Wednesday, 9 January 2019

அயன சயன முக்தி யோகம்

அயன,சயன மற்றும் முக்தி யோகம்.


                                

கிரகங்கள் படுத்தும் பாடு--( 188 )

செவ்வாய்பட்டி பத்ரகாளிஅம்மன் துணை!

    ஒருவரது சாதக கட்டத்தில் மறைவிட ஸ்தானங்கள் என அழைக்கப்படுவது மூன்று, ஆறு,எட்டு   மற்றும் பணிரெண்டு ஆகும்.இதில் மூன்று மற்றும் பணிரெண்டாமிடம் ஆகிய இவ்விரண்டு இடங்களும் முழு மறைவு ஸ்தானங்கள் அல்ல.

      இதில் மூன்றாமிடம் கீர்த்தி,புகழ் மற்றும் அந்தஸ்து தரக்கூடிய இடம் என்பதைப்போலவே பணிரெண்டாம் இடமும் மறைவு ஸ்தானம் என்று அழைக்கப்பட்ட  போதிலும் இந்த இடமே ஒரு மனிதனுக்கு அயன,சயன மற்றும் படுக்கை சுகங்களை தரக்கூடிய ஸ்தானமாக கருதப்படுகிறது.

       இவை மட்டுமல்லாமல் ஒரு மனிதன் தன் வாழ்வில் அடையக்கூடிய முக்தி நிலையை அடையக்கூடிய ஸ்தானம் இந்த பணிரெண்டாம் இடம் ஆகும். 

         பணிரெண்டாம் இட அதிபதி உச்சம்,மூலதிரிகோணம்,ஆட்சி போன்ற வகையில் பலம்பெற்றிருக்க மெத்தையில் படுத்து உறங்கும் யோகம் உண்டு.நித்திரை சுகம் தரும்.

          "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு " இந்த ஸ்தானமானது பலப்படும்போது சாதகரை கடல் கடந்து செல்ல  வைப்பதில் பெரும் பங்கு உண்டு. இது விரயம் தரக்கூடிய விரயஸ்தானம் எனவும் அழைக்கப்படுகிறது.

                         

          பணிரெண்டாம் இடத்து அதிபதியோ அல்லது பணிரெண்டாம் இடத்திலோ பலம்பெற்ற கிரகம் நிற்பின் சாதகரை கடல் கடந்து தன் திசை,புத்திகளில் செல்ல வைத்து பொருள் ஈட்ட செய்யும்.

          ராகு பகவான் என்பவர் அந்நியதேசம்,அந்நிய மொழி மற்றும் அந்நியநாடு ஆகியவைகளுக்கு காரகர் என்பதால் இவை பணிரெண்டாம் இடத்தில் குடியேறி இருக்க தன் தசை,புத்தி காலங்களில் வெளிநாடு சென்று பொருள் ஈட்டக்கூடிய நிலையினை சாதகருக்கு தருகிறார்.

          அதேநேரத்தில் ஞானகாரகன் கேது பகவான் இவ்விடத்தில்  நிற்க சாதகர் இவ்வுலக லொளகீக வாழ்வில் அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து இறுதியில் பற்றற்று முக்திநிலையை அடையக்கூடிய முக்தி யோகத்தினை  சாதகருக்கு அளிக்கிறார்.

          பணிரெண்டாம் இடத்தில் காமகாரகன் செவ்வாய் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் இவ்விரண்டின் சேர்க்கை காம எண்ணம் மிகுந்து படுக்கை  சுகம் தேடவைக்கும்.

              இயற்கை சுப கிரகங்களான குரு,புதன்,சந்திரன்,
சுக்கிரன் பணிரெண்டாம் இடத்தில் இருப்பது நல்லது.

                           

               பணிரெண்டாம் இடத்தில் சூரியன் ,சந்திரன் சேர்க்கையானது தாய்,தந்தையாருக்கு ஆகாது.பணிரெண்டாம் இடத்தில்
 சூரி+சந் இருக்க பிறந்த சாதகர் தாய்,தந்தையர்களிடம் ஓற்றுமை குலைவை தர வாய்ப்பு உண்டு.அவர்களது சொத்து குறைந்து போக செய்து பலவித இன்னல்களை தரலாம்.

                பணிரெண்டாம் அதிபதி சுப கிரகமாக இருந்து பலமடைந்து நிற்பின் சாதகர் செய்யும் செலவுகள அனைத்தும். சுப செலவாக அமையும்.பாவ கிரகமாக இருந்து பலமடைந்து நிற்பின் கெட்ட விரய செலவுகளாக சாதகருக்கு அமையும்.

                பணிரெண்டாம் அதிபதி இரண்டாமிடத்திலும்,
இரண்டாமாதிபதி பணிரெண்டிலும் பரிவர்த்தனையடைந்து லக்கனாதிபதியும் நீசமானால் சாதகரின் பொருள் அனைத்தையும் இழந்து நிற்பான்.

                       பணிரெண்டுக்குரிய கிரகம் ஆறு,எட்டு மறைவிடங்களில் இருந்து சனியும்,ராகுவும் பணிரெண்டாம் இடத்தில் இருந்து சுப கிரகங்களின் பார்வை பெறவில்லை எனில் சாதகர் சொந்த வீடு இல்லாமல் வீதியில் நிற்பர்.

                  பணிரெண்டாம் இட அதிபதி, நான்காமிட அதிபதி ஆகிய இருவரும் பலமடைந்து சுபர் பார்வை பெற்றால் வீடு,வாகன வசதிகள் சாதகருக்கு உருவாகும்.

                           

           பணிரெண்டாம் இட அதிபதி, ஒன்பதாம் இட அதிபதி மற்றும் சூரியன் ஆகிய மூவரும் சேர்க்கை பெற்று பலமடைந்து நிற்பின் அந்த சாதகர் தந்தையை பேணி பாதுகாப்பார்.

            குருவும்,புதனும் கூடி லாப அல்லது விரய ஸ்தானம் ஏறி நின்றால் லெட்சுமி யோகம் ஆகும்.

சுகர்நாடி எனும் சோதிட பாடலில்

"மங்கிய வியத்திற் பாபர் கூடி
வன்பகை யோடு வந்துறினுந்
திங்களும் சனியுஞ் சேயு மீறார்
சேரினு நோக்கினு மதியுஞ்
செங்கதிரவனும் வியப்பதியுறினு
ஆறெட்டோர் தீயவராய் வியத்தே
தங்கினும் வியத்தே நால்வர் கூட்டுறினுந்
தகர்த்து போம் நிலனோடு தனங்கள் "

 பாடல் விளக்கம்

       பணிரெண்டாம் இடத்தில் பாவகிரகங்கள் பகையோடு நின்று சனி,செவ்வாய், சந்திரன் இம்மூவரும் பணிரெண்டாம் இடத்தில் இருந்தாலும் அல்லது நோக்கினாலும்,சூரியன், சந்திரன் ஆகிய இருவர் பணிரெண்டாம் இடத்தில் இருந்தாலும், ஆறு,எட்டுக்குரியவர் பணிரெண்டாம் இடத்தில் இருந்தாலும், இந்த நான்கு கிரகங்கள் (சூரியன்,சந்திரன், சனி, செவ்வாய் ) சேர்ந்து ஒரு ராசியில் நின்றாலும் சாதகர் நிலபுலன்கள்,வீடு,வாதல் இழந்து நிற்பர்.

நன்றி நன்றி நன்றி

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸெஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

 வாட்ஸ்அப்

  97 151 89 647

  செல்
   
  740 257 08 99
     97 151 89 647

                          

  அன்புடன்

  சோதிடர் ரவிச்சந்திரன்
     M.Sc ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail .com

My blogspot .Google search

AstroRavichandran .
blogspot .com,

AstroRavichandransevvai .
blogspot .com

astrosmartnotes .blogspot .com.

...........................................

No comments: