Wednesday, 19 December 2018

குரு பகவானும் ,புதன் பகவானும் மனித வாழ்வி்ல் நிகழ்த்தும் பங்கு

குரு பகவானும்,புதன் பகவானும் மனித வாழ்வில் நிகழ்த்தும் பங்கு.

                              
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

கிரகங்கள் படுத்தும் பாடு!

     ஒருவரது சாதகத்தில் பணம் ,பதவி ,பட்டம்,புகழ் ,கல்வி ,ஞானம்,செல்வம்,
குழந்தை பாக்கியம் மற்றும் ஆன்மீக வாழ்வு   ஆகியவற்றினை தந்து லொளகீக வாழ்விற்கும்,ஆன்மீக வாழ்விற்கும் அடிப்படை காரணர்த்தாவாக திகழக்கூடிய கிரகம் குரு பகவான் ஆவார்.

     ஒருவருக்கு புத்தி சாதூர்யம்,விவேகம்,
நுண்ணறிவு,எண்ணியல்,கணித அறிவு,இசை ஆர்வம்,கதை,கவிதை,
கட்டுரை,பாடல் மற்றும் கணினி அறிவு போன்ற அனைத்திற்கும் காரணகர்த்தா புதன் பகவானே ஆவார்.

      புதன் பகவான் என்றும் மனதினை இளமையாக வைத்துகொள்ள பேரூதவி புரிபவர்.

      ஒரு மனினின் அறிவாற்றலை ஆட்சி செய்பவர் புதன் பகவான் ஆவார் .

  அரசாங்கம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற புதன் பகவானே காரணகர்த்தா ஆகும் .

         கணிதம்,பேச்சு, தொழி்ல்நுட்பம்,
ஆயக்கலைகள் போன்றவற்றுள் ஒருவர் புகழ் பெற்று திகழ புதன் பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார்.

                         

   ஒரு மனிதன் யாருடைய ஆதரவின்றி தனித்து தனது திறமை,அறிவு  மற்றும் முயற்சியால் வெற்றி பெற புதன் பகவானே குறிப்பிட தகுந்தவர் ஆவார் .

   புதன்  ஒருவரது சாதகத்தில் உச்சம் ,ஆட்சி போன்ற அமைப்பினில் பலமடைந்து நின்றால் '' பத்ர யோகம் '' ஆகும்.

 பத்ர யோகம் பெற்றவர் கொளரவ பதவி பெற்றவராக ,பல பட்டம் பெற்றவராக மற்றும் பல கலைளில் சிம்ம சொப்பணமாக திகழ்வார் .

   ஆத்மா காரகர் சூரியன் பகவான் புதன் பகவான் உடன் சேர்ந்து நிற்க அது ''புத - ஆதித்ய யோகம் எனப்படும்.இது பல பட்டம் பெற்று சாதகரை கல்விமானாக திகழ வைக்கும்.

  அவிழ்க்க முடியாத பல புதிர்களை போட்டு அந்த புதிர்களை அவிழ்த்து விடை காண வைப்பவரும் புதன் பகவானே காரணம் ஆகும் .

  புதன் பகவான் இரட்டை வேடதாரி பல கிரிமினல் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் துப்பறிவு நிபுணராக திகழ்பவரும் புதன் பகவானே ஆவார் .அதேநேரத்தில் பெரிய வங்கிகளில் இரகசியமாக CC TV camera வையும் தாண்டி bank logger உள்ள pass word யும் கண்டறிந்து bank logger உடைத்து யார் கண்ணில் படாமல் பணத்தினை கொள்ளையடிக்கும் corporate திருடனாக  திகழ செய்பவரும் புதன் பகவானே காரணம் ஆகும் .                           

   ஒரு சிலர் படிப்பறிவு பெற்றிருந்தாலும் முட்டாளாக திகழ செய்பவரும்,படிக்காத கிராமத்தானாக இருந்தாலும் அவரை படிக்காத மேதையாக திகழ  செய்பவரும் புதன் பகவானே ஆகும் .

 ஒரு சிலர் கபடதாரியாகவும்,வேறு சிலர் உடன் இருக்கும் போது அவர்ளிடம் காணப்படும் அலாதியான நகைச்சுவை உணர்வுகளுக்கும் நாயகனாக விளங்குவபர் புதன் பகவானே ஆகும்.

  நவகிரகங்களில் இளவரசராக திகழ்பவர் புதன் பகவானே ஆகும் .வாணிப வியாபரம் புரிபவர்களுக்கு புதன் பகவானின் ஆசியும்,அருளாட்சியும் அவசியம் ஆகும்.

  வாணிகம்,விவசாயம்,
பொருளாதரம்,கனிணி அறிவியல்,கணக்கு,
புள்ளியியல் மற்றும் பொருளாரம் போன்ற  துறைகளில் கொடிகட்டி விளங் புதன் பகவானே காரணம் ஆகும்.

                             

    ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவர் புகழ் பெற்று திகழ புதன் பகவானே காரணம் ஆகும் .புதன் பகவான் ஆனவர்  இணையக்கூடிய கிரகத்தின் தன்மையினை பொறுத்து புதன் பகவான் தனது இயல்புநிலை வெளிப்படும்.

  உதாரணமாக ராகு பகவான் உடன் புதன் பகவான் இணையும்போது சாதகர் பொய் பேசக்கூடியவராகவும்,
கேது பகவான் உடன் இணையும் புதன் உண்மை பேசக்கூடிய குணநலன் உடையவராகவும் விளங்குவார்.

                 

  நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக ராஜகிரக அந்தஸ்து குரு பகவானுக்கு வழங்ப்படுகிறது.

   குரு பகவான் ஒருவரது சாதகத்தில்  பலமடைந்த அமைப்பினை பெற்றவர்கள் மட்டுமே வருமான வரித்துறை,கல்வி துறை ,நிதி துறை,நீதி துறை  மற்றும் பொருளாதரம் போன்ற துறைகளில் கொடிகட்டி பறக்க முடியும்.

     அரசாங்க துறைகளில் ஆசிரியர் ,நீதிபதி அமைச்சர் போன்ற கொளரவ பதவிகளில் பணியாற்றுபவர்கள் குரு பகவானை பலமான அமைப்பினை பெற்றவர்கள் ஆவார் .

    கலைதுறைகளில் உயர்ந்த  அந்தஷ்து  பெறுவதற்கும்,
இளங்கலை,முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சிறந்து விளங்குவற்கும் குரு பகவானின் அருள் அவசியம் தேவைப்படுகிறது.

   சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பதற்கு குரு பகவானே முக்கியமானவர் ஆகும்.

     முற்பிறவியில் நாம் செய்கின்ற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப யோக பாக்கியங்களை தருவதால்  இவரை பாக்கிய காரகன் அல்லது புண்ணிய காரகன் என அழைககப்படுகறது.

  திருமண வயதினில் உள்ள ஆண்களும்,பெண்களும் குரு பெயர்ச்சி முக்கியம் தருவதன் காரணம் திருமணம் நிச்சயம் செய்ய குரு நோக்கம் அவசியம் ஆகும்.

                         
                         

    குரு பகவான் எக்கிரகத்துடன் இணைந்தாலும்,
பார்த்தாலும் அக்கிரகத்தின் தீய பலன்களை குறைத்துவிடும்.

      குரு பகவான் பிரச்சினைள்,சிக்கல்கள் மற்றும் ரகசியங்ளை காக்க தெரிந்தவர் ஆவார் .

    குரு பகவான் மதிப்பவர்களை மதிக்கவும்,
எதிர்ப்பவர்ளை மிதிக்கவும் தெரியும்.

    பிரபஞ்சத்தில் பிரம்மாவின் கட்டளைப்படி ஜீவராசிகளை உருவாக்கும் பொறுப்பினை குரு பகவான் பெற்றிருப்பதால் இவரை '' புத்திர காரகன்'' என அழைக்ப்படுகிறது.

    தன யோகத்தினை வழங்குபவர் என்பதால் ''தன காரகன் '' என அழைக்ப்படுகிறது.

    குரு பகவானுக்கு புதன் பகவான் பகை கிரகம் என்பதால் குரு பகவானும் ,புதன் பகவானும் சேர்ந்து நிற்பதை விட ,ஒன்றுக்கு ஒன்று பார்த்துக்கொள்வது நல்லது .

  குரு பகவான் இயற்கை சுபர் ஆவார் .குரு பகவான் உடன் ராகு அல்லது சனி சேரும் போதோ அல்லது குரு பகவான் ராகு ,சனி  சாரம் பெற்றோ இருப்பினும் மற்றும் குரு பகவான் மறைவிட அதிபதியாகவோ இருந்தால்  தனது இயல்பான குணத்திலிருந்து மாறுபடுகிறது.

 தனித்த புதன் பகவான்  இயற்கை சுபர் ஆவார் .பாவியோடு சேர்ந்த புதன்  பாவர் ஆகிறார்.

  ஒருவரது சாதகத்தில் குரு பகவானும் ,புதன் பகவானும் பலமடைந்து நின்று  அவ்விரு கிரகங்கள்  மறைவிட  அதிபதியாகவோ அல்லது  பாதகாதிபதியாகவோ இருந்தாலும் இந்த  கிரகங்கள் எவ்வித கெடுபலன்களையும் மிகுதியாக  சாதகருக்கு கொடுத்து விடுவதில்லை.

  குரு பகவானும் ,புதன் பகவானும் ஒருவரது சாதகத்தில் பலமடைந்து நின்றாலே சாதகர் கல்வியில் சிறந்து விளங்குவான்.

 ஒருவரது சாதகத்தில் இவ்விரு கிரகங்கள் பாவர் சாரம் மற்றும் சேர்க்கை அற்று பலமடைந்து நின்றாலே சாதகர் நல்ல மனநிலையினையும்,
உடல் நிலையினையும் பெற்று விளங்குவான்.சாதகரது பேச்சிலும்,நடத்தையிலும் ஒருவிதமான உண்மைத்தன்மையானது இருக்கும் .சாதகர் செய்யக்கூடிய வேலையிலும் நேர்த்தி இருக்கும் .இவர்கள் உடன் நம்பி பழகலாம்.

  குரு பகவானும் ,புதன் பகவானும் பலமடைந்த அமைப்பினை பெற்று லக்கன ,தொழி்ல் ஸ்தானத்திற்கு தொடர்பு இருந்தால் சாதகர் தமது வாழ்வி்ல் white colour shop என்று சொல்லக்கூடிய மேம்பட்ட அலுவல பணிகளையே மேற்கொள்வர்.

  labour work போன்ற  கீழ்மட்ட வேலைகள் செய்வதில்  அவர்கள் விருப்பம் செல்லாது.பிறரை வஞ்சித்தும், ஏமாற்றியும்  பணம் ஈட்டும் லொளகீக குணநிலையும் அவர்கள் மனதில் எழாது.

நன்றி 

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

வாட்ஷ் அப்
   9715189647

        செல்
  9715189647
   7402570899

                        

 அன்புடன்
 சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc ,MA ,BEd 
 ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம் ,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம் .

My email
  masterastroravi@gmail.com

My blogspot 
 AstroRavichandran .
blogspot .com

AstroRavichandransevvai .
blogspot .com

astrosmartnotes .blogspot .com
..............................................

No comments: