திருமணம் என்னும் இரு மனம் இணைவு.
கிரகங்கள் படுத்தும் பாடு.
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !
என்னிடம் போன் வழியாக சாதக பலன் பெற விரும்பும் நபர்களில் பெரும்பாலோனோர் கீழ்கண்ட மூன்று வகையினரே ஆவார் .
1)திருமணம் காலம் தாமதம் ஆகி கொண்டே செல்பவர்கள்.
2) திருமணமே ஆனாலும் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமையில்லாமல் இருப்பது அல்லது பிரிந்து தனித்தனியாக வாழ்கின்ற நிலை.
3) புத்திர பாக்கியம் காலதாமதம் ஆகிகொண்டே செல்கின்ற நிலை.
மேற்கண்ட மூன்று வகைகளில் பாதி்க்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தல் என்பது சமூகத்திற்க்கு உகந்த சூழல் அல்ல.
இவற்றிற்க்கு உளவியல் அடிப்படையில் காரணம் என்னவெனில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணத்திற்க்கு முன்பாக தேவையில்லாத வீண் கற்பனைகளை வளர்த்துக்கொள்வதும்,
எதிர்பார்ப்புகளை உருவாக்கிகொள்வதும் ஆகும்.
இவை மட்டுமல்லாமல் ''பொறுமையும்,
சகிப்புதன்மையும் இல்லாததும் '' ஒரு முக்கிய காரணமாக ஆகிறது.
சோதிடர் என்ற முறையில் என்னை பொறுத்த வரையில் பெற்றோர்களாகிய உங்களைதான் குறை சொல்ல வேண்டியதாக உள்ளது.
ஏனெனில் பெரும்பாலான பெற்றோர்கள் தனது மகனுக்கோ/மகளுக்கோ பண்பிலும்,குணத்திலும் ஏற்ற ஜோடியா ? என தேடுவதைவிட , தனது ஈகோவினால் தான் அந்தஷ்துக்கு ஏற்ற வரனா என்றும் ,தனது பேச்சை கேட்ககூடிய வரனாகவும் அமையவேண்டும் என்றே எதிர் பார்ப்பதும் காரணம் ஆகும்.
இவ்வாறு அமையும் பட்சத்தில் நல்ல ஆராய்ச்சி திறன் வாய்ந்த சோதிடர்கள் பொருத்தம் இல்லை என்றாலும் யாராவது ஒரு சோதிடர் பொருத்தம் உள்ளது என சொல்வார்களா ? என எதிர்பார்த்து அவ்வாறு பொருத்தம் உள்ளது என யாராவது ஒரு சோதிடர் சொல்லும் வரை பல சோதிடர்களிடம் பலன் பெற செல்வதையும் நாம் காணலாம்.
இவ்வாறு பலன் பெற விரும்பும் பெற்றோர்களின் விருப்பத்தை அறிந்து கொண்ட ஒரு சில முககுறி சோதிடர்கள் ''பரிகாரம் செய்து திருமணம் செய்து கொள்ளலாம் '' என பலன் சொல்லிவிடுகிறார்கள்.
அதனையே வேத வாக்காக கொண்டு தனது பிள்ளைகளுக்கு மணம் முடித்துவிடுவதும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடுகிறது.
எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தனக்கு விவாகம் பொருத்தம் பார்க்க எனது ஆலோசனையை பெற விரும்பினார் ,பல சாதகம் பார்த்து பொருத்தம் இல்லாமல் போய்விட்டது.இறுதியாக ஒரு அரசு வேலை பார்க்கும் பெண் என்பதால் என்னிடம் பொருத்தம் பார்த்தால் '' பொருத்தம் இல்லை என சொல்லிவிடுவோனோ '' என பயந்து என்னிடம் சோதிட ஆலோசனை பெறாமலே வேறு ஒரு சோதிடரிடம் சாதக பொருத்தம் பார்த்து தனது திருமணத்தினை முடித்துவிட்டார்.
திருமணம் முடிந்து பல ஆண்டுகள் சென்றபிறகு புத்திர பாக்கியம் இல்லாத சூழலில் என்னிடம் சாதக பலன் பெற வந்தார்.பலன் பார்க்கும்போதுதான் தெரிந்தது இருவருக்கும் கடினமான புத்திர தோஷம் இருப்பது தெரிந்தது.
ஆதலால் திருமணம் பொருத்தம் பார்க்கும் பெற்றோர்கள் தனது ஈகோவினையும்,
அந்தஷ்தினையும் நிறைவு செய்யக்கூடிய வரன்களை தேடாமல் தனது பிள்ளையின் சாதகத்திற்க்கு ஏற்ற நல்ல பொருத்தமான ஜாதகத்தினை நல்ல புலமை பெற்ற ஆய்வு செய்து பார்க்கக்கூடிய சோதிடராக பார்த்து விவாகம் செய்ய வேண்டும் .
ஒருவரது மணவாழ்விலும்,புத்திர பாக்கியத்திலும் உருவாகக்கூடிய பிரச்சினைகளுக்கு சோதிடர்களும் ஒருவகையில் காரணமாக அமைகின்றனர்.
ஆதலால் கீழ்கண்ட வகையில் திருமண பொருத்தம் பார்க்க வரும் தம்பதிகளது சாதகத்தினை ஆய்ந்து அறியப்பட வேண்டியதாக உள்ளது .
1) திருமண பொருத்தம் பார்க்க வரும் தம்பதிகள் இருவரது சாதகத்தில் உள்ள பிறந்த நேரம் சரியாக உள்ளதா ? என கேட்டு அதனை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும் .ஏனெனில் பலரது சாதகங்ளி்ல் பிறந்த நேரம் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கும்.
நானே பலரது சாதகங்களை சரி செய்து உள்ளேன்.
ஏனெனில் பலர் சோதிடர் மீது உள்ள நம்பிக்கையில் கணக்கீடு செய்யப்பட்ட பிறந்த நேரத்தினை நன்கு கவனித்து பார்ப்பதில்லை.இதுபோல தவறான நேரத்தில் கணிக்கப்பட்ட சாதகத்தினை கொண்டு பார்க்கப்படும் பொருத்தங்களும் தவறான முடிவினையே தரும் என்பதனை தரும் என்பதனை உங்களுக்கு விளக்குகிறேன்.
2) இரண்டாவதாக தம்பதிகள் இருவரது சாதகமானது எந்த வகை கணிதமுறையினை கொண்டுள்ளது என கவனிக்கப்பட வேன்டும்.
திருக்கணித முறையா அல்லது வாக்கிய முறையா என கவனிக்கப்பட வேண்டும் .இரண்டு சாதகமும் ஒரே கணிதம் முறையில் கொண்டு வந்து பிறகு சாதகம் பொருத்தம் பார்க்க வேண்டும் .
3) தம்பதிகள் இருவரது சாதகத்தில் சாதகரை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டன் என அழைக்கப்படக்கூடிய உயிர் மற்றும் உடலாக செயல்படக்கூடிய லக்னம் , ராசி மற்றும் அதன் அதிபதிகள் பலம் இழக்காமல் உள்ளதா ? என கட்டாயம் முதலில் கவனிக்ப்பட வேண்டியதாக உள்ளது .இருவரது சாதகங்ளிலும் பலவீனமாக இருப்பின் அவர்களை திருமண பந்தத்தில் இணைக்க கூடாது.
4) தம்பதிகள் இருவரது சாதகங்களி்ல் மனநிலைகாரகன் என அழைக்ப்படும் சந்திரன் நீசம்,மறைவு மற்றும் அஸ்தமனம் பெற்றோ அல்லது அரவுகளான ராகு,கேது சேர்க்கைகளுக்கு உட்படாமல் இருக்கிறதா ? என கவனிக்ப்பட வேண்டும் .ஏனெனில் மனநிலை சரியாக இல்லாத நபரிடம் வாழ்வது கடினம் ஆகும்.
5)தம்பதிகள் இருவருக்கும் நடப்பில் இருக்கும் திசையானது உகந்த திசையாக உள்ளதா ? என கவனிக்ப்பட வேண்டும் .திருமண காலங்களில் ஏழரை ,அஷ்டம சனி போன்றவை நடக்கும் காலங்களில் தம்பதிகளுக்கு ராகு திசையோ அலலது சந்திரன் திசையோ நடப்பில் இல்லாமல் இருத்தல் உத்தமம் ஆகும்.
6) தம்பதிகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரம்,ராசி மற்றும் ஒரே திசை நடப்பில் இல்லாமல் இருத்தல் சால சிறந்தது.அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் மறைவிட ( 6.8 ) அதிபதிகளின் திசையாகவோ அல்லது 1,2,4,5,7,8 ம் இடங்களில் நிற்கின்ற அரவான ராகு ,கேது திசையாகவோ அல்லது பாவர்கள் திசையாகவோ நடப்பில் இருக்க கூடாது.
7) திருமணம் தொடர்பான ஸ்தானங்களான ஒன்றாம் இடமான லக்கனம்,
இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம் ,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய ஸ்தானங்களையும்,அதன் அதிபதிகளையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .
மேற்கண்ட இந்த ஸ்தானங்களில் பாவ கிரகங்களோ அல்லது மறைவிட அதிபதிகளின் தொடர்போ உள்ளதா ?எனவும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .
அதே நேரத்தில் மேற்கண்ட ஸ்தான அதிபதிகள் நீசம்,பகை ,வக்கிரம் ,
மறைவு
அஸ்தமனம் அடைந்தோ அல்லது மறைவிடம் அதிபதிகள் தொடர்போ அல்லது பாவ கிரகங்கள் தொடர்போ பெற்றுள்ளதா? எனவும் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும் .
8 ) இவை மட்டும் அல்லாமல் களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் மங்கள காரகன் செவ்வாய் ஆகிய இக்கிரகங்களை கவனிக்ப்பட வேண்டும் .
இக்கிரகங்கள் இரண்டும் சுபர் பார்வையின்றி ராகு, கேது ,சனி மற்றும் செவ்வாய் இவர்களது தொடர்பு நிலை பற்றி ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .
9) தம்பதிகள் இருவருக்கும் புத்திர தோஷமும்,தசவித பொருத்தத்தில் பால் பொருத்தம் இல்லை எனில் கட்டாயம் விவாகம் செய்யக்கூடாது.
புத்திர தோஷத்தினை பொருத்த வரை தம்பதிகள் இருவரது சாதகங்ளி்லும் லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரண்டிற்கும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தினையும்,
ஐந்திற்க்கு ஐந்தாம் இடமான ஒன்பது இடத்தினையும்,புத்திர காரகனான குரு பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .
அதாவது புத்திர ஸ்தானாதிபதியும்,புத்திர காரகனான குரு பகவானும் நீசம்,பகை,அஸ்மனம்,
வக்கிரம் மற்றும் மறைவோ அல்லது மறைவிட அதிபதி தொடர்போ அல்லது அரவான ராகு ,கேதுவின் சேர்க்கையோ அல்லது நட்சத்திர சாரமோ பெறாமல் இருக்கிறதா ?'' என கவனிக்ப்பட வேண்டும் .
10 ) நிறைவாக தம்பதிகள் இரண்டு பேருக்கும் தசவித விவாக பொருத்தம் உள்ளதா ? என ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் . இதில் 13 க்கு மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும் அதில் குறிப்பாக தினம்,கணம்,ராசி ,ரஜ்ஜூ,பால் மற்றும் யோனி பொருத்தங்கள் உள்ளதா ? என ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .
நன்றி !
(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)
வாட்ஷ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc .MA,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம் .
கறம்பக்குடி ,புதுக்கோட்டை மாவட்டம் .
My email
masterastroravi@gmail .com
My blogspot .Google search
AstroRavichandran .
blogspot .com
AstroRavichandransevvai .
blogspot .com
astrosmartnotes .blogspot .com.
..............................................
No comments:
Post a Comment