Monday, 26 August 2019

சோதிடம் ஒரு பிரபஞ்ச விஞ்ஞானம்--(2)

                           

சோதிடம் ஒரு பிரபஞ்ச விஞ்ஞானம் -( 2)

                     செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை.

                         நமது குடும்ப உறவுகளை ஜாதக கட்டத்தில் எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பதையும் , கிரகங்களுக்கும் உறவுக்கும் உள்ள தொடர்புகளையும் இப்பொழுது நாம் பார்ப்போம் .

                        ஜாதக கட்டத்தில் தந்தை ஸ்தானத்தினை பற்றி அறிய 9-ஆம் இடத்தையும், தந்தைக்கு காரகனான சூரியனையும் ஆராய்ந்தறிய வேண்டும்.

                       தாய் ஸ்தானத்தை பற்றி அறிய மாதுர்காரகன் சந்திரனையும், நான்காம் இடத்தையும் ஆய்ந்து அறியவேண்டும்.

                     சாதகர் உடன்பிறந்த சகோதரனைப் பற்றி அறிய சகோதர காரகன் செவ்வாய் பகவானையும், சாதக கட்டத்தில் இளைய சகோதரனை  பற்றி அறிய மூன்றாமிடத்தையும், மூத்த சகோதரர் பற்றி அறிய 11-ஆம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

                       சாதகர் உடைய அம்மா வழி மாமன் வர்க்கத்தை பற்றி அறிய புதன் பகவானையும் , ஜாதக கட்டத்தில் நான்காம் இடத்தையும் ஆய்வு செய்து அறிய வேண்டும்.

                      சாதகரது  மனைவியோட நிலையைப் பற்றி அறிய களத்திரகாரகன் சுக்கிரனும் ,மங்கள நாயகன்  செவ்வாயையும், இதேபோல ஜாதக கட்டத்தில் 7-ஆம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

                       சாதகனுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளை பற்றி அறிய புத்திரகாரகன் குரு பகவானையும், புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

                       பாட்டன் வழி உறவுகளை பற்றி அறிந்துகொள்ள ஜாதக கட்டத்தில் ஐந்தாம் இடத்தையும், தந்தை வழி பாட்டனைப் பற்றி அறிந்துகொள்ள ராகு பகவானும், தாய் வழி பாட்டனைப் பற்றி அறிந்துகொள்ள கேது பகவானையும் ஆராய்ந்து அறிய வேண்டும்.

                                                                              

                                 ஜாதகரது ஆயுள் பற்றி அறிந்துகொள்ள அஷ்டம ஸ்தானமான 8-ஆம் இடத்தையும், அஷ்டம ஸ்தானத்திற்கு அஷ்டம ஸ்தானமான மூன்றாம் இடத்தையும் இதேபோல கிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவானையும் ஆய்ந்தறிய வேண்டும்.

                                    ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களுக்கு பார்வை பலம் பெற்றுள்ளது .எல்லா கிரகங்களும் தாம் வாசம்  செய்யும் இடத்திலிருந்து 7-ஆம் இடத்தை பார்வை செய்யும் . எல்லா கிரகங்களும் ஏழாம் இடத்தை முழு பலத்தோடு பார்வை செய்கிறது.


                     "அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசமாகும் அல்லது அவதிகள் மெத்த உண்டாகும்"  இக்கூற்றுப்படி   குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக நன்மைகளை செய்வார்.


                                      குரு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5-ஆம் இடத்தையும் ,7-ஆம் இடத்தையும் 9-ஆம் இடத்தையும் பார்வை செய்கிறார்.

  கிரகங்களது பார்வைகள் மூலம் கிடைக்கும் பலனை "திருக் பலம் "என்கிறோம்.

                                       குரு பகவானுடைய மூன்று பார்வைகளில் எந்த பார்வைகளுக்கு எப்படி திருக்பலம்  உள்ளது என்பதை காண்போம். 

                                      குரு பகவானுடைய பார்வையில் ஒன்பதாம் பார்வைக்கு முக்கால் பலம் உண்டு. ஐந்தாம் பார்வைக்கு அரை பலம் உண்டு .ஏழாம் பார்வை முழு பலம்  ஆகும்.

                               சனி பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிகமாக பாதிக்கிறார். சனி பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 3 , 7 மற்றும் 10-ம் இடங்களை பார்வை செய்கிறார்.

                           சனி பகவானின் திருக் பலம் சனிபகவான் தனது ஏழாவது பார்வையின் மூலம் முழு பலத்தையும், மூன்றாவது பார்வை மூலம் அரை பலத்தையும் பத்தாவது பார்வை மூலம் கால் பலத்தையும் பெறுகிறார்.


                           செவ்வாய் பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து நான்கு ,ஏழு  மற்றும் எட்டாம் இடங்களை பார்வை செய்கிறார்.


                             செவ்வாய் பகவானின் திருக்பலமானது  எட்டாம் பார்வைக்கு முக்கால் பலமும்,   நான்காம் பார்வைக்கு அரை பலமும் மற்றும் ஏழாம் பார்வைக்கு முழு பலமும் கிடைக்கிறது.


                                 கிரகங்களில் திக்பலம் பெற்று தெரிந்து கொள்வோம் .

குரு பகவானும், புதன் பகவானும் லக்னத்தில் நின்றால் முழுமையான திக்பலம் உண்டு.இதேபோல சந்திரனும் ,சுக்கிரனும் நான்காம் இடத்தில் நின்றால் முழுமையான திக்பலம் உண்டு. சனிபகவான் ஏழாம் இடத்திலும் , சூரியன், செவ்வாயும் பத்தாம் இடத்தில் நின்றாலும் முழுமையான திக்பலம் உண்டு.  மேற்படி கிரகங்கள் நின்ற வீட்டில் இருந்து ஏழாம் வீட்டில் நிற்கும் பொழுது திக்பலம் குறைவு.

                                     
                                              ஜேஷ்டா பலம் என்ற வகையில் உத்திராயனம் காலத்தில் சூரியன், சந்திரன் ஜோஷ்டா பலம் பெறும்.

                                    செவ்வாய் ,புதன் குரு சுக்கிரன் வக்கிர கதியில் சேஷ்ட பலம் பெறுகின்றன.

                                       செவ்வாய் புதன் ,குரு, சுக்கிரன், சனி மிதுனம் கன்னி ராசியை கடக்கும்போது ஜேஷ்டா பலம் அடைவார்கள். அடைவார்கள்.

 தொடரும்....

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்   9715189647   செல்9715189647  7402570899
                  




 அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்சியாளர் )
, ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
...,........................................
my email id : masterastroravi@gmail.com

my website
www.astroravichandransevvai.blogspot.com

www.astroravichandran.blogspot.com

............................................................................................................................

No comments: