சனி பகவான் எம்மாதிரியான கஷ்டங்களை தருவார்?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
பாவ கிரகங்களிலே முதன்மையான பாவத்தன்மை படைத்த கிரகம் #சனிபகவான் ஆகும். சனி பகவான் ஒரு இருள் கிரகமாகும். இவை மட்டுமல்லாமல் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் ஆகும். ஒரு ராசியினை விட்டு அடுத்த ராசிக்கு செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.எனவே சனி பகவான் மிக மெதுவாக நகர்வதால் தான் இதனை #சனஸ்சரன் என்று அழைப்பார்கள். அழைப்பார்கள்.சனஸ் என்றால் மெதுவாக என்றும் மற்றும் சரன் என்றால் நகர்பவர் என்று அர்த்தம் ஆகும்.
சனி பகவான் யாராக இருந்தாலும் விட்டு வைப்பதில்லை .மாளிகையில் உறங்கும் மன்னனாக இருந்தாலும் மற்றும் மாட்டுக்குப்பத்தில் பிறந்த சுப்பனாக இருந்தாலும் எல்லாரையும் ஒரே மாதிரியாக பாதிப்புக்கு உள்ளாக்கி வாழ்க்கையில் தாத்பாரிய உண்மைகளை எடுத்து கூறுபவர் சனி பகவான் ஆவார்.
சனி பகவான் நீதி வழங்குபவர்.ஆதலால் இதனை கர்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார்.
சனி பகவான் ஒருவரை ஏழரை மற்றும் அஷ்டம சளி காலங்களில் கடுமையான இன்னல்களுக்கும் மற்றும் தொல்லைகளுக்கும் உட்படுத்தி உண்மையான உறவு நிலைகளையும் மற்றும் நட்பு நிலைகளையும் ஜாதகருக்கு புரியவைத்து வாழ்வின் நிதர்சன உண்மைகளை அறிய வைத்து அமைதி நிலைக்கு ஞான நிலையை நோக்கி நகர்த்தி செல்பவர் ஆவார்.
எப்பேர்ப்பட்ட மனிதனையும் நிலைகுலை வைத்து மன வேதனைக்கு உட்படுத்தி கண்ணீர் விட்டு கலங்க வைப்பவர் சனி பகவான் ஆவார். அதிலும் குறிப்பாக ஒருவருக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லக்கூடிய காலங்கள் சொல்ல முடியாத, வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்கு கஷ்டங்களையும் மற்றும் நஷ்டங்களையும் தருவார்.
சாதகமே பார்க்க நினைக்காதவர் சாதகமே தவறு என்று வாதாடியவர் கூட சாதகத்தை கையில் எடுத்து சோதிடர்கள் சென்று அதற்கான தீர்வை பெற நினைப்பதும் சனி பகவானுடைய மகிமையில் ஒன்றாகும்.
ஜாதகத்தில் லக்னத்தில் சனி அமர்ந்தோ அல்லது லக்கனத்தை சனி பார்த்த சாதகம் அல்லது லக்கனாதிபதி சனியாகவே இருந்து லக்னத்தில் இருந்தாலும் அவர் சோம்பேறித்தனமாகவும் எந்த செயலை செய்வதற்கு காலம் தாழ்த்துபவராகவும், அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடிய நபராகவும் ஒருவிதமான மந்த ன்மை உடையவராகவும் இருப்பார்.
சனி பகவான் கரியன் , மந்த கோள் என்றும், மெதுவாக நகர்வோர் என்றும்,வளைய கோல் என்றும் அழைக்கப்படுகிறது.
கிரகங்களில் சனி பகவான் மட்டுமே தண்டனை மற்றும் இன்னல்களை கொடுத்து மனம் திருந்தி வாழ செய்பவர் ஆகும்.
சனி பகவான் எந்த ராசியில் இருந்தாலும் சரி, அது பார்த்தாலும் சரி. இருக்க கூடிய இடத்தையும் மற்றும் பார்க்கக்கூடிய இடத்தையும் தன்னுடைய கடுமையான பார்வையால் கஷ்டத்தை கொடுக்க கூடியவராக இருப்பார் . இன்னும் சொல்ல போனால் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தையு அதிகமாக பாதிக்கப்பட செய்வார்.
சனியுடன் இயற்கை பாவ கிரகங்கள் இணைந்தால் சனி பகவான் இன்னும் கூடுதலான பாவத்தன்மை அடைய வைத்து விடுவார். அதனால் அவர் இருக்கும் இடத்தையும் மற்றும் அவரால் பார்க்கக்கூடிய இடமும் கூடுதலான பாதிப்புக்கு உள்ளாக்கி விடும்.
சனியுடன் இயற்கை சுப கிரகங்கள் இணைந்தால் சனி பகவான் தன்னோடு இணைந்த கிரகத்தை பாவத்துவப்படுத்தி அதே நேரத்தில் தான் சுபத்துவம் ஆவார் இவ்வாறு சுபத்தன்மை அடைந்த சனி பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்க்கும் இடத்தையும் பெரிய அளவிற்கு பாதிப்பு அடையச் செய்வதில்லை ஆனால் அதே நேரத்தில் தன்னோடு இணைந்த கிரகம் அதன் தசையில் கெடு பலனை தரக்கூடிய அமைப்பிற்கு மாறிவிடும்.
தமக்கு துன்பம் விளைவிப்பவர்கள் ,,
மன்னிக்க முடியாத தொந்தரவுகளை தருபவர் மற்றும் சொன்ன பேச்சைக் கேட்காதவர் இது போன்ற நபர்களை கோபமாக பேசும் போது கூட "ஏண்டா சனியன் பிடித்தவனே" என்று தான் திட்டுகிறோம்.அவ்வாறு சனியனே என்று அழைத்தவுடன் எதிராளிக்கு கடுமையான கோபம் வந்து அவரும் பதிலுக்கு நீ தாண்ட சனியன் பிடிச்சவன் என்று மாறி மாறி திட்டி கொள்வார்கள்.அந்த சனி என்ற பேரை கேட்டாலே கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகி விடுவார்கள்.
"பேரை கேட்டாலே சும்மா அதிருதில்லே " என்று பயப்படும் படியாக அனைவரையும் சனி பகவான் செய்து விடுகிறது.
ஒருவன் செய்யும் நல்வினை மற்றும்
தீ வினைக்கு ஏற்ப நீதியை வழங்க கூடியவராக சனி பகவான் திகழ்கிறார்.
சனி பகவான் மன்னாதி மன்னர்களை மண்ணை கவ்வ வைத்து விடுவார்.கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி நடக்கும் காலங்களில் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள், மற்றும் பொருளாதாரத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் அனைத்தையும் இழந்து வீதியில் நிற்கும் அளவிற்கு செய்து விடுவது உண்டு.
அதேநேரத்தில் ரிஷபம் துலாம் ராசி காரர்களுக்கு சுபத்துவமான நிலையில் சனி தசை நடக்கும் போது குப்பையில் கிடந்தவரையும் கோபுரத்தின் உச்சத்தில் கொண்டு போய் சேர்த்து விடுவதும் உண்டு.
சனியை போல மானிடரை தாக்கு தாக்குன்னு தாக்கி கஷ்டப்பட செய்பவரும் இல்லை. அதே நேரத்தில் அள்ளி அள்ளி கொடுத்து அழகு பார்ப்பவரும் இல்லை.
சனி பகவான் குரு பகவான் பார்வையை பெற்று புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பையும் பெற்று தசை நடத்தினால் சனியை போல வேறு எந்த கிரகமும் இந்த அளவுக்கு உயர்த்தி விட முடியாது.சாதரண மனிதனையும் சாதனை மனிதனாக மாற்றிவிடும்.
சனி பகவான் தரும் தொல்லைகளில் இருந்து விடுபட கணபதி,துர்கை மற்றும் அனுமார் ஆகிய மூவரையும் வழிபாடு செய்ய வேண்டும்.
சனி பகவான் தரும் கஷ்டங்களில் இருந்து தப்பிக்க காக்கைக்கு விரதம் இருந்து சாதம் வைத்தல், ஐயருக்கு கருப்பு வஸ்திரம் தானம் செய்தல், பிள்ளையாருக்கு விளக்கு ஏற்றுதல்,,எள்ளை படுக்கும் போது தலையனைக்கு அடியில் வைத்திருந்து மறுநாள் காலை ஓடும் தண்ணீரில் விடுதல் போன்ற பரிகாரங்களை செய்ய வேண்டும்.சனி பகவான் காயத்ரி மந்திரம் சொல்லுதல் போன்றவற்றை வழக்கமாக கொள்ள வேண்டும்.
சனி பகவான் சூரிய பகவானின் மைந்தன் ஆவார்.பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக சனி பகவான் விளங்குகிறார்.சனி தசை 19 ஆண்டுகள் ஆகும்.
கோச்சார அடிப்படையில் சனி பகவான் சந்திரன் இருக்கும் இடத்திற்கு அதாவது ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் வரும்பொழுது ஏழரை சனி ஆரம்பமாகிறது. ராசிக்கு பன்னிரன்டில் விரயச் சனி, ராசியில் சனி இருக்கும் போது ஜென்ம சனி. மற்றும் ராசிக்கு இரண்டாம் இடத்தில் பாதச்சனியாகும். சனி பகவான் ஆனவர் ராசிக்கு நாலாம் இடத்தில் வரும் போது அர்த்தாஷ்டம சனி , ராசிக்கு ஏழாம் இடத்தில் வரும் போது கண்டகச் சனியாகவும் மற்றும் ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும் போது அஷ்டமச்சனியாகவும் செயல்படுகிறார்.
நன்றி
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்; 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment