Tuesday, 8 February 2022

சூரியன் காட்டும் சுகமான உண்மைகள்.

 சூரியன் காட்டும் சுகமான உண்மைகள்.


                              


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     சூரியன் எவ்வளவு தான் ஒளிமிகுந்த கிரகமாக இருந்தாலும் சூரியனை ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் நெருங்கும் நிழல் கிரகமான ராகு மற்றும் கேதுக்கள் சூரியனையும் தீண்டி அதனுடைய ஒளி அளவை பூமியில் விழ விடாமல் கிரகண தோஷத்தை  தந்து விடுகிறது.


     இதேபோல சூரியனை ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் நெருங்கும் சந்திரன் அமாவாசை யோகத்தைப் தருகிறது.

     இந்த நிலையில் சந்திரன் பாவராக  செயல்படுகிறது.


    சூரியன் தனக்கு

 சம சப்தமாக சந்திக்கும் சந்திரன் பகவான் பொளர்ணமி யோகத்தை தருகிறது. இந்த நிலையில் சந்திரன் முழு சுபராக செயல்படுகிறார்.


   சூரியனை ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் நெருங்கும் பஞ்ச மகா புருஷ கிரகங்களான குரு, செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகியவை அஸ்தமனம் அடைகிறது.


  சூரியன் பகவானால் அஸ்தமனம் அடைந்த கிரக பலன்களை சூரியன் தனது தசையில் எடுத்து செய்கிறது.


  சூரியபகவானை சுக்கிர பகவான்  முன் பின் எட்டு பாகையை நெருங்க அஸ்தமனம் அடைகிறது.


  இதேபோல குருபகவான் முன்பின் பதினோரு பாகைக்குள் நெருங்கும் பொழுது அஸ்த்தங்கமடைகிறது. புதன் பகவான் சூரிய பகவானை முன்பின் 13 பாகைக்குள் நெருங்க  அஸ்தங்கம் அடைகிறது. சனி பகவான் சூரிய பகவானை முன்பின் 15 பாகைக்குள் நெருங்க அஸ்தமனம் அடைகிறது. செவ்வாய் பகவான் சூரிய பகவானை முன்பின்17 பாகைக்குள் நெருங்க அஸ்தமனம் அடைகிறது.


    சூரியனை 12 பாகைக்குள்ளாக நெருங்கக் கூடிய சந்திரபகவான் அஸ்தங்க தோஷம் அடைகிறது என்பது பொதுவான விதியாக இருந்தாலும் சந்திரபகவான் அஸ்தங்கம் தோஷம் அடைவதில்லை என்பதே சரியான கருத்தாகும்.


  சூரியன் பகவானை நெருங்கும் புதன் பகவான் பெரும்பாலும் அஸ்தங்கம் அடைவதில்லை என்பதே சரியான கருத்தாகும்.


 சூரிய பகவான் உடன் புதன் பகவான் நெருக்கமாக இணையும்போது 

"புத ஆதித்ய யோகத்தை" தருகிறது.அதிலும் குறிப்பாக 1,4,8 ஆம் இடத்தில் இணையும் போது சாதகர் மிகுந்த நுண்ணறிவு படைத்தவராகவும் பல பட்டம் பெறக்கூடியவராகவும், கல்வி கேள்விகளில் வல்லவராக திகழ்வார்.


 இக்கருத்தை வலியுறுத்தும் பின்வரும் பாடல்

 "விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டு நான்கு ஒன்றில் வளையக்கூடின் மன்னவனாம்."


  அஸ்தங்கம் அடையும் புதன் பகவான் நரம்புத்தளர்ச்சியை தருவார். மாமன் வர்க்கங்களுக்கு பாதிப்பை உண்டாக்குவார்.


  சூரியனால் அஸ்தங்கம் அடைந்த குருபகவான் புத்திர தடையை அடைவார்.  ஏனைய பிற அமைப்புகள் பொறுத்து தனயோகம் அமைகிறது.


  சூரியன் பகவான் உடன் இணைந்து அஸ்தங்கம் அடையும் செவ்வாய் பகவான் சகோதர தோஷத்தை தருவார்.இரத்தம் தொடர்பான பாதிப்புகளை தருவார்.


 சூரியன் பகவான் உடன் இணைந்து அஸ்தங்கம் அடையும் சனி பகவான் உடல் நிலை பாதிப்புகளை தருவார்.


  சூரியன் பகவானுக்கு முன்பாக மேற்குறிப்பிட்ட பாகைக்குள் நெருங்கி அஸ்தமனம் அடையக்கூடிய கிரகங்கள் தனது காரக மற்றும் ஆதிபத்தியம் பலன்களை இழந்து அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறது. ஆனால் அதே நேரத்தில் சூரியனுக்கு பின்னாக அஸ்தங்கம் அடையக்கூடிய கிரகங்கள் அதாவது சூரியனை விட்டு விலக கூடிய கிரகங்கள் பெருமளவு ஆதிபத்தியம் மற்றும் காரக பலன்களை இழப்பதில்லை.


  சூரிய பகவானை மேலே குறிப்பிட்ட  பாகைக்குள்ளாக நெருங்கி வரக்கூடிய கிரகங்களை அஸ்தங்கம் அடையச் செய்த சூரியபகவான் பலம் பெற்று அதன் தசையில், சிம்ம லக்கினமும் வலுப்பெற்ற நிலையில் அரசு உத்தியோகத்தை தருகிறார்.


    சூரியனால் அஸ்தங்கம் அடையச் செய்யும் சுக்கிர பகவான் தனது காரக பலனான நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகத்தை தடை செய்கிறார். பால்வினை நோய்களைத் தருகிறார்.


  இதேபோல சூரியன் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு குரு, சனி மற்றும் செவ்வாய் வரும்பொழுது வக்கிரம் ஆரம்பமாகிறது. ஏழாம் இடத்திற்கு வரும்போது அதி வக்கிரமாகிறது. ஒன்பதாம் இடத்திற்கு வரும் போது வக்கிர நிவர்த்தி அடைகிறது.


  சூரியன் இருக்கும் இடத்திலிருந்து சந்திரன் நிற்கும் இடத்தினை பொருத்துதான் வளர்பிறை மற்றும் தேய்பிறை என்று வகைப்படுத்தப்படுகிறது.


  சூரியன் பகவான் உடன் அல்லது சூரியபகவான் நிற்கும் வீட்டிற்கு முன் பின் ஒரு ராசி வீதம் 60 பாகைக்குள்ளாக புதன் பகவான் வாசம் செய்கிறது.


 சூரியன் பகவான் உடன் அல்லது சூரிய பகவான் இருக்கும் ராசிக்கு முன் பின் இரண்டு ராசிக்குள் அதாவது 90 பாகை கொள்ளாத சுக்கிர பகவான் வாசம் செய்வார்.


 ஆதலால் சூரிய பகவானை சுற்றிவரும் உள்வட்ட கிரகங்களாக சுக்கிரன் மற்றும் புதன் பகவான் திகழ்கிறார்.


 சூரியன் பகவான் சித்திரை மாதத்தில் மேஷத்தில்  தொடங்கி பங்குனி மாதம் மீனம் ராசியினை வந்து அடைகிறது ஒரு மாதம் ஒரு ராசியில் சூரிய பகவான் வாசம் செய்கிறார்.


 சூரிய பகவானையும் அதன் வீடான சிம்த்தையும் பலம் பொருந்திய அமைப்பாக கொண்ட சாதக அமைப்பைக் கொண்டவர்கள் அரசு வேலைகளில் உயர் பதவியில் அமர்வார்கள். தந்தை வழியில் ஆதயத்தை பெறுகிறார்கள்.


  சூரிய பகவானுடன் இணைந்து அஸ்தமனம்  பெறும் கிரகம் பரிவர்த்தனை அடைந்திருந்தாலும், அல்லது உச்சம் அல்லது ஆட்சி பெற்ற நிலையில் இருந்தாலும் மற்றும் இயற்கை சுப கிரக பார்வை பெறும் அமைப்பை பெற்றிருந்தாலும் அஸ்தமனம் அடைந்த கிரகம் பெரிதளவு ஆதிபத்திய மற்றும் காரக பலன்கள் பாதிக்கப்படுவதில்லை.


சூரியன் பகவான் உடனான குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை ஆன்மீக தலைவர்களை உருவாக்குகிறது.


 சூரியன் உடன் கேது பகவான் இணைந்து குருவின் பார்வையினை பெறுகின்ற அமைப்பு ஆன்மீக யோகம் தரும் அமைப்பாக திகழ்கிறது.


   கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு நாதனாக சூரியபகவான் திகழ்கிறார். சிம்மத்தை ஆட்சி வீடாகவும், மேசத்தை உச்ச வீடாகவும் மற்றும் துலாத்தில் நீசம் பெற்ற அமைப்பை பெறுகிறார்.


 சூரிய பகவான் பத்தாம் வீட்டில்  திக் பலம் என்ற அமைப்பை பெறுகிறார்.நான்காம் வீட்டில் நிஷ் பலம் பெறுகிறார்.


  மகர லக்னத்திற்கு பத்தாமிடத்தில் சூரியன் பகவான் நீசம் அடைந்திருந்தாலும் திக்பலம் பெற்ற நிலையில் சூரிய பகவான் வலிமை பெற்றவராக திகழ்கிறார்.


 ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பகவானை அதிக சுபத்துவ நிலையில் பெற்றவர்கள் ஆணையிடும் அதிகாரம் பெற்றவராக திகழ்கிறார். அரசின் உயரிய பதவிகளிலும் மற்றும் அரசியலில் பெரும் தலைவர்களாக திகழ்வார்கள்.


சூரிய பகவான் எலும்புக்கு காரகன் மின்சாரத்திற்கும் காரகர் ஆவார். ஆதலால் அறுவைச் சிகிச்சை நிபுணர், மின்சாரம் தொடர்புடைய உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகம் போன்றவை உண்டாகும்.


   ஒருவரது ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் ஒன்பதாம் இட அதிபதி, சிம்மம் ராசி மற்றும் சூரிய பகவான் ஆகியவற்றை வலிமையாக பெற்றவர்கள் பெரும்புகழ் பெற்ற தந்தையை பெற்றிருப்பார்கள். 


  சூரிய பகவானுடன் இருள் கிரகமான சனி மற்றும் நிழல் கிரகமான ராகு பகவான் இணைந்த அமைப்பு சூரிய பகவான் பலமிழந்து அரசு வேலை கிடைப்பது  மற்றும் தந்தை மூலம் ஆதாயம் போன்றவற்றில் பாதிப்பு உண்டாகும்.


  சூரியன் பகவான் உடன் எட்டு பாகைக்குள்ளாக நெருக்கமாக சனிபகவான் இணைந்துள அமைப்பு அல்லது சூரியனும் மற்றும் சனிபகவானும் சம சப்தமாக பார்க்கின்ற அமைப்பு அல்லது சூரியன் மற்றும் சனி ஆகிய இரண்டு கோள்களும் உச்சம்பெற்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அமைப்பு மிகுந்த கெடுபலனை ஜாதகருக்கு தருகிறது குறிப்பாக தந்தை-மகன் உறவு நிலை பாதிப்பை உண்டாக்குகிறது.


 சூரிய பகவானை சனி சமசப்தம பார்க்கின்ற அமைப்பு வக்கிர நிலை பெறுகிறது.இத்துடன் ராகு போன்ற பாவ கிரகங்கள் தொடர்பினை பெறும் போது சூரிய பகவான் மிகுந்த அளவு பாவத்தன்மையை வேறு ஏதேனும் வகையில் குரு பகவான், வளர்பிறைச் சந்திரன் தனித்த புதன் சுக்கிரன் ஆகியவற்றை தொடர்பு பெறாத நிலையில் அடைகிறார்.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்

  9715189647


    செல்

  9715189647

    7402570899


Email

  masterastroravi@gmail.com

                                      


அன்புடன்

  ஜோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன்  கன்சல்டிங் சென்டர், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: