Tuesday, 20 May 2025

கோள்களின் கோளாட்டம் -(4)

 கோள்களின் கோளாட்டம்- (4)




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ஒருவர் ஜாதகத்தில் ஒன்பது கோள்கள் பன்னிரண்டு ராசிகளில் இருபத்து ஏழு நட்சத்திர சாரங்களில் நின்று மனித வாழ்வை வழிநடத்திச் செல்கிறது என்பதை கோள்களின் கோளாட்டம்- என்ற தலைப்பின் கீழ் தொடர் பதிவாக பார்த்து வருகிறோம்.

 

கோள்களில் சுக்கிரன் பகவானை களத்திர காரகன் என்றும்,வாகன காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.


சுக்கிரன் பகவான் தனி மனித வாழ்வின் அத்தியாவாச தேவையான தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய கிரகம் ஆகும்.எனவே சுக்கிரன் பகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு காரக கிரகமாக விளங்குகிறது.


சுக்கிரன் பகவான் ஒரு ராசியில் ஒரு மாத காலம் வாசம் செய்கிறார்.சுக்கிரன் பகவான் சூரியன் உடன் இணைந்து சுற்றி வரும் கிரகம் ஆகும்.அதாவது சுக்கிரன் உடன் அல்லது சுக்கிரன் இருக்கும் இராசிக்கு முன் பின் இரு ராசிகளுக்குள் இருப்பார்.சுக்கிரன் உள் வட்ட கிரகம் ஆகும்.


சுக்கிரன் பகவான் பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக விளங்குகிறார்.சுக்கிர தசை இருபது ஆண்டுகள் ஆகும்.ரிஷபம், துலாம் ஆட்சி ஸீடாகவும், மீனம் வீட்டில் உச்சமாகவும் மற்றும் கன்னியில் நீசமாகவும் உள்ளது.

சுக்கிரன் பகவான் துலாம் வீட்டை மூல திரிகோண வீடாக கொண்டு உள்ளது.


சுக்கிரன் பகவான் நான்காம் இடத்தில் திக் பலம் பெறுகிறது.ஆனால் அதே நேரத்தில் பத்தாம் இடத்தில் நிஷ் பலம் பெறுகிறார்.சுக்கிரன் பகவானுக்கு சிறப்பு பார்வை கிடையாது. ஏழாம் இடத்தை மட்டும் பார்வை செய்கிறது.


  ஒருவர் ஜாதகத்தில் வாகன யோகம் உள்ளதா ? என்பதை ஆராய்ந்து பார்க்க நான்காம் இடம் அதன் அதிபதி மற்றும் வாகன காரகன் சுக்கிரன் ஆகிய மூவரையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


ஒருவர் வீடு கட்டும் யோகம் வந்து விட்டதா ? என்பதை ஆய்வு செய்ய நான்காம் இடம்:_ அதிபதி மற்றும் வாகன காரகன் சுக்கிரன் பகவான் ஆகியவற்ற செய்து பார்க்க வேண்டும்


ஒருவருக்கு நல்ல மனைவி அமைய ஏழாம் இடம் வலுத்திருப்பதோடு களத்திரகாரர் என்று அழைக்கக்கூடிய சுக்கிரன் பாவ கிரகங்களுடன் பார்வைஅல்லது சேர்க்கை நிலையை பெறக்கூடாது. சுக்கிரன் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான் ,வளர் பிறை சந்திரன், தனித்த புதன் ஆகியவற்றின் பார்வை சேர்க்கை பெறும் பொழுது மனைவியால் தாம்பத்திய சுகத்தை முழுமையாக அனுபவிக்க இயலும்.நல்ல மனைவி அமைவாள்.


ஒருவர் ஜாதகத்தில் சுக்கிர பகவான் அதிக சுபத் தன்மை பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது 

வண்டி, வாகனம், ஹோட்டல் டிரான்ஸ்போர்ட், அழகு சாதன பொருட்கள், சிகை அலங்காரம் ,

 முக அலங்காரம் , உடை அலங்காரம் பலசரக்கு கடை , பைனான்ஸ்,நடனம், நடிப்பு தொழில்,தொகுப்பாளர், போன்ற வகையிலான தொழில்களில் அதிக நாட்டம் உருவாகி அதன் வழியாக பொருள் ஈட்டும் யோகம் உண்டாகும்.


      சுக்கிரன் பகவான் ரிஷபம் ,துலாம், மிதுனம், கன்னி ,மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு யோகத்தை தரக்கூடிய தசையாக விளங்குகிறது. ஆனால் அதே நேரத்தில் தனுசு மற்றும் மீனம் லக்கணங்களுக்கு அவ யோகத்தை தரக்கூடிய தசையாக விளங்குகிறது..


     சுக்கிர பகவானுக்கு சனி மற்றும் புதன் நட்பு கிரகங்கள் ஆகும் . சூரியன் , சந்திரன், செவ்வாய் மற்றும் குரு ‌ஆகிய கிரகங்கள் எதிர் தன்மை படைத்த கிரகங்கள் ஆகும்.


சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானத்தில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று நிற்கும் போது "மாளவீக யோகம்" தருகிறது.


சுக்கிர பகவான் தசை இளம் வயதில் வரும் பொழுது இளைஞர்களுக்கு காதல் உணர்வை அல்லது காம உணர்வை அதிக தூண்டுவதால்தான் "குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும்" என்று சொன்னார்கள்.


சுக்கிரன் பகவான் தன்னுடன் இணைந்த அல்லது பார்வை செய்த கிரகத்தை சுப தன்மை அடைய வைக்கிறது.சுக்கிரன் உடன் இணைந்த அல்லது பார்வை செய்த கிரகங்கள் சுப தன்மையை அடைந்து அதன் தசையில் நல்ல யோக பலனை அதிகம் தருகிறது.


சுக்கிரன் உடன் சனி, செவ்வாய்,ராகு ஆகிய மூன்று பாவ கிரகங்கள் இணையும் பொழுது 

கடுமையான பாவ தன்மையை அடைகிறது.


சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை ஆனது நல்ல சுப தன்மையுடன் இருக்கும் போது நல்ல ஏற்று கொள்ள தக்க வகையில் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.


சுக்கிரன் செவ்வாய் அல்லது சனி அல்லது ராகு உடன் இணைந்து காம திரிகோண ஸ்தானமான மூன்று,ஏழு மற்றும் பதினொன்றாம் இடத்தில் நிற்கும் பொழுது ஜாதகர் மிகுந்த காம எண்ணம் உடையவராக திகழ்வார்.சுப கிரக தொடர்பு கிடைக்காத நிலையில் எட்டு பாசனகைக்குள் நெருக்கமாக இணைந்து நிற்கும் போது மனைவி / கணவன் அல்லாத நிலையில் மற்றவர் மஞ்சத்தில் இன்பம் சுகித்து இருப்பார்.


  சுக்கிரன் பகவான் வலுப்பெற்ற நிலையில் ஒருவருக்கு கற்பனை உணர்வு ,காதல் உணர்வு, படைப்பாற்றல் மிக்கவராக திகழ்வார்.


கதை,கவிதை , கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு விதமான அழகிய அழகியல் எண்ணம் படைத்தவராக, நேர்த்தியாக செய்யும் குணம் படைத்தவராக ஆடம்பரமாக வாழும் எண்ணம் உடையவராக அதே நேரத்தில் அமைதி அற்றவர்களாக திகழ்வார்கள்.


சுக்கிரன் பகவான் அசுரர்களின் தலைவர் ஆவார்.இவர் பொருள் அணியை சேர்ந்தவர் ஆவார். சுக்கிரன், புதன் மற்றும் சனி சுக்கிரன் அணியை சேர்ந்தவர்கள் ஆவார். ரிஷபம் துலாம் மிதுனம் கன்னி மகரம் கும்பம் ஆகிய ஆறு லக்னங்களும் சுக்கிரன் அணியைச் சார்ந்தவர்கள் ஆவர்.


சுக்கிரன் பகவான் செவ்வாய் உடன் பிருகு மங்கள யோகத்தை தருகிறார்.வளர்பிறை சந்திரனுக்கு 6,7,8 ஆம் இடங்களில் சுக்கிரன் நின்று தசை நடத்தினால் மிகுந்த சந்திராதி யோகத்தை தருகிறது.


தொடரும்...


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


 097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

கோள்களின் கோளாட்டம் -(3)

 கோள்களின் கோளாட்டம்- -(3)




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவருடைய ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் 12 ராசிக்குள் இடம்பெற்று என்னென்ன மாற்றங்களை, ஏற்றங்களை மற்றும் தாழ்வுகளை எல்லாம் மனிதனுக்கு தருகிறது என்பதை தொடர் பதிவாக பார்த்து வருகிறோம்.


 இன்றைய பதிவில் செவ்வாய் பகவான் மனித வாழ்வை எந்தெந்த மாற்றங்களை தருகிறது என்பதை விரிவாக பார்ப்போம். 


செவ்வாய் பகவான் ஒருவர் ஜாதகத்தில் சகோதரக்காரகன் என்றும், பூமிக்காரகன் என்றும் மற்றும் காமக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.


ஒரு ஜாதகத்தில் இளைய சகோதரன் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஸ்தானம் மூன்றாம் இடமாகும். இந்த இடத்திற்கு காரக கிரகமாக செவ்வாய் இயங்குகிறது..


செவ்வாய் பகவான் மேஷம் விருச்சிகம் வீட்டில் ஆட்சி வீடாகவும் கடகத்தில் நீசமாகவும். மற்றும் மகரத்தில் உச்சமாகவும் உள்ளது மிருகசீரிடம் ,சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக செவ்வாய் பகவான் விளக்குகிறார்.செவ்வாய் தசை ஏழு ஆண்டுகள் ஆகும்.


செவ்வாய் பகவான் பத்தாம் இடத்தில் திக் பலம் பெறுகிறார் நான்காம் இடத்தில் நிஷ் பலம் பெறுகிறார்.


செவ்வாய் பகவான் வலிமையாக சுப தன்மையுடன் இருக்கும் பொழுது நிறைய நிலபலங்களுக்கு சொந்தக்காரர்களாகவும் இருப்பார்.


செவ்வாய் பகவான் ஏழாம் இடத்தை தவிர்த்து சிறப்பு பார்வையாக நான்கு மற்றும் எட்டாமிடத்தில் பார்வை செய்கிறார்கள்.


செவ்வாய் பகவான் ஒரு முக்கால் பாவராக செயல்படுகிறார். அப்படி என்றால் கால் பங்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.. எனவே செவ்வாய் பகவான் பார்வை மற்றும் இணைவு குரு , சூரிய மற்றும் சந்திர கிரகங்களுக்கு பாதிப்பை தருவதில்லை மாறாக நல்ல பலனையே தருகிறது.


செவ்வாய் பகவான் ராகுவுடன் இணைந்து சனியின் பார்வை பெற்ற நிலையில் அது முற்றிலும் தனது பலத்தை இழந்து சாதகரை ரவுடியாகவும் அல்லது காம எண்ணம் மிகுந்தாராகவும் இருக்க வைப்பார்.


செவ்வாய் பகவான் தனது நட்பு கிரகமான சூரியன், சந்திரன் மற்றும் குருபகவான் ஆகியோரின் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த செவ்வாய் பகவான் நன்றாக பலம் பெற்று சுப தன்மை அடைந்து அவற்றுக்குரிய ஆதிபத்திய மற்றும் காரக பலன்களை சிறப்பாக வழங்குகிறது.


செவ்வாய் பகவான் சூரியனை அதி நட்பு கிரகமாக கொண்டது. 

செவ்வாய் பகவான் குருவுடன் இணைவது 

குரு மங்கள யோகத்தை தருகிறது. சுக்கிரனுடன் இணையும் பொழுது 

பிருகு மங்கள யோகத்தை தருகிறது.

சந்திரன் உடன் செய்யும்பொழுது 

சசி மங்கள யோகத்தை தருகிறது.


உங்க ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ஆட்சி அல்லது உச்சம் நிலைகளில் கேந்திரங்களில் நிற்கும் பொழுது பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான "ருசக யோகத்தை பற்றி தருகிறது.


செவ்வாய் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் அதிக சுப தன்மையை அடைந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் அல்லது தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது எம்பிபிஎஸ் போன்ற உயரிய படிப்பு படிக்கக்கூடிய யோகத்தை ஜாதகர் பெறுவார்.


அதற்கு அடுத்தபடியான சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப ENT டாக்டர் ,சித்தா, வெட்னரி டாக்டர் ,ரத்த பரிசோதனை நிலையம் வைத்து நடத்துபவர் ,கறிக்கடை வைத்து கசாப்புகளை நடத்துபவர் போன்றவை எல்லாம் செவ்வாய் உடைய சுபத்துவ பாவத்தை படிநிலைக்கு ஏற்ப அமைகிறது.


செவ்வாய் பகவான் அதிகமான சுபத்து நிலையில் தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளும் பொழுது போலீஸ், இராணுவம் போன்ற துறைகளில் ஈடுபட்டு தீவிரவாத செயலில் ஈடுபடுவரை சுட்டு பதக்கங்களை பெறுவார்கள் .


     அதே நேரத்தில் செவ்வாய் பகவான் பாவத்தன்மை அடைந்த நிலையில் பல பேரை சுட்டு வீழ்த்தி அல்லது பொது இடங்களில் பல்வேறு பொதுமக்களுக்கு பாதிப்பு ஈடுபடும் வகையில் நடந்து போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுவார்கள். அல்லது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.


 செவ்வாய் பகவானுடைய சுப தன்மைக்கு ஏற்ப சிவில் இன்ஜினியர் , விவசாயம் , ரியல் எஸ்டேட் போன்ற தொழில் நிலையில் ஈடுபட வைப்பார். மாணவர்களுக்கு வீர தீர விளையாட்டுகளில் ஈடுபடும் ஆர்வம் உண்டாகும்.


செவ்வாய் பகவான் சனி உடன் இணைந்து எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் அல்லது எந்த ஸ்தானத்தை பார்த்தாலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது. 


செவ்வாய் பகவான் சனியின் பார்வையை பெற்ற நிலையில் அதனுடைய பார்வையானது கடுமையான கெடுபலனை தரக்கூடிய பார்வையாக அமைகிறது.


செவ்வாய் பகவான் சனியுடன் இணைந்த நிலையில் அல்லது சனியின் பார்வையை பெற்ற நிலையில் அவை பாவ நிலையினை அடைந்து கடுமையான பாவ தன்மையை அடைந்து விடுகிறது.


செவ்வாய் பகவான் ராசி மற்றும் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8, 12-ஆம் இடங்களில் இருக்கும் பொழுது செவ்வாய் தோஷத்தை தருகிறது. செவ்வாய் தோஷம் கண்டு பயப்பட தேவையில்லை இது உயிரை கொள்ளும் அளவிற்கு மோசமான தோஷம் அல்ல இவை குறிப்பாக லக்கனம்,குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடம் இந்த நான்கு இடங்களில் இருக்கும் பொழுது கால தாமதமாக திருமணத்தை தருகிறது.


  லக்கனத்தில் இருக்கும் பொழுது லக்கனத்தை பாவ தன்மையை அடைய வைப்பதுடன் ஏழாம் இடம் மற்றும் எட்டாம் இடத்தை தனது ஏழு மற்றும் எட்டாம் பார்வையால் பார்க்கிறது.


 குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருக்கும்பொழுது குடும்ப ஸ்தானத்தையும் , தனது சம சப்தமான ஏழாம் பார்வையால் மாங்கல்ய ஸ்தானத்தையும் பாவத்தன்மை அடைய வைக்கிறது.


ஏழாம் இடத்தில் செவ்வாய் பகவான் இடம்பெறும் பொழுது ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தையும் , தனது சமசப்தமான ஏழாம் பார்வையால் லக்கனத்தையும் மற்றும் தனது எட்டாம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்து பாவத்தன்மை அடைய வைத்து விடுகிறார்.


எட்டாமிடத்தில் செவ்வாய் பகவான் இருக்கும் பொழுது மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தையும் மற்றும் தனது சம சப்தமான பார்வையால் குடும்பஸ்தானத்தையும் பார்வை செய்து காலதாமத திருமணத்தை தர வைக்கிறார்.


இந்த செவ்வாய் பகவானை சுப கிரகங்கள் ஆன குரு பகவான் வளர்பிறை சந்திரன் தொடர்பு கொள்ளும் பொழுது பாதிப்பை தருவதில்லை மாறாக பாவ கிரகங்களான சனி ,ராகு தொடர்பு கொள்ளும் பொழுது கூடுதலான பாவத்தன்மையை அடைந்து திருமணத்தை மிகவும் காலதாமதமாக செய்வதிலும் அல்லது நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதிலும் சிக்கலை உண்டு பண்ணுகிறது.


  செவ்வாய் தசை தனுசு ,மீனம் ,மேஷம் விருச்சகம், கடகம் சிம்மம் லக்னங்களுக்கு யோகத்தை தரக்கூடிய தசையாக கருதப்படுகிறது.


    மிதுனம் கன்னி லக்கனங்களுக்கு செவ்வாய் தசை கடுமையான கஷ்டங்களை தரக்கூடிய அவயோக தசையாக கருதப்படுகிறது.சில நேரங்களில் தனது ஆறு மற்றும் எட்டாம் இடத்திற்கு ஆறு மற்றும் எட்டாம் இடத்தில் மறைந்து நிற்கும் போது தனது துர்பலன் நீங்கி மற்றொரு சுப ஆதிபத்திய நல்ல பலனை தருகிறது.சில நேரத்தில் சுபர் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் ஆதிபத்தியத்திற்கு ஏற்ப நல்ல பலனை தருகிறது.


செவ்வாய் தசை நடக்கும்போதும் செவ்வாயினால் காலதாமத திருமணம் ஏற்பட்டாலோ , செவ்வாய் தோஷம் இருந்தாலோ செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கையை வணங்கி வழிபட உத்தமம் .


  துவரம் பருப்பு, சிகப்பு சேலை, ரவிக்கை மஞ்சள் கயிறு இவற்றை சுமங்கலிக்கு தானம் செய்யலாம்.


    சங்கடகர சதுர்த்தி விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது.


    மாயவரம் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தாலும் ,பழனிக்கு சென்று முருகனை வழிபட்டாலும் தோஷம் நீங்கும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay 

  097151 89647 


Another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

உங்கள் ஜாதகத்தை எவ்வாறு ஆராய்ந்து பார்ப்பது?

 உங்கள் ஜாதகத்தை எவ்வாறு ஆராய்ந்து பார்ப்பது?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


      ஒருவர் ஜாதகத்தில் லக்னம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.ஏனைய பிற பாவகங்களை இயக்கும் பணியை செய்வதில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக திகழ்கிறது.லக்கனாதிபதியே மனித வாழ்வை வழிநடத்திச் செல்லும் கேப்டன் ஆவார்.


நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்தவர் என்பதை பொறுத்து நீங்கள் யார் ? என்பதை சொல்லிவிடலாம். உங்கள் லக்கனாதிபதியை அடைந்த வலிமையை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட தன்மை படைத்தவர் என்பதையும் கணித்து விட இயலும்.மொத்தத்தில் லக்கினத்தை கொண்டு உங்களது முழு வாழ்க்கை திட்டத்தையும் யூகித்து விட முடியும் நீங்கள் யார் என்பதையும் தெளிவாக கூறி விட முடியும்..


  லக்கனம், லக்னத்தில் உள்ள கிரகம், லக்கனத்தை பார்வை செய்யும் கிரகம், லக்கனாதிபதி இடம் பெற்றுள்ள இடம்‌ மற்றும் லக்கனாதிபதி எந்த தன்மை படைத்து உள்ளார் போன்றவற்றை நடக்கும் தசா புக்தி உடன் ஒப்பிட்டு வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறும் தகுதி உள்ளதா ? என்பதை ஆய்வு செய்து கணித்து விட இயலும்.


  பிறகு உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் எங்கு அமைந்துள்ளார் ? அவை பார்வை செய்யக்கூடிய இடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


உங்க ஜாதகத்தில் லக்னம் ,ராசி மற்றும் அதிபதியை குருபகவான் பார்வை செய்த நிலையில் இருந்தால் நிச்சயமாக நல்ல குணம், தனம் மற்றும் கல்வி நிலை படைத்தவராக நீங்கள் இருப்பீர்கள்.


   உங்கள் ஜாதகத்தில் குரு பகவானால் பார்வை செய்யப்பட்ட அல்லது குரு பகவான் இணைந்த கிரகங்களின் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களாக நீங்கள் இருந்தால் நிச்சயமாக நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலிகள் .உங்களுக்கு தொடர்ந்து யோகம் தரக்கூடிய நிலைகளே அமையும்.


இதே போல உங்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் எங்கு அமைந்துள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் லக்னம் ,ராசி மற்றும் அதன் அதிபதியை பார்வை செய்த நிலையில் இருப்பின் நிச்சயமாக நீங்கள் சோம்பேறித்தனம் உடையவர்களாகவும், அடுத்தவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடிய தன்மை படைத்தவராகவும், போராடி வெற்றி பெறக்கூடிய குணம் அற்றவராகவும் இருப்பீர்கள்.


உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் இடம் பெறும் மற்றும் பார்வை செய்த ஸ்தானங்கள் பாதிக்கப்படும்.மேலும் தொடர்ந்து சளியால் பார்வை செய்யப்பட்ட தசா அமைப்புகள் வந்தால் நீங்கள் துரதிஷ்டவாளிகள். இதில் பிறப்பிலிருந்து கஷ்டப்படக் கூடிய தன்மை படைத்தவராகவே இருப்பீர்கள்.


உங்கள் ஜாதகத்தில் லக்ன யோகர்கள் மற்றும் இயற்கை சுப கிரகங்கள் ஒன்றுக்கொன்று கேந்திர திரிகோணங்களில் நின்று அவயோகத்தை தரக்கூடிய கிரகங்கள் அல்லது பாவ கிரகங்கள் மறைவிட ஸ்தானங்களில் நின்று இருப்பின் அந்த ஜாதகங்கள் யோகம் படைத்த ஜாதகங்கள் ஆகும்.


உங்க ஜாதகத்துல வக்கனாதிபதியை பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் லக்கனாதிபதி பாவ தன்மையை அடைந்த நிலையில் ஜாதகர் வாழ்வில் வரக்கூடிய கஷ்டங்களை எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறக்கூடிய திராணியற்ற நிலையில் காணப்படுவார்.


உங்க ஜாதகத்தில் எவ்வளவு தான் யோகங்கள் இருந்தாலும் அந்த யோகங்களை அனுபவிக்க கூடிய யோகமற்ற மனிதனாக நிகழ்த்துகிறீர்கள். 


எனவே ஒருவர் தன் வாழ்வில் யோக தசைகள் வந்தாலும் அதை அனுபவிக்க லக்கனாதிபதியுடைய வலிமை ரொம்ப ரொம்ப முக்கியம் .அதேபோல அவயோக தசைகள் நடப்பில் இருந்தாலும் அந்த கஷ்டங்களை தாங்கி எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறக் கூடிய தன்மை லக்கனாதிபதியை பொறுத்து அமைகிறது.


எவர் ஒரு ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் சேர்ந்து நின்றாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூடிய அமைப்பில் இருந்தாலும் அவை இருக்கும் இடங்களும் பார்வை செய்யும் இடங்களையும் கடுமையான பாதிப்புக்கு உட்படுகிறது.


இதே போல உங்கள் ஜாதகத்தை நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் யோகமான ஜாதகமான அமைப்பை பெற்றவராக நீங்கள் இருந்தால் 6 ,12 அச்சுகளில் அதை இடம்பெற்று மற்ற எந்த கிரகங்களை பாதிப்புக்கு உள்ளாக்காத நிலையில் இருக்கும்.


யோக ஜாதக வரிசையில் நீங்கள் இருந்தால் சூரியன் ,சந்திரன், செவ்வாய் குரு ஆகிய நட்பு கிரகங்கள் ஒன்றையொன்று சேர்ந்த அல்லது பார்வை செய்த நிலையில் அல்லது பரிவர்த்தனை பெற்ற நிலையில் இருக்கும். இதேபோல எதிரணியைச் சேர்ந்த சுக்கிரன், புதன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் தங்களுக்குள் கேந்திர கோணங்களில் அமர்ந்து தொடர்ந்து யோக தசைகள் நடப்பில் வரக்கூடிய அமைப்பை பெற்று இருக்கும்.


யோக ஜாதக வரிசையில் உங்கள் ஜாதகம் இருந்தால் பெரும்பான்மையான கிரகங்கள் சுப கிரகங்கள் உடைய பார்வை எனது சேர்க்கை பெற்ற நிலையில் இருக்கும். தொடர்ந்து யோகத்தை தரக்கூடிய தசை அமைப்புகளும் வந்து கொண்டிருக்கும்.


நன்றி!


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Other cell no 7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தனர் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

கோள்களின் கோளாட்டம் -(2)

 கோள்களின் கோளாட்டம்- (2)




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை! 


  கோள்கள் மனித வாழ்வை எம் முறையில் வழிநடத்தி செல்கிறது என்பதை தொடர் கட்டுரையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  சென்ற பதிவில் சூரியனைப் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டோம் .இந்த பதிவில் மற்றொரு ஒளிக்கிரகமான சந்திர பகவான் பற்றி ஒரு சில அடிப்படை செய்திகளை மற்றும் ஆழமான செய்திகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.


 கிரகங்களில் தாயாக விளங்குவது மற்றும் தாய்க்கு காரக கிரகமாக விளங்குவது சந்திர பகவான் ஆவார். சந்திர பகவானை மனநிலை காரகன் என்று அழைக்கப்படுகிறது.


    சந்திர பகவானுடன் சனி அல்லது ராகு நெருக்கமாக இணையும்போது அல்லது சந்திரனை சனி பார்க்கப்படும் பொழுது அதிலும் குறிப்பாக தேய்பிறை சந்திரன் ஆக இருந்து சனி பகவான் தொடர்பு கொள்ளும் பொழுது மனதளவில் ஒரு உறுதியற்ற தன்மை பயம் கலந்த உணர்வு எப்பொழுது ஜாதகரிடம்  இருந்து கொண்டிருக்கும்.


 ஜாதக கட்டத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை ஜென்ம ராசி என்று அழைக்கிறோம் 

  சந்திரனை மையமாகக் கொண்டே கோச்சார பலன்கள் , நாள் ,வார ,மாத மற்றும் ஆண்டு பலன்கள் அறியப்படுகிறது. சனி ,குரு ,ராகு மற்றும் கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சி பலன்கள் ராசியை மையமாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது.


சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12-ஆம் இடத்தில் சனி வரக்கூடிய காலங்களில் ஒருவருக்கு ஏழரைச் சனி ஆரம்பிக்கிறது.. இது முதல் சுற்று #மங்குசனி என்றும் இரண்டாவது சுற்று ஏழரைச் சனியை #பொங்குசனி என்றும் மற்றும் மூன்றாவது சுற்று ஏழரைச் சனியை #மரணச்சனி என்று அழைக்கப்படுகிறது.


 சந்திரன் இருக்கும் இடத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் சனி  பகவான் இருக்கக்கூடிய இரண்டரை ஆண்டுகளும் #விரயச்சனி  என்று அழைக்கப்படுகிறது ராசியில் சனி இருக்க கூடிய இரண்டரை ஆண்டுகளும் #ஜென்மசனி என்று அழைக்கப்படுகிறது . ராஜிக்கு இரண்டாம் இடத்தில் சனி பகவான் இருக்கக்கூடிய 2 1/2 ஆண்டுகளும் #பாதச்சனி  என்று அழைக்கப்படுகிறது


சந்திர பகவான் உடன் குரு சேரும் பொழுது #குருசந்திரயோகம் ,

சந்திர பகவான் உடன் செவ்வாய் சேர்க்கை பெறும் போது #சசிமங்களயோகம் ,

சந்திர பகவானுக்கு ஆறு,ஏழு , எட்டாம் இடத்தில் குரு பகவான் இடம்பெறுவது #சகடையோகம் ,

சந்திர பகவான் இருக்கும் இடத்திற்கு நான்கு கேந்திரத்தில் இடம் பெறேவது #கஜகேசரியோகம் போன்ற யோகங்களை சந்திர பகவான் தரக்கூடிய யோகங்களாகும்.


சந்திர பகவான் கடக வீட்டை ஆட்சி வீடாகவும்,  ரிஷபத்தை உச்ச வீடாகவும் விருச்சிகத்தை நீச வீடாகவும் கொண்டுள்ளது.


ரோகினி, அஸ்தம் ,திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் தசை நாதனாக சந்திர பகவான் வழங்குகிறார். சந்திர தசை 10 ஆண்டுகள் ஆகும். 


சந்திரன் ஒரு ராசியில் 2 1/4 நாட்கள் தங்குவார். சந்திர பகவான் சூரியனை 8 பாகைக்குள்ளாக நெருங்கும் பொழுது அமாவாசை  யோகத்தை தருகிறது. சூரியனை விட்டு சந்திரன் ஏழாம் வீட்டிற்கு அதாவது 150 பாகை விலகிச் செல்லும் பொழுது பௌர்ணமி அமைப்பை தருகிறது.


தேய்பிறை பஞ்சமி திதியில் இருந்து வளர்பிறை பஞ்சமி திதி வரை  வளர்பிறை காலமாகவும் ,

பௌர்ணமி பஞ்சமி திதியில் இருந்து தேய்பிறை பஞ்சமி திதி  வரை தேய்பிறைக் காலமாகவும் கருதப்படுகிறது.


வளர்பிறை காலத்தை பூர்வபட்சம் அல்லது சுலபட்சம் என்று அழைக்கப்படுகிறது.தேய்பிறை காலத்தை அமரபட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படுகிறது 


சந்திர பகவான் குரு அணியைச் சேர்ந்த  கிரகமாகும் நட்பு கிரகங்களாக சூரியன், செவ்வாய் ,குரு விளங்குகிறார். சந்திரன் புதனை பகையாக கருதியது ஆனால் புதன் சந்திரனை பகையாக கருதுவதில்லை. 


லக்னத்தில் தேய்பிறைச்சந்திரன், சனி செவ்வாய், ராகு போன்றவை தொடர்பு கொள்ளக்கூடிய அமைப்பில் பிறக்கக்கூடிய குழந்தை ஆட்டிசம் குழந்தையாக அதாவது மன வளர்ச்சி  குறைந்த குழந்தையாக வளர்கிறது..


 வளர்பிறை சந்திரன் சுபத்துவமான முறையில் ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் குடிக்க இயலக்கூடிய திரவங்கள் பால், ஐஸ் கிரீம், கடல் வாழ் உயிர்கள் வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபட வைக்கும்.


வளர்பிறை சந்திரனுக்கு ஆறு , ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு ,புதன் ,சுக்கிரன் நிற்கும் பொழுது. #சந்திராதியோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது.


   சந்திரன்  நிற்கும் இடத்திற்கு இரண்டு பனிரெண்டாவது இடங்களில் சுப கிரகங்கள் நிற்பது   #சுனபாயோகம் மற்றும் #அனபாயோகம் என்று அழைக்கப்படுகிறது.


ராசிக்கு இரண்டு புறத்திலும் இயற்கை சுப. கிரகங்கள் நின்றால் #சுபகர்த்தாரியோகம்   அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டு புறங்களில் பாவ கிரகங்கள் இருந்தால்  #பாவகர்த்தாரியோகம் ஆகும்.


 சந்திர பகவான் நான்காம் இடத்திற்கு காரக கிரகமாகும் . நான்காம் இடம் மாதுர் ஸ்தானம் என்றும் ,அதன் அதிபதி மாதுர் ஸ்தானாதிபதி என்று அழைக்கப்படுகிறது.


 நான்காம் இடம் அதனுடைய அதிபதி மற்றும் காரக கிரகமான சந்திரன் வலிமை பெற்று சுபர் பார்வை மற்றும்  சேர்க்கை பெற்ற நிலையில் நல்ல புகழ் அடைவார் .தாய் வழியில்  நல்ல ஆதரவு கிடைக்கும்.

நன்றி.

ஃபோர் online appointment 


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


097151 89647 


மற்றொரு செல் : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

     


அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

கோள்களின் கோளாட்டம்

 கோள்களின் கோளாட்டம் -(1)




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 மனித வாழ்வினை  வழி நடத்தி செல்லும் மகத்தான பணியை கோள்கள் கோளாட்சி செய்கிறது.


 ஒன்பது கோள்கள் சாதக கட்டத்தில் பன்னிரண்டு ராசிகளில்  27 நட்சத்திர பாதம் ஒன்றில் அமர்ந்து மனித வாழ்வை ஆட்சி செய்கிறது.


சூரியன் மற்றும் சந்திரன் ஒளி கிரகங்களாக கருதப்படுகிறது.

 ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகிறது இவ்விரு கோள்கள் பருப்பொருள் இல்லாத கிரகங்கள் ஆகும் 

குரு,செவ்வாய் சளி புதன் மற்றும்  சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்களை பஞ்ச மகா பருஷ கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. 


சூரியன் கோள்களின் தலைவன் மற்றும் குடும்பத்தின் தலைவனும் ஆன  தந்தையை குறிக்கும் கிரகமாகும். அரசு வேலை , அரசாட்சி மற்றும் அரசின் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகத்தை தர கூடிய கிரகம் ஆகும்.


 சூரிய பகவான் லக்னத்திற்கு காரக கிரகமாக வருகிறது மற்றும் தொழில் செய்வதற்கு சூரிய பகவானுடைய பலம் அதிகமாக தேவைப்படுகிறது .

சூரிய பகவானை ஆத்மா காரகன் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை மையமாக வைத்து பலன் அறிவதையே "கதி " என்று அழைக்கப்படுகிறது . 

விதி கெட்டால் மதி மதி கெட்டால் கதி என்று சொல்வார்கள்.


 கார்த்திகை உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக சூரியன் பகவான் விளங்குகிறது.. இந்த நட்சத்திரங்களில்  பிறப்பவர்களுக்கு தொடக்கத் தசையாக சூரிய தசையை வரும்.


சூரியன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் தங்குவார். எனவே இதனை மாதக் கோள் என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதம் மேஷ ராசியில் தொடங்கி பங்குனி மாதம் மீன ராசி வந்து அடைகிறது. 


    மாபெரும் சூரிய ஒளிக்கு முன்பு வரக்கூடிய கிரகங்கள் அஸ்தங்கம் அடைகிறது. ஆனால் நிழல் கிரகங்கள் ஆன ராகு கேது சூரியனை நெருங்கும் போது அஸ்தங்கம் அடைவதில்லை மாறாக கிரகண தோஷத்தை உண்டாக்குகிறது.


  பௌர்ணமியை நெருங்கக்கூடிய நிழல் கிரகங்கள் சந்திர கிரகணத்தையும் மற்றும் அமாவாசையில் நெருங்கக் கூடிய ராகு  கேதுக்கள் சூரிய கிரகணத்தையும் உண்டாக்குகிறது. இவை சூரியனையும் சந்திரனையும் பலமிழக்க செய்வதில்லை .மாறாக அதன் ஒளியை புவியில் விழ விடாமல் செய்து சூரிய , சந்திர பலனை ஜாதகருக்கு தர விடாமல் செய்கிறது.


ஒரு ஜாதகத்தில் சிம்மமும் அதன் அதிபதியான சூரியனும் சுபத்துவமான முறையில் வலுப்பெற்று ராசி மற்றும் லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களில் தொடர்பு கொள்ளும் பொழுது அரசு வேலை கிடைக்கிறது அதற்குரிய தசா புத்திகள் நடப்பில் இருக்க வேண்டும். 


சூரியன்  ஒன்பதாம் இடமான தந்தை ஸ்தானத்திற்கு காரக கிரகம் ஆகும். சனி பகவான் சூரியனின் மைந்தன் ஆவார் 

இதுவே ஒரு ஜாதகத்தில் சூரிய பகவானும் , சனியும் சேர்ந்து இருந்தாலும் சூரியனும், சனியும் சம சப்தமாக பார்த்துக் கொண்டாலும் தந்தை மகன் உறவு நிலை பெரிதாக பாதிக்கிறது இந்த நிலையில் ஒன்பதாம் இடமும் அதன் அதிபதியும் பலம் இழந்து நிற்கும் அளவினை பொறுத்து தந்தை தந்தையாக இருக்க மாட்டார் அல்லது தந்தையின் மூலம் லாபம் கிடைக்காது அல்லது தந்தையே தன்னை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை அல்லது தந்தை மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான தொல்லை அனைத்தும் தசா புத்திகளை பொறுத்து அமைகிறது.


சூரியன் உடன் ராகு பகவான் எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணையும் போது சூரியன் பலவீனமான அமைப்பை 

பெறுகிறார்.அதே நேரத்தில் சூரியன் உடன் கேது இணையும் பொழுது சூரியனை வலிமை படுத்தி ஆன்மீக அமைப்புகளில் ஈடுபட வைக்கிறார்.


சூரியனுடன் குரு பகவான் இணையும் பொழுது அல்லது சூரியனை குரு பகவான் பார்வை செய்யும் பொழுது சிவராஜ யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறார்.


சூரிய பகவானை சந்திரன் பகவான் எட்டு பாகைக்குள் நெருங்கும் பொழுது "அமாவாசை யோகம்"அமைப்பை பெறுகிறார்.சூரிய பகவானை விட்டு 180 பாகை அளவில் சந்திரன் பகவான் வரும் பொழுது "பொளர்னமி யோகம் அமைப்பை பெறுகிறார்.


சூரிய பகவான் சிம்மத்தில் ஆட்சி நிலையையும்  மேஷத்தில் உச்ச நிலையையும் மற்றும் துலாத்தில் நீச்ச வலிமையை பெறுகிறார். 


சூரிய பகவான் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் இடம்பெறும் பொழுது திக் பலத்தை பெறுகிறார். சில நேரங்களில் உச்சம் பெற்று விட்ட நிலையை விட  திக் பலம் பெற்ற கிரகங்களே பலம் பெற்ற கிரகமாக கருதப்படுகிறது.


சூரியன் பகவான் உடன் புதன் மற்றும் சுக்கிரன் இணைந்தோ  அல்லது 

முன் பின் ஒரு ராசியில் புதனும் மற்றும் இரு ராசிக்குள்ளாக சுக்கிரன் பகவானும் இடம் பெறுகிறார்.


 சூரியன் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு வரும்பொழுது குரு ,சனி செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் வக்கிரமடைந்து ஏழாம் இடத்தில் அதி வக்கரம் பெற்று ஒன்பதாம் இடத்திற்கு வரும்போது வக்கிர நிவர்த்தி அடைகிறார்.


சூரியன் அருகிலே புதன் பகவான் மற்றும் சுக்கிரன் பகவான் இடம் பெறுகிறார். எனவே சுக்கிரனும் புதனும் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையில் பெறுவார்.சில நேரங்களில் வக்கிரம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரண்டையும் தனித்தனியாகவும் பெறுவார்.


   சூரிய பகவானுக்கு நட்பு கிரகங்களாக சந்திரன், செவ்வாய் மற்றும் குரு பகவான் விளக்குகிறார். சூரிய பகவான் குரு அணியை சேர்ந்த கிரகமாக விளங்குகிறது. 


 சூரியன் பகவனுடன் புதன் பகவான் நெருக்கமாக இணையும்போது 

" புத ஆதித்ய யோகத்தை தருகிறது.இவை பல பட்டங்கள் பெறக்கூடிய யோகமாக கருதப்படுகிறது.


சூரியன் மற்றும் செவ்வாய் இணைந்து சுப தன்மை படைத்து தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது வலிமை மிக்க ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் ஜாதகரை சுபத்தன்மையில் இருக்கும் பொழுது ஈடுபட வைப்பார்.


  சூரியன் தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு காரக கிரகம் ஆகும்.

ஒன்பதாம் இடம் அதன் அதிபதி மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் சுபர் பார்வை மற்றும் சுபர் சேர்க்கை பெற்று நல்ல யோக தசை நடக்கக்கூடிய காலங்களில் தந்தைக்கு யோகத்தை தரக்கூடிய அமைப்பாகும்.


தொடரும்...


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay 

  097151 89647 


Other contact no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.