Tuesday, 8 November 2022

ஸ்ரீ ராகு பகவான் தரும் மாறுபட்ட பார்வை

 ஸ்ரீ ராகு பகவான் தரும் மாறுபட்ட பார்வை.    




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான  ராகு மற்றும் கேது  பகவான் மட்டுமே ஜாதக பலனில் நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு பெரிய அளவில் மாற்றங்களை தர வைப்பவர் ஆவார்.


 ஜாதகத்தில் ராகு பகவான் மட்டும் நல்ல முறையில் அமைந்து விட்டால் அதன் தசை காலங்களில் அவை தரும் ஆடம்பரமான, பிரம்மாண்டமான  ஐஸ்வர்யங்களை  வேறு எந்த கிரகமும் தர இயலாது.


  ராகு என்றாலே மாற்றங்களை தருபவர் ஆவார்.மேலும் எதிர்பாராத அளவு பெரிய பிரமாண்டமான மாற்றங்கள் அல்லது மிகவும் கீழினும் கீழான நிலையினை தருபவராக இருப்பார்.


ராகு பகவான் " கெடுத்து கொடுப்பார் என்றும் அல்லது கொடுத்து கெடுப்பார்" என்று அழைக்கப்படுகிறது.

*ராகுவை  போல கொடுப்பாரில்லை

 கேதுவைப் போல் கெடுப்பார் இல்லை என்றும் சொல்வது சொலவடை ஆகும்.


  ராகு பகவான் தன்னுடன் சேர்ந்த கிரகத்தின் பலனை மாற்றி தருவதில் வல்லவர் ஆவார்.


 இயற்கை சுப கிரகங்கள் மற்றும் லக்கன யோகியுடன் எட்டு பாகைக்குள் நெருக்கமாக  சேரும் ராகு பகவான் தன்னுடன் சேரும் கிரகத்தை பாவத்துவ படுத்தி தான் மட்டும் சுபராக மாறி அதன் தசையில் நல்ல பலன் தருவார்.


 ராகு பகவான் உடன் சனி , செவ்வாய் சேர்க்கை பெற்ற நிலையில் அல்லது ராகு பகவான் உடன் செவ்வாய் சேர்ந்து சனி பார்த்த அமைப்பு அல்லது ராகு பகவானுடன் செவ்வாய் சேர்ந்து சனி பார்த்து அமைப்பு அல்லது

ராகு பகவான் சனியின் வீடுகளான மகர கும்பத்தில் நின்று செவ்வாய் பகவானால் பார்க்கப்பட்ட அமைப்பு அல்லது ராகு பகவான் செவ்வாய் பகவான் வீடான மேஷ ,விருச்சகத்தில் நின்று சனி பகவானால் பார்க்கப்பட்ட தன்மை 

மேற்கண்ட இது போன்ற அமைப்புகள் உங்களது ஜாதகத்தில் இருந்தால் அவை எந்த ஸ்தானத்தில் உள்ளதோ அந்த ஸ்தானமானது வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்.இத்துடன் சந்திரன் 🌙 பகவான் சேர்ந்த நிலையில் சந்திரன் பகவான் மனநிலை காரகன் என்பதால் மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


இவை மட்டும் அல்லாமல் ராகு பகவான் தொடர்பு கொண்ட சனி செவ்வாய் பகவான் ஆதிபத்தியம் மற்றும் காரக பலன்களும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும்.


மேற்கண்ட வகையில் கூறப்பட்ட அமைப்புக்கள் எனது ஜாதகத்தில் உள்ளது ஆனால் தாங்கள் கூறியது போல பெரும் பாதிப்பை எனக்கு தரவில்லை என நீங்கள் கருதினால் அதற்கான விளக்கம் என்னவென்றால் அந்த ராகுவின் பாவத்துவமான அமைப்புடன்  பங்கப்படாத குரு , சுக்கிரன் அல்லது தனித்த புதன் ஆகியவற்றின் தொடர்பை பெற்றிருக்கும்.


    ராகு பகவான் ஒரு அந்நிய தேசத்தையும் மற்றும் அந்நிய மதத்தையும் குறிக்கும் கிரகம் ஆகும்.


 ராகு பகவான் மட்டும் ஒருவர் ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், மகரம், கடகம் மற்றும் கன்னி ஆகிய ஐந்து ராசிகளில் ஒன்றில் அமர்ந்து அவை ராசி அல்லது லக்கினத்திற்கு அயன ஸ்தானமான பன்னிரண்டாம் இடமாக அல்லது மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் இருந்து லக்கனத்திற்கு எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடம் சுபத்துவ நிலையில் இருந்து அதாவது உதாரணமாக குரு பகவான் எட்டில் அமர்ந்து பன்னிரெண்டாம் இடத்தை பார்வை செய்யும் நிலை.


மேற்கண்ட இது போன்ற அமைப்பில் இருந்து ராகு தசை நடப்பில் இருப்பின் ஜாதகர் நாடு கடந்து பல லட்சங்களை சம்பாதித்து புகழ் பெறுவார்.


ராகு பகவான் திருமண ஸ்தானங்களான 1,2,7 ,8 ஆம் இடத்தில் நின்று வேறு வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் திருமண தடையை உண்டாக்குவார்.


மூன்றாம் இடத்தில் சகோதர தோஷத்தையும், நான்காம் இடத்தில் மாதுர் தோஷத்தையும், ஐந்தாம் இடத்தில் புத்திர தோஷத்தையும்   மற்றும் ஒன்பதாம் இடத்தில் பிதுர்தோஷத்தையும் உண்டாக்குவார்.


 பௌர்ணமி அமைப்பில் சூரியன் அல்லது சந்திரனுடன் ராகு பகவான் 8 பாகைக்குள்ளாக நெருக்கமாக இணையும்போது கிரகண தோஷத்தை ஏற்படுத்துவார். இதனால் அந்த பௌர்ணமி யோகம் முழுமையாக சாதகருக்கு செயல்படாது.


ராகு பகவான் ஒளிக்கிரகமான சூரியனுடன் நெருக்கமாக இணையும்போது தந்தை உறவு நிலையையும், சந்திரனுடன் நெருக்கமாக இணையும்போது தாயின் உறவு நிலையும்  மற்றும் மனநிலை பாதிப்பை உண்டாக்குவார்.


செவ்வாய் பகலுடன் ராகு பகவான் நெருக்கமாக இணையும்போது சகோதர தோஷத்தையும் ,சுக்கிலுடன் நெருக்கமாக இணையும்போது தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய தன்மை மாறுபட்ட நிலையிலும், திருமண தடையையும் உண்டாக்குவார்.மேலும் மேலும் மாறுபட்ட காம எண்ணங்களையும் விதவையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையையும் சாதகர்கருக்கு கொடுப்பார்.


 ராகு பகவான் ஆனவர்  புதன் பகவான் உடன் இணைந்து பாவத்துவமாகி தனது மூளையை தவறான வழியில் பயன்படுத்தக் கூடியவராக இருப்பார். பொது இடங்களில் நாசம் விளைவிக்க கூடிய அளவிற்கு அல்லது பொது சொத்துக்களை திருடும் அளவிற்கு தனது மூளையை எதிர்மறையாக பயன்படுத்துவார்.அம்மான் வர்க்கத்திற்கு ஆகாத நிலையினை தருபவராக இருப்பார்.


  ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது .இருக்கும் வீட்டை சொந்த வீடாக கொண்டிருக்கும். 

    ராகு பகவான் தனது தசையில் இருக்கும் வீட்டின் பலனையும், தன்னுடன் சேர்ந்த மற்றும் பார்த்த கிரகத்தின் பலனையும் ராகுவுக்கு நான்கு கேந்திர ஸ்தானங்களில் உள்ள கிரக பலனையும் அவை பெற்ற நட்சத்திர சாரம் ஆகியவை பொறுத்து பலன் தரும் என்பதால் பலனை கணிப்பதில் சிக்கல்களை கொண்ட தசையாக ராகு தசை அமைகிறது.


  ராகு பகவான் நிற்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றால் அல்லது  ராகு நிற்கும் வீட்டின் அதிபதி ராகு இருந்த வீட்டில் ஆட்சி பெறாமல் மற்றொரு ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அதன் தசை காலங்களில் யோகத்தை தருகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   9715189647

மற்றொரு செல்

  7402570899


E-mail address

  masterastroravi@gmail.com

    


அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

  M.SC,M.A, BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்) கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: