Wednesday, 21 September 2022

ஜோதிடம் காலம் காட்டும் கண்ணாடி

 ஜோதிடம் காலம் காட்டும் கண்ணாடி

                        


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  மனிதன் தனது வாழ்நாளில் எவ்வளவு இன்பங்களை அல்லது துன்பங்களை அதாவது ஏற்ற/இறக்கங்களை அனுபவித்து இருப்பான் என்பதை

 அவன்/அவள் ஜாதகத்தில் ஜெனன காலத்தில் இருந்து ஜாதகம் பார்க்கும் காலகட்டம் வரை நடைபெற்ற தசா புக்திகளையும் மற்றும் கோச்சார பலன்களை  கொண்டும் எளிதாக கணித்து விடலாம்.


 மனித வாழ்வில் முக்கியமான காலகட்டங்களை தசாபுத்தி கொண்டு நடந்தவை மற்றும் நடக்க இருக்கும் சம்பவங்களை உறுதி செய்து கொள்ள முடியும்.


     ஒரு மனிதனுக்கு எவ்வளவு இன்னல்கள் அல்லது எவ்வளவு யோகங்கள் வந்தாலும்  அதிலிருந்து விடுபட அல்லது அதை அனுபவிக்க லக்கனாதிபதியுடைய வலிமை மிகவும் அவசியமானதாகும்.


  சிலருக்கு லக்னமும் மற்றும் லக்னாதிபதியும் கெட்டு இருந்தாலும் ராசியும், ராசியாதிபதியும் கெடாத நிலையில் ஓரளவு சமாளிக்க கூடிய தன்மையை சாதகருக்கு கொடுக்கும்.


  லக்கனம் மற்றும் ராசி அதன் அதிபதிகள் பலம் இழந்த நிலையில் எவ்வளவு யோகம் வந்தாலும் அதனை அனுபவிக்க கூடிய தன்மை அற்றும் காணப்படுவர்.


   ஒருவருக்கு லக்கனாதிபதி கெடாது நிலையில் இள வயதில் உகந்த யோக தசைகள் வந்து இண்டு ,நான்கு, ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகம்  மற்றும் குருவும், புதனும் கெடாத நிலையில் உயரிய கல்வி நிலை அடைந்து அதன் வழியில் பொருளீட்டி புகழ் பெறுவார்.


  எவர் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று தன-பாக்கிய-லாப ஸ்தானமும் மற்றும் அதன் அதிபதியும் பரிவர்த்தனை, சேர்க்கை மற்றும் பார்வை  மூலமாக வலுப்பெற்ற நிலையில் இதில் ஏதாவது ஒரு தசை அல்லது யோக தசைகள் நடப்பில் உள்ள காலங்களில் பல கோடிக்கணக்கான பொருள் ஈட்டி கோடீஸ்வரர் ஆகலாம்.


இதேபோல ஒருவர் ஜாதகத்தில் எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடம் சுபத்துவ நிலையில் இருந்து ஏதாவது ஒரு தசை நடத்தினால் கடல் கடந்து அந்நிய தேசத்தில் பொருளீட்டி வாழக்கூடிய நிர்பந்தம் உண்டாகும்.


 திருமண ஸ்தானங்களான லக்கனம், இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம், ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் போன்றவற்றுடன் சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது தொடர்பு ஏற்படுமாயின் கால தாமத திருமணத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.மேலும் தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.


மேற்கண்ட ஸ்தானங்களும் அதன் அதிபதிகள் வலுப்பெற்று சுபத்துவ நிலையில் நின்று தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியத்தை தரக்கூடிய குரு பகவான் ஆகிய இரு கிரகங்களும் சுபத்துவ நிலையில் வலிமை அடைந்து இருப்பின் இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று நிறைவான தாம்பத்திய சுகத்தை அனுபவித்து புத்திர பாக்கியத்தை பெற்று நிறைவான வாழ்க்கை வாழக்கூடிய நல்ல யோகத்தை பெற்று இருப்பார்கள்.


  சில ஜாதகங்களில் மேற்கண்ட 1,2,7,8 ஆம் இடங்களும் அதன் அதிபதிகள் ,களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் புத்திர காரகன் குருபகவான் போன்றவற்றுடன் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது தொடர்பு கொள்ளும் போது பாவத்துவ படிநிலைகளுக்கு ஏற்ப கால தாமதம் திருமணம், திருமணத்திற்கு பிறகு பிரிந்து வாழும் நிலை மற்றும் புத்திர தோஷம் போன்றவற்றில் ஏதாவது ஒரு பிரச்சினையை ஜாதகர் சந்திக்க நேரிடும்.


ஒருவருக்கு மறைவிட ஸ்தானமான எட்டாம் இடம் மற்றும் பன்னிரண்டாம் இடம் வலுப்பெற்று சுபத்துவ நிலையினை அடைந்து எட்டு மற்றும் பன்னிரண்டாம் இட தசை நடப்பில் உள்ள காலங்களில் அந்நிய தேசத்தில் பொருளீட்டல், லாட்டரி, ரேஸ் ,ஷாக்பாட் ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் போன்ற வகைகளில் ஏதேனும் ஒரு வகையில் பொருளீட்டி புகழ் பெறும் யோகம் உண்டாகும்.


 ஒருவரது எண்ணங்களும் மற்றும் செயல்களும் எதை நோக்கி நகரும் என்பதை அவரது ஜாதகத்தில் உள்ள அதிக சுபத்துவமான கிரகம் எது ? என கண்டறிந்தால் எளிதாக கண்டறிய இயலும்.


  எந்த கிரகம் சுபத்துவ படிநிலையில் முதலாவதாக உள்ளது என்று கண்டறிந்து பிறகு துணை நிலை சுபத்துவ கிரகங்களை கண்டறிய ஒருவர் மேற்கொண்டு இருக்கும் தொழில்நிலையை அறியலாம்.பிறகு அவருக்கு நடப்பில் இருக்கும் தசை புக்தி மற்றும் கோச்சார பலன்களை கொண்டு அந்த தொழிலில் எந்த அளவுக்கு உயர்ந்து இருப்பார் என்பதை கண்டறியலாம்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   9715189647

      செல்

  9715189647

   7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: