செவ்வாய்-சனி சேர்க்கை தரும் பலன்கள்,
செவ்வாய்பட்டி பத்ராளியம்மன் துணை !
கிரகங்கள் படு்த்தும் பாடு
ஒருவரது சாதகத்தில் செவ்வாய் -சனி இருவரும் சேர்ந்து இருந்தோ அல்லது வெவ்வேறு ஸ்தானங்களில் இருந்தோ இவர்களது பார்வை ஒரு குறிப்பிட்ட ஸ்தானங்ளி்ல் விழுந்தால் அந்த பாவத்தின் பலன்களை நாசமடைய செய்கின்றன.இது அனுபவ பூர்வமான உண்மையாகும்.
ஆனால் சனி பத்திலும் ,செவ்வாய் இரண்டிலும் அமையும் போது இவர்கள் இருவரது பார்வை ஒரு குறிப்பிட்ட பாவத்தில் விழாது.எனவே மேற்கண்ட அமைப்பு மட்டும் கெடுபலனை தராது.
அதேநேரத்தில் செவ்வாய் பத்திலும்,
சனி இரண்டிலும் அல்லது செவ்வாய் -சனி இருவரும் பத்திலும் அமையும்போது இவை நான்காம் இடத்தை பார்வை செய்வதால் நான்காம் இடத்திற்கு உரிய ஸ்தான பலத்தினை பாதிக்கிறது.
இதே போல இவ்விருவரும் இரண்டில் அமர்ந்திருந்தால் இவர்கள் இருவரது பார்வையும் எட்டாம் இடத்தினை பார்வை செய்வாதால் அந் சாதகர் திடீர் மரணம் ,விபத்து,
மனைவியின் பிரிவு போன்ற பலன்களை சந்திக்க நேரிடும்.
மேலே குறிப்பிட்ட இக்கருத்தினை ஒரு சில உதாரண சாதகங்ளோடு விளக்குவோம்.
![]() |
ஜாதகம் -1
சனி பத்திலும் ,செவ்வாய் இரண்டி்லும் அமர்ந்து ராஜயோகம் தந்த சாதகம் ஒன்றினை காண்போம்.
இந்த சாதகம் மாநில அரசாங்கத்தின் உயர்ந்த பதவியில் இருந்த அதிகாரி ஒருவரின்
ஜாதகமாகும்.இதி்ல் யோகாரகனான சனி பத்தில் அமர்ந்து குருவின் பார்வையை பெற்றார்.ஒன்பது ,
பணிரெண்டுக்குரிய புதன் உச்சம் மற்றும் ஆட்சி .லபாதிபதி சூரியன் , இரண்டு,ஏழுக்குரிய செவ்வாய் ஆகியோர் ஆட்சி ,
ஒன்பது ,பத்திற்குரிய புதன்,சந்திரன் சேர்க்கை சனியின் பார்வையை பெற்று உள்ளனர்.இவ்வித அமைப்பே இவரை உயர்ந்த பதவியில் அமர்த்தியது.
ஜாதகம்-2
அடுத்து இரண்டில் சனியும்,பத்தாம் இடத்தில் செவ்வாயும் அமர்ந்து பாதகம் செய்த ஒரு சாதகத்தினை இங்கு காண்போம்.
இந்த ஜாதகத்தி்ல் ஐந்திற்கு உரிய செவ்வாய் தசம கேந்திரம் , லக்கனாதிபதி குரு நான்காம் இடத்தில் ஆட்சி ,தன ஸ்தானத்திற்கு அதிபதி சனி ஆட்சி ,பத்தாம் இடத்திற்கு அதிபதி புதன் ஒன்பதாம் இடத்தில் இருகிறார்.
சுப கிரகங்களான புதன் ,குரு ,சந்திரன் ஆகியோர் நல்ல ஸ்தானங்ளி்ல் உள்ளார்.ஆயினும் இரண்டில் அமர்ந்த சனியும்,பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ள செவ்வாயும் நான்காம் இடத்தினை பார்வை நோக்குகிறார்கள்.
நான்காம் இடம் செல்வம்,வீடு,மனை,
தோட்டம்,துரவு,தயார்,
கல்வி,வாகனங்கள்,மாடு,கன்றுகள் ஆகியவற்றினை குறிக்கும் இடம் என்பதால் சாதகரது சாதகத்தில் சனி ,செவ்வாய் ஆகிய இரண்டும் நான்காம் இடத்தினை பார்வை செய்வதால் இந்த ஜாதகர் தனது வீடு ,வாசல்,தோட்டம்,துரவு ஆகியவற்றினை இழந்து சுமாராக அரை கோடிக்கு மேல் நஷ்டப்பட நேர்ந்தது.
ஜாதகம்-3
அடுத்தபடியாக சனி ,செவ்வாய் இரண்டில் அமர்ந்து கெடுபலன்களை தந்த ஒரு சாதகத்தினை காண்போம் .
இந்த ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் சனி ,செவ்வாய் அமர்ந்து எட்டாம் இடத்தினை பார்வை செய்வதால் ஜாதகருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின் இவரது மனைவி இவரை விட்டு வேறு ஒருவருடன் ஓடிப்போய்விட்டாள்.
இதற்கு காரணம் செவ்வாய் ,சனி ஆகியோரின் எட்டாம் இட பார்வையே ஆகும்.
நன்றி !
(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)
வாட்ஷ் அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc.MA.BEd
(சோதிட ஆராய்ச்சியாளர்& ஆசிரியர்)
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.
My email
masterastroravi@gmail .com
My blogspot
AstroRavichandran .blogspot .com
AstroRavichandransevvai .blogspot .com
astrosmartnotes.blogspot .com
....................
No comments:
Post a Comment