திசைப்பலன்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜாதகத்தில் ஒருவருக்கு நடப்பிலிருக்கும் திசை பலனை கணிப்பது என்பது மிகுந்த சோதிட மற்றும் அனுபவ அறிவும் ஜோதிடருக்கு மிக அவசியமாகும்.
ஒரு ஜாதகருக்கு திசை பலனை அளிப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய விதிமுறைகளை ஜோதிட ஆர்வலராகிய நாம் அனைவரும் தெரிந்து கொள்வோம்.
1) நடப்பில் இருக்கும் திசையின் ஸ்தான பலத்தை முதலில் அறிய வேண்டும்.அதாவது கோண மற்றும் கேந்திர அதிபதிகளின் திசைகள் பொதுவாக நற்பலனைத் சாதகருக்கு தரும் என்றோ மற்றும் மறைவிட ஸ்தான அதிபதிகள் திசைகள் கெடுபலன்களை தரும் என்றோ உறுதியாக முடிவு செய்து விட முடியாது.இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.
பொதுவாக சோதிடர்கள் சோதிட விதிகளை விட விதிவிலக்குகளை அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
கேந்திர, கோண அதிபதிகளின் திசைகள் நற்பலன்களை தரும் என்பது விதியாக இருந்தாலும் சுபர்கள் கேந்திரத்திலும்,பாவர்கள் கோணத்திலும் இடம்பெறக்கூடாது எனும் சோதிட விதிவிலக்குகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
2) சுபர்கள் மறைவிடங்களிலோ அல்லது கோணங்களிலோ நின்று திசை நடத்தினால்தான் நற்பலன்களை தர வாய்ப்பு உண்டு.
3) பாவர்கள் உச்சம் , ஆட்சி போன்ற நிலைகளில் நேர் வலு பெறமால் மறைவிடங்களில் நின்று அதே நேரத்தில் நின்ற வீட்டுக்குரியவர் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நிற்பின் யோக பலன்களை சாதகருக்கு தருகிறது.
2) நடப்பிலிருக்கும் திசையானது லக்னாதிபதிக்கும் மற்றும் இலக்கணத்திற்கும் கேந்திர, கோணங்களில் அமர்ந்து லக்னாதிபதிக்கு நட்பாக இருக்கும் பட்சத்தில் நல்ல பலனை அதிகம் தருகிறது.
3) திருக்பலம் எனப்படும் பார்வை பலம் மற்றும் சேர்க்கை பலன் நடப்பில் இருக்கும் கிரகத்திற்கு எவ்வகையில் உள்ளது என்பதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
4) கேந்திர கோண அதிபதிகள் மறைவிட ஸ்தான அதிபதிகள் உடன் பரிவர்த்தனை பெறக்கூடாது .
5) மறைவிட ஸ்தான அதிபதிகள் (3,6,8,12) தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
6)மறைவிட ஸ்தான அதிபதிகளோ , இயற்கை பாவகிரகங்களாகவோ இருந்தாலும் அல்லது சுப கிரகங்கள் மறைவிட ஸ்தானம் ஏறினாலும் திக் பலம் பெற்றிருந்தாலோ அல்லது வளர்பிறை சந்திரன் பார்வை அல்லது இயற்கை சுப கிரக பார்வை பெற்றிருந் தாலும் அக்கிரக திசை யோகம் பலன்களையே தரும்.
7) ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் அவை பாவ கிரக திசையாக. இருந்தாலும் யோக பலன்களையே சாதகருக்கு கொடுக்கும்.
8) ஒரு கிரகம் பெற்ற நட்சத்திர சாரநாதன் ஸ்தான வலுவானது அக்கிரக திசையை பலப்படுத்தி நற்பலனைத் தரும்.
9) ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி பலப்பட்டு நிற்பது அத்திசையினை வலிமைபடுத்துமா ? அல்லது அதன் சார நாதன் பலம் பெற்றிருக்கும் போது அக்கிரக திசையானது வலிமைப்படுத்துமா ? என வினா எழுப்பினால் " ஒரு கிரகம் நின்ற வீட்டின் அதிபதி பலம் பெறுவதுதான் மிக முக்கியமானதாகும்."
10) ஒரு ராசியில் உச்சம், நீசம் பெற்ற கிரகங்கள் ஒருங்கிணைத்து நின்று நீசபங்கம் பெறும் எனில் உச்சம் பெற்ற கிரகங்கள் நீசம் பெற்ற கிரகத்திற்கு தன் ஒளியை தந்து அதன் திசை புத்தி காலங்களில் மட்டுப்படுத்தப்படுகிறது.
நீசம் பெற்ற கிரகம் அதன் திசைகளில் யோக பலன்களை தந்து உச்சம் பெற்ற கிரக திசையில் யோக பலன் குறைக்கப்படுகிறது.
ஒரு வீட்டில் சனி, ராகு ,கேது போன்ற பாவ கிரகங்கள் நின்றாலும் அந்த வீட்டின் அதிபதி உச்சம் பெற யோக பலன்களை சாதகருக்கு தருகிறது.
11) திசை அடிப்படையிலான பலனை பொருத்தவரை லக்கன அடிப்படையிலான ஸ்தான பலத்தினை முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
12 ) நடப்பில் இருக்கும் திசையின் கிரக பலன்களை பொறுத்த வரை ஸ்தான பலம் , பார்வை பலம்,சார பலம் ,கிரக சேர்க்கை பலம்,இருக்கும் வீட்டின் அதிபதி ஆகிய பலவற்றை கவனித்து திசை பலனை முடிவு செய்யப்பட வேண்டும்.
12) பொதுவாக பன்னிரெண்டு லக்கினங்களில் சுபர், அசுபர், யோகா யார்? என்று தெளிவாக தெரிந்து வைத்துக்கொள்வது சாதக பலன்களை நிர்ணயிப்பதில் அதிகபட்சமாக உதவக் கூடியதாகும். குறிப்பாக திசாபுத்திகளின் பலன்களை கணிப்பதற்கு இந்த வகைப்பாடு மிக முக்கிய தேவை.
ஒரு கிரகம் இலக்கணத்திற்கு சுபரா ?, அசுபரா ? மற்றும் யோகரா ? என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் .பின் அந்த கிரகம் எந்த ஸ்தானத்தில் நிற்கிறது என்பதையும், உடன் இணைந்த மற்றும் பார்த்த கிரகங்களின் தன்மைகளையும், குறிப்பிட்ட கிரகத்தின் பலம் என்ன என்பதையும், பெற்றிருக்கின்ற நட்சத்திரத்தின் தன்மையையும் சீர்தூக்கிப் பார்த்த பின்பே அந்த கிரகத்தால் அதிக நன்மை கிட்டுமா? அதிக தீமை நிகழுமா? என்பதை நிர்ணயிக்க வேண்டும்.
குறிப்பாக கூட்டு கிரகங்களின் பலன்களை நிர்ணயிப்பதில் கூடுதல் கவனம் தேவை.
ஓன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் போது அந்த இணைவால் ஏதாவது யோகம் உண்டாகி இருக்கலாம் இதனால் லக்கின பாவ கிரகங்கள் கூட அதிக நன்மைகளை செய்து விடக்கூடும்.
அதேபோல, அந்த இணைவில் ஏதாவது அவயோகம் ஏற்பட்டிருக்கலாம். இதனால் லக்கின யோக கிரகங்கள் கூட அதிக தீமைகள் நடக்க வைத்து விடக் கூடும்.
13) ஒவ்வொரு கிரகத்திற்கும் முக்கியமாக அதன் பகை கிரகங்களையாவது அவசியம் தெரிந்து வைத்துக் கொண்டால் அந்த திசை நாதன் எந்த புத்திகளில் நற் பலன்களை தர மாட்டார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சூரியனுக்கு பகை கிரகம் சுக்கிரன் ,சனி, ராகு மற்றும் கேது ஆகும்.
சந்திரனுக்கு பகை கிரகம் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகும்.
அங்காரகன் எனப்படும் செவ்வாய்க்கு பகைக் கிரகம் புதன், ராகு மற்றும் கேது ஆகும்.
குரு பகவானுக்கு புதன் மற்றும் சுக்கிரன் ஆகும்.
புதன் பகவானுக்கு சந்திரன் திசையும்,
சுக்கிரனுக்கு சூரியனும் ,சந்திரனும் ஆகும்.
சனி பகவானுக்கும் மற்றும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுகளுக்கும் பகை கிரகம் சூரியன் சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகும்.
14) ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சில திசைகள் கெட்ட திசையாக அமைந்து பாவ பலன்களை தருகிறது.
மேஷ ராசிக்கு புதன் திசையும்,
ரிஷபத்திற்கு குரு திசையும்,
மிதுன ராசிக்கு குரு திசையும்,
கடக மற்றும் சிம்ம ராசிக்கு சனி தசையும்,
கன்னி ராசிக்கு செவ்வாய் திசையும் ,
துலா ராசிக்கு குரு தசையும்,
விருச்சிக ராசிக்கு புதன் திசையும்,
தனுசு ராசிக்கு புதன், சுக்கிரன் திசையும்
. மகர ,கும்ப ராசிகளுக்கு சூரிய மற்றும் சந்திர தசையும் ,
மீன ராசிக்கு சூரியன் மற்றும் சுக்கிரன் திசையும்
கெடு பலன்களை தரக்கூடிய திசை ஆகும்.
போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து நடப்பு திசை பலன் அளிக்க வேண்டும்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன் திருமணப்பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)
வாட்ஸ் அப் 9715189647
செல் 9715189647 7402570899
அன்புடன்
ஜோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
.....,........
No comments:
Post a Comment