Tuesday, 20 May 2025

கோள்களின் கோளாட்டம்

 கோள்களின் கோளாட்டம் -(1)




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 மனித வாழ்வினை  வழி நடத்தி செல்லும் மகத்தான பணியை கோள்கள் கோளாட்சி செய்கிறது.


 ஒன்பது கோள்கள் சாதக கட்டத்தில் பன்னிரண்டு ராசிகளில்  27 நட்சத்திர பாதம் ஒன்றில் அமர்ந்து மனித வாழ்வை ஆட்சி செய்கிறது.


சூரியன் மற்றும் சந்திரன் ஒளி கிரகங்களாக கருதப்படுகிறது.

 ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகிறது இவ்விரு கோள்கள் பருப்பொருள் இல்லாத கிரகங்கள் ஆகும் 

குரு,செவ்வாய் சளி புதன் மற்றும்  சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்களை பஞ்ச மகா பருஷ கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. 


சூரியன் கோள்களின் தலைவன் மற்றும் குடும்பத்தின் தலைவனும் ஆன  தந்தையை குறிக்கும் கிரகமாகும். அரசு வேலை , அரசாட்சி மற்றும் அரசின் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகத்தை தர கூடிய கிரகம் ஆகும்.


 சூரிய பகவான் லக்னத்திற்கு காரக கிரகமாக வருகிறது மற்றும் தொழில் செய்வதற்கு சூரிய பகவானுடைய பலம் அதிகமாக தேவைப்படுகிறது .

சூரிய பகவானை ஆத்மா காரகன் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை மையமாக வைத்து பலன் அறிவதையே "கதி " என்று அழைக்கப்படுகிறது . 

விதி கெட்டால் மதி மதி கெட்டால் கதி என்று சொல்வார்கள்.


 கார்த்திகை உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக சூரியன் பகவான் விளங்குகிறது.. இந்த நட்சத்திரங்களில்  பிறப்பவர்களுக்கு தொடக்கத் தசையாக சூரிய தசையை வரும்.


சூரியன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் தங்குவார். எனவே இதனை மாதக் கோள் என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதம் மேஷ ராசியில் தொடங்கி பங்குனி மாதம் மீன ராசி வந்து அடைகிறது. 


    மாபெரும் சூரிய ஒளிக்கு முன்பு வரக்கூடிய கிரகங்கள் அஸ்தங்கம் அடைகிறது. ஆனால் நிழல் கிரகங்கள் ஆன ராகு கேது சூரியனை நெருங்கும் போது அஸ்தங்கம் அடைவதில்லை மாறாக கிரகண தோஷத்தை உண்டாக்குகிறது.


  பௌர்ணமியை நெருங்கக்கூடிய நிழல் கிரகங்கள் சந்திர கிரகணத்தையும் மற்றும் அமாவாசையில் நெருங்கக் கூடிய ராகு  கேதுக்கள் சூரிய கிரகணத்தையும் உண்டாக்குகிறது. இவை சூரியனையும் சந்திரனையும் பலமிழக்க செய்வதில்லை .மாறாக அதன் ஒளியை புவியில் விழ விடாமல் செய்து சூரிய , சந்திர பலனை ஜாதகருக்கு தர விடாமல் செய்கிறது.


ஒரு ஜாதகத்தில் சிம்மமும் அதன் அதிபதியான சூரியனும் சுபத்துவமான முறையில் வலுப்பெற்று ராசி மற்றும் லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களில் தொடர்பு கொள்ளும் பொழுது அரசு வேலை கிடைக்கிறது அதற்குரிய தசா புத்திகள் நடப்பில் இருக்க வேண்டும். 


சூரியன்  ஒன்பதாம் இடமான தந்தை ஸ்தானத்திற்கு காரக கிரகம் ஆகும். சனி பகவான் சூரியனின் மைந்தன் ஆவார் 

இதுவே ஒரு ஜாதகத்தில் சூரிய பகவானும் , சனியும் சேர்ந்து இருந்தாலும் சூரியனும், சனியும் சம சப்தமாக பார்த்துக் கொண்டாலும் தந்தை மகன் உறவு நிலை பெரிதாக பாதிக்கிறது இந்த நிலையில் ஒன்பதாம் இடமும் அதன் அதிபதியும் பலம் இழந்து நிற்கும் அளவினை பொறுத்து தந்தை தந்தையாக இருக்க மாட்டார் அல்லது தந்தையின் மூலம் லாபம் கிடைக்காது அல்லது தந்தையே தன்னை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை அல்லது தந்தை மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான தொல்லை அனைத்தும் தசா புத்திகளை பொறுத்து அமைகிறது.


சூரியன் உடன் ராகு பகவான் எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணையும் போது சூரியன் பலவீனமான அமைப்பை 

பெறுகிறார்.அதே நேரத்தில் சூரியன் உடன் கேது இணையும் பொழுது சூரியனை வலிமை படுத்தி ஆன்மீக அமைப்புகளில் ஈடுபட வைக்கிறார்.


சூரியனுடன் குரு பகவான் இணையும் பொழுது அல்லது சூரியனை குரு பகவான் பார்வை செய்யும் பொழுது சிவராஜ யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறார்.


சூரிய பகவானை சந்திரன் பகவான் எட்டு பாகைக்குள் நெருங்கும் பொழுது "அமாவாசை யோகம்"அமைப்பை பெறுகிறார்.சூரிய பகவானை விட்டு 180 பாகை அளவில் சந்திரன் பகவான் வரும் பொழுது "பொளர்னமி யோகம் அமைப்பை பெறுகிறார்.


சூரிய பகவான் சிம்மத்தில் ஆட்சி நிலையையும்  மேஷத்தில் உச்ச நிலையையும் மற்றும் துலாத்தில் நீச்ச வலிமையை பெறுகிறார். 


சூரிய பகவான் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் இடம்பெறும் பொழுது திக் பலத்தை பெறுகிறார். சில நேரங்களில் உச்சம் பெற்று விட்ட நிலையை விட  திக் பலம் பெற்ற கிரகங்களே பலம் பெற்ற கிரகமாக கருதப்படுகிறது.


சூரியன் பகவான் உடன் புதன் மற்றும் சுக்கிரன் இணைந்தோ  அல்லது 

முன் பின் ஒரு ராசியில் புதனும் மற்றும் இரு ராசிக்குள்ளாக சுக்கிரன் பகவானும் இடம் பெறுகிறார்.


 சூரியன் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு வரும்பொழுது குரு ,சனி செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் வக்கிரமடைந்து ஏழாம் இடத்தில் அதி வக்கரம் பெற்று ஒன்பதாம் இடத்திற்கு வரும்போது வக்கிர நிவர்த்தி அடைகிறார்.


சூரியன் அருகிலே புதன் பகவான் மற்றும் சுக்கிரன் பகவான் இடம் பெறுகிறார். எனவே சுக்கிரனும் புதனும் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையில் பெறுவார்.சில நேரங்களில் வக்கிரம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரண்டையும் தனித்தனியாகவும் பெறுவார்.


   சூரிய பகவானுக்கு நட்பு கிரகங்களாக சந்திரன், செவ்வாய் மற்றும் குரு பகவான் விளக்குகிறார். சூரிய பகவான் குரு அணியை சேர்ந்த கிரகமாக விளங்குகிறது. 


 சூரியன் பகவனுடன் புதன் பகவான் நெருக்கமாக இணையும்போது 

" புத ஆதித்ய யோகத்தை தருகிறது.இவை பல பட்டங்கள் பெறக்கூடிய யோகமாக கருதப்படுகிறது.


சூரியன் மற்றும் செவ்வாய் இணைந்து சுப தன்மை படைத்து தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது வலிமை மிக்க ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் ஜாதகரை சுபத்தன்மையில் இருக்கும் பொழுது ஈடுபட வைப்பார்.


  சூரியன் தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு காரக கிரகம் ஆகும்.

ஒன்பதாம் இடம் அதன் அதிபதி மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் சுபர் பார்வை மற்றும் சுபர் சேர்க்கை பெற்று நல்ல யோக தசை நடக்கக்கூடிய காலங்களில் தந்தைக்கு யோகத்தை தரக்கூடிய அமைப்பாகும்.


தொடரும்...


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay 

  097151 89647 


Other contact no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: