மானிட வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடு - ( 135 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
மனித வாழ்வில் கிரகங்கள் செய்யும் மாற்றங்களை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து எனது முகநூலிலும் மற்றும் எனது வலைதளத்திலும் எழுதி வருகிறேன்.அனைவரும் படித்து பயன்பெறுங்கள்.
ஒருவர் பெறக்கூடிய வெற்றிக்கும் ,தோல்விகளுக்கும் அவரது சாதக கட்டத்தில் உள்ள கிரகநிலைகளே முழு காரணங்கள் ஆகும். நல்ல கிரகநிலைகள் இருந்தாலும் அந்த யோக திசைகள் உரிய காலத்தில் நடைபெற்றால்தான் அந்த யோகங்கள் செயல்பாட்டுக்கு வரும் நிலையை ஒருவர் பெற முடியும்.
எனது அனுபவங்களில் பலரது சாதகத்தை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.சனி திசை வருவதற்கு முன்புவரை உண்ண உணவுக்கு கூட கஷ்டப்பட்டவர் தனது சொத்து எல்லாம் இழந்து கடனால் கஷ்டப்பட்டவர் , இப்பொழுது இழந்த சொத்து எல்லாம் வாங்கியது மட்டுமல்லாமல் அதற்கு மேலும் சொத்துக்களை வாங்கி ,லாரி,டிராக்டர் போன்ற வாகனங்களை பெற்று மதிக்க தக்கவராக மாறிவிட்டார் .இதற்கு காரணம் அவரது நடைபெற்ற யோக சனி திசையே காரணம் ஆகும்.
சாதகர் துலாம் ராசி என்பதால் அவருக்கு மூன்று மற்றும் ஆறுக்குடைய அதாவது ருண ,ரோக அதிபதி குரு திசையில் ஆட்டி பிடித்து எல்லாவற்றையும் இழக்க வைத்து பின்பு நடைபெற்ற சனி திசையில் யோகத்தை வாரி வழங்கியது.
எனவே இழப்புக்கும் மற்றும் ஏற்றத்திற்கும் அவரது கிரகங்கள் படுத்தும் பாடே ஆகும்.ஒருவர்.இழப்பதால் அவருடைய திறமையின்மையே காரணம் என்றோ ! அல்லது வெற்றி பெறுவதால் அவரது அறிவாளிதனம் என்றோ ! கூறிவிடமுடியாது.
ஒருவரது சாதகத்தில் லக்கனம்,தனஸ்தானம் ,
சுகஸ்தானம் ,புத்தி ஸ்தானம் மற்றும் தர்மஸ்தானங்களும்( 1,2,4,5,9 ) மற்றும் கல்விக்குகாரகரான குரு,புதன் ,சுக்கிரன் ,மனநிலைகாரகன் சந்திரன் ஆகிய கிரகங்களும் பலமடைந்து பிறந்த குழந்தை , குப்பத்தில் பிறந்தாலும் அவனுடைய கிரகநிலைகளும் மற்றும் உகந்த திசையும் அவனை கற்றவனாக்கி ஒரு முக்கிய அரசு பொறுப்புகளை வழிநடத்தும் அறிஞனாக மாற்றி அழகு பார்ககும்.
அதேநேரத்தில் கோடீஸ்வர வீட்டில் பிறந்தாலும் மேற்கண்ட கிரகநிலைகளும் ,நல்ல ஸ்தானநிலைகளும் பெறாமல் மற்றும் உகந்த திசைகளும் அவனது வாழ்வில் வராமல் எல்லா வசதியிருந்தும் வாய்ப்பை பயன்படுத்த தவறி வாழ்வில் கற்றறிந்தவர் சபையில் பேச தகுதியற்றவனாக மாற்றிவிடுகிறது.
"
திறமையுள்ள மனிதர் எல்லாம் எல்லாம் வெற்றி பெறுவது இல்லையே !
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லையே !
சில நேரங்களில் ஒரு தொழிலுக்கு தேவையான திறமை,அறிவு மற்றும் கெட்டிகாரத்தனம் இவற்றை பெற்றிருந்தும் அத்தொழிலில் ஜொலிக்க முடியவில்லை ஆனால் அத்தொழிலுக்கு தேவையான தகுதிகள் இல்லாவிட்டாலும் அவரது கடையை நாடி மக்கள் செல்கிறது என வருத்தப்படுபவருண்டு.
காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்து பார்த்தால் அவரது சாதகத்தில் தனஸ்தானம்,பாக்கியஸ்தானம்,ஜீவனஸ்தானம் மற்றும் லாபஸ்தானம் (2,9,10,11 ) ஆகியஸ்தானங்கள் பலமடைந்து ஒன்றுக்கொன்று சேர்க்கை,பார்வை மற்றும் பரிவர்தனை பெற்ற நபர் அத்தொழிலுக்குரிய நேர்த்தியும் மற்றும் ஞானமும் இல்லாத சூழலிலும் மேற்கூறிய ஏதாவது உகந்த திசையும் நடப்பில் இருக்கும்.எனவே ஒரு வீதியில் பல ஜவுளி கடைகள் இருந்தாலும் அந்த ஒரு கடையில் மட்டும் இவ்வளவு கூட்டம் நிரம்பி வழிவதற்கு காரணமும் மேற்கூறிய காரணங்களே ஆகும்..
எனவே ஒரு மனிதன் ஆனவர் வான்புகழ் கொண்ட திருவள்ளுவர் கூறுவதுபோல "கொக்கக்க கூம்பும பருவத்து "" அதாவது கொக்கானது உரிய காலம் வரும் வரை காத்திருந்து பெரியமீனை கொத்தி செல்வதுபோல "ஒருவர் உகந்த காலம்வரை காத்திருந்து உரிய காலத்தில் தட்டி செல்லவேண்டும்.
கோவில்களுக்கு கூட ஒரு குறிப்பிட்ட காலம் உண்டு.ஒரு சில குறிப்பிட்ட காலங்கள் வரை கூட்டம் நிரம்பி வழிவதும் ,சில காலங்களில் கூட்டமே இல்லாமே இருப்பதையும் காணமுடிகிறது.
********
(தங்களது சாதகபலன்,திருமண
பொருத்தம்,மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெறலாம்.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போனாற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )
தொடர்புக்கு
செல்
97 151 89 647
740 257 08 99
வாட்ஸ்அப்
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
astrosmartnotes .blogspot .com
..................
......
My email
masterastroravi@gmail .com
-------##-----#--------------------#
No comments:
Post a Comment