உங்கள் ஜாதகத்தை எவ்வாறு ஆராய்ந்து பார்ப்பது?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.ஏனைய பிற பாவகங்களை இயக்கும் பணியை செய்வதில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக திகழ்கிறது.லக்கனாதிபதியே மனித வாழ்வை வழிநடத்திச் செல்லும் கேப்டன் ஆவார்.
நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்தவர் என்பதை பொறுத்து நீங்கள் யார் ? என்பதை சொல்லிவிடலாம். உங்கள் லக்கனாதிபதியை அடைந்த வலிமையை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட தன்மை படைத்தவர் என்பதையும் கணித்து விட இயலும்.மொத்தத்தில் லக்கினத்தை கொண்டு உங்களது முழு வாழ்க்கை திட்டத்தையும் யூகித்து விட முடியும் நீங்கள் யார் என்பதையும் தெளிவாக கூறி விட முடியும்..
லக்கனம், லக்னத்தில் உள்ள கிரகம், லக்கனத்தை பார்வை செய்யும் கிரகம், லக்கனாதிபதி இடம் பெற்றுள்ள இடம் மற்றும் லக்கனாதிபதி எந்த தன்மை படைத்து உள்ளார் போன்றவற்றை நடக்கும் தசா புக்தி உடன் ஒப்பிட்டு வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறும் தகுதி உள்ளதா ? என்பதை ஆய்வு செய்து கணித்து விட இயலும்.
பிறகு உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் எங்கு அமைந்துள்ளார் ? அவை பார்வை செய்யக்கூடிய இடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
உங்க ஜாதகத்தில் லக்னம் ,ராசி மற்றும் அதிபதியை குருபகவான் பார்வை செய்த நிலையில் இருந்தால் நிச்சயமாக நல்ல குணம், தனம் மற்றும் கல்வி நிலை படைத்தவராக நீங்கள் இருப்பீர்கள்.
உங்கள் ஜாதகத்தில் குரு பகவானால் பார்வை செய்யப்பட்ட அல்லது குரு பகவான் இணைந்த கிரகங்களின் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களாக நீங்கள் இருந்தால் நிச்சயமாக நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலிகள் .உங்களுக்கு தொடர்ந்து யோகம் தரக்கூடிய நிலைகளே அமையும்.
இதே போல உங்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் எங்கு அமைந்துள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் லக்னம் ,ராசி மற்றும் அதன் அதிபதியை பார்வை செய்த நிலையில் இருப்பின் நிச்சயமாக நீங்கள் சோம்பேறித்தனம் உடையவர்களாகவும், அடுத்தவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடிய தன்மை படைத்தவராகவும், போராடி வெற்றி பெறக்கூடிய குணம் அற்றவராகவும் இருப்பீர்கள்.
உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் இடம் பெறும் மற்றும் பார்வை செய்த ஸ்தானங்கள் பாதிக்கப்படும்.மேலும் தொடர்ந்து சளியால் பார்வை செய்யப்பட்ட தசா அமைப்புகள் வந்தால் நீங்கள் துரதிஷ்டவாளிகள். இதில் பிறப்பிலிருந்து கஷ்டப்படக் கூடிய தன்மை படைத்தவராகவே இருப்பீர்கள்.
உங்கள் ஜாதகத்தில் லக்ன யோகர்கள் மற்றும் இயற்கை சுப கிரகங்கள் ஒன்றுக்கொன்று கேந்திர திரிகோணங்களில் நின்று அவயோகத்தை தரக்கூடிய கிரகங்கள் அல்லது பாவ கிரகங்கள் மறைவிட ஸ்தானங்களில் நின்று இருப்பின் அந்த ஜாதகங்கள் யோகம் படைத்த ஜாதகங்கள் ஆகும்.
உங்க ஜாதகத்துல வக்கனாதிபதியை பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் லக்கனாதிபதி பாவ தன்மையை அடைந்த நிலையில் ஜாதகர் வாழ்வில் வரக்கூடிய கஷ்டங்களை எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறக்கூடிய திராணியற்ற நிலையில் காணப்படுவார்.
உங்க ஜாதகத்தில் எவ்வளவு தான் யோகங்கள் இருந்தாலும் அந்த யோகங்களை அனுபவிக்க கூடிய யோகமற்ற மனிதனாக நிகழ்த்துகிறீர்கள்.
எனவே ஒருவர் தன் வாழ்வில் யோக தசைகள் வந்தாலும் அதை அனுபவிக்க லக்கனாதிபதியுடைய வலிமை ரொம்ப ரொம்ப முக்கியம் .அதேபோல அவயோக தசைகள் நடப்பில் இருந்தாலும் அந்த கஷ்டங்களை தாங்கி எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறக் கூடிய தன்மை லக்கனாதிபதியை பொறுத்து அமைகிறது.
எவர் ஒரு ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் சேர்ந்து நின்றாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூடிய அமைப்பில் இருந்தாலும் அவை இருக்கும் இடங்களும் பார்வை செய்யும் இடங்களையும் கடுமையான பாதிப்புக்கு உட்படுகிறது.
இதே போல உங்கள் ஜாதகத்தை நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் யோகமான ஜாதகமான அமைப்பை பெற்றவராக நீங்கள் இருந்தால் 6 ,12 அச்சுகளில் அதை இடம்பெற்று மற்ற எந்த கிரகங்களை பாதிப்புக்கு உள்ளாக்காத நிலையில் இருக்கும்.
யோக ஜாதக வரிசையில் நீங்கள் இருந்தால் சூரியன் ,சந்திரன், செவ்வாய் குரு ஆகிய நட்பு கிரகங்கள் ஒன்றையொன்று சேர்ந்த அல்லது பார்வை செய்த நிலையில் அல்லது பரிவர்த்தனை பெற்ற நிலையில் இருக்கும். இதேபோல எதிரணியைச் சேர்ந்த சுக்கிரன், புதன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் தங்களுக்குள் கேந்திர கோணங்களில் அமர்ந்து தொடர்ந்து யோக தசைகள் நடப்பில் வரக்கூடிய அமைப்பை பெற்று இருக்கும்.
யோக ஜாதக வரிசையில் உங்கள் ஜாதகம் இருந்தால் பெரும்பான்மையான கிரகங்கள் சுப கிரகங்கள் உடைய பார்வை எனது சேர்க்கை பெற்ற நிலையில் இருக்கும். தொடர்ந்து யோகத்தை தரக்கூடிய தசை அமைப்புகளும் வந்து கொண்டிருக்கும்.
நன்றி!
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
Other cell no 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தனர் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment