கிரகங்கள் படுத்தும் பாடு - ( 155 )
ஓருவரை சமூகம் விரும்பும் மனிதராக மாற்றுவதில் சாதக கட்டத்தில் திரிகோண இடங்களான ஓன்று, ஐந்து மற்றும் ஓன்பதாமிடங்களாகும்.
லக்கனம்
சாதகரை வழிநடத்தி செல்லும் கேப்டனாக திகழ்பவர் லக்கனமும் அதன் அதிபதியும் ஆகும்.இலக்கினாதிபதியை கொண்டே ஒருவரது எண்ணம், மனநிலை போன்ற உளவியல் சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள இயலும்.
"எண்ணம் போல் வாழ்வு " என்பதால் ஒருவருக்கு சமூகம் விரும்பதக்க எண்ணங்களையும் ,மனநிலைகளையும் தருவதில் லக்கனத்திற்கும் அதன் அதிபதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு என்பதால் இவை சாதகருக்கு பலப்படவேண்டும்.
ஐந்தாமிடம்
ஒருவருடைய சாதகத்தில் ஐந்தாமிடம் என்பது பூர்வபுண்ணிய ஸ்தானமாகும்.ஒரு சாதகருக்கு நல்ல புத்திசாலிதனம் தருவதில் ஐந்தாமிடத்திற்கு அதிக பங்கு உண்டு.அதேபோல கற்பனை உணர்வுகளை தருவதிலும் இந்த இடத்திற்கே முழு பங்கு உண்டு.
ஒரு மனிதனிற்கு நல்ல புத்திசாலித்தனமும் , நல்ல கற்பனை உணர்வும் இருந்தாலே சமூகம் விரும்பதக்க மனிதராக விளங்க முடியும்.
எனவே இந்த ஐந்தாமிடம் உச்சம் ,ஆட்சி என்ற வகையில் பலமடைந்தோ அல்லது 1.4.7.10.5.11 ஆகிய இடங்களில் நின்று பலமடைந்து நின்று சுப கிரகம் பார்வை பெற்றால் சமூகம் விரும்பதக்க மனிதராக மாறிவிடுவார்.
ஓன்பதாமிடம்
ஒரு மனிதனை பெருந்தன்மை பெற்றவனாகவும் , தான தர்ம குணம் நிறைந்த கொடையாளியாகவும் மாற்றுவதில் ஒன்பதாம் இடத்திற்கு பெரும் பங்கு உண்டு.
எனவே ஒருவரது சாதகத்தில் ஒன்பதாமிடம் பலமடைந்து பாவ கிரக சேர்க்கையின்றி சுப கிரகங்கள் சம்பந்தப்பட்டவர் தனக்கென வாழாமல் பிறர்கென வாழும் தகைமை பெற்றவர்களாகிறார்கள்.
புகழ் பெற்ற Arasiyal - அரசியல் தலைவர் ஆவதற்கும் ,பெரிய தொழில்முனைவோர்/Entrepreneur ஆவதற்கும் , அரசாங்கத்தில் உயர்ந்த அதிகாரிகளாக மாறுவதற்கும் இந்த ஒன்பதுக்குடைய கிரகம் வலுவாக இருந்தால்தால்தான் இயலும்.
பல சாதனைகள் செய்து சாதனையாளர்கள் ஆவதற்கு இந்த ஒன்பதுக்கு உரிய கிரகம் பலமடைந்து இருக்க வேண்டும்.
கிரகங்களில் சமூகம் விரும்பதக்க மனிதராக மாற்றுவதில் பெரும் பங்கு ஏனைய கிரகங்களைவிட சனி , குரு மற்றும் கேது போன்ற கிரகங்களுக்கு அதிகம் உண்டு எனது அனுபவத்தில் உணர்கிறேன்.
கர்ம காரகனான சனி பகவான் கர்மஸ்தானமான பத்தாம் இடத்தில் பலமடைந்து நின்றால் அதன் திசை , புத்தி காலங்களில் மக்கள் போற்றும் மகத்தான தலைவா் ஆக மாற்றி அழகு பார்க்கிறது.இதனை "அமலயோகம் " எனலாம்.
சனி -கேது சேர்க்கை
சனி பகவான் ஆனவர் ஞானக்காரகன் கேதுபகவானோடு சேர்ந்து வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இணையும்போது அப்படிப்பட்ட அமைப்பை பெற்றவர்கள் ஒருவிதமான ஈர்ப்பு சக்தியை பெற்று மக்களிடம் பெரும் செல்வாக்கையும் பெற்று மக்களிடம் ஒரு தெய்வீக அமைப்பை உருவாக்கிவிடுவார்கள்.
உலக வாழ்க்கைக்கு தேவையான பொருட்செல்வத்தை வழங்குபவர் ராகுபகவான் என்றால் அருட்செல்வத்தை வாரிவழங்குபவர் கேதுபகவான் ஆவார்.
வான்புகழ் கொண்ட வள்ளுவர்கூட
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை " என்கிறார்.
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை " என்கிறார்.
இவ்விரு கிரகங்களில் மக்கள் மதிக்கதக்க மனிதராக மாற்றுவதில் ராகுவைவிட கேதுபகவானே முக்கியத்துவம் பெறுகிறார்.கேதுவிற்கு மற்ற எல்லா கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு.கேது ஒரு சாதனைக்கு வித்தான கிரகம் ஆகும்.
குருபகவான்
குருபகவான் லக்கனத்தில் இருந்தாலும் அல்லது லக்கனத்தை பார்த்தாலும் மக்கள் விரும்பதக்க மனிதராக மாற்றுவதில் தனது பங்கை ஆற்றுகிறது.
மக்கள் விரும்பதக்க மனிதராக மாற்றுவதில் குருபகவான் கிரகத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. குருபகவான் லக்கனத்தையோ அல்லது ராசியையோ பார்வை பெறும் அமைப்பை பெற்றவர்கள் மக்கள் விரும்பதக்க மனிதராக திகழ்வார்கள்.
எனவே லக்கனம், ஐந்தாமிடம், ஒன்பதாம் இடம் ,குரு ,சனி மற்றும் கேது ஆகிய ஐந்து அம்சங்களை பலமாக பெற்றவர்கள் மக்கள் விரும்பதக்க மனிதராக மாறுவது உறுதி ஆகும்.
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற ,தங்களது பிறந்ததேதி, நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஜ்ஜேஷ் ( message ) செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம்.)
தொடர்புக்கு
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
97 151 89 647
செல்
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC , MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி ,புதுக்கோட்டை மாவட்டம்.
M.SC , MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி ,புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi @gmail.com
masterastroravi @gmail.com
My website
astroravichandransevvai. Blogspot.com.
astroravichandransevvai. Blogspot.com.
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment