Tuesday, 19 August 2025

கேது பகவான் தரும் சூட்சும உண்மைகள்

 கேது பகவான் தரும் சூட்சும பலன்கள் .




 செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


  ஒரு ஜாதகத்தில் ஞான காரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் அறிவு காரக கிரகமான குருவுடன் இணையும் பொழுது அறிவு, தனம், தங்கம்  மற்றும் புத்திர பாக்கியம் இவற்றில் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது. அறிவும் ஞானமும் ஒன்று சேர்கின்ற பொழுது அதில் அப்பலுக்கு ஏற்படுமோ ஒருகாலும் ஏற்படாது .


     நவக்கிரகங்களில் குரு பகவான் ஒருவராக இருந்தாலும் அவர் பிரகஸ்பதி என்ற நாமம் தரித்து தேவர்களுக்கு குருவாக வழங்குகிறார். அல்லவா சைவப் பிரியராகிய கேது பகவான் 

பஞ்ச மகா  பாதகங்களை பகுத்துப் பார்க்கின்ற கேது பகவான் ஞானபீடாதிபதி குருவோடு சேருகின்ற பொழுதுதான் புனிதத்தவம் அடைவார்.


 வாழ்வியல் பொருளியல் போன்றவற்றில் சிறக்க செய்பவனும் சிற்றின்பத்தில் திழைக்கச் செய்வோனுமாகிய சுக்கிர பகவானுக்கு சுப காரகத்துவம் விசேஷமாக அமைந்துள்ளது. 


மேற்கண்ட காரகத்தன்மையை பெற்ற சுக்கிரனோடு கேது பகவான் இனைக்கின்ற பொழுது உண்மையில் ஒரு மனிதனை சிற்றின்ப சுகத்தில் நாட்டம் இல்லாதவனாக, இல்லற வாழ்க்கையின் பற்று  இல்லாதவனாக மாற்றிவிட வேண்டும்.


 ஆனால் உண்மையில் சுக்கிரன் கேது சேர்க்கை பெற்றிருப்பவர்கள் காமத்தை  கட்டுப்படுத்தியும் அதனால் ஏற்படும் விபரீதங்களை உணர்ந்தும் ,ஒருமுகப்பட்ட எண்ணங்களை உடையவராகவும் சிறந்ததோர் வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழ்வதை நாம் பார்க்கின்றோம்.


  சுக்கிரனுடன் கேது பகவான் இணைய பெற்றவர்கள் செல்வ நிலையில் சிறந்து விளங்குவார்கள் ஒன்றை கெடுப்பவன் கொடுக்கவில்லை என்று சொன்னால் அதுவே நன்மையாகும். 


  சுக்கிரன் காமத்துக்கு காரகன், மது மாது இரண்டையும் தரக்கூடியவர் சிலருக்கு இரு மண பெண்டிர் தரக்கூடியவர்.  சுக்கிரன் உடன் பாவ கிரகங்கள் ஆகிய சனி ,ராகு மற்றும் செவ்வாய் பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு பெறும் பொழுது கீழான நிலையில் காம எண்ணம் உடையவராக, பல மாதருடன் தொடர்புடையவராக சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய காம செயல்பாடு உடையவராக இருப்பார்.


ஆனால் சுக்கிர பகவான் ஞான காரகன் கேதுவுடன் சேரும்பொழுது சுக்கிரனின் காரகத்துவத்தில் புனிதம் ஏற்படுகிறது ஒழுங்கு பிறக்கிறது சுருக்கமாகச் சொன்னால் அடர்ந்த காட்டில் இருளைத்  கிழித்து செல்ல ஒருவன் கையில் பிடித்து செல்கின்ற தீப்பந்தத்தின் ஒளியைப் போல் ஞான காரகன் கேது சுக்கிரனை நல்வழியில்  வழி நடத்தி செல்வார் என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.


 சனி பகவான் நம் வினை பயனை அறிய உதவும் கர்ம காரகன் ஆவார். வினைப் பயனால் எடுத்து வந்த பிறவிகளுக்கும், இனி எடுக்கப் போகும் பிறவிகளுக்கும் சனி பகவானே காரகன் ஆவார் சனி மரணத்துக்கும் காரகன் ஆவார்.


 நம் பூர்வ புண்ணிய பலனை அறிவதற்கு பூர்வ புண்ணிய அதிபதி, லக்கனாதிபதி, பாக்கிய அதிபதி மற்றும் கர்மாதிபதி போன்ற கிரகங்கள் நமது இப்பிறப்பை பற்றியோ அல்லது முன்வினை பற்றியோ அல்லது மறு பிறவி பற்றியோ சிந்திக்க இடம் அளிக்க மறந்தாலும் அவ் வழியான எண்ணங்களையும், வாழ்க்கை சம்பவங்களையும் காட்சியாக உணர்த்துபவர் சனி பகவான் ஆவார்.


    சனி பகவான் கலியுகத்திற்கு காரகன் ஆவார் .துன்ப வாழ்விற்கும் சனி பகவானே காரணமாகும்.


  இத்தகைய தன்மையை கொண்ட சனி பகவான் உடன் ஞான காரகன் கேது இணைந்துள்ள நிலையில் வாழ்க்கையில் சகல விதமான இன்ப சுகங்கள் இருந்த போதும் அவற்றை பற்றற்று தெய்வ சிந்தனையை உடையவர்களாக ,கடவுள் நம்பிக்கையில் ஆழ்ந்திருப்பவர்களாக திகழ்வார்கள்..


.   சனி கேது சேர்க்கை பெற்றவர்கள் சன்னி,யாசத்தை மேற்கொள்ள நினைப்பார்கள் .அந்த துறவு வாழ்க்கையில்  அப்பழுக்கற்ற ஞானிகள் போல  இல்லத்தர வாசிகளாக இருந்து கொண்டே துறவறச் சிந்தனையை வகுத்துக் கொண்டு வாழ்வார்கள் .


  இந்த அமைப்பு உடையவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் அந்த செல்வத்தை அறவழியில் செலவிடுவதை நாம் அனுபவத்தில் பார்க்கலாம் .


   ஆயுள் காரகன் சனியுடன்  ஞான காரகன் கேது  இணைந்த அமைப்பை பெற்றவர்கள். வாழ்நாளில்  ஒவ்வொரு நாளையும் புனித படுத்து விதமாக செயல்களை செய்து மக்களுக்கு நல்ல ஞான போதனை போதித்து வருவார்கள்.


 செவ்வாய் பகவான் அடாவடி மற்றும் ரவுடி தனத்திற்கும் மற்றும் மித மிஞ்சிய காம எண்ணத்திற்கும் காரக கிரகமாக விளங்கக்கூடிய கிரகம் ஆகும்.கட்டுக்கு அடங்காத கோப தன்மைக்கு செவ்வாய் பகவானே காரகன் ஆவார்.இரத்தத்தை கண்டாலே பயப்படாத தன்மை கொண்டு இருப்பார்கள்.


மேற்கண்ட தன்மை உடைய செவ்வாய் பகவான் உடன் ஞான காரகன் கேது பகவான் இணையும் போது செவ்வாய் பகவான் சூட்சும வலுவை அடைந்து ஜாதகரின் கட்டுக்கு அடங்காத கோபம் போலீஸ் மற்றும் ராணுவம் போன்ற வேலைகளில் ஈடுபட்டு அவரது ரவுடிகளை சுட்டு வீழ்த்தி பதக்கம் பெறக்கூடிய நிலையில் ஒருவரை மாற்றிவிடும்..மேலும் ரத்தம் பார்த்து  பயப்படாத டாக்டர் படிப்பு படித்து மருத்துவராக பணிபுரிவார்கள்.


 நவ கிரகங்களில் கோள்களின் தலைவன் என்று அழைக்கப்படுபவர் சூரியன் பகவான் ஆவார்.தலைமை கிரகம் ஆகிய சூரியன் உடன் ஞான காரகன் ஆன கேது பகவான் சேரும் போது தலைமை பண்பை ஜாதகருக்கு கொடுக்கும் அதிலும் கேது பகவான் ஆன்மீக தன்மை தரக்கூடிய கிரகம் என்பதால் ஆன்மீக பீடத்தில் தலைவராக திகழ வைக்க கூடிய தன்மை சூரியன் மற்றும் கேது சேர்க்கைக்கு உண்டாகும்.


  மனநிலை காரகன் சந்திரன் உடன் ஞான காரகன் கேது பகவான் இணையும் பொழுது ஒருவிதமான முன் உணர்வு (intution) தன்மை ஜாதகருக்கு உண்டாகிறது.அதே நேரத்தில் லொளகீக வாழ்வில் பற்றற்ற தன்மை உண்டாகிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


097151 89647 


Another cell no: 7402570899(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

Sunday, 17 August 2025

தசை நடத்தும் கிரகம் யோகத்தை அள்ளித் தர

 தசை நடத்தும் கிரகம் யோகத்தை அள்ளித் தர 




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   "எல்லாவற்றிற்கும் நேரம் காலம் வர வேண்டும் "என்பார்கள் .

  அது என்ன நேரம் காலம் என்ன என்பதை ஜோதிட அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்தால் ஜாதகருக்கு நடக்கும் 

நல்ல/கெட்ட தசா புக்திகளே மிகவும் முக்கியமான ஒன்றாகும்..


   நல்ல தசா புக்தி நடக்கும் காலங்களில் ஜாதகர் எதை செய்தாலும் தொட்டது பொன்னாகும்.அதே நேரத்தில் கெட்ட தசா புக்தி நடக்கும் பொழுது எதை தொட்டாலும் விளங்காமல் போவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.


 நல்ல நேரம் நடந்தால் நரி ஆட்டுடன் மேயும்.கெட்ட நேரம் வந்தால் புடலங்காயும் பாம்பாக தெரியும்.இது கிராமத்து சொல்லோடை ஆகும்.


 ஒருவருக்கு இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு, வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிராமங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் தசை நடத்தும் போது அல்லது கோண அதிபதிகள் தசை நடக்கும் போது அவை லக்கன யோகம் தரும் தசைகளாக விளங்குகிறது.இந்த தசை காலங்களில் ஜாதகர் எந்த செயலை செய்தாலும் அவை நல்ல முறையில் செயல்பட்டு நல்ல பலனை வாரி வழங்குகிறது.


 ஒருவருக்கு இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன்,பாவி உடன் சேர்ந்த புதன் போன்ற பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற கிரகங்கள் உடைய தசை நடக்கும் போது அல்லது ஆறு அல்லது எட்டுக்கு உடைய அவ யோக தசைகள் நடப்பில் உள்ள காலங்களில் கடினமான கஷ்டங்களை அல்லது நஷ்டங்களை சந்திக்க நேரிடும். இது போன்ற பாவ அல்லது அவ யோக தசைகள் நடப்பில் இருக்கும் பொழுது எவ்வளவு அறிவு நிறைந்த மனிதராக இருந்தாலும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விடுகிறது.


 ஒரு மனிதன் வெற்றிக்கு அறிவு,திறமை மற்றும் முயற்சி என பல வகைகளில் இருந்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் என்பது தேவையாக இருக்கிறது.சில நேரங்களில் அதிர்ஷ்டம் தரும் அமைப்பு இருந்து அறிவு மற்றும் திறமையானது மிகவும் குறைவாக இருந்தாலும் நல்ல யோக தசைகள் நடப்பில் இருந்தால் அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.


 ஒருவருக்கு யோகம் தரும் தசைகள் வந்தால் அதை அனுபவிக்கவும் மற்றும் அவ யோகம் தரும் தசைகள் வந்தால் அதை தாங்கி கொண்டு எதிர் நீச்சல் போடவும் லக்கனம் மற்றும் அதன் அதிபதியும் வலிமை அடைந்து இருக்க வேண்டும்.


 ஒரு கிரகம் யோகத்தை தரக்கூடிய கிரகமாக இருந்தாலும் அவை தேய்பிறை சந்திரன், சனி , செவ்வாய் ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் அந்த கிரகம் தசை நடத்தும் போது யோகத்தை தராது.


ஒரு கிரகம் அவ யோகத்தை தரக்கூடிய கிரகமாக இருந்தாலும் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிச்சந்திரன் தலித்த புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த அவையப கிரகம் கூட அந்த தசையில் நல்ல பிறவி தரக்கூடிய அமைப்பாக மாறுகிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 

  097151 89647 


Another cell 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம் ஃ



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும்?

 உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும்? 


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஒருவருக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும் என்பதை ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகள் , நடக்கும் தசா புக்தி மற்றும் கோச்சார பலன்கள் ஆகிய மூன்றும் முடிவு செய்கிறது.


 ஒருவரது திருமண நிலை பற்றி தெரிந்து கொள்ள  ஜாதக கட்டத்தில் லக்கனம் என்ற ஒன்றாமிடம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தாளமான எட்டாம் இடம் ஆகிய நான்கு ஸ்தானங்கள் மற்றும் அதன் அதிபதி 

ஆகியவற்றை ஆய்வு செய்து பார்க்க  வேண்டும்.


       இதே போல ஏழாம் இடம் , ஏழாம் இடத்தின் அதிபதி மற்றும் களத்திரக்காரகன் சுக்கிரன் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


     ஒருவருக்கு நல்ல யோகத்தை அள்ளித் தரக்கூடிய இல்லற  வாழ்க்கை அமைய களத்திர ஸ்தானமான ஏழாம் இட அதிபதி சுப கிரகமாக இருந்து கேந்திர கோணங்களில் நின்று சுபர்களின் பார்வை அல்லது சேர்க்கை போன்ற நிலைகளில் தொடர்பினை பெற்று திருமண காலத்தில் யோகம் தரக்கூடிய தசா புக்தி நடப்பில் இருந்தால் யோகம் தரக்கூடிய நல்ல குணவதியான கணவன்/மனைவி அமைவாள்.


  மாறாக ஏழாம் இடத்தில் சனி , செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் நின்று பாவரின் பார்வை அல்லது சேர்க்கை போன்ற  நிலைகளை பெற்று மற்றும் தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் பகவானும் கெட்டு உள்ள நிலையில் மனைவியாலே பெரிய மனக் கஷ்டங்களை உருவாக்கி தரும். 


 ஏழாம் இடத்தில் சனி செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள ராட்சத தன்மையான  வாழ்க்கை துணை அமையும்.இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள பலனில் மாற்றம் ஏற்படும்.


 ஒருவருக்கு ஏழாம் இடம் பலவீனம் அடைந்து பதினொன்றாம் இடம் பலம் அடைந்த நிலையில் முதல் வாழ்க்கை துணை பிரிவு உண்டாகி இரண்டாம் திருமணம் நடைபெறும்.


 ஏழாம் இடத்தில் சூரியன் மற்றும் புதன் போன்ற கிரக தொடர்பு அரசு வேலை பார்க்கும் மனைவி அமையும்.


 ஏழாம் இட அதிபதி லாப ஸ்தானத்துடன் தொடர்பானது மனைவியால் லாபம் உண்டாகும்.


ஏழாம் இட அதிபதி உடன் சனி மற்றும் செவ்வாய் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு காதல் 🪉 திருமணம் உண்டாகும்.


 மேலும் ஐந்து,ஏழு மற்றும் ஒன்பதாம் இட அதிபதி தொடர்பு ஜாதகருக்கு காதல் மணத்தை உண்டாக்கும்.


 ஏழாம் இடம் மற்றும் அதன் அதிபதி உடன் ராகு தொடர்பு வெளிநாட்டு வாழ்க்கை துணை அமையும்.


 ஏழாமிடாதிபதி சர ராசியில் இருந்தால் தூரத்தில் உள்ள வாழ்க்கை துணை அமையும்.


ஏழாமிட அதிபதி ஸ்திர ராசியில் இருந்தால் உள்ளூரில் வாழ்க்கைத் துணை அமையும்


ஏழாம் இட அதிபதி உபய ராசியில் நின்றால் இந்த ஊர்காரர் ஆனால் வெளியூரில் தங்கி வசித்து வருவார்.


 லக்னம் என்னும் ஒன்றாம் இடம் ,குடும்ப ஸ்தானம்  என்னும் இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய நான்கு ஸ்தானங்களோடு சனி, செவ்வாய் ,ராகு ,கேது தொடர்பு இருக்குமானால் அவர்களுக்கு கால தாமதமாக திருமணம் நடைபெறும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no 7402570899


( தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

        



அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் 

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

 வாழ்வில் அடுத்த கட்டத்துக்க முன்னேற...





செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் பல கஷ்டங்களை கண்டு துவண்டு விடாமல் எதிர் நீச்சல் போட்டு முன்னேற்ற தரும் பாதையில் அடி எடுத்து வைக்க ஜாதக கட்டத்தில் லக்கனாதியின் வலிமை மிகவும் அவசியமான ஒன்றாகும்.


 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை பெற்று கேந்திர கோணங்களில் நின்று உச்சம் அல்லது ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று இயற்கை சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்பினை பெற்று இருக்க வேண்டும்.


 இவை மட்டும் அல்லாமல் மனநிலை காரகன் என்று அழைக்கக்கூடிய சந்திரன் பகவான் மற்றும் ஆத்மா காரகன் என அழைக்கப்படும் சூரியன் பகவான் ஆகிய இருவரும் பலம் அடைந்து இருக்க வேண்டும்.


ஒருவர் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும்  பலம் இழந்து  காணப்பட்டாலும் லக்னாதிபதி மட்டும்  வலிமையாக இருப்பின் அந்த ஒன்றை மட்டும் கை பிடித்துக் கொண்டு சாதகர்  வெற்றி பாதை நோக்கி அடி எடுத்து வைப்பார்.


ஒரு சிலருக்கு வாழ்வில் தொடக்க காலத்தில் தொடர்ந்து அவயோகத் தசைகளே நடப்பில் இருந்து கடுமையான கஷட நஷ்டங்களை சாதகர் சந்திக்க நேரிடும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நல்ல யோக தசைகள் வந்தால் அந்த வாய்ப்பை பிடித்து கொண்டு வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி விடுவார்கள்.


வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர லக்கனாதிபதி வலிமை அவசியமான ஒன்றாக திகழ்கிறது.


ஒருவருக்கு லக்னாதிபதி வலிமை இழந்த நிலையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கி கொண்டு எதிர் நீச்சல் போடும் திராணி அற்றவராக இருப்பார். எவ்வளவு யோகம் வந்தாலும் அதை அனுபவிக்க கூடிய தன்மை அற்றும் இருப்பார்.


சிலருக்கு வாழ்வின் தொடக்க காலத்தில் அவயோகத் தசைகள் தொடர்ந்து வந்து கடுமையான கஷ்டங்களை அனுபவித்து  பின்னர் நல்ல யோக தசைகள் வரும் பொழுது அதை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் அடுத்த கட்டத்தை  நோக்கி நகர்வதற்கு  லக்கனாதிபதியின் வலிமை மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.


ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை பெற்று இருப்பதுடன் மட்டும் அல்லாமல் முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் வலிமை பெற்று இருக்க வேண்டும்.


ஒருவர் ஜாதகத்தில் மூன்றாம் இடம் முயற்சி ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்து தரக்கூடிய ஸ்தானமாகவும் கருதப்படுகிறது.


 எவர் ஒருவர் ஜாதகத்தில் மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் நல்ல நிலையில் அமர்ந்து அதன் தசைகள் நடப்பில் வரும் காலங்களில் ஜாதகர் கடுமையான முயற்சியினை மேற்கொண்டு வாழ்வின் உயரிய பாதையினை நோக்கி அடி எடுத்து வைப்பார்.


 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி, மூன்றாம் இட அதிபதி ஆகிய இருவரும் கேந்திர கோணங்களில் நின்று வலிமை பெற்று இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான் , வளர்பிறை சந்திரன், தனித்த  புதன் மற்றும் சுக்கிரன். ஆகியோரின் பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெற்று இருக்க வேண்டும்.


வாழ்வின் தொடக்கத்தில் தொடர்ந்து ஆறு அல்லது எட்டுக்கு உடைய தசைகள் நடப்பில் இருந்து வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தனம் -பாக்கியம் மற்றும் லாபம் என்று அழைக்கக்கூடிய 2,9 ,11 ஆம் அதிபதிகள் வலிமை பெற்று கேந்திர கோணங்களில் நின்று தன காரகன் குரு பகவான் உடைய பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெற்று இவற்றில் ஏதாவது ஒரு தசைகள் வரக்கூடிய கால கட்டத்தில் மிகுந்த தனங்களை சம்பாதித்து உயரிய நிலையினை தன் வாழ்நாளில் பெறுவார்.


 ஒருவர் ஜாதகத்தில் மூன்று தூண்கள் என அழைக்கப்படும் 1,5,9 ஆகிய மூன்று ஸ்தானங்களும் மற்றும் அதன் அதிபதிகளும் வலிமை அடைந்து இருப்பின் அந்த தசை நடப்பில் வரும் காலங்களில் வாழ்வில் உயரிய பாதையினை நோக்கி அடி எடுத்து வைக்கக்கூடிய யோகம் உண்டாகும்.


நன்றி


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


097151 89647 


Another cell : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

          




அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.