Monday, 29 July 2019

இளமைக்கும்,புதுமைக்கும் காரகர் புதன் பகவான்.

                   இளமைக்கும், புதுமைக்கும் காரகன்     புதன் பகவான்.


                     

                      செவ்வாய்ப்பட்டிஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

        காடுகளில் ஆடையின்றி இலை, தழைகளை ஆடையாக அணிந்து நாடோடியாக வாழ்ந்து தெரிந்த மனிதன் இன்று 4G  level இணையத்தை பயன்படுத்தும் அளவிற்கு உயர்ந்து  நிற்ப்பதற்க்கும், பூமி தவிர இதர கோள்களான சந்திரனில் சந்திராயன் மூலமாகவும், செவ்வாயில் மங்கள்யான் மூலமாகவும் வாழ்வதற்குரிய வாய்ப்புகளை தேடி கொண்டிருக்கும் மனிதனாக தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதனாக உயர்ந்தது நிற்ப்பதற்க்கு மூளையாக மனிதனுக்கு செயல்படுவதும் நவகிரகங்களில் புதன் பகவானுக்கு நிகர் புதன் பகவானாவார்.

                 தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்பார்கள்.மனிதனுக்கு தேவையின் நெருக்கடி ஏற்படும்போது அவனது சிந்தனையின் விளைவாக செயலாக வெளிப்படுவது கண்டுபிடிப்பாகும் இந்தக் கண்டுபிடிப்பில் இரண்டு வகையாகச் சொல்லலாம் ஒன்று இல்லாத ஒன்றை தனது ஞானத்தால் படைப்பது இதனை invention என்பார்கள். மற்றொன்று தனது சூட்சும அறிவால் அதாவது உள்ளுணர்வால் இயற்கையிலிருந்து ஏற்கனவே இருந்த ஒன்றை கண்டுபிடித்து தருவது discovery என்பார்கள்.

                     இந்த இல்லாத ஒன்றை படைப்பதற்கும்,   ஏற்கெனவே இயற்கையில் இருக்கின்ற ஒன்றை தன் ஞானத்தால் மற்றவருக்கு பிடிபடாத ஒன்றை கண்டறிந்து வெளிப்படுத்துவதற்கும் வித்தகரான புதன் பகவானின் அருளாசி தேவை.

                   இதுவரை கண்டுபிடித்ததற்கும், இனிமேல் கண்டுபிடிக்க போவதற்கும் மூளையாக செயல்படக்கூடியவர் புதன் பகவானாவார்.

               காவியங்களைப் படைப்பதற்கும், இலக்கண, இலக்கிய நூல்களை எழுதுவதற்கும் கதை, கவிதை, கட்டுரை மற்றும் பாடல்கள் போன்றவற்றை புனைவதற்கும் புதன் பகவானின் அருளாசி கட்டாயம் தேவை.

                     ஒரு மனிதன் சிறந்த எழுத்தாளராக, கவிஞனாக, இலக்கியவாதியாக,  சிறந்த பேச்சாளராக கணித மற்றும் அறிவியல் அறிவில் வித்தகனாக , புள்ளிவிவரங்களைப் சேகரிப்பவனாக, பிரச்சினைகளை தீர்ப்பதில் வித்தகனாக என்றும் பொருள் அறிவுடனும் ஞானத்துடனும் விளங்குவதற்கு பகவானே காரகர் ஆவார்.

                  ஒருவனை தனது நல்ல சிந்தனை மற்றும் செயல் விளைவாக என்றும் தன்னை இளமையாக வைத்துக் கொள்ளும் மனநிலைக்கு கிரகம் புதன் பகவானாவார்.

                இசையில் நாட்டம் உடையவராகவும், புதியன படைத்தல் போன்ற செயல்கள் மூலம் தன்னை என்றும் இளமையாக வைத்துக்கொள்ளும் மனநிலைக்கு காரகன் புதன் பகவானாவார்.

                                பிரச்சினை என்று வரும் இடங்களில் எல்லாம் உடனடியாக ஓடிச்சென்று புள்ளி விபரங்களையும் தகவல்களையும் சேகரித்து அவற்றை தலையங்கம் மூலமாகவும் செய்திகள் மூலமாகவும் பத்திரிகையில் தந்து அதன் மூலம் தீர்வு கண்டு மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும் மூளைக்கு காரகர் புதன் பகவானாவார்.

                              சிற்பம் வடித்தல் ,ஓவியம் வரைதல் ,கூடை முடைதல் பாய் பின்னுதல் போன்ற நுண்கலை  விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தி தனது மனதை என்றும் இளமையாகவும், புதுமையாகவும் வைத்துக் கொள்ளும் நிலைக்கு காரகன் புதன் பகவானாவார்.

                           சோதிடவியலில் கணிப்பொறி துறையை பயன்படுத்தி உலகளாவிய சோதிடராக உயர்ந்து நிற்பதற்கும் புதன் பகவான் காரணமாகும்.

                                          ஒரு மனிதன் தனது அறிவால் தனக்காக அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை சேர்க்கும் மனநிலை உடையவர் அவரது ஜாதகத்தில் புதன் பகவான் பலமடைந்து பாவ நட்சத்திர சாரம் பெற்று இருக்கும்.

                                        அதேநேரத்தில் புதன் பகவான் பலமடைந்து சுபகிரக அல்லது நட்சத்திர சார தொடர்புடையவர்கள் இந்த உலகிற்கு தனது அறிவின் மூலமும் பயன்படக்கூடிய  புதிய ஒன்றை தனது படைப்பாற்றல் மூலம் கண்டறிந்து வெளிப்படுத்தி அதன் மூலம் மனித சமுதாயத்திற்கு பயன் பயன்படும் நிலைக்கு அர்ப்பணித்து  பெயரும், புகழும் பெற்று தன்னை இளமையாகவும் , புதுமையாகவும் வைத்துக் கொள்வார்.

                                         புதன் பகவான் சிக்கல்களை தீர்ப்பவர், புதியன படைப்பவர், புள்ளிவிவரங்களை சேகரிப்பவர், சாதகரை என்றும் இளமையாகவும், சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முயல்பவர் ஆவார்.
 எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் புதன் பகவானுடைய அருளாசி தேவை .

                     தனது ஜாதகத்தில் புதன் பகவான் பலம் இழந்த நிலையில் பெற்றவர்கள் அதனை பலம் பெறச் செய்ய கீழ்க்கண்ட பரிகாரங்கள் மூலமாக அதனை நிவர்த்தி செய்யலாம்.

    1) தனது விரலில் மரகதப்பச்சை நவரத்தினம் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.

    2) புதன் கிழமை அன்று அருகில் உள்ள விஷ்ணு கோயில் சென்று விஷ்ணு வழிபாடு செய்யலாம்.

    3) ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது உத்தமம்.

   4) பாசிப்பயிறு தானம் செய்யலாம் .

   5) சீர்காழி அருகிலுள்ள திருவெண்காடு என்ற ஊருக்குச் சென்று புதனை வழிபட்டாலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சொக்கநாதரை வழிபட்டாலும் நல்லது.

நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்
  9715189647


     செல்
 9715189647
  7402570899


     
                                                                     

  அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் &சோதிட ஆராய்ச்சியாளர்),
 ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,
கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

my emailmasterastroravi@gmail.com
my blogastroravichandransevvai.blogspot.comastroravichandran.blogspot.com

.....................................................................................................................................................

No comments: