கிரகங்கள் - புதிய பார்வை
![]() |
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் தசா புக்தி பலன்களை லக்கனத்தை அடிப்படையாக கொண்டும் மற்றும் கோச்சார பலன்களை ராசியை அடிப்படையாக கொண்டும் கணக்கிடப்படுகிறது.
கோச்சார பலன்களில் வருட கிரகம் எனப்படும் சனி(இரண்டரை ஆண்டுகள்) ,ராகு,கேது ஒன்றரை ஆண்டுகள்)மற்றும் குரு (1 ஆண்டு) ஆகிய கிரகங்களின் பெயர்ச்சியானது ஜாதகரை பெருமளவு பாதிக்கப்படுகிறது.ஏனைய பெயர்ச்சிகளான சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரிங்களின் பெயர்ச்சி பெரிய அளவில் பேசப்படுவதில்லை.காரணம் சந்திரன் இரண்டேகால் மட்டுமே ஒரு ராசியில் வாசம் செய்வார்.எனவே இவை நாள் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
மாத கிரகங்களான சூரியன் மற்றும் சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாதம் வீதமும் மற்றும் செவ்வாய் ஒரு ராசியில் ஒன்றரை மாதம் வீதமும் வாசம் செய்கிறது.
சந்திரன் பெயர்சியை கொண்டே வளர்பிறை மற்றும் தேய்பிறை கணக்கிடப்படுகிறது.
பொதுவாக அமாவாசை காலத்தில் இருந்து பொளர்ணமி காலம் வரை நகரும் சந்திரனை வளர்பிறை சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறது.இக்கால கட்டத்தினை சுக்ல பட்சம் அல்லது பூர்வ பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த தருணங்களில் சந்திரன் 🌙 முழூ ஒளி அளவினை கொண்டு இருப்பதால் இயற்கை சுபராக கருதப்படுகிறது. இவை பெரும்பாலும் ஜாதக கட்டத்தில் இரண்டாம் வீடு முதல் ஏழாம் வீடு வரை ஆகும்.
இதேபோல பொளர்ணமி காலத்தில் இருந்து அமாவாசை நோக்கி நகரும் சந்திரனை தேய்பிறை சந்திரனாக கருதப்படுகிறது.இக்கால கட்டத்தினை அமர பட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படுகிறது.இந்த கால கட்டங்களில் சந்திரன் ஒளி அளவு குறைந்து கொண்டே வருவதால் இயற்கை பாவ கிரகமாக கருதப்படுகிறது.
இவை பெரும்பாலும் ஜாதக கட்டத்தில் எட்டாம் வீடு முதல் பன்னிரண்டாம் வீடு வரை ஆகும்.
ஒளி அளவினை கொண்டு துல்லியமாக ஆய்வு செய்து நோக்கினால் அமாவாசை விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரையிலும் அதாவது பிரதமை திதி முதல் பஞ்சமி திதி வரை நகரும் சந்திரன் பகவானை தேய்பிறை சந்திரனாகவே மட்டும் கருதப்பட வேண்டும்.எனவே அமாவாசை விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரை தேய்பிறையாக கணக்கில் எடுத்துக் கொண்டு சுப விஷயங்கள் செய்ய கூடாது.
இதேபோல பொளர்ணமியை விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரையிலும் அதாவது பஞ்சமி திதி வரை சந்திரன் பகவானை வளர்பிறை சந்திரனாக மட்டுமே கருதப்பட வேண்டும்.பொளர்ணமி விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரை வளர்பிறையாக கணக்கில் எடுத்து கொண்டு சுப வைபோகங்கள் செய்யலாம்.
எனவேதான் வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களில் இயற்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் மட்டுமே சந்திர அதியோகம் பெறுகிறது.பாவ கிரகங்களான சனி , செவ்வாய் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கு கிடையாது.
இதேபோல தேய்பிறை சந்திரனுக்கு ஆறு ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களில் இயற்கை சுப கிரகங்கள் இருந்தால் சந்திர அதியோகம் கிடையாது.மற்றொரு இருள் கிரகமான சனி பகவான் பார்த்ததற்கு சமம் ஆகும்.
எனவே ஒரு ராசியில் தேய்பிறை சந்திரன் இருந்து பார்ப்பதும் மற்றும் இயற்கை பாவ கிரகமான சனி பகவான் பார்வை செய்வதும் ஒரு ராசியினை இரண்டு சனி பகவான் பார்வை செய்வதற்கு சமமானது ஆகும்.வளர்பிறை சந்திரன் மற்றும் குரு பகவான் பார்ப்பது இரண்டு குரு பகவான் பார்ப்பதற்கு சமமானது ஆகும்.
கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானை தவிர ஏனைய கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி நகர்கிறது.சில நேரங்களில் அதாவது சூரியன் பகவான் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு வரும்போது சனி ,குரு மற்றும் செவ்வாய் பகவான் ஆகிய மூன்று கிரகங்கள் மட்டும் பின்னோக்கி நகர்வது போல் தெரிகிறது.இதனையே" வக்ர கதி "என்று அழைக்கிறோம்.ஆனால் நிழல் கிரகமான ராகு, கேது மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களுக்கு வக்ர கதி கிடையாது.
வக்ரம் பெறும் கிரகங்கள் அனைத்தும் இயல்புக்கு மாறான நிலையினை பெறுகிறது. இந்த வகையில் உச்சம் பெற்ற கிரகங்கள் இயல்புக்கு மாறான நீசத்திற்கு நிகரான பலன்களை தருகிறது இதே போல நீசம் பெற்ற கிரகங்கள் இயல்புக்கு மாறான உச்ச பலனை தருகிறது.
சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் முக்கூட்டு கிரகங்கள் ஆகும்.சூரியனுக்கு அருகிலே சுக்கிரன் மற்றும் புதன் பகவானது இருப்பதால் இதனை உள் வட்ட கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
புதன் பகவான் சூரியன் உடன் அல்லது முன்பின் ஒரு ராசி தள்ளி காணப்படும்.சுக்கிரன் பகவான் சூரியன் உடன் அல்லது முன்பின் இரண்டு ராசிகள் தள்ளி காணப்படும்.ஆதலால் ஒரு குறிப்பிட்ட பாகைக்குள்ளாக சூரியனை நெருங்கும் போது வக்ரம் அடைகிறது.
மாபெரும் சூரிய ஒளிக்கு முன்பாக செல்லும் கிரகங்கள் தனது சுய ஒளியை இழந்து அஸ்தமனம் அடைகிறது.நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது சூரியனை நெருங்கும் போது அஸ்தமனம் அடைவதற்கு பதிலாக கிரகண தோஷத்தை தருகிறது .அதாவது சூரிய மற்றும் சந்திர ஒளியினை பூமியில் விழ விடாமல் மறைக்கிறது.
ராகுவால் உண்டாகும் கிரகணத்தை போல கேதுவால் உண்டாகும் கிரகணம் வெகுவாக ஒளியை மறைப்பது கிடையாது.
பொதுவாக நிழல் கிரகமான ராகு பகவான் இருக்கும் வீட்டிற்கு ஏழாவது வீட்டில் அதாவது 180 பாகை அளவில் கேது பகவான் வாசம் செய்கிறார்.
இவற்றிற்கு சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டையே தனது சொந்த வீடாக கருதிக் கொள்ள வேண்டும்.
பொதுவாக புதன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களுக்கும் வக்ரம் மற்றும் அஸ்தமனம் கிடையாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
பொதுவாக உச்சம் பெற்ற கிரகங்கள் அந்த வீட்டிற்கு ஏழாம் வீட்டிற்கு வரும் பொழுது நீசம் அடைகிறது. நீசம் அடைதல் என்பது தனது ஸ்தான பலத்தை இழந்து நிற்கிறது என்று அர்த்தம்.
இவ்வாறு ஸ்தான பலத்தை இழந்து நிற்கும் கிரகங்கள் நீசம் பங்கம் பெறும் போது அவை உச்சத்தை விட வலிமை பெற்ற கிரகமாக மாறுகிறது.
1)நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் அடைந்தாலும் ,
2)நீசம் பெற்ற கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்து நின்றாலும் ,
3)நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்சம் பெற்ற கிரகம் நின்றாலும்
4) நீசப் பெற்ற கிரகத்தின் சொந்த வீட்டில் ஒரு உச்சம் பெற்ற கிரகம் நின்றாலும் ராசியிலும் வம்சத்திலும் ஒரே ராசியில்,
5) நீசம் பெற்ற கிரகங்கள் ராசி மற்றும் அம்சம் ஆகிய இரண்டிலும் ஒரே ராசியில் நின்று வர்கோத்தமம் என்ற அடிப்படையில் நீச பங்கம் பெறுகிறது.
அதேபோல ஜாதகத்தில் திக்பலம் பெற்ற கிரகங்கள் வலிமை பெற்ற கிரகமாக கருதப்படுகிறது.அதே திக் பலம் பெற்ற கிரகம் ஆனது திக் பலம் பெற்ற வீட்டிற்கு ஏழாம் வீட்டிற்கு வரும் பொழுது நிஷ் பலம் பெறுகிறது.நிஷ் பலம் என்பது தன் பலம் இழந்த நிலையை அடைகிறது.
லக்னத்தில் குரு பகவானும் மற்றும் புதன் பகவானும் திக் பலம் பெறுகிறது. நான்காம் இடத்தில் சந்திரன் பகவானும் மற்றும் சுக்கிர பகவானும் திக்பலம் அடைகிறது. ஏழாம் இடத்தில் சனி பகவான் திக்பலம் அடைகிறார் .பத்தாம் இடத்தில் சூரியனும் மற்றும் செவ்வாயும் திக்பலம் பெறுகிறது.
ஏழாம் இடத்தில் குரு பகவானும் மற்றும் புதன் பகவானும் நிஷ் பலம் பெறுகிறார்கள். நான்காம் இடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் நிஷ் பலமடைகிறார். நான்காம் இடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் திக் பலம் இழக்கிறார்.பத்தாம் இடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் திக் பலம் இழக்கிறார்.
ஸ்தான பலத்தை இழந்த கிரகங்கள் திக்பலம் பெரும்பொழுது அவை இழந்த வழுவை மீண்டும் பெறுகிறது என்று அர்த்தமாகும். எல்லாம் வீட்டிற்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் நீசம் பெற்று இருந்தாலும் அதை திக்பலம் என்ற ராசியில் பலம் பெற்ற கிரகமாகவே கருதப்படுகிறது.
சில நேரங்களில் ஒரே ராசியில் ஸ்தான பலத்தை இழந்து நின்றாலும் இழந்த வலுவை மீண்டும் பெறுகிறது என்று அர்த்தம்.
நன்றி.
(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
(All in one cell)
97151 89 647
Cell
9715189647
7402570899..
Email masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment