Monday, 26 August 2019

சனி பகவான் தரும் கோச்சார பலன்கள்


                                    

சனி பகவான் தரும் கோச்சார பலன்கள்.


              செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                          சனி பகவான்தான்  ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகம் ஆகும். அதாவது ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்கிறது. இவ்வாறாக ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வீதம் 12 ராசியை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகிறது.

                        சனி பகவான் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் வரும் பொழுது சனிபகவான் வக்கிரம் அடைகிறது. சனிபகவானுடைய வக்ர கதி காலம் ஆனது நான்கு முதல் ஐந்து மாதம் வரை நீடிக்கிறது.

                      சனிபகவான் இருக்கும் இடத்திற்கு ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் வக்கிர கதி நிலையில் உள்ளது. ஏழு ,எட்டில் அதி வக்கிர கதி அடைகிறது . சூரிய பகவான் ஒன்பது , பத்தாம் இடத்திற்கு வரும்போது சனி பகவான் வக்கிர நிவர்த்தி ஆகிறது.

                             சனி இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடம் வரும்வரை அதாவது நான்கு அல்லது ஐந்து மாத காலம் சனி பகவான் வக்கிர கதி காலமாகும்.

                             சனி பகவான் பாவ கிரகம் என்ற வகையில் அவை வக்கிரம் அடையும் பொழுது அதன் இயல்பான பலனில்  மாற்றம் ஏற்பட்டு நற் பலனைத் தருகிறது.

                                                                                  



                               அர்த்தாஷ்டமச் சனி



                                            சனிபகவான் ஆனவர் சந்திரன் இருக்கும் இடத்திற்கு நான்காம் இடத்திற்கு வரும் பொழுது அதனை "அர்த்தாஷ்டமச் சனி" என்பார்கள்.

                                         நான்காம் இடமானது  தன் சுகம், தாய் சுகம் கல்வியால் சுகம் , வீடு மற்றும் வாகனத்தால்  சுகம் ஆகியவற்றை குறிக்கும் ஸ்தானம் என்பதால் இந்த இடத்தில் சனிபகவானை வரும்பொழுது மேற்கண்ட ஸ்தான  பலன்களை பாதிக்கிறது.



                                          கண்டச்சனி


                                         சந்திரன் இருக்கும் இடத்திற்கு ஏழாம் இடத்திற்கு சனிபகவான் வரும் காலம்" கண்டச் சனி" என்பார்கள். "கண்டச்சனி தண்டச் செலவு தரும்" என்பது கோட்சாரப் பலன் ஆகும். எனவே இது போன்ற தருணங்களில் கண்ட செலவை சுப செலவாக மாற்றிக்கொள்ள வீடு கட்டுதல், நிலபுலன்கள் வாங்குதல்  இதன் மூலம்  தண்ட செலவினை சுப செலவாக  மாற்றிக் கொள்ளலாம்.



                                            ஏழரை சனி 


                                            சந்திரபகவான் இருக்கும் இடத்திற்கு பன்னிரண்டாம் இடத்திற்கு சனி பகவான் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் காலத்தை ஏழரைச் சனி ஆரம்ப காலம் எனலாம்.

                                              சந்திரனுக்கு பன்னிரெண்டில் சனி பகவான் வாசம் செய்யும் இரண்டரை ஆண்டுகளும் "விரயச்சனி காலம்" என்பார்கள் .


                                           இது போன்ற தருணங்களில் வீண் விரயங்களை தவிர்ப்பதற்கும் இதனை  சுப விரயங்களாக மாற்றிக் கொள்வதற்கு பூமி வாங்குதல், அணிகலன்கள் வாங்குதல் மற்றும் நிலபுலன்கள் வாங்குதல் போன்ற வகையில் சுப விரயச் செலவுகளாக மாற்றிக்கொள்ளலாம்.


                                       சந்திரன் இருக்கும் இடத்திற்கு அதாவது ராசிக்கு சனி பகவான் வரக்கூடிய காலத்தை "ஜென்மச் சனி" என்பார்கள்.


                                   வாழ்வில்   எல்லாவற்றையும் இழந்து நிற்பவனை  பார்த்து சாதாரணமாக "ஜென்மச்சனி பிடித்தவனாக இருப்பான் போல" என்று கூறுவது வழக்கம். இந்த கூற்றினை மெய்ப்பட வைக்கும்படியாக  ஜாதகரை ஜென்மச் சனி காலம் ஆன இக்காலகட்டத்தில் உறவுகளின் நிலை, உண்மையான நட்பு மற்றும் கணவன், மனைவி உறவு நிலைகள் இவற்றின் உண்மை நிலைகளை அறிந்து வாழ்வின் உன்னத தத்துவ நிலைக்கு சாதகரை சனிபகவான் பக்குவப்பட செய்வதால்தான் சனி பகவானை  சனீஸ்வரன் என்று அழைக்கிறோம்.

                                      சனி பகவான் சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டாம் இடத்திற்கு வரும் பொழுது அதனை 'பாதச்சனி' என்றழைப்பார்கள் இக்காலகட்டத்தில் சனி பகவான் தான் தந்த இன்னல்களிலிருந்து மெல்ல சாதககரை விடுவிப்பார்.

                                          பொதுவாக சனி பகவான் தனது ஏழரைச் சனி காலங்களில் ஏழரை ஆண்டுகளும் சாதகரை கஷ்டப்பட வைப்பார் என்று சொல்லி விட முடியாது. ஒரு சிலருக்கு ஏழரைச் சனி காலங்களில் எவ்வித கஷ்டமும் இல்லாமல் வசதி வாய்ப்புகளைத் தந்து கூட இருக்கும் ஆனா அதே நேரத்தில் மூன்றே முக்கால் நாழிகையோ  அல்லது  33/4 மணி நேரமோ அல்லது 33/4 நாள்களிலோ அது தன் கஷ்டத்தை ஒட்டுமொத்தமாக தந்து நிலை குலைய வைத்து விடும்.

                                          பொதுவாக ஏழரைச் சனி மேஷம் ,விருச்சிகம் மற்றும் சிம்மம் ராசிக்கு அதிக இன்னல்கள் தரக்கூடிய வாய்ப்பு உண்டு .அதேநேரத்தில் சொந்த ராசியான மகர, கும்ப ராசிக்கு ஏழரைச்சனி பெரும் பாதிப்புகளை தந்து விடுவதில்லை.

                                    ஓரு சில புதுமண  தம்பதிகளுக்கு ஏழரை சனி காலங்களில் குழந்தையானது ஜெணிக்குமாயின்  அக் குழந்தை பிறந்த நேரம் தம்பதிகளுக்கு இடையே கருத்து மாறுபாடு ஏற்பட்டு அவர்களுக்கிடையே மன அளவில் பிரிந்து வாழக்கூடிய சூழலை உருவாக்கும்.

                                      சனிபகவான் ஆனவர் ஒருவரது ஜாதகத்தில் குறைந்தபட்சம் மூன்று சுற்றுகளை சுற்றி வரும். முதல் சுற்று ஏழரைச் சனியை நாம் "மங்கு சனி" என்று அழைக்கிறோம். இரண்டாம் சுற்று ஏழரைச் சனியை" பொங்கு சனி" என்று அழைக்கிறோம். மூன்றாம் சுற்று ஏழரைச் சனியை "மரணச் சனி" என்று அழைக்கிறோம்.

                                        ஒரு ஜாதகருக்கு முதல் சுற்று வரும் ஏழரைச் சனிதான் வாழ்வில் அதிக கஷ்டங்களை தந்து வாழ்வின் உண்மையான நிலைகளை உணரவைக்கும்.

                                          முதல் சுற்று சிலருக்கு மிகக் குறைவான காலங்கள் இருக்கக்கூடிய அமைப்புக்களை  பெற்றவர்கள், இரண்டாம் சுற்றே , முதல் சுற்றான மங்குசனியை போல செயல்பட்டு இன்னல்கள் பல தரும்.


                                             அஷ்டம சனி


                                    சந்திரபகவான் இருக்கும் இடத்திற்கு எட்டாம் இடத்திற்கு சனிபகவான் வரும் காலம் "அஷ்டமச் சனி" காலம் ஆகும் அஷ்டமச்சனி ஆடு,மாடு விரயம், விவசாயத்தில் நஷ்டம், செய்கின்ற தொழில்களின் மீது ஆர்வமின்மை, வம்பு வழக்கு, விபத்து மற்றும் ஆயுள்  போன்றவற்றிற்கு பாதிப்பு உண்டாகும்.



                                                                பரிகாரங்கள்



                                              இதுபோன்ற ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி காலங்களில் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்தல், சனி ஸ்லோகம் சொல்லுதல் மேலும் காகத்திற்கு விரதம் இருந்து சாதம் வைத்தல், பிராமணர்களுக்கு கருப்பு வஸ்திரம் தானம் செய்தல்.

                                                இரவு படுக்கும் போது தலையணைக்கு அடியில் பச்சரிசியை ஒரு சிறு துணிப்பையில் மடித்து வைத்து படுத்திருந்து காலையில் அந்த அரிசியை தானே கைப்பட அரைத்து விநாயகருக்கு முன் அரிசி மாவு கோலமிட்டு விநாயகரை வழிபடவும் அவ்வாறு இட்ட அரிசிமாவு கோலத்தை எறும்புகள் பொறுக்கி செல்ல இன்னல்கள் பல தீரும்.


                                     துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று எள்ளுப் பொட்டலம் வாங்கி போட்டு விட்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.


நன்றி!


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்

  9715189647
    செல்
  9715189647
   7402570899

                       


  அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
    M.Sc,M.A,BEd,
ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கரம்பகுடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email id

  masterastroravi@gmail.com.

My blog

www.AstroRavichandran.blogspot.com

www.AstroRavichandransevvai.blogspot.com.


...,........................................

No comments: