Monday, 29 July 2019

உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி வாழ்க்கை துணையாக அமையும்?

உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி வாழ்க்கை துணையாக அமையும்?


                 

         செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!

                                           இன்றைய பெரும்பாலான இளைஞர்கள்/இளைஞிகளின் கனவுகளில் வந்து அலக்கழிப்பது அவர்களுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய வாழ்க்கைத்துணை பற்றிய கற்பனை உணர்வே காரணமாகும்.

                                            இன்றைக்கு நான்கு இளைஞர்கள் ஓரிடத்தில் கூடி கிண்டலடிப்பதும் ,
கசு -குசு என்று பேசி சிரிப்பதும் வருங்கால வாழ்க்கைத் துணையைப் பற்றிய இனம்புரியாத கற்பனை உணர்வே காரணமாகும்.

                                  இன்றைக்கு இளைஞர்கள் திருமண பந்தம் என்ற வட்டத்திற்குள் எப்பொழுது நுழைவது என்ற கற்பனை உணர்வில் காலம் தள்ளுகிறார்கள். ஆனால் திருமண பந்தத்தில் ஈடுபட்டவர்களுடைய மனநிலையோ திருமண பந்தம் என்ற வட்டத்திற்குள் இருந்து வெளியில் வரவே ஆசைப்படுகிறார்கள்.

                                       ஒரு நவநாகரிக இளைஞன் கிரேக்கத் தத்துவ மேதை சாக்ரடீஸிடம் சென்று" ஒரு இளைஞன் திருமணம் செய்து கொள்வது நல்லதா? செய்துக்கொள்ளாமல் இருப்பது நல்லதா? என்று கேள்வி கேட்டார் "அதற்கு அவர் புத்திசாலித்தனமாக   "இந்த இரண்டில் எந்த ஒன்றை முடிவாக எடுத்தாலும் பின்னால் வருத்தப்படுவாய் தம்பி" என்றாராம்.

                                        ஒரு ஜாதகத்தில் தனக்கு வரக்கூடிய மனைவியைப் பற்றி அறிய அவர்களது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் இடத்தினையும் அதன் அதிபதியையும் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரனும் கவனிக்கப்பட வேண்டும்.

                                       ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் எந்தப் பாவ கிரகங்கள் தொடர்பு பெறாமல் , ஏழாம் அதிபதி ஆனது சுப கிரகமாக இருந்து கேந்திர, கோணங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்ற அமைப்பிலிருந்து இயற்கை சுபக்கிரகங்களான குருவால் பார்க்கப்பட்டால் அவருக்கு யோகமான மனைவி வாழ்க்கையில் அமையும் .

                   ''   வீட்டில் அந்த பெண்  கால் எடுத்து வைத்த நேரம்  அவரது புகழ், அந்தஸ்து, செல்வம் எல்லாமே கிடுகிடுவென்று உயர்ந்துச்சு  ஐயா" என ஊர் போற்றும்படியான மனைவி அமைவாள்.

                        ஏழாம் அதிபதி சர ராசியாக  இருந்தால் வெளியூர் பெண் வாழ்க்கை துணையாக அமைவாள். ஸ்திர ராசியாக இருந்தால் "நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்" என்ற வகையில் உள்ளூரிலேயே மனைவி அமைவாள். உபய ராசியாக  இருந்தால் உள்ளூரில் கொஞ்ச காலம் வசித்து  பிறகு வெளியூர் சென்று வாழும் குடும்பத்து மனைவி அமையும்.

                              ஏழாம் அதிபதி சர ராசியில் (மேஷம் கடகம் துலாம் மற்றும் மகரம்)  அல்லது ஜல ராசியில் (கடகம் விருச்சிகம் மீனம்) அமர்ந்து ராகு சாரம் பெற்றோ
 அல்லது ராகுவுடன் தொடர்பு பெற்றிருந்தால் வரக்கூடிய மனைவி வெளிநாட்டு வாசம் புரியும்பெண்  வாழ்க்கை துணையாக அமைவாள்.

                                ஏழாம் இடத்திலோ அல்லது ஏழாம் அதிபதி  சந்திரனாக இருந்தால் அழகு வதனம் படைத்த மனைவி வாழ்க்கை துணையாக அமைவார்.

                               ஏழாம் அதிபதி சூரியன், புதன் உடன் தொடர்புகொள்ள அரசாங்கத்தில் வேலை பார்க்கும் பெண் வாழ்க்கை துணையாக அமையும்.

                                          ஏழாமிடத்தில் இயற்கை சுப கிரகமான குரு சுக்கிரன், பாவியுடன் சேராத புதன், மற்றும் வளர்பிறை சந்திரன் இருந்து இதை இலக்கனத்திற்கு சுப ஆதிபத்யம் பெற்று இருக்க வேண்டும்.பாவர்கள் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் .ஏழாம் அதிபதி கேந்திர கோணங்களில் பலம் பெற்று சுபர்களின் சம்பந்தம் பெற்று இருக்க வேண்டும். இப்படி அமைந்த கணவனுக்கு கல்வி மற்றும் செல்வம் மிகுந்த மனைவி வாழ்க்கை            துணையாக அமைவார்.

                                           ஏழாம் அதிபதி பன்னிரெண்டாம் இடத்திலிருந்து சுபகிரக பார்வை படும்போது வெளிநாட்டு வாசம் செய்யும் மனைவி வாழ்க்கை துணையாக அமையும்  .

                                     ஏழாம் அதிபதி ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதியுடன் தொடர்பு கொள்ள காதலித்த பெண்ணை மனைவியாக அமைவாள்.

                                  களத்திரகாரகன் ஏழாமதிபதி அல்லது சுக்கிரனுடன் செவ்வாய், சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் தொடர்பு கொள்ள கலப்பு இன் பெண் வாழ்க்கைத் துணையாக அமையும்.

                                     ஏழாம் அதிபதி ஒருவருக்கு சுக்கிரன் ஆக அமையும் பட்சத்தில் அல்லது சுக்கிரன் சாரம் பெறும் பட்சத்தில் கலையார்வம்  உள்ள பெண் வாழ்க்கை துணையாக அமையும்.

                                         ஏழாம் அதிபதி புதன் அல்லது ஏழாம் அதிபதி புதனின் சாரம் பெற்று குரு பார்வை பெற்ற அமைப்பு பெற்ற பெண் மேடையேறி பேசக்கூடிய அல்லது எழுத்தார்வம் கொண்ட பெண் வாழ்க்கை துணையாக அமையும்.

                               ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி பலம் இழந்து ,ஏழாமிடத்தில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் இடம் பெற்றிருப்பின் அவனுக்கு கட்டாயம் ஏறுக்குமாறான பெண் மனைவியாக அமைவாள்.
                                 "கட்டிய மனைவி ஏறுக்கு மாறாக இருந்தால் சற்றேனும் கூசாமல் சந்நியாசம் கொள்" என்ற வார்த்தைக்கு இணங்க சந்நியாச வாழ்க்கை மேற்கொள்வதே சிறந்தது.

                                ஏழாம் அதிபதி செவ்வாயாக இருந்து சனி பார்வை பெற்ற அமைப்பு உடையவர்களுக்கு கோபக்கார பெண் வாழ்க்கை துணையாக அமைவார்.

(மேற்கண்ட ஜோதிட கருத்து ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்)


நன்றி


(தங்களது ஜாதக பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற, தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்
 9715189647
   செல்
 9715189647
  7402570899


அன்புடன்
 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
   M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி online சோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

No comments: