Wednesday, 25 February 2026

குரு பகவான் மற்றும் சனி பகவான் காட்டும் ஜோதிட பலன்கள்.

 குரு பகவான் மற்றும் சனி பகவான் காட்டும் ஜோதிட பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  நவ கிரகங்களில் குரு பகவான் மற்றும் சனி பகவான் ஆகிய இருவரும் எந்த இடத்தில் அமர்ந்து உள்ளார்கள் என்பதை கவனிக்காமல்  ஜோதிடர்களாகிய எவரும் பலன் அளித்து விட முடியாது.


 குரு பகவானின் பார்வை கோடி நன்மையை தரும்.சனி பகவானின் பார்வை சர்வ நாசத்தை தரும்.

குரு பகவானுக்கு ஏழாம் பார்வையை தவிர ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வை என்ற சிறப்புப் பார்வையை கொண்டு உள்ளது.இதே போல சனிக்கு ஏழாம் பார்வையை தவிர மூன்று மற்றும் பத்தாம பார்வையை கொண்டு உள்ளது.


 குரு பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்வை செய்யும் இடத்தையும் சுப தன்மையை அடைய வைத்து வாழ்வில் நல்ல பலன்களை  ஜாதகருக்கு தர செய்கிறார் . குரு பகவான் உடன் இணைந்த அல்லது குருவின் பார்வையை பெற்ற கிரகங்களும் சுப தன்மையை அடைந்து நல்ல பலன்களை ஜாதகருக்கு அள்ளித் தரும் அமைப்பை பெறுகிறார் .


குரு பகவான் பார்வையை பெற்ற பாவ அல்லது அவ யோக கிரகம் ஆக இருந்தாலும் அவற்றை சுப தன்மையை அடைய வைத்து அதன் தசையில் யோகத்தை அள்ளி தருகிறார்.குரு பகவான் தொடர்பை பெற்ற சுப கிரகங்கள் கூடுதலான சுப தன்மையை அடைந்து அதன் தசையில் யோகத்தை அள்ளித் தரும் அமைப்பை பெறுகிறது.


 குரு பகவான் சுப தன்மையை அடைந்து ராசி மற்றும் லக்கனத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது ஆசிரியர் அல்லது பேராசிரியர் ஆக திகழ்வார்கள்.அதிக சுப தன்மையை அடைந்த நிலையில் நீதிபதியாக திகழ்வார்கள்.மேடை பேச்சாளர்,வழக்காடு மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ஆக திகழ்வார்கள்.சுபத்துவ படிநிலை சற்று குறைய நகை கடை வைத்து நடத்துபவர் மற்றும் ஆலோசனை வழங்கும் மந்திரியாக திகழ்வார்கள்.


 சனி பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்வை செய்யும் இடத்தையும் பாவ தன்மையை அடைய வைத்து கடுமையான இன்னல்களை கொடுக்கக்கூடிய அமைப்பை பெறுகிறார்.சனியின் பார்வையை பெற்ற எந்த ஸ்தானமும் மற்றும் எந்த ஒரு கிரகமும் கடுமையான பாவ தன்மையை அடைந்து அதன் தசையில் கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு வழங்கக்கூடிய அமைப்பை பெறுகிறார்.


சனியின் பார்வையை பெற்ற யோக கிரகம் கூட சனியின் பார்வை பெற்றால் அவை பாவ தன்மையை அடைந்து அதன் தசையில் கடுமையான கஷ்டங்களை தரும் அமைப்பை பெறுகிறார்.


சனியின் பார்வையை பெற்ற லக்கன அவ‌ யோகர் அல்லது பாவ கிரகம் ஆனது  அதன் தசையில் கூடுதலாக பாவ தன்மையை அடைந்து அதன் தசையில் கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு வழங்கக்கூடிய அமைப்பை பெறுகிறார்.


இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிர் தன்மையை கொண்ட  குரு பகவான் மற்றும் சனி பகவான் ஆகிய இருவரும் இணைந்து உள்ள நிலையில் குரு பகவானால் சனி பகவான் சுப தன்மை அடைகிறது.சனி பகவானால் குரு பகவான் பாவ தன்மையை அடைகிறார்.


குரு மற்றும் சனி இணையானது ஜாதகன் ஆன்மீக வழியில் ஈடுபாடு கொண்டவராக செயல்படுவார்கள்.குரு மற்றும் சனி இணையானது ஜாதகரை பற்றற்ற வழியில் மிகுந்த ஆர்வம் உடையவராக ஜாதகரை மாற்றி அழகு பார்க்கும்.


குரு மற்றும் சனி பகவான் இணைவானது பற்றற்ற உண்மை சந்நியாசியாகும் அமைப்பை ஜாதகருக்கு கொடுக்கிறது.


குரு பகவான் எந்த இடத்தில் இருந்தாலும் அல்லது எந்த இடத்தை பார்த்தாலும் அந்த கிரகம் அல்லது ஸ்தானம் சுப தன்மையை அடைந்து வலிமை பெறுகிறது.குரு பகவானின் தொடர்பை பெற்ற எந்த ஸ்தானம் மற்றும் கிரகம் சுப தன்மையை அடைந்து அதற்கு உரிய நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


 குரு பகவான் ஜாதகருக்கு பணம் ,பதவி, பட்டம், புகழ், கல்வி ,ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் அனைத்தையும் தந்து வாழ்வில் உயரிய நிலை அடைய வைக்கக்கூடிய கிரகமாகும்.


குரு பகவான் நீதி , நியாயம், நேர்மைக்கு கட்டுபட்டவர் ஆவார்.அடுத்தவர் வளர்ச்சியை கண்டு எள்ளளவும் பொறாமை படாத தன்மை படைத்தவர்.அடுத்தவர் பணத்தை வஞ்சித்து சம்பாதிக்கும் கெட்ட குணம் இல்லாதவர்.ஏமாளி, பிழைக்க தெரியாதவர் . ஒயிட் கலர் ஷாப் புரிபவர்.நல்ல தேஜஸ் உடையவராக காணப்படுவார்.பாவ கிரக தொடர்பு ஏற்பட்டால் பலனில் மாற்றம் உண்டாகும்.


சனி பகவான் பாவத்துவமான நிலையில் அழுக்கான இடத்தில் வசிப்பவர்.கீழ் மட்ட தொழில் புரிபவர்,சொல்லி கொள்ள வெட்கப்பட்டுக் கூடிய தொழில் புரிபவர்.பொறாமை குணம் படைத்தவராக திகழ்வர் .குள்ளத்தன்மை கொண்டவராக இருப்பார்.சோம்பேறி ,மந்த தன்மை கொண்டவர்.இயற்கை சுப கிரக தொடர்பு ஏற்பட்டால் பலனில் மாற்றம் உண்டாகும்.


சனி பகவான் சுப தன்மை நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள்,மெஜினேரி வேலை,கனரக வாகனங்களை இயக்குபவர், வழக்கறிஞர்,பொது மக்கள் தொடர்பு கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்கள் போன்ற பணிகளில் அமரும் யோகம் உண்டாகும்.


சனி பகவான் நில ராசிகளான ரிஷபம், கன்னி, மகரம் போன்ற ராசிகளில் தொடர்பு மண்,கிரசர் போன்ற தொழிலில் ஈடுபடுவார்கள்.நீர் ராசிகளாக திகழும் கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் சுப தன்மை உடன் தொடர்பு கொள்ள குடிக்க இயலாத திரவமான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற தொழில் புரிபவராக இருப்பார்கள்.


நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு போன்ற ராசிகளில் சனி பகவான் தொடர்பு கொள்ள தார் ரோடு போடும் ஒப்பந்ததாரர்களாக திகழ்வார்கள்.


சனி பகவான் திருமண ஸ்தானமான 1,2,7,8 ஆம் இடத்தில் நிற்பது அல்லது பார்வை முறையில் மேற்கண்ட ஸ்தானம் அதன் அதிபதி மற்றும் காரக கிரகமாக விளங்கும் சுக்கிரன் உடன் தொடர்பு கொள்ள திருமண தடையை தருகிறார்.புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம் அல்லது காரக கிரகமாக விளங்கும் குரு பகவான் உடன் தொடர்பு புத்திர தடையை உருவாக்குகிறார்.


அதே நேரத்தில் குரு திருமண மற்றும் புத்திர ஸ்தானத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது எல்லாம் சுபமாக மாறி நல்ல தன்மையை அடைய வைத்து மேன்மையை அடைய செய்கிறார்.


நன்றி.

For online appointment 

Cell & WhatsApp & Gpay no 

         097151 89647 

Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


கிரகங்கள் மனித வாழ்வை எவ்வாறு ச்ச

 கிரகங்கள் மனித வாழ்வை எவ்வாறு வழி நடத்தி செல்கிறது.



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     மனித வாழ்வினை வழி நடத்தி செல்வதில் நவ கிரகங்களின் பங்கு அலாதியானது.


  கிரகங்கள் எந்த இடத்தில் யாருடன் சேர்ந்து எந்த கிரகத்தின் பார்வையை பெற்று நிற்கின்றது என்பதை லக்கினத்தை பொறுத்து நடக்கும் தசாபுத்திகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஒரு மனிதன் எப்படி வாழ்ந்து இருப்பான் அல்லது எப்படி வாழ போகிறான் ?! போன்ற விவரங்களை அலசி ஆராய்ந்து துல்லியமாக கண்டறிய இயலும்.


 ஒவ்வொரு கிரகங்களும் தனது ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவம் வழியாக அதன் தசாபுத்திகளில் மனித வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்கிறது.


 ஒவ்வொரு கிரகத்தின் ஆதிபத்தியம் பலன்கள் ஆனது அதன் லக்கினத்தை பொறுத்து மாறுபாடு அடைகிறது.ஆனால் காரகத்துவம் தரும் பலன்கள் ஆனது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான பலன்களையே தருகிறது.இவை லக்கினத்தை பொறுத்து மாறுபாடு அடைவதில்லை.


 ஒரு கரு இரட்டையர்கள் என்பது ஒரு விந்தணுவானது ஒரு பெண்ணின் கரு முட்டையில் நுழைந்து ஒரு சைகோட் உருவாகி அவை இரண்டாக பிளந்து இரண்டு குழந்தைகளை உருவாக்குகிறது.இவை பெரும்பாலும் இரண்டும் ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ தான் இருக்கும். 


 இவ்வாறு சில நிமிட வித்தியாசத்தில் பிறந்த ஒரு கரு இரட்டையர் சாதக பலன்களில் மாற்றங்கள் காணப்படும் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ராசி கட்டங்களில் கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலும் இருவருடைய பலன்கள் ஒரு மாதிரி இருப்பது கிடையாது.

இதே போல இருக்க இரு கரு இரட்டையர்களின் பலன் ஆனது முற்றிலும் மாறுபட்ட நிலைகளில் காணப்படுகிறது.


இரு கரு இரட்டையர் என்பது இரண்டு விந்து அணுக்கள் ஆனது இரண்டு அண்ட அணுவுடன் இணைந்து இரண்டு சைகோட் உருவாகி விடுகிறது.இதில் இரண்டும் ஆண் அல்லது பெண் ஆகவோ அல்லது ஒன்று ஆண் மற்றொன்று பெண் ஆக பிறக்கிறது.


    இரு கரு இரட்டையர்களுக்கு இடையேயான கிரகங்கள் தாக்குதல் பலன் ஆனது சற்று மாறுபட வாய்ப்பு உள்ளது..


 ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் ஒரே இடத்தில் பிறந்த இரண்டு குழந்தை தரும் ஜாதக பலன்கள் மாறுபாடாக இருப்பதற்கு என்னவாக இருக்கும் என ஆராய்ந்து பார்த்தால் ஒரு குழந்தை ஆனது தரைமட்ட நிலையில் பிறந்து இருக்கும்.மற்றொரு குழந்தை மாடியில் பிறந்து இருக்கும்.இதே போன்ற பிறக்கும் இடத்தின் உயர மாறுபாட்டால் கூட ஒரு குழந்தை ஜாதக பலனில் மாறுபாடு இருக்கிறது.


   ஜாதக பலனை துல்லியமாக ஜாதகருக்கு வழங்குவதற்கு ஜோதிட விதிகளை மட்டுமே நம்பி இருந்தால் போதாது. ஜோதிட விதிகளுக்கு அப்பால் ஜோதிட விதி விலக்கையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.


 ஜோதிட விதிகளை மட்டுமே நம்பி ஜாதக பலன் பார்க்கும் போது ஜாதக பலனில் துல்லிய தன்மை கெட்டு விடுகிறது.அவரவர் லக்கனம்,கிரக பார்வை அல்லது சேர்க்கை மற்றும் வீடு கொடுத்தவன் வலிமை போன்ற பல்வேறு கூறுகளை ஆய்வு செய்து கொடுக்க கூடிய பலன்கள் மட்டுமே துல்லியமான பலனாக இருக்க முடியும்.


ஒரு கிரகம் தரும் பலன் என்பது அந்த கிரகம் அடைந்து இருக்கும் சுப தன்மை மற்றும் பாவ தன்மை ஆகிய இரண்டையும் சார்ந்தே அமைகிறது.


 ஒரு கிரகம் எப்படி இருந்தாலும் அவை நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்க வேண்டும் ஆயின் அந்த கிரகம் சுப தன்மையை அடைந்து இருக்க வேண்டும்.சில நேரத்தில் இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் அல்லது லக்கன அவ யோகர் ஆக இருந்தாலும் அவை குருபகவான் ,வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அந்த கிரகம் உயரிய பலனை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்து விடுகிறது.


 ஒரு கிரகம் ஆனது லக்கன யோகராக இருந்தாலும் இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு, மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் உடன் சேர்க்கை அல்லது பார்வை போன்ற நிலையினை அடையும் போது அவை அதன் தசையில் கடுமையான பாதிப்பை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 

   097151 89647 

Another cell no 


7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்   

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

கெட்ட பலனை தராத கேது பகவான்

 கெட்ட பலனை தராத கேது பகவான்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  கேது பகவான் ஒரு  இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் ஒருவர் ஜாதகத்தில் எந்த சூழ்நிலையிலும் கெட்ட பலனை தராத கிரகமாகவே செயல்படுகிறது.


 கேது பகவான் ஆனவர் ராகு பகவான் அளவிற்கு தன்னோடு இணைந்த கிரகத்தின் பலனை  பாதிப்பது கிடையாது.


 கேது பகவான் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை அதிகரிக்க செய்வார்.கேது பகவான் குரு பகவான் உடன் இணையும் போது கேள யோகம் என்னும் கோடீஸ்வர யோகம் என்றாலும் எல்லோருக்கும் இந்த யோகமானது பலனை  தந்து விடுவது கிடையாது.


   கேது பகவான் ஆனவர் இயற்கை பாவ கிரகமான சனி பகவான் உடன் இணைந்த நிலையில் சூட்சும வலிமை என்னும் மறைமுக வலிமையை ஜாதகருக்கு தருகிறது.கேது பகவான் உடன் இணைந்த சனி பகவான் தனது இயல்பான கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுப்பது கிடையாது.


    கேது பகவான் ஆனவர் சனி பகவான் உடன் இணைந்து 2,5,9,12 ஆம் இடத்தில் நின்று குரு பகவானின் பார்வையினை பெற்ற நிலையில் ஜாதகரை ஆன்மீக வழியில் ஈடுபாடு உடையவராக மாற்றுகிறது.


   இதேபோல் கேது பகவான் மற்றொரு முக்கால் பாவ கிரகமான செவ்வாய் பகவான் உடன் இணைந்த நிலையில் சூட்சும வலிமை என்னும் மறைமுக வலிமையை ஜாதகருக்கு கொடுக்கிறது.

கேது பகவான் உடன் இணைந்த பாவ கிரகமான செவ்வாய் பகவான் ஜாதகருக்கு கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுப்பது கிடையாது.


    கேது பகவான் ஆனவர்  ஒளி கிரகங்களாக திகழும் 

சூரியன் மற்றும் சந்திரன் உடன் இணையும் பொழுது ராகு பகவான் அளவிற்கு கிரகண தோஷத்தை கொடுத்து பலவீனமான நிலையை அடைய செய்வதில்லை.


 சூரியன் உடன் கேது இணையும் போது சூரியன் பகவான் தரும் தலைமை பண்பை அதிகரிக்க செய்வார்.சிலரை ஆன்மீக குருவாக அல்லது அரசியல் குருவாக செயல்பட செய்வார்.சூரியன் மற்றும் கேது பகவான் இணைவானது தலைமை பண்பை ஜாதகருக்கு அதிகரிக்க செய்யும்.அப்பா வழி உறவுகளால் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை..அரசாங்க ஆதரவை தர செய்வார்.


    மன நிலை காரகன் சந்திரன் உடன் கேது இணையும் பொழுது மனநிலை பாதிப்பை தர வைப்பதில்லை.யூகித்து அறியும் சக்தியை ஜாதகருக்கு கொடுக்கிறது.தாய் வழி உறவுகளால் ஆதரவு கிடைக்கும்.ஆன்மீக ஈடுபாடு உண்டாகும்.சந்திரன் இணைந்த கேது பகவான் ஆனவர் ராகு பகவான் அளவிற்கு திருமண தடையை தந்து விடுவதில்ல


    வித்தை காரகன் புதன் பகவான் உடன்    கேது பகவான் இணையும் போது வித்தையில் சாதுர்யம், புத்திசாலித்தனம், ஜோதிட ஆர்வம், கணினி ஈடுபாடு போன்றவற்றில் முன்னேற்றம் உண்டாகும்.


    சுக்கிரன் பகவான் உடன் கேது பகவான் இணையும் போது ராகு பகவான் அளவிற்கு களத்திர தோஷத்தை தந்து விடுவது கிடையாது.தாம்பத்திய சுகத்தை ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக அங்கீகாரம் பெற்ற வாழ்க்கை துணை உடன் மட்டுமே அனுபவிக்கும் எண்ணத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது.


  ஒருவர் ஜாதகத்தில் கேது பகவான் அதிக சுப தன்மை பெற்ற நிலையில் ஆன்மீக வழியில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.. கோவில் அருகே சாமி வழிபாட்டு பொருட்களை வைத்து கடை நடத்துபவராக இருப்பார்.சாமி படங்கள் வைத்து விற்பனை செய்பவராக திகழ்வார்.


 கேது பகவான் தரும் தோஷங்களை போக்க கீழபெரும் பள்ளம்  மற்றும் ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள  காளஹஸ்தி போன்ற இடங்களில் எம கண்டத்தில் வழிபாடு செய்து கேது பகவான் தரக்கூடிய தோஷங்களை போக்கிக் கொள்ளலாம்.


கேது பகவான் சனியின் வீட்டில் இருந்து செவ்வாய் பகவான் பார்வையினை பெற்றிருந்தாலோ அல்லது செவ்வாய் பகவான் வீட்டில் இருந்து சனியின் பார்வையினை பெற்றிருந்தாலோ அல்லது கேது பகவான் உடன் தேய்பிறை சந்திரன் அல்லது சனி , செவ்வாய் இருவரும் சேர்க்கை பெற்றோ அல்லது தனி தனியாக பார்வை செய்தாலோ கடுமையான கஷ்டங்களை கொடுத்து வாழ்வின் மீது பற்று அற்று வாழும் சந்நியாச நிலைக்கே ஜாதகரை கொண்டு சென்று விடும் நிலைக்கு கேது பகவான் செயல்படுவார்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

    


அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ராகு பகவான் எப்பொழுது கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்க வைப்பார்?

 ராகு பகவான் எப்பொழுது கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்க வைப்பார்? 




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ராகு பகவான் ஒருவர் ஜாதகத்தில் மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் நின்று வீடு கொடுத்தவன் உச்சம் பெற்று நின்றாலோ அல்லது இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள அந்த ராகு பகவான் தசை ஆனது மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


ராகு பகவான் குரு பகவான் உடன் ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள ராகு பகவான் குரு பகவானால் சுப தன்மையை அடைந்து விடுகிறார்.இவ்வாறு சுப தன்மையை அடைந்த ராகு பகவான் அதன் தசையில் அதிக யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


ராகு பகவான் அதன் தசையில் ஜாதகரே எதிர்பாராத வகையில் மிகப் பெரிய செல்வந்தர் ஆக்கி பார்க்கிறது.குப்பையில் கிடந்த வரை கூட கோபுர உச்சிக்கு கொண்டு சேர்க்கிறது.


ராகு பகவான் ஆனவர் அதன் தசையில் அந்நிய தேசம், அந்நிய மொழி, அடுத்தவர் பணம் மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டம் போன்ற வகையில் கோடிக்கணக்கான அல்லது லட்ச கணக்கான தொகையை ஜாதகரை சம்பாதிக்க வைக்கிறது.


ராகு பகவான் ஆனவர் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் போன்ற ராசிகளில் நின்று அவையே லக்கினத்திற்கு மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் நின்று அவையே இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய சுப கிரகங்கள் உடைய தொடர்பை பெற்ற நிலையில் மிகப் பெரிய யோகத்தை அதன் தசையில் அள்ளிக் கொடுப்பார்.


ராகு பகவான் ஆனவர் இணைய வழியில் கணினி அறிவை பயன்படுத்தி ஆன்லைன் வியாபாரம் மூலமாக கோடீக்கணக்கான பணத்தை சம்பாதிக்கும் மூளையை ஜாதகருக்கு கொடுப்பார்.


  லாட்டரி, ரேஸ், ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஷேர் மார்க்கெட் போன்ற வகையில் கூடுதலான பணத்தை சம்பாதிக்க கூடிய யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும் யோகத்தை ஜாதகருக்கு வழங்குகிறது.


 ராகு பகவான் ஆனவர் சனி, செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ராகு பகவான் ஆனவர் மிகவும் பாவ தன்மையை அடைந்து அதன் தசையில் நல்ல பலனை தர இயலாதவர் ஆகி விடுகிறார்.


    ராகு பகவான் ஆனவர் மகரம் மற்றும் கும்பம் போன்ற சனியினுடைய வீட்டில் அமர்ந்து செவ்வாய் பகவானை பார்வை பெற்ற நிலையிலோ அல்லது செவ்வாயின் வீடுகளில் அமர்ந்து சளியினுடைய பார்வையினை பெற்ற நிலையில் மிகுந்த பாவத்தன்மை அடைகிறார்.


ராகு பகவான் மேற்கண்ட வகையில் பாவத்தன்மை அடையும் பொழுது அதன் தசையில் கோபுரத்தில் உள்ள நபரையும் குப்பைக்கு கொண்டு வந்து விடுவார்..


    ராகு பகவான் ஜாதக கட்டத்தில் லக்கனம் என்கிற ஒன்றாம் இடம் , குடும்ப ஸ்தானம் ஆன இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இடங்களில் நின்றால் சர்ப்ப தோஷத்தை ஜாதகருக்கு கொடுக்கிறார்.

 இதே போல புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் இருந்தாலும் அல்லது புத்திரகாரன் குரு பகவான் உடன் ராகு சேர்ந்திருந்தாலும் புத்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது.


   நாக தோஷம் போக்க ஜாதகர் நாகநாத சுவாமி உள்ள திருக்கோயில் ஆன புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள பேரையூர், கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் மற்றும் திருப்பாம்புரம். அடுத்தபடியாக ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளகஸ்தி என்ற இடத்தில் உள்ள நாகநாத சுவாமியை சனிக்கிழமை காலை 9 முதல் 10:30 ராகு காலத்தில் வெள்ளியில் நாக படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட நாக தோசம் நீங்கி நல்ல பலனை தரும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


 097151 89647 


Another cell no 


 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Monday, 23 February 2026

சமூக ஊடகங்களில் தரப்படும் ஜோதிட கருத்துக்கள்

 சமூக ஊடகங்களில் தரப்படும் ஜோதிட கருத்துக்கள்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை! 


  ஜோதிடம் தொடர்பான கருத்துக்கள் பல முகநூல் வழியாகவும், யூடியூப் சேனல் வழியாகவும் மற்றும் இணையத்தின் வழியாகவும் தரப்படுகிறது இவ்வாறு தரப்படக்கூடிய அனைத்து கருத்துக்களும் சோதிடம் தொடர்பான பொது கருத்துக்களே ஆகும்.


 யூடியூப் சேனலில் இன்று ஜோதிடத்தை முறையாக படித்து தொழில் முறையில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் படைத்த ஜோதிடர்கள் மூலமாக யூடியூப் வீடியோவில் தரப்படும் கருத்துக்கள் நிச்சயம் சரியானதாக இருக்கும்.இது போன்ற அனுபவம் நிறைந்த சோதிடர்களால் தரப்படும் ஜோதிட கருத்துக்களும் பொதுவான கருத்துக்கள் ஆகும்.இதனை அவரவர் ஜாதகத்தில் ஒப்பிட்டு பார்த்து தான் பலனை முடிவு செய்ய வேண்டும்.


யூடியூப் வீடியோவில் தரப்படும் ஜோதிட விதிகள் அனைத்திலும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப விதி விலக்குகளும் உண்டு.


 ஆதலால் யூடியூப் மற்றும் முகநூல் பதிவுகளில் தரப்பட்ட ஜோதிட பொது விதிகளை பார்க்கும் அல்லது படிக்கும் ஒருவர் அதே போன்ற அமைப்பு தன்னுடைய ஜாதகத்திலும் உள்ளது என்று அதை அப்படியே நம்பி பயப்படவோ அல்லது மற்றவரை சந்தேகப்படவோ கூடாது.


 ஜோதிட பொது விதிகள் அவரவர் லக்கனம் மற்றும் நடக்கும் தசா புக்திகளுக்கு ஏற்ப மாறுபடும் என்ற உண்மையை புரியாமல் நீங்களே பலன்களை முடிவு செய்து கொண்டு பயப்பட வேண்டாம். "


    "Self medicine is dangerous" ..

ஒரு நோய்க்கு எடுத்து கொள்ளும் மருந்தானது நோயின் தன்மை,நோயாளியின் உடல் நிலை போன்ற பல விவரங்களை ஆய்வு செய்து மருந்தானது கொடுக்க வேண்டும்.எல்லா காய்ச்சலுக்கும் ஒரே மாதிரியான மாத்திரை கொடுத்தால் சரியாகது.


கால்பால் மாத்திரை காய்ச்சலுக்கு கொடுத்தால் குணமாகும் என்றாலும் டெங்கு காய்ச்சலுக்கு கொடுத்தால் குணம் ஆகாது.


இது போல் தான் ஜோதிட விதிகள் என்பது அவரவர் ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்கள் அமைந்த டிகிரி நிலை , கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை,வீடு கொடுத்தவன் வலிமை,லக்கன நிலை , அம்சத்தில் கிரக நிலை மற்றும் நடக்கும் தசா புக்தி போன்ற பலவற்றை சார்ந்து தான் ஜோதிட பலன்கள் அமைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


 ஒருவர் ஜாதகத்தில் ஜாதகரின் அப்பா இறப்பதற்கான ஜாதக அமைப்பு பற்றி ஒரு ஜோதிடர் யூடியூப் வீடியோ மூலமாக விளக்கம் தரும் பொழுது அதே போன்ற ஜாதக அமைப்பு உங்கள் மகன் ஜாதகத்தில் இருந்தால் உடனே நீங்கள் தான் இறந்து விடுவோம் என பயப்பட தேவையில்லை..


ஒரே அமைப்பு இருந்தாலும் உங்கள் லக்கனம் வேறு அவரது ஜாதக லக்கனம் வேறாக இருக்கும்.இதே போல ராசி மாறுபடும்.கிரக கலப்பினம் மாறுபடும்.நட்க்கும் தசாபுத்தி மாறுபடும்.எனவே ஜாதக பலன்களும் நிச்சயமாக மாறுபடும்.இதே போல அம்ச நிலை மாறுபட வாய்ப்பு உண்டு.ஆதலால் ஜாதக பலனில் மாற்றம் உண்டாகும் 


நன்றி 


For online appointment 

Cell & WhatsApp & Gpay no 


 097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Wednesday, 7 January 2026

ஜாதகரை பற்றி துல்லியமான பலனை அறிய உதவுவது.

 ஜாதகரை பற்றி துல்லியமான பலனை அறிய உதவுவது.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  

   ஒருவர் ஜாதகத்தில் என்ன தான் கிரகங்கள் பலம் அடைந்து சுப தன்மை உடன் இருந்தாலும் அந்த கிரகங்கள் அதன் தசையில் மட்டும் நல்ல பலனை தரக்கூடிய நிலையில் அமைகிறது.அந்த குறிப்பிட்ட கிரக தசை வராத பொழுது அந்த பலம் மற்றும் சுப தன்மை அடைந்து இருந்தாலும் அதற்கு உரிய பலனை அடைய இயலாது.


அவ்வாறு குறிப்பிட்ட கிரகம் அதன் தசை நடைபெறும் பொழுது நல்ல பலனை தர வேண்டும் எனில் லக்கனம் மற்றும் அதன் அதிபதி பலம் அடைந்து பாவ தன்மையை அடையாமல் இருக்க வேண்டும்.


ஒரு குறிப்பிட்ட கிரக தசை வரவில்லை எனில் அதன் புக்திகளில் நல்ல பலனை தருமா ? தராதா? என ஆய்வு செய்து பார்த்தால் ஒரு தசை நடக்கும் போது தசா நாதன் மட்டும் முதலாளி போல் ஆகும்.புக்தி நாதர்கள் தசா நாதன் இட்ட வேலையை செய்யும் ஏவளாளிகள் தான் புக்தி நாதர்கள் ஆவார்.


 ஒருவர் ஒரு துறையில் உயரிய இடத்தில் இருப்பதற்கும் அல்லது படிப்பதற்கும் லக்கனாதிபதி வலிமை மற்றும் நடக்கும் தசா புக்தி ஆகிய இரண்டையும் வைத்து தீர்மானிக்கப்படுகிறது.


  கிரகங்களின் சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப ஒரு ஜாதகருக்கு கிடைக்கக்கூடிய ஜாதக பலன் அமைகிறது.


 ஒரு கிரகம் நல்ல ஸ்தான வலிமையை பெற்று கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் வீடு கொடுத்த கிரகமும் நல்ல பலம் அடைந்த நிலையில் ஜாதகருக்கு நல்ல பலனை அளிக்கிறது.


ஒரு கிரகம் ஒன்றில் நின்றால் நல்ல பலனை தருமா ? அல்லது பத்தில் நின்றால் நல்ல பலனை தருமா ? என்று இது போன்ற வகையில் ஆய்வு செய்து பார்ப்பதன் மூலம் ஜாதக பலனை துல்லியமாக அறிந்து விட முடியாது.


 ஒரு தசை நடத்தும் கிரகத்தை மட்டும் ஆய்வு செய்து ஒரு ஜாதகத்தில் துல்லியமான பலனை கூறிவிட முடியாது.அந்த தசை நடத்தும் கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் கிரகம் ,தசை நடத்தும் கிரகத்துடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள கூடிய கிரகங்கள், மற்றும் லக்கனாதிபதி உடன் தொடர்பு கொள்ளும் கிரகம் ஆகிய பல கிரக உதவியுடன் மட்டுமே ஒரு தசையில் துல்லியமான பலனை கூறி விட முடிகிறது.


தசை நடத்தும் கிரகத்தின் பலனை இன்னும் துல்லியமாக அளவிட அம்ச பீடத்தில் அந்த தசை நடத்தும் கிரகம் எப்படி அமைந்து உள்ளார் என்பதை பொறுத்தும் ஜாதக பலன் அமைகிறது.


 எனவே எந்த ஒரு ஜோதிட பலனும் தனிப்பட்ட ஒரு அமைப்பை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை.அவை பல்வேறு படி நிலை ஆய்வுக்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே ஜாதகரை பற்றி துல்லியமாக அளவிட முடிகிறது.


 இன்னும் சொல்ல போனால் கூடுதலான துல்லியமான படிநிலையில் ஆய்வு செய்வதற்கு ஒரு கிரகம் எந்த பாகை மற்றும் கலையில் அமர்ந்து உள்ளார் என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.ஒரு குறிப்பிட்ட கிரக இணைவு அல்லது பார்வை எந்த நிலையில் உள்ளது என்பதை முடிவு செய்ய டிகிரி அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்து முடிவு செய்ய வேண்டியதாக உள்ளது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


 097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Monday, 5 January 2026

தொழில் -வெளிநாடு-அரசு வேலை இவற்றில் எது சிறந்தது?

 தொழில் -வெளிநாடு -அரசு வேலை இவற்றில் எது சிறந்தது?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


      ஒருவர் தொழில் செய்யலாமா ? அல்லது வெளிநாடு செல்லலாமா ஃ? அல்லது அரசு வேலை கிடைக்குமா ? அல்லது பிறரிடம் வேலை பார்க்கலாமா;? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிப்பதே இந்த பதிவின் நோக்கமாக கருதப்படுகிறது.


    உங்க ஜாதகத்தில் தொழில் செய்யலாமா ? என்ற அமைப்பை ஆய்வு செய்து பார்க்க அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம், பத்தாமிட அதிபதி  மற்றும் தொழில் காரகன் சூரியன் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


 உங்கள் ஜாதகத்தில் பத்தாம் இடம் அதன் அதிபதி மற்றும் காரகன் சூரியன் மூன்றும் வலிமை பெற்ற‌ நிலையில் ஒருவர் தொழில் தொடங்கலாம் என்று முடிவுக்கு வரலாம்.பிறகு தொழில் தொடங்க மன வலிமைக்கு அதாவது தொழிலில் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் விடாது இழுத்து பிடிப்பதற்கு லக்கனாதிபதி வலிமை மற்றும் சுப தன்மை அவசியம் தேவைப்படுகிறது.


தொழில் தொடங்குவதற்கு தக்க காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். உங்களுடைய ஜாதகத்தில் இலக்கன‌  யோக தசைகள் நடப்பில் உள்ள காலகட்டங்களில் அல்லது எந்த தொழில் செய்கிறோமோ அவை தொடர்புடைய கிரகங்கள் வலிமையாக சுப தன்மையாக இருக்கக்கூடிய காலகட்டங்களில் ஒருவர் வந்து ஒரு தொழிலை புதிதாக தொடங்கலாம்.


எந்த தொழில் என்பதை உங்கள் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்பில் எந்த கிரகம் முதன்மை சுப தன்மையை பெற்று உள்ளதோ அந்த கிரகம் தொடர்பு கொண்ட தொழிலை ஜாதகர் எடுத்து செய்யலாம்.இதற்கு அந்த கிரகம் சுப தன்மையை அடைந்து ராசி மற்றும் லக்கனத்திற்கு இரண்டாம் இடமான தன ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம்  ஆகிய இரண்டு ஸ்தானங்களில் தொடர்பு கொண்ட நிலையில் அந்த கிரகம் தரும் தொழிலை தொடங்கலாம்.


     இவ்வாறு ஒருவர் தொழில் செய்யலாமா ? என்பதை முடிவு செய்து கொண்டு அதன் பிறகு அவர் ஜாதக கட்டப்படி எந்த தொழிலை செய்யலாம் என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு அந்தத் தொழிலை எந்த காலகட்டத்தில் தொடங்கலாம் என்பதையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .


   சில நேரங்களில் அவ யோகத் தசைகள் நடக்கக்கூடிய காலங்களில் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து அந்த காலகட்டங்களில் பெருத்த நஷ்டத்தை ஒருவர் சந்திக்க நேரிடும் என்பதால் தொழில் தொடங்கும் பொழுது நடக்கக்கூடிய தசா புத்திகள் மற்றும் கோச்சாரப் பலன்கள் உங்களுடைய தொழில் விருத்திக்கு முக்கிய மூல காரணமாக அமைகிறது.


கோச்சார அடிப்படையில் ஏழரை சனி அல்லது அஷ்டம சனி நடப்பில் உள்ள காலகட்டங்களில் ஒரு தொழிலை தொடங்கினாலும் அல்லது ஒரு ஜாதகத்தில் ஆறு மற்றும் எட்டுக்குடைய அவ யோகத் தசைகள் நடப்பில் உள்ள காலகட்டங்களில் ஒரு தொழிலை தொடங்கினாலும் அந்தத் தொழில் கடைசியில் நஷ்டத்தில் போய் முடிந்து விடும்.


 எனவே ஒருவர் தொழில் தொடங்குவதற்கு நல்ல யோக தசைகள் அல்லது உகந்த தசை நடப்பில் உள்ள காலகட்டங்களில் ஆரம்பித்தால் பெருத்த லாபத்தை அடையக்கூடிய வாய்ப்பு அமைந்து விடுகிறது .


    சிலர் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைக்கு ஏற்ப சரியான தொழிலை தேர்வு செய்ய தவறும் பட்சத்தில் ஜாதகர் தொழில் மூலமாக பெருத்த நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகிவிடும்.


சில நேரங்களில் ஒருவருக்கு தொழில் ஸ்தானமான பத்தாமிடமும் அதன் அதிபதியும்  மற்றும் தொழில் கார்க் கிரகமான சூரியன் ஆகியவை பலம் இழந்து ஆறாமிட அதிபதி மற்றும் சனி பகவான் வலுப்பெற்ற நிலையில் ஒருவர் பிறரிடம் வேலை பார்க்கும் சூழல் உருவாகிவிடும்.இது போன்ற அமைப்பை பெற்றவர்கள் புதிதாக ஒரு தொழிலை தொடங்க கூடாது.


உங்களோட ஜாதகத்தில் பௌர்ணமி யோக அமைப்பில் லக்கனாதிபதி வலுப்பெற்ற நிலையில் ஒருவர் அரசாங்கத்தின் அல்லது அரசியலில் உயரிய பதவிகளில் அமர்வார்கள். 


உங்களுடைய ஜாதகத்தில் சிம்மமும் அதன் அதிபதியும் ஆன சூரிய பகவான் இயற்கை சுப கிரகமான குரு பகவான் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ஒருவர் உகந்த தசை அமைப்பு வரக்கூடிய காலகட்டங்களில் அரசு வேலை பார்ப்பார்.


ஒரு ஜாதகத்தில் சூரிய பகவான், சந்திரன் பகவான்,புதன் பகவான் மற்றும் குரு பகவான் போன்ற அதிகார கிரகங்கள் வலுப்பெற்று சுபத்தன்மை அடைந்திருக்கக்கூடிய நிலையில் உயரிய பதவிகளில் அதாவது தலைமை பதவியில் அமரக்கூடிய யோகம் உண்டாகும். 


உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் சுபத்துவமாக வலுப்பெற்ற நிலையில் அரசின் கீழ்மட்ட பணியான  வாட்ச்மேன், இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் போன்ற கீழ்மட்ட பணிகளில் அமரக்கூடிய நிலை உருவாகும்.


    எவர் ஒருவர் ஜாதகத்தில் அவரது லக்னத்தில் இருந்து எட்டாம் இடமும் மற்றும் 12ஆம் இடமும் இயற்கை சுப கிரக பார்வை அதை சேர்க்கையை பெற்ற நிலையில் அதிக சுபத்துவமாக இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் கடல் கடந்து வெளிநாடு செல்லக்கூடிய யோகத்தை ஜாதகர்கள் பெறுவார்கள்.

வெளிநாடு செல்லும் யோகம் இருந்தாலும் அவ யோகத்தை தரும் தசையில் வெளிநாடு செல்ல கூடாது.அதே நேரத்தில் யோகத்தை தரக்கூடிய தசாபுத்தி காலங்களில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமைகிறது.


பொதுவாக ஒருவர் வெளிநாடு செல்வது செல்வதற்கு அவரது ஜாதகத்தில் சர ராசிகளில் ( மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் ) அமர்ந்த கிரக தசை  அல்லது நீர் (கடகம் ,விருச்சிகம் மற்றும் மீனம்) அல்லது காற்று ராசிகளில் (மிதுனம், துலாம் மற்றும் கும்பம்)  அமைந்த கிரக தசையில் வெளிநாடு செல்லும் பொழுது மிகுந்த யோகத்தை அடைவீர்கள். ஒருவர் ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து குரு பகவான் உடைய பார்வையை பெற்ற நிலையில் அந்த ராகு தசை நடப்பில் உள்ள காலங்களில் கடல்  கடந்து செல்லும் யோகம் உண்டாகும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


   097151 89647 


For other cell no : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

செவ்வாய் பகவான் தரும் யோக பலன்கள்

 செவ்வாய் பகவான் தரும் யோக பலன்கள்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர்  ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பூமி காரகன் என்று அழைக்கப்படுகிறது.ஒருவர் ஜாதகப்படி அதிக இடங்களை வாங்கி சேர்க்கும் யோகம் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள ஜாதக கட்டத்தில் செவ்வாய் பகவானை ஆராய்ந்து தான் தெரிந்து கொள்ள இயலும்.


செவ்வாய் பகவான் உங்கள் ஜாதகத்தில் உச்சம்,ஆட்சி  மற்றும் மூலதரிகோணம் போன்ற வகைகளில் வலிமை பெற்று இயற்கை சுப கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ஒருவர் அதற்குரிய யோக தசைகள் நடப்பில்  இருக்கும் பொழுது அதிக பூமி வாங்கி சேர்க்கக்கூடிய யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.


  ஜாதகருடைய உடன் பிறந்தோரை பற்றி அறிந்து கொள்ள உதவக்கூடிய கிரகம் செவ்வாய் பகவான் ஆவார் . எனவே தான் செவ்வாய் பகவானை

" சகோதர காரகன்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு காரக கிரகமாக செவ்வாய் பகவான் விளக்குகிறார்.


  "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்பார்கள்.  ஒருவர்  ஜாதகத்தில் செவ்வாய் பகவான்  சனி மற்றும் ராகு போன்ற பாவ கிரக சேர்க்கை அல்லது பார்வையை பெறாத நிலையில் இயற்கை சுப கிரகங்கள் உடைய  தொடர்பு ஏற்பட்டு இருப்பின் அந்த ஜாதகர் உடன் பிறந்தோர் அதாவது சகோதரர்களின்  ஆதரவை கடைசிவரை பெறுவர் .சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.


செவ்வாய் பகவான் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்ற நிலையில்  லக்னத்தோடு தொடர்பு கொள்ள கூடிய நிலையில் ஜாதகர்  முரட்டுத்தனம் உடையவராக இருப்பார்.


    சிலர்  ஒருவரை வெட்டுவதற்கு முன்பாக  யோசிப்பார்கள் ஆனால் செவ்வாய் பகவானை வலிமையாக பெற்றவர்கள் வெட்டிய பிறகு யோசிப்பார்கள் ..அந்த அளவுக்கு ரத்தத்தை கண்டு பயப்படாத தன்மை மற்றும்  குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.


    செவ்வாய் பகவான் சனி, ராகு போன்ற பாவ கிரக தொடர்பினை  பெறும் பொழுது அவர் அடாவடித்தனம் உடையவர்களாகவும்,  ரவுடி குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.பொது இடங்களில்  பல நபரை வெட்டி வீழ்த்தி, குண்டு  வைத்து தகர்க்கும்  ரௌடிகளாக அல்லது தீவிரவாதிகளாக இருப்பார்கள்.


அதே நேரத்தில் செவ்வாய் பகவான் அதிக சுப தன்மையுடன் ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில்  டாக்டர் படிப்பு படித்து பல நபரை அறுவை சிகிச்சை செய்து ரத்தம் பார்த்து அதற்காக அரசிடம் சம்பளம் வாங்கி மருத்துவம் சேவை செய்வார்கள்.


   செவ்வாய் பகவானின் சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப எம்பிபிஎஸ் அதை தொடர்ந்து சித்தா,, ஹோமியோபதி,, கால்நடை மருத்துவர் மற்றும் காது , மூக்கு, தொண்டை நிபுணர் ஆகும் யோகம் உண்டாகும் சுபத்துவ  படிநிலைக்கு ஏற்ப பதவி நிலை அமைந்து இருக்கும்.சுபத்துவ படிநிலை குறையும் போது இரத்தம் பரிசோதனை நிலையம் வைத்து நடத்துபவராக இருப்பார். விளையாட்டு வீரர்ராக கசாப்பு கடையில் கறி வெட்டும் நபராக திகழ்வார்.


செவ்வாய் பகவான் அதிக சுபத்துவ நிலையில் லக்கினத்திற்கு பத்தாம் இடத்தில் திக் பலம் பெற்ற நிலையில் போலிஸ், ராணுவம் போன்ற துறைகளில்  சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும்.இவர்கள் ரவுடிகளை அல்லது தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி ரத்தம் பார்த்து இதற்காக பதக்கம் மற்றும் பட்டங்கள் பெற்று இதற்காக பேரும் புகழும் அடையக்கூடிய யோகத்தை செவ்வாய் பகவான் தருவார்.


ஒருவரது இரத்த வகைக்கும் (blood group)  செவ்வாய் பகவானுக்கும் தொடர்பு உண்டு.எனவே செவ்வாய் பகவான் இரத்த காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அடிப்படையில் தான் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்ற ஒரு அமைப்பு பேசப்பட்டு வருகிறது.


ஒருவர் ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசி அல்லது சுக்கிரன் இருக்கும் இடம் இரண்டு நான்கு ஏழு எட்டு மற்றும்  பன்னிரண்டு போன்ற இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் அவை செவ்வாய் தோஷம் என்று அழைக்கப்படுகிறது..


என்னைப் பொருத்தவரை செவ்வாய் தோஷம் என்ற ஒன்றிற்கு பயப்படத் தேவையில்லை செவ்வாய் தோஷம் மனித உயிர்களை பழிவாங்கி விடுவதில்லை. 


ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் பகவான் லக்னம் என்ற ஒன்றாம் இடம் குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்ற எட்டாம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தாலும் அல்லது பார்வை செய்தாலோ அவை திருமண தடையை சாதகருக்கு கொடுக்கிறது இவை தவிர பெரிய பாதிப்பை ஜாதகருக்கு கொடுத்து விடுவதில்லை.


இதில் சில விதிவிலக்குகள் இருப்பதாக மூல நூல்களில் கூறப்பட்டுள்ளது செவ்வாய் உச்சம்,ஆட்சி, நீசம் பெற்றிருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறப்படுகிறது செவ்வாய் பகவனை வேறு கிரக பார்வை இருந்தாலும் தோஷ நிவர்த்தி அடைகிறது.


செவ்வாய் பகவான் காமக்கார கிரகம் ஆகும். செவ்வாயுடன் சனி, ராகு போன்ற கிரகங்கள் பார்வை சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அவர் காம மிகுதியால் மனைவி அல்லாத மற்றொருவர் உடன் உறவு கொள்ளக்கூடிய நிலை உருவாகும் அதிக காம எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். சுப கிரக பார்வை பெறும் பொழுது அதில் விதிவிலக்குகளும் உண்டு.


     ஒருவருடைய  வீர, தீர ,பராக்கிரம செயல்களுக்கு செவ்வாய் பகவானுடைய வலிமை மிகவும் தேவைப்படுகிறது. செவ்வாய் பகவானை வலிமையாக பெற்ற ஜாதகம் முரட்டுத்தனம் கொண்டவராக இருப்பார்கள். விளையாட்டு வீரர்களுக்கு செவ்வாய் பகவானுடைய வலிமை மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.


 செவ்வாய் பகவான் லக்னத்தில் அல்லது லக்கினத்தை பார்த்தாலும்   முரட்டுத்தனம் படைத்தவர்களாக இருப்பார்கள் .இரண்டாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது  கோபம் மற்றும் அனுசரித்து போகும் தன்மை அறவே அற்றவராக இருப்பார்கள்.


செவ்வாய் பகவான் உடன் சூரியன், சந்திரன் மற்றும் குருபகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது செவ்வாய் பகவான் அதிக சுப தன்மையை அடைந்து சாதகருக்கு நல்ல பலனை அள்ளி கொடுப்பார் .அதே நேரத்தில் சனி ,ராகு போன்ற  இயற்கை பாவ கிரகங்களுடைய தொடர்பை பெறும் பொழுது இந்த செவ்வாய் தசை கடுமையான கஷ்டங்களை நஷ்டங்களை ஜாதகருக்கு கொடுப்பார்.


 செவ்வாய் பகவான் நிழல் கிரகமான கேது பகவான் உடன் இணைந்த நிலையில் மறைமுக வலுவான சூட்சும வலிமையை பெறுகிறது.கேது பகவான் உடன் இணைந்த செவ்வாய் பகவான் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


  பொதுவாக பாவ கிரகங்கள் நேர் வலு பெறாமல் மறைமுக வலிமை பெற்று இருந்தால் அவை ஜாதகருக்கு நல்ல பலனை தருகிறது. 


 உதாரணமாக துலாம் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் ஸ்தான வலிமை இழந்து மறைமுகமாக திக் பலம் பெற்று மறைமுக வலு பெற்ற செவ்வாய் பகவான் ஜாதகருக்கு நல்ல பலனை தருகிறது.


 அதேநேரத்தில் கன்னி லக்கினத்திற்கு செவ்வாய் பகவான் மூன்று மற்றும் எட்டுக்கு உடையவர் மேலும் லக்கன அவ யோகர் ஆகும் . அதாவது கன்னி லக்கினத்திற்கு வரக்கூடாத  தசை செவ்வாய் தசை ஆகும்.இவர் ஐந்தாம் இடமான மகரத்தில் உச்சம் பெற்று நேர்வலு பெற்று இருப்பது சாதகருக்கு நல்ல பலனை தருவதில்லை.


செவ்வாய் பகவான் தரும் பாதிப்பிலிருந்து விலக செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை வணங்கி வழிபட உத்தமம். துவரம் பருப்பு ,சிவப்பு சேலை ரவிக்கை மற்றும் மஞ்சள் கயிறு இவற்றை சுமங்கலிக்கு தானம் செய்யலாம். சங்கடகர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது. மாயவரம் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தாலும் பழனி மலைக்குச் சென்று முருகனை வழிபட்டாலும் செவ்வாயால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விலகலாம்.


 


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.). 



அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ராகு பகவான் தரும் பலன்கள்

 ராகு பகவான் தரும் பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ஒருவர் ஜாதகத்தில் கரும்பாம்பு என்று அழைக்கக்கூடிய ராகு பகவான் பாம்பு உடலையும் மற்றும் மனித தலையும் கொண்ட நிழல் கிரகம் ஆகும்.நவ கிரகங்களில் இவை பருப்பொருள் இல்லாத கிரகம் ஆகும்.


ராகு பகவான் பாவ கிரக வரிசையில் மிக முக்கியமான கிரகம் ஆகும்.இவை பருப்பொருள் இல்லாத கிரகம் ஆகும்.


  ராகு பகவான் ஆனவர் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை பாவ தன்மையை அடைய வைப்பதில் முதன்மையானது ஆகும்.


  ராகு பகவான் உடன் இயற்கை சுப கிரகங்கள் இணையும் போது அந்த கிரகமானது பாவ தன்மையை அடைந்து அதன் ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை மட்டுப்படுத்தி விடுகிறது.அதே நேரத்தில் ராகு பகவான் சுப தன்மையை தன்னுடன் இணைந்த சுப கிரகத்தால் சுப தன்மையை அடைந்து விடுகிறார்.


  அதே நேரத்தில் ராகு பகவான் ஆனவர் இயற்கை பாவ கிரகங்கள் உடன் இணையும் போது தான் இன்னும் கூடுதலான பாவ தன்மையை அடைந்து அந்த கிரகங்கள் இருக்கக்கூடிய இடத்தையும் கூடுதல் பாவ தன்மையை அடைய வைத்து விடுகிறார்.தன்னுடன் இணைந்த கிரகமும் கூடுதலான பாவ தன்மையை அடைந்து விடுகிறது.


 எந்த அளவுக்கு தன்னுடன் இணைந்த கிரகத்தால் சுப அல்லது பாவ தன்மையை அடைகிறார் என்பதை டிகிரி அடிப்படையில் சதவீத அளவு கணக்கிடப்படுகிறது.


தன்னுடன் இணைந்த கிரகமானது எட்டு பாகைக்குள் இருந்தால் நூறு சதவீதம் பாதிப்பை அதாவது சுப அல்லது பாவ தன்மையை அடைகிறார்.பதின்மூன்று பாகை வித்தியாசத்தில் ஐம்பது சதவீதம் சுப/பாவ தன்மையை அடைகிறது . இருபத்தி இரண்டு பாகை வித்தியாசத்தில் ராகு பகவான் ஆனவர் தன்னுடன் இணைந்த கிரகத்தை முழுமையான பாதிப்புக்கு உள்ளாக்குவதில்லை.இரண்டு கிரகங்களும் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பாதிப்பு அடைய செய்வதில்லை.


ராகு பகவான் ஆனவர் திருமண ஸ்தானமான லக்கனம் என்னும் ஒன்றாம் இடம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய நான்கு இடங்களில் ராகு பகவான் இடம்பெற்றால் சர்ப்ப தோஷம் என்னும் நாக் தோஷத்தை தந்து திருமண தடையை உருவாக்குகிறார்.


 இதே போல அந்த (1,2,7,8) அதிபதிகளுடன் சேர்ந்து நின்றாலும் திருமண தடையை உண்டாக்குகிறார்.


 களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகிய இரு கிரகங்கள் உடன் இணைந்த நிலையில் தாம்பத்திய சுகத்தை அனுபவிப்பதில் தடையை உருக்குகிறார்.குரு பகவான் உடன் இணைந்த நிலையில் புத்திர தோஷத்தை உண்டாக்குகிறார்.குருவின் இயல்பான பலனில் மாற்றத்தை அடைய வைக்கிறார்.


குரு பகவான் உடன் இணைந்த ராகு பகவான் ஆனவர் 'குரு சண்டாள யோகத்தை" தருகிறார்.குருவின் இயல்பான பலனில் மாற்றத்தை தருகிறார். பணம் ,பதவி, பட்டம், புகழ், கல்வி ,ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருவதில் தாமதப்படுத்துகிறார்.


சுக்கிரன் உடன் ராகு பகவான் இணைந்த நிலையில் திருமணத்தடையை தருவது மட்டுமல்லாமல் தாம்பத்திய சுகம் அடைவதில் பிரச்சனை உருவாக்குவார். வண்டி, வாகன யோகம், வீடு வாசல் மனை அமைப்பது தாமதப்படுத்தவும் செய்கிறார்.


புதன் பகவானுடன் ராகு இணையும் போது தனது திறமையை தவறான வழியில் பயன்படுத்தி பிரச்சனையில் மாட்டிக் கொள்ள இயலும். தனது கணித மற்றும் கணிப்பொறி அறிவை தவறான வழியில் பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்ள இயலும். 


செவ்வாய் பகவான் ராகு பகவான் இணையும்போது கடுமையான பாவ தன்மையை அடைந்து விடுகிறது. டாக்டர் ஆகும் கனவு பாதிக்கப்படும். உடன்பிறந்த சகோதரர்கள் பிரச்சனைகள் உருவாகும் வீர தன்மை பாதிக்கப்படுகிறது.


ராகு பகவான் ஒளி கிரகமான சூரியன் உடன் இணைவு தந்தை வழி உறவு நிலை பாதிப்பு அரசியல் ஈடுபாடு அற்ற நிலை,அரசு வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.இதில் பலனில் மாறுபட ஒன்பதாம் இடம் அதன் அதிபதியை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


ராகு பகவான் மற்றும் ஒரு ஒளி கிரகமான சந்திரன் உடன் சேர்க்கை ஜாதகரின் மனநிலை பாதிப்பை தருகிறார்.தாய் வழி உறவுகளில் பாதிப்பை தருகிறார்.தேய்பிறை சந்திரன் ஆக இருந்து ராகு பகவான் இணைந்த நிலையில் மன வளர்ச்சி குன்றிய நிலை உண்டாகும்.


ராகு பகவான் ஆனவர் இருள் கிரகமான சனி உடன் இணையும் போது கடுமையான பாதிப்பை சாதகருக்கு கொடுப்பார்.இவ்விரு கிரகங்கள் இணைந்த ஸ்தானம் கடுமையான பாதிப்பை அடைந்து விடுகிறது.இந்த நிலையில் ராகு அல்லது சனி தசை கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு கொடுப்பார்.


ராகு பகவான் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் நிற்பின் கடுமையான புத்திர தோஷத்தை தருகிறார்.


ராகு பகவான் தரும் தோஷங்களை போக்க திருநாகேஸ்வரம், பேரையூர் மற்றும் ஆந்திர சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று அங்கு வெள்ளியில் நாகபடம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay no: 097151 89647 


My another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M A BEd

கேது பகவான் தரும் சிறப்பு பலன்கள்

 கேது பகவான் தரும் சிறப்பு பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் கேது பகவானை ஞான காரகன் என்று அழைக்கிறோம்.செம் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. .பாம்பு தலையும்,மனித உடலும் கொண்ட ஒரு கிரகம் கேது பகவான் ஆகும்.


 அஸ்வினி,மகம் மற்றும் மூலம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக கேது பகவான் திகழ்கிறது.கேது பகவான் தசை காலம் ஏழு ஆண்டுகள் ஆகும்.


கேது பகவான் சிம்மம் , விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய மூன்று வீடுகளில் கேது பகவான் மிகுந்த யோகத்தை தரும் பலன்களை அள்ளித் தருகிறது.‍‍


கேது பகவான் பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் சனி மற்றும் செவ்வாய் உடன் தனித்தனியாக இணையும் போது சூட்சும வலுவை ஜாதகருக்கு கொடுக்கிறது.


கேது பகவான் உடன் இணைந்த குரு பகவான் கேள யோகம் எனும் கோடீஸ்வர யோகத்தை அள்ளித் தருகிறது.


    கேது பகவான் உடன் குரு மற்றும் சனி பகவான் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு ஆன்மீக வழியில் ஈடுபாடு அதிகமாக ஈடுபாடு அதிகமாக இருக்கும்.


கேது பகவான் சனி பகவான் உடன் இணைந்து 5,9 மற்றும் 12 ஆம் இடங்களில் நின்று குரு பகவான் பார்வையினை பெற்ற நிலையில் ஜாதகருக்கு சித்தர்கள் வழி பாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.


கேது பகவான் அதிக சுபத்துவமாக தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டால் குறி சொல்லும் பூசாரி ஆக இருப்பார்.கோயில் ஸ்தலங்களில் கடை வைத்து நடத்துபவராகவும், கோவில் வழிபாட்டு பொருட்களை விற்பனை செய்பவராக இருப்பார்.


 கேது பகவான் தன்னுடன் இணைந்த கிரகங்களின் பலன்களை அதிகரித்து நல்ல பலனை செய்ய வைப்பார்.ராகு பகவான் அளவிற்கு கேது பகவான் பாவ தன்மையை தரும் கிரகமாக செயல்படவில்லை.


 கேது பகவான் இயற்கை சுப மற்றும் பாவ கிரகங்கள் ஆகிய இரு வகையான கிரகங்கள் உடன் இணைந்த நிலையில் நல்ல பலனையே ஜாதகருக்கு அள்ளிக் கொடுப்பார்.


 கேது பகவான் திருமண ஸ்தானமான லக்கனம் என்று அழைக்கக்கூடிய ஒன்றாம் இடம், குடும்ப ஸாதானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இடங்களில் நின்றால் நாக் தோஷம் என்னும் களத்திர தோஷத்தை தந்து திருமண தடையை உண்டு பண்ணுகிறார்.


புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் புத்திர தோஷத்தை தருகிறார்.


கேது பகவானால் உண்டாகும் தோஷத்தை போக்க கீழப்பெரும்பள்ளம் சென்று எம கண்டம் நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று வெள்ளியில் நாகபடம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட கேது பகவான் தரும் தோஷம் நீங்கி நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும் தன்மையை அடைகிறது.


 கேது பகவான் ஒரு நிழல் கிரகம் ஆகும்.பருப்பொருள் இல்லாத நிழல் கிரகம் ஆகும்.எனவே இவற்றிற்கு ஸ்தான வலிமை கிடையாது.பார்வை கிடையாது.சொந்த வீடு கிடையாது.திக் பலம் இல்லை.வாரத்தின் ஏழு நாட்களில் இவற்றிற்கு இடம் கிடையாது.


 எல்லா கிரகங்களும் முன்னோக்கி நகர இவை பின்னோக்கி நகரும் தன்மை உடையதால் வக்கிரம் கிடையாது.அஸ்தமன தோஷம் கிடையாது.


கேது பகவான் சூரியன் உடன் இணைய ஆன்மீக உலகில் தலைவராக ஆகும் தன்மை உண்டு.குரு பகவான் உடன் இணைய கேள யோகம் எனும் கோடீஸ்வர யோகம்,கேது சுக்கிரன் உடைய இல்லற வாழ்வில் சிறக்க உதவுகிறது.புதன் பகவான் உடன் கேது இணைய வித்தையில் சாதுர்யம், சந்திரன் உடன் கேது இணைய முன்னாலே யூகித்து அறியும் சக்தி, செவ்வாய் உடன் கேது இணைவு வீரத்தை சரியான வழியில் பயன்படுத்தும் தன்மை போன்றவை உண்டாகும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


For another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.