குழந்தைப்பேறு உண்டாக தேவையான பரிகாரங்கள் மற்றும் மருந்துகள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு திருமண வாழ்வில் வெற்றியே அந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆனவுடன் உண்டாகும் குழந்தை பேறு ஆகும்.
ஒரு குடும்ப வாழ்வில் எவ்வளவு இன்னல்கள் இருந்தாலும், பிரச்சினைகள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு புத்திரபாக்கியம் உருவாகிவிட்டால் அந்த எல்லா பிரச்சினைகளும் "சூரியனை கண்ட பனிபோல் விலகிட " வாய்ப்புகள் அதிகமாகும்.
ஒரு பெண் எப்பொழுது பெண்ணாகிறாள் ?
என்ற கேள்விக்கு விடை தேடினால் ஒரு குழந்தை பெண்ணாகப் பிறக்கும் போது 25 சதவீதமும், பூப்பெய்திய உடன் 50 சதவீதமும்,
திருமணம் ஆனவுடன் 75 சதவீதமே பெற்று விளங்கும் ஒரு பெண்ணானவள் ஒரு குழந்தையை பெற்று தாய்மை அடைந்தவுடன் மட்டுமே 100 சதவீதம் பெண்மைதன்மையை அடைகிறாள்.
அதனால் ஒரு பெண்ணிற்கு சமூக அந்தஸ்து கிடைப்பது அந்த தாய்மை நிலை அடைந்தவுடனே ஆகும்.
"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளா தவர்"--குறள்
தம் குழந்தையின் இனிமையான மழலைச் சொல்லை கேட்டு அதன் இனிமையை சுவைக்காதவர்களால்
தான் குழலின் இசை இனியதென்றும் ,யாழின் இசை இனியது என்று கூறுவர்.
இந்த பதிவில் குழந்தை பேறு இல்லாதவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்களையும், வழிபாடுகளையும் அதற்குரிய மருந்துகளையும் தரலாம் என்று உள்ளேன்.
ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு அல்லது மாரியம்மனுக்கு அல்லது பத்திரகாளி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றவும்.
திருநாகேஸ்வரம் ,
திருக்காளஸ்திரி பேரையூர் மற்றும் திருப்பாம்புரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களில் உள்ள ராகு பகவானுக்கு ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்யவும்.
வழிபாட்டு முறை
புத்திர தோஷம் உள்ளவர்கள் அரசமரம் சுற்றி வழிபாடு செய்ய வேண்டும் .அவ்வாறு சுற்றும் போது நீராடிவிட்டு தலை துவட்டாமல் ஈரத்துணியுடன் சுற்றவேண்டும்.
ஒரு நாளைக்கு ஒன்பது சுற்றுக்கள் சுற்ற வேண்டும். சுற்றும்போது கையில் கொஞ்சம் கொஞ்சமாக அரிசி குருணை அல்லது பொறியினை மரத்தை சுற்றி போட்டு வரவும். அரசமரம் சுற்றும் போது விநாயகருடைய கீழே குறிப்பிட்டுள்ள காயத்ரி மந்திரம் சொல்லவும்.
அதன் பிறகு கீழே குறிப்பிட்டுள்ள மும்மூர்த்திகள் உடைய மந்திரத்தை சொல்லவும்.
அரச மரத்தை சுற்றிய பின் ஒன்பது உருட்டு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு வெற்றிலை, பாக்கு தட்சணையுடன் ஒன்பது சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்கவும்.
தொடர்ந்து 48 நாட்கள் காலையில் சுற்றி வரவும். மரத்தை சுற்றி இடும் அரிசி அல்லது பொறியினை எறும்புகள் பொறுக்கி செல்ல புத்திர தோஷ பாபங்கள் நீங்கும்.
விநாயகர் மந்திரம்
"ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோதந்தி பிரஜோதயாத்தே"
மும்மூர்த்திகள் உடைய மந்திரம்
"மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ
விஷ்ணு ரூபினி அக்ரதோ சிவரூபாய
விருட்ச ராஜயாதே நம "
மேற்கண்டவாறு இறைவழிபாடு செய்ய தீர்க்க ஆயுளுடன் குழந்தை பாக்கியமும் உருவாகும்.
குழந்தை பாக்கியத்திற்கான மருத்துவ முறைகள்.
மருந்துகள்
கீழே மூன்று மருத்துவ முறைகளை தந்துள்ளேன். மூன்று மருத்துவ முறைகளையும் ஒரே நேரத்தில் முயற்சி செய்யக்கூடாது. முதலில் மூன்றில் ஏதாவது ஒரு முறையை மட்டும் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
1) வில்வ இலையை எடுத்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து அந்த இலையை வாங்கிவந்து மிளகாய் அரைக்காத அம்மியில் வைத்து அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவு உருட்டி பசும்பாலில் கலந்து அதிகாலை மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.
2) மலைவேம்பு, சின்னவெங்காயம் மற்றும் சீரகம் இம்மூன்றையும் இடித்து சாறு எடுத்து அதிகாலை மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.
3) அரச விதை அரைத்து பசும்பாலில் கலந்து மூன்று நாட்களுக்கு கொடுக்கவும்.
பத்தியம்
1) மூன்று நாட்களுக்கு கணவன், மனைவி சேர்க்கை கூடாது.
2) மருந்து சாப்பிடும் நாட்களில் மாமிசம் உண்ணக்கூடாது.
3) காலை 10 மணிக்கு தக்காளி ரசம் வைத்து
சுடு சாதம் சாப்பிடவும்.
4) மாதவிடாய் சுழற்சி முடிந்து நான்கு அல்லது ஐந்து அல்லது ஆறு நாட்கள் சென்றபின் மருந்து சாப்பிடவும்.
5) தொடர்ந்து 48 நாட்கள் முருகனை வணங்கி கந்தசஷ்டிகவசம் படிக்கவும்.
(மருந்து முறைகளை தந்து உதவிய எனது மாமா சோதிட ஆசான் மரியாதைக்குரிய சீ.கலியுகம்பிள்ளைக்கு நன்றி)
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My blog
WWW.AstroRavichandran.
blogspot.com
WWW.AstroRavichandransevvai.blogspot.com
..............................................
No comments:
Post a Comment