உயர்வை தரும் காலம் எது?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜாதகம் பார்க்க செல்லும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள விருப்பப்படும் ஒரு கேள்வி என்னவெனில் ஒருவர் ஜாதகத்தில் உயர்வை தரும் காலம் எது? என்பதே ஆகும்.
என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பலர் "பிறந்ததிலிருந்து கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன் ஐயா , எப்பதான் விடி மோட்ஷம் கிடைக்கும்னு தெரியலே சார். இல்லை என் மகன் ஜாதகத்தில் ஆவது உயர்ந்த நிலை அடையும் தன்மை ஏதாவது இருக்கிறதா? " என வருத்தப்பட்டு பலர் கேட்பதை தினம் தினம் பார்க்க நேரும்போது ஒருவிதமான மன வருத்தம் வர தான் செய்கிறது.இவ்வாறு மனவருத்தம் அடைவதை தவிர வேறு தீர்வு இல்லை..
ஒருவருக்கு உயர்வை தரும் காலம் எது என்பதை பொதுவாக விளக்கினாலும் அவரவர் லக்கனத்தை பொறுத்து பலனில் மாற்றம் ஏற்படுகிறது.
ஒருவருக்கு லக்கனம் மற்றும் லக்கன அதிபதி வலிமை அடைந்த நிலையில் இருந்தால் யோகத்தை தராவிட்டாலும், அந்த கஷ்டங்களை போராடி எதிர் நீச்சல் போட்டு தாங்கி கொண்டு சமாளிக்க கூடிய நிலையினை யாவது ஒருவர் அடைய இயலும்.
அதேபோல ஒருவருக்கு யோகத்தை அள்ளித் தந்தாலும் அதை அனுபவிக்கக் கூடிய நிலை ஒருவர் அடைவதற்கும் லக்கனாதிபதியின் வலிமை அவசியமாக தேவைப்படுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் என்ன தான் யோகம் தரும் நிலை இருந்தாலும் அதை அனுபவிக்க வேண்டும் எனில் அந்த தசா புக்தி வாழ்வில் சரியான நேரத்தில் வர வேண்டும்.
தசை மற்றும் புக்தி நிலை தான் ஒருவரது வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வதாக அமைகிறது.
இந்த தசை தான் ஒருவரை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உறுதியளித்து கூறி விட முடியாது.
ஒருவருக்கு இயற்கை சுப கிரக தசை தான் யோகத்தை அள்ளித்தரும் அப்படின்னு சொன்னா அதுவும் சரியில்லை.
ஒருவருக்கு இயற்கை பாவ கிரக தசை தான் யோகத்தை தரும் எனசொன்னால் அதுவும் தவறாக போய் விடுகிறது.
உச்சம் மற்றும் ஆட்சி போன்ற ஸ்தான வலிமை பெற்ற கிரகங்கள் தான் யோகத்தை அள்ளி தரும் என சொன்னாலும் அதுவும் தவறாக போய் விடுகிறது.
இதே போல கேந்திர மற்றும் கோணத்தில் நிற்கும் கிரகங்கள் தான் அதன் தசை காலங்களில் நல்ல பலனை தரும் என்று உறுதியாக கூறி விட முடியாது.
பிறகு எப்ப ஐயா ஒருவருக்கு உயர்வு நிலையை தரும் என நீங்கள் கோபமாக கேள்வி கேட்க நினைப்பது எனக்கு புரிகிறது.
விதி என்று இருந்தால் விதிவிலக்குகள் என்ற நிலை ஒன்று உள்ளது.
இயற்கை சுப கிரக தசை யோகத்தை தரும் என்பது விதியாக இருந்தாலும் ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்திற்கு இயற்கை சுப கிரக குரு தசையை விட பாவ கிரக தசையான சனி தசையே யோகம் தரும் தசையாக அமைகிறது.
இதேபோல உச்சம் மற்றும் ஆட்சி பெற்ற கிரகம் தான் நல்ல பலனைத் தரும் என்பது விதியாக இருந்தாலும் உபய லக்கனமான மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய நான்கு லக்கனத்திற்கு குரு மற்றும் புதன் பகவான் கேந்திர ஸ்தானத்தில் உச்சம் மற்றும் ஆட்சி பெற்று நிற்பதை விட மறைவிடங்களில் அல்லது கோண நிலையில் இருப்பது தான் அதன் தசை காலங்களில் ஜாதகருக்கு உயர்வை அள்ளி கொடுக்கும்.
ஏனேனில் உபய லக்கனத்திற்கு குரு மற்றும் புதன் பகவான் கேந்திர அதிபதி மாரகாதிபதி மற்றும் பாதகாதிபதியாக வருவதால் ஆகும்.
எனவே ஜாதகம் பார்க்கும் ஜோதிடர் விதியை மட்டுமே எடுத்துக் கொண்டு பலனளிக்க முற்பட்டால் அந்த ஜாதக பலன் தவறாகி விடுகிறது.இவ்வாறு விதிகளுக்கு அப்பாற்பட்ட பல ஆய்வுகளை அவரவர் லக்கனத்திற்கு ஏற்ப ஆய்வு செய்து பார்த்து பலன் அளிக்க முற்பட வேண்டும்.
ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் இரண்டு அணியாக பிரித்து பார்த்து ஜாதக பலன் அறிய முற்படலாம்.இந்த முறையிலும் விதி என்று ஒன்று இருந்தாலும் விதி விலக்கு என்று ஒன்று உள்ளது.
ஜாதகத்தில் உள்ள ஒன்பது கிரகங்களில் ராகு கேதுவை தவிர ஏனெனில் அதற்கு சொந்த வீடு கிடையாது என்பதால் ஏனைய ஏழு கிரகங்களையும் இரண்டு அணியாக பிரிக்கிறோம் .அதில் ஒன்று அருள் அணி மற்றொன்று பொருள் அணி ஆகும்.
அருள் அணியின் தலைவராக குரு பகவான் எடுத்துக் கொள்கிறோம். இந்த அணியைச் சேர்ந்த ஏனைய கிரகங்கள் சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகும் செவ்வாய் ஆகும். இந்த அணியை சேர்ந்தவை மொத்தம் ஆறு ராசிகளாகும் அவையாவன : மேஷம் ,விருச்சகம், தனுசு, மீனம் ,கடகம் மற்றும் சிம்மம் ஆகும்.
பொருள் அணியின் தலைவராக சுக்கிரன் பகவான் விளங்குகிறார். இந்த அணியை சேர்ந்த ஏனைய கிரகங்கள் புதன் மற்றும் சனி பகவான் ஆகும். இந்த அணியை சேர்ந்த ஆறு ராசிகளாவன ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகும்.
நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால் அவை இருக்கின்ற வீடு சொந்த வீடாக கொள்ளப்படுகிறது. என்பதால் இவை ஒரு பச்சோந்திக் கிரகம் என்பதாலும் இவர் எந்த அணியில் வீட்டில் இருக்கிறாரோ அந்த அணியை சேர்ந்தவராக மாறி விடுவார்.
மேற்கண்ட இந்த அணியை அடிப்படையில் வைத்து நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறீர்களோ அந்த லக்கனத்தைக் கொண்டு நீங்கள் குரு அணியை சேர்ந்தவரா ? அல்லது சுக்கிரன் அணியை சேர்ந்தவரா ? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு முடிவு செய்து கொள்ளும் பொழுது உதாரணமாக நீங்கள் குரு அணியில் பிறந்தவராக இருந்தால் உங்களுக்கு சூரிய ,சந்திர, செவ்வாய் மற்றும் குரு தசைகள் யோகத்தை தரும் . சுக்கிரன் ,புதன் மற்றும் சனி தசைகள் அவயோகத்தை தரும் என்பது விதி ஆகும்.
இதே போல நீங்கள் சுக்கிரன் அணியில் பிறந்தவராக இருந்தால் சுக்கிரன் அணியை சேர்ந்த சுக்கிரன், சனி மற்றும் புதன் ஆகிய தசைகள் உங்களுக்கு யோகத்தை தரும் என்றும் ,சூரிய ,சந்திர செவ்வாய் மற்றும் குரு தசைகள் அவயோகத்தை தரும் என்பதும் பொதுவான விதியாகும்.
இதில் விதிவிலக்காக நீங்கள் எந்த அணியை சேர்ந்தவரோ அதற்கு கெடு பலனை தரக்கூடிய எதிரணி தசைகள் யோகத்தை தர வேண்டுமாயின் அவை உப ஜெய ஸ்தானமான 3, 6 ,10, 11 ஆம் இடங்களில் நட்பு நிலையில் இருந்தால் நல்லதை தரும் என்பது ஒரு விதிவிலக்காக ஆகும்.
மற்றொரு விதிவிலக்கையும் உங்களுக்குத் தருகிறேன்.
சில நேரங்களில் நீங்கள் குரு அணியில் பிறந்து உங்களுக்கு குரு , சூரிய, சந்திர செவ்வாய் தசைகள் யோகத்தை தரவில்லை எனில் அவை சில நேரங்களில் சனி, செவ்வாய் ,ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்களோடு சேர்ந்தோ அல்லது பார்க்கப்பட்ட பாவத்துவ நிலை அடைந்ததால் அந்த தசைகள் யோகத்தை தரவில்லை என்று அர்த்தம்.
அதே நேரத்தில் குரு அணியை சேர்ந்தவர்களுக்கு எதிரணியை சேர்ந்த தசைகள் கெடுபலனை தரக்கூடிய தசையாக இருந்தாலும் அந்த கிரகத்தை இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச்சந்திரன் ,தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டால் சுப நிலையை அடைந்து அந்த எதிரணியை சேர்ந்த தசைகளும் குரு அணி சேர்ந்த லக்னங்களுக்கு நல்ல பலனை தரக்கூடிய நிலையில் இருக்கும்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்; 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.SC,M.A,BEd (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
E-mail masterastroravi@gmail.com
No comments:
Post a Comment