ஜோதிடம் மனித வாழ்வின் கண்ணாடி
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜோதிடம் மனித வாழ்வின் காலம் காட்டும் கணித கண்ணாடி ஆகும்.
ஒரு ஜாதகர் பிறந்த நேரம் துல்லியமாக தரப்பட்டால் அதனை கொண்டு கணித்து தரப்படும் பலன்களும் மிகவும் துல்லியமாக இருக்கும்.ஜோதிடம் பலிக்க வாக்கு பலிதம் இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்றல்ல.தெய்வ அருள் கொண்டு மட்டுமே பலன் அளித்து புகழ் பெற முடியும் என்பது உண்மை அல்ல.
ஒருவர் ஜாதக பலன் சொல்வதற்கும், அவர் சொல்லக்கூடிய பலன் மிகவும் துல்லியமாக இருப்பதற்கும் ஜோதிடம் பார்ப்பவருடைய ஜாதகத்தில் உள்ள புதன் பகவானுடைய வலிமையை பொருத்து அமைகிறது.
எவர் ஒருவர் ஜாதகத்தில் வளர்பிறை சந்திர கேந்திரத்தில் புதன் பகவான் வலிமை பெற்று நின்றிருப்பின் அவர் மிக சிறந்த ஜோதிட வல்லுனராக திகழ்வார்.கூடவே குரு பகவான் பார்வையை பெற்ற நிலையில் இருப்பின் புதன் பகவானை இரண்டு குரு பகவான் பார்த்ததற்கு சமமாக அதிக சுபத்துவமான நிலையில் புதன் பகவான் இருப்பார்.இது போன்ற அமைப்பை பெற்று உகந்த யோக தசைகள் நடப்பில் இருக்கும் போது ஜாதகரால் தரப்படும் ஜோதிட பலன்களும் மிகவும் துல்லியமான நிலையில் இருக்கும்.
புதன் பகவானை தனித்த குரு பகவான் பார்த்த நிலையில் இருக்கும் போது ஜோதிட அறிவு சிறப்பாக இருக்காது.இது போன்ற அமைப்பை பெற்றவர்கள் சிறந்த சாஸ்திர அறிவை நிரம்ப பெற்றிருப்பார்கள்.ஆனால் ஜோதிட அறிவு மிகவும் சிறப்பாக தெரியாது.
ஜோதிடம் பார்ப்பதற்கு காவி அணிவது ,உத்திராட்ஷம் கழுத்து நிறைய மாட்டிக்கொண்டு மற்றும் முகம் முழுவதும் திருநீறு பட்டை பூசி கொண்டு பார்த்தால் தான் ஜோதிடம் பலன் சிறப்பாக இருக்கும் என்று கருதி விடாதீர்கள்.ஜோதிடம் ஒரு விஞ்ஞானம்.இதனை பார்ப்பதற்கு ஜோதிடம்,விஞ்ஞானம் மற்றும் கணித அறிவு சிறந்து விளங்கும் சாதாரண மற்றும் வழக்கமான உடை அணிந்த யாராலும் ஜாதக பலனை துல்லியமாக தந்துவிட இயலும்.ஜோதிட பலன் கொடுப்பதற்கு தெய்வ பக்தி துணை நிற்கும்.தன்னளவில் மது ,மாது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகமல் தன்னளவில் சரியான இயம,நியமங்களை பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.
மூச்சு பயிற்சி,தியானம் மற்றும் யோகா போன்றவை மனம் சிதறாமல் மனதை ஒரு முகப்படுத்தி பல்வேறு விதிகள் மற்றும் விதிவிலக்குகளுக்கு உட்படுத்தி சரியான பலனை அளிக்க உதவுகிறது.
ஜோதிடம் பலன் அளிப்பது என்பது எளிதான ஒன்று அல்ல.ஒரு ஜாதக பலனை தொழில் முறையில் கற்று கொண்டு சொல்வதற்கு குறைந்தது இருபது ஆண்டுகள் ஆகி விடுகிறது.இன்றைய இளைஞர்கள் ஜோதிடம் கற்று கொண்டு பலன் அளிக்க சமூக ஊடகங்களின் தயவால் சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது.
ஜோதிட நூல்கள் தேடி படிக்கும் போது மிகுந்த கவனம் அவசியமாகிறது.மிகுந்த பல நூல்கள் உங்களது ஜோதிட பார்வையை திசை மாற்றி விடுகிறது.ஜோதிடத்தில் பல நூல்கள் சரியான ஜோதிட விதிகளை சரியாக எடுத்து உரைப்பது கிடையாது.
ஜோதிட பாடல்களை தேவையில்லாமல் மனப்பாடம் செய்து கால விரயம் செய்ய தேவையில்லை.ஜோதிட பாடல்கள் அந்த கால கட்டத்தில் அவர்கள் பார்த்த ஜாதக விதிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டது.இவ்வாறு வடிவமைக்கப்பட்ட பாடல்கள் அந்த ஒரு ஜாதகத்திற்கு மட்டுமே பொருந்த கூடிய பாடலாக உள்ளது.அந்த பாடல்களை பொதுமை படுத்தி பலன் அறிய முற்படும் போது அவ் விதிகள் எல்லா ஜாதகத்திலும் ஒத்து வருவதாக இல்லை.
எனவே ஜாதக பலன் அளிக்க முற்படும் போது ஷட் பலம்,கிரக உறவுகள்,டிகிரி அடிப்படையில் கிரக சேர்க்கை மற்றும் பார்வை,யோகி மற்றும் அவயோகி தத்துவம் ,சுபத்துவம் மற்றும் சூட்சும நிலை, அம்சத்தில் கிரக நிலை போன்ற பல்வேறு உட்கூறுகளை ஆய்வு செய்து பலன் அறிய முற்பட வேண்டும்.
நன்றி!
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment