Monday, 26 August 2019

லக்னாதிபதி பலம் இழந்தால்....

                                    


                              லக்னாதிபதி பலம் இழந்தால்...


                          செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !

                             மானிட தேரை வழிநடத்திச் செல்லும் அச்சாணியாகத் திகழ்வது ஒரு ஜாதக கட்டத்தில் லக்னாதிபதியே ஆவார்.

                                ஜாதக கட்டத்தில் ஏனைய கிரகங்கள் பலமிழந்து இருப்பினும் இலக்கினாதிபதி மட்டுமே உச்சம், ஆட்சி, நட்பு... போன்ற நிலைகளில் கேந்திர ,கோணங்களில் பலம் பெற்று இருப்பின் அந்த ஜாதகர் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எதிர் நீச்சல் அடித்து வாழ்வின் உன்னத பயணத்தை சிறப்புடன் செம்மையாக வழிநடத்திச் செல்லக்கூடிய சூழலை உருவாக்கித் தரும்.


                             ஆனால் அதே நேரத்தில் ஏனைய கிரகங்கள் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து இருந்தாலும் லக்கனாதிபதி மட்டும் பலமிழந்து இருப்பின் அச்சாணி இல்லாத தேர் போலவே அவரது வாழ்வு தடம் புரண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.


                               சாதகருக்கு நடைபெறக்கூடிய ஒரு திசையானது லக்னாதிபதிக்கு நட்பாக, லக்கனாதிபதி இருக்கும் இடத்திற்கும் மற்றும் இலக்கணம் இருக்கும் இடத்திற்கும் கேந்திர கோணங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து இருப்பின் அந்த திசையானது  ஜாதகருக்கு  யோக தசையாக அமைந்து வாழ்வின் உயரிய நிலைக்கு இட்டுச் செல்லும்.

                          மாறாக சாதகருக்கு  நடைபெறும் திசையானது லக்னாதிபதிக்கு பகையாக அமைந்து  லக்னாதிபதி இருக்கும் இடத்திற்கும்  மறைவிடங்களில் இருப்பின் அந்த கிரகமானது உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் நல்ல ஸ்தான பலத்தை பெற்றிருந்தாலும் அந்த தசையானது சாதகருக்கு யோக பலனை அதிகம் தராது.


                               ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி மட்டும் பலம் இழந்தால் அந்த ஜாதகர் செயல்களில் மந்த தன்மை உடையவராகவும், பொறுமை, தெளிவு அற்றவராகவும், வெளிவேடக்காரராகவும்  இருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். லக்னாதிபதி ஆனவர் சாதகரது ஆயுள் காரகனுக்கு நிகரான அந்தஸ்தைப் பெற்றிருப்பதால் லக்கனாதிபதி பலம் இழந்தால் ஆயுள் பங்கம் ஏற்படும்.


                                லக்கனாதிபதி லக்கனத்திலே ஆட்சி பெற்ற அமைப்பு பெற்றவர்கள் பாக்கியவான்கள் .
மேலும் இந்த லக்னத்திலேயே பலம் பெற்ற லக்னாதிபதியை இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட அதன் தசாபுக்தி காலங்களில் யோக பலனை அதிகம் தரும்.

                            ராசியில் லக்னாதிபதி பலமிழந்த அமைப்பை பெற்றிருந்தாலும் அம்சத்தில் அந்த லக்னாதிபதியானவர் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருக்கும் போது இந்த லக்கனாதிபதி ஆனவர் பலமடைந்த லக்னாதிபதியாகவே  கருதப்படுவார். 

                              ராசியில் பலமிழந்து அமையப் பெற்ற லக்கனாதிபதி ஆனவர் ராசியிலும் ,அம்சத்திலும் ஒரே இடத்தில் நின்று வர்கோத்தமம் பலனும் பெற்ற லக்னாதிபதி பலம் பெற்ற லக்கனாதிபதியாகவே கருதப்படுவார்.


                                      லக்னாதிபதி உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து நின்று மறைவிடம் ஏறியிருந்தாலும் அல்லது மறைவிட ஸ்தான அதிபதிகள் உடைய நட்சத்திர சாரமும் அல்லது பாவருடைய நட்சத்திர சாரம் பெற்றிருந்தாலும் அல்லது பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும் அல்லது பாவ கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும் லக்னாதிபதி பலத்தில் சற்று பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

                              சூரியன் ,சந்திரன் கிரகங்களை தவிர ஏனைய கிரகங்களுக்கு  இரண்டு வீடுகள் என்ற வகையில்  ஒரு வீடு லக்கினாதிபதியாக இருந்து, மற்றொரு வீடு மறைவிட ஸ்தானமாகவே (3,6,8,12)  இருந்தால் லக்னாதிபதி என்ற வகையில் பலம் இழக்காது .ஆனால் அதே நேரத்தில் மறைவிட ஸ்தானங்களில் லக்னாதிபதி ஆட்சி பெறாமல்  லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருப்பின் மிகுந்த யோகம் உண்டு.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமணம் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

    9715189647

    செல்
  9715189647
   7402570899

                           

  அன்புடன்
 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
 masterastroraviGmail.com

my 

No comments: