Monday, 7 February 2022

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!

 முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!

                               

 

   நடுநிலை குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எப்படியாவது நன்றாக படித்தோ அல்லது கஷ்டப்பட்டு உழைத்தோ வாழ்வில் உயர்ந்து விடவேண்டும். 

சமூகத்தில் நான்கு பேர் மதிக்கும் அளவிற்கு வாழ்ந்து விட வேண்டும் என்பதே பேராவலாக  இருக்கும்.


  ஒரு முன்னேறத் துடிக்கும் சராசரி நடுத்தர இளைஞன்  ஜாதகத்தை ஆராய்ந்து உள்நோக்கி பார்த்தோம் என்றால் அவரது ஜாதகத்தில் உயிர் என்று அழைக்கப்படும் இலக்கனமும் அதன் அதிபதியும் மற்றும் உடல் என்று அழைக்கப்படும் ராசியும் அதன் அதிபதியும் பலம் அடைந்த நிலையில் இருக்கும்.


   இது மட்டுமல்லாமல் அவரது ஜாதகத்தில் முயற்சிக்கு உரிய ஸ்தானமான மூன்றாம் இடமும் அதன் அதிபதியும் முயற்சிக்கு காரணியான வித்தை காரகனான புதன் பகவானும் எவர் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருக்கிறதோ அவரது முயற்சிக்கு நிச்சயமாக இகழ்ச்சி அடையாத அளவுக்கு வாழ்வில் உயர்வை அடைந்து விடுவார்.


"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்"


    என்றார் வான்புகழ் கொண்ட வள்ளுவர்.


  ஒருவரது ஜாதகத்தில் உகந்த தசா அமைப்புகள் வரும்பொழுது இலக்கனதிபதியும் மற்றும் முயற்சி ஸ்தானமும் வலுப் பெற்று இருப்பின் அவரது ஜாதகத்தில் சரியான ஒரு துறையில் முயற்சியை மேற்கொண்டு அதில் அத்துறை சார்ந்த முன்னேற்றத்தை பெறுவார்.


 ஒருவரது ஜாதகத்தில் உகந்த தசா அமைப்புகள் நடைபெறாதபோது‌ அல்லது கோச்சாரப்படி ஏழரை மற்றும் அஷ்டமச்சனி நடக்கக்கூடிய காலங்களிலும் அவரால் தேர்ந்தெடுக்கப்படும் தொழில் என்னதான் முயற்சி செய்தாலும் தசா மற்றும் கோச்சார பலன்கள் ஒத்துழைக்காததால் மேற்கொண்ட முயற்சியில் சரிவுகள் உண்டானாலும் அந்த நேரத்தில் லக்னாதிபதி  வலுவாக இருப்பின் அந்த சரிவையும் தாங்கிக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை ஜாதகருக்கு தந்து அந்த அவயோக தசா அமைப்புகள் முடிந்த பிறகு மீண்டும் புத்துயிர் பெற்று தான் சார்ந்த துறையில் கடுமையான முயற்சி செய்து முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பார்கள்.


லக்னாதிபதி வலுவான அமைப்பைப் பெற்றவர்கள்.

 "இந்த நிலையும் மாறும்" என்ற உறுதியான கொள்கையோடு போராடி அந்த கடினமான நேரத்திலும் மன உறுதியோடு எதிர்த்து நின்று போராடி தக்க காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தது வெற்றிக் கொடி ஏந்தி சமூகத்தில் உலா வருவார்கள்.


  வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் மற்றும் போராட்டங்கள் வந்தாலும் மனம் தளராது துணிச்சலுடன் எதிர்கொண்டு போராடி வெற்றி பெறும் மனப்பான்மை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என மேடை ஏறிப் பேசினாலும் அல்லது நீதிக் கதைகள் மூலம் விளக்கினாலும் அந்த மனப்பக்குவத்தை தருவதில் ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களுடைய  பங்குகளும் அவசியமான ஒன்றாகும்.


நன்றி!


வாட்ஸ் அப்

  9715189647

      செல்

 9715189647

   7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


                                    



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: