Friday, 3 March 2017

கிரகங்களின் பலத்தால் சாதகர் பெறும் தொழில் நிலைகள்

"   

 "கிரகங்களின் பலத்தால் சாதகர் பெறும் தொழில் நிலைகள் "



                                            கிரகங்கள் படுத்தும் பாடு - ( 47 )

              எல்லாம் வல்ல ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியோடு கிரகங்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் மகத்தான மாற்றாங்களை தொடராக எளிமையாக எழுதி வருகிறேன்.

               ஒரு மனிதனுடைய சாதகத்தில் சூரியன்,புதன்,சுக்கிரன் இம்மூன்று கிரகங்களும் சேர்ந்து ஒரு ஸ்தானத்தில் நின்று (மறைவு ஸ்தானமாக இல்லாமல்) குரு பகவானின் பார்வை இந்த மூக்கூட்டு கிரகங்களுக்கு கிடைக்குமானால் அந்த சாதகரானவர் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவான் அதிலும் குறிப்பாக விளையாட்டு துறையில் அதிக ஆர்வத்தையும் பல வெற்றிகளையும் தர வைக்கும்.

                               இதேபோல ஒரு மனிதனுக்கு தனது சாதகத்தில் குரு பகவான் உச்சம் பெற்று சுக்கிரன் பகவான் மற்றும் புதன் பகவான் ஆட்சி பெற்று இந்த மூன்று கிரகங்களும் பலம்பெற்று நிற்கும்போது அவருக்கு அக்கிரகங்களானது சக்கரவர்த்தி யோகத்தை தந்து நாடாள வைக்கும்.

                             ஒரு மனிதனது சாதகத்தில் வேதத்தின் நாயகன் குரு பகவான்,கணிதவல்லோன் புதன் பகவான் மற்றும் மனதுக்காரகன் சந்திர பகவான் பலம்பெற்று ஒருவருக்கொருவர் தொடர்பு பெற்று இருப்பின் சாதகரை போதகர் என அழைக்கப்படும் ஆசிரியர்,பேராசியர்,ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் தலைசிறந்த சோதிடராகவோ மாற்றி புகழ் பெற வைக்கும்.

                          ஒருவரது சாதகத்தில் கலையின் அதிபதி சுக்கிர பகவான்,மனதுக்காரன் சந்திர பகவான் மற்றும் நுண்ணறிவு வித்தகன் புதன் பகவான் பலம் பெற்று ஓருவருக்கு ஒருவர் சுப தொடர்பு பெற சினிமா துறையில் நடனம்,இசை ,பாட்டு ,கதாசிரியர் மற்றும் நடிப்பு போன்மவற்றில் புகழடைய செய்யும்.

                              ஒருவரது சாதகத்தில் வீரத்தின் தலைவன்  செவ்வாய் பகவான் ,ராகு பகவான் மற்றும் சனி பகவான் பலம்பெற்று ஒருவருக்கொருவர் பலம்பெற்று சம்பந்தப்பெற்றால் முரட்டுதனமான போலிஸ்,ராணுவ வீரராகவோ அல்லது கிரிமினல் வழக்கறிகராகவோ மாற்றிவிடுகிறது.

                            அதேநேரத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று குரு பகவான் மற்றும் புதன் பகவான் போன்ற சுபகிரகங்களின் தொடர்பு பெறும்போது தலைசிறந்த மருத்துவ வல்லுனராக மாற்றிவிடுகிறது.இதனுடன் ராகு பகவான் சாரம் பெறின் அறுவை சிகிச்சை வல்லுணராக மாற்றி புகழடைய செய்கிறது.

                         ஒருவரது சாதகத்தில்    அந்தனன் குருவும்,ஞானகாரகன் கேது பகவானும் மற்றும்  கரமக்காரகன் சனி பகவான்  இம்மூவரும் பலம்பெற்று தொடர்புகொள்ளும்போது ஆன்மீகத்தில் உயரிய இடத்தில் கொண்டுபோய் சேர்க்கிறது.

                     ஒருவருடைய சாதகத்தில் "கேளப்பா ஈரைந்தில் முக்கோள் நிற்கில் கெதியுள்ள சன்னியாச யோகம் யோகம் '' என புலிப்பானி சித்தர் கூறுகிறார்.

குறிப்பு ;(-மேற்கண்ட ஒவ்வொறு அமைப்பும் லக்கனம் மற்றும் ராசிக்கு பத்தாம் இடத்தோடு சம்பந்தம் பெற்றிருத்தல் வேண்டும்.)


                                                                 அன்புடன்
                                   P.RAVICHANDRAN M.Sc,MA,BEd,
                               ASTRO ONLINE CONSULTER
                      KARAMBAKKUDI,PUDUKKOTTAI (DISTRICT),TAMILNADU                                                     
                                                                                              
                                                                                       செல் ; 740 257 08 99
                                                                                                          9715189647
                                       வாட்ஸ் அப் எண்   
                                                        97 151 89 647

(தங்களது சாதகங்களுக்கான சோதிட பலனை போன் வழியாக பெறலாம் .கட்டணம் உண்டு.பிறந்த தேதி,நேரம் ,இடம் இதனை எனது வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் மூலமாக தெரிவித்து கட்டணம் செலுத்தும் முறையை தெரிந்து கொள்ளுங்கள் )


My Email
masterastroravi@gmail.com

My website.Click hear
AstroRavichandransevvai.blogspot.com

@@@@@@@@@@@@@@@@@@@@@

No comments: