Tuesday, 2 January 2018

கிரகங்கள் படுத்தும் பாடு-( 139 )

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 139 )


                                                               
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
                         "கிரகங்கள் மனித வாழ்வில் உண்டாக்கும் மாற்றங்களை தொடராக எழுதி வருகிறேன்.அனைவரும் படித்து பயன்பெறுங்கள்.

                        ஒருவரது  சாதகத்தில் சாதகரின் குணநலன்களை லக்கனாதிபதி மற்றும் ராசியாதிபதி மற்றும் இவ்விரண்டு ஸ்தானங்களை பார்க்கும் மற்றும் சேர்க்கை பெறும் கிரகநிலைகளை கொண்டு ஆராய்ந்து பலனறியப்படுகிறது.

                     ஒருவரது வாக்குநிலையை அதாவது அவனது பேச்சு சுத்தத்தையும் மற்றும் கொடுக்கும் வாக்கை காப்பாற்றும் தன்மைகளை அறிய இரண்டாமிடம் மற்றும் அந்த ஸ்தானததை பார்வை பெறும் கிரகநிலைகளை கொண்டும் அறியப்படுகிறது.

                        ஒருவர் நன்றாக படிப்பாரா ? கல்வியில் வித்தகனாக ஆவானா ? என்பதை ஆய்வு செய்து பார்க்க இரண்டாமிடம்,நான்காமிடம் ,ஐந்தாமிடம் மற்றும் ஒன்பதாமிடம் போன்ற ஸ்தான அதிபதிகள் மற்றும் பார்க்கும் சேர்க்கை பெறும் கிரகநிலைகளை ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.
ஒருவரது திருமண வாழ்வினை பற்றியும் ,திருமணம் நடைபெறும் காலம் மற்றும் தம்பதிகளுக்கான அன்னியோன்யநிலை பற்றி இரண்டு,ஏழு மற்றும் எட்டாமிடம் போன்ற ஸ்தானங்களின் அதிபதிகள் மற்றும் பார்க்கும் ,சேர்க்கை பெறும் கிரகநிலைகளை ஆய்வு செய்து பார்க்கவேண்டும்.

                          ஒருவரது புத்திரம் மற்றும் பூர்வீகஸ்தானங்களை பற்றி ஆய்வு செய்ய ஐந்தாமிடம் மற்றும் அதன் அதிபதிகளை ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.

                                ஒருவர் தனது எதிரியின நிலை,கடன் மற்றும் பிணி போன்ற நிலைகளை ஆய்வு செய்ய ஆறாமிடமும் மற்றும் ஒருவர் தனக்கு வரக்கூடிய வம்பு ,சண்டை வழக்க,சிறைசெல்லுதல் மற்றும் ஆயுள்நிலை போன்றவற்றை எட்டாமிடம் கொண்டும் அறியலாம்.

                               ஒருவரது தன் சுகம்,தாய்சுகம்,வண்டி வாகனத்தால் சுகம் மற்றும் கல்வியால் சுகம் போன்ற சுகநிலைகளை பற்றி அறிய நான்காமிடத்தை பற்றி ஆய்வு செய்யப்படவேண்டும்.

                             ஒருவர் தனக்கு கிடைக்ககூடிய புகழ் ,கீர்த்தி மற்றும் அந்தஸ்து மற்றும் சகோதரநிலைகளை பற்றி அறிய மூன்றாமிட ஆய்வு புரிய வேண்டும்.
ஒருவர் தானதர்ம நிலை ,தனக்கு கிடைக்க இருக்கும் பாக்கியநிலை ,உயர் கல்விநிலை , தந்தையால் பெறப்படும் லாபநிலை மற்றும் தந்தை மகன் உறவுநிலைகளை ஒன்பதாம் இடத்தை ஆய்வு செய்து அறியலாம்.
ஒருவரது ஜீவனம்,தொழில் நிலை அறிய பத்தாமிடத்தை கொண்டும் அறியலாம்.

                                  ஒருவரது லாபநிலை ,மூத்தசகோதரம் மற்றும் இளையதாரம் போன்றவற்றை பதினொறாமிடத்தை கொண்டு ஆய்வு செய்து அறியலாம்.
ஒருவரது அயன,சயன,படுக்கை சுகம் ,மோட்சநிலை மற்றும் விரயநிலையை பணிரெண்டாமிடம் மூலம் அறியலாம்.

நன்றி

(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருப்பினும் பெறலாம்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )
                                                                                      
அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.


செல் : 97 151 89 647
            ::  740 257 08 99

வாட்ஸ்அப் எண்
  97 151 89 647


My email
masterastroravi@gmail.com

No comments: