உச்சி புகழ் அடையும் யோகம் யாருக்கு ?
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !
கிரகங்கள் படுத்தும் பாடு
ஒருவர் தமது வாழ்வி்ல் ஒரு சிலர் மட்டுமே அடையக்கூடிய உச்சி புகழ் எனும் உயரிய நிலையினை அடைய வேண்டுமாயின் அவரது சாதகத்தில் கீர்த்தி,புகழ் மற்றும் அந்தஷ்து நிலையினை உயர்த்திதரக்கூடிய மூன்றாம் இடம் அவசியமானது.
மூன்றாம் இட அதிபதியானது வேறு எந்த ஸ்தானாதிபத்தியம் பெறாமல் உச்சம் ,ஆட்சி ,கோணம்,கேந்திரம் மற்றும் நட்பு நிலையினில் இருந்து சுபர் பார்வை பெற்று அந்த திசையே இள வயதினில் வருமாயின் அந்த திசையினில் உச்சி புகழ் அடையும் ஏற்படும்.
சூரியன்,சந்திரன் பகவானை தவிர்த்து ஏனைய கிரகங்களுக்கு இரண்டு வீட்டிற்க்கு அதிபதியாக இருப்பதால் அதி்ல் மற்றொரு ஸ்தானத்தினை பொறுத்து யோக பலன் மாறுபட வாய்ப்பு இருக்கிறது.
ரிஷப லக்கனத்திற்கு மூன்றாம் இட அதிபதி சந்திரன் லக்கனத்தில் உச்சம் பெற்று சுபர் பார்வை பெற்று வாலிப வயதினில் சந்திரன் திசை நடப்பில் இருப்பின் அந்த ஜாதகன் உச்சி புகழ் பெறும் யோகம் உண்டு .
இதேபோல மிதுன லக்கனத்திற்கு மூன்றாம் இட அதிபதி சூரியன் லாப ஸ்தானத்திற்கு ஏறி உச்சம் அடைந்து இயற்கை சுபர் பார்வை பெற ஜாதகன் உச்சி புகழ் அடையும் யோகம் உண்டு.
ஆறு கிரகங்கள் கூடி ஏதாவது ஒரு ராசியில் நிற்க ,அதற்கு மேல் மற்ற கிரகங்கள் இருக்க பிறந்த ஜாதகன் சூரியன் பிரகாசிக்கும் தேசம் எங்கும் அரசாளும்படியான இராஜ யோகத்தினை அடைவான்.
லக்கனத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதியும்,சந்திரனுக்கு நான்காம் இடத்தின் அதிபதியும் ஜெனன லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் கூடி நிற்க பிறந்த ஜாதகர் உச்சி புகழ் அடையும் யோகத்தினை அடைந்து புகழடைவான்.
லக்கனத்திற்கு ஐந்து,ஒன்பதாம் அதிபதி கூடியிருக்க,இராசிநாதன் சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களில் (1,4,7,10 ) மற்ற கிரகங்களுடன் கூடியிருக்க சூரியன் ,ராகு,குரு இவர்கள் கேந்திர ஸ்தானங்களில் இருக்க ,லக்கனாதிபதி கோண ஸ்தானங்களில் இருந்தால் அந்த ஜாதகர் வாலிப காலத்திலே தனதான்ய சம்பந்துடன் வாழ்ந்திருப்பான்.
சந்திரன் ஆட்சி பெற்றிருக்க,
லக்கனத்துக்கு நான்கில் சுக்கிரனும்,பாம்பும் கூடியிருக்க ,லக்கனத்தி்ல் குருவுமிருக்க அவர்க்கு நான்கில் லக்கனாதிபதி ஆட்சியாயிருக்க,அஷ்டமாதிபதியும் ஆட்சியாகில் அந்த ஜாதகருக்கு இராஜயோகம் தித்திக்கும்.
தனஸ்தானாதிபதியும்,
குருவுக்கு லாபாதிபதியும்,
சந்திரனுக்கு லாபத்தில் இருக்க ,பத்தாம் இடத்தின் அதிபதி சந்திரனுக்கு ஐந்தாம் இடத்தில் இருக்க ,பாக்கியாதிபதி சந்திரனுக்கு நான்கில் இருக்க பிறந்த ஜாதகருக்கு உச்சி புகழ் அடையும் யோகம் உண்டாகும் .
சந்திரனுக்கு நான்கில் குரு நிற்க ,அதற்கு நான்கில் சுக்கிரன் இருக்க ஆயுள் ஸ்தானமாகிய எட்டாம் இடத்திற்கு ஆறாம் இடத்தில் சூரியன் ,புதன் கூடியிருக்க ,பத்தாம் இராசி்க்கு உடையவர் நான்கு,ஏழாம் இடத்தில் இருக்க பிறந்த ஜாதகருக்கு நரயோகம் சித்திக்கும்.
ராகு,கேதுக்கள் இருந்த ஸ்தானத்திற்கு இருபுறமும் மற்ற கோட்கள் வலுப்பெற்று நிற்க ,சனிக்கு ஐந்து ,ஆறில் செவ்வாய் இருக்க ,லக்கனத்திற்கு நான்காம் இடத்தில் குரு இருக்க பிறந்த ஜாதகர்க்கு பிரபமடையும் யோகம் உண்டு .
ஜென்ம லக்கனாதிபதி, சுக்கிரன் ,ராகு இம்மூவரும் பத்தாம் இடத்தில் இருக்க ,குருவும்,
சந்திரனும் ஏழாம் இடத்தில் இருக்க ,சனி ,செவ்வாய் ,
புதன்,குரு முதலானோர் லாபஸ்தானத்தில் இருந்தால் உச்சி புகழ் அடையும் யோகம் உண்டு .
ஜென்ம லக்கனத்திற்கு குரு தனித்திருக்க ,சந்திரன் ஏழி்ல் வலுவாய் இருக்க ,லக்கனாதிபதி சுக்கிரன் கூடி பத்தாம் இடத்தில் இருக்க ,அவருடன் லாபாதிபதி கூடியிருக்க ,பாவர்கள் திரிகோணத்தில் இருப்பின் உச்சி புகழ் அடையும் யோகம் உடையவராக இருப்பார் .
நன்றி !
(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்பதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)
வாட்ஷ் அப் 97 151 89 647 செல் 740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC.MA.BEd .
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail .com
My blogspot .click here
AstroRavichandran .blogspot .com.
AstroRavichandransevvai .blogspot .com.
............................................
No comments:
Post a Comment