ஜோதிடத்தில் மாறுபட்ட பார்வை
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
ஜோதிடம் என்பது பரந்து விரிந்த மகா சமுத்திரம் ஆகும். அதில் மூழ்கி ஜோதிட முத்தை எடுப்பதற்கு ஆழ்ந்த புலமையும் மற்றும் நீண்ட அனுபவமும் மிகவும் தேவைப்படுகிறது.
ஜோதிடத்தில் ஆழ்ந்த ஞானமும் மற்றும் தெளிவான புலமையும் நிரம்ப பெறாதவர்கள் சில மேலோட்டமான அடிப்படை விதிகளையும், மற்றும் மூல நூல்களில் கூறப்பட்டுள்ள சில விதிகளை அப்படியே எடுத்து கொண்டு பலன் கூற முற்படுவார்கள்.
பலன் கூற முற்படும் போது ஒவ்வொரு விதிகளுக்குள் உள்ள விதிவிலக்குகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு விதிகளுக்குள் உள்ள விதிவிலக்குகள் தெரிந்து கொள்வதற்கு நிறைய பல ஜாதகங்களை ஆய்வு செய்து பார்த்து பலன் சொல்லும் நபருக்கே இந்த சூட்சும உண்மை புலப்படும்.ஜோதிட
மூல விதிகளை அப்படியே எடுத்து கொண்டு பலன் கூற முற்பட்டால் பலன் தவறாக போய் முடிந்து விடும்.
திருமண பொருத்தம் பார்க்கும் போது தம்பதிகள் இருவரது ஜாதகத்தில் உள்ள கிரகங்களை ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ப பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.பொருத்தம் பார்க்கும் போது வெறும் நட்சத்திர பொருத்தங்களை மட்டுமே வைத்து கொண்டு பொருத்தம் உள்ளது //இல்லை என்று ஜோதிடர்களால் தரப்படும் திருமண பொருத்தம் பெரும்பாலும் தவறாக சென்று விட கூடும்.
பெரும்பாலான ஜாதகத்திற்கு நட்சத்திரம் பொருத்தம் சிறப்பாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலை அமைப்புகள்,தசா அமைப்புகள் மற்றும் கோச்சார பலன்கள் நல்லபடியாக அமைந்தால் கட்டாயம் அந்த தம்பதிகளுக்கு விவாகம் செய்யலாம்.
சில நேரங்களில் நட்சத்திர பொருத்தம் 10/12 உத்தமம் என்று இருக்கும் ஆனால் இருவரது ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்கள் நல்ல அமைப்புகளில் இல்லாமல் தசா புக்தி சந்திப்பு மற்றும் கோச்சார பலன்கள் ஒத்ததாக இல்லாமல் இருக்கும் போது நட்சத்திர பொருத்தத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் ஜோதிடர் விவாகம் செய்யலாம் என திருமணம் செய்து கொள்ள செய்வார்கள்.திருமணம் ஆன சில மாதங்களில் ஒத்த கிரக அமைப்புகள் மற்றும் தசாபுத்தி அமைப்புக்கள் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு இடையே பிரிவுகள் வந்து விட வாய்ப்பு உண்டு.
ஜோதிடத்தை தொழில் முறையாக கொண்டுள்ள ஜோதிடர்கள் பரந்து விரிந்து கிடக்கும் ஜோதிடவியலில் தினந்தோறும் படித்தும், ஆராய்ந்து பார்த்தும் மற்றும் பல வகையான ஜாதகங்களை பார்த்து ஆய்வு செய்து பலன் சொல்ல பழகியும் தன்னை புதுப்பித்துக் கொண்டு இருக்க வேண்டும் (update). இவ்வாறாக தன்னை புதுப்பித்துக் கொள்ளும் சோதிடர்களால் தான் கால பரிமாணத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பலன் அளிக்க முயல வேண்டும்.
இவ்வாறாக தன்னை அப்டேட் செய்து கொள்ளாத நிலையில் தான் ஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும் போது பத்து பொருத்தம், செவ்வாய் தோஷம் மற்றும் மூல நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது. ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது, கேட்டை நட்சத்திரம் கேட்டவர்களுக்காகாது , அல்லது மூத்த மைத்துனருக்கு ஆகாது,.விசாகம் நட்சத்திரம் இளைய மைத்துனருக்கு ஆகாது போன்ற விஷயங்களையும் எடுத்துக் கொண்டு கிரக ஆராய்ச்சி செய்யாமல் பொருத்தம் பார்த்து பலன் சொல்லும் போது பலன் துல்லியமாக இல்லாமல் போய் விடுவதுண்டு.
மூலம் நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது என்றால் அவரது மாமனார் ஜாதகத்தில் அவரது ஆயுள் பலமாக இருக்கும் பட்சத்தில் மூல நட்சத்திரம் குறித்து பயம் கொள்ள தேவையில்லை.
செவ்வாய் பகவான் ஜாதகத்தில் 2,4,7,8, 12 ஆம் இடத்தில் நிற்ப்பின் செவ்வாய் தோஷம் ஆகும்.செவ்வாய் தோஷம் உயிரை கொல்லும் அளவிற்கான மோசமான தோஷம் அல்ல.
இங்கு விதிவிலக்காக அதேநேரத்தில் செவ்வாய் பகவான் உச்சம் , ஆட்சி மற்றும் நீசம் பெற்று இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறுவதும் சரியானது அல்ல.
பாவ கிரகம் நேர்வலு பெறக்கூடாது என்ற வகையில் 1, 2,4,7,8 ஆம் இடத்தில் செவ்வாய் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று நின்றால் செவ்வாய் தோஷம் இல்லை என்றாலும் பாவ கிரகம் என்ற வகையில் ஸ்தான வலுப்பெற்று திருமண ஸ்தானங்களான 1,2,7,8 உடன் தொடர்பு கொண்டு பாவத்துவமடைய செய்யும் என்ற வகையில் செவ்வாய் பகவான் மேற்கண்ட ஸ்தானங்களில் உச்சம், ஆட்சி பெற்று நிற்க கூடாது.
ஜோதிடத்தில் மூல நூல்களில் தரப்பட்ட கருத்துக்கள் அந்த அந்த காலகட்டங்களுக்கு ஏற்ப தனி நபர் வாழ்வில் நடந்த சோதிட கருத்துக்கள் பாடலாக்கி தந்து உள்ளார்கள்.அப் பாடல் கருத்துக்கள் இந்த காலத்தில் அப்படியே பலன் தரும் என்று உறுதியாக கூறிவிட முடியாது.
ஜோதிடத்தில் பலன் கூற முற்படும் போது ஸ்தான வலு ,கிரக சேர்க்கைகள், பார்வை, இருக்கும் இடம் மற்றும் நட்சத்திர சாரம் போன்றவற்றை பாகை அடிப்படையில் ஆய்வு செய்து நிறைவாக சுபத்துவ மற்றும் சூட்சும வலுவிற்கு ஏற்பவே பலன் அமையும்
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
9715189647
செல்
9715189647
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.SC,M.A,BEd
ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,.
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்..
No comments:
Post a Comment