திருமணம் காலதாமதம் ஆகிகொண்டே செல்வதன் காரணம் என்ன ?
--வாசகர் கேள்வி
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !
(மகர லக்கனம்,மிதுனம் ராசி .லக்கனத்தில் மாந்தி,4-ல் சனி ,5-ல் சந்திரன் ,கேது ,10-ல் செவ்,புதன்,சுக்கிரன் ,11-ல் சூரியன் ,குரு ,ராகு )
ஒரு சாதகருக்கு இளவயதினில் திருமணம் நடைபெற வேண்டும் எனில் அவரது சாதகத்தில் லக்கனம்,குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இடங்களும் அதன் அதிபதிளும் எந்த விதத்திலும் பங்கபடாமல் இருக்கப்பட வேண்டும் .இது லக்கனம் மற்றும் ராசி என இரு வகைகளிலும் பார்க்கப்பட வேண்டும் .
இவை மட்டுமல்லாமல் களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் காம காரகன் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் பலம் இழக்ககூடாது.
ஒரு கிரகம் பங்கப்படாமல் இருப்பது என்பதை எவ்வாறு காண்பது என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
மேற்கண்ட ஸ்தானங்களிலும்,அதன் அதிபதிகள் உடன் ராகு ,கேது மற்றும் சனி சேர்க்கையோ அல்லது சாரமோ அல்லது ஆறு ,எட்டாம் அதிபதி தொடர்போ பெறாமல் இருக்க வேண்டும் .
மேற்கண்ட ஸ்தான அதிபதிகள் பகை,நீசம்,அஸ்தமனம் ,
வக்கிரம் மற்றும் மறைவு போன்ற நிலைகளில் ஒன்றாக இருக்க கூடாது.
தங்களது சாதகத்தில் லக்கனத்திற்கு குடும்ப அதிபதியான குரு பகவானும் ,களத்திர ஸ்தான அதிபதியும் ஆன சூரியன் பகவானும் கரும்பாம்பு என அழைக்ப்படும் ராகு பகவான் உடன் சேர்ந்து நிற்பதாலும்,
தங்களது ராசி மிதுனம் ஆகும் .ராசியிலே கேது பகவானும் ,ராசிக்கு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் லக்கனம் மற்றும் ராசிக்கு களத்திர ஸ்தான அதிபதியான குரு மற்றும் சூரியன் பகவான் உடன் ராகு சேர்ந்து நிற்பதாலும்,
களத்திர காரகன் சுக்கிரன் பகவானும் ,
மங்களகாரகன் செவ்வாய் பகவானும் கர்ம ஸ்தானத்தில் அமர்ந்து சனிபகவானால் பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் களத்திர காரகனான சுக்கிரன் சனி சாரம் பெற்றும் உள்ளது .
மேற்கண்ட பல காரணங்களால் திருமணம் காலதாமதம் ஆகிகொண்டே உள்ளது .
இவை மட்டுமல்லாமல் காம,களத்திர காரகன் சுக்கிரன் ,செவ்வாய் இணைந்து சனியின் பார்வை விழுவதால் சாதகர் காமம் எண்ணம் உடையவராகவும் இருப்பர் .
அதேநேரத்தில் மனநிலை காரகன் சந்திரன் ராகு சாரம் பெற்று கேதுபகவான் உடன் சேர்ந்து இருப்பதால் உறுதியான மனநிலை அற்று திருமணம் செய்து கொள்வதில் பயத்தன்மை உடையவராவும் இருப்பர் .
பெரும்பாலும் மிதுனம் ராசி காரர்கள் தூய்மை விரும்பிகளாகவும்,
செய்கின்ற வேலையினை நேர்த்தியாக செய்யக்கூடியவராகவும்,
சுயநல விரும்பிகளாகவும் இருப்பர்.
தங்களது சாதகத்தில் தர்ம-கர்மாதிபதி யோகம் உள்ளது .அதாவது தர்மாதிபதி எனப்படும் ஒன்பதாம் இட அதிபதி சுக்கிரனும்,கர்மாதிபதி எனும் பத்தாம் இட அதிபதி செவ்வாய் ஆட்சியும் பெற்று இணைந்து நிற்பது தர்ம-கர்மாதிபதி யோகம் ஆகும் .இந்த அமைப்பே இவருக்கு அரசு வேலையினை பெற்று தந்தது.இந்த சுக்கிரன் +செவ்வாய் சேர்க்கை மீது சனி பார்வையானது அரசு வேலை காலதாமதமாக கிடைத்தது.
லக்கனத்திற்கு பஞ்சம ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து புத்திரகாரன் குரு பகவான் உடன் அரவான ராகு சேர்க்கை மற்றும் புத்திர ஸ்தான அதிபதியான புதன் மீது சனி பார்வை சாதகருக்கு கடுமையான புத்திர தோஷம் என்ற வகையிலும் கர்ம விதிப்படி திருமண யோகம் அற்றவராக உள்ளார்.
சாதகப்படி குரு பகவான் உடன் ராகு சேர்ந்து '' குரு -சண்டாள யோகம் '' என்ற வகையில் சாதகம் மற்றும் தெய்வ நம்பி்க்கை அற்றவராகவும் இருப்பார்.
பரிகாரம் ;-
கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலுக்கு சனி கிழமை ராகு கால நேரத்தில் சென்று வெள்ளியால் செய்யப்பட பாம்பு படம் சாத்தி பாலாபிஷேகம் செய்ய நாகதோஷம் விலகும் .
இதை தவிர இதர ராகு ஸ்தலமான பேரையூர்,திருப்பாள்புரம்,காளஹஸ்தி போன்ற ஏதேனும் ஒரு திருக்கோவில் சென்று ராகு கால நேரத்தில் நாகதோஷ பரிகாரம் செய்ய தோஷம் விலகி திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு .
ராகு கால நேரத்தில் ஆஞ்சநேய வழிபாடு செய்து ராமஜெயம் எழுதி வர தோஷம் விலகி திருமண யோகத்தினை தர வாய்ப்பு உண்டு .
நன்றி !
(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப்பில் மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)
வாட்ஷ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA ,BEd ,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம் ,
கறம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம் .
No comments:
Post a Comment