சொகுசு வாழ்க்கையை தருவதில் சுக்கிரனே காரகர் .
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் சொகுசான வாழ்க்கையை
அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் கனவாக இருக்கும்.
சொகுசான வாழ்வு என்பது கார் ,பங்களா ,ஆடை, ஆபரணங்கள் மற்றும் சொத்துக்கள் நிறைந்த வாழ்க்கையை பெறுவது ஆகும்.இவை மட்டும் அல்லாமல் இன்ப களியாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்ந்து இருப்பது ஆகும்.
சாதக கட்டத்தில் சொகுசான வாழ்க்கையை தருவதில் சுக்கிரன் பகவானே காரகர் ஆவார்.ஏனெனில் சுக்கிரன்தான் மேற்கூறிய அனைத்திற்கும் முக்கிய காரகன் ஆவார்.
சுக்கிர பகவானே வண்டி வாகனத்திற்கு காரகர் ஆவார் ஒரு ஜாதகத்தில் சுக்கிர பகவான் பலம் பெற அவருக்கு வண்டி வாகன யோகம் உண்டு(நான்காம் வீட்டையும் கவனிக்கப்பட வேண்டும்). ஆதலால் ஆடம்பரமான கார்களில் பவனிவர அவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் தரக்கூடிய அருளாசியை காரணமாகும்.
இதேபோல ஒருவர் ஆடம்பரமான பங்களா போன்ற வீடுகளை அமைப்பதற்கு அவரது ஜாதகத்தில் சுக்கிரபகவான் உடைய நிலையைப் பொருத்து அமைகிறது. சுக்கிரனை பலமாக பெற்றவர்கள் ஆடம்பரமான பங்களாக்களில் மட்டுமில்லாமல் ஆடம்பரப் பொருட்களை பயன்படுத்தும் யோகமும் அவர்களுக்கு அமையும்.
சுக்கிரன் கலைரசனைகளின் அதிபதி என்பதால் வீடுகளை சிற்பங்கள், ஓவியங்கள், கம்பளங்கள் மற்றும் திரைச்சீலைகள் போன்றவற்றால் அலங்காரம் செய்து மற்றவர் பார்த்து வியக்கும் வண்ணம் கலை ரசனையுடன் ரசித்து கட்டக்கூடிய தன்மை அவருக்கு இயல்பாக அமைகிறது.
ஒருவருக்கு கிடைக்கக்கூடிய ஆடை, அணிகலன்களுக்கு காரகன் சுக்கிர பகவானாவார். ஆதலால் பாதிக்கப்படாத பலமடைந்த சுக்கிர பகவான் விலை உயர்ந்த பிளாட்டினம், வைரம் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து மகிழும் யோகத்தை சாதகருக்கு தருபவர் சுக்கிர பகவானாவார்.
இயல் ,இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழுக்கும் காரகராக விளங்குவது சுக்கிர பகவானாவார் .ஒரு ஜாதகத்தில் பலமடைந்த சுக்கிரனை பெற்றவர்கள் முத்தமிழ் மீதும் தனியாக தாகம் உடையவர்களாக இருப்பார்கள் .அதனால் சினிமா, பத்திரிக்கை மற்றும் இலக்கிய உலகில் புகழ்பெற்றவராக திகழவும் அல்லது அந்த துறை மீது மிகுந்த ஈடுபாடு கொள்ளவும் சுக்கிரனே காரகன் ஆகும்.
எந்த ஒரு பொருளிலும் புதிய மாடல்கள் வந்தால் அதை உடனே வாங்குவதில் அதிக ஈடுபாடு கொண்ட மனநிலையினை உடையவர்களுக்கும் சுக்ரனே காரகர் ஆவார்.
தன்னை மற்றவர்களிடம் அழகாக காட்டிக் கொள்வதற்காக செய்யப்படும் சிகை அலங்காரம், முக அலங்காரம் மற்றும் உடை அலங்காரம் அனைத்திற்கும் சுக்கிர பகவானே காரகர் ஆவார்.
ஒரு சராசரி மனிதருக்கு போதுமான அளவிற்கு அவரது தேவைகள் நிறைவேறி இருந்தாலும் மேலும் ,மேலும் புத்தம்புது விஷயங்களிலும், பொருட்களை வாங்கி சேர்ப்பதிலும் அதிக ஈடுபாடு காட்டும் மனநிலைக்கு சுக்கிர பகவானே காரணமாகும்.
பைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற நவநாகரீக உணவகங்களில் இரவு தேனி விருந்துகளில் கலந்து கொள்ளும் மனநிலை உடையவர்களுக்கும் சுக்கிர பகவானே காரகர் ஆவார்.
மது, மாது மற்றும் சூது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு இன்ப சுகங்களை அனுபவித்து இறுதியில் நோய்வாய்ப்படும் நிலைக்கும் சுக்கிர பகவான் காரகன் ஆவார்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் & ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி. புதுக்கோட்டை மாவட்டம்.
email
masterastroravi@gmail.com
my blog.com
astroravichandransevvai.blogspot
astroravichandran.blogspot.com
..............................................................................................................................
No comments:
Post a Comment