Tuesday, 16 November 2021

பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலை பெற காரணம் என்ன?

                        


 பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலைமையை பெற காரணம் என்ன?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!!


   வாழ்வில் ஒரு சிலர் மட்டும் ஏழ்மையான நிலையில் பிறந்து கடைசிவரையில் ஏழையாகவே வாழ்ந்து மரிப்பதற்கான  காரணம் என்ன ? என்பதை ஆழ்ந்து நோக்கினால் அவரது ஜாதகத்தில் முதலில் இலக்கனத்திலும் மற்றும் ராசியிலும்  இயற்கைப் பாபக் கிரகம் ஏதேனும் வகையில் தொடர்பு பெற்று, வேறுவகையில் சுபத்துவம் பெறாத நிலையில்  லக்னாதிபதியும்   மற்றும் ராசி அதிபதியும் பலம் இழந்து காணப்படும்.


  மேலும் இலக்கன யோகர்கள் பாவர்கள் பிடியில் சிக்கி காணப்படும்.


 சாதகத்தில் சில நேரங்களில் ஏதேனும் யோக அமைப்புகள் இருந்தாலும் அந்த யோக . அமைப்பு கிரக திசைகள் அவரது வாழ்வில் வருவதற்கான வாய்ப்பு இல்லாததும் ஒரு காரணமாக அமைகிறது.


 நீசம் ,அஸ்தமனம், மறைவிடம் மற்றும் வக்கிரம் போன்ற நிலைகளில் பலமிழந்த கிரக தசைகள் அல்லது பாவர்கள் பிடியில் சிக்கிய கிரக தசைகள் தொடர்ந்துவரும் அமைப்பை பெற்றவர்களும் பிறந்ததிலிருந்து ஏழையாகவே வாழ்ந்து மடிகிறார்கள்.


 ஒரு சிலர்  ஜாதகத்தில் லக்கனாதிபதி, தனாதிபதி பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதி பலமிழந்த சூழலில் 

சத்ரு ஸ்தானாதிபதியான ஆறாம் வீட்டு அதிபதி பலம் பெற்ற நிலையில் உகந்த தசா அமைப்புகளும் நடக்க இயலாத சூழலில் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை பெறுவதற்கு காரணமாக அமைகிறது.


ஒருவர் ஜாதகத்தில் என்னதான் யோக தசைகள் நடந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய லக்கனமும் மற்றும் அதன் அதிபதியும் பலமிழந்து சூழலில் ஒரு சிலர் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை அனுபவிக்க காரணமாக அமைகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் பிறந்ததிலிருந்து 

அவ  யோக தசைகள் தொடர்ந்து  நடப்பிலிருக்கும் அமைப்பு பெற்றவர்களும் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை அனுபவிக்க காரணமாக அமைகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும் மற்றும் சுகத்தை அனுபவிக்கக் கூடிய சுகாதிபதியும் பலமிழந்து உகந்த திசை அமைப்புகள் வாழ்நாள் முழுவதும் வர இயலாத அமைப்பை பெற்றவர்களும் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை அனுபவிக்க காரணமாக அமைகிறது.


நன்றி!


  வாட்ஸ் அப்

   9715189647


      செல்

 9715189647

   7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்..)

                        


அன்புடன் 

சோதிடர் 

சோ.ப ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: