கேள்வியும் நானே,பதிலும் நானே - (2)
ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்
1) ஒரு மனிதனுக்கு நடக்கக்கூடிய அனைத்தும் அவனது சாதகத்தில் உள்ளபடிதான் (விதிப்படி) நடக்குமா?
ஒரு மனிதனுக்கு அவனது சாதகத்தில் உள்ளபடி அதாவது அவனது விதிப்படித்தான் அனைத்துமே நடக்கும் என்றால் பிறகு கோயில்கள் எதற்கு ?அதில் வழிபாடு எதற்கு ?
நீதிக்கதைகள்,அறிவுரைகள்,சொற்பொழிவுகள்,மதபோதனைகள்
,கல்விநிலையங்கள் இவையெல்லாம் தேவையற்றதாகிவிடும்.
நீதிக்கதைகள்,அறிவுரைகள்,சொற்பொழிவுகள்,மதபோதனைகள்
,கல்விநிலையங்கள் இவையெல்லாம் தேவையற்றதாகிவிடும்.
கட்டாயம் விதிப்படி மட்டுமே அவனது அனைத்தும் நடக்கும் என்றால் பிறகு எவ்வித முயற்சியின்றி இருக்கலாமே.நடக்கிறபடி நடக்கட்டும் என விட்டுவிடலாமே?
அதற்காக விதிப்படி நடக்காது என்ற பகுத்தறிவாதிகள் பக்கம் நின்று நான் வாதாடவில்லை.விதிப்படியும் நடக்கும்.ஆனால் அந்த விதியையும் அவனது தெய்வ வழிபாட்டால்,நல்ல செயல்களால்,அவன் செய்யும் தர்ம நிலைகளால் மற்றும் தவவலிமையால் மாற்றி அமைக்கும் மாபெரும் சக்தியை நமக்கு இறைவன் வழங்கியுள்ளான்.எனவே ஒரு மனிதனால் விதியை வெல்லும் சக்தி உண்டு.
2)விதியை மதியால் வெல்லலாம் என்றீர்கள் ? உண்மையா ஏதேனும் ஆதாரம் உண்டா?
விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு சத்தியவான் சாவித்திரி கதையும் ஒரு உதாரணம்.
சாவித்திரி என்பவள் பூரண ஆயுள் பெற்றவள்.இவளுக்கு குறைவான ஆயுள் கொண்ட சத்தியவான் மீது காதல்.அவனையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என பிடிவாதமாக நின்றாள்.நாரதர் முதலானோர் கூறியும் மறுத்து திருமணம் செய்துகொண்டாள்.
திருமணம் முடிந்த சில நாள்களிலே அவனின் உயிரை பிடிக்க எமதர்மன் வந்துவிடுகிறார்.உயிரையும் பிடித்துக்கொண்டு செல்கிறார்.சாவித்திரி எமதர்மன் பின்னாலே சென்று மடிப்பிச்சை கேட்கிறாள்.எமதர்மனும் சாவித்திரியின் பதிபக்தி வலிமையால் தந்தேன் என சொல்லிவிடுகிறார்.அவள் கேட்ட மடிபிச்சை என்பது குழந்தை வரம் ஆகும்.
சமயோசித புத்தியால்" கணவன் இல்லாமல் மடிபிச்சை எப்படி சாத்தியம் என சாவித்திரி வினவ வேறுவழியில்லாமல் கொடுத்த வரத்தை திரும்ப வாங்க முடியாததால் எமதர்மன் சத்தியவான் உயிரை விட்டுவிட்டு செல்கிறார்.
சாவித்திரி தான் கொண்ட பதிபக்தியால் எமனிடமே வாதாடி கணவனின் உயிரை மீட்டால் என்பது புராண கதை ஆகும்.
நவீன இளைஞர்களுக்கு இந்த கதை கிண்டலாக தெரியலாம்.உயிரை பிடிக்க எமன் என ஒருவர் உள்ளாரா ?அப்படியே இருந்தாலும் சாவித்திரிக்கு அவர் வருவது எப்படி தெரியும் ? என வினவலாம்.
புராண கதை அனைத்தும் ஒரு குறியீடு அல்லது பார்முலா (வாய்பாடு ) .எப்படி ஒரு பார்முலா கொண்டு கணிதத்தை தீர்வு செய்கிறோமோ அதைப்போல புராணகதைகளும் ஒரு சூட்சும குறியீடு ஆகும்.இது அதில் ஈடுபாடு உள்ளவர்களால் மட்டும் புரிந்துகொள்ளமுடியும்.
புராண கதை அனைத்தும் ஒரு குறியீடு அல்லது பார்முலா (வாய்பாடு ) .எப்படி ஒரு பார்முலா கொண்டு கணிதத்தை தீர்வு செய்கிறோமோ அதைப்போல புராணகதைகளும் ஒரு சூட்சும குறியீடு ஆகும்.இது அதில் ஈடுபாடு உள்ளவர்களால் மட்டும் புரிந்துகொள்ளமுடியும்.
இங்கு சாவித்திரி என்பவள் பதிபக்தியின் அடையாளக்குறியீடு.அந்த பதிபக்தியால் விதியை வெல்லலாம் என்பது சூட்சும உண்மை..இவை எக்காலத்திற்கும் பொருந்தும்.
3)தவ வலிமையால் விதியின் பலனை மாற்றியமைக்க முடியுமா ?
கிரகங்கள் படுத்தும் பாட்டை மாற்றியமைக்க முடியுமா ?
தவ வலிமையால் கிரக பாதிப்புகளிலிருந்து விடுபடலாமா?என கேட்டால் விடுபடலாம் என பதில் கூறுவதை விட தவ வலிமை உடைய ஒருவனுக்கு உலகாதய விஷயங்களிலிருந்து விடுபட்டுவிடுவான்.அதாவது அவன் மனமற்ற நிலைக்கு சென்று எல்லாவற்றையும் தான் ஒரு காட்சி பொருளாக இருந்து எவ்வித பதிப்புக்கும் உட்படாமல் வேடிக்கையாக பார்ப்பான்.எனவே அவனுக்கு கிரக பாதிப்புகள் ஒன்றும் செய்துவிட முடியாது.மனதிற்குதான் இன்பம்,துன்பம் இரண்டு நிலைகள் உண்டு.
இதிகாச ரீதியாக உதாரண கதை மூலம் விளக்கினால்
இலங்கை வேந்தன் ராவணன் தனது தவ வலிமையால் கிரகங்களின் இயக்கங்களை கட்டுபடுத்தினான் என்பார்கள்.
இலங்கை வேந்தன் ராவணன் தனது தவ வலிமையால் கிரகங்களின் இயக்கங்களை கட்டுபடுத்தினான் என்பார்கள்.
எனவே ஒருவன் தியானத்தின் மூலம் பயிற்சி பெற்று தன்னை சுற்றி நடப்பதை காட்சிபொருளாக பார்ப்பவர்களை கிரக பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.அப்படியே பாதித்தாலும் அந்த கிரக கதிர்களின் தாக்கம் உடலில் பட்டு எதிரொலித்துவிடும்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆய்வாளர்,
ஓம்சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர் ரவிச்சந்திரன்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆய்வாளர்,
ஓம்சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
வாட்ஸ்அப்
97 151 89 647
97 151 89 647
செல் :
97 151 89 647
740 257 08 99
97 151 89 647
740 257 08 99
(தங்களுடைய சாதகத்தினை போன் வழியாக பார்க்க விரும்பினால் தொடர்பு கொள்க.கட்டணம் உண்டு)
No comments:
Post a Comment