இக்காலங்களில் சந்திரன் இயற்கை சுபராக கருதப்படுகிறது.
சூரியனுக்கு ஏழாம் இடத்தில் சந்திரன் வரும் காலம் பவுர்ணமி காலமாக கருதப்படுகிறது. எட்டாமிடத்தில் இருந்து பன்னிரண்டாம் இடம் வரை சந்திரன் உள்ள காலம் தேய்பிறைகாலம் என அழைக்கப்படுகிறது. இதனை கிருஷ்ணபட்சம் அல்லது அமர பட்சம் என்போம் .இக்காலத்தில் சந்திரன் இயற்கை பாவராக கருதப்படுகிறது.
செவ்வாய் ஒரு ராசியில் ஒன்றறை மாதகாலம் தங்கும் . உள்வட்ட கிரகங்களான புதனும், சுக்கிரனும் ஒரு ராசிக்கு ஒரு மாத காலம் வாசம் செய்யும்.
குரு ராசிக்கு ஒரு வருடம் காலம் தங்குவார்.
அரவுகளான இராகு, கேதுக்கள் ஒரு ராசிக்கு ஒன்றறை ஆண்டுகள் வாசம் செய்யும் .ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய ஒரே கிரகம் சனிபகவான் ஆவார். இவர் ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகாலம் தங்குவார்.
-- தொடரும்........
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd.
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்.)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
....,.......................................
No comments:
Post a Comment