Thursday, 13 August 2020

பரிகாரங்களால் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் உண்டா? -(2)

 பரிகாரங்களால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் உண்டா?--(2)


                         


 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!


       ஒரு பிரச்சினைக்கு பரிகாரங்களால் முழு தீர்வு பெற முடியாது. பரிகாரங்களால் இந்தப் பிரச்சினை வீரியத்தை குறைக்கலாம் .அதாவது நமது கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு "

"ஓங்கி அடிப்பதை தாங்கி அடிக்கலாம்".


   ஒரு கிரகங்களால் வரும் இன்னல்களை பரிகாரங்களும் மற்றும் தீவிர பக்தியாலும் அந்தப் பிரச்சினையின் தாக்கத்தை குறைக்கலாம் அல்லது அந்தப் பிரச்சினையை தாங்கக்கூடிய மனநிலையை இறைவன் நமக்கு தரலாம்.


  நமக்கு வரும் இன்னல்களை போக்க செய்யப்படும் பரிகாரங்கள் முழு நம்பிக்கையுடனும் மற்றும் முழு பக்தியுடனும் தீவிரமாய் ஈடுபாட்டோடு செய்ய நிச்சயம் அந்த பரிகாரங்களுக்கு பலனுண்டு.


  நமக்கு வரும் இன்னல்களுக்கு ஏற்ற பரிகாரம் எது ?  என்பதை கண்டறிந்து அதனை சரியான முறையில் செய்ய அந்த பிரச்சினை பரிகாரங்களால் பிரச்சனையின் வடு தெரியாமலே போய்விடும்.


  நாம் செய்யும் பரிகாரம் அந்த இன்னல்களை போக்க கூடியதாக இருக்க வேண்டும் . மாறாக இன்னல்களை (பிரச்சினை) அதிகப்படுத்தக்கூடிய மற்றும்  வலிமையினை ஏற்படுத்தக்கூடிய பரிகாரங்களை நாம் செய்யக்கூடாது.


  உதாரணமாக ஒருவருக்கு கடன் பிரச்சனைகளை தரக்கூடிய அதாவது ருண ,ரோக மற்றும் கடன் பிரச்சனைகளை தரக்கூடிய மறைவிட ஸ்தான திசையான ஆறாம் அதிபதி தசை நடக்கும்போது அந்த அதிபதியை பலப்படுத்தக்கூடிய  பரிகாரங்களை நாம் செய்யக்கூடாது. அந்த அதிபதியை நாம் வணங்கக்கூடாது .அந்த அதிபதிக்கு உரிய பரிகாரங்களை செய்யும் பொழுது அது பலப்பட்டு கூடுதலான கஷ்டங்களை நமக்கு தரக்கூடிய வாய்ப்புண்டு.


   பொதுவாக மறைவிட ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் அதிபதிகள் அதன் திசை காலங்களில் வெற்றி மற்றும் சூட்சும உண்மைகளை அறிதல் , வெளிநாட்டுப் பயணம் போன்ற சுபத்துவ விஷயங்களை தந்தாலும் பெரும்பாலும் அதன் தசை காலங்களில் ருண,யோகம்,கடன் ,பிணி , எதிர்ப்பு(ஆறாம் அதிபதி) மற்றும் வம்பு சண்டை வழக்கு மரணத்திற்கான நிகரான தொல்லை (எட்டாம் அதிபதி) போன்ற கஷ்டங்களை தரும் என்பதால் அதன் அதிபதிகளை பலப்படுத்தக்கூடிய பரிகார பூஜைகள் மற்றும் வழிபாடுகளை செய்யக்கூடாது.


 எனவே ஒரு பிரச்சினைக்கு உரிய அல்லது உங்களுக்கு நடக்கக்கூடிய திசை மற்றும் புத்திக்கு ஏற்ப தக்க சோதிடர்கள்  உதவியோடு தக்க பரிகாரங்களை செய்யும்போது மட்டுமே அந்த இன்னல்களிலிருந்து நீங்கள் விடுபட முடியும்.


   பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்ககூடிய மனிதர்களும் அதிகம் உண்டு.ஒரு சில பரிகாரங்கள் செய்ய அரை லட்சம் அளவிற்கு பணம் வாங்கி உகந்த பரிகாரங்களை செய்யாமல் விடும் நபர்களும் உண்டு.எல்லா தொழில்களிலும் அசலான நபர்களும் உண்டு.போலியான பணம் ஒன்றை குறிக்கோளாக கொண்டு பணம் பறிக்கும் போலிகளும் உண்டு.


  மக்கள் ஏதாவது செய்து பிரச்சினையிலிருந்து விடுபட முடியுமா? என ஏங்கும் நபர்கள் இது போன்ற போலிகளிடம் மாட்டிக்கொண்டு பணத்தை இழந்து விடுவதும் உண்டு.


  பலரது பிரச்சினைகள் ஒரு சில உண்மைத்தன்மையற்ற ஆன்மீகவாதிகள் பணம் சேர்க்கும் மார்க்கமாக அமைந்து விடுவதுண்டு.


  ஒட்டுமொத்தமாக எல்லோரையும் நாம் இங்கு குறை சொல்லிவிட முடியாது.நேர்மையான உண்மையான மற்றும் நாணயத்தன்மைமிக்க ஆன்மீகவாதிகளும் ஆங்காங்கே அரிதாக காணப்படுவதும் உண்டு.


  என்னை பொறுத்தவரை பரிகாரங்களுக்கு தேவையானது பணம் அல்ல.உங்கள் மனமே ஆகும்.பணத்தை செலவழித்து உங்களது பகட்டு தன்மையை இறைவனிடம் காட்டுவதற்கு பதிலாக எளிய செலவில் உங்களது முழு மனதினை இறைவனுக்கு அர்ப்பணிக்க அந்த பிரச்சினையே வந்தாலும் வந்த வடு தெரியாமல் போய்விடும்.


   அறுபத்து மூன்று நாயன்மார்களிலே கண்ணப்பநாயனரே மிக சிறந்தவராக கருதப்பட்டார். காரணம் அவர் படிப்பறிவில்லாத காட்டில் வாழ்ந்து வந்த ஒரு எளிய வேடவர் ஆவர். மேலும் அவர் காட்டில் தனக்கு கிடைத்த மாமிசத்தையும் , தேனையும் மட்டுமே இறைவனுக்கு உணவாக படைத்தவர். ஆனால் அதே நேரத்தில் இறைவன் கண்ணில் வந்த ரத்தத்தைப் பார்த்து தனது இரண்டு கண்களையுமே தானமாக வழங்க முழு மனதை இறைவனுக்காக ஒப்படைத்து முழுசரணம் அடைந்ததால் அவருக்கு சிவபிரான் காட்சியளித்தார்.


எளிய பரிகாரங்களை தேர்ந்தெடுத்து முழு மனதினை இறைவன்பால் வைத்து நாமே தனியாக ஒரு அறையில் இருந்து தக்க மந்திர அனுஷ்டானங்களை உச்சரிக்க நல்ல பலன்களை பெறலாம்.


 ஒருவருக்கு எதிரிகளால் தொல்லை உண்டாக காரணம் அவரது ஜாதகத்தில் ஆறாம் அதிபதி உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று வேறு எந்த வகையிலும் சுமத்தும் பெறாத நிலையில் அதன் தசா புத்திகளில் நம்மைச் சுற்றி எதிர்ப்புகளும் மற்றும் எதிரிகளும் வாழ்வார்கள்.


  எதிரிகளால் உண்டாகும் தொல்லைகளை போக்க  வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட எதிரிகளால் உருவாகும் தொல்லைகளிலிருந்து எளிதாக விடுபட செய்யலாம்.


 ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 1,2,7,8 ஆகிய இடங்களில் நிழற் கிரகங்களான ராகு,  கேது இடம்பெற்றிருந்தாலோ அல்லது சனி ,செவ்வாய் பார்த்தாலோ கால தாமதம் திருமணம் ஏற்படும்.


 திருமண தடையை போக்க எளிய பரிகாரம்


  வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்று தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம். பூஜைக்கு முன்பு அந்த இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெய் ஆகிய நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றலாம்.


 தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல் ஓர் ஊதுபத்தியால் எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.


   விளக்கின் முன்பு அருகம்புல், துளசி கலந்த தீர்த்தம் மற்றும் நல்ல பழுத்த எலுமிச்சம்பழம் வைக்க வேண்டும்.


    இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாகக் வெட்டி சாறு எடுத்து அந்த சாற்றுடன் தேனும், சர்க்கரையும் கலந்து படைக்க வேண்டும்.


 அறுத்து பிழிந்த எலுமிச்சை பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் மூன்று அகல் விளக்குகள் போல செய்து ராகு காலத்தில் (குறிப்பாக சனிக்கிழமை 9 -10.30 ) கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபட திருமண தடை நீங்கி நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும்.


"ஓம் ஸரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ!

ஓம் ஸரீ நாராயண நமஹ!

ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமண்ய நமஹ!

ஓம் ஜம் ஹீரீம் மோகினி

சித்தி சுந்தரி கொளரி அம்பிகே! யோக பயங்கரி!

சகல ஸ்தாரை ஜங்கம முக ஹ்ருத!


  ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாமிடம் மற்றும் அதன் அதிபதி மற்றும் புத்திரகாரகன் குரு ஆகியோருடன் ராகுபகவான் சம்பந்தப்பட (சேர்க்கை மற்றும் நட்சத்திர சாரம்) புத்திர தோஷம் உருவாகிறது. இவ்வாறு உருவாகும் புத்திர தோஷம் போக்க எளிய பரிகாரம் அந்தக் குடும்பத்துப் பெண் விரதமிருந்து அரசமரம் சுத்திவந்து சுமங்கலி பெண்களுக்கு பூ ,பொட்டு மஞ்சள், குங்குமம் மற்றும் வஸ்திரம் அடங்கிய ஒரு தாம்பாலத்தை ஐந்து ( உங்களது பொருளாதார வசதிக்கு ஏற்ப ) சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக வழங்கி அவர்களிடம் ஆசீர்வாதம் பெற நாகதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் எளிதில் பெறலாம்.


 வெள்ளியால் செய்யப்பட்ட நாகபடம் அடித்து நாகநாதசுவாமி சனிக்கிழமை ராகு காலத்தில் 9-10.30  அளவில் பாலாபிஷேகம் செய்து நாகதோஷ பரிகாரம் செய்து கொள்ளவும்.


  தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி,


 திருவாரூர் திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்,


 புதுக்கோட்டை பேரையூர் உள்ள அருள்மிகு நாகநாதசுவாமி கோவில்,


 ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காலஹஸ்தி திருக்கோயில் 


   மேற்குறிப்பிட்ட  ஏதாவது ஒரு இடத்தில் சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும்.சர்ப்ப தோஷம் உங்களது இல்லத்தில் மழலைச் செல்வம் உண்டாகி மகிழவைக்கும்.


  இது போன்ற எளிய பரிகாரங்களை தேர்ந்தெடுத்து அதிக செலவில்லாமல் முழுமனதுடன் திருப்தியுடன் செய்ய அந்த பரிகாரத்திற்கு பலன் கிடைத்தது உங்களை மகிழ்விக்கும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப்

     9715189647


     செல்

  9715189647

     74025708999


 My google pay

  7402570899

Acc name: omsakthi online astro consulting centre


                     


அன்புடன்

ஜோதிடர்

 சோ.ப. ரவிச்சந்திரன்

      M Sc,M.A,BEd

 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


My email

masterastroravi@gmail.com


My blog

AstroRavichandran.blogspot.com


AstroRavichandransevvai.blogspot.com


எனது Astro Ravichandran sevvai என்ற எனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து விட்டீர்களா.

No comments: