யார் புகழ் பெறும் மனிதர்கள்?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
புகழுக்கு மயங்காதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அதேபோல அங்கீகாரத்துக்கு ஏங்காத மனிதர்கள் இல்லை.
எவரொருவர் நாள்தோறும் தன்னை பட்டை தீட்டிக் கொண்டு தனக்கான துறையில் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் நிச்சயம் தனக்கான துறையில் அங்கீகாரம் கிடைக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் முயற்சி ஸ்தானம் என்று அழைக்கப்படுவது மூன்றாம் இடமே ஆகும்.ஜாதக கட்டத்தில் மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியினை பொருத்துத்தான் ஒருவர் மேற்கொள்ளும் முயற்சி எத்தகைய தன்மை உடையதாக இருக்கும் என்பதை கண்டறிய முடியும்.
முயற்சி செய்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிட முடியாது. எவரொருவர் தான் கொண்ட செயலில் தொடர்ந்து
விடா முயற்சியை சகிப்புத்தன்மையுடன் மேற்கொள்கின்றாரோ அவர் ஒருவரால் தான் புகழின் சிகரத்தை எட்டிப்பிடிக்க முடியும்.
ஒரு மின் பல்பை கண்டறிய தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரம் தடவை முயற்சி செய்தார். ஆயிரமாவது முறையில் தான் அவர் வெற்றி பெற்றார். இவ்வாறு அவர் மின் பல்பை கண்டறிந்த பிறகு அவரை சந்தித்த செய்தியாளர்கள் அவரிடம்" ஒரு மின் பல்பினை உருவாக்க 999 முறை நீங்கள் தோல்வி அடைந்து ஆயிரமாவது முறையில்தான் உங்களால் வெற்றி பெற முடிந்தது. இதைப்பற்றி தங்களது கருத்து என்ன?" என கேட்டதற்கு அவர் கூறிய பதில்
" ஒரு மின் பல்பை எவ்வாறு எல்லாம் உருவாக்கக் கூடாது என்பதை 999 முறை கண்டறிந்த பின் தான் ஆயிரமாவது முறையில் ஒரு சரியான மின் பல்பினை என்னால் உருவாக்க முடிந்தது"என்றாராம்.
ஒருவரது கீர்த்தி, புகழ், அந்தஸ்து போன்றவற்றை கண்டறிய உதவும் ஸ்தானமும் ஜாதக கட்டத்தில் மூன்றாம் இடமே ஆகும்.
மூன்றாமிடம், அதனுடைய அதிபதி மற்றும் ஆடம்பர காரகன் சுக்கிரன் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்து ஒருவரது கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்து பெறும் நிலையை கண்டறியலாம்.
ஒருவரது ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் எவ்வித பாவக்கிரகங்கள் இடம்பெறாமல், இயற்கை சுப கிரகங்களானகுரு வளர்பிறைச் சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பு பெற்று
மூன்றாம் இட அதிபதி மற்றும் சுக்கிர பகவானும் நல்ல முறையில் பலம் பெற்று சுபத்துவ நிலையில் நின்று அதன் தசை நடக்கும் பொழுது அந்த தசை நடக்கின்ற அமைப்பை பெற்ற ஜாதகமானது கீர்த்தி,புகழ் அந்தஸ்தை அடையக்கூடிய ஜாதகம் ஆகும்.
எவரொருவர் ஜாதகத்தில் எவ்வித பங்கப்படாத பௌர்ணமி யோகத்தில் பிறந்து இருக்கிறார்களோ, அவர்களும் கீர்த்தி, புகழ் அந்தஸ்து பெறுகின்ற அமைப்பு பெற்றவர்கள் ஆவார்.
சிம்மமும் , சூரியனும் வலுப்பெற்று நிற்க்கின்ற அமைப்பு பெற்றவர்களும்,
லக்னாதிபதி நன்றாக வலுப்பெற்ற நிலையில் கார்த்திகை மாதம் ரிஷப ராசியில் பிறந்தவர்கள், மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழ் பெறும் அமைப்பை பெற்றவர்கள் ஆவார்கள்.
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஒளிக்கிரகமான சந்திரனும் மற்றும் சூரியனும் தர்ம மற்றும் கர்மாதிபதியான ஒன்பது மற்றும் பத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.எனவே இவர்களுக்கு சூரியனும் சந்திரனும் சமசப்தம பார்க்கக்கூடிய இருள் கிரகமான சனி மற்றும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தொடர்பு பெறாத பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள் சூரிய மற்றும் சந்திர தசையில் மிகப்பெரிய பிரபலம் அடையக்கூடிய யோகம் பெற்றவர்களாக அமைத்திருப்பார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும் மற்றும் மூன்றாம் இடமும் பலம் பெற்ற நிலையில் வளர்பிறை சந்திரனுக்கு ஆறு,ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் இயற்கை சுப கிரகமான குரு ,புதன் மற்றும் சுக்கிரன் அமர்ந்து அதன் தசை தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் புகழ் பெறும் அமைப்பைப் பெற்றவர்கள் ஆவார்கள்.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கீர்த்தி புகழ் ஸ்தானாதிபதியான சூரிய பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் உச்சமடைந்து நின்று வேறு எவ்வித பாவர்களுடைய தொடர்பின்றி தனுசு ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் உள்ள குரு பகவான் ஐந்தாம் பார்வையாக பார்க்கின்ற அமைப்பை பெற்ற சூரிய தசை நடைபெறும் காலங்களில் ஜாதகர் கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்தை அடைய கூடிய நபர் ஆவார்.
தனுசு லக்கினத்திற்கு ஒன்பதுக்குடைய சூரியன், பத்தாம் இடத்திலும் பத்துக்குடைய புதன், ஒன்பதாம் இடத்திலும் பரிவர்த்தனை அடைந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று நின்று லக்கனத்தில் குரு பகவான் ஆட்சி பெற்ற நிலையில், மீன ராசியில் பிறந்த சாதகர் சூரியன், புதன் அல்லது குரு தசையில் புகழின் உச்சியை அடைவார்கள்.
நன்றி.
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
ஜோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன்
அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment