கோள்களின் கோளாட்டம்- (4)
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் ஒன்பது கோள்கள் பன்னிரண்டு ராசிகளில் இருபத்து ஏழு நட்சத்திர சாரங்களில் நின்று மனித வாழ்வை வழிநடத்திச் செல்கிறது என்பதை கோள்களின் கோளாட்டம்- என்ற தலைப்பின் கீழ் தொடர் பதிவாக பார்த்து வருகிறோம்.
கோள்களில் சுக்கிரன் பகவானை களத்திர காரகன் என்றும்,வாகன காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.
சுக்கிரன் பகவான் தனி மனித வாழ்வின் அத்தியாவாச தேவையான தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய கிரகம் ஆகும்.எனவே சுக்கிரன் பகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு காரக கிரகமாக விளங்குகிறது.
சுக்கிரன் பகவான் ஒரு ராசியில் ஒரு மாத காலம் வாசம் செய்கிறார்.சுக்கிரன் பகவான் சூரியன் உடன் இணைந்து சுற்றி வரும் கிரகம் ஆகும்.அதாவது சுக்கிரன் உடன் அல்லது சுக்கிரன் இருக்கும் இராசிக்கு முன் பின் இரு ராசிகளுக்குள் இருப்பார்.சுக்கிரன் உள் வட்ட கிரகம் ஆகும்.
சுக்கிரன் பகவான் பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக விளங்குகிறார்.சுக்கிர தசை இருபது ஆண்டுகள் ஆகும்.ரிஷபம், துலாம் ஆட்சி ஸீடாகவும், மீனம் வீட்டில் உச்சமாகவும் மற்றும் கன்னியில் நீசமாகவும் உள்ளது.
சுக்கிரன் பகவான் துலாம் வீட்டை மூல திரிகோண வீடாக கொண்டு உள்ளது.
சுக்கிரன் பகவான் நான்காம் இடத்தில் திக் பலம் பெறுகிறது.ஆனால் அதே நேரத்தில் பத்தாம் இடத்தில் நிஷ் பலம் பெறுகிறார்.சுக்கிரன் பகவானுக்கு சிறப்பு பார்வை கிடையாது. ஏழாம் இடத்தை மட்டும் பார்வை செய்கிறது.
ஒருவர் ஜாதகத்தில் வாகன யோகம் உள்ளதா ? என்பதை ஆராய்ந்து பார்க்க நான்காம் இடம் அதன் அதிபதி மற்றும் வாகன காரகன் சுக்கிரன் ஆகிய மூவரையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
ஒருவர் வீடு கட்டும் யோகம் வந்து விட்டதா ? என்பதை ஆய்வு செய்ய நான்காம் இடம்:_ அதிபதி மற்றும் வாகன காரகன் சுக்கிரன் பகவான் ஆகியவற்ற செய்து பார்க்க வேண்டும்
ஒருவருக்கு நல்ல மனைவி அமைய ஏழாம் இடம் வலுத்திருப்பதோடு களத்திரகாரர் என்று அழைக்கக்கூடிய சுக்கிரன் பாவ கிரகங்களுடன் பார்வைஅல்லது சேர்க்கை நிலையை பெறக்கூடாது. சுக்கிரன் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான் ,வளர் பிறை சந்திரன், தனித்த புதன் ஆகியவற்றின் பார்வை சேர்க்கை பெறும் பொழுது மனைவியால் தாம்பத்திய சுகத்தை முழுமையாக அனுபவிக்க இயலும்.நல்ல மனைவி அமைவாள்.
ஒருவர் ஜாதகத்தில் சுக்கிர பகவான் அதிக சுபத் தன்மை பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது
வண்டி, வாகனம், ஹோட்டல் டிரான்ஸ்போர்ட், அழகு சாதன பொருட்கள், சிகை அலங்காரம் ,
முக அலங்காரம் , உடை அலங்காரம் பலசரக்கு கடை , பைனான்ஸ்,நடனம், நடிப்பு தொழில்,தொகுப்பாளர், போன்ற வகையிலான தொழில்களில் அதிக நாட்டம் உருவாகி அதன் வழியாக பொருள் ஈட்டும் யோகம் உண்டாகும்.
சுக்கிரன் பகவான் ரிஷபம் ,துலாம், மிதுனம், கன்னி ,மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு யோகத்தை தரக்கூடிய தசையாக விளங்குகிறது. ஆனால் அதே நேரத்தில் தனுசு மற்றும் மீனம் லக்கணங்களுக்கு அவ யோகத்தை தரக்கூடிய தசையாக விளங்குகிறது..
சுக்கிர பகவானுக்கு சனி மற்றும் புதன் நட்பு கிரகங்கள் ஆகும் . சூரியன் , சந்திரன், செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் எதிர் தன்மை படைத்த கிரகங்கள் ஆகும்.
சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானத்தில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று நிற்கும் போது "மாளவீக யோகம்" தருகிறது.
சுக்கிர பகவான் தசை இளம் வயதில் வரும் பொழுது இளைஞர்களுக்கு காதல் உணர்வை அல்லது காம உணர்வை அதிக தூண்டுவதால்தான் "குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும்" என்று சொன்னார்கள்.
சுக்கிரன் பகவான் தன்னுடன் இணைந்த அல்லது பார்வை செய்த கிரகத்தை சுப தன்மை அடைய வைக்கிறது.சுக்கிரன் உடன் இணைந்த அல்லது பார்வை செய்த கிரகங்கள் சுப தன்மையை அடைந்து அதன் தசையில் நல்ல யோக பலனை அதிகம் தருகிறது.
சுக்கிரன் உடன் சனி, செவ்வாய்,ராகு ஆகிய மூன்று பாவ கிரகங்கள் இணையும் பொழுது
கடுமையான பாவ தன்மையை அடைகிறது.
சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை ஆனது நல்ல சுப தன்மையுடன் இருக்கும் போது நல்ல ஏற்று கொள்ள தக்க வகையில் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.
சுக்கிரன் செவ்வாய் அல்லது சனி அல்லது ராகு உடன் இணைந்து காம திரிகோண ஸ்தானமான மூன்று,ஏழு மற்றும் பதினொன்றாம் இடத்தில் நிற்கும் பொழுது ஜாதகர் மிகுந்த காம எண்ணம் உடையவராக திகழ்வார்.சுப கிரக தொடர்பு கிடைக்காத நிலையில் எட்டு பாசனகைக்குள் நெருக்கமாக இணைந்து நிற்கும் போது மனைவி / கணவன் அல்லாத நிலையில் மற்றவர் மஞ்சத்தில் இன்பம் சுகித்து இருப்பார்.
சுக்கிரன் பகவான் வலுப்பெற்ற நிலையில் ஒருவருக்கு கற்பனை உணர்வு ,காதல் உணர்வு, படைப்பாற்றல் மிக்கவராக திகழ்வார்.
கதை,கவிதை , கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு விதமான அழகிய அழகியல் எண்ணம் படைத்தவராக, நேர்த்தியாக செய்யும் குணம் படைத்தவராக ஆடம்பரமாக வாழும் எண்ணம் உடையவராக அதே நேரத்தில் அமைதி அற்றவர்களாக திகழ்வார்கள்.
சுக்கிரன் பகவான் அசுரர்களின் தலைவர் ஆவார்.இவர் பொருள் அணியை சேர்ந்தவர் ஆவார். சுக்கிரன், புதன் மற்றும் சனி சுக்கிரன் அணியை சேர்ந்தவர்கள் ஆவார். ரிஷபம் துலாம் மிதுனம் கன்னி மகரம் கும்பம் ஆகிய ஆறு லக்னங்களும் சுக்கிரன் அணியைச் சார்ந்தவர்கள் ஆவர்.
சுக்கிரன் பகவான் செவ்வாய் உடன் பிருகு மங்கள யோகத்தை தருகிறார்.வளர்பிறை சந்திரனுக்கு 6,7,8 ஆம் இடங்களில் சுக்கிரன் நின்று தசை நடத்தினால் மிகுந்த சந்திராதி யோகத்தை தருகிறது.
தொடரும்...
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay
097151 89647
Another cell no 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.