கிரக பார்வை நுணுக்கங்கள்-(2)
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு ஜாதகத்தில் குரு பகவான்
மற்றும் வளர்பிறை சந்திரன் எந்த ஸ்தானங்களை பார்க்கின்றோதோ, அவை தொடர்புடைய ஆதிபத்தியம் வலுப்பெற்று நல்ல பலனைத் தருகிறது.இவை எந்த கிரகத்தினை பார்க்கின்றதோ , அந்த கிரகம் தரும் காரக மற்றும் ஆதிபத்திய பலன்களை அதிகரிக்க செய்கிறது.
சில நேரங்களில் ஜாதகத்தில் கீழ்கண்ட அமைப்பு எந்த ஸ்தானங்களில் அமைகின்றதோ அந்த ஸ்தானமானது பலமாக பாதிக்கப்படுகிறது.
ஒரு ஜாதகத்தில் எந்த ஸ்தானங்களில் எல்லாம் சனி, ராகு மற்றும் சனி, செவ்வாய் சேர்க்கை அல்லது சனி , ராகு சேர்ந்து செவ்வாயால் பார்க்கப்படும் அமைப்பு செவ்வாய், ராகு சேர்ந்து சனியால் பார்க்கப்படும் அமைப்பு.
மேற்கண்ட வகையில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானங்களில் இருந்தாலும் அவை தொடர்புடைய கிரக தசைகள் நடப்பில் இருக்கும் காலங்களில் மட்டுமே அதிக பாதிப்பை ஜாதகருக்கு தருகிறது.
சில நேரங்களில் மேற்கண்ட வகையில் ஜாதக அமைப்புகள் இருந்தும் அவை தொடர்புடைய தசை புக்திகளில் எவ்வித கெடுபைனை தரவில்லை எனில் அவ்விரு கிரகங்கள் குறிப்பிட்ட இருபத்திரண்டு பாகை தள்ளி இணைந்து இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் அடைந்து இருந்தாலும் நல்ல பலனைத் தந்து விடுவதுண்டு.
ஒட்டுமொத்த பாவத்துவத்தை குரு பகவானது ஒற்றை பார்வை எல்லாவற்றையும் சுபத்துவமாக்கி விடுகிறது.
ஒரு ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று சுப கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் சனி பகவானின் ஒற்றை பார்வை முழுமையாக மொத்த அமைப்பையும் பாவத்துவமாக்கி கெடு பலன்களை செய்ய வைத்து விடுகிறது.
இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு.இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்களை சனி பகவான் தனது 3,7,10 ஆம் பார்வையால் பார்க்கப்பட்டாலும் , இவ்வாறு பார்க்கப்படும் சனி பகவானை ,குரு பகவான் பார்த்தால் சனியின் பார்வையில் தீய சக்தி குரு பகவானது பார்வையால் வடிகட்டப்பட்டு நல்லதை தராவிட்டாலும் கெடுப்பலனை தர இயலாமல் போய்விடுகிறது.
ஒரு சில ஜாதகங்களில் சனி பகவானோ அல்லது குரு பகவானோ ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மேலோட்டமாக பார்க்கும்போது பார்ப்பது போல் தோன்றினாலும் பாகை (degree) அடிப்படையில் பார்க்கும்போது அவை அந்த கிரகத்தை பார்த்து பாவத்துவம் செய்யாமல் இருந்து விடுவதும் உண்டு.
செவ்வாய் பகவான் இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் செவ்வாய் பகவான் தனது நட்பு கிரகமான குரு பகவான், சந்திரன்,சூரியன் மற்றும் கேது பகவானை பார்க்கும் போது பாவத்துவம் அடைய செய்ய மாட்டார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவான் ஆகிய இரண்டும் சேர்ந்து அல்லது தனித்தனியாக ஒரு ஸ்தானத்தையோ அல்லது ஒரு கிரகத்தையோ பார்வை செய்தால் மிகுந்த பாவத்துவத்திற்கு உள்ளாகிறது.
சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அமைப்பு மிகுந்த பாவத்துவம் நிறைந்த ஜாதகமாகும்.உதாரணமாக மகர வீட்டில் ஆட்சி நிலையில் உள்ள சனியை துலாம் வீட்டில் உள்ள செவ்வாய் பகவான் நான்காம் பார்வையாக பார்க்கிறது.இதேபோல மகரத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாவது பார்வையால் துலாத்த்தில் உள்ள சனி பகவானை பார்வை செய்கிறது.
இதேபோல மகரத்தில் உச்சம் நிலையில் உள்ள செவ்வாய் பகவான் மேஷத்தில் உள்ள நீச நிலையில் உள்ள சனி பகவானை நான்காம் பார்வையாக பார்க்கின்றது.மேஷத்திவ் நீச நிலையில் உள்ள சனியை பத்தாம் பார்வையாக மகரத்தில் உள்ள உச்சம் பெற்ற செவ்வாய் பகவானை பார்க்கிறது.
மேற்கண்ட இது போன்ற ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் சனி மற்றும் செவ்வாய் எந்த ஸ்தானத்தை அல்லது கிரகத்தை பார்க்கின்றதோ அவை மிகுந்த பாவத்துவ நிலையை அடைந்து விடுகிறது.
இதேபோல செல்வாராம் பார்க்கப்பட்ட சனியின் பார்வையோ அல்லது சனியால் பார்க்கப்பட்ட செவ்வாயின் பார்வையோ பார்க்கின்ற ஸ்தானத்தையோ அல்லது கிரகத்தையோ மிகுந்த பாவத்துவமாக்கி கெடு பலனை சாதகருக்கு தர வைத்து விடுகிறது.
குரு பகவானால் பார்க்கப்பட்ட வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் மிகுந்த சுபத்துவம் அடைகிறது.இதேபோல வளர்பிறை சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் மற்றும் குரு பகவான் ஆகியவற்றால் பார்க்கப்பட்ட எந்த கிரகம் மற்றும் ஆதிபத்தியம் இரண்டும் மிகுந்த சுபத்துவம் அடைகிறது.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & செல் & டெலிகிராம் & கூகுள் பே (All in one cell.)
9715189647
Cell : 7402570899
9715189647
Email masterastroravi@gmail.com
By
Astro Ravichandran
M.Sc,M.A,BEd
Teacher & Astrologer
Omsakthi online Astro consulting centre,,
Karambakkudi, Pudukkottai District.
No comments:
Post a Comment